Dr.Elamaran/Dr.Elakiyen

  • Home
  • Dr.Elamaran/Dr.Elakiyen

Dr.Elamaran/Dr.Elakiyen Dr.S.Elamaran BSMS(Siddha) சோரியாஸிஸ்,வெண்தோல,மூட்டுவலி,ஆஸ்துமா,மூலநோய்,
ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை

நாள்பட்டதோல்நோய்கள், சோரியாஸிஸ், வெண்தோல்,அரிப்பு,பத்துபடை, முடிஉதிர்தல், வயிறு-குடல்நோய்கள்,மூலம்,ரூமட்டாய்டு-மூட்டு-வாதநோய்கள்,ஆஸ்த்துமா,சைனசிட்டிஸ்,மூக்கடைப்பு,சிறுநீரகக்கல்,குழந்தையின்மை ,பாலியல்-இல்லறபிரச்சனைகள்,ஆண்மைக்குறைவு,மாதவிடாய்குறைபாடு,இரத்தப்போக்கு,வெள்ளைப்படுதல்,மாதம்தவறுதல்,PCOD-நீர்கட்டி, குழந்தையின்மை,ஆரம்பபுற்றுநோய், சர்க்கரை நோய்களுக்கு பின்விளைவுகள் இல்லாத சிறப்பு சிகிச்சை.
∆ Dr.ELAMARAN BSMS., சித்தமருத்துவம்
∆ Dr.E.ELAKIYEN BAMS.,. ஆயுர்வேதம்
தொடர்புக்கு:pH:9443475684
ALL SKIN DISEASES-PSORIASIS, VITILICO,(LUCODERMA),RHUMATOID ARTHRITIS,PEPTIC-DUODENAL ULSER,UTERUS DISEASES,MALE&FEMALE INFERTILITY,ASTHUMA,SINUSITIS,KIDNEY STONE,PARALYSIS,IMPOTENCE,HERPUS,DIABETES,-IN 69YEARS TREATMENT & SEVICES /DOCTOR VISIT AT PUDUKKOTTAI,PATTUKKOTTAI,THANJAVUR,KARAIKKUDI,THIRUVARUR,TIRUTHIRAIPUNDI,HO;ARANTHANGI, Chennai.Contact & Appointment
pH:9443475684

படர் தாமரை மீண்டும் வராமல் தடுக்கும் எளிய சித்த வைத்திய மூலிகை முறைகள். இதற்கு தேவையான பொருட்கள் முறை ஒன்று 10 எண்ணிக்கை...
16/03/2025

படர் தாமரை மீண்டும் வராமல் தடுக்கும் எளிய சித்த வைத்திய மூலிகை முறைகள்.
இதற்கு தேவையான பொருட்கள்
முறை ஒன்று
10 எண்ணிக்கை சீமை அகத்தி அல்லது வண்டுகடி இலை, 10 முதல் 20 கிராம் வேப்பங்கொட்டை உள்பகுதி பருப்புடன் , சிறிய துண்டளவு கஸ்தூரி மஞ்சள், 1 கிராம் அளவு கசகசா, 2 கிராம் தேங்காய் துருவல், 15 எண்ணிக்கை வெள்ளை அல்லது கருமிளகு, இவை அனைத்தையும் சேர்த்து, நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து. இதில் எழுமிச்சம்பழச்சாறு சேர்த்து, அரிப்புள்ள பகுதிக்கு பூசி, 1 முதல் 2மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனை வாரம் இருமுறை, செய்து குளித்து வந்தால், பூஞ்சை காளான் தொற்று திரும்ப பரவாமல் தடுக்க முடியும்.

முறை இரண்டு
10 எண்ணிக்கை வேப்பங்கொட்டை உள்பருப்பு, 3சென்டிமீட்டர் நீளமுள்ள கஸ்தூரி மஞ்சள் 10 முதல் 15 எண்ணிக்கை வெள்ளைமிளகு அல்லது கருமிளகு ,10கிராம் தேங்காய் துருவல், இவை அனைத்தையும் சேர்த்து , நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, இதில் எழுமிச்சம்பழச்சாறு சேர்த்து, அரிப்புள்ள பகுதிக்கு பூசி 1 முதல் 2மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனை வாரம் இருமுறை, செய்து குளித்து வந்தால் பூஞ்சை காளான் தொற்று திரும்ப பரவாமல் தடுக்க முடியும். மேலும் இதனையே தலையில் தேய்த்து , ஊரவைத்து பின்னர் சீகக்காய் அல்லது ஷாம்பு தேய்த்து, தலை குளிக்க, அரிப்பு, பொடுகு நீங்கி தலைமயிர் உறுதியுடன் கருகருவென்று வளரும்.
உணவுமுறை
பொதுவாக தோல் நோயினர் அலர்ஜி. அரிப்புடன் கூடிய நோயினர். மீன், நண்டு, இறால, முட்டை, கருவாடு, செம்மறி ஆட்டுக்கறி, கோழிக்கறி, பாகற்காய், புளிப்பான பழங்களை தவிர்க்கவும். கத்தரிக்காய், வெண்டைக்காய், கருணைகிழங்கு அரிப்பை உண்டாக்கலாம். வெள்ளாட்டுஇறச்சி, கிளங்கான் மீன், குறவைமீன் அரிப்பு இல்லாத போது உணவின் சேர்க்கலாம்.

🔷துளசி Holy Basil🟪வாஸ்து நன்மைகளையும் தரும் 🟪பெருமாளுக்கு பிடித்தமான மூலிகை துளசி🟪கஞ்சாங்கோரை எனப்படும் துளசி🟪கருந்துளசி...
16/01/2024

🔷துளசி Holy Basil

🟪வாஸ்து நன்மைகளையும் தரும்
🟪பெருமாளுக்கு பிடித்தமான மூலிகை துளசி
🟪கஞ்சாங்கோரை எனப்படும் துளசி
🟪கருந்துளசி
🟪கருத்தடை மருந்து
✅Dr.சுப.ச.இளமாறன்
BSMS
✅Dr.E.Elakiyen BAMS ✅Dr.Arthika BAMS புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்- சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற, மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு ph:9443475684
🟩🟩🟩16-01-24🟩🟩🟩

துளசி தாவரவியல் பெயர்: Ocimum tenuiflorum
இது மூலிகை செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத் துளசி என வகைகள் உள்ளன.
நம்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் துளசிச்செடிகள் வெண் துளசி வளர்க்கப்படுகிறது.
இதனை மூலிகையின் அரசி என்றும் கூறலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு துளசி ஒரு சிறந்த மருந்தாகும்.
🟪இத்துளசி சில வாஸ்து நன்மைகளையும் தருவதாக கருதப்படுகிறது எனவே இந்தியாவில் இந்த செடிக்கு இன்றும் மக்களிடையே முக்கிய இடம் உண்டு. சளி இருமலுக்கு துளசி இலையை அப்படியே பயன்படுத்தப்படுகிறது.
🟪துளசியில் இருந்து பெறப்படும் எண்ணெயை பயன்படுத்தி , தோல் பராமரிப்பு,வாசனை திரவியம் மற்றும் ஷாம்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
🟪அகமதாபாத்தில் டாக்டர் உபேன்டிரராஜ் ஜே சண்டீசரா என்பவர் துளசியைக் கொண்டு புற்று நோய், ஆஸ்துமா முதலிய பல்வேறு நோய்களை சில ஆண்டுகளுக்கு முன் குணப்படுத்தியிருக்கிறார். துளசி வைத்தியர் என்று அங்கே அவரை மக்கள் அழைத்துள்ளனர். வெண்புள்ளி (லூகோடெர்மா) உட்பட பல நோய்களை அவர் துளசியைக் கொண்டு குணமாக்கி வந்தாக தெரிகிறது.
🟪பரந்தாமனுக்கு -பெருமாளுக்கு பிடித்தமான மூலிகை துளசி: பூஜைக்கு பயன்பட்டு, மத சடங்குகளில் தொடர்பு கொண்டு பக்தியை வளர்த்து வருவது துளசி. அது தற்போது விஞ்ஞான நோக்கில் ஆராயப்பட்டு வருகிறது; அதன் குணங்கள் நோயை நீக்கி மனித உடலில் ஆரோக்கியத்தை வளர்க்கும் என்பது அன்று முதல் இன்று வரை நிரூபணமாகி வருகிறது.
🟪துளசி தீர்த்தம்
வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை வளர்த்து வழிபடுகிறார்கள். கோவில்களில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. இத் துளசி உடல் உஷ்ணத்தைக் குணமாக்கும் . ஜலதோஷம் மற்றும் சீதளம் பேன்ற மழைக்காலங்களில் வரும் நோய்களிலிருந்து உடலை காக்கும்.
🟪மேல் நாட்டில் துளசி
தொன்மைக்காலம் தொட்டு நமது கோயில்களிலும், சமய வைபவங்களிலும், நம் நாட்டு மருத்துவத்திலும் பெரும் பங்கு கொண்டு வருவது துளசி. ஆனால் இது மேல் நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் பிரபலமடைந்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் இதனை அரேபிய மருத்துவர்கள் அங்கீகரிக்கவில்லை. அப்போதைய மேலைய மருத்துவ நூல்களும் இதன் உபயோகத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் ரோம அறிஞர் பிளினி மட்டும் தனித்து நின்று இதன் சிறப்பை ஆதரித்தார். ரோமானியர்கள் காலப்போக்கில் துளசியின் மருத்துவ சிறப்பை உணர்ந்தனர். அடிக்கடி துளசியை உட்கொண்டு வருவோரை தேள்கடி பாதிக்காது என்று ஆப்பிரிக்கர்கள் நம்பினர்.
🟪"நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் நம்மாழ்வார்(ஆழ்வார்)
"-------------தெய்வத்
தண்ணந்துழாய்த்தாராயினும் தழை யாயினும்
தன் கொம்ப தாயினும் கீழ் வேரா யினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே"
என்று கூறியுள்ளார்.

