Dr.elamaran Sivam Siddha Hospital

Dr.elamaran Sivam Siddha Hospital Dr.S.Elamaran BSMS( Siddha)
Dr.E.ElakiyenBAMS(Ayurveda, Panchakarma)
Dr.AarthikaBAMS(Ayurveda-Gynec)

� நோய் நீக்கும் 69 ஆண்டுகள் பாரம்பரிய சித்தா -ஆயுர்வேதா-பஞ்சகர்மா-சிகிச்சை�
பத்து , படை , அரிப்பு , நடுக்குவாதம் , பவுத்திரம் , சோரியாசிஸ் , மூட்டுவலி , வயிற்றுப்புண் , வெண்தோல் , முடக்கு வாதம் , மூலநோய் , முடிஉதிர்தலுக்கு தரமான பாரம்பரிய தைலத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் . பக்கவாதம் , சிறுநீரகக்கல் , கால்ஆணி , மரு , முகப்பரு , PCOD நீர்கட்டி ஆஸ்துமா , கருப்பைநோய் , குழந்தையின்மை தாம்பத்தியபி

ரச்சனை ,சைனஸிட்டிஸ் , தலைவலி , வெள்ளைப்படுதல் , ஆண்மைக்குறைவு , குழந்தைசளி , மாதவிடாய்பிரச்சனை , இரத்தபோக்கு , பாலியல் நோய்கள், இருமல் குழந்தையின்மை , சர்க்கரை நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படும் .
�புதுக்கோட்டையில் - மேல 2 ம்வீதி , வடக்கு ராஜவீதி சந்திப்பு .
�அறந்தாங்கியில்பெரியபள்ளி வாசல் அருகில்
� தஞ்சாவூர் - காவேரி சிறப்பங்காடி , TCWS பில்டிங் , ஈவினிங் மார்க்கெட்எதிரில் , பழைய பஸ்நிலையம் , தஞ்சாவூர் -613001
�சென்னை , திருவாரூரில் சந்தித்தும் ஆலோசனை பெறலாம்.
இன்று எங்களது சிகிச்சை முறையில் கொரோனா covid19 தொற்றும் சேர்ந்துவிட்டது.நோய்தொற்று ஏற்பட்ட உடன் எங்களது சிகிச்சை முறை எடுத்தவர்கள் பலர் நலமுடன் இருந்து வருகிறார்கள்.தீவிரநிலையிலிருந்து மீண்டவர்களுக்கும் தொடர்சிகிச்சை அளித்து வருகிறோம்.எங்களது சிகிச்சை மருந்துகள் Multiple drugs therapyயாக அளிப்பதால் ஒன்றுக்கொன்று தோல்விஏற்படாமல் நலம்பயக்குகிறது. Dr.இளமாறன் சித்தா/Dr.இலக்கியன் ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை நிபுணர்
�தொடர்புக்கு:�9443475684 8940087696

படர் தாமரை மீண்டும் வராமல் தடுக்கும் எளிய சித்த வைத்திய மூலிகை முறைகள். இதற்கு தேவையான பொருட்கள் முறை ஒன்று 10 எண்ணிக்கை...
16/03/2025

படர் தாமரை மீண்டும் வராமல் தடுக்கும் எளிய சித்த வைத்திய மூலிகை முறைகள்.
இதற்கு தேவையான பொருட்கள்
முறை ஒன்று
10 எண்ணிக்கை சீமை அகத்தி அல்லது வண்டுகடி இலை, 10 முதல் 20 கிராம் வேப்பங்கொட்டை உள்பகுதி பருப்புடன் , சிறிய துண்டளவு கஸ்தூரி மஞ்சள், 1 கிராம் அளவு கசகசா, 2 கிராம் தேங்காய் துருவல், 15 எண்ணிக்கை வெள்ளை அல்லது கருமிளகு, இவை அனைத்தையும் சேர்த்து, நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து. இதில் எழுமிச்சம்பழச்சாறு சேர்த்து, அரிப்புள்ள பகுதிக்கு பூசி, 1 முதல் 2மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனை வாரம் இருமுறை, செய்து குளித்து வந்தால், பூஞ்சை காளான் தொற்று திரும்ப பரவாமல் தடுக்க முடியும்.

