உன்னுள் பிரபஞ்சம்

உன்னுள் பிரபஞ்சம் Best Yoga and Naturopathies in Chennai. The best foot reflexology wellness center in Chennai

13/08/2022

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🙏🙏

தியானம் செய்யும் போது ஏன் உடல் வலிக்கிறது:

தியானம் என்பது இறைவனை சந்திப்பதற்கு செல்லக்கூடிய ஒரு பாதை. அந்த பாதை என்பது சற்று கடினமாக தான் இருக்கும். இறைவனை செல்லும்பொழுது நாம் சேர்த்து வைத்துக் கொண்ட கர்மாக்கள் உடன் சேர்ந்து செல்ல முடியாது. அந்த கர்மாக்களை சற்று இறக்கி வைத்துவிட்டு தான் நாம் செல்ல முடியும். அப்படி தியானம் செய்யும் போது உடலில் வலி ஏற்படுகிறது. அந்த வலியைப் நீங்கள் உணர்ந்தால் உங்களது கர்மாக்கள் குறைவதை நீங்கள் உணரலாம்.

தியானத்தின் மூலம் மட்டும்தான் நீங்கள் இறைவனுடன் அதிகமாக உணர்வுகளுடன் பேசமுடியும். நீங்கள் பொதுவாக இறைவனை தேடி சென்று வேண்டி, வேண்டி பல்வேறு இடங்களுக்கு சென்று சர்க்கரை பொங்கல் சமைத்து விட்டு குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு வருவது அல்ல. ஆடுகளை வெட்டி இறைவனுக்கு பரிசு அளிக்கிறேன் என்று கூறி அவர்களே அதனை உண்டு விட்டு வருவதும் இல்லை. இறைவனிடம் தன்னுடைய பண ஆசைகளை கோரிக்கையாக வைப்பதுமில்லை.

இந்த தியானத்தின் மூலம் நீங்கள் இறைவனை காணும் பொழுது உங்களது உடல் கூசும். உங்களது உடல் சிலிர்க்கும். உடலில் வலி அதிகமாகும். அப்பொழுதுதான் நீங்கள் சேர்த்து வைத்த கர்மாக்களின் வெளிப்பாடு உங்களது முகத்திற்கு முன்னால் நன்கு தெரியும். அப்பொழுது உங்களை நினைத்து நீங்களே வெட்கம் கொள்வீர்கள். அந்த நிமிடத்தில் தான் உங்களுடைய ஒவ்வொரு கர்மாவும் கழிந்து கொண்டே வரும். நீங்கள் மறுபடியும் கர்மாக்களை சேர்த்துக் கொள்வதற்கு முற்பட மாட்டீர்கள். அதன்பிறகுதான் இறைவனை சந்திப்பதற்கான ஒரு பாதை உங்களுக்கு திறக்கிறது. அந்த பாதை என்பது ஞானத்திற்கான ஒரு பாதை. இந்த பாதையில் நீங்கள் செல்லும் பொழுது வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் தான் இருக்கும். இன்பம் மட்டும் தான் இருக்கும்.

இந்த பாதை முதலில் கடினமாக தான் இருக்கும் நீங்கள் கடந்த வர கடந்து வர அதுவும் பூப்போன்ற பாதையாக மாறிவிடும்.
___________________________________
இறைவனம் - சென்னை நங்கநல்லூர்
(ஆஞ்ச கோவில் அருகில்)

(இறைவனம் மையத்தில்- உடலில் ஏற்படக்கூடிய அனைத்து குறைபாடுகளுக்கும் மருந்தில்லா மருத்துவ முறைகள், யோகப் பயிற்சிகள், தியானம், வாழ்வியல் ஒழுங்கு முறைகள் அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது)
___________________________________
நன்றி🙏
யுவராஜ்

(மகிழ்ச்சியாய் இரு)
+91 9789802067

நலம் பெறுக🙏 வளம் பெறுக🙏
___________________________________
#தியானம் #ஆழ்மனதியானம் #சக்ரா #கர்மா

05/08/2022

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🙏🙏

ஏன் மற்றவர்களை மன்னிக்க வேண்டும்:

மற்றவர்களை மன்னிக்கும் பொழுது தான் நமது கர்மாக்கள் முற்றிலும் அகன்று விடுகிறது.

