போகர் சித்தாந்தசபை

போகர்  சித்தாந்தசபை உண்டென்றிரு.! தெய்வம் ஒன்றென்றிரு.! இறையாய் இரு.!

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼🙏🏽அன்பர்களுக்கு வணக்கங்கள்..🙏🏽🌷 தமிழ் மணக்கும் சித்தர்கள்..( சித்தர்களை பற்ற...
17/03/2025

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🙏🏽அன்பர்களுக்கு வணக்கங்கள்..🙏🏽

🌷 தமிழ் மணக்கும் சித்தர்கள்..( சித்தர்களை பற்றிய அபூர்வ தகவல்கள்.)

வரும் 23/03/2025 - ஞாயிறு அன்று காலை இந்திய நேரப்படி 5.00 மணிக்கு சத்சங்கம் துவங்க உள்ளது..
சத்சங்கம் Zoom meeting வழியாக நடக்கும்..
இதற்கு கட்டணம் கிடையாது (Free) ..
எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்..
இணைப்பிற்கான லிங்க் ( Link )கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
இணைப்பில் 10 நிமிடங்களுக்கு முன்னதாக இணைந்து கொள்ள வேண்டும்..
5.10 மணிக்கு மேல் வந்தால் இணைப்பில் இணைய முடியாது..
ஒரு அற்புதமான அனுபவத்தை பெறுவதற்கு தயாராகுங்கள்..

oin Our Zoom Meeting. Link 👇🏻
https://us02web.zoom.us/j/5707961146?pwd=eUk4UEMrOEJGbFRITm9XdUxNdHFjZz09

Meeting ID: 570 796 1146
Passcode: tamil1977

உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்த தகவலை Share செய்யலாமே..
போகர் சித்தாந்த சபையின் உறவுகள் அனைவரும் தலா 5 நபர்களை இணைக்கவும்..

நன்றிகளுடன்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
9488008816

11/03/2025

🙏🏽குருவே சரணம் நற்பவி🙏🏽
🙏🏽தனஞ்செயனே போற்றி🙏🏽

இறைவன் எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பதில்லை என்பது தவறான சிந்தனை..இறைவன் யாரிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை.. எல்லோருக்கும் சமமாகவே கொடுக்கிறான்..ஆனால் அதை பெறுவதில் தான் நாம் வித்தியாசப்படுகிறோம்..

நம் சிந்தனைகளாலும் செயல்களாலும் இறைவன் கொடுப்பதை பெறுவதில் நாம் வித்தியாசப்படுகிறோம்..அவ்வளவுதான்..

எல்லாம் பெறுவதற்கு உண்டான எல்லா தகுதிகளும் இருப்பவர்க்கே மனிதப்பிறவி அமைகிறது..நமக்கு எல்லாம் பெறுவதற்கு தகுதி இருக்கிறது என்பது மட்டும் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை..

உங்கள் எண்ணங்களால் மட்டுமே உங்கள் வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது..உங்களுக்கு தேவையானதை நீங்களே விதித்துக்கொள்கிறீர்கள்..

இறைவன் மங்களகரமானவன் என்றால் அன்பின் வடிவம் என்றால் அவனுக்கு நன்மையை மட்டுமே கொடுக்க தெரியும் என்பது தான் உண்மை..நமக்கான தீமைகளை நாம் தான் உருவாக்குகிறோம்..

ஆகச்சிறந்த படைப்பாளியான இறைவன் தான் படைத்த அனைத்திற்கும் தேவையான அனைத்தையும் சேர்த்தே படைத்துவிட்டான் என்பது தான் சாத்தியமான உண்மை..

உங்களுக்கு என்ன தேவை என்பதை புத்திசாலித்தனமாக தீர்மானியுங்கள்..அதை நீங்கள் தேடவேண்டாம் அதுவே உங்களை நோக்கி வரும்..ஆம் ஒத்தவை ஒத்தவற்றையே ஈர்க்கும்..

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
முனைவர் போகர் வசீகரன்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி

🔥நலம் தரும் முத்திரைகள்🔥முத்திரை செய்யும் மாயம்(7 நாட்கள் ஆன்லைன் உபதேசம்)20 வகையான அற்புதமான முத்திரைகள்..7 நாட்கள் ஆன்...
08/03/2025

🔥நலம் தரும் முத்திரைகள்🔥
முத்திரை செய்யும் மாயம்
(7 நாட்கள் ஆன்லைன் உபதேசம்)

20 வகையான அற்புதமான முத்திரைகள்..
7 நாட்கள் ஆன்லைன் வழியாக செய்முறை பயிற்சி..
7 நாட்களிலேயே பலனை உணர முடியும்..
நோய்களை குணப்படுத்தலாம்..
காரியங்களில் வெற்றியை அடையலாம்..
செழிப்பான வாழ்வை பெறலாம்...
செய்யும்போதே பலனை உணர முடியும்..

