06/03/2024
*கடவுள் எப்படிப்பட்டவன்?*
கவியரசன் கண்ணதாசன் சொன்னது.
🪷ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்.
🪷மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
🪷பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான்.
🪷பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
🪷பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.
🪷அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.
🪷பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
🪷கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான்.
🪷அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
🪷ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான்.
🪷பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை 🐅 புலிக்கும் கொடுப்பான்.
*அவன்தான் கடவுள்🙏🏽*
🪷அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்.
🪷அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
🪷தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்.
🪷அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்.
*அவன்தான் கடவுள்🙏🏽*
🪷நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான்.
🪷அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*
🪷புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்.
🪷தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*
🪷கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்.
🪷தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*
🪷மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்.
🪷சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்.
🪷பின்னிருந்து இயக்குவான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*
🪷தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.
🪷(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*