பொதுவாக மனிதனின் தினசரி வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து வருவான். ஒரு மனிதன், இன்னொரு மனிதனை ஏமாற்றி விடுவான். ஏமாற்றம் அடைந்த மனிதன் மனவேதனைக்கு உட்பட்டு, கோபப்பட்டு ஏமாற்றிய மனிதனை பழி வாங்குவான். இதற்கு அவனை அடிப்பதற்கு பல திட்டங்களை தீட்டுவான். கொலை செய்வான். அவனை எப்படி முற்றிலும் துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும் என்ற அந்த உணர்வினை எடுத்து, எடுத்து இவனையும் கெடுத்துக் கொண்டு அவனை அழிப்பதற்கு முயற்சி செய்து கொண்டே இருப்பான்.

இப்படி செயல்படும் பொழுது இந்த இடத்தில் நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால், ஏமாந்த மனிதன் ஏமாற்றிய மனிதனின் மூச்சுக்காற்றை தனக்குள்ளே நுகர்ந்து, நுகர்ந்து அதற்கான அணுக்களின் வீரியமும் அதிகரித்துவிடும் மற்றும் ஏமாந்த மனிதன் ஏமாற்றிய மனிதனை பழி வாங்கிவிடுவான். அப்படி ஏமாற்றிய மனிதன் துன்பபட்ட பிறகு இந்த மனிதனை மறுபடியும் அதே போல் துன்ப படுத்துவதற்காக அந்த சிந்தனையில் செயல் பட்டுக் கொண்டிருப்பான்.

இப்பொழுது இவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய அந்த மூச்சு காற்றின் வேகம் அதிகரிக்கும். அந்த அணுக்களின் வேகம் அதிகரிக்கும். இந்த ஒரு செயல் நடந்து கொண்டே இருக்கும். இந்த இடைப்பட்ட ஒரு கர்ம வினை நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்த கர்மவினையோடு வாழ்ந்து, வாழ்ந்து ஒரு நேரத்தில் வாழ்க்கையின் இறுதி நாட்கள் வந்த பிறகு மரணத்தை அடைந்து விடுவார்கள். இவர்கள் மரணத்தை அடைந்தாலும் இவர்களது கர்மவினை விடவே விடாது. மறுபடியும் இவர்கள் இந்த பழியை தீர்ப்பதற்காகவே மறுபடி மனிதனாக பிறப்பார்கள். இறுதியாக யார் துன்பத்திற்கு ஆட்பட்டாரோ அவர் மறுபடியும் இவரை துன்ப படுத்துவதற்காகவே இவர்களுக்கு இடையில் ஒரு செயல் நிகழும். இப்படி தான் அந்த இரண்டு ஆன்மாவுக்கு இடையே ஒரு செயல் நடந்து கொண்டே இருக்கும்.

இந்த ஆன்மாக்கள் பிறவி எடுப்பதற்கு விரும்புவதில்லை ஆனால் இதற்குள் இருக்கக்கூடிய அந்த சிந்தனை தான் பிறவி எடுக்கிறது.

அதனால் தான் வாழும் பொழுது
மன்னித்து விடவேண்டும் என்று ஞானிகள் கூறி வருகிறார்கள். நாம் மன்னித்து விடும் போது இதற்கு இடையில் இருக்கக்கூடிய அந்த கர்ம வினை முற்றிலும் அகன்று விடுகிறது. ஏமாற்றிய நபரின் கர்மவினையே அவரைப் பார்த்துக் கொள்ளும்.

ஏமாற்றிய நபரை நீங்கள் சற்று நினைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நினைத்துவிட்டு உங்களது செயலை நீங்கள் செய்ய தொடங்கினால் அதுவே போதும் அனைத்தும் நன்றாக செயல்படும்.
___________________________________
இறைவனம் - சென்னை

(இறைவனம் மையத்தில்- மருந்தில்லா மருத்துவ முறைகள், யோகப் பயிற்சிகள், தியானம், வாழ்வியல் ஒழுங்கு முறைகள் அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது)
___________________________________
நன்றி🙏
யுவராஜ்

