சித்தர் பொக்கிஷம்

  • Home
  • சித்தர் பொக்கிஷம்

சித்தர் பொக்கிஷம் sarakalai, panjapatchi, rasamani, rasavatham, muppu, vasiyam, manthreegam, haerbal, kayakarpam, varmakkalai, mayajalam, siththarpokkisam,

யோகம்,ஞானம்,இரசவாதம்,வைத்தியம்,சோதிடம்,
மந்திரம்,சரகலை,பஞ்சபட்சி,முப்பு,காயகற்பம்,வர்மம்,

குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் வேங்கை மூலிகை அஞ்சனம் செய்முறை நமது தமிழகத்தில் பண்டைய காலம் தொட்டு ஒரு பழமொழ...
01/04/2019

குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் வேங்கை மூலிகை அஞ்சனம் செய்முறை

நமது தமிழகத்தில் பண்டைய காலம் தொட்டு ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு. “கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது” என்பர். ஒருவர் நம் மீது கல்லை விட்டு எறிந்தால் கூட அந்த வலியையும் வேதனையையும் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் கண்ணடி என்ற கண் திருஷ்டியினால் ஏற்படும் விளைவுகள் நாம் தாங்கிக்கொள்ள முடியாத அளவு பல்வேறு துன்பங்களும் வேதனைகளும் கொடுக்கக்கூடியது என்பதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் இது போன்ற பழமொழிகளை கூறியுள்ளனர்.மேலும் இது போன்ற தீய விளைவுகளில் இருந்து காத்துக்கொள்வதற்கான உபாயங்களையும் நம் சித்தர் பெருமக்கள் தெளிவாக வகுத்துள்ளனர்.
சிறு குழந்தைகள் சரிவர பால் அருந்தாது,உணவு உண்ணாது,திடீர் திடீர் என வீரிட்டு அழும்,சரியாக தூங்காது.உடல் மெலியும். இதுபோல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் மார்பில் பால் கட்டிவிடும் அல்லது பால் சுரக்காது.மேலும் பசியின்மை,அசதி, சோர்வு ஏற்படும்.இவைகள் அனைத்தும் கண் திருஷ்டி, கண்ணேறு, காற்று, கருப்பு, பூதப்பிரேத சேஷ்ட்டைகளால் ஏற்படுவதாகும். இவைகளை விரட்டும் அற்புத சக்தி வாய்ந்த அஞ்சனம் (மை) தான் உதிரவேங்கை சாந்து என்ற அஞ்சனம் ஆகும்.இதன் செய்முறையை இப்போது பார்ப்போம்.

https://siddharprapanjam.blogspot.com/2019/04/thirushti-anjanam.html

இனிய நண்பர்களே !வேந்தர் டிவி, மூன்றாவது கண் அமானுஷ்ய நிகழ்ச்சியில் இதுவரை எமது நான்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது. அ...
01/08/2015

இனிய நண்பர்களே !

வேந்தர் டிவி, மூன்றாவது கண் அமானுஷ்ய நிகழ்ச்சியில் இதுவரை எமது நான்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது. அதன் வீடியோ பதிவுகள் முழுமையாக மிகவும் அற்புதமான பொலிவுடன் தற்போது யூடியூபில் [ Youtube ] வெளியாகியுள்ளது.

அதன் இணைப்புகள் Links :

1, இறைவன் சிவன் தவம் செய்த குகை மற்றும் பூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு யாகம்.[சுருளிமலை அதிசயம் ]
Link : https://youtu.be/keF4VBHqJ4A…

2, முனிவர்கள் சாபமிட பயன்படுத்திய உதகநீர் மற்றும் இலைகள், மரம், பொம்மைகள் கல்லாக மாறிய நேரடி காட்சிகள்.
Link : https://youtu.be/6WKt0VFunr4

3, மனித உடல் குண்டலினி சக்கரங்களை இயக்க ஒரு பிரத்யேக கட்டிடம் பொன்மலை பரதேசி சுவாமிகளின் கண்டுபிடிப்பு.
Link : https://www.youtube.com/watch?v=Mo_tZoPblDQ

4, உடலை விட்டு சூட்சும உடல் பயணம் செய்யும் பரகாய பிரவேசம் செய்யும் பிரத்யேக அறை முதல்முறையாக உலகின் பார்வைக்கு.
Link : https://www.youtube.com/watch?v=5JQsJK1eVls

மேற்கண்ட இணைப்புகளில் சென்று காணலாம்.

நன்றி !
இமயகிரி சித்தர்
சித்தர் பிரபஞ்சம் - இணையதளம்
www.siddharprapanjam.org
www.siddharprapanjam.blogspot.in

இனிய நண்பர்களே வணக்கம் !வேந்தர் தொலைக்காட்சியில்,மூன்றாவது கண் நிகழ்ச்சியில் 18/02/2015, ம் தேதி புதன் கிழமையன்று இரவு 9...
17/02/2015

இனிய நண்பர்களே வணக்கம் !