பயிற்சி கட்டணம் :- 3000 /-
நடக்கும் நாள் மார்ச் 10 முதல் மார்ச் 17 வரை
நடக்கும் நேரம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை

உபதேசம் Zoom meeting வழியாக நடக்கும்..

முன்பதிவுக்கு
7094511381

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼🙏🏽அன்பர்களுக்கு வணக்கங்கள்..🙏🏽🌷 தமிழ் மணக்கும் சித்தர்கள்..( சித்தர்களை பற்ற...
08/03/2025

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🙏🏽அன்பர்களுக்கு வணக்கங்கள்..🙏🏽

🌷 தமிழ் மணக்கும் சித்தர்கள்..( சித்தர்களை பற்றிய அபூர்வ தகவல்கள்.)

வரும் 09/03/2025 - ஞாயிறு அன்று காலை இந்திய நேரப்படி 5.00 மணிக்கு சத்சங்கம் துவங்க உள்ளது..
சத்சங்கம் Zoom meeting வழியாக நடக்கும்..
இதற்கு கட்டணம் கிடையாது (Free) ..
எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்..
இணைப்பிற்கான லிங்க் ( Link )கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
இணைப்பில் 10 நிமிடங்களுக்கு முன்னதாக இணைந்து கொள்ள வேண்டும்..
5.10 மணிக்கு மேல் வந்தால் இணைப்பில் இணைய முடியாது..
ஒரு அற்புதமான அனுபவத்தை பெறுவதற்கு தயாராகுங்கள்..

oin Our Zoom Meeting. Link 👇🏻
https://us02web.zoom.us/j/5707961146?pwd=eUk4UEMrOEJGbFRITm9XdUxNdHFjZz09

Meeting ID: 570 796 1146
Passcode: tamil1977

உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்த தகவலை Share செய்யலாமே..

நன்றிகளுடன்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
9488008816

04/03/2025
🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼🔥நலம் தரும் முத்திரைகள் 🔥    (வாட்சாப் வழிப்பயிற்சி )🌷 உபதேசமாக கிடைக்கும் ம...
02/03/2025

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🔥நலம் தரும் முத்திரைகள் 🔥
(வாட்சாப் வழிப்பயிற்சி )

🌷 உபதேசமாக கிடைக்கும் முத்திரைகள்

மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் முத்திரை
தலை சம்மந்தமான நோய்களை குணமாக்கும் முத்திரைகள்
கல்லீரல் சம்மந்தமான பாதிப்புகளை குணப்படுத்தும் முத்திரை
இதயம் சம்மந்தமான பாதிப்புகளை குணமாக்கும் முத்திரை
நுரையீரல் சம்மந்தமான பாதிப்புகளை குணமாக்கும் முத்திரை
கிட்னி சம்மந்தமான பாதிப்புகளை குணமாக்கும் முத்திரை
சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்கள் சம்மந்தமான பாதிப்புகளை குணமாக்கும் முத்திரைகள்
மூல நோய் சம்மந்தமான பாதிப்புகளை குணமாக்கும் முத்திரைகள்
வாத பித்த சிலேத்துமம் சம்மந்தமான குற்றங்களை நீக்கிடும் முத்திரை..
ஜீரண கோளாறுகளை குணமாக்கும் முத்திரை
உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் முத்திரை
செய்வினை கண் திருஷ்டி பாதிப்புகளை விலக்கும் முத்திரை
குபேர முத்திரை
தனாகர்ஷண முத்திரை
வெற்றிகளை தரும் சந்தியா முத்திரை
நிம்மதியான வாழ்வை அளிக்கும் சாந்தி முத்திரை

👉🏽பயிற்சிக்கான கட்டணம் :- 2000 /-
துவங்கும் நாள் :-10/03/2025 - Monday

உலகின் எந்த மூலையில் இருந்தும் எவரும் கற்க முடியும்..
முன்பதிவுக்கு :-7094511381

02/03/2025

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🌷அமுதமொழி

எந்த மனிதன் தன்னிடம் இருப்பதை கொண்டு திருப்தியையும் மகிழ்ச்சியையும் பெறவில்லையோ, அவன் தனக்கு எது கிடைத்தாலும் மகிழ்ச்சியடைய மாட்டான்.

