28/04/2026
சர்க்கரையை நிறுத்திய ஒரு மணி நேரம் - ஒரு வருடம் வரை உடலில் நடக்கும் மாற்றங்கள்!(Changes that occur in the body after giving up sugar)
உங்கள் அன்றாட உணவிலிருந்து சர்க்கரையை நீக்குவது கடினமானதாக சாத்தியமில்லாததாக இருக்கலாம். ஆனால் இதை தவிர்க்கும் போது கிடைக்கும் நன்மைகள் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். சர்க்கரையை எடுப்பதன் மூலம் தான் இனிமையான சுவை கிடைக்கும் என்றில்லை. பழங்கள், காய்கறிகள். பால், பாலாடைக்கட்டி மற்றும் தானியங்கள் போன்ற பல உணவுகளில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது.
ஐஸ்க்ரீம், குக்கீஸ், சாக்லேட் மற்றும் சோடா மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை அடங்கியிலுள்ளது. கெட்ச் அப், சாஸ், தயிர், ரொட்டி மற்றும் சாலட் போன்ற பொருள்களிலும் சர்க்கரை மற்றும் சிரப் சேர்க்கப்படுகிறது.
நீங்கள் உணவில் மட்டும் சர்க்கரை சேர்க்கவில்லை இந்த வகையான உணவுகள் வழியாகவும் சர்க்கரையை சேர்க்கிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு:
சர்க்கரையை நிறுத்தும் போது சில மணி நேரங்களுக்கு பிறகு நீங்கள் இந்த நன்மையை பெறலாம். சர்க்கரை மூளையின் மையத்தில் டோபமைன் செயல்படுத்துகிறது. இது போதைப்பொருள் போன்றது.
தினசரி உட்கொள்ளும் சர்க்கரையின் அளவை பொறுத்து இரத்தத்தில் சர்க்கரை அளவுகள், வியர்வை, நடுக்கம், எரிச்சலூட்டும் மனநிலை, பசி மற்றும் சோகம் ஆகியவற்றின் அறிகுறிகளை நீங்கள் குறைக்கலாம்.
நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு புரத மூலங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட புதிய காய்கறிகள் மூலம் இந்த அறிகுறிகளை எதிர்த்து போராடவும் செய்யலாம்.
ஒரு நாள் கழித்து:
சர்க்கரை நிறுத்திய 24 மணி நேரத்தில் சில நாட்களில் நீங்கள் ஏதோ இழந்ததை உணர்வீர்கள். அதே நேரம் தலைவலி மற்றும் ஆற்றல் மட்டங்களில் வீழ்ச்சி உள்ளிட்ட திரும்ப பெறுதல் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருக்கலாம். இனிப்புக்காக வலுவான ஏக்கங்களை உடல் விரும்பலாம்.
ஏற்கனவே உடல் தானாக குணமடைய தொடங்கியிருக்கும். சர்க்கரை உடலில் கேண்டிடா போன்ற தீங்கு விளைவிக்கும். நுண்ணுயிரிகளுக்கு உணவளிக்கிறது. இது அதிகமாக வளரும் போது அது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை முற்றிலும் நிறுத்துவது இந்த மோசமான நுண்ணுயிரிகளை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ஒரு மாதம் கழித்து:
சர்க்கரை பயன்பாட்டை நிறுத்திய ஒரு மாதங்களில் பல நல்ல மாற்றங்களை நீங்கள் உணருவீர்கள். பசி அதிகமாக இருந்தது. எடை அதிகரிப்பு மற்றும் ஈஸ்ட் தொற்றுகளை ஏற்படுத்தும் வீக்கம் அதிகரித்தது என எல்லாமே படிப்படியாக குறைய தொடங்கும்.
மேலும் இரத்த சர்க்கரை அளவுகள் மேம்பட்ட மன தெளிவு, இயற்கையான எடை இழப்பு மற்றும் மேம்பட்ட குடல் ஆரோக்கியம் ஆகியவவை உண்டாகலாம்.
ஆறு மாதங்கள் கழித்து:
நீங்கள் சர்க்கரையை விரும்ப மாட்டீர்கள். பார்த்தாலும் விலகி இருக்க தொடங்குவீர்கள். இரத்த சர்க்கரை அளவை கொண்டிருக்கும் போது எடை குறைவதை பார்ப்பீர்கள்.
குறிப்பாக கரையாத தொப்பை கொழுப்பு கரைவதை பார்ப்பீர்கள். ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஆறு மாதங்கள் சர்க்கரை இல்லாமல் இருப்பது உங்கள் டைப் 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் முன்கூட்டிய வயதான தோற்ற அபாயத்தை குறைக்கும்.
ஒரு வருடம் கழித்து:
தினசரி உணவில் சர்க்கரை நீக்கப்படும் போது ஒரு வருடத்தில் சருமத்தின் தரம் மேம்பட்டிருக்கும். முகப்பரு, எரிச்சல் மற்றும் நேர்த்தியான கோடுகளின் குறைப்பு ஆகியவை வியத்தக்க வகையில் அளவில் இருக்கும்.
நிரிழிவு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற தடுக்ககூடிய நோய்களின் ஒட்டுமொத்த ஆபத்து குறைவதை நீங்கள் பார்ப்பீர்கள்.
உங்கள் ஆரோக்கியம் உறுதியாகவும், ஆயுட்காலமும் நீட்டிக்கும். இத்தனை நன்மைகளை பெற உங்கள் சர்க்கரை உட்கொள்ளலை நிறுத்தியே ஆக வேண்டும்.
ARTICLE PREPARED BY DIETICIAN NIVEDHA