(மகிழ்ச்சியாய் இரு)
+91 9789802067

நலம் பெறுக🙏 வளம் பெறுக🙏
___________________________________
#கர்மா #மன்னிப்பு #கர்மவினை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🙏🙏கர்ப்பப்பை ஏன் மூடிக்கொள்கிறது:கர்ப்பப்பையும் கோவிலின் கருவறையும் இரண்டும் ஒன்றே என்பதை நா...
05/08/2022

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🙏🙏

கர்ப்பப்பை ஏன் மூடிக்கொள்கிறது:

கர்ப்பப்பையும் கோவிலின் கருவறையும் இரண்டும் ஒன்றே என்பதை நாம் முன்பே பல பதிவுகளில் பதிவு செய்துள்ளோம். தனி சற்று படித்தால் இந்த பதிவு இன்னும் எளிமையாக விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு நிலப்பகுதியில் மண்ணில் பல்லாயிரம் விதைகள் உறங்கிக் கொண்டே இருக்கும் முளைத்து எழுவதற்காக. பிறகு ஒரு சூழ்நிலையில் மழை பொழியும். மழை பொழியும் பொழுது அந்த விதைகள் செடிகளாக முளைக்கும். முளைத்த பிறகு அதற்கு போதிய தண்ணீர் இல்லாத பட்சத்தில் காய்ந்து முற்றிலும் அழிந்து விடுகின்றன.

பாலுணர்வு என்பது ஆண், பெண் இருவருக்கும் சமம் என்றாலும் பெண்ணின் உடலில் நிகழ்வதற்கு சற்று கூடுதல் நேரம் பிடிக்கும். ஆண் பெண் இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடும் பொழுது பொதுவாக பெண்கள் உடலில் தாம்பத்தியம் என்னும் அந்த உணர்வுகளின் வெளிப்பாடு முழுவதுமாக கிடைக்கவில்லை. ஒவ்வொரு பெண்ணும் தாம்பத்தியம் என்ற அந்த உணர்வினை ஆசையாக எடுத்து தனக்குள் நுகர்ந்து, பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். ஈடுபட்ட பிறகு அவர்களுக்கு முழுவதுமாக கிடைக்கவில்லை.

இப்படி கிடைக்காமல் போகும் பொழுது அந்த உணர்வுகளின் வெளிப்பாடாக உடலில் ஹார்மோன்களின் சுரப்பிகள் நிறுத்தப்படுகிறது. நன்றாக புரிந்துகொள்ளுங்கள் ஹார்மோன் என்பது மறைமுகமான உணர்வுகளின் வெளிப்பாடு. ஹார்மோன் என்பது பிரபஞ்சத்திடம் தொடர்பு கொண்டவை. ஹார்மோன்களை அவ்வளவு எளிதாக சரி செய்து விடவோ, தேவைப்படும் நேரத்தில் உருவாக்கிக்கொள்ளவோ முடியாது. இது மறைமுகமாக மனம் சம்பந்தப்பட்டவையும் கூட.

தாம்பத்திய உறவில் ஒரு பெண்ணிற்கு அந்த உணர்வுகள் கிடைக்காதபட்சத்தில் அந்த கர்ப்பப்பை தன்னைத்தானே சுருக்கி சுருக்கி மூடிக்கொள்கிறது.

ஒரு செடிக்கு எப்படி நீர் இல்லாத பட்சத்தில் செடி காய்ந்து விடுகிறது அதுபோல உறங்கிக்கொண்டிருந்த கர்ப்பப்பை தூண்டப்பட்டு, பிறகு அதற்கான உணர்வுகளுக்கு ஏற்ப அந்த ஆற்றல் கிடைக்காத பட்சத்தில் கர்ப்பப்பை மூடிக்கொள்கிறது.

இதனால்தான் பெண்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கு விருப்பம் கொள்ளவில்லை வெறுப்புகளை காட்டுகிறார்கள். இது ஆண்களுக்கும் மிக மிக முக்கிய பங்கு உண்டு.

உடல் பாதிக்கப்படும் போது மனமும் பாதிக்கப்படுகிறது. உடலும், மனமும் வேறு வேறு என்று இல்லவே இல்லை.

உடலும் மனமும் ஒன்றுதான். உடல் பாதிக்கப்பட்டாலும் மனம் பாதிக்கப்படும்.
மனம் பாதிக்கப்படும் பொழுது உடல் கண்டிப்பாக பாதிக்கப்படும். இவை இரண்டும் ஒன்றாக இயங்கும் பொழுது தான் கர்ப்பப்பை என்ற அந்த கோவிலின் கருவறை முழுவதுமாக திறக்கப்படும்.

