சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

  • Home
  • சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

சித்த மருத்துவ வாழ்வியல் மையம் சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

🌿 வள்ளலார் கூறிய ஞான மூலிகைகள் 🌿1️⃣ பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி2️⃣ தூதுளையிலை3️⃣ முசுமுசுக்கையிலை4️⃣ சீரகம்...
11/08/2025

🌿 வள்ளலார் கூறிய ஞான மூலிகைகள் 🌿

1️⃣ பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி
2️⃣ தூதுளையிலை
3️⃣ முசுமுசுக்கையிலை
4️⃣ சீரகம்

இவைகளின் சூரணம்
நல்ல ஜலம்(water),
பசுவின் பால்
மற்றும் நாட்டு சர்க்கரை

இவைகள் கலந்து சுண்டக் காய்ச்சியது, சுண்ட காய்ச்சியதை குடிக்க வேண்டும்.இப்பொடிகள்/சூரணங்கள் அனைத்தும் காதி கடைகளில் கிடைகிறது.

தூதுவளை பொடி

நாட்பட்ட சளி இருமல் இளைப்பு(ஆஸ்துமா) குணமடையும்
காது நோய் செவிடு பேரு வயிறு, மந்தம் உடல்வலி
முக்குற்றம் (வாதம்,பித்தம்,கபம்),
கண் நோய் ஜுரம் நீங்கி உடல் வலிமை பெரும்

கரிசலங்கண்ணி

கல்லீரல் நோய் காமாலை தீரும்.
பல் ஈறு சம்பந்தமான நோய்கள் தீரும்
தலை முடி உதிர்வதை தடுக்கும்
ரத்த விருத்தி உண்டாகும்
இது ஒரு சிறந்த காயகல்ப மருந்து

முசுமுசுக்கை

சளி,இருமல் ,இறைப்பு , மூச்சு பிடிப்பு
போன்ற சுவாச கோளாறுகள் குணமாகும்

சீரகம்

உடலுக்கு குளிர்ச்சியும்,
தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும்
சீரகத்திற்கு உண்டு.

கரிசலாங்கண்ணி:

கரிசாலை எனற பெயர் கொண்ட இது ஒரு தெய்வீக மூலிகை என்று வள்ளல் பெருமான் கூறுகிறார்.ஏனெனில் இதை தினந்தோறும்பயன்டுத்துவதால் பித்தம் மற்றும் கபத்தை வெளியேற்றி உடம்பை நீடிக்க செய்யும். உள்ளொளியை பெருக்கும் வல்லமை பெற்றது.தினந்தோறும் பச்சையாகவோ அல்லது பொடியினை சூடான நீரில் கலந்து அருந்துவது நல்ல பலனை தரும்.

வல்லாரை:

வள்ளலார் கூறிய ஞான மூலிகையில் அடுத்தது வல்லாரை . இதற்கு சரஸ்வதி என்ற பெயரும் உண்டு. இது இரத்தத்தை தூய்மைபடுத்தி அறிவை பெருக்கும் வல்லமை வல்லாரைக்கு உண்டு. இதனை காயவைத்து பொடியாகவோ அல்லது மத்திரையாகவோ செய்து சாப்பிடலாம்.

தூதுவளை :

இது அறிவை பெருக்கி , கவன சக்தியை அதிகரிக்கும் வல்லமை பெற்றது. உடலிலுள்ள அசுத்தங்களை நீக்கி உடலை நெடுநாளைக்கு நீடிக்க செய்யும். மேலும் பல நோய்களை நீக்கும் வல்லமை பெற்றது.

வள்ளலார் அருளிய ஞான மூலிகைகளுள் தூதுவளைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சாத்வீக உணவுகளிலேயே மிகவும் நுட்பமான உணவு தூதுவளையாகும். கரிசலாங்கண்ணி, பொற்றலை, கையாந்தகரை, தூதுவளை, வல்லாரை போன்ற ஞான மூலிகைகள் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானால் புசிக்கப் பெற்று, உலகமெல்லாம் அவரால் பரப்பப்பட்டது.

கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

*பல மருத்துவ குணம் கொண்ட கம்பு..  உடலை ஆக்கும் தெம்பு**இது உணவு அல்ல வரபிரசாதம்*....!*மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு ...
01/08/2025

*பல மருத்துவ குணம் கொண்ட கம்பு.. உடலை ஆக்கும் தெம்பு*

*இது உணவு அல்ல வரபிரசாதம்*....!

*மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடை கின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்*.

*அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு*

*கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்*.

*உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்*

*கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும்*

*சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்*

*உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்*.

*அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்*

🙏 *இன்றைய குருபூர்ணிமா நாளில்,*எங்களை அறிவின் ஒளிக்குள் அழைத்துச் சென்ற குருமார்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம...
10/07/2025

🙏 *இன்றைய குருபூர்ணிமா நாளில்,*
எங்களை அறிவின் ஒளிக்குள் அழைத்துச் சென்ற குருமார்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*குருவின் ஆசீர்வாதம் என்றும் எங்களுடன் இருக்கட்டும்.*
#குருபூர்ணிமா #குருவேசரணம்

"மருந்துகள் நோய்களைக் குணப்படுத்த முடியும், ஆனால் மருத்துவர்களால் மட்டுமே நோயாளிகளைக் குணப்படுத்த முடியும்." - கார்ல் ஜங...
01/07/2025

"மருந்துகள் நோய்களைக் குணப்படுத்த முடியும், ஆனால் மருத்துவர்களால் மட்டுமே நோயாளிகளைக் குணப்படுத்த முடியும்." - கார்ல் ஜங்.

தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்..!

கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா......தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க....உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்க...
28/06/2025

கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா......

தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க....

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை தினமும் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்த முடியும். கருஞ்சீரகப் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். செரிமான கோளாறு உள்ளிட்ட பிற வயிற்று பிரச்சனைகளும் குணமாகும். உள்ளுறுப்புகளில் மிகவும் முக்கியமான கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கருஞ்சீரகம் நமக்கு உதவும். ஆகவே தினமும் கருஞ்சீரகத்தைச் சாப்பிட்டு வாருங்கள்...

இருமல் சூரணம் :ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய்த் தோல், அக்ரகாரம், சித்தரத்தைச் சம அளவு எடுத்து அரைத்து நாட்டுச்...
26/06/2025

இருமல் சூரணம் :

ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய்த் தோல், அக்ரகாரம், சித்தரத்தைச் சம அளவு எடுத்து அரைத்து நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும். அதில் ஐந்து சிட்டிகை அளவு வாயில் அடக்கிக்கொண்டால், கோழை வெளியேறி வறட்டு இருமல் அடங்கும்.

விக்கல் சூரணம்:

எட்டு பங்கு திப்பிலி, பத்து பங்கு சீரகத்தை அரைத்து வைத்துக்கொண்டு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் விக்கல் அடங்கும்....

04/06/2025

*தலைவலி என்பது ஒரு நோய் அல்ல, ஒரு நோய்யின் அறிகுறி ஆகும்.*

மலச்சிக்கல் செரிமானக்கோளாறு மற்றும் திரும்ப, திரும்ப ஒரே விஷயத்தை சிந்தனை செய்தால் தலைவலி வரும்.

மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மை காரணமாகவும் தலைவலி வருகிறது.

தொடர் பயணம் மற்றும் மழையில் நனைதல் காரணமாகவும் தலைவலி வரலாம்.

காய்ச்சல் காரணமாக நமது உடலில் ஏற்படும் அதிக உஷ்ணத்தால் தலைவலி வரும்.

அதிக உடல் உழைப்பு மற்றும் மன அழுத்தம் ஏற்படும்படி பேசினாலும், பேசுவதை கேட்டாலும் தலைவலி வரலாம்.

தலையின் பின்புறம் ஏற்படும் தலைவலி,நெற்றியில் ஏற்படும் தலைவலி,நெற்றி பொட்டில் ஆரம்பித்து தலையின் நடுப்பகுதி வரை ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி என நான்கு வகைப்படும்.