துளசிச் செடியின் எல்லாப் பகுதிகளுமே பூஜைக்கு உரியவை என்பதை வலியுறுத்துகிறார். துளசியின் வேர்ப்பட்ட மண்ணும் பூஜைக்கு பயன்படும் என்று நம்மாழ்வார் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
🟪ஐரோப்பாவின் சில பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக ஒரு பழக்கம் இருந்து வருகிறது. அதாவது ஓர் இளம்பெண் தனது வீட்டு வேலைக்காரி மூலம் அனுப்பும் துளசியை ஒரு வாலிபன் பெற்றுக் கொண்டால், அந்தப் பெண்ணை அவன் காதலிக்க சம்மதித்ததாகக் கருதப்படும். மத்தியத் தரைக் கடல் நாடுகளில் அன்புக்குரியவர்களை அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளின் மீது துளசியைச் சாத்துவது சிறந்த மரியாதையாகக் கருதப்படுகிறது. ஐரோப்பியர்களையும் துளசியின் வாசனை முதலில் கவர்ந்தது. துளசியின் தாவரப் பெயர் கிரேக்க மொழியில் வாசனை உள்ளது என்ற பொருள்படும் ஓசா (ozo) என்று முன் பகுதியையும். கர்ப்பக்கிரஹம் என்ற அர்த்தமுள்ள ஸ்யாங்க்டம் (Sanctum) என்ற பின் பகுதியையும் கொண்டு உருவாகியிருக்கிறது.
🟪17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மருத்துவத்தில் துளசி இடம்பெறவும் ஆரம்பித்தது. கஞ்சாங்கோரை எனப்படும் துளசியை முதலில் உணவில் சேர்த்து பலனை பெற ஆரம்பித்தார்கள் .இது முதலில் லண்டனில் நடந்தேறியது. அங்கு "சாஸ்" தயாரிப்பாளர் ஒருவர் துளசிப் பிரிவைச் சேர்ந்த கஞ்சாங்கோரை (Ocimum basilicum) பயன்படுத்தி இனிய மணமும் சுவையும் கொண்ட சூப், குழம்பு முதலியவற்றை விற்று பெருஞ்செல்வம் திரட்டினார். இதை வாங்க லண்டன் பிளிட்ஸ் தெருவிலுள்ள பீட்டர்ஸ் சந்துக்கு லண்டன் வாசிகள் பெருந்திரளாக வருவதுண்டு: பின்னர் ஐரோப்பாவில் சமையல் கூடங்களில் பச்சடி, சூப் போன்ற உணவுப் பொருட்களிலும், விசேடமான மீன் வகைகளிலும் இதனை சேர்த்து உட்கொண்டு பயன் அடைய ஆரம்பித்தார்கள்.
குளிர் தேசமான ஐரோப்பாவில் துளசியை சிரத்தை எடுத்து வளர்க்க வேண்டும். வெப்பப் பகுதியில் விளையும் போது இருக்கும் சத்து குளிர்ப் பகுதியில் விளையும்போது இருப்பது இல்லை. நம் நாட்டில் கூட நீர் நிறைந்த இடத்தில் கிடைக்கும் துளசியைவிட வறட்சியான இடத்தில் விளையும் துளசிகளில் மருந்துப் பொருள் அதிகம்
🟪பம்பாய்(இன்று மும்பை)இரசாயனக் கண்காட்சியில்
பம்பாயிலுள்ள விக்டோரியா தோட்டத்தில் ஒரு சமயம் இரசாயனக் கண்காட்சி நடத்தப்பட்டது. அதை நடத்திய முக்கிய நிர்வாகிகளும் ஊழியர்களும் கொசுக்கடிக்கு ஆளாயினர். அதனால் அவர்கள் மலேரியா சுரத்தால் பீடிக்கப்பட்டுத் துன்பப்பட்டார்கள். இதனை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த தோட்டத்தில் பல பகுதிகளில் துளசியைப் பயிர் செய்யும்படி யோசனை கூறினார். அவ்வாறே செய்ததால் விக்டோரியா தோட்டத்தில் கொசு உபத்திரவம் ஒழிந்தது என்ற வரலாறும் உள்ளது.
🟪அறுவை மருத்துவர் சந்தேகம்
சிறிது காலத்திற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஒரு சுவையான வழக்கு நடைபெற்றது. துளசிக் காட்டில் ஒரு பிணத்தை
போலீசார் கண்டனர். வழக்கப்படி அது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சிவில் சர்ஜன் அதனை சோதித்து மரணம் நேர்ந்து சில நாட்களே ஆகியிருக்கும் என்று அறிக்கை
எழுதிக் கொடுத்தார். ஆனால் வழக்கு விசாரணையில் சாட்சிகள் அந்தக் கொலை பல வாரங்களுக்கு முன் நடந்ததாகக்கூறினார்கள். சிவில் சர்ஜனுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. பிணம் நாறாமல் இருந்ததற்கும் துளசிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கக் கூடும் என்று சந்தேகித்தார். எனவே அவர் ஒரு கோழியை அடித்து, அதனை பிணம் கண்டெடுக்கப்பட்ட துளசிக் காட்டில் கொண்டு போய் போட்டார்; சில தினங்கள் கழித்து அதை எடுத்துச் சோதித்தார்; கோழி நாறாமலும், அழுகாமலும் இருந்தது. கொலையுண்டவர் உடல் துளசியின் அபூர்வ குணத்தால் அழுகாமல் இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் மருத்துவர் தெரிந்து கொண்டார்.
🟪ஜிப்மர் ஆராய்ச்சிக் கூடத்தில்
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. அங்கு துளசியை ஆண் வெள்ளெலிகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தார்கள். பின்னர் அவற்றை பெண் வெள்ளெலிகளுடன் உடல் உறவு கொள்ள அனுமதித்தார்கள். ஆனால் பெண் எலிகள் கர்ப்பம் தரிக்கவில்லை. ஆண் வெள்ளெலிகளின் விந்துவை எடுத்து சோதித்தபோது, அதில் கருத்தரிக்கச் செய்யும் விந்து அணுக்கள் இல்லாதிருப்பதைக் கண்டனர். அத்துடன், ஆண் எலிகளின் பீஜங்களில் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும் பகுதி அதன் திறமையை இழந்திருப்பதையும் கண்டார்கள். அதே சமயம் எலிகளின் சுறுசுறுப்பும், ஆரோக்கியமும். சேர்க்கை விருப்பமும் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இரண்டு விதமான எலி வகைகளை சோதனை செய்து பார்த்த போது இதே முடிவு கிடைத்தது. இதிலிருந்து துளசி ஒரு சிறந்த கருத்தடை மருந்து என்பது தெரிய வந்தது. மனிதர்களிடம் இந்த சோதனையை நடத்திப் பார்க்க முயற்சி செய்யப்பட்டு வந்ததாக வரலாறு உள்ளது. அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் துளசி உட்கொள்வதை தவிர்த்து வரலாம். இருப்பினும் மனிதனிடம் பயன்படுத்திய இதன் ஆராய்ச்சி முடிவுகள் இன்று வரை இல்லை.
🟪துளசி வகைகள்
துளசியில் வெண்துளசி, கருந்துளசி என்று இரு பிரிவுகள் உள்ளன. காட்டுத் துளசி இனத்தைச் சார்ந்த ராம துளசி என்ற ஒரு வகையும் உண்டு. இது ருத்திரச்சடை என்றும். திருநீற்றுபச்சை, எலுமிச்சை துளசி என்றும் அழைக்கப்படுகிறது. வெண் துளசியில் எண்ணெய்ச் சத்து அதிகம். மக்களிடம் அதிகமாக வழக்கத்திலிருந்து வருவது வெண் துளசி.
கருந்துளசியில் மருத்துவ குணம் மிகுதி. கருந்துளசியில் கருஞ்சிவப்பு ஏறி பச்சை நிறத்துடன் இருக்கும். விதையும் கறுப்பாக இருக்கும். ஹிந்தியில் இதற்கு காளி துளசி என்று பெயர். இதன் விதை , சிறு நீரை பிரிக்கக் கூடியது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் விளையும் துளசி கற்பூரச் சத்து கொண்டது குளிர்ப் பகுதியில் 1,000 மீட்டர் உயரமான இடங்களில் தற்போது இதனைக் கொண்டு வந்து பயிரிடுகிறார்கள். உத்திரபிரதேசத்தில் சில பகுதிகளில் இதனைப் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்ற இடமாக இருந்தது.
🟪துளசி பயிரான இடத்தில் காற்றும். நீரும், மண்ணும் சுத்தமாகி விடுகிறது. காற்றால் பரவும் இன்புளூயன்சா (விஷ சுரம்) முதலிய தொற்று நோய்களால் பீடிக்கப்படும் போது நோயாளிகள் துளசியின் மணத்தை அடிக்கடி நுகர்ந்து வந்தால். பிறருக்கு அந்த நோய் பரவாது: அந்த நோயின் கடுமையும் குறையும். ப்ளூ (விஷ சுரம்) நோயாளிகளைப் பார்க்கச் செல்வோர் துளசியை முகந்து செல்ல. நோய் தொத்துவதிலிருந்து தப்பலாம்.
🟪மருத்துவ குணங்கள்
துளசி உடம்பின் கதகதப்பை பாதுகாக்கும். கதகதப்பு குறைந்தால் அதனை அதிகப்படுத்தும்; சுவாச காசத்தில் சளியை கரைக்கும்; நாக்கின் குளகுளப்பை இளக்கி வெளிப்படுத்தும்; ஜீரணம் நீக்கி பசியை மிகுவிக்கும் : குழந்தைகளின் அஜீரணத்திற்கு இது சிறந்த மருந்து, குழந்தைகளின் மார்பு சளிக்கும், நீர்க் கோவைக்கும் இது ஏற்றது. இனந்தெரியாத வேதனையால் அழுது ஆர்பாட்டம் செய்பவர்களுக்கும். நரம்பு பலகீனம் அடைந்தவர்களுக்கும் இது சிறந்த துணை மருந்து (அனுபானம்), துளசியை உட்கொள்வதன் மூலம் உடல் புண்ணைக் குணப்படுத்திக் கொள்ளலாம். கீரைப் பூச்சியை இது வெளிப்படுத்தும்; தேமல், படை, எச்சில் தழும்பு. காணாக்கடி முதலியவற்றிற்கு மேலே பூசி குணம் பெறலாம். மூட்டு வாத வலியில் (ருமாட்டிசம்) ஆறுதல் தரும். இருதயம், கல்லீரல் மற்றும் இதர உள்ளுறுப்புகளில் உள்ள குறைகள் நீங்கி பலப்படும்.
🟪 துளசி மாலை
உடலில் குளிர்ச்சி மற்றும் உஷ்ணத்தை சம நிலையில் வைத்திருக்கும் தன்மை கொண்டதாகும். துளசி மாலையை அணிந்து கொண்டால் அனைத்து விஷயங்களிலும் வெற்றிகள் தேடி வரும். துளசி மாலை அணிவதால் பாவங்கள் அழிவதுடன், பெருமாள் எப்போதும் நம்முடனேயே இருப்பார். கெட்ட கனவுகள், விபத்துக்களில் இருந்து காக்கக் கூடியது துளசி.
✒️☑️நீரிழிவு, ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இரத்த உறைதல் மருந்துகளை உட்கொள்பவர்கள் துளசியைத் தவிர்க்க வேண்டும்.இது பாதுகாப்பானது என்றாலும், கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
🟪வைட்டமின்கள் ஏ,சி,கே மற்றும் கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இதில் கணிசமான அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது
✒️உபயோக முறைகள்
🟪சாறு
துளசி இலையை கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து,இதனை குழந்தைகளுக்கு அரைத் தேநீர் கரண்டி முதல் இரண்டு தேநீர் கரண்டி வரையும், பெரியவர்களுக்கு 7 மில்லி லிட்டர் முதல் 15 மில்லி லிட்டர் வரையும் இரண்டு வேளை ஒரு நாளைக்கு தரலாம்.
🟪சூரணம்
துளசியைக் காய வைத்து இடித்து சல்லடையில் சலித்து வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு 2 முதல் 4 சிட்டிகை தேனுடன் கலந்து தரலாம். வயது வந்தவர்கள் அரை முதல் 1 தேநீர் கரண்டி வரை இரண்டு வேளை உட்கொள்ளலாம்.
🟪துளசி கசாயம்
1 பிடி துளசியை கால் லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி 30 மில்லி லிட்டராக வற்றவைத்து கசாயம் தயாரிக்கவும். குழந்தைகள் 1 முதல் 2 தேநீர் கரண்டியும், வயது வந்தவர்கள் 15 மில்லி லிட்டர் முதல் 30 மில்லி லிட்டர் வரையும் ஒன்று முதல் இரண்டு வேளைகள் அருந்தலாம். கசாயம் தயாரிக்கும்போது. அஜீரணத்திற்கு ஓமம், இஞ்சி, சுக்கு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும், சளி, இருமல், சுரம், சுவாசகாசத்திற்கு அரிசித் திப்பிலி அதிமதுரம், சிற்றரத்தை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் 5 கிராம் சேர்த்து கசாயமாக்கி உட்கொள்ள, நல்ல குணம் காணலாம். ஒன்றிரண்டு வெற்றிலையைத் தனியாக கசக்கிப் பிழிந்து அந்த சாற்றை துளசிக் கசாயத்தில் கலந்து குழந்தைகளுக்குத் தந்தால் சளிக் கட்டும். அதனால் ஏற்படும் தொல்லைகளும் தணியும்.
🟪பல் வலிக்கு
துளசிச் சாற்றில் சிறிது கிராம்புத் தூளும் கற்பூரமும் கலந்து சொத்தையுள்ள பல்லிலும் ஈறு வீக்கமுள்ள இடத்திலும் வைக்க வலி குறையும்.
🟪சொறி, படை, தேமலுக்கு
துளசிச் சாறு, எலுமிச்சைச் சாறு, கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்துத் தடவி குளிக்கலாம்.
🟪தலைப் பேனுக்கு
துளசி இலையை இரவில் கட்டிக் கொண்டு படுத்துறங்கினால் பேனுடன், ஈறும் தானாகவே வெளியேறி விடும்.
🟪துளசிப் பொடி (நாசிகாபரணம்)
துளசியை காய வைத்து இடித்து சன்னச் சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்; இந்த தூளை மூக்கில் உறிஞ்ச மூக்கடைப்பு, தலைசுற்று, தலைவலி, தலைகுடைச்சல் நீங்கும். இங்கு குறிப்பிடப்பட்ட சிறுவைத்தியமுறைகளை டாக்டரின் ஆலோசனை பெற்று பயன்படுத்த சிறந்தது. இக்கட்டுரை எழுத எனது தந்தை டாக்டர் சுப.சதாசிவம் அவர்களின் விஞ்ஞான நோக்கில் நோய்நீக்கும் மூலிகைகள் நூல் பயனாக அமைந்தது.நன்றி
🟦🟦🟩🟩🟩🟩🟦🟦
✅Dr.சுப.ச.இளமாறன்
BSMS
✅Dr.E.Elakiyen BAMS ✅Dr.Arthika BAMS புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்- சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற, மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
YouTube, Instagram Facebook பார்க்க
Dr இளமாறன் 9443475684
👁️📞தொடர்புக்கு ph:9443475684

நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
14/01/2024

நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

நான் எழுதிய 2001 மருத்துவ கட்டுரைகளை நானே இன்று திரும்பி பார்க்கிறேன். Looking backமகிழ்ச்சி ஏற்படுகிறது.நன்றி ஆரோக்யா
07/12/2023

நான் எழுதிய 2001 மருத்துவ கட்டுரைகளை நானே இன்று திரும்பி பார்க்கிறேன்.
Looking back
மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நன்றி ஆரோக்யா

✅கோழிமுட்டையைப் பற்றி தெரிந்து கொள்வோம் 🟪முட்டை உலகின் மிகச் சிறந்த உணவு 🟪 சித்தர்களும் முட்டையை பல்வேறு வகைகளில் பயன்பட...
06/11/2023

✅கோழிமுட்டையைப் பற்றி தெரிந்து கொள்வோம்
🟪முட்டை உலகின் மிகச் சிறந்த உணவு
🟪 சித்தர்களும் முட்டையை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வந்துள்ளனர்
🟪 சித்தர்கள் கண்டறிந்த அண்டத்தைலம்
🟪ஜப்பானின் கறுப்பு நிற முட்டை
✅Dr.சுப.ச.இளமாறன்BSMS
✅Dr.E.Elakiyen BAMS
✅Dr.Arthika BAMS
புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்-சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற,
மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு
ph:9443475684
🟨🟨🟨07-11-23🟨🟨🟨

உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற உணவுகளில் கோழிமுட்டையும் ஒன்று என்று சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அப்படி என்னதான் முட்டையில் இருக்கு.
🟥 முட்டையில் புரோட்டீன் கொழுப்பு, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மேலும் விட்டமின்கள் ஏ. டி, ஈ இவைகளோடு முட்டையின் மஞ்சள் கருவில் பி காம்ப்ளக்சும் B vitamin உள்ளது.
நாம் சாப்பிடும் சாதாரண கோழி முட்டையில் நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் 'உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் முட்டைக்கு முதலிடம் கிடைத்துள்ளது . 40 முதல் 50 கிராம் முட்டையில், 187 மில்லிகிராம் கொழுப்புச்சத்தும் .
(சராசரி மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவே 300 மில்லிகிராம்)ஒரு முட்டையில் 75 கலோரியும் உள்ளன.
பொதுவாக 100 கிராம் கோழி முட்டையில் தன்ணீர் 75 கிராம். கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச்சத்துகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் எனப் பல சத்துகள் உள்ளடங்கியுள்ளன.
நாட்டுக்கோழி முட்டையில் B2,B6,B12, A, D, ரிபோஃப்ளேவின்,
பயோடின் வைட்டமின்களும் . இரும்பு, காப்பர், அயோடின்,செலினியம், துத்தநாகம், போன்ற கனிமச்சத்துகளும் அடங்கியுள்ளன.
முட்டையில் சியாக்ஸாந்தின் (Zeaxanthin), கோலின் (Choline) லூட்டீன் (Lutein) சத்துகளும் உள்ளதால்.
கண்களில் ஏற்படும் கண்புரை, விழித்திரை பாதிப்பையும் தடுக்கும். கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற சத்துகள் இருப்பதால். உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதுடன்.எலும்பு களுக்கு வலுவூட்டும்.
முட்டையில் உள்ள லியூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், தசைகளில் புரதத்தை (Muscle Protein Synthesis) மேம்படுத்த உதவும்.
🟥45 கிராம் எடையுள்ள முட்டையில் 6 கிராம் அளவில் உயர்தர புரோட்டின் கிடைத்துவிடுகிறது.
🟥உடல் எடை குறைவானவர்கள், கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள் ,மெலிதானவர்கள் தினமும் ஒரு முட்டையை உட்கொள்ளலாம். தினமும் உட்கொள்ளும் போது உடல்சூடு அதிகரித்தால், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகள் போதுமானது.
காய்கறி, இறைச்சிகளில் இருக்கும் புரோட்டினைவிட முட்டையில் புரோட்டின் அதிகம் கிடைக்கிறது.
🟥 பண்ணைகளில் தயாராகும் முட்டைகளை காட்டிலும் . கிராமங்களில், வீட்டில் வளர்க்கும் நாட்டுக்கோழியின் முட்டை சத்துமிகுந்தது. நாட்டுக்கோழி முட்டை நிறம் சற்று மாறி இருக்கும்.
🟥சிலர் முட்டையை சமைத்து உண்பதைக் காட்டிலும் சமைக்காமல் பச்சையாக உண்பதை பார்த்திருக்கலாம். இதனால் முட்டையின் அனைத்து பயனும் உடம்பிற்கு சேரும் என்று நினைக்கிறார்கள்.இது உண்மையில்லை.
முட்டையை எப்போதும் ஏழு முதல் பத்து நிமிடம்(அதிக நேரமும் கொதிக்க வைக்க கூடாது)வரையில் மஞ்சள் வெண்கருக்கள் திட நிலையை அடையும் வரை வேகவைக்க வேண்டும்.
இதனால் கண்ணுக்கு தெரியாத தீயகிருமிகள் வேகவைப்பதால் நீங்குவதோடு, அவித்த முட்டையை சில மணிநேரங்களில் உட்கொண்டால் நமக்கு கெடுதல் தராது. அதேவேளை காலையில் வேகவைத்த முட்டையை இரவு உட்கொள்வதும் கெடுதல் ஏற்படும்.
🟥முட்டையின் வெண் கருவை 7மாதங்களுக்கு பிறகு கொடுத்து வரலாம்.ஒருவருடத்திற்கு பிறகு மஞ்சள் கருவையும் சேர்த்து வரலாம். சிலருக்கு முட்டை உட்கொண்டால் அலர்ஜி ஏற்படவாய்ப்புண்டு அவர்கள் தவிர்க்க வேண்டும்.
🟥கர்ப்பிணிகள் கண்டிப்பாக முட்டையை பச்சையாக உண்ணவே கூடாது. ஏனென்றால் சால்மெனெல்லா என்ற பாக்டீரியா இருப்பதால் முட்டையின் மஞ்சள் கருவை பச்சையாக திரவ நிலையில் சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கையும் உண்டு.
முட்டையில் கோலின் (Choline) என்ற சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய தாகும். அதனால் கருவுற்ற தாய்மார்கள் முட்டை சாப்பிடுவதால், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை சீராகவைத்திருக்கும். மூளை தொடர்பான எந்தக் குறைபாடும் இல்லாமல் குழந்தையும் பிறக்கும். முட்டையிலிருக்கும் ஃபோலிக் அமிலம், கருவில் வளரும் குழந்தையின் நரம்புகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் உதவும் .
🟥முட்டையை பச்சையாக உண்ணக் கூடாது என்று சொல்லப்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. முட்டையின் வெண் கருவில் ஆவிடின்(avidin) என்கின்ற ஒரு புரோட்டின் உள்ளது. இது பயோட்டின் என்கின்ற விட்டமின் பி-யுடன் சேர்ந்து கொண்டு மனித குடலில் உட்கிரகிக்க இயலாத நிலையை உருவாக்குகின்றது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் நீங்கிவிடும். அதன் பலனாக, முட்டையில் உள்ள ப்யாட்டின் முழுமையாக உடலில் கிரகிக்கப்படும்.
🟥ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை மிதக்க போட்டால் பழைய முட்டையாக இருந்தால் பந்து போல மிதக்கும். புதியதாக இருந்தால், தண்ணீர்க்கடியில் போய் நிற்கும். இதன் மூலம் நல்ல புதிய முட்டையை கண்டறிவது நமக்கு எளி தாகும்.