தன்னை விட அடுத்தவன் நன்றாக வாழ்கிறான் எனும் எண்ணம் தான் பலரின் எல்லா துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

யாருக்கோ வாழ்ந்து காட்ட இந்த வாழ்க்கை ஒன்றும் பரீட்சையில்லை.
உங்களுக்காக வாழ்ந்து விட்டு போவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிறப்பான தனித்திறமை என்று ஒன்றும் தேவையில்லை, ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்.

குத்திக் காட்டும் மனிதர்களுக்கும், சுட்டிக் காட்டும் மனிதர்களுக்கும் இடையில் சிரித்துக் கொண்டு வாழ்ந்து காட்டுவது தான் சவாலான வாழ்க்கை.

கண்ணாடியில் இருக்கும் அழுக்கு எப்படி நம் முகத்திற்கு சொந்தம் இல்லையோ, அதைப்போலவே நம்மைப் பற்றிய மற்றவரின் எண்ணமும் நமக்கு சொந்தம் இல்லை.

வாழ்க்கையானது சுமூகமாக, சுகமாக வாழ்வதற்கே. எதிலும் முரண்படாமல் எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பார்ப்பவன் என்ன நினைப்பானோ என்ற பயத்துடன் வாழாதீர்கள். படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள்.தவறு செய்ய மாட்டீர்கள்..

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
முனைவர் போகர் வசீகரன்
போகர் சித்தாந்த சபை
பழனி

25/02/2025

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🌷அமுதமொழி

உங்களுக்கு ஆயிரம் குறைகள் கஷ்டங்கள் இருந்தாலும் உங்களிடம் இயல்பாக இருக்கும் நல்ல குணங்களை யாருக்காகவும் விட்டுவிடாதீர்கள்... இந்த குணம் கடவுள் உங்களுக்காக பரிசாகக் கொடுத்தது.

பிறப்பால் வறுமையாக இருக்கலாம் பிறகு உழைப்பால் வசதியாக மாறலாம் ஆனால், நற்செயலால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்.

உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் நல்ல செயல்களில் இருந்துதான் பி(தி)றக்கிறது.எதை செய்தலும் நல்லதாகவே செய்யுங்கள்..

உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள் நிகழ்காலத்தில் நீங்கள் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தானாகவே அற்புதமாக மலரும்.

துன்பங்களையும் சிக்கல்களையும் சந்திக்க மனதில் போதிய பலமில்லாமல் இருப்பதை தான் கவலை என்கிறோம்.மனதால் பலமாக இருங்கள்..

உங்கள் மனதை நீங்கள் தான் ஆட்டிவைக்க வேண்டும். உங்கள் மனம் உங்களை ஆட்டிவைக்கக் கூடாது.உங்கள் மனதிற்கு நீங்கள் எஜமானனாய் இருங்கள்..

பார்வையற்றவர்கள் மட்டுமே குருடர்கள் அல்ல.., தன்னுடைய மனக்குறையை உணராதவர்கள் அனைவரும் கூட குருடர்களே.ஆம் மனக்குருடர்கள்..

எதிர்மறை எண்ணங்களுக்கு உங்கள் மனக்கதவை மூடும்போது, உங்களுக்கு எதிர்கால பிரகாச வாய்ப்பின் கதவு திறக்கிறது.

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
முனைவர் போகர் வசீகரன்
போகர் சித்தாந்த சபை
பழனி

25/02/2025

🙏🏻குருவே சரணம் நற்பவி🙏🏻
🙏🏻தனஞ்செயனே போற்றி🙏🏻

மகாசிவராத்திரி..

எல்லா இரவுகளும் மனிதன் கண்டிப்பாக தூங்க வேண்டும்..கண்விழிக்க கூடாது..மனிதன் கண்விழித்து இருக்க இயற்கை அனுமதி கொடுத்துள்ள ஒரே ராத்திரி மகாசிவராத்திரி மட்டுமே..

சிவராத்திரி என்றால் குலதெய்வம் கோவில்கள் சிவன் ஆலயங்களில் மக்கள் சென்று கண்விழித்து பூஜைகளில் கலந்து கொள்வது வழக்கம்..இது எல்லா வருடங்களிலும் நடப்பது வழக்கம்..

