நலம் பேசு Health Talk

நலம் பேசு Health Talk அனைவர்க்கும் முழுமையான நலம்!

இலங்கையில் முன்பருவப் பள்ளிகளில் காலை உணவு நிதி ரூ.100ஆக அதிகரிப்பு!Govt increases daily allocation for preschool breakf...
19/12/2024

இலங்கையில் முன்பருவப் பள்ளிகளில் காலை உணவு நிதி ரூ.100ஆக அதிகரிப்பு!
Govt increases daily allocation for preschool breakfast to Rs. 100

The government has approved increasing the daily allocation to Rs. 100 to provide breakfast for children attending Early Childhood Development Centres and preschools, Cabinet spokesman Dr. Nalinda Jayatissa said. ..

29/03/2024

Of Life and Lithium – Why the “White Gold” Rush Won’t Save This Planet
in Climate Change
by Joshua Frank
29/03/2024

கோடையில் மலச்சிக்கல்..!
25/05/2022

கோடையில் மலச்சிக்கல்..!

மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்க...

#மலச்சிக்கல் #முருங்கைகீரை

பயணம் சென்றால் சிலருக்கு வாந்தி ஏற்படுவது ஏன்... தடுக்க என்ன வழி?
14/04/2022

பயணம் சென்றால் சிலருக்கு வாந்தி ஏற்படுவது ஏன்... தடுக்க என்ன வழி?

கேள்வி - எவ்வாறு தான் முன்னெச்சரிக்கையாக பயணம் மேற்கொண்டாலும் பஸ் கார் பிரயாணங்களில் வாந்தி வந்துவிடுகிறது. தடுக்க வழி சொல்லுங்கள்.

டாக்டர் சரவ் பதில் :
இது motion sickness அல்லது travel sickness.

நம் காதுக்குள் இருக்கும் incus ,stapes, malleus என்கிற மூன்று எலும்புகள் தான், நாம் நேராக நிற்பதற்கும் நமது உடம்பு தன்னை தானே பேலன்ஸ் செய்வதற்கு உதவுகின்றன. இந்த எலும்புகள் பரிணாம வளர்ச்சியில் தவழ்ந்து கொண்டிருந்த நம்மை நிற்க வைக்க, பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பேலன்ஸ் கற்று நம்ம ஜீனில் பதிந்து வைத்துள்ளன. அதற்கென ஒரு வேகமும் உள்ளது.

ஆனால் எஞ்சின் கண்டுபிடித்து கொஞ்ச நாள் தான் ஆகிறது என்பதால்... திடீரென உங்க உடம்பு வேகமா பயணிப்பதை பார்த்து இந்த எலும்புகள் குழம்பி, மூளையை குழம்புவதால் தலை சுற்றி வாந்தி ஏற்படுத்தி விடுகிறது. இது மாறுவதற்கு உடனடி தீர்வாக வாந்தியை நிறுத்தும் மருந்துகள் எடுக்கலாம். அல்லது நிறைய பயணித்து உடலை பழக்கலாம்.

இதே போல குழப்பம் விமான பயணத்திலும் (air sickness), கப்பல் பயணத்திலும் (sea sickness) சிலருக்கு ஏற்படுவது உண்டு. ரொம்ப வேடிக்கையான விஷயம் என்னன்னா.... கப்பலில் பணிபுரியும் மாலுமிகளுக்கு 6 மாதம் கப்பலில் இருந்து விட்டு நிலத்துக்கு வந்தவுடன் வாந்தி வருவதுண்டு... அது Land sickness...!!

Dr. M. Saravana Kumar, BHMS, MD (ped).,
Dr Sarav Ayush Vaidyasala,
Dhanvandhiri Theni

#பயணம்

* நாற்பது உரூவாவுக்கு 80 பக்கங்களில் முழுக்க முழுக்க உருப்படியான சேதிகள். * நவீன மருத்துவம் எனப்படும் மருத்துவவியலை முது...
10/04/2022

* நாற்பது உரூவாவுக்கு 80 பக்கங்களில் முழுக்க முழுக்க உருப்படியான சேதிகள்.
* நவீன மருத்துவம் எனப்படும் மருத்துவவியலை முதுநிலைவரை தமிழிலேயே படித்து தேர்வை எழுதி, மருத்துவ நூல்களை எழுதிவருகின்ற மரு. சிவசுப்பிரமணிய செயசேகர் அவர்களின் கைவண்ணத்தில்...!

பொதுநலம், பிரசவம், அறுவைச்சிகிச்சை என அரசு மருத்துவமனைப் பணியில் குறிப்பிடத்தக்க பட்டறிவுகொண்ட மரு. அனுரத்தினா அவர்கள் +...
01/04/2022

பொதுநலம், பிரசவம், அறுவைச்சிகிச்சை என அரசு மருத்துவமனைப் பணியில் குறிப்பிடத்தக்க பட்டறிவுகொண்ட மரு. அனுரத்தினா அவர்கள் +/- ஒரு மணி நேரம் ஆற்றிய உரையும் அவருடனான உரையாடலும்!

https://www.youtube.com/watch?v=3oVvcwdX0OM&feature=youtu.be

நன்றிக்கு உரியோர் :
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சாத்தூர்

'மகளிர் உடல் நலம்' மருத்துவர்.அனுரத்னா உரை

தொற்றல்லாத - உயிர் குடிக்கும் நோய்களில் புற்றின் தாக்குதலுக்கு யாரும் இலக்காக நேரலாம் எனும் நிதர்சனத்தில், அதிலிருந்து ம...
15/03/2022

தொற்றல்லாத - உயிர் குடிக்கும் நோய்களில் புற்றின் தாக்குதலுக்கு யாரும் இலக்காக நேரலாம் எனும் நிதர்சனத்தில், அதிலிருந்து மீள்வோரின் கதைகள்... அல்லஅல்ல உயிர்த்த கதைகள், துளித்துளியாக உயிர்நோகச்செய்யும் புற்றின் கொடுமையால் அல்லலுறும் மனிதர்களுக்கு, ஆறுதலையும் துணிவையும் மனதிடத்தையும் தரக்கூடியவை.