முறை இரண்டு
10 எண்ணிக்கை வேப்பங்கொட்டை உள்பருப்பு, 3சென்டிமீட்டர் நீளமுள்ள கஸ்தூரி மஞ்சள் 10 முதல் 15 எண்ணிக்கை வெள்ளைமிளகு அல்லது கருமிளகு ,10கிராம் தேங்காய் துருவல், இவை அனைத்தையும் சேர்த்து , நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, இதில் எழுமிச்சம்பழச்சாறு சேர்த்து, அரிப்புள்ள பகுதிக்கு பூசி 1 முதல் 2மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனை வாரம் இருமுறை, செய்து குளித்து வந்தால் பூஞ்சை காளான் தொற்று திரும்ப பரவாமல் தடுக்க முடியும். மேலும் இதனையே தலையில் தேய்த்து , ஊரவைத்து பின்னர் சீகக்காய் அல்லது ஷாம்பு தேய்த்து, தலை குளிக்க, அரிப்பு, பொடுகு நீங்கி தலைமயிர் உறுதியுடன் கருகருவென்று வளரும்.
உணவுமுறை
பொதுவாக தோல் நோயினர் அலர்ஜி. அரிப்புடன் கூடிய நோயினர். மீன், நண்டு, இறால, முட்டை, கருவாடு, செம்மறி ஆட்டுக்கறி, கோழிக்கறி, பாகற்காய், புளிப்பான பழங்களை தவிர்க்கவும். கத்தரிக்காய், வெண்டைக்காய், கருணைகிழங்கு அரிப்பை உண்டாக்கலாம். வெள்ளாட்டுஇறச்சி, கிளங்கான் மீன், குறவைமீன் அரிப்பு இல்லாத போது உணவின் சேர்க்கலாம்.

31/12/2024
🟪வணக்கம், இனியும் நோயை குணப்படுத்த தாமதிக்க வேண்டாம். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சோரியாசிஸ்,வெண்தோல், படர்தாமரை பங்கஸ்,...
10/12/2024

🟪வணக்கம், இனியும் நோயை குணப்படுத்த தாமதிக்க வேண்டாம். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சோரியாசிஸ்,வெண்தோல், படர்தாமரை பங்கஸ், வயிற்றுப்புண்,ஆஸ்துமா, சைனஸிட்டிஸ்,தலைவலி,மூலம்,சிறுநீரககல்,UTI,நீர்த்தாரை பிரச்சினை, முடக்குவாதம், மூட்டுவலி,நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, நீரிழிவு, குழந்தையின்மை PCOD, IBS லூஸ்மோசன், புராஸ்டேட்வீக்கம், வெரி கோஸ் வெயின் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்து பலன்பெற்ற பலர்,எங்களது பற்றி பேசிய விபரத்தை கீழே உள்ள Facebook, YouTube link இல் கிளிக் செய்து பார்த்தாலே, எங்களை பற்றி முழுவிபரம் உங்களுக்கு தெரியவரும். கூரியரிலும் சிகிச்சை விபரங்களை பெறலாம். நன்றி.
Dr.இளமாறன்,
Dr.இலக்கியன்,
Dr.ஆர்த்திகா
சிவம் சித்தா ஆயுர்வேத மருத்துவம்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கியில் டாக்டரை சந்திக்கலாம்.சென்னையில் சந்திக்க பேசுங்கள். Ph:9443475684
சிவம் சித்தா ஆயுர்வேத மருத்துவம்(Since 1953) Ph:9443475684
-------------------------------------