கோவில்களில் பூஜைகள் இல்லாதபட்சத்தில் அங்கு சாத்தான்கள் குடியேறும். அந்த கோவிலில் இருக்கக்கூடிய கடவுள்கள் வெளியேறி விடுவார்கள். அதுபோல தாம்பத்திய உறவில் கர்ப்பப்பைக்கு தேவையான இந்த பாலுணர்வு இல்லாதபட்சத்தில் கர்ப்பப்பை மூடிக்கொள்கிறது.

தாம்பத்திய உறவு என்பது உடல் மட்டும் சார்ந்ததல்ல. மனம் சார்ந்தது. உடலுக்குள் ஒரு மனம் இருக்கிறது. உடலை விட மனம் தான் அங்கு அதிகமாக சந்தோஷப்பட வேண்டும். ஏனென்றால் உடலை விட மனம் தான் அன்பிற்காக ஏங்குகிறது.
___________________________________
இறைவனம் - சென்னை

(இறைவனம் மையத்தில்- மருந்தில்லா மருத்துவ முறைகள், யோகப் பயிற்சிகள், தியானம், வாழ்வியல் ஒழுங்கு முறைகள் அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது)
___________________________________
நன்றி🙏
யுவராஜ்

(மகிழ்ச்சியாய் இரு)
+91 9789802067
___________________________________
#கர்பப்பை #உடல் #மனம் #நீர்க்கட்டி #ஆழ்மனம் #தியானம்

இறைவனம் வழங்கும் தொக்கணம் மருத்துவ முறை:உடலில் ஏற்படக்கூடிய வாதம், பித்தம், கபம் அனைத்தையும் சரி செய்கிறது.உடலில் இருக்க...
06/07/2022

இறைவனம் வழங்கும் தொக்கணம் மருத்துவ முறை:

உடலில் ஏற்படக்கூடிய வாதம், பித்தம், கபம் அனைத்தையும் சரி செய்கிறது.

உடலில் இருக்கக்கூடிய அனைத்து நரம்புகளையும் வலுவாக்கி அதற்கு சரிவர ரத்தம் செல்வதற்கு ஆன பாதையை சரி செய்கிறது.

நன்கு தூக்கம் வருகிறது, மன அழுத்தம், கவலை குறைகிறது.
தெளிவான சிந்தனை எழுகிறது.

உடலில் இருக்கக்கூடிய வலிகள் முற்றிலும் நீங்குகிறது.

உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் நீங்கி உடல் பளபளப்பாகவும் நன்கு தேகத்துடன் ஆன அழகாக திகழ முடிகிறது.

மலச்சிக்கல் நீங்கி உணவை உண்பதற்கு நன்கு பசி எடுக்கிறது.

முதுகு பகுதி சீராகிறது.

உடல் சூடு குறைகிறது. அந்த சூட்டினால் ஏற்பட்ட மனக் கோளாறுகளும் முற்றிலும் நீங்குகிறது.

__________________________________________

IRAIVANAM - இறைவனம்

No:5/10, 15th Street, Nanganallur, Chennai-600061.
(Nearby Ranjani Hall, Flower shop opposite building)

Contact us: +91 9789 80 2067

27/06/2022

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🙏🙏

மலம் நாற்றம் அடிக்கிறது:

மலம் நாற்றம் அடிக்கிறது. மலம் நாற்றம் அடித்துக் கொண்டுதான் இருக்கும் என்ற அந்த உணர்வுக்குள் தான் இப்பொழுது மக்கள் கூட்டம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் வாழக்கூடிய இந்த பூமியில் மனிதர்களின் மலத்தில் இருந்து வருகின்ற நாற்றத்தை மறைப்பதற்காக பல கோடி ரூபாயில் பல நூற்றாண்டுகளாக கழிவு கால்வாய்கள் கட்டப்பட்டு கொண்டுதான் வருகிறது இந்த நிமிடம் வரை.