சஞ்சய் தத், மணிசா கொய்ராலா, சோனாலி பிந்திரே, கவுதமி முதலிய திரைக்கலைஞர்கள், தமிழ்நாட்டு அரசின் முன்னாள் தலைமைச்செயலர் மாலதி போன்றவர்கள் ஒருவகை, பழனி பேராசிரியர் மோகனா போன்றவர்கள் இன்னொரு வகை எனும்நிலையில், இந்தக் கொடிய நோயினால் தாம் பட்ட பாட்டிலிருந்து மீண்டவர்களின் சொற்கள், மதிப்பிடற்கரியவை.

சமூகநீதி அடைவுகளை நூலாயுதங்களாக ஆக்கிவரும் #கருப்புப்பிரதிகள் பதிப்பாளர்கள் அமுதா - நீலகண்டன் இணையரின் மாறுபட்ட ஒரு புத்தகம், புற்றிலிருந்து உயிர்த்தல். புதுச்சேரியைச் சேர்ந்த குழந்தைகள் களச் செயற்பாட்டாளர் #சாலை_செல்வம் அவர்கள் மீண்ட நிகழ்வுகளே இந்தப் புத்தகமாக ஆகியிருக்கிறது.

#புற்றுநோய்_விழிப்புணர்வு பரப்பலில் இது நிச்சயமாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

உடல் உழைப்பாளி அல்லாத மன உழைப்பாளிகள் மிகுந்துவரும் காலகட்டத்தில், உடல்பருமன் புதியதொரு நலக்கேடாக உருவாகியிருக்கிறது. இத...
08/03/2022

உடல் உழைப்பாளி அல்லாத மன உழைப்பாளிகள் மிகுந்துவரும் காலகட்டத்தில், உடல்பருமன் புதியதொரு நலக்கேடாக உருவாகியிருக்கிறது. இதை எதிர்கொள்ளத் தேவையான மருத்துவர் வல்லுநர்களின் முறையான வழிகாட்டல்களில் ஒன்றாக, ’உணவுக் கட்டுப்பாடின்றி உடல் பருமனைக் குறைக்கமுடியும்’ எனும் இந்த நூல், பயனுள்ளது. தமிழில் தொடர்ச்சியாக மருத்துவக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிவரும் மூத்த மருத்துவர் சு.நரேந்திரன் அவர்களும் இதில் முதன்மையான ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

08/03/2022
 #புத்தகம்இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்(2ஆம் பதிப்பு)
02/03/2022

#புத்தகம்
இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்
(2ஆம் பதிப்பு)

அயலக மருத்துவப் பட்டதாரிகளுக்கு ஆறுதல் சேதி!வெளிநாட்டில் இளநிலைப் பட்ட மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் தமிழ்நாட்டில் பய...
24/02/2022

அயலக மருத்துவப் பட்டதாரிகளுக்கு ஆறுதல் சேதி!

வெளிநாட்டில் இளநிலைப் பட்ட மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவர்களாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்வதற்கான கட்டணம் ரூ.3,54,000இலிருந்து
ரூ.29,400ஆகக் குறைக்கப்படுகிறது.

இதற்கு ஆணையிட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ மாணவர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் எப்.எம்.ஜி. தேர்விலும் (FMG) வெற்றிபெற்ற பின்னர், இந்த மருத்துவ மாணவர்கள், மிக அதிக அளவில் கட்டணம் செலுத்தமுடியாததால், பயிற்சி மருத்துவர்களாகச் சேரமுடியாமல் சிரமப்பட்டனர். இதனால் முறையாகப் படித்தும் தங்கள் மருத்துவ சேவையைத் தொடங்கமுடியாத நிலையில் இவர்கள் இருந்தனர்.

இதற்கு முதல் கட்டத் தீர்வாக மாவட்ட மருத்துவமனைகளில், வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களாகப் பயிலும் இடங்களை அதிகரித்தது.

தற்போது பயிற்சிக் கட்டணத்தைக் குறைத்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


வெளிநாட்டில் M.B.B.S மருத்துவ படிப்பை முடித்த மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவர்களாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்ந்து பயில்வதற்கான கட்டணம் ரூ.3,54,000 லிருந்து ரூ.29,400 குறைத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு நன்றி.

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்திய மெடிகல் கவுன்சில் நடத்தும் எப்.எம்.ஜி. தேர்விலும் (FMG) வெற்றி பெற்ற பின்னர், இந்த மருத்துவ மாணவர்கள் மிக அதிக அளவில் கட்டணம் செலுத்த முடியாததினால், பயிற்சி மருத்துவர்களாக சேர முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் முறையாகப் படித்தும் மக்களுக்குத் தங்கள் மருத்துவ சேவையை வழங்க இயலாத நிலையில் இவர்கள் இருந்தனர்.

இதற்கு அரசு முதல் கட்டத் தீர்வாக மாவட்ட மருத்துவமனைகளில், வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களாக பயில இடங்களை அதிகரித்தது.

தற்போது பயிற்சிக் கட்டணத்தைக் குறைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணை பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எப்.எம்.ஜி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய தமிழ்நாடு அரசிற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when நலம் பேசு Health Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share