சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

  • Home
  • India
  • Mumbai
  • சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

சித்த மருத்துவ வாழ்வியல் மையம் சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான "பங்குனி உத்திரம்" திருநாள்...
01/04/2026

இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான "பங்குனி உத்திரம்" திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி வேல்! வீர வேல்!

🌿 *மதுமேக சூரணம் – சர்க்கரை நோய்க்கு இயற்கையான முறையில் ஆதரவு* 🌿சர்க்கரை அளவை இயற்கையாக கட்டுப்படுத்த உதவும் பாரம்பரிய ம...
23/03/2026

🌿 *மதுமேக சூரணம் – சர்க்கரை நோய்க்கு இயற்கையான முறையில் ஆதரவு* 🌿

சர்க்கரை அளவை இயற்கையாக கட்டுப்படுத்த உதவும் பாரம்பரிய மூலிகை தயாரிப்பு 💚

✨ *மதுமேக சூரணம்*
உடல் சமநிலையை பேணவும், தினசரி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

🌱 *15 சக்திவாய்ந்த மூலிகைகள் கொண்டது:*

✔ வேப்பிலை
✔ சீந்தில் கொடி (குடுச்சி)
✔ நாவல் விதை
✔ வெந்தயம்
✔ கருஞ்சீரகம்
✔ மஞ்சள்
✔ அமுக்கரா
✔ திரிபலா
✔ இலவங்கப்பட்டை
✔ சுக்கு
✔ மிளகு
✔ திப்பிலி
✔ நெல்லிக்காய்
✔ வில்வ இலை
✔ சிறுகுறிஞ்சான்

💚 *முக்கிய நன்மைகள்:*

✔ ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்
✔ செரிமானத்தை மேம்படுத்தும்
✔ சோர்வு & பலவீனம் குறைக்கும்
✔ உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
✔ 100% இயற்கை – ரசாயனம் இல்லாது

🟢 *தினசரி பயன்படுத்த ஏற்றது*
📦 100 கிராம் பாக்கெட் கிடைக்கும்

💬 *இயற்கையான தீர்வை தேர்வு செய்யுங்கள் – ஆரோக்கியமாக வாழுங்கள்!*

#மதுமேகசூரணம் #சர்க்கரைநோய் #மூலிகைமருந்து #இயற்கைஆரோக்கியம்

பல் வலிக்கு தீர்வு :மாசிக்காய்- 5கிராம்கஸ்தூரி மஞ்சள் -5கிராம் நல்லெண்ணெய் - 100 மிலிசெய்முறை:மாசிக்காய், கஸ்தூரி மஞ்சள்...
02/03/2026

பல் வலிக்கு தீர்வு :

மாசிக்காய்- 5கிராம்

கஸ்தூரி மஞ்சள் -5கிராம் நல்லெண்ணெய் - 100 மிலி

செய்முறை:

மாசிக்காய், கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் நன்றாக இடித்து நல்லெண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு பல் வலிக்கும், பல் அசைவுக்கு பல் ஈறுகளிலும் தடவி வரதீரும்...

எந்த வகையான வயிற்று வலியாக இருந்தாலும் அரை டேபிள் ஸ்பூன் சீரகம், சிட்டிகை உப்பு இரண்டையும் சேர்த்து வாயில் போட்டு மென்று...
23/02/2026

எந்த வகையான வயிற்று வலியாக இருந்தாலும் அரை டேபிள் ஸ்பூன் சீரகம், சிட்டிகை உப்பு இரண்டையும் சேர்த்து வாயில் போட்டு மென்று சுடு தண்ணீர் குடித்தால் அரை மணி நேரத்தில் வலி போய்விடும்.

சளி , இருமலால் அவதிப்படுகிறீர்களா..? கற்பூரவல்லி இஞ்சி டீ யை குடித்துப் பாருங்கள்..!கற்பூரவல்லியை நுகர்ந்தாலே பிணி அண்டா...
10/02/2026

சளி , இருமலால் அவதிப்படுகிறீர்களா..? கற்பூரவல்லி இஞ்சி டீ யை குடித்துப் பாருங்கள்..!

கற்பூரவல்லியை நுகர்ந்தாலே பிணி அண்டாது என்பார்கள். அதனால்தான் வீட்டுக்கு வீடு கற்பூரவல்லியை வளர்ப்பார்கள். ஆனால் இன்றைய நவீன சூழலில் செடி வளர்க்க நேரமில்லை. இடமும் இல்லை. எனவே இதுபோன்ற பருவக் காலங்களில் கடைகளிலேயே கற்பூரவல்லி இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி இந்த அருமையான டீயை போட்டு குடித்துப் பாருங்கள். சளி, இருமல் இருந்தால் பறந்தோடும்.