இந்த பூமியில் மற்ற உயிரினங்களை காட்டிலும் மனிதர்களின் மக்கள் தொகை சிறிதளவு என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

நாற்றம் ஏன் அடிக்கிறது என்று எவரும் சிந்திப்பதில்லை. நாற்றத்தை மறைப்பதற்காக தான் பல பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மலம் கழிக்காத ஒரு உயிரினமும், நுண்ணுயிர்களும் இந்த பூமியில் இல்லை. எல்லா உயிரினங்களும் நுண்ணுயிர்களும் தாவர இனங்களும் மலத்தை வெளிவிட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

மலத்தின் நாற்றம் என்பது உணர்வுகளின் வெளிப்பாடு. ஒவ்வொரு உணர்வுகளும் உடலில் கலந்து, இரத்தத்தில் கலந்து, உடலால் செரிக்கப்பட்டு மலமாக வெளிவருகிறது. இப்படி மலமாக வந்த மனிதர்களின் மலம் அதிக நாற்றத்தை கொண்டது. மற்ற உயிரினங்களின் மலமும் நாற்றத்தை கொண்டது தான். இதற்கு உணவுகளும் ஒரு காரணம் தான். ஆனால் அதன் பின் மறைந்திருக்கும் அந்த உணர்வுகளை பற்றி யாரும் அறிவதில்லை.

இந்த பூமியில் ஒவ்வொரு தாவரமும் மலத்தை வெளிவிட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. மனிதர்கள் சுவாசிக்கக் கூடிய காற்றும் மலத்தை வெளிவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் நாற்றமில்லை. ஏனென்றால் அவைகள் சேர்த்துக் கொண்ட அந்த உணர்வுகள் அங்கு செயல்படுகின்றன.

தாவர உணவுகள் நாற்றம் அடித்தால் மனிதர்களுக்கு உணவுகள் உண்பதற்கு கிட்டாது. காற்றில் மலம் அசுத்தமாக இருந்தால் அந்த காற்றினை எப்படி மனிதர்கள் சுவாசிக்க இயலும்.

நாற்றம் என்பது உணர்வுகளில் இருந்து தான் தொடங்குகிறது.

ஒரு உயிரினத்தால் நல்ல உணர்வுகளை நுகர்ந்து தன் இயல்பை மாற்றுவது என்பது சாத்தியமில்லை. ஆனால் மனிதர்களால் மாற்ற இயலும்.

மனிதர்கள் தனது உணர்வுகளை மாற்றியமைக்கும் பொழுது தனக்கான உணவுகளும் மாறும், எண்ணங்களும் மாறும், உடல் தனக்குத் தானே சேர்த்து கொள்ளப்படுவதும் மாறும். இப்படி அனைத்தும் ஒருநாள் மாறும் பொழுது நாற்றம் இல்லாமலும் போகும்.

இந்த உலகத்தில் மனிதர்களின் மலத்திற்காக எவ்வளவு கோடிகள் பணம் செலவு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன இந்த நிமிடம் வரை. ஒரு மனிதன் தனது இயல்பினை உணர்ந்து, தனக்குள் நல்ல உணர்வினை நுகர்ந்து, தனக்குள் ரத்தத்தில் கலக்கச் செய்து மனிதன் மனிதனாக வாழும் பொழுது இந்த பூமியில் நாற்றம் முழுவதுமே இல்லாமல் மறைந்துவிடும். மனிதர்கள் இப்படி ஒரு கோணத்தில் சற்று சிந்திக்க வேண்டும்.

உடலில் நாற்றம் இல்லாமல் போகும் பொழுது உடலுக்குள் மறைந்து இருக்கின்ற அந்த இறைவன் வெளிப்படுவான். இந்த ஆன்மா இந்த இறைவனை முழுமையாக உணர இயலும்.

___________________________________

இறைவனம் - சென்னை

(உடல்நலம், மனநலம், மருத்துவ முறை மற்றும் வாழ்வியல் நெறிமுறைகள் வழிகாட்டுதல் மையம்)
___________________________________
நன்றி🙏
யுவராஜ்
+91 9789 80 2067

(மகிழ்ச்சியாய் இரு)
___________________________________
#மலம் #காற்று #பிரபஞ்சம் #ஆன்மா #கர்மா

16/06/2022

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🙏🙏

உங்களை சுற்றி ஏன் பூச்சியினங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன:

மனிதன் ஒன்றும் உடனடியாக இந்த பிறவியில் மனித பிறவியை எடுக்கவில்லை. மனிதன் சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து வெளிப்பட்ட ஒரு உயிரணுவில் இருந்து ஒரு அணுவாகி, ஒரு நுண்ணுயிராகி, பூச்சியாகி, பாம்பாகி, மரம், செடி கொடிகள் ஆகி மற்ற உயிரினங்களாக மறுபடியும் தோன்றி இறுதியாக மனிதனாக வந்தான்.