பாலும் முட்டையையும் ஒன்றாக சாப்பிடலாமா?
ஒரே நேரத்தில் பாலும் முட்டையையும் உட்கொள்வதால் செரிமானத்தை பாதிக்கலாம் மற்றும் வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை உருவாக்கலாம்.
பாடி பில்டர்கள், தசையை வளர்ப்பதற்கும், அவர்களின் உடலில் புரத அளவை மேம்படுத்துவதற்கும் பாலில் நான்கு முதல் ஐந்து பச்சை முட்டைகளை தினமும் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், இதயப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால், இந்த உணவு அபாயகரமானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
🟥அதேநேரத்தில் நன்கு உடற்பயிற்சி செய்பவர்கள். 200 மில்லி சூடான பாலில் ஒரு முட்டையை, மில்க்சேக் முறையில் உட்கொண்டு வரலாம் என்ற அறிவுரையும் சில உணவுநிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
🟥தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலில் அதிகளவில் கொழுப்புச்சத்து சேர்ந்துவிடும் என்கிற பயம் பலருக்கும் இருக்கிறது. அப்படிச் சாப்பிட விரும்புகிறவர்கள், முதலில்
உடலில் இருக்கும் கொழுப்புச்சத்து அளவைப்
பரிசோதித்துக்கொள்ள
வேண்டும். சாதாரணமாக ஒருவருக்குக் கொழுப்புச்சத்து,
200 mg/dl வரை இருக்கலாம்.
200-230 இருப்பதும் ஆபத்து. 250க்குமேல் இருக்கிறது
என்றால், அதிகளவில் முட்டை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
🟥சித்தமருத்துவத்தில் முட்டையை அண்டம் என்று குறிப்பிட்டு பல பலன்களை சித்தர் குறிப்பிட்டுள்ளனர்.
🟥முட்டையின் அண்டத்தைலம்
நாட்டுக்கோழி முட்டையை அவித்து, மஞ்சள் கருவை மட்டும் சேகரித்து அனலில் வாட்டும்போது ஒரு வகை எண்ணெய் வரும். இதை, அண்டத்தைலம் என்போம். இந்தத் தைலம் திக்குவாய் பிரச்னையைச் சரிசெய்யவும். பக்கவாதத்தினால் பேசமுடியாதவர்களுக்கும் நாக்கில் தடவி விட்டால் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலும், பெரியவர்களுக்கு சர்க்கரையிலும் சில துளிகள் விட்டு உட்கொள்ளலாம்.
இரண்டு வேளைகள் உணவிற்கு பின்பு கொடுக்கலாம் . இதனால் தீரும் நோய்கள் : மாந்தம், சன்னி, பாரிசவாயு, குழந்தைகளின் வலி, நாவுபிடிப்பு, பக்கவாதம் முதலியன தீரும் என அறியலாம். இதனை தகுந்த சித்தமருத்துவரின் மேற்பார்வையில் தயாரித்து பயனடையலாம். இதன் ஆயுட்காலம் ஒருவருடம் ஆகும்.
🟥சித்தர்கள் தாது ஜீவ வர்கத்தில் உபரசம் 120 வகையாக பிரித்து , அதில் பஞ்சபூத அடிப்படையில் நீர்பூத வகைபாட்டில் முட்டையை சேர்த்துள்ளனர். மேலும் இதனை சிற்றண்டம் என பெயரிட்டும் கோழிமுட்டையின் பயன்களை விபரமாக விளக்கியுள்ளனர். இதற்கு உள்ளழலாற்றி, மலமிளக்கி,உடல்தேற்றி போன்ற செய்கை கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
🟥முட்டை ஓட்டில்‌ சுண்ணாம்பு சத்து இருக்கிறது. இதனை பயன்படுத்த சித்தர்கள் , முள்ளங்கி சாறு விட்டு அரைத்து ,புடமிட்டு,
மூட்டை ஓட்டுப்‌ பற்பம்‌ தயாரித்து வழங்கி வந்துள்ளனர். இப்பற்பம் அத்திசுரம் எனப்படும் எலும்புருக்கிச் சுர நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. சித்தமருத்துவத்தில் சில மருந்துகள் தயாரிப்பிலும் முட்டை சேருகிறது.
🟥மயில்துத்தம்‌, பால்‌துத்தம்‌ இவைகளை எதாவது ஒன்றை விடமிக்கும்படி தின்றவர்களுக்கு,
மூட்டையின்‌ வெள்ளை கொடுத்தால்‌ முரிந்துவிடும்‌. விசத்தை முரிக்கும் மருந்தாக முட்டையின் வெள்ளைக் கரு பயன்படுகிறது.
🟥அதேபோல இன்று தலைக்கு தேய்த்து குளிக்க பயன்படுத்தும் சாம்புகளுடன் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க நமக்கு சிறந்த கன்டிசனர் கிடைத்தது விடுகிறது.
🟥மூட்டைஒட்டில்‌ சிறு
துவாரங்களிருப்பதால்‌, அவைகளின்‌ வழியே காற்றுப்‌ போய்க்‌ கொண்டும்‌ வந்து கொண்டுமிருக்கும்‌. அதனால், முட்டைகள்‌ சிலநாட்களில் கெட்டுப்‌ போகின்றன. ஆகையால்‌ முட்டைகளின்‌ கொழுப்பு படலம் அல்லது வாசிலின்‌ பூசி, ஒரு முட்டையின் மேல்‌
மற்றொரு முட்டைபடாதவாறு வைத்திருந்தால்‌, முட்டை பல
நாட்கள்‌ வரையிலும் கெடாது பக்குவமாக இருக்கும்‌. அந்த காலத்தில் முட்டைகளை சுண்ணாம்பு நீரில், கல்லுப்பில் அமிழ்த்தி நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாத்தும் வந்தனர்.
🟥முட்டையின் வெள்ளைக் கருவுடன், களர்சிக்காயின் உள்பருப்பும் சேர்த்து உட்கொள்ள, உடலில் ஏற்படும் பல வீக்கங்களுக்கு நிவாரணம் தருகிறது. குறிப்பாக விரைவீக்கத்திற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. முட்டையில் வெள்ளைக் கருவை விரையில் ஏற்படும் வலி வீக்கத்திற்கும் வெளிஉபயோகமாக பற்றிடலாம்.
🟥முட்டையின் வெள்ளைக்கருவிற்கு எண்ணெய் பிசுபிசுப்பை நீங்கும் தன்மை உண்டு. முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்பு மென்மையான துண்டு கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்துவந்தால் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு ,முககருப்பு நீங்கும்.இதனுடன் எலுமிச்சைச்சாறு, தயிர்,தேன், அரிசிமாவு,கடலைமாவு ஏதாவது ஒன்றை கலந்து, ஸ்பேஸ்பேக் முறையில் பயன் படுத்தி பயன்பெறலாம்.
🟥ஐப்பானில் எரிமலை அருகில் உள்ள வெந்நீர் ஊற்றில் முட்டையை வேகவைக்கும் போது கருப்பு நிறத்தில் மாறுவதால், இவ்வாறு வேகவைத்த முட்டையை உட்கொண்டால் வாழ்நாள் அதிகரிப்பதாகவும் அறியமுடிகிறது. முட்டையை இந்த வெந்நீர் ஊற்றில் 15நிமிடஙகள் வேகும் போது இத்தண்ணீரில் உள்ள சில வேதிப்பொருள்(sulphur ) முட்டையின் நிறத்தை மாற்றுகிறது .
Block egg in Japan
Owakudani is an active volcanic valley in the famed Hakone region west of Tokyo. It’s known to locals as "Jigokudani" (the Valley of Hell) and is famous for its black eggs, which are boiled in the sulfurous waters to give the egg shells a distinctive color.
🟩🟩🟩🟩 நன்றி 🟩🟩🟩
✅Dr.சுப.ச.இளமாறன்
BSMS
✅Dr.E.Elakiyen BAMS
✅Dr.Arthika BAMS
புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்-சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற,
மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு
ph:9443475684
🟪🟪🟪🟪🟪🟪