ஆனால் பிரபஞ்சம் நமக்காக அள்ளிக்கொடுக்கும் அபூர்வ சக்தி பிரவாகத்தை நமக்கு உள்ளே அனுபவிக்க சொல்லிக்கொடுப்பார் இல்லை..

மகாசிவராத்திரியை முறையாக அனுபவிக்க வேண்டும்..பிரபஞ்சம் நம்மோடு பேசும் மொழியை முறையாக உணர வேண்டும்..பயணமும் கொண்டாட்டமும் உள்முகமாக இருக்க வேண்டுமே தவிர கேளிக்கைகளிலும் ஆட்டம் பாட்டங்களிலும் இருக்க கூடாது..

பொதுவாக பிரபஞ்சம் நம்மோடு பேசும் ரகசிய பரிவர்த்தனையை நாம் உணர்ந்து அதனுடன் நாம் அன்பு பிணைப்பில் இருந்தால் நம் உடல் மனம் வாழ்வு எல்லாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்..

நமது உடலில் உள்ள நெற்றிக்கண் பகுதியில் உள்ள அருட்பெரும்ஜோதியானது சுயப்பிரகாசம் பெறும் நாளே சிவராத்திரி ஆகும்..ஈசானன் எனும் ஜோதிக்காற்று மிக ஆற்றலுடன் பூமியை நோக்கி வருவதுடன் சுழுமுனையில் அதன் ஆற்றல் உயிர்ப்புடன் இயங்கும் நாளும் கூட ஆகும்..இடகலை சுவாசமும் பிங்கலை சுவாசமும் நின்று சுவாசம் சுழுமுனையில் தானாகவே முழு இரவும் இயங்கும் நாள் ஆகும்.. அர்த்த நாரீஸ்வர தத்துவம் எனப்படும் தனஞ்செய ஈசான சேர்க்கை நடைபெறும் நாள் ஆகும் இந்த சிவராத்திரி..சகல தோஷங்களையும் சாபங்களும் பாபங்களும் நம்மை விட்டு விலகி ஓடும் நாள் ஆகும்.. நாம் நமக்குள் இருக்கும் இறைவனை மிகவும் ஆற்றலுடன் உணரும் நாள் தான் இந்த மகாசிவராத்திரி ஆகும்..மனிதனை மனிதனாக அடையாளம் காட்டும் விவஸ்தன் எனும் காற்று ஒளிரும் நாளும் இதே மகாசிவராத்திரி தான்..

வேடிக்கை கொண்டாட்டமாக இல்லாமல் உள்முக கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என நமது போகர் சித்தாந்த சபையானது ஈசானன் மற்றும் விவஸ்தன் தனஞ்செயன் ஆகியோரை தூண்டக்கூடிய ஒப்பில்லாத பயிற்சிகளுடன் காமதேனு யாகத்துடன் கூடிய கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது....
நீங்கள் என்ன செய்ய வேண்டும்..? எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..

வாருங்கள் கொண்டாட்டத்தில் இணையுங்கள்..புதிய வாழ்வை பெறுங்கள்.. அனுமதி இலவசம்...

மகாதேவனாகிய ஈசானனுக்குரிய மகாசிவராத்திரி கொண்டாட்டத்தில் உணவு,தேநீர், பூஜை மற்றும் யாகத்திற்கு பங்களிப்பு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் செய்யலாம்..

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..

🔥 மகாசிவராத்திரி கொண்டாட்டம்.. 🔥
🔥 நாள் :- 26/02/2025- புதன்கிழமை இரவு முதல் வியாழன் காலை வரை
🔥 இடம் :-சிந்தாமணி மண்டபம்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
🔥 அனுமதி இலவசம்..

சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அன்பர்கள் வரும் செவ்வாய் மதியத்திற்குள் தகவல் சொன்னால் இரவு உணவு தயார் செய்ய ஏதுவாக இருக்கும்..
விருப்பம் உள்ளவர்கள் எத்தனை பேர் கலந்து கொள்வீர்கள் என்பதை முன்னரே தகவல் சொல்லுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..

நன்றிகள்
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
9488008816

Address

Sakthi Kalyana Mandapam
Palani
624601

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+917094511381

Alerts

Be the first to know and let us send you an email when போகர் சித்தாந்தசபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to போகர் சித்தாந்தசபை:

Share