07/11/2020
அமுக்கரா எனும் அற்புத மூலிகை
"பெண்களுக்குத் துணை சதாவேரிக் கிழங்கு;
ஆண்களுக்குத் துணை அமுக்கரா கிழங்கு" எனும் மூலிகை பழமொழி இதன் மருத்துவப் பெருமையைப் பறைசாற்றுகிறது.
சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு.
சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது. மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு.
அடையாளம்: இரண்டு முதல் மூன்றடிவரை வளரும் செடி வகை. முட்டை வடிவம் கொண்ட இலைகளின் மேற்பரப்பில் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். சிவப்பு நிறத்தில் சிறிய அளவிலான காய்களைத் தாங்கியிருக்கும். ஆங்கிலத்தில் Indian ginseng என்றும் தாவரவியலில் Withania somnifera என்றும் பெயர் கொண்ட அமுக்கரா (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.
‘விதானோலைட்’ (Withanolide), ‘விதாஃபெரின்’(Withaferin), ‘சைடோஇண்டோசைட்ஸ்’ (Sitoindosides), ‘சோம்னிஃபெரைன்’ (Somniferine) போன்ற நலம் பயக்கும் வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.
பெயர்க்காரணம்: அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி ஆகிய மாற்றுப் பெயர்களைக் கொண்டது அமுக்கரா.
அமுக்கரா அதிகம் நம் வாழ்க்கையில் பயன்படுத்த மறந்து இருப்பது அதே நேரத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டியது.
முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு.
பழமையான மூலிகையான அமுக்கரா வை நம்முடைய முன்னோர்கள் ஆயுர்வேத முறையில் ஞாபகமறதியை சரி செய்ய பயன்படுத்தி வந்தனர்.
இதில் இயற்கையாகவே நினைவு திறனை அதிகரிக்கும் பண்பு உள்ளது.நம்முடைய உடலுக்கு தேவையான வேதி பொருட்கள் புரதங்கள்,அமினோஅமிலங்கள் இதில் நிரம்பியுள்ளதால் இது நமக்கு நல் ஆற்றலை தருகிறது.
அமுக்கரா வின் குணங்கள்:
• தன்மை கசப்பு, துவர்ப்பு, கார சுவை கொண்டது.
• உஷ்ண குணம், மக்கட் பேறு பெறுவதற்கும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.
• வாத, கப தோஷங்களை குறைக்கும்.
• பலத்தை அதிகரிக்கும்
• இளமையான தோற்றத்தை அளிக்கும்
• முதுமையை குறைக்கும்
• புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பசியைத் தூண்டும்
• நல்ல உறக்கத்தைத் தரும்
• காசம் என்றழைக்கப்படுகிற சளி, இருமல், மூச்சுத் திணறல்
• காயம்,சருமநோய், தோல்நோய்கள்(குஷ்டம்), வீக்கம்
ஆகிய நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது அஸ்வகந்தா.
ஆண்மையை அதிகரிப்பது மட்டுமல்ல,அமுக்கரா நம் மூளையின் நேர்மறை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.மூளையில் ஏற்படும் அழற்சி,வயோதிகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
நமது உடலில் உள்ள Free radicals ஐ வெளியேற்றி உடலை ஊக்கமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும். உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை அமுக்கரா சீர் செய்யும்.
இதன் உறுப்புகளில் இருந்து நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.மேலும் இதில் உள்ள வித்தனாய்டு மற்றும் சோம்னிட்டால் சத்துக்கள் நம்முடைய மனஅழுத்தத்தை குறைத்து நம்மை தேவையற்ற சிந்தனையில் இருந்து தடுக்கிறது. எனவே இதனை நம் வீட்டிலே வளர்ப்பது மிகவும் அவசியமானது.இதனை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
அமுக்கரா வேரில் உள்ள சத்துக்கள் நம்முடைய இதயத்திற்கு சத்து மருந்தாக பயன்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மேலும் கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வை மேம்படவும் உதவி புரிகிறது.உடலில் தேங்கும் கெட்ட கொலட்ராலை குறைத்து,இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
அமுக்கரா இலைகளை அரைத்து அதன் சாறை நம்முடைய காயங்களுக்கு மேல் தடவினால் விரைவில் குணமாகும். அதே போல் இதன் வேர் சாறை நம்முடைய உடம்பில் அடிபட்டோ வேறு காரணத்தாலோ ஏற்பட்டிருக்கும் வீக்கங்கள் மேல் தடவினால் அந்த வீக்கம் விரைவில் கரையும்.