குளிர்காலத்தில் உடல் சூட்டை தணிக்கவும், சீதளத்தால் உண்டாகும் சளியை போக்கவும் கற்பூரவல்லி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு இஞ்சியின் காம்பினேஷன் மிகச் சிறந்த மருத்துவக் குறிப்பு. கற்பூரவல்லி இஞ்சி டீ எப்படி போடுவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லி - 5 இலைகள்

இஞ்சி - 1/2 துண்டு

டீத்தூள் - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 சொட்டு

தண்ணீர் - 2 கப்

தேன் - 1 ஸ்பூன்

செய்முறை :

கற்பூரவல்லி மற்றும் இஞ்சியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி நிலைக்கு வரும்போது டீத்தூள், கற்பூரவல்லி,இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

தண்ணீர் அரை பாதியாக குறைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள்.

பின் அதில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடியுங்கள்.

இந்த டீயை தினமும் குடிக்க சளி , இருமல் நீங்கி சுவாசப்பாதை அடைப்பு இன்றி சீராகும். பசியும் எடுக்கும். உற்சாகமாக உணர்வீர்கள்.

பனங்கிழங்கு உண்ணுவதால் பெரும் பல நன்மைகள்…1. நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் க...
09/02/2026

பனங்கிழங்கு உண்ணுவதால் பெரும் பல நன்மைகள்…

1. நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகும்.

2. உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும்.

3. உடலுக்கு குளிர்ச்சித் தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கிறது.

4. கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.

5. பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும்.

6. சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பனங்கிழங்கை உண்ணுவதோடு பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

7. பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

8. ஆறு மாத குழந்தை முதல் பெரியவர்கள் மற்றும் சக்கரை நோயாளிகள் அனைவரும் அளவோடு பனங்கிழங்கு மாவினை உண்ணலாம்.

எந்த செடிகளில் என்ன வகையான சத்துக்கள்... உள்ளது வாங்க பார்க்கலாம்.!எல்லா தாவர வகையிலும் ஒரு கனிம பொருள் - இரசாயன பொருள் ...
07/02/2026

எந்த செடிகளில் என்ன வகையான சத்துக்கள்... உள்ளது வாங்க பார்க்கலாம்.!

எல்லா தாவர வகையிலும் ஒரு கனிம பொருள் - இரசாயன பொருள் உள்ளடங்கி உள்ளது.

1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை – செம்புச்சத்து
20. துத்தி – கால்சியம்
21. தூதுவளை – ஈயச்சத்து
22. நன்னாரி – இரும்புச்சத்து
23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம் – கந்தகச்சத்து
25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26. பிரண்டை – உப்புச்சத்து
27. புதினா – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. வெண்டைக்காய் – அயோடின்.
35. நுணா – தாமிரச்சத்து

இருமல் + சளி குணமாக எளிமையான வைத்தியம்.!துளசி + இஞ்சி + மிளகு கஷாயம்செய்முறை :-துளசி இலை – 7இஞ்சி – 1 இச் மிளகு – 8சுக்க...
04/02/2026

இருமல் + சளி குணமாக எளிமையான வைத்தியம்.!

துளசி + இஞ்சி + மிளகு கஷாயம்

செய்முறை :-

துளசி இலை – 7

இஞ்சி – 1 இச்

மிளகு – 8

சுக்கு – ½ tsp

தண்ணீர் – 1 கப்

இவை அனைத்தையும் கொதிக்க வைத்து பாதி அளவாக குறைந்ததும் வடிகட்டி சூடாக குடிக்கவும்.

இரண்டு நாட்கள் முறையாக குடித்தால் இருமலும் சளியும் வேகமாக குறையும்.

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்!!இந்த பதிவில் எலுமிச்சை, இஞ்சி, தேன்...
03/02/2026

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்!!

இந்த பதிவில் எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்து பானம் தயாரிப்பது எப்படி அதில் என்னவெல்லாம் நன்மைகள் அடங்கியுள்ளன என பார்ப்போம்.

எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி உள்ளது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் தோலில் தான் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

அடுத்து ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சையை கழுவி சிறு சிறு துண்டுகளாக தோலுடன் நறுக்கிக் கொள்ளவும். இந்த பானமானது ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒரு நல்ல அருமருந்தாக செயல்படும். அவர்களின் ரத்த ஓட்டம் சீராகி சுவாச பிரச்சனை சரியாகும்.

சிலருக்கு அடிக்கடி காய்ச்சல் சளி இருமல் உடல் சோர்வு போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பானம் உதவும். வயிற்றில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து தொப்பையை குறைக்க உதவும்.

இந்த பானம் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நச்சுக்களை வெளியேற்றுகிறது. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புற்றுநோய் எதுவும் வராமல் தடுக்கிறது. மேலும் பல்வேறு வயிற்றுப் பிரச்சினைகளையும் தீர்க்கும். இந்தப் பானத்தின் முக்கிய பயன்பாடு இதய அடைப்பை நீக்குவது தான். இதனால் ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்படாது.

அடுத்து இஞ்சியை சிறு துண்டுகளாகவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் துண்டுகளாக்கிய இஞ்சி மற்றும் எலுமிச்சை போடவும். ஓரளவு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். அதிக நேரம் கொதிக்க கூடாது.

