Dr Sarayu Gayathri

  • Home
  • Dr Sarayu Gayathri

Dr Sarayu Gayathri Dr.Sarayu Gayathri's official page. A page for motivational and lifestyle videos!

Indian govt has given permission to give driving license to mild degrees of colour blindness from 2020.
12/08/2023

Indian govt has given permission to give driving license to mild degrees of colour blindness from 2020.

https://youtu.be/6m_rGeRnZ1I
02/07/2023

https://youtu.be/6m_rGeRnZ1I

this video gives important information about how to take the best health insurance policy for cataract eye surgery. about how insurance covers premium intrao...

https://youtu.be/vaBgQMn61WoDear friends, here is a short video about macular hole and it's treatment options. It has 96...
24/06/2023

https://youtu.be/vaBgQMn61Wo

Dear friends, here is a short video about macular hole and it's treatment options. It has 96% closure rate and good visual prognosis.

This short video in Tamil explains why is a hole in the eye is formed and the importance of macula of eye. The natural solutions and surgery are explained by...

13/04/2023

Decision making!

Enjoy Life💛!
07/04/2023

Enjoy Life💛!

டவுன் குழந்தை பிறக்காமல் தடுக்கலாமா? நீங்கள் குழந்தை பெறுவதற்கு முன் அவசியம் தெரிந்து கொள்ள  வேண்டியது என்ன?எண் 21-ல 3!ம...
22/03/2023

டவுன் குழந்தை பிறக்காமல் தடுக்கலாமா? நீங்கள் குழந்தை பெறுவதற்கு முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

எண் 21-ல 3!

மரபணுக்கள் குரோமோசோம் 46 என்று அனைவருக்கும் தெரியும். அவை 23 ஜோடிகளாக இருக்கின்றன. 21 வது ஜோடியில் அழையா விருந்தாளியாக இன்னும் ஒரு மரபணு சேர்ந்தால், 700 குழந்தைகளில் ஒருவர் சிறப்பு குழந்தையாக( டவுன் சிண்ட்ரோம் குழந்தை) பிறக்கிறார்கள். ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் சேரும்போது மரபணுக்களின் பரிமாற்றம் நிகழ்கிறது. அப்பாவிலிருந்தும் பாதியும் அம்மாவிலிருந்து மீதியும் பெற்று குழந்தை உருவாகிறது. இந்த மரபணு ஜோடி சேர்வதில் ஏற்படும் குழப்பமே Down Syndrome.

டவுன் குழந்தைகள் சராசரியாக 60 ஆண்டுகள் இப்பொழுது வாழ முடிந்தாலும், 10 வயது குழந்தையின் அறிவும் தெளிவுமே அவர்களுக்கு இருக்கும். அதாவது இவர்களின் சராசரி IQ என்பது 50. கருவிலேயே உருவாவதால் பிறந்த பிறகு குணப் படுத்த இயலாது. ஆனால் பலருக்கும் நல்ல கல்வி, தன்னிறைவாக வேலை பார்த்து வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. இசை, சிற்பங்கள், ஓவியம், நாட்டியம் , அரசியல் என்று கலக்குகிறார்கள்.
முன்னெச்சரிக்கையாக கருத்தில் கொள்ள வேண்டியவை:

🔴கருத்தரித்த பின், டவுன் இல்லையென்று உறுதிப்படுத்துவது எவ்வாறு? கருத்தரிக்கும் முன்பே கண்டறிவது எவ்வாறு?