அமுக்கரா பொடியை அன்றாடம் உண்டு வந்தால் நமது நரம்பு மண்டலமும் வலுவாகிவிடும்.மேலும் மலட்டுத்தன்மையும் நீங்கும்.
காலையில் அஸ்வகந்தா வேரின் பவுடரை சிறிதளவு நெய் அலலது தேன் கலந்து சாப்பிட்டு வருவது சரியாய் இருக்கும்.
ஆண், பெண் இரு பாலருக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் அமுக்கரா உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளை செய்யக்கூடியது.
அமுக்கராவிற்கு கெட்ட கிருமிகளை முற்றிலும் அழிக்கும் குணம் உள்ளது.அதனால் இது சிறுநீரக இரைப்பை-குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்துகிறது.
புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ள இது உடலை கீமோதெரபியின் பக்க விளைவுகளிலிருந்தும் காக்கிறது.
தொடர்ந்து 4 வாரங்கள் அமுக்கராவை உட்கொண்டுவந்தால் நீரழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் அதிகமாகி இருக்கும் சர்க்கரை அளவு குறையும்.
அமுக்கரா தைராய்டு சுரப்பை அதிகப்படுத்துகிறது இதன் மூலம் ஹைப்போ தைராய்டு பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம்.
சரி எப்படி இதை உண்ண வேண்டும்:-
பாரம்பரியம முறைப்படி அமுக்கரா பொடியினை வெதுவெதுப்பான பசும்பால் மற்றும் சுத்தமான மலைத்தேனுடன் கலந்து இரவு உறங்கும் முன் உட்கொள்கிறார்கள்.
பொதுவாக கால் அல்லது அரை தேக்கரண்டி அளவு பொடியை ஒரு நாளிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்ற அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தேனிற்கு பதிலாக நாட்டு சர்க்கரையையும் சேர்த்துக்கொள்ளலாம்,
பொதுவாக அமுக்கராவை டீயில் கலந்து உட்கொள்வது பரவலாக பின்பற்றப்படுகிறது.
சித்த மருந்து கடைகளில் அமுக்கரா லேகியம் எளிதாக கிடைக்கும்...
பவுடராகவும் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்துங்கள் அதன் மூலம் தாம்பத்திய உறவில் இருக்கும் சிக்கல்களை தவிருங்கள்.
அழகான வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் அமுக்கரா அருமையான செழுமையான மூலிகை இதை உட்கொள்பவர்களுக்கு நல்ல உடல் பலம் கிடைக்கும்.…
தூக்கமின்மை குறைபாட்டை சரி செய்து, சுகமான தூக்கம் பெற அஸ்வகந்தாவின் சூரணத்தை சர்க்கரையுடனும் நெய்யுடனும் சேர்த்து கலந்து இரவில் தூங்குவதற்கு முன் உணவு சாப்பிட்ட பிறகு உண்டு வந்தால் பலன் பெறலாம்.
கட்டிகள் எந்தவிதமாக இருப்பினும் அதை சரி செய்யும் திறன் கொண்டது அமுக்கரா. அனைத்துவிதமான கட்டிகளை கரைக்க அமுக்கராவின் இலைகளை வைத்து பற்று போட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன சித்த மருத்துவ நூல்கள்.
வாதத்தினால் ஏற்படும் இதய நோயை குணப்படுத்த அமுக்கரா இலையை அரைத்து அதை பசையாக்கி, அதில் தான்றிக்காயின் பொடி மற்றும் வெல்லத்தை சேர்த்து வெந்நீருடன் உணவு உண்ட பிறகு பருகி வரலாம்.
குழந்தை புஷ்டியாகவும் ஆரோக்கியமாக வளர அமுக்கராவால் செய்யப்பட்ட நெய்யை சாப்பிட்ட பிறகு பருக வைக்க வேண்டும்.
அமுக்கரா பால் கஷாயத்தை நெய்யுடன் சேர்த்து மாதவிடாய் முடிந்து, ருது காலத்தில் உள்ள பெண்கள் குளித்த பிறகு பருகினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும் கிடைக்க அமுக்கராவின் வேறில் பால் கஷாயம் செய்து நெய் சேர்த்து பால் கொண்டு உணவு உண்ட பிறகு பருக வைக்க வேண்டும்.