வேந்தர் தொலைக்காட்சியில்,மூன்றாவது கண் நிகழ்ச்சியில் 18/02/2015, ம் தேதி புதன் கிழமையன்று இரவு 9,30 மணிக்கு எமது விளக்க உரையுடன் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

* மனித உடல் தெய்வீக சக்கரங்களை இயக்க ஒரு கட்டிடம். !
* பொன்மலை பரதேசி சுவாமியின் கண்டுபிடிப்பு !!
* முதன் முறையாக வெளியுலகத்துக்கு வரும் சித்த இரகசியம் !!!
by Anish kumar

மேற்கண்ட விபரங்களுடன் வெளிவர உள்ளது.

அஷ்டமா சித்திகளைப் பெறுவதற்கு சித்தர்கள் கையாண்ட உயர்நிலை யோகக் கலையான குண்டலினி யோகத்தின் உண்மை இரகசியங்களும்,முத்திரைகள்,வாசியோகம்,மந்திரங்கள் பற்றிய செயல்முறை விளக்கங்களும்,மனித உடலில் தெய்வீக சக்கரங்களை இயக்குவதற்குத் தேவையான கட்டிட அமைப்பின் இரகசியங்கள், அரிய மூலிகை ஓவியங்களுடன், 200,வருடங்க ளுக்குப் பிறகு முதன் முறையாக நேரடிக் காட்சிகளாக ஒளிபரப்பாகின்றது. காணத்தவறாதீர்கள்.....

குறிப்பு : இந் நிகழ்ச்சி வேந்தர் TV ல் எமது மூன்றாவது நிகழ்ச்சியாகும்.

நன்றி !
மெய்திரு,இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம்
சிவராம் நகர், திருவானைக்கோவில் - P.O
திருச்சி - 620006
செல் : 9865430235 - 9095590855
www.siddharprapanjam.org

சனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharamஇறைவனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான் சனி ஈஸ்வ...
23/12/2014

சனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam

இறைவனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான் சனி ஈஸ்வர பட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார். பனிரென்று ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமசனி போன்ற பாதிப்புஇருந்துகொண்டேஇருக்கும்.

இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி, பண முடக்கம், வம்பு, சண்டை, விரக்தி, தொழில் முன்னேற்றமின்மை எதிர் காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிருப்பார்கள்.

சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று நவகிரங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை அபிஷேகம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகள் வகுத்துள்ளனர்.

http://siddharprapanjam.blogspot.in/2014/12/sani-dhosham-pariharam.html

சித்தர் கலைகள் சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், முப்பு, வர்மக்கலை, காயகற்பம், வாசியோகம், வசியம், விளக்கம்.

பித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் -  Gallstone பித்தப்பை கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள்பித்தப்பை கற்கள் ஏன் ஏற்...
27/11/2014

பித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone

பித்தப்பை கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள்

பித்தப்பை கற்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றி துல்லியமாகக் கூற முடியாத போதும் யார் யாருக்கு வரக் கூடும் என்பதை ஆய்வுகள் சில காரணங்களைத் தெரியப்படுத்துகின்றன.

பொதுவாக ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகப் பாதிப்படைகின் றார்கள். வயதில் மூத்தவர்கள் அதாவது 60 வயதைத் தாண்டியவர் களில் அதிகம் ஏற்படுகிறது என சொல்லப்பட்ட போதும் இளம் வயதினரிடையேயும் தோன்றலாம்.

ஒருவரது பித்த நீரில் கொலஸ்டரோல் அளவானது வழமையை விட அதிகம் இருந்தால் பித்தக் கற்கள் தோன்றலாம். பொதுவாக ஈரலானது நமது குருதியில் உள்ள கொலஸ்டரோலை உறிஞ்சி பித்த நீர் ஊடாக வெளியேற்று கிறது. அவ்வாறு பித்தத்தில் கலக்கும் கொலஸ்டரோ லின் அளவு வழமை போலிருந்தால் அது பித்த நீரில் கரைந்து சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் அதன் செறிவு அதிகமாக இருந்தால் கட்டிபட்டு கற்களாக மாறுகிறது.

உணவு முறையைப் பொறுத்த வரையில் நார்ப்பொருள் குறைந்த, கொழும்பும் கொலஸ்டரோலும் அதிகமுள்ள உணவு வகைகளை உண்பவர்களிடையே தோன்றுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

http://siddharprapanjam.blogspot.in/2014/11/gallstone-cure.html

சித்தர் கலைகள் சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், முப்பு, வர்மக்கலை, காயகற்பம், வாசியோகம், வசியம், விளக்கம்.

விநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secretவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டா...
08/04/2014

விநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secret

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

இது ஔவையார் அருளிய விநாயகர் துதிப் பாடல் ஆகும்.இப் பாடல் வரிகளை சாதரணமாய் காணும் போது விநாயகப் பெருமானை தினமும் துதித்து,அவர் பாதம் சரணடைபவர்க்கு நல்ல வாக்கு வன்மையும்,திடமான மனோ பலமும், மகா லட்சுமி கடாட்சமும், உடல் பலமும் கிட்டும் என்ற பொருள் விளக்கம் தோன்றும் .

ஆனால் உண்மை விளக்கம் அதுவல்ல,இப் பாடலை வடித்த ஔவையார் நரை,திரை,மூப்பு என்ற மூன்றும் உடலில் தோன்ற விடாமல் காக்கும் காயகல்ப மருந்து முறை இரகசியத்தை சூட்சுமமாய் வடித்துள்ளார்.

மேலும் வாசிக்க இணைப்பை கிளிக் செய்யவும்

http://siddharprapanjam.blogspot.in/2014/04/vinayagar-song-kayakalpa-secret.htm

சித்தர் கலைகள் சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், முப்பு, வர்மக்கலை, காயகற்பம், வாசியோகம், வசியம், விளக்கம்.

சித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு - Siddha Medicineசித்தர் பிரபஞ்சம் இணையதள வலைப்பூவின் 1...
19/03/2014

சித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு - Siddha Medicine

சித்தர் பிரபஞ்சம் இணையதள வலைப்பூவின் 100,வது பதிவு இது.

இதில் பாரம்பரிய சித்த மருத்துவர்களின் கைகண்ட அனுபவ மருத்துவ முறை இரகசியங்களை தொகுத்து ஜோசப் கல்லூரி யின் சார்பாக மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் என்ற நூல் வெளியிடப்பட்டது.இந்நூலில் ஏராளமான அரிய சித்த மருத்துவ செய்முறைகள் அடங்கியுள்ளது.

மருத்துவ மலரில் உள்ள கட்டுரை விபரங்கள் :

* இதுவரை எவரும் அறியாத அதிசய சஞ்சீவி மூலிகையின் மூன்று பரிமாணங்கள் மற்றும் ஆய்வு இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

* மஞ்சள் காமாலை நோய் தோன்றும் காரணங்கள் இதனை குணமாக்கும் பல்வேறு பாரம்பரிய சித்த மருத்துவர்களின் அனுபவ முறை இரகசியங்கள்.

* பாம்பு விஷ கடியை முறித்து குணமாக்கும் அனுபவ மருந்துகள்.

* மூட்டுவலி வருவதற்கான காரணங்கள் மற்றும் இதனை நீக்கும் அற்புத மருந்து செய்முறைகள்.

* கோடை வெயிலின் நோய்களின் கொடுமையைப் போக்கும் அனுபவ மருந்துகள்.

* பக்க வாத நோய்களை போக்கும் மருந்துகள் செய்முறைகள்.
* வர்ம தைலம் செய்முறை விளக்கம்.

* சர்க்கரை வியாதியை குணமாக்கும் மருந்துகள் செய்முறை விளக்கம்.

* இரத்தக் கொதிப்பு,அஜீரணம்,மயக்கம்,வாயு தொல்லை போக்கும் மருந்து செய்முறை விளக்கம்.

* சோரியாசிஸ் காளாஞ்சகப் படை முற்றிலும் குணமாக்கும் அனுபவ முறை மருந்துகள் விளக்கம்.

* தேமல்,படை,சொரி,சிரங்கு மற்றும் தோல் நோய்களுக்கான களிம்பு செய்முறை விளக்கம்.

* ஆண்மைக்குறைவினை நீக்கும் அற்புத மருந்துகள்.

* இருதய நோய் ( Heart Attack ) குணமாக்கும் மருந்து செய்முறை விளக்கம்.

மேலும் ஏராளமான மருந்துகள் செய்முறை அடங்கியுள்ளது.

http://siddharprapanjam.blogspot.in/2014/03/siddha-medicine-book.html

சித்தர் கலைகள் சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், முப்பு, வர்மக்கலை, காயகற்பம், வாசியோகம், வசியம், விளக்கம்.

சஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம், ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை வீடியோ பதிவு - two-face-rudrakcham25 - 1 - 201...
08/02/2014

சஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம், ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை வீடியோ பதிவு - two-face-rudrakcham

25 - 1 - 2014 ம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டம் சஞ்சீவி மலையில் ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமத்தில் இறைவன் அருளுடன்,சித்தர்கள் ஆசியுடன் கட்டிட விரிவாக்க பூமி பூஜை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.அதன் வீடியோ பதிவு இது.

இந்தியாவின் தென் பகுதியான தமிழகத்தின் மலைகளில் எங்கும் காணக்கிடைக்காத அதிசய இரண்டு முக ருத்ராட்ச மரம், திரிசூல வடிவில் சஞ்சீவிமலையில் மட்டுமே உள்ளது.


http://siddharprapanjam.blogspot.in/2014/02/two-face-rudrakcham.html

சித்தர் கலைகள் சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், முப்பு, வர்மக்கலை, காயகற்பம், வாசியோகம், வசியம், விளக்கம்.

குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Dateபொதுவாக கர்ப்பம் தரித்தவுடன் குழந்தை எப்போது பிறக்கும் எ...
03/02/2014

குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date

பொதுவாக கர்ப்பம் தரித்தவுடன் குழந்தை எப்போது பிறக்கும் என்பதை அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். இதற்காக மருத்துவர்களை நாடும் போது அவர்கள் பொதுவாக கர்ப்ப கால கணக்கில் குறிப்பிட்டுள்ள முறைப்படி குழந்தை பிறக்கும் நாளை கணித்துக் கூறுவார்கள்.

இன்றைய காலத்தில் இந்த கர்ப்பகால கணக்கும் அதில் உள்ள சூட்சுமம் அனைவரும் அறியாததால் இயற்கையான பிரசவம் என்ற நிலை மாறி சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறக்கும் நிலையும் அதன் சதவிகிதமும் அதிகரித்து வருகின்றது.

http://siddhar-medicine.blogspot.in/2014/02/natural-child-birth-date.html

குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date

சஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ்அன்புடையீர் !நிகழும் மங்களகரமான விஜய வருடம் தை மாதம் 12 -ம் தேதி ...
19/01/2014

சஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ்

அன்புடையீர் !
நிகழும் மங்களகரமான விஜய வருடம் தை மாதம் 12 -ம் தேதி ( 25-01-2014 )சனிக்கிழமை ,விசாக நட்சத்திரமும்,சித்த யோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் ஆச்சாரிய குடில் வாஸ்து பூஜை சீரும் சிறப்புமாக நடை பெற உள்ளதால் பக்தர்களும், அன்பர்களும் வருகை தந்து குருவருளும், திருவருளும்,சித்தர்கள் ஆசியும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை [சஞ்சீவி மலை] மேல் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒடுக்கம் தலச்சோலையில் வற்றாத ஜீவநதியாக தவழ்ந்தோடிவரும் சொர்ணதீர்த்தக் கரையில் அமைந்துள்ளது.

நமது ஆஸ்ரமத்தில் கட்டமைப்பை விரிவு படுத்தவும், இப்பிரபஞ்சத்தின் ஆற்றலை பரிபூரணமாக பெற பிரமீடு தியானக்குடில்,ஆச்சாரியக் குடில்,அன்னதானக் கூடம் போன்றவைகள் அமைய உள்ளது.

http://siddharprapanjam.blogspot.in/2014/01/blog-post.html

சித்தர் கலைகள் சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், முப்பு, வர்மக்கலை, காயகற்பம், வாசியோகம், வசியம், விளக்கம்.

13/01/2014

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ளும் சூட்சுமம்

திருமணமாகிய அனைவருக்கும் முதன் முதலில் கருத்தரித்தவுடன் பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வமும், விருப்பமும் இருக்கும்.

கரு தரித்த பெண்ணின் உடல் அமைப்புகள் மற்றும் சில அறிகுறிகள் மூலமாக கருவில் உள்ளது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என மிகவும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

http://www.siddhar-medicine.blogspot.in/2014/01/blog-post.html

இந்திரகோபம் வசியம், அதிசய ஜாலம் - Inthirakobam Vasiyamநாம் வாழும் பூமியில், இயற்கையில் ஏராளமான அதிசயங்கள் அமைந்துள்ளது.க...
05/01/2014

இந்திரகோபம் வசியம், அதிசய ஜாலம் - Inthirakobam Vasiyam

நாம் வாழும் பூமியில், இயற்கையில் ஏராளமான அதிசயங்கள் அமைந்துள்ளது.குறிப்பாக மூலிகைகள்,பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகளிடம் ஏராளமான மர்மமான இரகசியங்கள் அடங்கியுள்ளன.

http://siddharprapanjam.blogspot.in/2014/01/inthirakobam-vasiyam.html

சித்தர் கலைகள் சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், முப்பு, வர்மக்கலை, காயகற்பம், வாசியோகம், வசியம், விளக்கம்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when சித்தர் பொக்கிஷம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to சித்தர் பொக்கிஷம்:

  • Want your practice to be the top-listed Clinic?

Share