Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை

Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை, 7/8, Kamatchi Nagar(Ext), Surya Nagar 1st Street, Sivalingapuram, Ondipudur, coimbatore, tamilnadu, Coimbatore.

*தாய்மை அறக்கட்டளை மகளிருக்கு.. "சிங்கப்பெண்ணே விருது"*எல்லா துறைகளிலும் பெண்கள் புகுந்தாலும், பெண்கள் செய்ய தயக்கம் காட...
25/03/2026

*தாய்மை அறக்கட்டளை மகளிருக்கு.. "சிங்கப்பெண்ணே விருது"*

எல்லா துறைகளிலும் பெண்கள் புகுந்தாலும், பெண்கள் செய்ய தயக்கம் காட்டும் சில பணிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

அவற்றில் சமுக சேவை துறையும், இறந்த வீட்டிற்கு வேண்டிய "நீத்தார் சேவை" வழங்குவதும், உடலை சிறப்புற அடக்கம் செய்யும் தூய பணியையும்..எடுத்து செய்யும் பெண்கள் மிக மிக குறைவாகவே உள்ளார்கள்.

கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து செயல்படும் "தாய்மை அறக்கட்டளை" மகளிர் மேற்கண்ட சேவையை அர்ப்பணிப்போடு செய்கிறார்கள்.

காலையில் வரும் நீத்தார் சேவைகளில் தையல் கலைஞர் மேனகா, இல்லத்தரசி பூரணி ஆகியோர்
பங்கெடுத்து இறந்த வீடுகளில் உதவ வருகிறார்கள்.

மாலை நேரங்களில் வரும் சேவைகளில் ஹேமலதா மற்றும் மஹாலட்சுமி ஆகியோர் அக்கறையோடு கலந்து கொள்கிறார்கள்.

இரவு நேரங்களில் வரும் இறப்பு நிகழ்வுகளுக்கு தாய்மை அறக்கட்டளையின் அறங்காவலர்கள் சாரதா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு அர்ப்பணிப்போடு சேவை செய்கிறார்கள்.

ஞாயிறு சேவைகளில் சூலூர் மகேஸ்வரி, தீபா ஆகியோர் கலந்து கொண்டு பங்களிப்பு அளிக்கிறார்கள்.

ஒவ்வொரு இறப்பு வீடுகளிலும் நீத்தார் சேவை வழங்க வரும் தாய்மை அறக்கட்டளை பெண்களை பார்த்து புருவம் உயர்த்துகிறார்கள்.
இறந்த உறவை நினைத்து அழும் பெண்களும்... இவர்கள் எந்த சுணக்கமுமின்றி இறந்த வீடுகளில் செய்கின்ற சேவைகளை கண்டு, தங்கள் அழுகை கொஞ்சம் நிறுத்தி...ஆச்சர்யமுடன் கவனிக்கிறார்கள்.

தாய்மை அறக்கட்டளை மகளிர் இறந்த வீட்டில் துணி பந்தல் அமைக்கிறார்கள், பிளாஸ்டிக் சேர்கள்,டேபிள் இறக்கி வைக்கிறார்கள், Freezer box இறந்த வீட்டிற்கு கொண்டு சேர்க்கிறார்கள்,
கோடை காலங்களில் நீர் மோர் சுவையாக தயாரித்து தினமும் 400 பேர்களுக்கு வழங்கி மகிழ்கிறார்கள், பேரிடர் காலங்களில் நிகழ்விடத்திற்கு சென்று உதவுகிறார்கள், நெகிழி அப்புறப்படுத்துகிறார்கள், சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்த உதவுகிறார்கள்,போக்குவரத்து காவல்துறைக்கு விடுமுறை காலங்களில் நெரிசல் குறைக்க உதவுகிறார்கள், வேகத்தடைகளுக்கு வெள்ளை அடிக்கிறார்கள், கொரோனா காலங்களில் உணவு மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கி உதவுகிறார்கள்.

Lions Club of Superior Kings மற்றும் Lions International இணைந்து "உலக மகளிர் தினத்தை" முன்னிட்டு நடத்திய விருது வழங்கும் நிகழ்வில் கோவை மற்றும் கோவையை சுற்றி உள்ள 107 சிறந்த மகளிர்களை தேர்வு செய்து "சிங்கப்பெண்ணே விருது" வழங்கி கெளரவித்தது.

இதில் தாய்மை அறக்கட்டளை மகளிர்க்கு வழங்கிய "சிங்கப்பெண்ணே விருதை" அறக்கட்டளை சார்பாக தலைமை அறங்காவலர் சாரதா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் பெற்று கொண்டனர்.

3 வருடங்களுக்கு முன்பு நமது தாய்மை அறக்கட்டளை மகளிர் அனைவருக்கும் "தங்கப்பெண்ணே விருது" பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது "சிங்கப்பெண்ணே விருதும்" கிடைத்துள்ளது சிறப்பான அங்கீகாரம் ஆகும்.

நன்றி...

வாழ்த்துக்கள் தாய்மை அறக்கட்டளை சிங்கப்பெண்கள் அனைவருக்கும்..
👍🏼👍🏼👍🏼
🙏🏼🙏🏼🙏🏼
💐💐💐


#சிங்கப்பெண்ணே


#விருதுகள்


“ICON OF COIMBATORE AWARD” *கோவையின் அடையாளம் விருது* கோவையை சேர்ந்த, கோவைக்கு சிறந்த பங்களிப்பு அளித்த 45 சிறந்த ஆளுமைக...
18/03/2026

“ICON OF COIMBATORE AWARD” *கோவையின் அடையாளம் விருது*

கோவையை சேர்ந்த, கோவைக்கு சிறந்த பங்களிப்பு அளித்த 45 சிறந்த ஆளுமைகள், அமைப்புகளுக்கு ரத்தினம் இன்ஸ்டிடியூஷன்ஸ் மற்றும் IT தொழிநுட்ப பிரிவு சார்பாக விருது வழங்கி கெளரவம் செய்தது.