🟪✒️ படித்து தெரிந்துகொள்வோம்(குறிப்பு இந்த கட்டுரையை நீண்ட நேரம் படிக்க வேண்டிவரும் Save செய்து படியுங்கள் )🟪கொலஸ்டிரால்...
04/10/2023

🟪✒️ படித்து தெரிந்துகொள்வோம்

(குறிப்பு இந்த கட்டுரையை நீண்ட நேரம் படிக்க வேண்டிவரும் Save செய்து படியுங்கள் )

🟪கொலஸ்டிரால் என்ன செய்யும்
👁️வாங்க படிப்போம்
🟪நடைபயிற்ச்சி, யோகாசன பயிற்சி,தியானப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்
🟪 தேங்காய், தேங்காய் எண்ணெயை உணவு தயாரிப்பில் சேர்த்து வரலாம்
🟪மனஅழுத்தம், கவலையில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலே எந்த கொழுப்பும் ஒன்னும் செய்யாது.!
🟪 சமையல் எண்ணெய் ஒருபார்வை
🟪30 வயதை கடந்தவர்கள் வருடம் ஒருமுறை Lipid profile Test செய்து கொலஸ்டிரால் தன்மையை அறிந்து கொள்ளலாம்
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை(since1953)
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, சென்னையில் டாக்டரை சந்திக்க பேசவும்
🟪Ph:9443475684