தலைவலிக்கு சித்த வைத்தியத்தில் மிக எளிய மருத்துவம் உள்ளது.
ஒரு வெற்றிலையில் சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு சீரகம் வைத்து நன்கு மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு டம்ளர் சூடு நீர் அருந்த தலைவலி குணமாகும்.

காய்ச்சல் அறிகுறி உடன் வரும் தலைவலிக்கு ஒரு வெற்றிலை, சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு சீரகம் எடுத்து அதை நன்கு மை போல் அரைத்து தலையில் பற்றுப்போட தலைவலி குணமாகும் .

மூக்கு அடைத்து தலைவலி வந்தால் ஒரு விராலி மஞ்சளை எடுத்து விளக்கெண்ணெய்யில் முக்கி எடுத்து அதை சுட்டு வரும் புகையை நுகர தலைவலி குறையும்
,(இந்த மருத்துவ முறையை குழந்தைகளுக்கு செய்யக்கூடாது,

குழந்தைகளுக்கு வெற்றிலையில் மிளகு மற்றும் சீரகம் வைத்து நன்கு மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு டம்ளர் சூடு நீர் அருந்தும் மருத்துவ முறை மட்டுமே போதுமானது தலைவலி குணமாகும்.

செரிமானக்கோளாறு காரணமாக ஏற்படும் ஒற்றை தலைவலி வாந்தி எடுத்தால் குணமாகும்.

டென்ஷன் மற்றும் படபடப்பு மூலம் வரும் தலைவலிக்கு தூக்கம் மட்டுமே போதுமானது.

ஆழ்ந்த உறக்கம், உடல் தளர்வு மற்றும் மனத்தளர்வு ஆகியவற்றை நமது வாழ்வில் கடை பிடித்தால் தலைவலி வர வாய்ப்பு குறைவு. முச்சு பயிற்சி செய்வதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து டென்ஷன் மற்றும் படபடப்பு மூலம் வரும் தலைவலி உட்பட பல்வேறு நோய்கள் குணமாகும்.

சீறும் சிறப்பும் கொண்ட சீமை நாயுருவி, ஒரு மருத்துவப் பயனுள்ள மூலிகை. இதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். குறிப்பாக, செரிமானப...
24/05/2025

சீறும் சிறப்பும் கொண்ட சீமை நாயுருவி, ஒரு மருத்துவப் பயனுள்ள மூலிகை. இதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். குறிப்பாக, செரிமானப் பிரச்சனைகள், தோல் நோய்கள், மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு இது உதவியாக இருக்கிறது.

சீமை நாயுருவியின் பயன்கள்:
செரிமானத்தை மேம்படுத்துகிறது:
அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு இது நிவாரணம் அளிக்கிறது. செரிமான அமைப்பைத் தூண்டி, ஊட்டச்சத்தை உறிஞ்சுவதற்கும் இது உதவுகிறது.

தோல் பிரச்சனைகளுக்கு நல்லது:
அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மூலம் சொறி, அரிக்கும் தோலழற்சி, முகப்பரு போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பயனுள்ளதாக இருக்கும்.

இரத்த சோகைக்கு நல்லது:
இரத்த சோகை பிரச்சனையை சரிசெய்ய இது உதவுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு நல்லது:
இது சிறுநீரக கற்களை கரைத்து, சிறுநீரகக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

இருமல் மற்றும் காய்ச்சலுக்கு உதவுகிறது:
வேர்ப் பொடியுடன் சிறிது மிளகு பொடியும், தேனும் சேர்த்துக்கொடுக்க இருமல் நீங்கும், காய்ச்சல் குறையும்.

வயிற்றுப்போக்குக்கு உதவுகிறது:
மோருடன் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கை குணப்படுத்தவும் பயன்படுத்தலாம்.

பூச்சி கடிக்கு உதவுகிறது:
பூச்சி கடியால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை போக்க உதவுகிறது.

பாம்புக்கடி மற்றும் வெறி நாய் கடியின் விஷத்தை போக்க உதவுகிறது:
இதன் இலைச்சாறு பிழிந்து குடித்தால் பாம்புக்கடி மற்றும் வெறி நாய் கடியின் விஷத்தை போக்கலாம்.