ஆரோக்கியம் மேம்பட தினமும் அஸ்வகந்தா சூரணத்தை பால் அல்லது நெய் அல்லது தைலத்தோடு சேர்த்து உண்ண வேண்டும். இதை 15 நாட்கள் பின்பற்றலாம்.
பாலில் வேகவைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட அமுக்கரா சூரணத்தை, பாலில் கலந்து பருக, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவற்றின் தரமும் அதிகரிக்கும். மனத்தைச் சாந்தப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்கும் பானமாகவும் இந்த ‘அமுக்கரா-பால்’ பயன்படும்.
அமுக்கரா பொடி இரண்டு பங்குடன், கற்கண்டு பொடி ஆறு பங்கு சேர்த்து, அரைக் கரண்டியளவு தேனில் குழைத்து அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர, பலவீனத்தால் ஏற்படும் நடுக்கம் மறையும்.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினைக்கு அமுக்கரா சார்ந்த மருந்துகள் பலன் தரக்கூடியவை.
வயோதிகத்தில் ஏற்படக்கூடிய மறதியைத் தள்ளிப் போடும் ஆற்றல் இதற்கு இருக்கிறது.
நீர்முள்ளி விதை, குறுந்தொட்டிவேர், வெள்ளரி வேர், அமுக்கரா கிழங்குப் பொடி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டுவர, விந்தணுக்கள் சார்ந்த குறைபாடுகள் நீங்கும்.
இலைகளுடன் மிளகு சேர்த்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வழங்க, காய்ச்சலின் தீவிரம் தணியும்.
‘பாலும் பழமும்’ எனும் பதத்தை, இளம் தம்பதியினருக்கான வாக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அவ்வகையில் ‘பாலும் அமுக்கரா பொடியும்’ என்பதை நாற்பதைக் கடந்தவர்களுக்கான மூலிகை மந்திரமாகச் சொல்லலாம். அதே நேரத்தில், ஆண்களுக்கு உண்டாகும் பாலியல் பிரச்சினைகளுக்கான ‘மூலிகை வயாகராவாக’ மட்டுமே அமுக்கரா பார்க்கப்படுகிறது.
Sd
அமுக்கரா கிழங்கு, பாதாம் பருப்பு, பிஸ்தா, சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து பாலிலிட்டுக் கொதிக வைத்துப் பருக, உடலுக்கு உடனடியாக ஊட்டம் கிடைக்கும்.
நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் பிடியில் நீண்ட நாட்களாகச் சிக்கித் தவிப்பவர்களின் உள்ளுறுப்புகள் சோர்ந்துவிடாமல் பாதுகாக்கும் தன்மை அமுக்கராவுக்கு உண்டு.
அமுக்கரா கிழங்கு, ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு,
சிறுநாவற் பூ ஆகியவற்றுடன் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் ‘அமுக்கரா சூரணம்’ எனும் சித்த மருந்து, பல நோய்களுக்கான எதிரி! மற்ற மருந்துகளின் ஆற்றலை அதிகரிக்கவும், சில மருந்துகளைச் சுமந்து செல்லும் வாகனமாகவும் அமுக்கரா சூரணம் பயன்படுகிறது.
இதன் கிழங்குடன் சில மூலிகைகள் சேர்த்து நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் தலை முழுகும் எண்ணெய் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் மாயங்கள் நிகழ்த்தும்.
மெலிந்து போன அங்கங்களையும் அஸ்வகந்தாவினால் செய்த தைலத்தை கொண்டு தேய்த்தால் பலம் மிகுந்தவையாக மாற்ற முடியும்.
அமுக்கரா, சிற்றாமுட்டி தாவரத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் அசுவகந்தாதி எண்ணெய், வெளிப்பிரயோகமாகப் பயன்படும் சிறந்த உடல்பிடி மருந்து.
அமுக்கரா கிழங்கு பொடி, கேழ்வரகு மாவு, சுக்குத் தூள், கஸ்தூரி மஞ்சள் இணைந்த கலவையை, சாதம் வடித்த தண்ணீரில் குழைத்து வீக்கங்களின் மீது தடவி வர விரைவில் குணம் கிடைக்கும்.
இவ்வாறான பல தனித்துவ மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால்தான் கீர்த்தி பெரிது என்று அமுக்கரா வை குறிப்பிடுகிறார்கள்.!