10 முதல் 20 வாரங்கள் கருவுற்ற தாயின் ரத்தத்தில் ஹார்மோன்கள் ஆன ஆல்ஃபா ஃபீட்டோ புரோட்டின், எஸ்ட்ரீல், ஹெச் சி ஜி, இன்ஹிபின் A, PAPP- A (alpha feto Protein, unconjugated estriol, HCG,inhibin A, PAPP-A)ஆகியவற்றின் அளவுகள் மூலம் 90- 95% கருவிலே கண்டுபிடித்து, கருவை தொடர்வதை பற்றிய முடிவுகளை தாய் தந்தையர் சேர்ந்தெடுக்கலாம்.அல்ட்ரா சவுண்ட் எனும் ஸ்கேன் மூலமாக குழந்தையின் கழுத்து பகுதி( Nuchal translucency) பார்த்து டவுன் சிண்ட்ரோம் கண்டுபிடிக்கலாம். கருத்தரிக்கும் முன்பே மரபணு பரிசோதனைகள் மூலம் 96 to 100% நிச்சயமாக கண்டுபிடிக்கலாம்.உறுதிப்படுத்தும் பரிசோதனைகளாக amniocentesis, CVS sampling ஆகியவை உள்ளன. இவை கருவின் சில செல்களை எடுத்து பரிசோதனை செய்பவை ஆகும்.

🔴யாருக்கெல்லாம் டவுன்ஸ் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம்?

தாயின் கருமுட்டை சத்து குறைவு, அதிக வயதுடைய முட்டை என்றால் டவுன் சிண்ட்ரோம் வாய்ப்பு அதிகம்.25 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாயை விட, 35 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு வாய்ப்பு அதிகம்.
25 வயதில் முதல் குழந்தையை பெற்றாலும், அடுத்த குழந்தைகளை 30 வயதில் பெறும் தாய்களுக்கும் வாய்ப்பு அதிகம்.நடைமுறையில் 30 வயதில் பெண்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் குழந்தைகளை பெறுவதால், அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.ஏற்கனவே முதல் குழந்தைக்கு டவுன் இருந்தால் இரண்டாம் குழந்தைக்கு வாய்ப்பு அதிகம்.ட்ரான்ஸ்-லொகேஷன்( translocation) என்னும் மரபணு மாற்றத்தை ஏற்கனவே கொண்டிருக்கும் தாய்க்கு வாய்ப்பு அதிகம். கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய்,அதிக உடல் எடை ,தன் எதிர்ப்பு நோய்கள் கொண்ட தாய்மார்களுக்கு வாய்ப்பு அதிகம்.

இந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு நிலையிலும் சிறப்பான தனி கவனம், சிறப்புக் கல்வி மற்றும் சிறப்பு மருத்துவர் உதவிகள் தேவைப்படுவதால் screening பரிசோதனைகள் செய்வது அவசியம்.

இந்த குழந்தைகள் பார்ப்பதற்கு சந்தோஷமாகவே இருப்பார்கள்.

🔴குழந்தை பிறந்த ஆறு மாதத்தில், காது கேட்கும் திறன், பார்வை திறன், தைராய்டு ஹார்மோன்கள் ஆகியவற்றை பரிசோதித்து, ஒவ்வொரு வருடமும் தொடர வேண்டும். இரண்டு வயதில் பற்களையும், வயிறு குடல் பகுதிகளையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
3 இருந்து 5வயதுக்குள், கழுத்துப் பகுதி, மற்றும் அதனால் இரவில் வரும் குறட்டை, ஆக்சிசன் குறைபாடு பற்றி பரிசோதனை செய்ய வேண்டும்.

இதைத் தவிர இதய குறைபாடு, மூளை மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

🔴பாதிக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மாறு கண், கண்புரை, கண்ணாடி அணியும் வாய்ப்பு உள்ளது.

இவர்கள் பிறப்பதை தவிர்க்கலாம். பிறந்துவிட்டால் தற்போதைய அறிவியல் அழகாக வாழ்க்கை அமைக்கும் வழிகளை வழங்குகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் வாழவும் கற்கவும் செயலாற்றவும் சமத்துவமான சந்தர்ப்பங்களை அமைத்து தர " நம்மோடு அவர்கள், ஆனால் நமக்கு அவர்கள் தாழ்வில்லை" என்ற புரிதலோடு உலக டவுன் சிண்ட்ரோம் நாள் 21.03.2023 கொண்டாடப்பட்டது.
21-இல் 3 என்று குறிப்பதாக!

Dr. சரயு காயத்திரி,
கண் மருத்துவர்,
திருவண்ணாமலை.

படத்தில்: இசை கலைஞர், சுஜித் தேசாய்.

16/03/2023

Please take care!

அன்று முகாமில் முதல் நபராக வந்திருந்தாலும், பெரியவர்களுக்கெல்லாம் வழிவிட்டு பொறுமையாக வந்து சந்தித்தார் ஒரு அப்பா,அவர் ஆ...
17/01/2023

அன்று முகாமில் முதல் நபராக வந்திருந்தாலும், பெரியவர்களுக்கெல்லாம் வழிவிட்டு பொறுமையாக வந்து சந்தித்தார் ஒரு அப்பா,அவர் ஆறு வயது மகனுக்காக. தூரத்திலிருந்து தெரிந்தது அந்த குழந்தையின் இடது கண். இருந்தாலும் அப்படி இருக்க வேண்டாம் என்றே நினைத்தேன். அருகில் வந்ததும் குழந்தையின் இடது செயற்கை கண்ணை உறுதிப்படுத்தியதும்,இப்போது குழந்தை உயிரோட இருப்பது முக்கியமானதால் மகிழ்ச்சி அடைந்தேன்.குழந்தைக்கு முன்பு இருந்தது ரெட்டினா பிளாஸ்டோமா Retinoblastoma என்ற குழந்தைகளுக்கு வரும் கண் புற்றுநோய்.
ரெட்டினோ பிளாஸ்டோமா புரதம் RB protein நமது எல்லோரின் உடலிலும் நன்கு இயங்க வேண்டும். அதன் முக்கிய பணி புற்றுநோய் வரவிடாமல் காப்பது. புற்றுநோயாக உருமாறும் செல்கள் நீக்க படும்.இந்த புரதம், 2 மரபணு கூறுகள் 2 gene alleles மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு செயல்படுகிறது.இந்த மரபணு கூறுகளில் குறைபாடு ஏற்பட்டால், சாதாரணமான செல்கள் கூட புற்றுநோய் செல்லாக உரு மாறும்.

Retinoblastoma

1. பரம்பரையாக வருவது~=40 சதவீதம்.
2. தானாக வருவது~= 60 சதவீதம்.

பரம்பரையில் சிலருக்கு இரண்டில், ஒரு மரபணு கூறு இருப்பதில்லை. அப்படிப்பட்ட குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போது சிலர் சமயம் இரண்டாம் மரபணு கூறும் செயல்படாமல் போகும்போது பரம்பரையில் வரும் ரெடினோ பிளாஸ்டோமா புற்றுநோய் வருகிறது. பரம்பரை நோய் இரண்டு கண்களையும் தாக்கும். Rb புரதம் முற்றிலும் இல்லாததால் மற்ற புற்று நோய்களான தசையில் வரும் சார்க்கோமா (sarcoma),எலும்பில் வரும் ஆஸ்ட்யோ சார்க்கோமா (osteo sarcoma),மூளையில் வரும் பினேலோ பிளாஸ்டோமா (pinealo blastoma),தோலில் வரும் மெலனோமா (melanoma) போன்ற நோய்களும் தாக்கக்கூடும்.

எதிர்பார்க்காமல் தானாக தோன்றும் ரெட்டினா பிளாஸ்டோமாவில் ஒரு மரபணு கூறு செயல்படாது, மற்றொன்று செயல்படும். இதனால் குழந்தையின் ஒரு கண்ணை மட்டுமே இந்த புற்றுநோய் தாக்கலாம். அல்லது பாதிப்பு குறைவாக இருக்கலாம். மற்ற புற்று நோய்கள் வருவதில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் குழந்தைகளுக்கு, ஐந்து குழந்தைகளுக்கு இந்த புற்றுநோய் தாக்குகிறது.பிறந்த குழந்தைக்கு அல்லது வளரும் குழந்தைக்கு இந்த புற்றுநோய் இருப்பதை எவ்வாறு கண்டறியலாம்?
1. இன்றைய அல்லது இதற்கு முந்தைய தலைமுறைகளோ யாருக்கேனும் இப்படிப்பட்ட கண் வீங்குதல்,புற்றுநோய் கட்டி இருந்த வரலாறு இருந்தால் அதிகம் கவனம் கொள்வது அவசியம். இதை மறைக்காமல்,நம் குழந்தைக்கு வராது என்று கண்மூடித்தனமான நம்பிக்கை கொள்ளாமல், மரபியல் பரிசோதனை செய்து கொண்டு பிறகு குழந்தை பெறுவது பெற்றோரின் கடமையாகும்.
2. இதன் அறிகுறிகள் கண் வீங்குதல், கண் ரத்த நிறத்தில் பிதுங்கி இருப்பது போன்ற தோற்றம் (proptosis 60%), கண்ணின் கருவிழிக்குள் வெள்ளை நிறம் (leuckocoria 30%), அடிக்கடி கண் சிவத்தல் uveitis,கண்ணில் நீர் வடிதல், மாறு கண் (squint)போன்ற தோற்றம்.
3. மூன்று வகைகளில் பரவக்கூடும், கண்ணை விட்டு தாண்டி வெளியில் வளரும் வகையில் இருந்தால் எளிதில் கண்டுபிடிக்க விடலாம்(Exophytic). கண்ணுக்குள் இருக்கும் சிறிய அளவில் இருந்தால் கண்டறிவது கடினம்(Endo phytic), கண்ணின் பாகங்கள் போலவே சில நேரம் புற்றுநோயும் வளர்ந்து வரும்(infiltrative). எனவே கண்ணின் முன் பகுதி,பின்பகுதி போன்றவற்றை கண் மருத்துவரிடம் சென்று தெளிவாக ஆராய வேண்டும்.
4. முழு கண் பரிசோதனை செய்யும்போது இந்த புற்றுநோய் இருக்கும் சந்தேகம் இருந்தால், கண் மற்றும் மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
5. புற்றுநோய் கண்ணில் மட்டும் இருக்கிறதா? கண்ணைச் சுற்றிய தசைகள் எலும்புகள் போன்றவற்றில் ஊடுருவி இருக்கிறதா? கண்ணுக்கும் மூளைக்கும் நடுவில் இருக்கும் இணைப்பு நரம்பு மூலம் மூளைக்கும் பரவி இருக்கிறதா? ரத்தத்தின் மூலம் உடலில் வேறு எங்கும் பரவி இருக்கிறதா? என்ற உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் செய்யப்படும். Metastasis work up.

தீவிரமான சிகிச்சை தேவைப்படும் அதிவேகமாக, அதிக தீரத்துடன் பரவக்கூடிய புற்றுநோய் ஆதலால் முக்கியமாக சிகிச்சை அளிப்பதில் தாமதம் அறவே கூடாது.இந்த புற்றுநோயை கண்டறிவதில் தாமதம் நிகழ்ந்தாலும், கண்டறிந்த பின் சிகிச்சை அளிப்பதில் தாமதம் இருந்தாலும் mortality rate எனப்படும் புற்றுநோய் வீரியத்தால் வரும் இறப்பு 100 சதவிதமாக இருக்கிறது. சிகிச்சை இவ்வாறு இருக்கும். கீமோதெரபி கொடுத்து அதன் வேகத்தை மட்டுப்படுத்தி, அறுவை சிகிச்சை செய்து கட்டிகளை அகற்றி, கதிரியக்க சிகிச்சை மூலம் அதி புத்திசாலியான புற்றுநோய் செல்கள் விடுபட்டிருந்தால் அவற்றை அழித்து சுத்தம் படுத்தி,பின்பு மீண்டும் கீமோதெரபி என மும்முனை சிகிச்சைக் கொடுத்து முற்றிலும் ஒழிக்க வேண்டிய அதிதீவிரன் இவன்.

நம் இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் குழந்தைகளுக்கும் ஐந்து குழந்தைகள் இந்த புற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த புற்று இருக்கிறது என்று தெரிந்தவுடன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் முன்பே சிகிச்சையை விட்டு வெளியேறுபவர்கள் பெரும்பான்மையர். குழந்தையின் தாத்தா பாட்டிகள் அப்பா அம்மா, புற்று என்றே மறுப்பதால் வழி மாறி போவோர் பலர். சிகிச்சைக்கான வழி தெரியாததால், வறுமையால் வெளியேறும் பலர். ஒரு கண்ணை நீக்கினாலும், உயிர் முக்கியம் என்பதை மிகத் தாமதமாக புரிந்து கொண்டு திரும்பி வந்து, இன்னும் அதிக சிகிச்சை படும் அளவுக்கு, முற்றி விட்டு வருபவர் பலர். எந்த சிகிச்சையும் அளிக்காமல் புற்றுப் பரவி,காரணமின்றி குழந்தையை இழந்தோர் பலர். எல்லா சிகிச்சையும் கொடுத்தும் காப்பாற்ற முடியாத சில குழந்தைகள்.அதனால்தான் சொல்கிறேன் இந்தக் குழந்தையைப் பார்த்து,அவன் ரெண்டு வயதில் இதிலிருந்து மீண்டு, ஆறு வயது சிறுவனாக நலமுடன் வாழ்வதை கண்டு மகிழ்ச்சி கொண்டேன். அவனது வலது கண்ணில் இருந்த தூசியை நீக்கி மருந்து கொடுத்து அனுப்பினோம். போகும்போது அவர் தந்தை ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஒரு தகப்பனாக எனக்கு குழந்தையின் செயற்கை கண்ணை சுத்தப்படுத்துவதில் மிகுந்த வலி இருக்கிறது. மாதாந்திரம் தங்களிடம் வந்து சுத்தம் செய்து கொள்கிறேன். செய்து தருவீர்களா என்றார்.சுத்தம் செய்யும் முன் ஒரு பென்சிலும்,சுத்தம் செய்த பிறகு ஒரு ஒரு பென்சிலும் வாங்கி சென்றான் இந்த மாதம். சிறுவனை நெஞ்சில் சுமக்கும் தந்தைக்காக, சிறு பாரம் நானும் சுமக்கிறேன்.மௌனமாய் நெஞ்சம் கனக்கும் நாட்கள் அவை. மௌனங்களை சிறு புன்னகைகளால் நிரப்பி கொள்கிறோம் நாங்கள் மூவரும்.

Dr சரயு காயத்திரி,
கண் மருத்துவர்,
திருவண்ணாமலை.

11/01/2023

இன்றைக்கு கிளினிக்கில் :

அவர்: டாக்டர் இன்னும் உங்களுக்கு மட்டும் கண் வலி வரவில்லையா?

நான்: Touchwood. இன்னும் வரவில்லை. வராது என்றே நம்புகிறேன்.

அவர்: எனக்கு 3 தடவை வந்துருக்கு.உங்களுக்கு மட்டும் எப்படி?

நான்: உங்களுக்கு எல்லாம் மருந்து எழுதி தரணும்ல அதான்,எனக்கு வரல.நான் சிறுமியாக இருக்கும் போது, வேலூரில் காட்பாடியில் Dr. வாசன் அவர்கள், காது மூக்கு தொண்டை நிபுணரிடம் அடிக்கடி கூட்டி செல்லப்படுவேன். அவர் எப்பொழுதும் பச்சை நிறத்தில் apron எனும் நீள அங்கி அணிந்திருப்பார். ஒரு நோயரை தொட்டு பார்த்த பிறகு, இன்னொரு நோயருக்கு தொற்று பரவக்கூடாது என்று ஒரு நிமிடம் முழுவதுமாக கைகளை கழுவுவார். சில நேரங்களில் apron கூட மாற்றுவார். இது மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
மருத்துவம் சேர்ந்தது முதலே முகத்தை தொடுவதை விட்டு விட்டேன். இதனால் பெரும்பாலான தொற்று நோய்களிலிருந்து தப்பித்து விடுவேன். அதற்கு மேல் முக கவசம். கை சுத்தம் இவற்றை எப்பொழுதும் பேணுவேன். இப்போது கிளினிக்கில் சர்ஃபேஸ் கிளீனிங் என்னும் சுத்தப்படுத்துதலை தொடர்ந்து செய்கிறோம்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது கைகளை சோப்பு போட்டு கழுவுவது. இது பெரும்பாலான கண் வலி தொற்றுகளை தவிர்த்து விடும். கண்களை சுத்தப்படுத்த டிஷ்யூ பேப்பர் சிறந்ததாக இருக்கிறது. கைக்குட்டை டவல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையை விட்டு தூரம் வைத்திருப்பது, வயதானவர்களையும் குழந்தைகளையும் இரண்டு மூன்று நாட்களுக்கு தூரம் வைத்திருப்பது போன்றவை கண் வலி பரவலை தவிர்க்கலாம்.

ஒரு குழந்தைக்கு எப்படி வந்தது என்று கேட்கும்போது. கண் வலி வந்த ஒரு குழந்தைக்கு அவர்கள் வீட்டில் கண்ணாடி மாட்டி பள்ளிக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்தக் குழந்தை அந்த கண்ணாடியை வாங்கி மாட்டி விளையாடியிருக்கிறது. இந்த குழந்தைக்கும் இப்போது கண் வலிக்கு வந்திருந்தார்கள். எனவே குழந்தைகளுக்கு விடுமுறை கிடைத்தால் வீட்டிலேயே பராமரிக்கலாம்.கண்ணாடிகளை மாற்றி பயன்படுத்த வேண்டாம். அதேபோல் கண் மருந்துகளையும் மாற்றி பயன்படுத்த வேண்டாம்.இந்த நடைமுறை பழக்க வழக்கங்களை உருவாக்கிக் கொண்டால், கண்வலியிலிருந்து தப்பிக்கலாம். வந்தாலும் சீக்கிரம் மீண்டு விடலாம்.

Dr. சரயு காயத்திரி,
கண் மருத்துவர்,
திருவண்ணாமலை.

நேரடி ஒளிப்பரப்பு போல தொடர்ந்து நாம் காட்சிகளை பார்ப்பதைப் பற்றி வியந்ததுண்டா?இந்த லைவ் ரெக்கார்டிங் சிஸ்டம் போல செயல்பட...
11/01/2023

நேரடி ஒளிப்பரப்பு போல தொடர்ந்து நாம் காட்சிகளை பார்ப்பதைப் பற்றி வியந்ததுண்டா?
இந்த லைவ் ரெக்கார்டிங் சிஸ்டம் போல செயல்படும் கண்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முதலில் கண்ணாடி போல தெளிவான ஒளியை உள்ளே கடத்தும் இரண்டு முக்கியமானவை
1.கருவிழி 2.லென்ஸ்

1.கருவிழி பளிங்கு போல இருக்கும். இங்கு ரத்தம் பாய்வதில்லை.பிறகு கருவிழிக்கு ஏது ஊட்டச்சத்து? காற்றில் இருந்து எடுத்துக் கொள்கிறது. இந்தக் காற்றை தடுக்கும் வழியில் குறிப்பிட்ட அளவை தாண்டி,நீண்ட நேரம் காண்டாக்ட் லென்ஸ் அணிவது ஆபத்தாகும். இந்தக் கருவிழி இவ்வளவு தெளிவாக இருப்பதற்கு காரணம் தண்ணீர் மற்றும் கொலாஜன் எனும் புரதம். கருவிழியை செதுக்குவது மூலம், கண் பவரை மாற்றுவது தான் LASEK சிகிச்சை.

2.லென்ஸ். இது நாம் பிறக்கும் போது கண்ணாடி போல் தெளிவுடன் இருக்கும். குழந்தை பருவத்தில் நம் உடல், எல்லா வகையான செல்களையும் எதிர்ப்பு சக்தி மண்டலத்திற்கு ஊட்டி விடும். அப்பொழுது இதுவெல்லாம் நம் ஆட்கள் அதாவது நம் உடலின் பாகங்கள். இதுவெல்லாம் தீங்கிழைக்கும் பாக்டீரியா வைரஸ் என்று உடல் கற்றுக் கொள்ளும். இந்தக் கற்றுக் கொள்ளுதலை சரியாக செய்யாதபோது வருவது தான் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் Autoimmune diseases. அப்பொழுது கூட வெளி வராத, ஒரு எலாஸ்டிக் பைக்குள் மூடப்பட்டது தான் லென்ஸ். தண்ணீர் மற்றும் புரதத்தால் செய்தது. புரதம் பழையதாகும் போது கண் புரை தோன்றுகிறது. கண் புரையை நீக்கி, அதே எலாஸ்டிக் பையில் செயற்கை லென்சை-intra ocular lens பொருத்துவது தான் கண்புரை அறுவை சிகிச்சை.

இந்த லென்ஸ்க்கும் ரத்த ஓட்டம் கிடையாது. லென்ஸ் தன் முன்னே இருக்கும் Aqueous humour என்ற தண்ணீரில் இருந்து குளுக்கோஸை எடுத்து பயன்படுத்திக் கொள்கிறது. இதே நீர் சுழற்சி முறையில் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுமாயின் அது குளுக்கோமா என்னும் கண்ணீர் அழுத்த நோய்.

கண்ணுக்கு தேவையான சத்துக்களான வைட்டமின் ஏ- மஞ்சள் நிற காய்கனிகளான கேரட்,மஞ்சள் பூசணிக்காய், பப்பாளி, மாம்பழம்.
அதிக அளவில் மண்ணீரல் கல்லீரல் இறைச்சி உணவில் கிடைக்கிறது.
ஒமேகா பேட்டி ஆசிட் என்ற DHA மீன் இறைச்சியில் அதிக அளவில் கிடைக்கிறது.ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்ற லூட்டின், அஸ்ட சாந்தின்,சியா சாந்தின் (lutien, asta xanthine,zea xanthine) போன்ற நுண் சத்துக்கள் பச்சை காய்கறிகளில், கீரைகளில், பழங்களில் கிடைக்கிறது.

இதையெல்லாம் தவிர்த்து கண்களை மூடி கண் இமைகளின் மேல் உணவுப் பொருட்களை வைப்பதால், கண்ணுக்குள் சத்துக்கள் சென்று சேர வாய்ப்பில்லை. கண்கள் முழுக்க முழுக்க தண்ணீரால் ஆனது என்ற கூற்றிலும் உண்மை இல்லை.

நான் சொன்ன நல்ல கொழுப்புகள், மிகச் சிறந்த புரதம் ஆகியவை முட்டையில் உள்ளன. தினமும் ஒரு முட்டையை குழந்தைகளும், ஒன்று அல்லது இரண்டு முட்டையை பெரியவர்களும் உணவில் சேர்த்து உண்பது நிச்சயம் உங்கள் கண்களுக்கு ஒளி ஊட்டும் என்பது திண்ணம்.

Dr. சரயு காயத்திரி,
கண் மருத்துவர்,
திருவண்ணாமலை.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sarayu Gayathri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share