இது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகலாம். இதை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காலை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும். மேலும் சுவாசப் பிரச்சினைகள், இதய அடைப்பு செரிமான பிரச்சனைகள் போன்றவை நீங்கும்.

அல்சருக்கான அருமருந்து - மணத்தக்காளி கீரை கூட்டுமணத்தக்காளிக்கீரை கூட்டு:தேவையான பொருட்கள்:மணத்தக்காளிக் கீரை – 1கட்டுது...
01/02/2026

அல்சருக்கான அருமருந்து - மணத்தக்காளி கீரை கூட்டு

மணத்தக்காளிக்கீரை கூட்டு:

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளிக் கீரை – 1கட்டு
துவரம் பருப்பு :- ஒரு கைப்பிடி
மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு சிட்டிகை
கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய அளவு
கல் உப்பு - தேவைக்கு ஏற்ப

அரைக்க வேண்டிய பொருட்கள்:

துருவிய தேங்காய் – ஒரு குழிக்கரண்டி அளவு
பச்சை மிளகாய் – 2 நம்பர்
ஜீரகம் – ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்

தாளிக்க வேண்டிய பொருட்கள்:

கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
வற்றல் மிளகாய் – ஒரு நம்பர்
கடலெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கீரையை மட்டும் ஆய்ந்துக்கொள்ளவும். தண்டு உபயோகப்படாது. பிறகு கீரையை நன்கு அலசவும். அதன் பிறகு பத்து நிமிடம் வடிதட்டில் வடிய விடவும். அடுத்து கீரையப் பொடியாக நறுக்கவும்.

துவரம் பருப்பை குக்கரில் அல்லது தனியாகவோ மஞ்சள் பொடிப் போட்டு வேகவிடவும்.

ஒரு கடாயில் சிறிது அளவு தண்ணீர் ஊற்றவும். அது கொதிக்க ஆரம்பித்தவுடன் மஞ்சள் பொடி, உப்பு, சக்கரை, கட்டிப் பெருங்காயம் போடவும். பிறகு கீரையைச் சேர்க்கவும்.

அரைக்க வேண்டிய தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் மூன்றையும் ஒன்றாகப் போட்டு அரைக்கவும். நன்கு மசிந்தவுடன், அரிசிமாவு சேர்த்து ஒரு சுத்து சுத்தவும்.

கீரை வெந்தவுடன், வெந்த துவரம் பருப்பைச் சேர்க்கவும். அடுத்து தேங்காய் கலவையைச் சேர்க்கவும்.

கடைசியில் தாளித்துக் கொட்டவும்.
அருமையான மணத்தக்காளிக் கீரைக் கூட்டு ரெடி.

முக்கியக் குறிப்பு:

இக்கீரை நல்ல மருத்துவ குணம் உடையது. குறிப்பாக குடல்புண் என்கின்ற அல்சருக்கு அருமருந்து.

கீரையை நறுக்கியவுடன் சமைத்து விடணும். நேரம் கழித்து சமைத்தால் அதிக கசப்புத் தன்மைத் தெரியும்.

இக்கீரை மருத்துவ குணம் நிறைந்ததால் வெங்காயம், பூண்டு போடக்கூடாது. இவை இரண்டிற்கும் அமில, காரத் தன்மை இருப்பதால் குறிப்பாக அல்சர் உள்ளவர்களுக்கு தேவை இல்லை. அல்சர் உள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் சாம்பார் பொடி ஒரு ஸ்பூன் கீரை வேகும் போதே சேர்க்கலாம்.

அல்சர், நெஞ்சுஎரிச்சல், அசிடிட்டி, வயிற்று வேக்காளம் (காதில் உள் பக்கம் அரிக்கும்) உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் செய்து சாப்பிடலாம். நாளைடைவில் அல்சரின் தாக்கம் குறையும். ஆரோக்கியமாக வாழலாம்.

காலை எழுந்து பல் தேய்த்தவடன், வெறும் வயிற்றில் கீரைக் கூட்டை ஒரு சிறிய கப்பில் எடுத்துக்கொண்டு பொறுமையாகச் சாப்பிடவும். அரை மணி நேரம் கழித்து காபி அல்லது டீ குடிக்கலாம்.

இக்கீரை அதிக குளிர்ச்சி உடையது. அதனால் பாசிப்பருப்பும் குளிர்ச்சியாக இருப்பதால் சேர்க்க வேண்டாம். துவரம் பருப்பே போதுமானது.

பொதுவாக அல்சர் உள்ளவர்கள் காபி/டீ குடிக்காமல் தவிர்த்தால் நல்லது.

1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.2. சுண்டைக்காயில் இரும்புச்சத...
31/01/2026

1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.

3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.

5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.

6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.

8. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.

Address

Sion West Mumbai
Mumbai
400022

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919930720234

Website

Alerts

Be the first to know and let us send you an email when சித்த மருத்துவ வாழ்வியல் மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to சித்த மருத்துவ வாழ்வியல் மையம்:

Share