13/01/2026
நேற்று மதியம் இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சைமா அறக்கட்டளை இணைந்து நடத்திய குழந்தை திருமணம் ஒழிப்பு கருத்தரங்கத்தில் குழந்தை திருமணம் ஒழிப்பில் சமூகத்தின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினேன். மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் திரு செல்வ அழகு 1098 எண்ணின் அவசியம் மற்றும் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய தலைமை கான்ஸ்டபிள் கயல்விழி காவல் உதவி ஆப் மாணவிகளுக்கு அவசர காலத்தில் எப்படி உதவும் என்பதையும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்ட உதவிகள் குறித்து வழக்கறிஞர் பகத்சிங் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் திரு இராமகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை சைமா அறக்கட்டளை திரு இராஜ கோபால் ஒருங்கிணைத்து நிறைவு செய்தார்.
#1098