45 விருதாளர்களில் தாய்மை அறக்கட்டளையும் ஒன்று என பெருமையோடு இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

2500 ஏழை எளியவர் வீடுகளில் ஏற்பட்ட இறப்பு நிகழ்வை, தங்கு தடையின்றி கெளரவத்துடன், சொந்த உறவாக முன் நின்று, இலவசமாக செய்து கொடுத்த பெருமைமிகு
மனிதநேயத்தை அறிந்து.... அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தாய்மை அறக்கட்டளைக்கு “ICON OF COIMBATORE AWARD” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது 06.03.2026 அன்று வழங்கப்பட்டது.

விஜய் TV புகழ் பேச்சாளர் திரு ஈரோடு மகேஷ் அவர்கள் விருது அறிவிக்க...
பிரபல நடிகரும் இயக்குனருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள் இந்த விருதை வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

10 ஆண்டுகளாக சமூக சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தாய்மை அறக்கட்டளையின் இந்த கௌரவம்,
இந்த விருதை...
எங்கள் சமூக பணியை புரிந்து, அரவணைத்து, மனிதநேய பணியில் துணைநின்ற அனைத்து உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் பகிர்கிறோம்.

இரக்கமுள்ள சமூக சேவை(Compassionate community service) என விருதின் கீழ் நமது சேவை குறித்து குறிப்பிட்டு உள்ளார்கள்.

நன்றி புரிதலுக்கு

*"ICON OF COIMBATORE AWARD"*

Dear all,

We are proud and humbled to share that Thaimai Trust has received the “ICON OF COIMBATORE AWARD” for our compassionate service to the poor and destitute in death homes.

This recognition was presented on 6th March 2026 by Rathinam Institutions & Rathinam IT Park, Coimbatore, and the award was handed over by Actor–Director Thiru K. Bhagyaraj.

As Thaimai Trust completes 10 years of service, this honour belongs to all our volunteers, donors, and well-wishers who stood with us in serving humanity with dignity and compassion.

Thank you all for being part of this noble journey...

🙏🏼🙏🏼🙏🏼






#விருதுகள்
#தாய்மைஅறக்கட்டளை

*யோகா போட்டிகளும்...**விழிப்புணர்வும்..*தாய்மை அறக்கட்டளை மற்றும் ஓம் ஸ்ரீ யோகாலயா இணைந்து நடத்திய யோகா தர நிர்ணய போட்டி...
23/01/2026

*யோகா போட்டிகளும்...*
*விழிப்புணர்வும்..*

தாய்மை அறக்கட்டளை மற்றும் ஓம் ஸ்ரீ யோகாலயா இணைந்து நடத்திய யோகா தர நிர்ணய போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு 11/1/2026 அன்று கோவை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
242 மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் காலை 7 மணி முதலே மாணவர்கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர். கோவையின் பல்வேறு இடங்களில் இருந்தும், பள்ளிகளில் இருந்தும் தங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்களோடு வந்திருந்த மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

நிகழ்வில் தாய்மை அறக்கட்டளை அறங்காவலர்கள் திருமதி சாரதா, திரு கோவை சதீஸ்,திருமதி மகேஸ்வரி ஆகியோர் மற்றும் ஓம் ஸ்ரீ யோகலாயாவின் நிறுவனர் மற்றும் யோகா ஆச்சார்யா திரு சிவக்குமார் அவர்கள் முன்நின்று நடத்தி சிறப்பு செய்தார்கள். யோகா போட்டிகளில் பரிசுகளை வழங்க சிறப்பு அழைப்பாளர்களாக தாய்மை அறக்கட்டளையின் கௌரவ அறங்காவலர் திரு அங்குராஜ் அவர்களும் அவர்தம் துணைவியாரும், தாய்மை அறக்கட்டளை கௌரவ ஆலோசகர்கள் திரு ஈஸ்வரமூர்த்தி அவர்களும், திரு மகேஸ்வரன் அவர்களும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

நிகழ்வில் பேசிய திரு ஈஸ்வரமூர்த்தி அவர்கள் "யோகாக்கலையை மாணவர்கள் கற்று கொள்வதோடு நின்று விடாமல் தங்கள் பெற்றோர்களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்.. அதனால் ஓரு குடும்பமே நலம் பெறும்..?!" என்று கூறி தான் கற்ற சில யோகா ஆசனங்களை மேடையில் செய்து ஆச்சர்யப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய மகேஸ்வரன் அவர்கள் "யோகா போட்டிகளில் குழந்தைகள் ஆர்வமுடன் செய்வதை பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும்.. இதனை ஊக்கப்படுத்தும் தாய்மை அறக்கட்டளைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்"

மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.. ஒன்று வளமானால் மற்றொன்றும் வளமாகும் என்ற நல்லெண்ணெத்தில் நடத்தப்பட்ட யோகா போட்டிகள் மூலம் 242 மாணவர்கள் நன்மை அடைந்தார்கள் என்பது எங்களுக்கு உள்ளபடியே மனநிறைவை கொடுத்தது.

மதியம் 2 மணிக்கு போட்டிகள் நிறைவு பெற்றதும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

🙏🏼🙏🏼🙏🏼






*இறுகி போன மனங்கள்...*  *இறங்கி வந்து உதவிய தாய்மை அறக்கட்டளை..*ஒருவர் இறந்து போனால் என்ன.. என்ன.. செய்ய வேண்டும்..?உடலை...
30/08/2025

*இறுகி போன மனங்கள்...*
*இறங்கி வந்து உதவிய தாய்மை அறக்கட்டளை..*

ஒருவர் இறந்து போனால் என்ன.. என்ன.. செய்ய வேண்டும்..?

உடலை எப்படி கிடத்த வேண்டும்..?

உடல் எத்தனை மணி நேரம் வரை அசைக்க முடியும்..?

கை கால் விரல்களை சேர்த்து கட்டுவது எப்படி..?

இறந்து போன உடலில் உடை மாற்றுவது எப்படி..?

இறந்த உடல் எத்தனை மணி நேரம் கெட்டு வாசம் வீசாமல் இருக்கும்..?

இதெல்லாம் தற்போதைய தலைமுறைக்கு பெரும்பாலும் தெரிவதில்லை..

செத்தால் தான் சுடுகாடு தெரியும் என்பது போல...
உடன் இருக்கும் உறவு இறந்து போன பிறகு செய்வது அறியாது தவித்து போகிறார்கள்.

27/8/2025 அன்று கோவை SIHS காலனி பகுதியில் இருந்து வந்த அழைப்பில்..
"நான் Sihs காலனி பகுதியில் இருந்து பேசுறேன்.. இங்க எதிர் வீட்ல ஒரு பெரியவர் இறந்துட்டாரு.. நீங்க கொஞ்சம் வந்து help பண்ண முடியுமா..?என கேட்க...

நேரடியாக அவர் சொன்ன முகவரி சென்று பார்த்த போது..
"மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு 57 வயது கொண்ட பெரியவர் இறந்து போயிருந்தார்.. கைகளும்.. கால்களும் விறைத்து போய் கண்கள் விரிய படுத்து கிடந்தார்..!"

அவருடைய மகன் பெங்களூருவில் உள்ளதாகவும், வேறு உறவுகளிடம் தகவல் சொல்லி விட்டதாகவும், அவர்கள் வர 4 மணி நேரம் ஆகும் என்று பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.

"Freezer box உள்ளே வைக்க வேண்டுமானால் விறைத்து போய் கைகளும் கால்களும் விலகி கிடக்கும் இவரை நேராக சேர்த்து வைத்து கட்ட வேண்டும்" என சொல்ல...

அவர் "எங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாது... பையன் வர 5 மணி நேரம் ஆகும்...நீங்களே கொஞ்சம் உதவி செய்து கொடுங்கள்..!" என கேட்டார்.

நான் இவரை நேராக கிடத்த.. பிடித்து தூக்க மேலும் ஒருவர் வேண்டும் என சொல்லி...

என்னை அழைத்த எதிர் வீட்டுக்காரரை உதவ அழைத்தேன்.
அவரோ "எனக்கு அவசரமா ஆபீஸ் வரைக்கும் போக வேண்டி இருக்கு... என நழுவி கொண்டார். இதற்கும் அவர் ஒரு காவல் துறையில் SI பணியில் உள்ளார்.

எனக்கு முதுகுல தண்டு வட பிரச்சனை இருக்கு.. இருந்தாலும் முடிந்த உதவி செய்கிறேன் என பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்.

இறந்த உடலின் அருகே அவரது தாயார் சத்தமாக அழுது கொண்டிருந்தார்.
"யாருமில்லாத அனாதையா போய்ட்டியே டா..!? " என சொல்லி புலம்பி கொண்டிருந்தார்.

நண்பர் Felix அவர்களை உதவிக்கு அழைத்தேன். அவரும் உடனே இறந்த வீடு தேடி வந்தார்.

இறந்த உடலின் மேல் இருந்து மூத்திர நெடியும், துர்நாற்றமும் கடுமையாக வீச... முதலில் அதை குறைக்க உடல் முழுவதும் கிருமி நாசினி தெளித்து விட்டு, பிறகு முகம், கைகள், கால்கள் என Dettol நனைத்த துணி கொண்டு துடைத்து விட்டேன்.
கைவிரல்கள் இரண்டையும் மிக சிரம பட்டு நண்பர் உதவியுடன் சேர்த்து வைத்து கட்டினேன்.
பிறகு கால் விரல்களையும் சேர்த்து வைத்து கட்டினேன்.

பஞ்சு கேட்டு பெற்று இறந்தவரின் காதுகள், மூக்கில் வைத்து அடைத்தேன்.
பிறகு திறந்திருக்கும் வாயை தாடையோடு இழுத்து, தலை உச்சியில் முடிச்சு போட்டு விட்டேன்.

இதுவெல்லாம் செய்யும் போது எனக்குள் நானே இறந்த அவரை நெருக்கமான உறவாக நினைத்து, ஆன்மா சாந்தியடைய வேண்டி கொண்டேன்.

தாய்மை அறக்கட்டளை வாகனம் மூலம் துணி பந்தல், Freezer box, சேர்கள், டீ பிளாஸ்க் ஆகியன எடுத்து வந்து அமைத்து கொடுத்தோம்.

பிறகு குறுகிய படிகள் மூலம் Freezer box-ஐ எடுத்து சென்று இறந்த வீட்டிற்குள் வைத்தோம்.

சேவைக்கு காலை முதலே களப்பணி செய்ய வந்த நமது சிறுவர்கள் ஆதர்ஷ், சுதர்சன் ஆகியோர்களை இறந்து உடலை Freezer box உள்ளே எடுத்து வைக்க அழைத்தேன்.
என்னோடு 9ம் வகுப்பு படிக்கும் சுதர்சனும், 11 ம் வகுப்பு படிக்கும் ஆதர்ஷும், தாய்மை அறக்கட்டளை ஆண்டனி ஆகியோர்கள் அனைவரும் சேர்ந்து எந்த சுணக்கமும் இன்றி இறந்த உடலை கவனமாய் பிடித்து எடுத்து வைக்க உதவினார்கள்.

அங்கு வந்திருந்த ஓரிரு உறவுக்கார பெண்கள் சிறுவர்களை இறந்த உடலை எடுத்து வைத்ததை ஆச்சர்யமாய் பார்த்தனர்.

ஏற்கனவே காலை முதல் 3 சேவைகளுக்கு வந்து உதவிய அவர்கள் சோர்வின்றி செயல்பட்டனர்.

இறப்பின் மீதும், இறந்த உடலின் மீதும் எவ்வித பயமோ... தயக்கமோ.. இன்றி இவர்கள் சேவை செய்ய விழைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

அடுத்த தலைமுறைக்கு வாழ்வின் மிக முக்கிய நிகழ்வை இயல்பாக புரிய வைக்க முடிந்ததில் அகமகிழ்வே எனக்கு...!

எரியூட்ட மயானம் கிடைக்காமல் தவித்த அவர்களுக்கு மீண்டும் எரியுட்டு மயான எண்களை கொடுத்து உதவினேன்.

மாலை இறந்தவரை எரியூட்டி விட்டு அடுத்த நாளே மகன்.. பெங்களூரு சென்று விட்டார்.

பாட்டி மட்டும் தனியே வெறிச்சோடி போன வீட்டில்...
மூலையில் அமர்ந்து சுவரை வெறித்து பார்த்து கொண்டிருந்தார். Freezer box மற்றும் கொடுத்த பொருட்களை திரும்ப எடுத்து வந்தோம் கனத்த மனதோடு.

சேவை தொடரும்...

#தாய்மைஅறக்கட்டளை



🙏🏼🙏🏼🙏🏼

*நிறைவு பெற்றது 2,200 இலவச நீத்தார் சேவைகள்...*அதிகாலை 5.45 மணி... பரபரப்பாக பேசிய பெண்மணி "அண்ணா..தாய்மை அறக்கட்டளைங்கள...
18/08/2025

*நிறைவு பெற்றது 2,200 இலவச நீத்தார் சேவைகள்...*

அதிகாலை 5.45 மணி... பரபரப்பாக பேசிய பெண்மணி "அண்ணா..தாய்மை அறக்கட்டளைங்களா..?"

"ஆமாங்க.. சொல்லுங்கம்மா..!"

"எங்க மாமா இறந்துட்டாரு... (விசும்பல்)......
அண்ணா... சாமியான, சேரு, Freezer கிடைக்குமா..? அண்ணா என்றார்.

அவர் கேட்டு வைத்த அடுத்த 1 மணி நேரத்தில் கோவை உப்பிலிபாளையம் காந்தி நகர் பகுதிக்கு தாய்மை அறக்கட்டளை பொருட்களை ஏற்றி கொண்டு இறந்த வீடு நோக்கி விரைந்தது.
ஒரு மணி நேரம் குறைந்தபட்சம் அவகாசம் கேட்டிருந்த போதும், அந்த பெண்மணி வருவதற்குள் 4 முறை அழைத்து வந்துட்டீங்களா.. வந்துட்டீங்களா..
என கேட்டு கைபேசியில் கேட்டு கொண்டே இருந்தார்...

இதற்கிடையே
தாய்மை அறக்கட்டளையின் 2200 என்ற ஒரு மைல்கல் இலக்கை அடையும் முக்கிய சேவை என்பதால்,
ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அழைத்து சேவை வந்திருக்கிறது என தகவல் சொன்னேன்..

தூக்கத்தில் புரண்டு படுத்த மகன் ஆதரஷை எழுப்பி அழைத்து கொண்டு,
காலை சமையல் பணிகளை அப்படியே விட்டுவிட்டு... இதுதான் முக்கிய சேவை என என்னோடு புறப்பட்ட மனைவி சாரதா,

சென்ற வாரமெல்லாம் சக்கரை அளவு கூடி போய் சோர்ந்து இருந்த மேனகா அவர்களும் மறுப்பு ஏதும் சொல்லாமல் புறப்பட்டு வந்திருந்தார்..

பள்ளிக்கு புறப்பட்ட சிறுவன் பாரதி கலாம் உடன் சேவையில் கலந்து கொள்ள வந்த பூரணி,

பள்ளிக்கு செல்லும் வழியில் களப்பணியில் பங்கெடுக்க வேண்டும் என ஆர்வமுடன் வந்த கார்த்தி மற்றும் அவர் மகன் சுதர்சன்,

காலை 300 வீடுகளுக்கு மேல் பேப்பர் போடும் பணியில் இருந்து சேவையில் பங்கெடுத்த மயில்சாமி..

மற்றும் எல்லா சேவைகளிலும் சுணக்கமில்லாமல் செய்து வரும் ஆண்டனி ஆகியோர் இந்த முக்கிய சேவையில் வந்திருந்தார்கள்.

எல்லாம் அமைத்து கொடுத்து, உடலை பெட்டியில் கிடத்த உதவி...
அவரவர் பணிகளுக்கு அவசர அவசரமாய் மீண்டும் திரும்பினோம்.

ஒவ்வொரு நாளும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி..
சேவை செய்ய சொந்த வேலைகளை தியாகம் செய்து வரும் இவர்கள் தான் தாய்மை அறக்கட்டளையின் ஈடு இணையில்லா செல்வம் என்றால் அது மிகையாகாது..

எல்லாம் அமைத்து கொடுத்து, உடலை பெட்டியில் கிடத்த உதவி...
அவரவர் பணிகளுக்கு அவசர அவசரமாய் மீண்டும் திரும்பினோம்.

ஒவ்வொரு நாளும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி..
சேவை செய்ய சொந்த வேலைகளை தியாகம் செய்து வரும் இவர்கள் தான் தாய்மை அறக்கட்டளையின் ஈடு இணையில்லா செல்வம் என்றால் அது மிகையாகாது..

தொடர்ந்து சோர்வின்றி உறவாய் ஓட உள்ளத்திலும்,உடலிலும் பலம் கொடுங்கள் இறைவா...!

நன்றி





#தாய்மைஅறக்கட்டளை

🙏🏼🙏🏼🙏🏼
💐💐💐
👍🏼👍🏼👍🏼
🔥🔥🔥
👏🏼👏🏼👏🏼

26/07/2025

ஒரு நிமிடம் மட்டும்... 🙏🏼

தாய்மை அறக்கட்டளையை காண வந்த கல்லூரி மாணவர்கள்...12/7/2025 சனிக்கிழமை"Neethaar Sevai" ன்னா என்ன? என அறிய வந்த... KPR கலை...
15/07/2025

தாய்மை அறக்கட்டளையை காண வந்த கல்லூரி மாணவர்கள்...

12/7/2025 சனிக்கிழமை

"Neethaar Sevai" ன்னா என்ன? என அறிய வந்த...
KPR கலை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி & Youth Red Cross Club
இணைந்து ஏற்பாடு செய்த ஒரு
"சமூக விழிப்புணர்வு சந்திப்பு"
கோவை SIHS காலனி பகுதியில் அமைந்துள்ள தாய்மை அறக்கட்டளை பொருட்கள் அறை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

இன்றைய இளைஞர்கள் சமூக அக்கறை கொஞ்சமும் இல்லாமலும், வாழ்க்கை என்பது வெறும் பணம் செய்வது மட்டும்.. என்ற மாயையிலும், பொழுதுபோக்கு கேளிக்கை மற்றும் இவர்களின் மனச்சோர்வடையும் தன்மையை களைய வேண்டி..., தன்னலமில்லா ஆசிரியர்கள் குறிப்பிட்ட சில நல்ல முயற்சிகளை எடுக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஆசிரியர்களை கொண்ட KPR கலை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை சேர்ந்த ஆசிரியைகள்... தமிழ்த்துறை பேராசிரியர் திருமதி தாரணி மற்றும் முனைவர் மேகலா ஆகியோர் தங்கள் மாணவர்கள் அரிய ஒரு சமூகப்பணி குறித்து அறிய வேண்டும் என விரும்பினார்கள்.

தினமும் 24x7 இரவு பகல் என "இலவச நீத்தார் சேவை" வழங்கி வரும் தாய்மை அறக்கட்டளை குழுவை சந்திக்க..,
2 சிறந்த ஆசிரியைகள் மற்றும் 35 கல்லூரி மாணவ மாணவியர்கள் என ஒரு படையோடு வந்திருந்தார்கள்.

அவர்களை வரவேற்ற நாம், களைப்பு நீங்க சுவையான பழக் கலவை( Fruit salad) மற்றும் கீரை சூப் ஆகியன அன்புடன் வழங்கினோம்.

ஆர்வமுடன் அறக்கட்டளை பெற்ற விருதுகள், நீத்தார் சேவைக்கு வழங்கும் பொருட்களை ஆகியவற்றை பார்த்து வியந்தனர்.

"தாய்மை அறக்கட்டளைக்கு சேவை துவங்கியதும் உண்டான பிரச்சனைகள்,விமர்சனங்கள், இடையூறுகள், அவமானங்கள் குறித்து எல்லாம் அக்கறையோடு கேட்டறிந்து கொண்டார்கள்.

நீங்கள் நீத்தார் சேவைக்கு போவதுடன், உங்கள் பிள்ளைகளையும் அழைத்து செல்வது எப்படி முடிகிறது.? ஏன்..? என கேள்விகளை அடுக்கினார்கள்.

எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் அளித்து, அவர்களுக்கு தாய்மை அறக்கட்டளை எப்படி ஏழை,எளியவர் வீட்டில் சென்று அவர்கள் துக்கத்தில் பங்கு கொள்கிறோம்" என விளக்கினோம்.

பெற்ற விருதில் பெருமைக்குரிய
விருது ஏது..? என ஒரு மாணவி கேட்க...

18 விருதுகள் இதுவரை நாம் பெற்று இருந்தாலும்... எங்களை பொருத்தவரை இதுவரை கொடுத்த 2100 சேவைகளும் விருதுகளே.. எப்படி என்றால்.?

இறந்த வீட்டில் நாங்கள் அவர்களின் துக்கம் பகிர்ந்து கொள்ள ஆறுதலாய் வழங்கும் நீத்தார் சேவையை 3 நாட்கள் கழித்து திரும்ப பெறும் போது அவர்கள் எங்களிடம் கண்ணீர் மல்க சொல்லும் நன்றியும்..,
எங்கள் கைகள் பிடித்து சொல்லும் சேவை வளரட்டும் என்ற
நெஞ்சார்ந்த வாழ்த்தும், வணக்கமும் மட்டுமே எங்களின் "உண்மையான விருது" என்று நாங்கள் சொல்ல சொல்ல மாணவ மாணவியர்கள் அனைவரும் உணர்ச்சிப்பெருக்கில் கை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

2100 ஆன்மாக்களுக்கு குடும்பமாய் சென்று உதவி..
2100 விருதுகள் பெற்ற ஒரே அமைப்பு எங்கள் தாய்மை அறக்கட்டளை...

வருகை தந்த ஆசிரியர்கள் எங்களை கௌரவ படுத்த பொன்னாடை மற்றும் பரிசுகள் வழங்கினார்கள்.
நாமும் அவர்களின் சீரிய உயர்ந்த எண்ணத்திற்காக ஆசிரியர்கள் இருவருக்கும் வாழ்த்து சொல்லி பரிசு வழங்கினோம்.

தினமும் இறந்த துக்க வீட்டில்.. அழுகை தோயந்த முகங்களையும், கைபேசியில் எப்போதும் துன்ப செய்திகளை மட்டுமே கேட்டு வந்த நாங்கள் இன்று கண்களில் ஆயிரம் கனவுகளோடு வந்திருக்கும் மாணவர்கள் "உங்களை சந்தித்தது தான் எங்களுக்கு இன்றைய மிக சிறந்த பரிசு என்றும், உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது" என்றும் சொன்னோம்.

3 மணி நேரம் அமைதியாய் அமர்ந்து, பேசி கருத்துகள் பகிர்ந்து கொண்ட மாணவர்கள் கொண்டு வந்திருந்த உணவை உண்டு நம்பிக்கையோடு விடை பெற்று சென்றார்கள்.

நெருங்கிய் உறவுகள் இறந்து போனால் கலங்கி போகாமல், வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அடுத்தடுத்து என்ன செய்வது.? என்று மாணவர்கள் அறிந்து கொண்டார்கள்.
வாழ்வின் மற்றொரு விளிம்பை அவர்கள் புரிந்து கொண்டதாய் நாம் அறிந்தோம்.
நல்லதை விதைத்து உள்ளோம்..

நல்லவை நிச்சயம் முளைக்கும்...என்ற நம்பிக்கையில் தாய்மை அறக்கட்டளை.

🙏🏼🙏🏼🙏🏼
👍🏼👍🏼👍🏼
☺️☺️☺️



#இலவசநீத்தாரசேவை
&researchcollege

*நிறைவு பெற்றது..  2100 ஆன்மாக்களுக்கு இறுதி பயண உதவி...*2017ம் வருடம் ஒரு மாலை நேரம் ஆதரவற்ற ஒருவர் இறந்து போய்...எந்த ...
23/06/2025

*நிறைவு பெற்றது.. 2100 ஆன்மாக்களுக்கு இறுதி பயண உதவி...*

2017ம் வருடம் ஒரு மாலை நேரம் ஆதரவற்ற ஒருவர் இறந்து போய்...
எந்த உதவியும் இல்லாமல் வாடிய ஒரு ஏழை மூதாட்டிக்கு இறுதி சடங்கை செய்ய தாய்மை அறக்கட்டளை உதவியது...

101 இலவச டெங்கு காய்ச்சல் முகாம் கோவை முழுவதும் நடத்தி முடித்த நம்பிக்கை பெற்று இருந்தது தாய்மை அறக்கட்டளை. அந்த மாதத்தில் நடந்த தாய்மை அறக்கட்டளை ஆலோசனை கூட்டத்தில் ஏழைகள் வீட்டில் ஏற்படும் இறப்பு நிகழ்விற்கு முற்றிலும் இலவசமாக உதவிகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றினாலும், நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உறுப்பினர்களை கொண்ட தாய்மை அறக்கட்டளை நண்பர்கள் கையில் நயா பைசா கூட இல்லாத சூழலிலும் நம்பிக்கை நிறைய இருந்தது.

அறக்கட்டளைக்கு நம்பிக்கை கொடுத்த பல அன்பர்களையும், உதவி செய்வார்கள் என்று தோன்றிய பல தனவான்களையும் பார்த்து சோர்ந்து போய்...
"பணம் கேட்காமல் பொருளாய் கேட்டு பெறுவோம்" என சொந்த வேலையையும் செய்து விட்டு, மாலை நேரங்களில் பலரையும் சந்தித்து இலவச நீத்தார் சேவை செய்ய இருக்கிறோம் என சொல்லி உதவியை பொருளாய் கேட்டோம்.

கேட்ட விஷயத்தில் உண்மை நிறைந்து இருந்ததாலும், ஏற்கனவே செய்திருந்த "டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்" பற்றிய சேவைகளை அறிந்து கொஞ்சம் கொஞ்சமாய் உதவிகள் கிடைத்தது.

தாய்மை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சிறு தொகையை சந்தாவாக வழங்கி பொருள் வாங்க உதவி செய்தார்கள்.
அரிமா மற்றும் ரோட்டரி சங்கங்கள் ஒரு சில பொருட்களை வாங்கி தந்து உதவினார்கள்..

ஒருவழியாக ஒரு இறந்த வீட்டிற்கு வழங்க தேவையான "நீத்தார் சேவை" பொருட்களை சிறுக சிறுக வாங்கியது...பொருட்கள் தயார்...ஆனால்
துணி பந்தல் அமைக்க நாம் கற்று கொள்ள வேண்டுமே..?
அதற்காக துணி பந்தல் அமைப்பதில் சிறந்த ஒருவரை வர செய்து கூலி கொடுத்து கற்றுக்கொண்டோம்.

இலவச நீத்தார் சேவை குறித்த தகவல்கள் கொண்ட புதிய சுவரொட்டி அடித்து ஊரெங்கும்..
"ஏழை வீடுகளில் ஏற்படும் இறப்பு நிகழ்விற்கு நீத்தார் சேவை வழங்கப்படுகிறது.. பயன்படுத்தி கொள்ளவும்..! "என அறிவிப்பு செய்யப்பட்டது.

அறிவிப்பு செய்த ஓரிரு நாளில் ஒண்டிபுதூர் ராமசந்திரா ரோட்டில் உள்ள முதியவர் இறந்து விட்டதாகவும், நீத்தார் சேவையாக சாமியானா,சேர்கள், டீ பிளாஸ்க் ஆகியன வேண்டும் என கேட்க..
ஒவ்வொருவரும் சொந்த வேலைகளை விட்டுவிட்டு உடனே ஓடி சென்று மிகுந்த பொறுப்போடு இறந்த வீட்டில் வேண்டிய உதவிகள் செய்து கொடுத்தோம்.

வாடகை ஆட்டோவில் சென்று நீத்தார் சேவைகள் கொடுத்தாலும்.., தாய்மை அறக்கட்டளை ஒருபோதும் ஆட்டோ வாடகையை பொது மக்களிடம் கேட்டது கிடையாது.

1.....100 நீத்தார் சேவை நிறைவு பெற்றது.
கொஞ்சம் கொஞ்சமாய் தேவையான நீத்தார் சேவை பொருட்கள் கூடுதலாக வாங்கி கொண்டோம்.

இறப்பிற்கு இலவசமாய் 3 நாட்கள் வழங்கிய பின்னர் அதற்கு பிறகு வரும் கருப்பு நிகழ்வு, 7ம் நாள் நிகழ்வு, 16ம் நாள் நிகழ்வு, மற்றும் மங்கள நிகழ்வு போன்றவைகளுக்கு பொருட்கள் வழங்கி அதற்கு மட்டும் சிறு சேவை தொகையை கேட்டு பெற்று செலவுகளை சமாளித்து வந்தது அறக்கட்டளை.

தாய்மை அறக்கட்டளையின் உண்மையான சேவையை அறிந்த ROTARY CLUB OF VAGARAYANPALAYAM அவர்கள் சார்பாக "Freezer Box" ஒன்றை வாங்கி அறக்கட்டளைக்கு அர்ப்பணித்தார்கள்.

நீத்தார் சேவை 500ஐ கடந்து 1000 ஆனது..

சோர்வில்லாமல் இரவு பகல் குளிர் வெயில் பொருட்படுத்தாமல் குடும்பமாய் அறக்கட்டளை சேவை செய்வதை அறிந்து மகிழ்ந்து... 2023-ல் Rotary Club of Coimbatore MetroPolis சார்பாக சொந்தமாய் புதிய ஆட்டோ வாகனம் வாங்க ரூ 4 லட்சம் வழங்கி உதவி செய்து ஊக்கம் அளித்தார்கள்.

தாய்மை அறக்கட்டளை மீது மாறாத அன்பு கொண்ட நலம் விரும்பி..
"திருமதி மங்கையற்கரசி-திரு சேவாகுரு தம்பதியினர்" ஆட்டோ வாங்க ரூ 1 இலட்சம் வீட்டிற்கு வர செய்து மகிழ்ந்து நன்கொடை வழங்கினார்கள்.

மஹிந்திரா ஆட்டோ வாகன விற்பனை மேலாளர் திரு சந்திர மௌலி அவர்கள் சார்பாகவும், அங்கு பணி புரியும் பணியாளர்களிடம் தாய்மை அறக்கட்டளை செய்து வரும் அளப்பறிய சேவைகள் குறித்து மேலாளர் எடுத்து கூறி அவர்கள் சார்பாகவும் குறிப்பிட்ட நன்கொடையை பெற்று தந்து பெரூதவி செய்தார்.
மீதம் தொகையை தாய்மை அறக்கட்டளை ஏற்று கொண்டு புதிய ஆட்டோ வாகனம் சொந்தமாக வாங்கியது. ஒருவழியாக வாடகை ஆட்டோ செலவுகள் குறைந்தது.

ஒவ்வொரு வருடமும்..
ஒவ்வொரு நாளும்..
ஒவ்வொரு இறந்த வீட்டில் மட்டுமல்லாமல்,
உறுப்பினர்கள் தத்தம் சொந்த வீட்டிலும்..
நட்பு வட்டத்திலும்..
பல்வேறு கேலி கிண்டல்களை கடந்து சேவை செய்தோம்.
பற்பல அனுபவங்களை,
பற்பல வாழ்த்துக்களை,வரவேற்புகளை, விருதுகளை, அங்கீகாரங்களை, விமர்சனங்களை பெற்று வந்தாலும்,
நீத்தார் சேவையை தங்கு தடையின்றி வழங்கி வந்தோம்...

உறுப்பினர்களில் முக்கியமாக கார்த்தி, மேனகா, ஸ்டாலின், பூரணி,முத்துக்குமார்(மாற்றுத்திறனாளி),மயில்சாமி VR, ஹேமலதா,முருகேஷ், மயில்சாமி ராதா,ரிஷி, தீபா, சிறுவர்கள் ஆதர்ஷ், சுதர்சன், லெனின்,பாரதி, பூமிகா,சஞ்சனா ஆகியோர் சிறப்பான பங்களிப்பு அளித்துள்ளார்கள்.

பொதுவாய் எல்லாருக்கும் செய்யும் வேலைக்கு விடுப்பு உண்டு... ஆனால் இந்த நீத்தார் சேவைக்கு விடுப்பு ஏது..?
பூமியில் மனிதர் இறப்பிற்கு விடுமுறை நாள் ஏது..?
அப்படி விடுமுறை நாள் கூட எங்களால் விடுப்பு எடுக்க முடியாத நாட்களாக..,
ஒரு நீத்தார் சேவைதானே வேண்டிய உதவிகளை வழங்கி விட்டு திரும்பி விடலாம்..!" என பல் கூட துலக்காமல் வீட்டிலிருந்து மனைவி மகனோடு புறப்பட்டு, வேண்டிய சாமியானா, சேர்கள், Freezer box, டீ பிளாஸ்க் ஆகியன எடுத்து கொண்டு விரைந்து செல்ல, வரிசையாக இறப்பு அழைப்புகள் வந்து வந்து, மாலை 4 மணிவரை 10 நீத்தார் சேவைகள் வழங்கிய தாய்மை அறக்கட்டளை நண்பர்களுக்கு அன்றைய நாள்...
ஒரு நீண்ட நெடிய நாளாக மாறிய சோர்வான நாட்களும் உண்டு..

3ம் நாள் சேவை நிறைவு பெற்று பொருட்கள் திரும்ப பெறும் போது அவர்கள் கண்களில் காணும் நன்றி பெருக்கில் சோர்வும்சுகமாகி போகும்.. மீண்டும் சுறுசுறுப்பு பிறக்கும்.

இறந்த வீட்டில் நெஞ்சில் அடித்து அழும் மனைவி, துக்கம் தொண்டை அடைக்க தந்தையின் பேர் சொல்ல முடியாமல் அழுத அன்பு மகன்,கூட்டமாய் வட்டமாய் கூடி இறந்த சடலம் முன்பு ஒப்பாரி பாடும் பெண்கள்,வானத்தை வெறித்து பார்த்தபடி இருக்கும் மகளை இழந்த தந்தை, தாத்தாவை பறிகொடுத்த சோகத்தில் உடலை கட்டி கொண்டு அழும் பேரன், குடித்து குடித்து மனதையும் உடலையும் ரணமாக்கி இறந்து போன கணவனின் இறப்பில் வாழ்க்கை வெறுத்து போய் குழந்தைகளை கட்டி கொண்டு அமர்ந்திருக்கும் தாய்..
மருத்துவர் நம்பிக்கை கொடுத்ததால் லட்ச கணக்காய் செலவு செய்தும் காப்பாற்ற முடியாமல் போன தாயை நினைத்து வாடும் மகன்.. வீட்டு செலவை சமாளிக்க முடியாத நேரத்தில் வீட்டில் இருந்த பாட்டி இறந்து போக கையில் காசு இல்லாமல் யாரிடம் கடன் வாங்குவது..? " என தத்தளிக்கும் சராசரி குடும்பஸ்தன் என இப்படி தினம் தினம் பல்வேறு வீடுகளுக்கு உதவ சென்று திரும்பும் எங்களுக்கு பலப்பல நெகிழ்வான சம்பவங்கள் அனுபவமாகும்.

"உண்மையிலேயே.. நயா பைசா இல்லாம இருந்தேன்... வெளிய கேட்கவும் கூச்சமா இருந்துச்சு..அந்த நேரத்துல நீங்க அறக்கட்டளை மூலமா செஞ்ச இந்த பெரிய உதவிய... எங்களுக்கு சொந்தக்காரங்க கூட செய்யமாட்டாங்க தம்பி...!" என்று கைபிடித்து தழுதழுக்க சொன்ன வார்த்தைகள், எங்களுக்கு பல தடைகள் வந்தாலும், தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலை வழங்குகிறது.

வெயில் காலத்தில் மாதம் முழுவதும் இலவச நீர் மோர் பந்தல், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள்,உலக புகையிலை ஒழிப்பு தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் நடத்துவது, தாய் தந்தை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி, மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு வருடந்தோறும் தீபாவளி புத்தாடை கூப்பன்கள் வழங்குவது,மலை வாழ் மக்களக்கான போர்வைகள், உடைகள், ஸ்கூல் பைகள் வழங்குவது, ரத்த தானம், கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை வழங்குவது போன்ற சேவைகளும் சத்தமில்லாமல் செய்து வருகிறது தாய்மை அறக்கட்டளை.

2100 வது நீத்தார் சேவையை இரவு 8 மணிக்கு கோவை ஆஞ்சநேயர் காலனி அருகே தெய்வத்திரு நாராயணன் என்ற முதியவரின் இறப்பு நிகழ்விற்கு உதவி வழங்கிய திருப்தியோடு அவரவர் வீடு திரும்பிய எங்களுக்கு மனம் நிறைய அகமகிழ்ச்சி பொங்கியதில் ஆச்சர்யமில்லை..

நன்றி

ServiceCompletion
#2100நீத்தார்சேவைநிறைவு
#இலவசநீத்தார்சேவை
#தாய்மைஅறக்கட்டளை





🙏🏼🙏🏼🙏🏼

Today Dinamalar Newspaper about Drawing Competition going to held on 01/06/2025 Sunday onbehalf of WORLD NO TO***CO DAY(...
31/05/2025

Today Dinamalar Newspaper about Drawing Competition going to held on 01/06/2025 Sunday onbehalf of WORLD NO TO***CO DAY(MAY 31) & WORLD ENVIRONMENT DAY(JUN 5) for Students 1std - 12 std...

தினமலர் செய்தி தாளில் தாய்மை அறக்கட்டளை நடத்தும் விழிப்புணர்வு ஓவியப்போட்டி குறித்து செய்தி...







Share and Support a Good cause event...
22/05/2025

Share and Support a Good cause event...

சொல்லி சாதித்த இலக்கியா..ரயில்வே பணியில் வேலை...சந்தோஷத்தில் தாய்மை அறக்கட்டளை...செல்வி இலக்கியா ஒரு வருடம் முன்னால் தாய...
18/04/2025

சொல்லி சாதித்த இலக்கியா..
ரயில்வே பணியில் வேலை...
சந்தோஷத்தில் தாய்மை அறக்கட்டளை...

செல்வி இலக்கியா ஒரு வருடம் முன்னால் தாய்மை அறக்கட்டளையை தேடி வந்து, ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில்(Power lifting) கலந்து கொள்ள நிதி உதவி கேட்டிருந்தார்.
அவரது சான்றிதழ் மற்றும் சாதனை புகைப்படங்களை கண்டு, அவருக்கு ரூ 5000 தாய்மை அறக்கட்டளை வழங்கினோம். மேலும் அவருக்கு எனது பள்ளி நண்பர் ஷாஜஹான் அவர்களும் ரூ 2000 வழங்க... அதோடு காவல் ஆய்வாளர் திரு வினோத் அவர்களும் ரூ 5000 வழங்க இலக்கியாவிற்கு மொத்தம் ரூ 12,000 உதவியாக வழங்கப்பட்டது.

மேலும் உதவிய செய்தி நாளிதழில் வர மேலும் பலர் உதவி வழங்கி சிறப்பு செய்தார்கள்.இலக்கியா அங்கே போட்டியில் 2ம் இடம் பெற்று பெருமை சேர்த்தார்.அந்த வெற்றி கோப்பையை நமக்கு நேரில் வந்து காட்டி சென்றார்.

தற்போது இலக்கியா அவர்கள் மத்திய ரயில்வே பணிக்காக தேர்வாகி உள்ளார் என்ற மகிழ்வான செய்தியை அழைத்து சொன்னார்.நமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தி இதுதான் என அகமகிழ்வோடு சொன்னோம்.

மேலும் பயிற்சி எடுக்க வட மாநிலங்களில் செல்ல உள்ளதாகவும், அதற்கு முன்பு நம்மிடம் தகவலை சொல்ல முனைந்ததாக சொன்னார்.
ரயில்வே பணிக்காக "ஹிந்தி" கூடுதலாக கற்க வேண்டி உள்ளதாகவும் சொன்னார்.பணி கிடைத்த மகிழ்ச்சியில் அவர் தந்தை மனம் அகமகிழ்ந்ததாக சொன்னார்...

செய்த உதவி சிறிதாக இருந்தாலும், அதை உவகையோடு பகிர்ந்து கொண்ட அவரது பண்பு போற்றுதலுக்கு உரியது.

அவர் வாழ்வில்எல்லா வளமும்நலமும்பெற்று வாழ வாழ்த்துக்கள்..





#தாய்மைஅறக்கட்டளை
#தாய்மை
💐💐💐

Address

7/8, Kamatchi Nagar(Ext), Surya Nagar 1st Street, Sivalingapuram, Ondipudur, Coimbatore, Tamilnadu
Coimbatore
641016

Alerts

Be the first to know and let us send you an email when Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை:

Share