மனிதனாக வந்த பிறகும் அவன் பூச்சி ஆகவும் பாம்பாகவும் இருந்த அந்த உணர்வுகள் அவனுக்குள் தான் இருந்துகொண்டே இருக்கும். அது ஒரு ஈர்ப்பு.

இந்த பூமியில் வீடுகள் இல்லாமல் சற்றே கற்பனை செய்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று. முழுக்க முழுக்க இயற்கை தான் இருக்கும். இது போல தான், இயற்கையை அழித்துவிட்டு அதில் வீடுகளை கட்டிக் கொண்டு வாழ்கின்றோம். வீடுகளை கட்டிக் கொண்டு வாழ்ந்தாலும் வீட்டிற்குள் பல பூச்சியினங்கள் வரக்கூடாது என்று நினைப்பது நமது அறியாமை.

உலகில் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு பூச்சி இனங்களும், பல நுண்ணுயிர்களும் வரும். இது இயற்கை மற்றும் உங்களுக்குள் இருக்கின்ற அந்த உணர்வுகள் அதனை நுகர தான் செய்யும். அது ஒரு ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும். அந்த உணர்வுகளுக்கு ஏற்ப நீங்கள் வாழ்கின்ற பொழுது வீட்டில் பூச்சியினங்கள் வரும். உங்களை கொசு கடிக்கிறது என்றாலும் அது உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அந்த உணர்வுகளின் தன்மை.

ஒரு பாம்பு தனது பசிக்காக அந்த உணர்வை எடுக்கும்பொழுது அதற்கு உணவாக ஒரு எலி இரையாகி விடுகிறது. பாம்புகள் வாழக்கூடிய பகுதிக்கு எலி எப்படி சென்றது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வுகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். இதுபோல மனிதன் வசிக்கக்கூடிய வீடுகளில் பல பூச்சியினங்கள் வந்து கொண்டே இருக்கிறது என்றாலும் அது உணர்வுகளின் தன்மை. அது நிகழத்தான் செய்யும்.

இந்த நிமிடம் வரை இந்த உலகில் பலகோடி பூச்சிகளைக் கொள்வதற்காக பல ரசாயன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டு வருகிறது. இவை அனைத்துமே ஞானம் அடைவதற்கான பாதை இல்லை என்று தான் கூற முடியும். இயற்கையோடு இணைந்து தான் வாழ வேண்டும். அதுதான் இயல்பு. அதுதான் வாழ்க்கை.

மனிதன் பூச்சியாக இருக்கும் பொழுது எப்படி வாழ்ந்தான் என்பதை சற்று கற்பனை செய்து பார்த்தால் இப்போது வாழக்கூடிய அந்த பூச்சிகளை பற்றி நன்கு உணர இயலும்.

___________________________________

இறைவனம் - சென்னை

(உடல்நலம், மனநலம், மருத்துவ முறை மற்றும் வாழ்வியல் நெறிமுறைகள் வழிகாட்டுதல் மையம்)
___________________________________
நன்றி🙏
யுவராஜ்
+91 9789 80 2067

(மகிழ்ச்சியாய் இரு)
___________________________________

#பூச்சி #உணர்வு #ஆன்மா #இயற்கை #இயல்பு #வாழ்க்கைமுறை

14/06/2022

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🙏🙏

ஏன் நல்லது செய்பவர்களுக்கு மட்டும் தீங்கு வந்து கொண்டே இருக்கிறது:

நல்லது செய்யும் மனிதர்களுக்கு மட்டும் தீங்கு வந்து கொண்டே இருக்கிறது என்பதை சற்று உள்நோக்கி கவனித்தால் அவர்கள் இந்த பிறவியில் வேண்டுமானால் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். ஆனால் கடந்த பிறவியில் எப்படி இருந்தார்கள் என்பது ஒரு கேள்விக்குறி. ஒரு ஆன்மா, தான் இறக்கும் தருவாயில் ஏதோ ஒரு உணர்வுகளை தனக்குள் எடுத்து மனதினை மாற்றி இந்த பிறவியில் ஒரு நல்ல ஆன்மாவாக பிறந்திருக்கிறது.