🟦🟥🟧🟨🟩🫀🟫⬛🟥
❤️❤️❤️04-10-23 ❤️❤️❤️

🟦கொலஸ்டிரால் (Cholesterol)
என்றால் அனேகமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொலஸ்டிரால் எவ்வாறு மனிதனுக்கு தீங்கு விளைவிக்கிறது?கொலஸ்டிரால் அதிகம் உடையவர்கள் எந்த வகையான உணவை
உட்கொள்ள வேண்டும்? மீண்டும் கொலஸ்டிரால் வராமல் எப்படி தடுப்பது? அதற்கான மருத்துவ முறைகள் என்ன என்பதை இனி ஆராய்வோம்.
🟦பொதுவாக கொலஸ்டிராலை, கொழுப்பு
என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் கொழுப்புவேறு. கொலஸ்டிரால் வேறு ஆகும். கொழுப்பு அமிலத்திலிருந்து கொலஸ்டிரால் கிடைக்கிறது கொழுப்பில் ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides )கொலஸ்டிரால், கொலஸ்டிரால் எஸ்டர் மற்றும்
கொழுப்பில் கரைந்துள்ள விட்டமின்கள் (Fat Soluble
Vitamines A,D,E,K) அடங்கும்.
🟦கொலஸ்டிராலானது மனித உடலில் அதிக அளவில் தேவைக்கு மேல் சேரும்போது, தீய விளைவுகளை அளிக்கக்கூடியது. இந்த கொலஸ்டிரால் திசுக்களில் அதிக பங்கு வகிக்கிறது மேலும் நாம் சாப்பிடும் மாமிச பண்டங்களில் கொலஸ்டிரால் அதிகம் காணப்படும். எடுத்துக்காட்டாக கோழிமுட்டை, ஈரல், மூளை போன்ற மாமிச உணவுப் பண்டங்களிலும் பால், கிரீம் (Cream) மற்றும் "கேவியர்” (Caviare) எனப்படும் உப்பும் எண்ணையும் சேர்த்து வறுத்த அசைவ உணவுகளிலும் கொலஸ்டிரால் உள்ளது.
🟦முதன்முதலில் கொலஸ்டிராலை அறிஞர்கள் மனிதனின் பித்த கல்லிலிருந்து (Gall stone) கண்டு பிடித்தனர். கொலஸ்டிராலை கிரேக்க மொழியில் "கோல்" (Chole) என்பர், “கோல்" என்றால் பித்தம் (Bile) என்று பெயர். "ஸ்டிரியோஸ்" (Stereos) என்பதை கடினம் (Hard) என்று அழைப்பார்கள். பின்பு அறிஞர்கள் மனித மூளை, இரத்தம் மற்றும் இரத்தக் குழலில் உறைந்து இருப்பதைக் கண்டனர். ஆல்கஹால் (Alcohol) மற்றும் வேறுபட்ட சேர்க்கையால் கொலஸ்டிரால் எஸ்டர் (Ester) என்ற அமிலங்களின் வடிவில் கிடைக்கிறது. பொதுவாக எஸ்டர்கள் தண்ணீர், அமிலம் மற்றும் காரங்களில் கரைவது இல்லை. எனவே இவைகள் மனிதனின் இரத்தக் குழல்களில் உறைந்து விடுகின்றன. இதனால் அத்திரோகிளிரோசிஸ் (Atherosclerosis) ஏற்படுகிறது. அதனால்கொலஸ்டிரால் மனித உடலில்
🫀👁️
130-230 மி.கி. /100mg/dl
என்ற இடைப்பட்ட அளவு இருந்தாக வேண்டும். அளவுகளில் கூடுதலோ, குறைவோ உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதாவது
1)Total Cholesterol 130- 230 mg/dl
2)LDL Cholesterol 100 mg/dl
3)VLDLCholesterol 30mg/dl
4)Triglycerides 130 mg/dl
5)HDL Cholesterol 50 mg/dl
இதில் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dl க்கு மேலே செல்லச் செல்ல இதயநோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகும். இதன் அளவை 200mg/dl க்கு குறைவாக இருக்கும் படி உணவை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது.
LDL கொலஸ்டிரால் அளவு 100mg/dl அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. அதனால் 30வயதுக்குமேல் சென்றவர்கள் வருடத்திற்கு ஒருமுறை ,மேற்கண்ட கொழுப்பைக் கண்டறிய இரத்தத்தில் லிப்பிட் புரோபைல் Lipid profile Test செய்து தெரிந்துகொள்வது நல்லது.
🟦 இதில் LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால்
HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைசெய்யகூடும். இதற்கு அத்திரோகிளிரோசிஸ் Atherosclerosis என்று பெயர்.
ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் இரத்தக்குழாய்களில் படிவதை தடுக்கிறது. அதனால் HDL அளவு ரத்தத்தில் கூடுவதை நன்மையானதாக கருதப்படுகிறது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் அதனால் தான் இதனை லிப்போபுரோட்டின்(Lipoprotein) என்போம்.
🟦மனிதனின் நரம்பு செல்களிலும், அட்ரினல் சுரப்பிகளிலும் (Adrenal Gland) தசைகளிலும், குடல்களிலும் மனித இரத்தத்தில் உள்ள சிவப்பு (R.B.C.) மற்றும் வெள்ளை (W.B.C.) அணுக்களில் கொலஸ்டிரால் உள்ளது. கொலஸ்டிரால் மனித உடலில் அசிட்டைல் கோ எ (Acetyl Co.A) விலிருந்து கிடைக்கிறது. இந்த அசிட்டைல் கோ எ- உடலில் முக்கியமாக நடைபெறும் வளர்சிதை மாற்றங்களில் (Metabolism) பங்கு கொள்கிறது. மனித உடலில் அசிட்டைல் கோ எ கொழுப்பு அமிலத்திலிருந்து பல என்ஸைம்களின் விளைவால் நமக்கு கிடைக்கிறது.
கொலஸ்டிரால் மனித உடலில் சேமிக்கப்பட்டு தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டும் இருக்கிறது. நாம் தினமும் உண்ணும் உணவில் கொலஸ்டிரால் அதிகமாக இருந்தால், இரத்தத்திலும் கொலஸ்டிரால் அதிகப்பட்டு விடும். நம் எடையில் மொத்தத்தில் 0.2 விழுக்காடு அளவு கொலஸ்டிரால் உள்ளது.
உண்மையிலேயே கொலஸ்டிரால் மனித உடலில் நன்மையையும், தீமையையும் செய்கிறது. நன்மை என்று எடுத்துக்கொண்டால் கொலஸ்டிரால் ஈரல் உதவியுடன் பித்த உப்புக்களை (Bile salt) நம் உடலில் உண்டாக்க பயன்படுகிறது. மேலும் பால் சுரப்பு சம்பந்தமான ஹார்மோன்களையும் (S*x Hormones) உற்பத்தி செய்கின்றது. அதாவது உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) போன்றவை உடலில் சுரப்பதற்கு கொலஸ்டிரால் தேவைப்படுகிறது.கொலஸ்டிரால் சமவீகிதத்தில் கிடைத்தால் தான் மேற்கண்ட ஹார்மோன் சுரக்கும். மேலும்
நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின்" டி" க்கும் இந்த கொலஸ்ட்ரால் கொஞ்சம் தேவைப்படுகிறது.
🟦சில வேளைகளில் கொலஸ்டிரால் உடலில் அதிகமானால் இரத்தக் குழலின் ஓரங்களில் படிந்து, இரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும். இவ்வாறு தடைபடுவதால் தொடர்ந்து திசுக்களுக்கு செல்லும் பிராணவாயு (Oxygen) வின் அளவு குறைந்து சரிவர இயங்காமல் போக முடிகிறது. இவ்வாறு இரத்தப் படிவு ஏற்படுவதால், மாரடைப்பு (Heart stroke) உண்டாகும். மாரடைப்பு அடிக்கடி ஏற்படுபவர்களுக்கு, நெஞ்சில் வலி அதிகமாக இருக்கும்.ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு வலிதெரிவதில்லை ஆனால் வியர்வை,மூச்சுவிட சிரமம் ஏற்படுத்தும், இதற்கு காரணம் இரத்த ஓட்டம் இதயத்திற்கு சரிவர செல்வதில்லை. இதேபோல மூளையில் இச்செயல் ஏற்பட்டால் பக்கவாதம் தோன்றலாம்.
🟦கொலஸ்டிராலினால் பித்தம் உண்டாகிறது என்று கூறினோம். இவ்வாறு கொலஸ்டிராலும், பித்தமும் கலந்து சுரக்கக் கூடும். இவ்வாறு இரண்டும் கலந்து சுரந்தால், கெட்டியாக மாறி, பித்தம் வரும் பாதையையும், பித்தம் சுரக்கும் பையையும்
அடைத்துக் கொள்ளும். இதனால் ஒருவகையான அடைப்பு மஞ்சட்காமாலை (Obstructive Jaundice) ஏற்பட வழியுள்ளது.இதனால் கொழுப்பு சீரணமாவதில் சிரமம் ஏற்படுத்தும்.
🟦 மனிதக் குடலில் கொழுப்பு எப்படி செரிமானம் அடைகிறது என்றால், சாப்பிட்ட உணவில் சீரணத்திற்காக செல்லும்போதே வாயில் ஏற்படும் சீரண நீர் மற்றும் இரைப்பையின் சீரண நீர் கலந்து செரிக்க ஆரம்பித்து, இந்த உணவு சிறுகுடலை வந்தடையும் போது அங்கு பித்தநீர், கணையநீர் உணவில் கலந்து சீரணமாக உதவி செய்யும்.இதனால் உணவில் உள்ள மாவு, புரதம் கொழுப்பு சத்துக்கள் இங்கு செரிக்கப்பட்டு ,சிறுகுடலில் மோர்க்குழம்பு போல் (Emulsion) மாற்றப்படும்.பின்னர் இதனை நிணநீர் குழல்களால் (Lymph Vessels) உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலக்கிறது.இச்செயல் துரிதமாக நடைபெற பித்தநீர் கணையநீர் உதவுகின்றன.