உடலின் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்:
சீமை நாயுருவியின் இலை மற்றும் பூக்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மூலிகை மருந்து உடலின் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

மூலம்:
நாயுருவி விதையை அரிசி கழுவிய நீருடன் உட்கொண்டால் மூலம் நீங்கும்.

மூளை நோய்களை போக்க உதவுகிறது:

நாயுருவி செடியை எப்படிப் பயன்படுத்துவது?
நாயுருவி பொடியை 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம்.

நாயுருவி இலைகளின் பேஸ்ட்டை விஷ பூச்சி கடிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.

மருத்துவர் ஆலோசனை:
சீமை நாயுருவி செடியை பயன்படுத்துவதற்கு முன், மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.

குறிப்பாக, உங்களுக்கு ஏதேனும் மருத்துவக் காரணங்கள் இருந்தால், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நாயுருவி செடியை பயன்படுத்தக்கூடாது.

பல நன்மைகளுக்காக பயன்படுத்தப்படும் பகுச்சி இலை மூலிகை.. பகுச்சியின் தமிழ் பெயர் "கற்போக அரிசி" அல்லது "கார்போக அரிசி" ஆக...
18/05/2025

பல நன்மைகளுக்காக பயன்படுத்தப்படும் பகுச்சி இலை மூலிகை..

பகுச்சியின் தமிழ் பெயர் "கற்போக அரிசி" அல்லது "கார்போக அரிசி" ஆகும்.

இது குறிப்பாக தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு பயன்படுத்தபடுகிறது.

பகுச்சி எண்ணெய் மயிர்க்கால்களைத் தூண்டி, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளைக் குணப்படுத்த உதவுகிறது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது,

இது விட்டிலிகோ போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

செரிமான அமைப்புக்கு உதவுகிறது:
இது தீபனா, பச்சனா, அனுலோமன் போன்ற செரிமான பண்புகளைக் கொண்டுள்ளது, இது அஜீரணம், அமா மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு உதவுகிறது.

நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது:
இது ஒரு நரம்பு டானிக் என்பதால், வாத கோளாறுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

வாதம், பித்தம், கபம் என்பவை ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு அடிப்படைக் கோட்பாடாகும். இவை மூன்றும் உடல் இயக்கத்தின் முக்கிய அ...
15/05/2025

வாதம், பித்தம், கபம் என்பவை ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு அடிப்படைக் கோட்பாடாகும். இவை மூன்றும் உடல் இயக்கத்தின் முக்கிய அங்கங்கள். 💧🔥🌬️

`வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். 🌸 உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

`முத்தாது’ என்று தமிழ்ச் சித்த மருத்துவத்திலும், `த்ரீதோஷா’ என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயங்களைத்தான்

📜 `மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று’ 📜

- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார்.

வாதம், பித்தம், கபம் 💧🔥

வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.

பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.

கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.

தவிர்க்கவேண்டிய, சாப்பிடவேண்டிய உணவுகள்!

* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்.

* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும். மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும்.

* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது.

* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது... ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி... இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.

* சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு... என கபத்தால் வரும் நோய்கள் பல. பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம். மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும். அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக்கொண்டே வரும் வாழ்க்கைத்துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது.

🌸 கழிவு தேக்கம் தான் நோய், கழிவு நீக்கம் தான் ஆரோக்கியம் என்ற பழமொழி, நம் உடலில் கழிவுகள் தேங்குவது நோய்களுக்கும், கழிவு...
12/05/2025

🌸 கழிவு தேக்கம் தான் நோய், கழிவு நீக்கம் தான் ஆரோக்கியம் என்ற பழமொழி, நம் உடலில் கழிவுகள் தேங்குவது நோய்களுக்கும், கழிவுகள் முறையாக நீங்குவது ஆரோக்கியத்திற்கும் 🧘🏻‍♀️🙏🏻 வழிவகுக்கிறது. 🌸

🖤 கழிவு தேக்கம்:
நம் உடலுக்குத் தேவையில்லாத கழிவுகள், உணவுப் பொருட்கள் மற்றும் நச்சுகள் நம் உடலில் தேங்கினால், அவை நோய்களை ஏற்படுத்தும்.