இந்த ஆன்மாவிற்கு இந்த பிறவியில் பல சோதனைகள், பல கஷ்டங்கள் வரும். இது அனைத்துமே அந்த ஆன்மாவை பக்குவப்படுத்துவதற்காகத் தான். இப்படி பக்குவப்பட்ட இந்த ஆன்மாவில் இருக்கக்கூடிய கர்மாக்கள் அனைத்தும் கழிந்து இந்த ஆன்மா சுத்தமடைகிறது.

இந்த ஆன்மாவிற்கு தான் தியானங்கள் கை கூடுகின்றன. நல்ல மனிதர்கள் கிடைக்கிறார்கள். நல்ல குருநாதர் கிடைக்கிறார்கள். நல்ல புத்தகங்கள் கிடைக்கிறது. நல்ல பதிவுகளை இந்த மனிதர்கள் படிக்கிறார்கள்.

இந்த ஆன்மாவிற்கு இந்த பிறவியில் ஒரு நல்ல வழிகாட்டுதல்கள் கிடைக்கிறது. இவ்வளவு கிடைத்தாலும் கஷ்டங்கள் அனைத்தும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கும். இது அனைத்தும் இந்த ஆன்மாவை பக்குவப்படுத்தி, பக்குவப்படுத்தி இந்த ஆன்மா உணர்ந்து பிறவியில்லா நிலைக்கு கடந்து செல்வதற்கான ஒரு பாதை.

புத்தர் தியானம் செய்யும் பொழுது முதலில் அவருக்கு உடல் முழுவதும் வலிகள் ஏற்பட்டது. ஓஷோ தியானம் செய்யும் பொழுது உடல் முழுவதும் வலிகள் தான் ஏற்பட்டன. அப்படி வலிகள் ஏற்படும் பொழுதுதான் கர்மாக்கள் குறையும். தியானம் என்பது அவ்வளவு எளிதல்ல. தியானம் செய்யும் பொழுது நீங்கள் சேர்த்து வைத்த அனைத்து கர்மாக்களும் உங்களது கண் முன்னே உங்களுக்கு தெரியும்.

தீங்கு செய்பவர்களை தியானம் செய்ய சொல்லுங்கள் பார்ப்போம். அவர்களால் முடியாது. நல்லது செய்பவர்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவர்களால் தியானம் செய்ய முடியும். தியானம் என்பது இறைவனை சந்திப்பதற்கான ஒரு படிக்கட்டு. இந்த படிக்கட்டு எத்தனை மனிதர்களுக்கு கிடைத்துவிட்டது என்பதை நீங்கள் நன்கு உணர வேண்டும்.

இப்படி ஆன்மாவில் இருக்கக்கூடிய கர்மாக்கள் குறைந்து, குறைந்து ஆன்மா முழுவதும் சுத்தமடையும். பிறகு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி.

வெயில் ஒன்று அடித்தால் மழை ஒன்று கண்டிப்பாக பெய்யும். இதுபோல் இந்த பிறவியில் சில துன்பங்கள் நிகழ்ந்தாலும் மகிழ்ச்சி என்பது கண்டிப்பாக நிகழ்ந்தே தீரும். இதனை இறைவன் நிகழ்த்தியே தீர்வான்.
___________________________________

இறைவனம் - சென்னை

(உடல்நலம், மனநலம், மருத்துவ முறை மற்றும் வாழ்வியல் நெறிமுறைகள் வழிகாட்டுதல் மையம்)
___________________________________
நன்றி🙏
யுவராஜ்
+91 9789 80 2067

(மகிழ்ச்சியாய் இரு)
___________________________________

#கர்மா #ஆன்மா #உயிர் #இறப்பு #நல்லது #கெட்டது #பாவம் #புண்ணியம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🙏🙏தீங்கு செய்பவர்கள் ஏன் நன்றாக இருக்கிறார்கள்:இந்த மனிதர்கள் தவறு செய்கிறார்கள், அந்த மனிதர...
11/06/2022

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🙏🙏

தீங்கு செய்பவர்கள் ஏன் நன்றாக இருக்கிறார்கள்:

இந்த மனிதர்கள் தவறு செய்கிறார்கள், அந்த மனிதர்கள் தவறு செய்கிறார்கள், மற்றவர்கள் வயிற்றில் அடிக்கிறார்கள், கெடுதல் நினைக்கிறார்கள் ஆனாலும் இவர்கள் நன்றாக தானே இருக்கிறார்கள் என்று உங்களது மனதில் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும்.

நன்றாக புரிந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் அனைவருமே கடந்த பிறவியில் பல நல்ல கர்மாக்களை சேர்த்து கொண்டவர்கள். அவர்கள் சேர்த்து வைத்து கொண்ட நல்ல கர்மாக்களின் உணர்வுகளின் படி தான் அவர்கள் இந்த பிறவியை எடுத்திருக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் ஆடம்பரமாகவும், புகழ் மிக்கதாகவும் இந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

இவர்கள் இந்த வாழ்க்கையில் இன்னும் நல்ல கர்மாக்களை சேர்த்துக்கொண்டால் பிறவியில்லா நிலைக்கு செல்ல முடியும். இவர்கள் மறுபடியும் பாவங்களை அதிகமாக செய்து வந்தால் இவர்கள் இந்த பிறவியில் இருந்து கீழான பிறவிக்கு சென்று விடுவார்கள்.

மக்களை வஞ்சிக்கும் மனிதர்கள் அனைவருமே அவர்களுக்குள் இருக்கக்கூடிய அந்த நல்ல கர்மாக்கள்அவர்களுக்கு உதவுகிறது. நல்ல கர்மாக்கள் எவ்வளவு காலங்கள் தான் அவர்களுக்கு உதவும். ஒரு கட்ட நேரத்தில் இந்த நல்ல கர்மாக்கள் அனைத்துமே குறைந்துவிடும். குறைந்த பிறகு இவர்களுக்கு உதவுவதற்கு நல்ல கர்மாக்கள் இருக்காது.

இவர்கள் வயதான காலத்தில் பல நோய்களுக்கு தள்ளப்படுவார்கள். மனதளவில் பல பிரச்சினைகளும், குடும்பங்களில் பல சிக்கல்களும் எழும். அப்போது இவர்களுக்குள் அந்த வேதனையான உணர்வுகள்தான் ஆட்டிப்படைக்கும். அந்த வேதனையான உணர்வுகள் இவர்களை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும்.

இது யாருடைய தவறு. இந்த மனிதர்கள் இவர்களாகவே எடுத்துக் கொண்ட உணர்வுகள். அந்த உணர்வுகள் தான் பிறவியை கொண்டு செல்லும். இந்த உணர்வுகள் இவர்களை கீழான பிறவிக்கு தான் கொண்டு சென்றுவிடும். அதிலிருந்து மனித பிறவிக்கு மீண்டு வருவது இன்னும் பல்லாயிரம் வருடங்கள் எடுக்கும்.

அவன் தவறு செய்கிறான், இவன் தவறு செய்கிறான், அவன் நன்றாகத்தான் இருக்கிறான், இவன் நன்றாகத்தான் இருக்கிறான் என்று நீங்களும் தவறு செய்யாதீர்கள்.

இது ஒவ்வொன்றும் உணர்வுகளை பொருத்து தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அந்த உணர்வுகளை உங்களுக்குள் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் நல்ல முறையில் வாழ்ந்து கடந்து செல்லுங்கள்.
___________________________________

இறைவனம் - சென்னை

(உடல்நலம், மனநலம், மருத்துவ முறை மற்றும் வாழ்வியல் நெறிமுறைகள் வழிகாட்டுதல் மையம்)
___________________________________
நன்றி🙏
யுவராஜ்
+91 9789802067

(மகிழ்ச்சியாய் இரு)
___________________________________

#கர்மா #நல்லகர்மா #கெட்டகர்மா #ஆன்மா #நல்லது #கெட்டது #பாவம் #புண்ணியம்

Address

Chennai

Telephone

+919789802067

Website

Alerts

Be the first to know and let us send you an email when உன்னுள் பிரபஞ்சம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to உன்னுள் பிரபஞ்சம்:

Share