13/10/2025
சிவகாசி எஸ்.பி.ஐ வங்கியின் சுடர் வளாகத்தில் வைத்து மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தினரால் இலவச மருத்துவ முகாம் நடத்தபட்டது. ஸ்டேட் வங்கியின் ஏ.ஜி.எம் ஜினில் அவர்கள் மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தார்.
மதி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் மகேந்திர சேகர் மற்றும் நிர்வாக இயக்குநர் கவிஞர் திலகபாமா அவர்களின் வழிகாட்டுதலின்படி முகாம் நடைபெற்றது. முகாம் மருத்துவராக மருத்துவர் பிரதீஷ் மற்றும் மருத்துவர் மனிஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.