🟦 இவ்வாறு சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கும்போது இதிலிருந்து கொலஸ்ட்ரால் நம் குடலில் உறிஞ்சப்பட்டு அதனை கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது.
இது தினமும் நடைபெறும் நிகழ்வு.இங்கு சேமிக்கப்பட்ட கொழுப்பை தேவைப்படும் போது இரத்தத்தில் வெளியேற்றுவும் மேலும் உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் கல்லீரல் செயல்படுகிறது. கல்லீரல் நம் உடலுக்கு ஒரு தொழிற்சாலை போன்றது.
🟦இக்கொலஸ்ட்ரால் கொழுப்பு, நம் செல்களுக்கு வடிவம் கொடுத்து, அதற்கு சுவராகவும் இருந்து, இயக்கவும் செய்கிறது. முக்கியமாக மனிதனின் மூளை வளர்ச்சிக்கும், செல்களின் செயல்பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் உதவியாக இருக்கிறது.
🟦நாம் தினம் உண்ணும் உணவில் மாவுப் பொருள் (Carbohydrate) புரதப்பொருள் (Proteins), கொழுப்புப் பொருள் (Fat), விட்டமின்கள் (Vitamines) அடங்கும். இவைகள் உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகின்றன
1 கிராம் மாவுப்பொருள் 4 கலோரியையும் (Calory) இதேபோல் 1 கிராம் புரதம் 4 கலோரியையும் 1 கிராம் கொழுப்புப் பொருள் 9 கலோரியையும் 1 கிராம் மதுசாரம் (Alcohol) 7 கலோரியையும் கொடுக்க வல்லது. இவைகளில் கொழுப்பு மற்றும் மதுசாரப் பொருட்களே, அதிக கலோரி மதிப்பை பெற்றுள்ளன. எனவே அதிகமாக கொழுப்பு உண்டாலும், மதுபானம் அருந்தினாலும், இதயநோய்கள் எதிர்காலத்தில் நிச்சயம் வரக்கூடும் என்பதில் ஐயமில்லை.
மாவுச்சத்து, மாமிச சத்து, உணவுப் பண்டங்கள் செரிமானம் அடைய வெகுநேரம் ஆகும். ஆனால் இவைகள் உடலுக்கு அதிக சக்தியை (Energy) அளிக்கக் கூடியவை. மனிதன் அவ்வப்போது செய்யும்
வேலைகளில் இந்தச் சக்தி பயன்படுகிறது. இவ்வாறு சக்தி உபயோகப் படுத்தப்படாமல் இருப்பின் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் மிகுந்து உடல் கனத்து விடும். (Obesity). இவ்வாறு கனத்த உடல் கொண்டவர்களின் உடலுக்கு இதயநோய், இரத்த அழுத்தம் (Hypertension) நீரிழிவு (Diabetes) போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
இவ்வாறு உடல் கனத்தவர்கள் முறையான உடற்பயிற்சி, (arobics excercise )கட்டுப்பாடான உணவு இவற்றுடன் அதிகம் கோபம் காட்டாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கு கொலஸ்டிராலினால் தீங்குகள் அதிகம் வர வாய்ப்பில்லை. 6 முதல் 12 விழுக்காடுகள் மனித மொத்த எடையில் கொழுப்புதசை இருக்குமானால், அவர்கள் தேகப் பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். மேலும் உணவுக் கட்டுப்பாடும் முக்கியம்.
🟦உணவில் நல்லெண்ணெய்,
சூரியகாந்தி எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்
அரிசி தவிடு எண்ணெய்
நிலக்கடலை எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
சோயாபீன் எண்ணெய்
கடுகு எண்ணெய் வகைகளை சமையலுக்கு உபயோகிக்க வேண்டும்.
"பாம் ஆயில்" (Palmoil) போன்ற எண்ணெய்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து, மேலும் குளிர்ச்சியில் நெய்போல உறையும் எண்ணெய்களையும் (Saturatedoil) உபயோகிக்கக் கூடாது. ஆனால் சோயாபீன் எண்ணெயில் 14 விழுக்காடு அளவே உறையும் தன்மையுள்ள கொழுப்பு (Saturated Fat) உள்ளதால் உடலுக்கு அது ஏற்றது. இதேபோல நல்ல எண்ணெய்,கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய், இம்மூன்றையும் தினமும் உணவு தயாரிப்பில் பயன்படுத்திவரலாம்.தேங்காய்,ஆலிவ் எண்ணையையும் அவ்வப்போது உணவு தயாரிப்பில் சேர்த்து வரலாம்.
🟦தேங்காய் எண்ணெய்யில் லாங் மற்றும் மிடியும் செயின் டிரைகிளிசரைடு இருப்பதால் சில நன்மையும் , குறைவான தீமையும் தரவல்லது. மேலும் மோனோலாரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் இதில் உள்ளது. தாய்ப்பால், தேங்காய் தவிர வேறு எதிலும் இந்த அமிலம் கிடையாது. இச்சத்து இதில் இருப்பதால் சிறந்த ஊட்டச்சத்தாகவும் தாய்ப்பாலுக்கு நிகரான சத்தை தேங்காய் பெற்றுள்ளதால் இங்கு குறிபிட்டே ஆக வேண்டும்.
🟦மேற்கிந்திய உணவில் ஆலிவ் ஆயில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் தேங்காய் எண்ணெயை ஒப்பிடும்போது அதிகம் சூடுபடுத்தி (deep fry) தயாரிக்கும் உணவில் தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெயைவிட சிறந்தாக இருந்து வருகிறது.
🟦கடுகு எண்ணெய் கடுகு எண்ணெய் உடலின் கொழுப்பை சமநிலை செய்ய உதவுகிறது. ஆல்ஃபா லினோலிக் அமிலம், ஒமேகா 3 நிறைவாக இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவேதான் இதை பாரம்பரிய உணவுப் பொருளாக சமையலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அதில் Allyl Isothiocyanates (AITC) எனப்படும் மூலக்கூறானது அமைந்து பாக்டீரியா எதிர்ப்பி ஆண்டிமைக்ரோபியல் ஆக்டிவிட்டி நிறைந்ததாக இருக்கிறது . மேலும் குடல் புற்றுநோய் தாக்கத்தை குறைப்பதாகவும் தெரியவருகிறது. கடுகு எண்ணெயை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும் முழுகடுகை எண்ணையில் இட்டு தாளித்து அதன் பயனை பன்னெடுங்காலமாக அனுபவித்து வருகிறோம்.தாளிப்பதால் ஆன்டிஆக்ஸிடென்டுகள் நமக்கு உணவில் கிடைத்து விடுகிறது. இதனை கேரளாவில் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து நிறுபித்துள்ளனர். கடுகு எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் அதன் நல்ல சுவையை மாற்றம் செய்யும். நாம் பயன்படுத்தும் நல்ல எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் உணவின் சுவையை கூட்டிதரும்.
🟦எண்ணெய் இல்லாமல் உணவில்லை. நல்ல எண்ணெய் இல்லாமல் வாழ்க்கையில் வளமில்லை என்பதை உணர்ந்திருந்த முன்னோர்கள், நிலக்கடலையிலிருந்து கடலை எண்ணெய்,கறுப்பு எள்ளிலிருந்து நல்லெண்ணெய், தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய், முத்துக்கொட்டையிலிருந்து விளக் கெண்ணெய், அரிசித் தவிட்டிலிருந்து தவிட்டு எண்ணெய், கடுகிலிருந்து கடுகு எண்ணெய் எனத் தயாரித்தார்கள்.
பொரிக்கவும், வறுக்கவும், கடலை எண்ணெய். தாளிக்க, சமைக்கவும், உடலை பொலிவாக்க,எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய் எண்ணெய். உடல் உஷ்ணத்தைத் தணிக்கவும்.. உடலில் உள்ள அழுக்கை நீக்கவும் விளக்கெண்ணெய் என் யாரும் சொல்லாமலேயே அனைத்து எண்ணெய்களையும் பயன்படுத்தி நல்ல கொழுப்புகளையும் உடலில் தக்கவைத்துக் கொண்டார்கள்.
🟦ஜங்புட் என அழைக்கப்படும் எண்ணெய்யில் பெரித்து , பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உருளைகிழங்கு சிப்ஸ்,மசாலா சிப்ஸ்,பப்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காமல் இருந்தாலே நம் சந்ததிகளுக்கு, எதிர்காலத்திற்காக, அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய ஆரோக்கியமாகவும்.