💚 கழிவு நீக்கம்:
நம் உடலில் இருந்து கழிவுகள் முறையாக வெளியேறுவது, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

⚫ உடலில் கழிவுகள் தேங்குவதால்: ⚫

☑️ மலச்சிக்கல்: உணவு செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி கழிவுகள் வெளியேறாமல் இருப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது,

☑️ சோர்வு மற்றும் மனச்சோர்வு: கழிவுகள் தேங்குவதால், உடல் சோர்வாகவும், மனச்சோர்விலும் இருக்கும்.

☑️ உடல் உறுப்புகள் செயலிழப்பு: கழிவுகள் தேங்குவதால், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவற்றின் செயல்பாடு குறைகிறது.

🟢 கழிவு நீக்கம் சிறப்பாக இருந்தால்: 🟢

✅ உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்படும்: கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறப்பாக செய்கின்றன.

✅ நோய் எதிர்ப்பு சக்தி கூடும்: கழிவுகள் வெளியேறினால், நோய் எதிர்ப்பு சக்தி கூடி, உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

✅ உடல் எடை குறையும்: கழிவுகள் வெளியேறினால், உடல் எடை குறையும்.
சருமம் பொலிவுடன் இருக்கும்: கழிவுகள் வெளியேறினால், சருமம் பொலிவுடன் இருக்கும்.

🔺 எச்சரிக்கை:🔺
கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்றுவதற்கு, போதுமான நீர் அருந்துதல், மூலிகை டீ குடித்தல் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல், போதுமான தூக்கம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

மருத்துவம் பற்றி ஓஷோ❤ *_மருத்துவம் ஓஷோ_* ❤💚 பதஞ்சலியின் யோகா மனிதனுக்கு இருப்பது ஒரு உடல் அல்லஅது ஐந்து படிவங்களாக அதாவத...
23/04/2025

மருத்துவம் பற்றி ஓஷோ

❤ *_மருத்துவம் ஓஷோ_* ❤

💚 பதஞ்சலியின் யோகா மனிதனுக்கு இருப்பது ஒரு உடல் அல்ல

அது ஐந்து படிவங்களாக அதாவது ஐந்து உடல்களாக இருப்பதாக சொல்கிறது

1. அன்னமய கோசம்
2. பிராணமய கோசம்
3. மனோமயக் கோசம்
4. விஞ்ஞானமயக் கோசம்
5. ஆனந்தமயக் கோசம்

இந்த ஐந்து உடல்களுக்கு பின்னால்தான் உங்கள் மெய்யிருப்பு இருக்கிறது

இந்த ஐந்து உடல்களையும் தனித்தனியாக ஐந்து வகையான மருத்துவங்கள் பார்க்கின்றன

1. அலோபதி
இது உங்கள் அன்னமய கோசத்தில் வேலை செய்கிறது

அதாவது அலோபதி வைத்தியம் மனித உடலை மட்டுமே நம்புகிறது

இதில் விஞ்ஞானக் கருவிகள்தான் உங்கள் உடலை பார்க்கின்றன

2. அக்கு பஞ்சர்
இது உங்கள் பிராணமயக் கோசத்தில் வேலை செய்கிறது

அதாவது அக்கு பஞ்சர் வைத்தியம் உயிரியல் சக்தியில் உயிரியற் பொருளில் வேலை செய்ய முயலுகிறது

அக்குபங்சர் உடலில் ஏதாவது கோளாறு என்றால் உடலைத் தொடவே தொடாது

அது உடலின் முக்கிய புள்ளிகளைத்தான் தொடும்

உடனே மொத்த உடலும் நன்றாக வேலை செய்யத் துவங்கி விடும்

உங்கள் மைய உடலில் ஏதாவது கோளாறு என்றால் அலோபதியால் குணப்படுத்த முடியாது

ஆனால் அக்குபஞ்சரால் அதை எளிமையாக குணப்படுத்த முடியும்

மைய உடல் என்பது உடலுக்குச் சற்று மேலானது

அந்த மைய உடலை சரி செய்து விட்டால்

உடல் தானாகவே அதை பின்பற்றும்

காரணம் உடலின் வரைபடம் மைய உடலில்தான் உள்ளது

மைய உடலின் செயல் வடிவம்தான் புற உடல்

ரஷ்யாவின் கிர்லான்
புகைப்படக்கருவி நமது உடலில் எழுநூறு மையப் புள்ளிகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது

புற வழியாக நமக்கு இந்த எழுநூறு மையப்புள்ளிகள் தெரிவதில்லை

நீங்கள் உங்கள் மையப்புள்ளிகளை சரி செய்வதன் மூலம் உடலின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கலாம்

ஒரு அக்குபங்சர் மருத்துவருக்கு நோய் முக்கியமில்லை நோயாளிதான் முக்கியம்

காரணம் நோயாளிதான் நோயை உருவாக்கி இருக்கிறார்

3. ஹோமியோபதி
இது இன்னும் சற்று ஆழமாக சென்று மனோமயக் கோசத்தில் வேலை செய்கிறது

சிறிய அளவிலான மருந்து ஆழமாகப் போகும் மருந்தின் அளவைக் குறைத்துக் கொண்டே செல்லும்

இந்த முறைக்கு வீரியப்படுத்துதல் என்று பெயர்

அதிக வீரியம் இருக்கும் போது அதன் அளவு சிறியதாக இருக்கும்

அது மனோ மையத்தின் ஆழத்திற்கு செல்லும்

அது உங்கள் மன உடலுக்குள் செல்லும்

அங்கிருந்து வேலை செய்யத் துவங்கும்

பிராணமயத்தைவிட அதிகமாக வேலை செய்யும்

4. மனோவசிய சிகிச்சை (ஹிப்னாடிசம்)

இது விஞ்ஞான மயக் கோசத்தை தொட்டு வேலை செய்யும்

இது எதையும் எந்த மருந்தையும் பயன்படுத்தாது

இது யோசனையை மட்டுமே பயன்படுத்தும்

இது ஒரு யோசனையை உங்கள் உள் மனதில் விதைக்கும் உங்களை மனோவசியப் படுத்தும்

உங்களுக்கு எது பிடிக்குமோ அது சிந்தனை சக்தியால் வேலை செய்கிறது

இது அப்படியே சிந்தனை சக்திக்குள் குதிக்கிறது

விஞ்ஞானமய கோசம் உணர்வுகளின் உடல்

உங்கள் உணர்வுகள் ஒரு யோசனையை ஏற்றுக்கொண்டவுடன்
அது இயங்கத் துவங்குகிறது

மனோவசிய சிகிச்சை உங்களுக்கு ஒரு வகை உள் பார்வையைக் கொடுக்கும்

5. தியானம்

ஆனந்தமய கோசத்திற்கு தியானம்தான் சிகிச்சை வைத்தியம்

தியானம் உங்களுக்கு எந்த யோசனையையும் சொல்லாது

காரணம் யோசனை என்பது வெளியில் இருந்து வருவது

யோசனை என்றால் நீங்கள் யாரையாவது நம்பியிருக்க வேண்டும்

தியானம்தான் உங்களை சரியானபடி உணரச் செய்கிறது

தியானம் ஒரு தூய்மையான புரிந்து கொள்ளுதல் அது ஒரு சாட்சிபாவ நிலை

தியானத்தில் ஒருவர் ஆழ்ந்து உள்ளே சென்றால்

ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்

உலகத்தில் தியானம் வெற்றி பெற்றால்

பிறகு எந்த மதமும் தேவையில்லை

தியானத்தில் நீங்கள் இருத்தலோடு நேரடி தொடர்பில் இருப்பீர்கள்

தியானத்தின் உச்சமே புத்துணர்ச்சி

தியானம் முழுமை பெறும் போது உன்னுடைய இருத்தல் முழுவதிலுமே ஒளி வருகிறது

முழு பேரின்பம் பரவுகிறது
முழு பரவசம் உன்னை ஆட்கொள்கிறது 💚

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+919930720234

Website

Alerts

Be the first to know and let us send you an email when சித்த மருத்துவ வாழ்வியல் மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to சித்த மருத்துவ வாழ்வியல் மையம்:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram