01/04/2019
குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் வேங்கை மூலிகை அஞ்சனம் செய்முறை
நமது தமிழகத்தில் பண்டைய காலம் தொட்டு ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு. “கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது” என்பர். ஒருவர் நம் மீது கல்லை விட்டு எறிந்தால் கூட அந்த வலியையும் வேதனையையும் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் கண்ணடி என்ற கண் திருஷ்டியினால் ஏற்படும் விளைவுகள் நாம் தாங்கிக்கொள்ள முடியாத அளவு பல்வேறு துன்பங்களும் வேதனைகளும் கொடுக்கக்கூடியது என்பதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் இது போன்ற பழமொழிகளை கூறியுள்ளனர்.மேலும் இது போன்ற தீய விளைவுகளில் இருந்து காத்துக்கொள்வதற்கான உபாயங்களையும் நம் சித்தர் பெருமக்கள் தெளிவாக வகுத்துள்ளனர்.
சிறு குழந்தைகள் சரிவர பால் அருந்தாது,உணவு உண்ணாது,திடீர் திடீர் என வீரிட்டு அழும்,சரியாக தூங்காது.உடல் மெலியும். இதுபோல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் மார்பில் பால் கட்டிவிடும் அல்லது பால் சுரக்காது.மேலும் பசியின்மை,அசதி, சோர்வு ஏற்படும்.இவைகள் அனைத்தும் கண் திருஷ்டி, கண்ணேறு, காற்று, கருப்பு, பூதப்பிரேத சேஷ்ட்டைகளால் ஏற்படுவதாகும். இவைகளை விரட்டும் அற்புத சக்தி வாய்ந்த அஞ்சனம் (மை) தான் உதிரவேங்கை சாந்து என்ற அஞ்சனம் ஆகும்.இதன் செய்முறையை இப்போது பார்ப்போம்.
https://siddharprapanjam.blogspot.com/2019/04/thirushti-anjanam.html