ஜங்புட்டில் கலக்கப்படும் உப்பு,டேஸ்ட் மேக்கர் பேன்றவை குழந்தைகளை உண்ண அடிமைப்படுத்தி வரும்.அதேபோல சில உணவகங்களில் அஜினோமோட்டோ எனப்படும் வேதியியல் உப்பை சேர்த்து சுவைகூட்டுவதால் அதனை அதிகம் உட்கொள்பவர்களுக்கு எதிர்காலத்தில்- சிக்கிரமாக பல உடல்நல பிரச்சனைகளை வரவைத்துவிடும்.
🟦இரத்த அழுத்தம் அதிகரித்தவர்கள் உணவில் ஊறுகாய்,அப்பளம்,அதிகஉப்பு சேர்ப்பதை தவிர்ப்பது மிக அவசியம்.இதனால் சிறுநீரக செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
🟦தினமும் ஓரேவகை எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்தி உணவு தயாரிப்பதை தவிர்க்கலாம்.
🟦கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது . மாமிசம் உட்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு எழும் சந்தேகம், என்னவென்றால். நமக்கு எங்கிருந்து கொழுப்பு உடலுக்கு கிடைக்கும்.
இவர்களுக்கு பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்றவைகளில் பூரித கொழுப்பு (Saturated) இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
மேலும் ஒற்றை அபூரிதக் கொழுப்பான Mono unsaturated fatty acid -இதனை சுருக்கமாக MUFA என்றழைப்போம்.இது கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
பன்ம பூரிதக் கொழுப்பு அதாவது Poly unsaturated fatty acid -இதனை சுருக்கமாகPUFAஎன்போம்.இது சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
MUFA அதாவது அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெகளை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, உணவு தயாரிப்பின் போது பூரிதக் கொழுப்பாக Saturated fatty acid மாறுகிறது.
இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும்.
🟦ஒரே எண்ணெயைப் பல முறை சுடுபடுத்தி காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.
🟦ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் (TGL) குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.
ஒமேகா 3 உள்ள உணவுகள்
மீன், சால்மன், சுறா, வால்நட், சோயா, ஆளிவிதை(Flax Seeds), அரிசி தவிட்டு எண்ணெய்யிலும்.
ஒமேகா 6 உள்ள உணவுகள்
சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது
🟦மேலும் "காப்பி" (Coffee) இரண்டு கப்புகளுக்கு மேல் உட்கொண்டால் 20 விழுக்காடு கொலஸ்டிரால் உடலில் அதிகமாகிறது. எனவே காப்பியை அதி உட்கொள்ளக் கூடாது
🟦கொலஸ்டிரால் இரத்தத்தில் அதிகம் உடையவர்கள் ,நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்,ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்புகள் அதிகமாக உள்ளதால். இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாற்றி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol லாக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாக வாய்ப்பளிக்கிறது.அதனால் இவைகளை தேவைக்கு அதிகமாக உண்ணாமலும்.
கடல் மீன், சுறாமீன், இஞ்சி, பூண்டு, வெங்காயம், சீரகம், மஞ்சள், பாதாம்பருப்பு, வெந்தயம், பச்சை காய்கறிகள், பழங்கள்,விதையுள்ள தீராச்சைப்பழங்களை அதிகம் சேர்த்துக்கொண்டும் வரலாம்.
எண்ணெய்யில் நீண்ட நேரம் பொறித்த உணவுகளை தவிர்க்கவும் வேண்டும்.
🟦பின்வரும் பரிகார முறைகள் சிகிச்சைகள் ஆகியவற்றைக் கையாளுவதாலும், கொலஸ்டிரால் கட்டுப்படும்
🧿 நவீன மருத்துவத்தில் தேவையின்றி உட்கொள்ளப்படும் துரித சக்தி வாய்ந்த ஆண்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை உபயோகிப்பதை இயன்றவரை தவிர்த்திட வேண்டும். எவ் நீரிழிவு வர நவீன ஆண்டிபயோடிக் காரணமாக அமைவதாககருதப்படுகிறதோ
அதேபோன்று கொலஸ்டிரால் உற்பத்தியாகவும் நவீன ஆண்டிபயோடிக் காரணமாக அமையும் என்று சில நிபுணர்கள் கருதுகிறார்கள
🧿 கொழுப்புச் சத்து உணவுகளை உட்கொள்ளும் போது நார்ச்சத்து (Fibrous Food) விதைப்பகுதி, தோல்பகுதி மிகுந்த காய்கறிகள், பழங்கள் கலந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் கொழுப்பு உறிஞ்சப்படுதல் சிறுகுடலில் குறைய வாய்ப்பு அதிகம்
கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:
🧿சீரான உடற்பயிற்சி
🧿உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
🧿புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
🧿மது அருந்துவதைத் தவிர்ப்பது
🧿அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
🧿அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
🧿பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
🧿நடைபயிற்ச்சி, யோகாசன பயிற்சி, தியானப் பயிற்சி , பிராணாயாமம் செய்வதன் மூலம் கொலஸ்டிராலும், இரத்த அழுத்தமும் கட்டுப்படும்.
🧿மனஅழுத்தம்,கவலை யில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலே எந்த கெட்டகொழுப்பும் ஒன்னும் செய்யாது.
நம் ஆரோக்ய வாழ்வுக்கு நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரிய வாழ்க்கைமுறை என்றும் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.
சித்தமருத்துவதில்
1. நெல்லிக்காய் கல்பம்
2.திரிபலாதி சூரணம் 3. பவழ பற்பம் 4. அன்ன பவழ செந்தூரம் போன்ற மருந்துகள் கொலஸ்டிரால் கட்டுப்படுத்தும் மருந்துகளாக இன்றும் உள்ளது.
🟦ஆங்கில மருத்துவத்தில் statin வகை மருந்துகள் பல உதவிபுரிவதாக உள்ளன. அதில் அடோர்வாஸ்டாடின் Atorvastatin உலகமுழுவதும் பரவலாக பயன் படுத்தப்படுகிறது.ஆனால் இதன் பின்விளைவுகளான
தலைவலி, தலைசுற்றல்.
வழக்கத்திற்கு மாறாக சோர்வு, பலவீனமாக உணர்தல்,மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, செரிமாணப் பிரச்சனைகள்.தசைவலி.தூக்கமின்மை, மேலும் பிளேட்லெட் எண்ணிக்கையை குறைக்க கூடியதாகவும் சிலருக்கு இருந்து வருகிறது.இதனை உட்கொண்டு வரும்போது கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் இதனை தவிர்ப்பது நல்லது .
🟦அந்த வகையில் பாரம்பரிய நம் மரபுவழி மருத்துவத்தை கடைபிடித்து நாள்பட்ட பலநோய்களை வெல்வோம்.
இன்று கொலஸ்டிரால், இதயநோய் பாதுகாப்பிற்கு சித்தா ஆயுர்வேதத்தில் பல மருத்துவ முறைகள் உள்ளன.அர்ஜுனா என்றழைக்கப்படும் மருதமரத்தின் பட்டை இதயநோய் வராமல் தடுக்க கூடியது.அதேபோல எலுமிச்சை பழம், இஞ்சி, பூண்டு,சீரகம்,தாமரை மலர், செம்பரத்தம்பூ, ரோஜா இதழ்கள்,கடுக்காய்,நெல்லி, தான்றிக்காய் மூலிகைகள் மேலும் மான்கொம்பு,முத்து,பவளம் மூலமாக ,விதிப்படி தயாரிக்கப்பட்ட பற்பங்கள் இதயநோய் வராமல் தடுக்கும். நம் உணவுப்பொருள்,சித்தா ஆயுர்வேத மருந்துகள் எந்த தீங்கில்லாமல் கொலஸ்ட்ராலை குறைக்க உதவிபுரிகின்றன
நன்றி
கொலஸ்டிரால் பற்றி பேசிய வீடியோ பார்க்க
YouTube link click செய்து பாருங்கள்.
இதோ லிங்க்

Ok நண்பர்களுக்கும் share செய்யுங்கள்
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை(since1953)
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, சென்னையில் டாக்டரை சந்திக்க பேசவும்
🟪Ph:9443475684
🫀🫀🫀04-10-23🫀🫀🫀

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dr.Elamaran/Dr.Elakiyen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram