DR.Elamaran Siddha/DR.Elakiyen Ayurveda-

DR.Elamaran Siddha/DR.Elakiyen Ayurveda- Siddha Medicine-Ayurvedic Medicine (Did you know?)Siddha Ayurvedic Herbal Medicine,VARMA THERAPY, LE

இன்று எங்களது சிகிச்சை முறையில் கொரோனா covid19 தொற்றும் சேர்ந்துவிட்டது.நோய்தொற்று ஏற்பட்ட உடன் எங்களது சிகிச்சை முறை எடுத்தவர்கள் பலர் நலமுடன் இருந்து வருகிறார்கள்.தீவிரநிலையிலிருந்து மீண்டவர்களுக்கும் தொடர்சிகிச்சை அளித்து வருகிறோம்.எங்களது சிகிச்சை மருந்துகள் Multiple drugs therapyயாக அளிப்பதால் ஒன்றுக்கொன்று தோல்விஏற்படாமல் நலம்பயக்குகிறது.
����
நோய் நீக்கும் 69 ஆண்டுகள் பாரம்பரிய சித்தா -ஆயுர்வேதா-பஞ்சகர்மா-சிகிச்சை :
பத்து , படை , அரிப்பு , நடுக்குவாதம் , பவுத்திரம் , சோரியாசிஸ் , மூட்டுவலி , வயிற்றுப்புண் , வெண்தோல் , முடக்கு வாதம் , மூலநோய் , முடிஉதிர்தலுக்கு தரமான பாரம்பரிய தைலத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் . பக்கவாதம் , சிறுநீரகக்கல் , கால்ஆணி , மரு , முகப்பரு , PCOD நீர்கட்டி ஆஸ்துமா , கருப்பைநோய் , குழந்தையின்மை தாம்பத்தியபிரச்சனை ,சைனஸிட்டிஸ் , தலைவலி , வெள்ளைப்படுதல் , ஆண்மைக்குறைவு , குழந்தைசளி , மாதவிடாய்பிரச்சனை , இரத்தபோக்கு , பாலியல் நோய்கள், இருமல்,வெரிகோஸ்வெயின், , சர்க்கரை நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படும் .
�புதுக்கோட்டையில் - மேல 2 ம்வீதி , வடக்கு ராஜவீதி சந்திப்பு .
�அறந்தாங்கியில்பெரியபள்ளி வாசல் அருகில்
� தஞ்சாவூர் - காவேரி சிறப்பங்காடி , TCWS பில்டிங் , ஈவினிங் மார்க்கெட்எதிரில் , பழைய பஸ்நிலையம் , தஞ்சாவூர் -613001
�சென்னை , திருவாரூரில் சந்தித்தும் ஆலோசனை பெறலாம் . Dr.இளமாறன் சித்தா/Dr.இலக்கியன் ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை நிபுணர்
�தொடர்புக்கு:�9443475684 8940087696

படர் தாமரை மீண்டும் வராமல் தடுக்கும் எளிய சித்த வைத்திய மூலிகை முறைகள். இதற்கு தேவையான பொருட்கள் முறை ஒன்று 10 எண்ணிக்கை...
16/03/2025

படர் தாமரை மீண்டும் வராமல் தடுக்கும் எளிய சித்த வைத்திய மூலிகை முறைகள்.
இதற்கு தேவையான பொருட்கள்
முறை ஒன்று
10 எண்ணிக்கை சீமை அகத்தி அல்லது வண்டுகடி இலை, 10 முதல் 20 கிராம் வேப்பங்கொட்டை உள்பகுதி பருப்புடன் , சிறிய துண்டளவு கஸ்தூரி மஞ்சள், 1 கிராம் அளவு கசகசா, 2 கிராம் தேங்காய் துருவல், 15 எண்ணிக்கை வெள்ளை அல்லது கருமிளகு, இவை அனைத்தையும் சேர்த்து, நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து. இதில் எழுமிச்சம்பழச்சாறு சேர்த்து, அரிப்புள்ள பகுதிக்கு பூசி, 1 முதல் 2மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனை வாரம் இருமுறை, செய்து குளித்து வந்தால், பூஞ்சை காளான் தொற்று திரும்ப பரவாமல் தடுக்க முடியும்.

முறை இரண்டு
10 எண்ணிக்கை வேப்பங்கொட்டை உள்பருப்பு, 3சென்டிமீட்டர் நீளமுள்ள கஸ்தூரி மஞ்சள் 10 முதல் 15 எண்ணிக்கை வெள்ளைமிளகு அல்லது கருமிளகு ,10கிராம் தேங்காய் துருவல், இவை அனைத்தையும் சேர்த்து , நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, இதில் எழுமிச்சம்பழச்சாறு சேர்த்து, அரிப்புள்ள பகுதிக்கு பூசி 1 முதல் 2மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனை வாரம் இருமுறை, செய்து குளித்து வந்தால் பூஞ்சை காளான் தொற்று திரும்ப பரவாமல் தடுக்க முடியும். மேலும் இதனையே தலையில் தேய்த்து , ஊரவைத்து பின்னர் சீகக்காய் அல்லது ஷாம்பு தேய்த்து, தலை குளிக்க, அரிப்பு, பொடுகு நீங்கி தலைமயிர் உறுதியுடன் கருகருவென்று வளரும்.
உணவுமுறை
பொதுவாக தோல் நோயினர் அலர்ஜி. அரிப்புடன் கூடிய நோயினர். மீன், நண்டு, இறால, முட்டை, கருவாடு, செம்மறி ஆட்டுக்கறி, கோழிக்கறி, பாகற்காய், புளிப்பான பழங்களை தவிர்க்கவும். கத்தரிக்காய், வெண்டைக்காய், கருணைகிழங்கு அரிப்பை உண்டாக்கலாம். வெள்ளாட்டுஇறச்சி, கிளங்கான் மீன், குறவைமீன் அரிப்பு இல்லாத போது உணவின் சேர்க்கலாம்.

🔷துளசி Holy Basil🟪வாஸ்து நன்மைகளையும் தரும் 🟪பெருமாளுக்கு பிடித்தமான மூலிகை துளசி🟪கஞ்சாங்கோரை எனப்படும் துளசி🟪கருந்துளசி...
16/01/2024

🔷துளசி Holy Basil

🟪வாஸ்து நன்மைகளையும் தரும்
🟪பெருமாளுக்கு பிடித்தமான மூலிகை துளசி
🟪கஞ்சாங்கோரை எனப்படும் துளசி
🟪கருந்துளசி
🟪கருத்தடை மருந்து
✅Dr.சுப.ச.இளமாறன்
BSMS
✅Dr.E.Elakiyen BAMS ✅Dr.Arthika BAMS புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்- சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற, மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு ph:9443475684
🟩🟩🟩16-01-24🟩🟩🟩

துளசி தாவரவியல் பெயர்: Ocimum tenuiflorum
இது மூலிகை செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத் துளசி என வகைகள் உள்ளன.
நம்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் துளசிச்செடிகள் வெண் துளசி வளர்க்கப்படுகிறது.
இதனை மூலிகையின் அரசி என்றும் கூறலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு துளசி ஒரு சிறந்த மருந்தாகும்.
🟪இத்துளசி சில வாஸ்து நன்மைகளையும் தருவதாக கருதப்படுகிறது எனவே இந்தியாவில் இந்த செடிக்கு இன்றும் மக்களிடையே முக்கிய இடம் உண்டு. சளி இருமலுக்கு துளசி இலையை அப்படியே பயன்படுத்தப்படுகிறது.
🟪துளசியில் இருந்து பெறப்படும் எண்ணெயை பயன்படுத்தி , தோல் பராமரிப்பு,வாசனை திரவியம் மற்றும் ஷாம்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
🟪அகமதாபாத்தில் டாக்டர் உபேன்டிரராஜ் ஜே சண்டீசரா என்பவர் துளசியைக் கொண்டு புற்று நோய், ஆஸ்துமா முதலிய பல்வேறு நோய்களை சில ஆண்டுகளுக்கு முன் குணப்படுத்தியிருக்கிறார். துளசி வைத்தியர் என்று அங்கே அவரை மக்கள் அழைத்துள்ளனர். வெண்புள்ளி (லூகோடெர்மா) உட்பட பல நோய்களை அவர் துளசியைக் கொண்டு குணமாக்கி வந்தாக தெரிகிறது.
🟪பரந்தாமனுக்கு -பெருமாளுக்கு பிடித்தமான மூலிகை துளசி: பூஜைக்கு பயன்பட்டு, மத சடங்குகளில் தொடர்பு கொண்டு பக்தியை வளர்த்து வருவது துளசி. அது தற்போது விஞ்ஞான நோக்கில் ஆராயப்பட்டு வருகிறது; அதன் குணங்கள் நோயை நீக்கி மனித உடலில் ஆரோக்கியத்தை வளர்க்கும் என்பது அன்று முதல் இன்று வரை நிரூபணமாகி வருகிறது.
🟪துளசி தீர்த்தம்
வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை வளர்த்து வழிபடுகிறார்கள். கோவில்களில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. இத் துளசி உடல் உஷ்ணத்தைக் குணமாக்கும் . ஜலதோஷம் மற்றும் சீதளம் பேன்ற மழைக்காலங்களில் வரும் நோய்களிலிருந்து உடலை காக்கும்.
🟪மேல் நாட்டில் துளசி
தொன்மைக்காலம் தொட்டு நமது கோயில்களிலும், சமய வைபவங்களிலும், நம் நாட்டு மருத்துவத்திலும் பெரும் பங்கு கொண்டு வருவது துளசி. ஆனால் இது மேல் நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் பிரபலமடைந்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் இதனை அரேபிய மருத்துவர்கள் அங்கீகரிக்கவில்லை. அப்போதைய மேலைய மருத்துவ நூல்களும் இதன் உபயோகத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் ரோம அறிஞர் பிளினி மட்டும் தனித்து நின்று இதன் சிறப்பை ஆதரித்தார். ரோமானியர்கள் காலப்போக்கில் துளசியின் மருத்துவ சிறப்பை உணர்ந்தனர். அடிக்கடி துளசியை உட்கொண்டு வருவோரை தேள்கடி பாதிக்காது என்று ஆப்பிரிக்கர்கள் நம்பினர்.
🟪"நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் நம்மாழ்வார்(ஆழ்வார்)
"-------------தெய்வத்
தண்ணந்துழாய்த்தாராயினும் தழை யாயினும்
தன் கொம்ப தாயினும் கீழ் வேரா யினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே"
என்று கூறியுள்ளார்.

துளசிச் செடியின் எல்லாப் பகுதிகளுமே பூஜைக்கு உரியவை என்பதை வலியுறுத்துகிறார். துளசியின் வேர்ப்பட்ட மண்ணும் பூஜைக்கு பயன்படும் என்று நம்மாழ்வார் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
🟪ஐரோப்பாவின் சில பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக ஒரு பழக்கம் இருந்து வருகிறது. அதாவது ஓர் இளம்பெண் தனது வீட்டு வேலைக்காரி மூலம் அனுப்பும் துளசியை ஒரு வாலிபன் பெற்றுக் கொண்டால், அந்தப் பெண்ணை அவன் காதலிக்க சம்மதித்ததாகக் கருதப்படும். மத்தியத் தரைக் கடல் நாடுகளில் அன்புக்குரியவர்களை அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளின் மீது துளசியைச் சாத்துவது சிறந்த மரியாதையாகக் கருதப்படுகிறது. ஐரோப்பியர்களையும் துளசியின் வாசனை முதலில் கவர்ந்தது. துளசியின் தாவரப் பெயர் கிரேக்க மொழியில் வாசனை உள்ளது என்ற பொருள்படும் ஓசா (ozo) என்று முன் பகுதியையும். கர்ப்பக்கிரஹம் என்ற அர்த்தமுள்ள ஸ்யாங்க்டம் (Sanctum) என்ற பின் பகுதியையும் கொண்டு உருவாகியிருக்கிறது.
🟪17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மருத்துவத்தில் துளசி இடம்பெறவும் ஆரம்பித்தது. கஞ்சாங்கோரை எனப்படும் துளசியை முதலில் உணவில் சேர்த்து பலனை பெற ஆரம்பித்தார்கள் .இது முதலில் லண்டனில் நடந்தேறியது. அங்கு "சாஸ்" தயாரிப்பாளர் ஒருவர் துளசிப் பிரிவைச் சேர்ந்த கஞ்சாங்கோரை (Ocimum basilicum) பயன்படுத்தி இனிய மணமும் சுவையும் கொண்ட சூப், குழம்பு முதலியவற்றை விற்று பெருஞ்செல்வம் திரட்டினார். இதை வாங்க லண்டன் பிளிட்ஸ் தெருவிலுள்ள பீட்டர்ஸ் சந்துக்கு லண்டன் வாசிகள் பெருந்திரளாக வருவதுண்டு: பின்னர் ஐரோப்பாவில் சமையல் கூடங்களில் பச்சடி, சூப் போன்ற உணவுப் பொருட்களிலும், விசேடமான மீன் வகைகளிலும் இதனை சேர்த்து உட்கொண்டு பயன் அடைய ஆரம்பித்தார்கள்.
குளிர் தேசமான ஐரோப்பாவில் துளசியை சிரத்தை எடுத்து வளர்க்க வேண்டும். வெப்பப் பகுதியில் விளையும் போது இருக்கும் சத்து குளிர்ப் பகுதியில் விளையும்போது இருப்பது இல்லை. நம் நாட்டில் கூட நீர் நிறைந்த இடத்தில் கிடைக்கும் துளசியைவிட வறட்சியான இடத்தில் விளையும் துளசிகளில் மருந்துப் பொருள் அதிகம்
🟪பம்பாய்(இன்று மும்பை)இரசாயனக் கண்காட்சியில்
பம்பாயிலுள்ள விக்டோரியா தோட்டத்தில் ஒரு சமயம் இரசாயனக் கண்காட்சி நடத்தப்பட்டது. அதை நடத்திய முக்கிய நிர்வாகிகளும் ஊழியர்களும் கொசுக்கடிக்கு ஆளாயினர். அதனால் அவர்கள் மலேரியா சுரத்தால் பீடிக்கப்பட்டுத் துன்பப்பட்டார்கள். இதனை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த தோட்டத்தில் பல பகுதிகளில் துளசியைப் பயிர் செய்யும்படி யோசனை கூறினார். அவ்வாறே செய்ததால் விக்டோரியா தோட்டத்தில் கொசு உபத்திரவம் ஒழிந்தது என்ற வரலாறும் உள்ளது.
🟪அறுவை மருத்துவர் சந்தேகம்
சிறிது காலத்திற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஒரு சுவையான வழக்கு நடைபெற்றது. துளசிக் காட்டில் ஒரு பிணத்தை
போலீசார் கண்டனர். வழக்கப்படி அது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சிவில் சர்ஜன் அதனை சோதித்து மரணம் நேர்ந்து சில நாட்களே ஆகியிருக்கும் என்று அறிக்கை
எழுதிக் கொடுத்தார். ஆனால் வழக்கு விசாரணையில் சாட்சிகள் அந்தக் கொலை பல வாரங்களுக்கு முன் நடந்ததாகக்கூறினார்கள். சிவில் சர்ஜனுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. பிணம் நாறாமல் இருந்ததற்கும் துளசிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கக் கூடும் என்று சந்தேகித்தார். எனவே அவர் ஒரு கோழியை அடித்து, அதனை பிணம் கண்டெடுக்கப்பட்ட துளசிக் காட்டில் கொண்டு போய் போட்டார்; சில தினங்கள் கழித்து அதை எடுத்துச் சோதித்தார்; கோழி நாறாமலும், அழுகாமலும் இருந்தது. கொலையுண்டவர் உடல் துளசியின் அபூர்வ குணத்தால் அழுகாமல் இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் மருத்துவர் தெரிந்து கொண்டார்.
🟪ஜிப்மர் ஆராய்ச்சிக் கூடத்தில்
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. அங்கு துளசியை ஆண் வெள்ளெலிகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தார்கள். பின்னர் அவற்றை பெண் வெள்ளெலிகளுடன் உடல் உறவு கொள்ள அனுமதித்தார்கள். ஆனால் பெண் எலிகள் கர்ப்பம் தரிக்கவில்லை. ஆண் வெள்ளெலிகளின் விந்துவை எடுத்து சோதித்தபோது, அதில் கருத்தரிக்கச் செய்யும் விந்து அணுக்கள் இல்லாதிருப்பதைக் கண்டனர். அத்துடன், ஆண் எலிகளின் பீஜங்களில் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும் பகுதி அதன் திறமையை இழந்திருப்பதையும் கண்டார்கள். அதே சமயம் எலிகளின் சுறுசுறுப்பும், ஆரோக்கியமும். சேர்க்கை விருப்பமும் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இரண்டு விதமான எலி வகைகளை சோதனை செய்து பார்த்த போது இதே முடிவு கிடைத்தது. இதிலிருந்து துளசி ஒரு சிறந்த கருத்தடை மருந்து என்பது தெரிய வந்தது. மனிதர்களிடம் இந்த சோதனையை நடத்திப் பார்க்க முயற்சி செய்யப்பட்டு வந்ததாக வரலாறு உள்ளது. அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் துளசி உட்கொள்வதை தவிர்த்து வரலாம். இருப்பினும் மனிதனிடம் பயன்படுத்திய இதன் ஆராய்ச்சி முடிவுகள் இன்று வரை இல்லை.
🟪துளசி வகைகள்
துளசியில் வெண்துளசி, கருந்துளசி என்று இரு பிரிவுகள் உள்ளன. காட்டுத் துளசி இனத்தைச் சார்ந்த ராம துளசி என்ற ஒரு வகையும் உண்டு. இது ருத்திரச்சடை என்றும். திருநீற்றுபச்சை, எலுமிச்சை துளசி என்றும் அழைக்கப்படுகிறது. வெண் துளசியில் எண்ணெய்ச் சத்து அதிகம். மக்களிடம் அதிகமாக வழக்கத்திலிருந்து வருவது வெண் துளசி.
கருந்துளசியில் மருத்துவ குணம் மிகுதி. கருந்துளசியில் கருஞ்சிவப்பு ஏறி பச்சை நிறத்துடன் இருக்கும். விதையும் கறுப்பாக இருக்கும். ஹிந்தியில் இதற்கு காளி துளசி என்று பெயர். இதன் விதை , சிறு நீரை பிரிக்கக் கூடியது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் விளையும் துளசி கற்பூரச் சத்து கொண்டது குளிர்ப் பகுதியில் 1,000 மீட்டர் உயரமான இடங்களில் தற்போது இதனைக் கொண்டு வந்து பயிரிடுகிறார்கள். உத்திரபிரதேசத்தில் சில பகுதிகளில் இதனைப் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்ற இடமாக இருந்தது.
🟪துளசி பயிரான இடத்தில் காற்றும். நீரும், மண்ணும் சுத்தமாகி விடுகிறது. காற்றால் பரவும் இன்புளூயன்சா (விஷ சுரம்) முதலிய தொற்று நோய்களால் பீடிக்கப்படும் போது நோயாளிகள் துளசியின் மணத்தை அடிக்கடி நுகர்ந்து வந்தால். பிறருக்கு அந்த நோய் பரவாது: அந்த நோயின் கடுமையும் குறையும். ப்ளூ (விஷ சுரம்) நோயாளிகளைப் பார்க்கச் செல்வோர் துளசியை முகந்து செல்ல. நோய் தொத்துவதிலிருந்து தப்பலாம்.
🟪மருத்துவ குணங்கள்
துளசி உடம்பின் கதகதப்பை பாதுகாக்கும். கதகதப்பு குறைந்தால் அதனை அதிகப்படுத்தும்; சுவாச காசத்தில் சளியை கரைக்கும்; நாக்கின் குளகுளப்பை இளக்கி வெளிப்படுத்தும்; ஜீரணம் நீக்கி பசியை மிகுவிக்கும் : குழந்தைகளின் அஜீரணத்திற்கு இது சிறந்த மருந்து, குழந்தைகளின் மார்பு சளிக்கும், நீர்க் கோவைக்கும் இது ஏற்றது. இனந்தெரியாத வேதனையால் அழுது ஆர்பாட்டம் செய்பவர்களுக்கும். நரம்பு பலகீனம் அடைந்தவர்களுக்கும் இது சிறந்த துணை மருந்து (அனுபானம்), துளசியை உட்கொள்வதன் மூலம் உடல் புண்ணைக் குணப்படுத்திக் கொள்ளலாம். கீரைப் பூச்சியை இது வெளிப்படுத்தும்; தேமல், படை, எச்சில் தழும்பு. காணாக்கடி முதலியவற்றிற்கு மேலே பூசி குணம் பெறலாம். மூட்டு வாத வலியில் (ருமாட்டிசம்) ஆறுதல் தரும். இருதயம், கல்லீரல் மற்றும் இதர உள்ளுறுப்புகளில் உள்ள குறைகள் நீங்கி பலப்படும்.
🟪 துளசி மாலை
உடலில் குளிர்ச்சி மற்றும் உஷ்ணத்தை சம நிலையில் வைத்திருக்கும் தன்மை கொண்டதாகும். துளசி மாலையை அணிந்து கொண்டால் அனைத்து விஷயங்களிலும் வெற்றிகள் தேடி வரும். துளசி மாலை அணிவதால் பாவங்கள் அழிவதுடன், பெருமாள் எப்போதும் நம்முடனேயே இருப்பார். கெட்ட கனவுகள், விபத்துக்களில் இருந்து காக்கக் கூடியது துளசி.
✒️☑️நீரிழிவு, ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இரத்த உறைதல் மருந்துகளை உட்கொள்பவர்கள் துளசியைத் தவிர்க்க வேண்டும்.இது பாதுகாப்பானது என்றாலும், கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
🟪வைட்டமின்கள் ஏ,சி,கே மற்றும் கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இதில் கணிசமான அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது
✒️உபயோக முறைகள்
🟪சாறு
துளசி இலையை கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து,இதனை குழந்தைகளுக்கு அரைத் தேநீர் கரண்டி முதல் இரண்டு தேநீர் கரண்டி வரையும், பெரியவர்களுக்கு 7 மில்லி லிட்டர் முதல் 15 மில்லி லிட்டர் வரையும் இரண்டு வேளை ஒரு நாளைக்கு தரலாம்.
🟪சூரணம்
துளசியைக் காய வைத்து இடித்து சல்லடையில் சலித்து வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு 2 முதல் 4 சிட்டிகை தேனுடன் கலந்து தரலாம். வயது வந்தவர்கள் அரை முதல் 1 தேநீர் கரண்டி வரை இரண்டு வேளை உட்கொள்ளலாம்.
🟪துளசி கசாயம்
1 பிடி துளசியை கால் லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி 30 மில்லி லிட்டராக வற்றவைத்து கசாயம் தயாரிக்கவும். குழந்தைகள் 1 முதல் 2 தேநீர் கரண்டியும், வயது வந்தவர்கள் 15 மில்லி லிட்டர் முதல் 30 மில்லி லிட்டர் வரையும் ஒன்று முதல் இரண்டு வேளைகள் அருந்தலாம். கசாயம் தயாரிக்கும்போது. அஜீரணத்திற்கு ஓமம், இஞ்சி, சுக்கு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும், சளி, இருமல், சுரம், சுவாசகாசத்திற்கு அரிசித் திப்பிலி அதிமதுரம், சிற்றரத்தை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் 5 கிராம் சேர்த்து கசாயமாக்கி உட்கொள்ள, நல்ல குணம் காணலாம். ஒன்றிரண்டு வெற்றிலையைத் தனியாக கசக்கிப் பிழிந்து அந்த சாற்றை துளசிக் கசாயத்தில் கலந்து குழந்தைகளுக்குத் தந்தால் சளிக் கட்டும். அதனால் ஏற்படும் தொல்லைகளும் தணியும்.
🟪பல் வலிக்கு
துளசிச் சாற்றில் சிறிது கிராம்புத் தூளும் கற்பூரமும் கலந்து சொத்தையுள்ள பல்லிலும் ஈறு வீக்கமுள்ள இடத்திலும் வைக்க வலி குறையும்.
🟪சொறி, படை, தேமலுக்கு
துளசிச் சாறு, எலுமிச்சைச் சாறு, கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்துத் தடவி குளிக்கலாம்.
🟪தலைப் பேனுக்கு
துளசி இலையை இரவில் கட்டிக் கொண்டு படுத்துறங்கினால் பேனுடன், ஈறும் தானாகவே வெளியேறி விடும்.
🟪துளசிப் பொடி (நாசிகாபரணம்)
துளசியை காய வைத்து இடித்து சன்னச் சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்; இந்த தூளை மூக்கில் உறிஞ்ச மூக்கடைப்பு, தலைசுற்று, தலைவலி, தலைகுடைச்சல் நீங்கும். இங்கு குறிப்பிடப்பட்ட சிறுவைத்தியமுறைகளை டாக்டரின் ஆலோசனை பெற்று பயன்படுத்த சிறந்தது. இக்கட்டுரை எழுத எனது தந்தை டாக்டர் சுப.சதாசிவம் அவர்களின் விஞ்ஞான நோக்கில் நோய்நீக்கும் மூலிகைகள் நூல் பயனாக அமைந்தது.நன்றி
🟦🟦🟩🟩🟩🟩🟦🟦
✅Dr.சுப.ச.இளமாறன்
BSMS
✅Dr.E.Elakiyen BAMS ✅Dr.Arthika BAMS புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்- சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற, மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
YouTube, Instagram Facebook பார்க்க
Dr இளமாறன் 9443475684
👁️📞தொடர்புக்கு ph:9443475684

நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
14/01/2024

நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

31/12/2023
நான் எழுதிய 2001 மருத்துவ கட்டுரைகளை நானே இன்று திரும்பி பார்க்கிறேன். Looking backமகிழ்ச்சி ஏற்படுகிறது.நன்றி ஆரோக்யா
07/12/2023

நான் எழுதிய 2001 மருத்துவ கட்டுரைகளை நானே இன்று திரும்பி பார்க்கிறேன்.
Looking back
மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நன்றி ஆரோக்யா

தீபாவளி நல்வாழ்த்துக்கள்எண்ணெய் குளியல், புத்தாடை,பட்டாசு, இனிப்பு,காரம்,தடபுடலான உணவு விருந்துகளுடன், சுற்றம்-நட்பும் ச...
12/11/2023

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எண்ணெய் குளியல், புத்தாடை,பட்டாசு, இனிப்பு,காரம்,தடபுடலான உணவு விருந்துகளுடன், சுற்றம்-நட்பும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடும் நம் பாரம்பரிய தீபஓளி விழா.
கொண்டாடி மகிழ்வோம்.
🟪இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும்,நண்பர்களிடமும் , நீரிழிவு -எனப்படும் சர்க்கரை நோயுடன் இன்று வாழ்ந்து வருகிறோம்.
இனிப்பு யாருக்குதான் பிடிக்காது. அதனால் சர்க்கரைநோயினர் இன்றைய நாளில் இனிப்புக்கு ஆசைபட்டாலும் எச்சரிக்கையுடன் உட்கொள்ளுங்கள்.
முருக்கும் இரத்த சர்க்கரையை உயர்த்தகூடும்.

✅கோழிமுட்டையைப் பற்றி தெரிந்து கொள்வோம் 🟪முட்டை உலகின் மிகச் சிறந்த உணவு 🟪 சித்தர்களும் முட்டையை பல்வேறு வகைகளில் பயன்பட...
06/11/2023

✅கோழிமுட்டையைப் பற்றி தெரிந்து கொள்வோம்
🟪முட்டை உலகின் மிகச் சிறந்த உணவு
🟪 சித்தர்களும் முட்டையை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வந்துள்ளனர்
🟪 சித்தர்கள் கண்டறிந்த அண்டத்தைலம்
🟪ஜப்பானின் கறுப்பு நிற முட்டை
✅Dr.சுப.ச.இளமாறன்BSMS
✅Dr.E.Elakiyen BAMS
✅Dr.Arthika BAMS
புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்-சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற,
மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு
ph:9443475684
🟨🟨🟨07-11-23🟨🟨🟨

உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற உணவுகளில் கோழிமுட்டையும் ஒன்று என்று சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அப்படி என்னதான் முட்டையில் இருக்கு.
🟥 முட்டையில் புரோட்டீன் கொழுப்பு, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மேலும் விட்டமின்கள் ஏ. டி, ஈ இவைகளோடு முட்டையின் மஞ்சள் கருவில் பி காம்ப்ளக்சும் B vitamin உள்ளது.
நாம் சாப்பிடும் சாதாரண கோழி முட்டையில் நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் 'உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் முட்டைக்கு முதலிடம் கிடைத்துள்ளது . 40 முதல் 50 கிராம் முட்டையில், 187 மில்லிகிராம் கொழுப்புச்சத்தும் .
(சராசரி மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவே 300 மில்லிகிராம்)ஒரு முட்டையில் 75 கலோரியும் உள்ளன.
பொதுவாக 100 கிராம் கோழி முட்டையில் தன்ணீர் 75 கிராம். கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச்சத்துகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் எனப் பல சத்துகள் உள்ளடங்கியுள்ளன.
நாட்டுக்கோழி முட்டையில் B2,B6,B12, A, D, ரிபோஃப்ளேவின்,
பயோடின் வைட்டமின்களும் . இரும்பு, காப்பர், அயோடின்,செலினியம், துத்தநாகம், போன்ற கனிமச்சத்துகளும் அடங்கியுள்ளன.
முட்டையில் சியாக்ஸாந்தின் (Zeaxanthin), கோலின் (Choline) லூட்டீன் (Lutein) சத்துகளும் உள்ளதால்.
கண்களில் ஏற்படும் கண்புரை, விழித்திரை பாதிப்பையும் தடுக்கும். கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற சத்துகள் இருப்பதால். உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதுடன்.எலும்பு களுக்கு வலுவூட்டும்.
முட்டையில் உள்ள லியூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், தசைகளில் புரதத்தை (Muscle Protein Synthesis) மேம்படுத்த உதவும்.
🟥45 கிராம் எடையுள்ள முட்டையில் 6 கிராம் அளவில் உயர்தர புரோட்டின் கிடைத்துவிடுகிறது.
🟥உடல் எடை குறைவானவர்கள், கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள் ,மெலிதானவர்கள் தினமும் ஒரு முட்டையை உட்கொள்ளலாம். தினமும் உட்கொள்ளும் போது உடல்சூடு அதிகரித்தால், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகள் போதுமானது.
காய்கறி, இறைச்சிகளில் இருக்கும் புரோட்டினைவிட முட்டையில் புரோட்டின் அதிகம் கிடைக்கிறது.
🟥 பண்ணைகளில் தயாராகும் முட்டைகளை காட்டிலும் . கிராமங்களில், வீட்டில் வளர்க்கும் நாட்டுக்கோழியின் முட்டை சத்துமிகுந்தது. நாட்டுக்கோழி முட்டை நிறம் சற்று மாறி இருக்கும்.
🟥சிலர் முட்டையை சமைத்து உண்பதைக் காட்டிலும் சமைக்காமல் பச்சையாக உண்பதை பார்த்திருக்கலாம். இதனால் முட்டையின் அனைத்து பயனும் உடம்பிற்கு சேரும் என்று நினைக்கிறார்கள்.இது உண்மையில்லை.
முட்டையை எப்போதும் ஏழு முதல் பத்து நிமிடம்(அதிக நேரமும் கொதிக்க வைக்க கூடாது)வரையில் மஞ்சள் வெண்கருக்கள் திட நிலையை அடையும் வரை வேகவைக்க வேண்டும்.
இதனால் கண்ணுக்கு தெரியாத தீயகிருமிகள் வேகவைப்பதால் நீங்குவதோடு, அவித்த முட்டையை சில மணிநேரங்களில் உட்கொண்டால் நமக்கு கெடுதல் தராது. அதேவேளை காலையில் வேகவைத்த முட்டையை இரவு உட்கொள்வதும் கெடுதல் ஏற்படும்.
🟥முட்டையின் வெண் கருவை 7மாதங்களுக்கு பிறகு கொடுத்து வரலாம்.ஒருவருடத்திற்கு பிறகு மஞ்சள் கருவையும் சேர்த்து வரலாம். சிலருக்கு முட்டை உட்கொண்டால் அலர்ஜி ஏற்படவாய்ப்புண்டு அவர்கள் தவிர்க்க வேண்டும்.
🟥கர்ப்பிணிகள் கண்டிப்பாக முட்டையை பச்சையாக உண்ணவே கூடாது. ஏனென்றால் சால்மெனெல்லா என்ற பாக்டீரியா இருப்பதால் முட்டையின் மஞ்சள் கருவை பச்சையாக திரவ நிலையில் சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கையும் உண்டு.
முட்டையில் கோலின் (Choline) என்ற சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய தாகும். அதனால் கருவுற்ற தாய்மார்கள் முட்டை சாப்பிடுவதால், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை சீராகவைத்திருக்கும். மூளை தொடர்பான எந்தக் குறைபாடும் இல்லாமல் குழந்தையும் பிறக்கும். முட்டையிலிருக்கும் ஃபோலிக் அமிலம், கருவில் வளரும் குழந்தையின் நரம்புகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் உதவும் .
🟥முட்டையை பச்சையாக உண்ணக் கூடாது என்று சொல்லப்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. முட்டையின் வெண் கருவில் ஆவிடின்(avidin) என்கின்ற ஒரு புரோட்டின் உள்ளது. இது பயோட்டின் என்கின்ற விட்டமின் பி-யுடன் சேர்ந்து கொண்டு மனித குடலில் உட்கிரகிக்க இயலாத நிலையை உருவாக்குகின்றது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் நீங்கிவிடும். அதன் பலனாக, முட்டையில் உள்ள ப்யாட்டின் முழுமையாக உடலில் கிரகிக்கப்படும்.
🟥ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை மிதக்க போட்டால் பழைய முட்டையாக இருந்தால் பந்து போல மிதக்கும். புதியதாக இருந்தால், தண்ணீர்க்கடியில் போய் நிற்கும். இதன் மூலம் நல்ல புதிய முட்டையை கண்டறிவது நமக்கு எளி தாகும்.
பாலும் முட்டையையும் ஒன்றாக சாப்பிடலாமா?
ஒரே நேரத்தில் பாலும் முட்டையையும் உட்கொள்வதால் செரிமானத்தை பாதிக்கலாம் மற்றும் வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை உருவாக்கலாம்.
பாடி பில்டர்கள், தசையை வளர்ப்பதற்கும், அவர்களின் உடலில் புரத அளவை மேம்படுத்துவதற்கும் பாலில் நான்கு முதல் ஐந்து பச்சை முட்டைகளை தினமும் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், இதயப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால், இந்த உணவு அபாயகரமானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
🟥அதேநேரத்தில் நன்கு உடற்பயிற்சி செய்பவர்கள். 200 மில்லி சூடான பாலில் ஒரு முட்டையை, மில்க்சேக் முறையில் உட்கொண்டு வரலாம் என்ற அறிவுரையும் சில உணவுநிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
🟥தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலில் அதிகளவில் கொழுப்புச்சத்து சேர்ந்துவிடும் என்கிற பயம் பலருக்கும் இருக்கிறது. அப்படிச் சாப்பிட விரும்புகிறவர்கள், முதலில்
உடலில் இருக்கும் கொழுப்புச்சத்து அளவைப்
பரிசோதித்துக்கொள்ள
வேண்டும். சாதாரணமாக ஒருவருக்குக் கொழுப்புச்சத்து,
200 mg/dl வரை இருக்கலாம்.
200-230 இருப்பதும் ஆபத்து. 250க்குமேல் இருக்கிறது
என்றால், அதிகளவில் முட்டை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
🟥சித்தமருத்துவத்தில் முட்டையை அண்டம் என்று குறிப்பிட்டு பல பலன்களை சித்தர் குறிப்பிட்டுள்ளனர்.
🟥முட்டையின் அண்டத்தைலம்
நாட்டுக்கோழி முட்டையை அவித்து, மஞ்சள் கருவை மட்டும் சேகரித்து அனலில் வாட்டும்போது ஒரு வகை எண்ணெய் வரும். இதை, அண்டத்தைலம் என்போம். இந்தத் தைலம் திக்குவாய் பிரச்னையைச் சரிசெய்யவும். பக்கவாதத்தினால் பேசமுடியாதவர்களுக்கும் நாக்கில் தடவி விட்டால் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலும், பெரியவர்களுக்கு சர்க்கரையிலும் சில துளிகள் விட்டு உட்கொள்ளலாம்.
இரண்டு வேளைகள் உணவிற்கு பின்பு கொடுக்கலாம் . இதனால் தீரும் நோய்கள் : மாந்தம், சன்னி, பாரிசவாயு, குழந்தைகளின் வலி, நாவுபிடிப்பு, பக்கவாதம் முதலியன தீரும் என அறியலாம். இதனை தகுந்த சித்தமருத்துவரின் மேற்பார்வையில் தயாரித்து பயனடையலாம். இதன் ஆயுட்காலம் ஒருவருடம் ஆகும்.
🟥சித்தர்கள் தாது ஜீவ வர்கத்தில் உபரசம் 120 வகையாக பிரித்து , அதில் பஞ்சபூத அடிப்படையில் நீர்பூத வகைபாட்டில் முட்டையை சேர்த்துள்ளனர். மேலும் இதனை சிற்றண்டம் என பெயரிட்டும் கோழிமுட்டையின் பயன்களை விபரமாக விளக்கியுள்ளனர். இதற்கு உள்ளழலாற்றி, மலமிளக்கி,உடல்தேற்றி போன்ற செய்கை கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
🟥முட்டை ஓட்டில்‌ சுண்ணாம்பு சத்து இருக்கிறது. இதனை பயன்படுத்த சித்தர்கள் , முள்ளங்கி சாறு விட்டு அரைத்து ,புடமிட்டு,
மூட்டை ஓட்டுப்‌ பற்பம்‌ தயாரித்து வழங்கி வந்துள்ளனர். இப்பற்பம் அத்திசுரம் எனப்படும் எலும்புருக்கிச் சுர நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. சித்தமருத்துவத்தில் சில மருந்துகள் தயாரிப்பிலும் முட்டை சேருகிறது.
🟥மயில்துத்தம்‌, பால்‌துத்தம்‌ இவைகளை எதாவது ஒன்றை விடமிக்கும்படி தின்றவர்களுக்கு,
மூட்டையின்‌ வெள்ளை கொடுத்தால்‌ முரிந்துவிடும்‌. விசத்தை முரிக்கும் மருந்தாக முட்டையின் வெள்ளைக் கரு பயன்படுகிறது.
🟥அதேபோல இன்று தலைக்கு தேய்த்து குளிக்க பயன்படுத்தும் சாம்புகளுடன் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க நமக்கு சிறந்த கன்டிசனர் கிடைத்தது விடுகிறது.
🟥மூட்டைஒட்டில்‌ சிறு
துவாரங்களிருப்பதால்‌, அவைகளின்‌ வழியே காற்றுப்‌ போய்க்‌ கொண்டும்‌ வந்து கொண்டுமிருக்கும்‌. அதனால், முட்டைகள்‌ சிலநாட்களில் கெட்டுப்‌ போகின்றன. ஆகையால்‌ முட்டைகளின்‌ கொழுப்பு படலம் அல்லது வாசிலின்‌ பூசி, ஒரு முட்டையின் மேல்‌
மற்றொரு முட்டைபடாதவாறு வைத்திருந்தால்‌, முட்டை பல
நாட்கள்‌ வரையிலும் கெடாது பக்குவமாக இருக்கும்‌. அந்த காலத்தில் முட்டைகளை சுண்ணாம்பு நீரில், கல்லுப்பில் அமிழ்த்தி நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாத்தும் வந்தனர்.
🟥முட்டையின் வெள்ளைக் கருவுடன், களர்சிக்காயின் உள்பருப்பும் சேர்த்து உட்கொள்ள, உடலில் ஏற்படும் பல வீக்கங்களுக்கு நிவாரணம் தருகிறது. குறிப்பாக விரைவீக்கத்திற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. முட்டையில் வெள்ளைக் கருவை விரையில் ஏற்படும் வலி வீக்கத்திற்கும் வெளிஉபயோகமாக பற்றிடலாம்.
🟥முட்டையின் வெள்ளைக்கருவிற்கு எண்ணெய் பிசுபிசுப்பை நீங்கும் தன்மை உண்டு. முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்பு மென்மையான துண்டு கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்துவந்தால் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு ,முககருப்பு நீங்கும்.இதனுடன் எலுமிச்சைச்சாறு, தயிர்,தேன், அரிசிமாவு,கடலைமாவு ஏதாவது ஒன்றை கலந்து, ஸ்பேஸ்பேக் முறையில் பயன் படுத்தி பயன்பெறலாம்.
🟥ஐப்பானில் எரிமலை அருகில் உள்ள வெந்நீர் ஊற்றில் முட்டையை வேகவைக்கும் போது கருப்பு நிறத்தில் மாறுவதால், இவ்வாறு வேகவைத்த முட்டையை உட்கொண்டால் வாழ்நாள் அதிகரிப்பதாகவும் அறியமுடிகிறது. முட்டையை இந்த வெந்நீர் ஊற்றில் 15நிமிடஙகள் வேகும் போது இத்தண்ணீரில் உள்ள சில வேதிப்பொருள்(sulphur ) முட்டையின் நிறத்தை மாற்றுகிறது .
Block egg in Japan
Owakudani is an active volcanic valley in the famed Hakone region west of Tokyo. It’s known to locals as "Jigokudani" (the Valley of Hell) and is famous for its black eggs, which are boiled in the sulfurous waters to give the egg shells a distinctive color.
🟩🟩🟩🟩 நன்றி 🟩🟩🟩
✅Dr.சுப.ச.இளமாறன்
BSMS
✅Dr.E.Elakiyen BAMS
✅Dr.Arthika BAMS
புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்-சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற,
மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு
ph:9443475684
🟪🟪🟪🟪🟪🟪

🟪கால் ஆணி  🟪Corns and Callosity🟪சித்தா ஆயுர்வேதத்தில்- சிறப்பு சிகிச்சையில் குணமாகிறது.🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS🟦டாக்ட...
18/07/2023

🟪கால் ஆணி
🟪Corns and Callosity
🟪சித்தா ஆயுர்வேதத்தில்- சிறப்பு சிகிச்சையில் குணமாகிறது.
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
🟦டாக்டர் இ.இலக்கியன் BAMS
🟦 டாக்டர் ஜெ.ஆர்த்திகா BAMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை(since1953)
சிகிச்சை பெறவும்,
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, சென்னையில் டாக்டரை சந்திக்க பேசவும்
🟪Ph:9443475684
🟨🟨🟨18-07-23🟨🟨🟨
கால்ஆணியை காலோசிட்டி என அழைக்கப்படுகிறது . Foot warts என்றும் சொல்லலாம்.
இவை உள்ளங்கையிலும், பாதங்களிலும் தோன்றுகிறது. கை அல்லது பாதத்தில்,ஒரே இடத்தில் அதிமான அழுத்தத்தை தொடர்ந்து ,
நீண்ட நேரமாக அளித்துவந்தால், அழுத்தம் உண்டான பகுதியில் ஆணி உண்டாகி விடுகிறது. குறிப்பாக டென்னிஸ் ஆடுபவர்களின் உள்ளங்கைகளில் ஆணிஎற்பட வாய்ப்புண்டு.இதனை காய்ச்சிப் போச்சுன்னு வழக்கத்தில் நம்முன்னோர்கள் சொல்லுவாங்க. இது மென்மையாகவும், கடினமாக தோன்றக்கூடும்.
பாதத்தில் தோன்றும் வெடிப்பு, சேற்றுப்புண் போல்தான் கால் ஆணியும். இது பெரும்பாலும் அதிக வெப்பம், அதிகப்படியான அழுத்தத்தால் உறுவாக்கூடிய ,இறந்த செல்களின் தொகுப்புதான் கால் ஆணி என்பது. காலில் ஆணி வந்தால் முதலில் ஒருவித அழுத்தம் தருவதுபோல் இருக்கும், கவனிக்காமல் விட்டால் பாதத்தை தரையில் ஊன்ற முடியாத அளவிற்குவலி தரக்கூடும்.நடப்பதிலும் சிரமம் ஏற்படும்.கால் ஆணியின் முதல் அறிகுறியாக பாதத்தின் தோல்பகுதி கடினமானதாக மாறும். பாதத்தில் பாதிக்கப்பட்ட பகுதி கூம்பு வடிவமாகவோ அல்லது வட்டமாகவோ மாறி பாதித்த பகுதி வெள்ளை,மஞ்சள் அல்லது சாம்பல் நிறமாக மாற்றம் ஏற்படும்.
காலில் ஏற்படும் கொப்புளங்கள் கூட ஆணியை தோற்றுவிக்கலாம்.சிலருக்கு அறுவை சிகிச்சை பலன் தந்தாலும் , சிலருக்கு அறுவை சிகிச்சை செய்தபகுதியில் மீண்டும் வளரக்கூடும்.
மேலும் கால்பாதத்திற்கு பொருத்தமில்லாத
தவறான அளவுள்ள காலணிகளை அணிந்து வந்தாலும் அதன் காரணமாக காலில் ஆணி உண்டாகலாம். ஆகவே நீண்ட நேரம் பாதத்தில் உருவாகும் அழுத்தங்களைத் தவிர்க்க வேண்டும்‌.மிக இறுக்கமான காலணிகள் , சாக்ஸ் அணியாமல் ஷூ அணிவது, அசுத்தமான இடங்களில் காலணிகள் இல்லாமல் வேலைசெய்வது.காலை சுத்தமான முறையில் பராமரிக்க தவறுவது . கால் ஆணி ஏற்பட்டவரின் செருப்புகளைப் பயன்படுத்துவதாலும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.
கால்ஆணி பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி செருப்பை மாற்றவேண்டும்.
கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை
அளிக்கப் படாவிட்டால் அவையே பின்னாளில் ஆறாத அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பும் உண்டு.
மேலும் அதிக நேரம் நிற்பதை தவிர்ப்பது, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்வது, காலில் அடிபடாமல் பார்த்து கொள்வதுடன் .காலில் ஏற்படும் புண்களை உடனே சரியான மருத்துவத்தின் மூலம் சரி செய்வது, சர்க்கரை போன்ற நோய்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
🟦காலை பராமரிக்க
தினமும் வெது வெதுப்பான நீரில், கல்உப்பு சிறிதளவு கலந்து ,கால்களை 10நிமிடங்கள் இந்த நீரில் வைத்து வரலாம்.
திரும்பதிரும்ப ஏற்படும் கால்ஆணிக்கு சித்தா ஆயுர்வேத மருத்துவத்தில் தனிப்பட்ட சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளன.இதனை பயன்படுத்தி குணப்படுத்தி கொள்ளலாம். பின்விளைவுகள் இல்லை. நன்றி.
நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்
🟨🟨🟨18-07-23🟨🟨🟨

புகையிலை தவிர்ப்போம்
31/05/2023

புகையிலை தவிர்ப்போம்

🟪சிறுநீரககல்-Kidney stones ( Renal calculi, Nephrolithiasis or Urolithiasis)🟪சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகிறது?🟪அறிகுறிக...
19/05/2023

🟪சிறுநீரககல்-Kidney stones ( Renal calculi, Nephrolithiasis or Urolithiasis)
🟪சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகிறது?
🟪அறிகுறிகள் என்ன?
🟪சிறுநீரககல் நீக்கும் சித்தா-ஆயுர்வேத மூலிகைமருந்துகள்.
🟪மீண்டும் கல்உற்பத்தி ஆகாமல் தடுக்கும் உணவுகள்
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
🟦டாக்டர் இ.இலக்கியன் BAMS
🟦 டாக்டர் ஜெ.ஆர்த்திகா BAMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை(since1953)
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, சென்னையில் டாக்டரை சந்திக்க பேசவும்
🟪Ph:9443475684



🟩🟩🟩19-05-23🟩🟩🟩

🟦சிறுநீரககல் முன்பு 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் பிரச்னையாக இருந்து வந்தது.ஆனால் இன்று இளம் வயதினருக்கும், ஆண் பெண் வேறுபாடு இன்றி, அதிக எண்ணிக்கையில், இருபாலருக்கும் சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
இதனால் சிறுநீர் வெளியேறும் பாதையில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. தாங்கமுடியாத வலியும் தோன்றிவிடுகிறது.
சிறுநீரககல் உறுவாவதற்கு இன்றைய உணவு,பழக்க வழக்கம் ஒரு காரணமாகவும் அமைகிறது.
🟦முதலில் சிறுநீரகக்கல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இரத்தத்தில் யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் அளவுக்கு அதிகமாக இருந்து,அதுவே சிலநேரங்களில் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதையில் இத்தாது உப்புகள் படிதல் முறையில்- தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்களாகும்.
🟦சிறுநீரக கல் எவ்வாறு உருவாகிறது என்றால் ,
உடலில் இருக்கும் அதிகப்படியான கால்சியம், யூரிக், ஆக்சலேட் சிறுநீர் வழியாக வெளியேற வேண்டும். இவை வெளியேறாமல் சிறுநீரகப்பாதையை அடைத்து நிற்கும் போது, அல்லது தேங்கும் போது படிமங்களாக படிந்து நாளடைவில் கடினமாக மாறி கற்கள் தோன்றும் .
சிறுநீரில் அளவுக் அதிகமாக யூரிக் அமிலம் உற்பத்தியாவதுடன், கல் உருவாவதைத் தடுக்கும் சிட்ரேட் எனும் இராசாயன உடலில் குறைவதாலும் சிறுநீரகக்கல் தோன்றிவிடுகிறது. அதாவது யூரிக் அமிலத்தின் அளவுக்கும் கல் உருவாகாமல் தடுக்கும் அமிலத்தின் அளவுக்கும் இடைப்பட்ட விகிதம், நம் உடலில், எப்போதும் சரிவர அமையவேண்டும். இதுவே கல் ஏற்படுவதை தடுக்ககூடிய முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.சிறுநீரின் pH அளவும் விகிதப்படி இருப்பதும் மிக அவசியம். இப் pH அளவு கூடினாலும் குறைந்தாலும் நோயாக மாறிவிடும்.சிறுநீரின் pH மதிப்புகள் 6.0 to 7.5 வரம்பில் உள்ளது.
சிலருக்கு மரபு வழியாக சிறுநீரில் அதிகளவில் கால்சியம் வெளியாகலாம் . அது இல்லாமல் உணவுப் பழக்கம், தண்ணீர் குறைவாகக் குடிப்பது போன்ற காரணங்களால் இக்கால்சியம் அதிகமாக படிதல் ஏற்பட்டு சிறுநீரககல் ஏற்படலாம்.
சிறுநீரகத்தில் உருவாகின்றன பெரும்பாலான கற்கள் கால்சியம் வகையைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. மேலும்
🟦சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.அவை
1)யூரிக் அமிலக் கற்கள்-Uric acid stones
2)சல்பேட் கற்கள்-Sulfate stones
3)மும்மைக் கற்கள் (Struvite stones -magnesium-ammonium phosphate- or infection stones
4)சிஸ்டீன் கற்கள்-Cysteine stones(இது சிலருக்கு பாரம்பரிய முறையில் வருகிறது)
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றை அதாவது Urinary tract infection-னை பயன்படுத்திக்கொண்டு மும்மைக்கற்கள் தோன்றிவிடுகிறது.
🟦சிறுநீரகக் கல் இருப்பதற்கான அறிகுறிகள்
பெரும்பாலும் எந்த அறிகுறியும் ஆரம்பத்தில் இருக்காது. எதார்த்தமாக ஸ்கேன் எடுக்கும்போதுதான் நமக்கு தென்படும். சிலருக்கு சிறுநீரில் மிகசிறிய கல்லும் கலந்து வெளியேறலாம். அந்தசமயத்தில் சிலருக்கு வலி ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டிருந்தால் பின் வயிற்றிலிருந்து வலி பரவி வரும். சிறுநீரில் ரத்தமும் கலந்து வெளியேறினால் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றிய அறிகுறியாகும்.சிறுநீரக மட்டுமல்லாது சிறுநீர் தங்கும் பையிலும் கல் உறுவாகிவிடும்.
லாயின் எனப்படும் இடுப்புக்கு மேலே வயிற்றுப் பின்புறம் வலி ஏற்பட்டால் (Loin pain) மேற்குறிப்பிட்ட குறிகுணம் இருந்தால் முதலில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் . அப்போது சிறுநீரகத்தில் ஏற்பட்ட பெரிய கற்களை இச் சோதனையில் கண்டுபிடித்துவிடலாம். அதேநேரத்தில், சிறிய அளவு கற்களாக சிறுநீர்ப்பையில் இருந்தால் இதற்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும். இதன் மூலமாக கல்லின் அளவு மற்றும் இடத்தை பொறுத்து நவீன மருத்துவ சிகிச்சை முறைகளான லேசர் அல்லது அறுவை சிகிச்சை முறைகளை பின்பற்றி சிகிச்சை எடுக்கலாம்.
🟦உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, பேராதைராய்டு ஹார்மோன் மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடல் பருமன், பரம்பரை போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.
✅பொதுவாக 5 முதல் 6 மி.மீ விட்டமுள்ள கற்களாக இருந்தால் ,நாம் அதிகமாக அருந்தும் தண்ணீரினால், சிறுநீர் வழியாகவே இது வெளியேறி விடும். வெளியேறும் சமயத்தில் சிலருக்கு வலியுடன் தொந்தரவும் ஏற்படலாம்.
6 மில்லிமீட்டருக்கு மேல் அளவுள்ள கற்கள் தானாக வெளியேறுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறுநீரகத்தில் நீராகப் பிரிக்கப்படும்போது, அந்நீரில் நிறைந்துள்ள உப்புகள் சில வேளை சிறுநீரகத்திலேயே தங்கி உறைவதுண்டு. உறைத்த உப்பின் பகுதி எந்த இடத்தில் தங்கியதோ அங்கு பெருத்து வளரும். கற்கள் சிறியதாகயிருந்தால் சிறு நீருடன் கலந்து வெளியேறும்.
உறைந்த கற்கள் சிறுநீரகத்தில் உட்பக்கத்திலோ, வெளிப்பக்கத்திலோ தங்கிப் பெருத்து வளருமாயின், உப்பின் வகைகளுக்கேற்ப உறைந்த கற்களின் வடிவங் களுக்கேற்ப குறி குணங்களும், துன்பங்களும் சற்று வித்தியாசப்படும். கற்களின் முனைகள் முள்ளைப்போல் கூர்மையாயிருப்பின் கடுமையான குறிகுணங்களையும். வழுவழுப்பாக யிருப்பின் இலகுவான குறிகுணங்களையும் காட்டும். உப்பு உறைந்த இடங்களுக்கேற்ப குறிகுணங்களும் வேற்றுமையடையும். வெளிவரும் கற்கள் நீர்ப்பையிலேயே சில வேளைத் தங்கிவிடும். தங்கிய கல் உருவத்தில் பெரியதாக இருந்தால் வெளியே வருவதில்லை. வலியும், வேதனையை தரும்.
🟥சிறு அளவிலிருந்து கல் முனை கூர்மையாய் இருந்தால் அவைபுரளும் போது கீறி தாங்க முடியாத வலியையும், இரத்தக்கசிவையும் உண்டாக்கி, சிறுநீருடன் கலந்து வெளியேறும். வயிறு பக்கத்து இடுப்பு, தொடைபகுதியில் வலி. விரை மேலுக்கு இழுத்துக் கொள்ளுதல் . அடிக்கடி சிறு நீரிறங்கும். குளிர்சுரம், வாத்தி, முகம் வெளுத்தல், கை கால்கள் சில்லிடல், நாடிகள் தளரல், முகம் வியர்த்தல், உடல் சோர்வு ஆகிய குறி குணங்களையும் உண்டாக்கும். சிறுநீருடன் குருதியும், சிறிய கற்களும் வெளிப்படலாம்.
சிறுநீரகத்தின் உட்பக்கத்தில் (Body of the kidney) தோன்றிய கற்கள் பெரிதாகி, தாபிதத்தையும் சீழையு முண்டாக்கும், அச்சீழ் சிறு நீருடன் கலந்து இழியும். அடிக் கடி நீரிழியும். முதுகின் பக்கத்திலும் நடுவிலும் வலியுண்டாகும். இவ்வலி சில நேரம் மிகக் கடுமையாகவும், இலகுவாகவும் இருக்கும்.
🟥கற்கள் சிறியதாகயிருப்பின் அவை மெல்லமெல்ல நழுவி வெளி வந்துவிடுவதுமுண்டு. இருபக்கத்து சிறுநீரகத்தில் கற்களுண்டாயின் மிகுந்த துன்பத்தை விளைவிக்கும்.
சில வேளைகளில் கல் புரண்டு கொண்டே வந்து வெளியாவதற்கு முயன்று வெளியாகாமல் நீர்தாரையிலோ , ஆண்களுக்கு ஆண்குறி நீர்பாதையிலோ அல்லது முனையில் வந்து தடைப்பட்டு நின்றால் மிகுந்த வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும்.சிறுநீர் இறங்கிக் கொண்டிருக்கும் போதே திடீரென அடைத்துக் கொள்வதும் உண்டு. கற்கள் கரடுமுரடா, கூர்மையா இருப்பின் கீழ் வயிற்றிலும், நீர்ப் புழையிலும் ஆசனவாய் பகுதியிலும் தாங்க முடியாத எரிச்சலையும், வலியையும் உண்டாக்கும். இரத்தமும் வெளியாகும்.
🟩ஆண்களுக்கு உடல் உழைப்பால் வியர்வை அதிகம் வெளியேறும் . இதனால் உடலில் நீர்குறைந்து கல் உறுவாகும் . கோடையில் அதிகமாக பாதிக்கப் படுவார்கள்.
இரவு நேரங்களில் அதிக நேரம் உட்கார்ந்து மலசலம் கழிக்காமல் வேலை செய்பவர்களுக்கும் , மிகசூடான இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் குடிதண்ணீர் குடிப்பதற்கான வாய்ப்பு குறைவான இடங்களில் பணிபுரிவோருக்கும் சிறுநீரகக்கல் ஏற்பட வாய்ப்புண்டு
✅சித்தமருத்துவத்தில் இதனை கல்லடைப்பு எனகுறிப்பிட்டு சித்தர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.அதில் யூகிமுனி சித்தர்
உணவு, நீர் முதலியவைகளினால் வளிக்குற்றமும், தீக்குற்றமும் மிகுந்து உடல் நீரைச் சுண்டச் செய்து சிறு நீரிலுள்ள உப்பை நீர்க் குண்டிக்காயில் (kidney) உறையச் செய்து, கீழ் நோக்குங்கால் வன்மையோடிருந்தால் அக்கற்களை எளிதில் சிறு நீருடன் வெளி யேற்றியும், வன்மை குறைந்திருந்தால் அக் கற்களை அவ்வப்போது வெளி யாக்காது, அங்கங்கே சிறுநீர் போகும் வழியில் எங்கேனும் தங்கச் செய்து இந்நோயைப் பிறப்பிக்கும் என்பதுடன் வளி, அழல்,ஐயம்,முக்குற்ற அடிப்படையில் பிரித்து சிகிச்சை முறைகளை வகுத்து தந்துள்ளனர்.வளி, அழல், ஐயம் ஆகிய மூன்றுவகைக் கல்லடைப்பு நோய்கள் தக்க மருந்துகளால் குணமாகு மெனவும் முக்குற்றகல்லடைப்பு நோய் தீராது எனவும் குறிப்பிடுகின்றனர்.
🟦சித்தமருத்துவத்தில் சிறு,பெரு நெருஞ்சில்(Tribulus terrestris )சிறுகண் பீளை(Aerva lanata),மாவிலிங்கம் (Crataeva nurvala-வருணா), தண்ணீர் விட்டான் கிழங்கு,பார்லி, நீர்முள்ளி ,நெருஞ்சில், சுரைக்கொடி,மற்றும்
நண்டுகல், கல்நார், குங்கிலியம், படிகாரம் மூலம் தயாரிக்கப்படும் பற்பங்களை உறியமுறையில் தக்க அனுபானத்தில் கொடுக்க சிறுநீர் கல் நீங்கும். குணமானபின்பு தக்க உணவுமுறைகளை பின்பற்றி தகுந்த மூலிகைமருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது மீண்டும் கல்உற்பத்தி ஆகாமல் பாதுகாக்கலாம்.
🟦கல் பெரிதாக இருந்தால் அவர்களுக்கு நவீன மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
✅தீவிர வலியை உண்டாக்காத கற்களுக்கு உணவுமுறையுடன் கல்கறைக்கும் சிறந்த மருந்துகளை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.கல் வெளியானபின் நல்ல உணவுப்பழக்கத்துடன் , அடிக்கடி தண்ணீர் அருந்தும் பழக்கத்தால் சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் கற்கள் தோன்றாமல் தவிர்த்து வரலாம். தினசரி நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு அதிகரிக்காமல், அதேநேரத்தில் ஒருநாளைக்கு 2லிட்டருக்கு மேல் 3லிட்டர்வரை தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும்.கோடைகாலத்தில் கூடுதலாக பருகலாம். சிறுநீரகசெயலிழப்பினர் மருத்துவரின் ஆலோசனைப்படி அளவுடன் தண்ணீர் பருக வேண்டும்.
ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவார்கள். இது நாளடைவில் சிறுநீரகத்தின் செயல்பாடுகளையும் பாதிக்க செய்யும். அளவோடு இருந்தால் நல்லது.
🟦சிறுநீரகக்கல் குணமான பின்னரும் வரக்கூடிய வாய்ப்பு உண்டு . மேலும் அறுவை சிகிச்சைமுறையில் கல்நீக்கபட்டாலும் , மீண்டும் வர வாய்ப்புள்ளது.அதனால் உணவுமுறையில் மாற்றம் செய்து, போதிய அளவு தண்ணீர் அருந்தினால் வராமல் தடுக்க முடியும்.
🟦 பால் பொருட்கள் - பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
🟦சால்மன் போன்ற மீன்களில்– வைட்டமின் டி, ஒமேகா,மீன் எண்ணெய் உட்கொள்வதால் கால்சியம் உறைந்து கல்லாகமாறுவதை இது தடுத்து விடுகிறது என்ற கருத்தும் உள்ளது.கல் ஏற்பட்டவர்கள் இதனை தேவை இல்லாமல் உட்கொள்ள வேண்டும்.மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
மாமிச புரதம் - சிவப்புநிற இறைச்சியை உட்கொண்டபின் யூரிக் அமிலத்தின் அளவை இரத்தத்தில் அதிகரிக்கிறது, இது கல் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இப்புரதங்கள் உடலில் உள்ள சிட்ரேட்அளவைகுறைந்து சிறுநீரக கற்களை தோன்றிவித்துவிடுகின்றன . அதனால் கோழி கறி, மீன், ஆட்டு இறைச்சி வாரத்தில் ஒரு நாள் குறைவாக்ளவில் எடுத்து கொள்ளலாம். அல்லது தவிர்த்து விடுங்கள்
தக்காளி,(விதை நீக்கப்பட்ட தக்காளியை சேர்த்துக்கொள்ளலாம்.)காலிஃபிளவர்,முட்டைகோஸ்,அத்திப்பழம், சப்போட்டா, திராட்சை ,உலர் பழங்கள், பாதாம்பருப்பு, வாதுமைபருப்பு, முந்திரிப்பருப்பு, பிஸ்தா, வேர்க்கடலை, இனிப்பு பண்டங்கள், வால்நெட் , ஸ்ட்ராபெரி ,பீட்ரூட்,சக்கர வள்ளிக்கிழங்கு, சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, கீரை, பசலைக் கீரை, கடலை பருப்பு , பிளாக் டீ, காஃபி,டார்க் சாக்லேட்டுகள்,ஐஸ்கிரீம்,போன்றவற்றில் அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் சிறுநீரககற்கள் உள்ளவர்கள் தவிர்த்துவிடலாம். அல்லது மிக குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.
உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம் தவிர்க்கலாம்.
மேலும் கருப்பட்டி,சோடா - கோகோ கோலா மற்றும் பெப்சி-கோலா போன்ற குளிர்பானங்களில் செயற்கை சர்க்கரை (பிரக்டோஸ், சுக்ரோஸ்) மற்றும் பாஸ்பேட் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளதால், இது சிறுநீரக கற்களை தோற்றுவிக்கும் . தவிர்த்து விடுங்கள்.
குறிப்பாக அதிக அளவு உப்பு, சர்க்கரை, புரதம், கால்சியம், ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை சிறுநீரகக்கல் ஏற்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, சிட்ரஸ் பழச்சாறு உணவுவகைகள், சிறுநீர் கற்களை வேகமாக கறைக்க கூடியதாகும். இளநீர், வாழைத்தண்டுச் சாறு, பார்லி வேகவைத்த தண்ணீர், கடைந்த நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
✅கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும். முடக்கத்தான் கீரையையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையை(Normal value Urine pH 6.0 to 7.5,) குறைக்கும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும், கல் உருவாவதும் தடுக்கப்படும். சிறுநீரகத்தில் ஒருமுறை கல் தோன்றி விட்டால் , குணமான பின்னரும் எச்சரிக்கையாக உணவுமுறை, தேவயான தண்ணீர் பருகி, வாழ்நாள் முழுவதும் அடிக்கடி சோதித்து, கவனத்துடன் இருந்து வரவேண்டும்.
நன்றி
🟩🟩🟩19-05-23 🟩🟩🟩
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
🟦டாக்டர் இ.இலக்கியன் BAMS
🟦 டாக்டர் ஜெ.ஆர்த்திகா BAMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை(since1953)
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, சென்னையில் டாக்டரை சந்திக்க மேலும் விபரம் பெற பேசவும் அழைக்கவும்.
🟪Ph:9443475684
🟩🟩🟩🧿🧿🧿🟩🟩🟩

Address

Thanjavur

Opening Hours

Monday 10:30am - 8pm
Tuesday 10:30am - 8pm
Wednesday 10:30am - 8pm
Thursday 10:30am - 8pm
Friday 10:30am - 8pm
Saturday 10:30am - 8pm
Sunday 12pm - 2pm

Telephone

+919443475684

Alerts

Be the first to know and let us send you an email when DR.Elamaran Siddha/DR.Elakiyen Ayurveda- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR.Elamaran Siddha/DR.Elakiyen Ayurveda-:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category