29/10/2024

🟪ஓமத்தீநீர் நன்மைகள்

1. குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் மற்றும் பேதியை விரைவாக சரி செய்கிறது .
2. அசீரணம் எனப்படும் செரியாமையை சரி செய்து உணவு நன்றாக செரிக்க உதவுகிறது .
3. அசீரனத்தால் ஏற்படும் *சுகர்* என்ற தீராநோய் வராமல் தடுக்கிறது.
4. அசீரணத்தால் வரும் நெஞ்செரிச்சலை சரி செய்கிறது .
5. புளித்த ஏப்பம் வருவதை சரி செய்து கழிவுகள் மலம் வாயிலாக வெளியேற உறுதுணை புரிகிறது .
6. உணவுகளால் ஏற்படும் வாயு கோளாற்றை துரிதமாக சரி செய்கிறது.
7. காலரா எனப்படும் வாந்தி பேதிக்கு சிறந்த மருந்து.
8. நல்ல பசியை உண்டாக்கக் கூடியது.
9. அதிசாரம் எனப்படும் கழிச்சல் நோயை சரி செய்யும் அற்புத மருந்து.
10. வயிற்று உப்புசத்திற்கு மற்றும் பொருமல் போன்றவற்றிற்க்கு மிகச் சிறந்த மருந்து.
11.குடல் கழிவு நீக்கத்திற்கு பெரிதும் துணை புரிகிறது.
12.மூச்சு திணறல், பித்த வாய்வினால் வரும் இடுப்பு பிடிப்பு மற்றும் கை கால் பிடிப்புடன் கூடிய வலிகளுக்கு நிவாரணம் தரும்.
13. மேலும், சளி, இருமல், இரைப்பு, காசம் முதலான கப நோய்களை தீர்க்கும் பேராற்றல் கொண்ட நல்மருந்து.
பயன்படுத்தும் முறை
உடல் உபாதைகள் இருக்கின்ற பொழுது பெரியவர்கள் 50மிலி ம் ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 2மிலி முதல் 5 மிலி அளவில் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகள் மற்றும் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உண்ட பிறகு செரிமானத்திற்காக பன்னாட்டு குளிர்பானங்களை அருந்தி உடல்நலத்தை கெடுத்துக்கொள்ளாமல், மேற்கண்ட ஓமத்தீநீரை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம்.*
வெறும் வயிற்றிலோ அல்லது உணவு உண்ட பிறகோ எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் .
பக்க விளைவுகள் அற்றது.
பத்தியம் இல்லாதது
மலச்சிக்கல் இருக்கின்ற காலகட்டங்களில் மட்டும் தவிர்க்கப்பட வேண்டியது.
✅அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய மருந்துகளில் ஒன்று. ஓமத்தீநீர் Oma Water

11/06/2024

இன்று உணவு தகவல்
11-06-24
✅வெட்டு காயத்திற்கு
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசி வர விரைவில் குணமாகும்.நீண்ட நாள் ஆறாத புண்ணின் மேல் குளிக்கும் போது தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
✅பிரசவம்
ஆப்பிள்பழம்,ரோஜா இதழ், குங்கமப்பூ, ஏலக்காய் , தேன் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
✅காதில் வலி சீழ்வடிதல் :
இரண்டு வெற்றிலையை சிறிதாக நறுக்கி 50மில்லி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து பத்திரப் படுத்தி காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதுவலி- சீழ்வடிதல் தீரும்.
✅இதயத்திற்கு
அத்திபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர இருதயத்தை பலப்படுத்துகிறது.
✅சீதபேதி குணமாக:
புளியங்கொட்டை தோல், சுண்டை வற்றல், மாதுளம் பழத்தோல் , இதனுடன் மாங்கொட்டை உள்பருப்பு சமஅளவு இடித்து தூள் செய்து காலை இரவு மோரில் அல்லது நீரில் சாப்பிட வயிற்று வலியுடன் கூடிய சீதபேதி குணமாகும்.சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.
நன்றி
அறந்தாங்கி
டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
Dr.இ.இலக்கியன் BAMS
Dr ஆர்த்திகா BAMS
தொடர்புக்கு 9443475684
🟪சிவம் சித்தா-ஆயுர்வேதா
தஞ்சாவூர் புதுக்கோட்டை அறந்தாங்கி நேரடியாக சந்தித்து சிகிச்சை பெறலாம்
Facebook-Instagram-YouTube
பார்க்க லிங்க்
✅✔️Facebook link
https://www.facebook.com/DrelamaranSivamSiddhaHospital?mibextid=ZbWKwL
✅✔️YouTube link
https://youtube.com/.elamaranSiddhaAyurveda

Dr.S.Elamaran BSMS( Siddha)
Dr.E.ElakiyenBAMS(Ayurveda, Panchakarma)
Dr.AarthikaBAMS(Ayurveda-Gynec)

🔷துளசி Holy Basil🟪வாஸ்து நன்மைகளையும் தரும் 🟪பெருமாளுக்கு பிடித்தமான மூலிகை துளசி🟪கஞ்சாங்கோரை எனப்படும் துளசி🟪கருந்துளசி...
16/01/2024

🔷துளசி Holy Basil

🟪வாஸ்து நன்மைகளையும் தரும்
🟪பெருமாளுக்கு பிடித்தமான மூலிகை துளசி
🟪கஞ்சாங்கோரை எனப்படும் துளசி
🟪கருந்துளசி
🟪கருத்தடை மருந்து
✅Dr.சுப.ச.இளமாறன்
BSMS
✅Dr.E.Elakiyen BAMS ✅Dr.Arthika BAMS புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்- சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற, மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு ph:9443475684
🟩🟩🟩16-01-24🟩🟩🟩

துளசி தாவரவியல் பெயர்: Ocimum tenuiflorum
இது மூலிகை செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத் துளசி என வகைகள் உள்ளன.
நம்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் துளசிச்செடிகள் வெண் துளசி வளர்க்கப்படுகிறது.
இதனை மூலிகையின் அரசி என்றும் கூறலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு துளசி ஒரு சிறந்த மருந்தாகும்.
🟪இத்துளசி சில வாஸ்து நன்மைகளையும் தருவதாக கருதப்படுகிறது எனவே இந்தியாவில் இந்த செடிக்கு இன்றும் மக்களிடையே முக்கிய இடம் உண்டு. சளி இருமலுக்கு துளசி இலையை அப்படியே பயன்படுத்தப்படுகிறது.
🟪துளசியில் இருந்து பெறப்படும் எண்ணெயை பயன்படுத்தி , தோல் பராமரிப்பு,வாசனை திரவியம் மற்றும் ஷாம்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
🟪அகமதாபாத்தில் டாக்டர் உபேன்டிரராஜ் ஜே சண்டீசரா என்பவர் துளசியைக் கொண்டு புற்று நோய், ஆஸ்துமா முதலிய பல்வேறு நோய்களை சில ஆண்டுகளுக்கு முன் குணப்படுத்தியிருக்கிறார். துளசி வைத்தியர் என்று அங்கே அவரை மக்கள் அழைத்துள்ளனர். வெண்புள்ளி (லூகோடெர்மா) உட்பட பல நோய்களை அவர் துளசியைக் கொண்டு குணமாக்கி வந்தாக தெரிகிறது.
🟪பரந்தாமனுக்கு -பெருமாளுக்கு பிடித்தமான மூலிகை துளசி: பூஜைக்கு பயன்பட்டு, மத சடங்குகளில் தொடர்பு கொண்டு பக்தியை வளர்த்து வருவது துளசி. அது தற்போது விஞ்ஞான நோக்கில் ஆராயப்பட்டு வருகிறது; அதன் குணங்கள் நோயை நீக்கி மனித உடலில் ஆரோக்கியத்தை வளர்க்கும் என்பது அன்று முதல் இன்று வரை நிரூபணமாகி வருகிறது.
🟪துளசி தீர்த்தம்
வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை வளர்த்து வழிபடுகிறார்கள். கோவில்களில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. இத் துளசி உடல் உஷ்ணத்தைக் குணமாக்கும் . ஜலதோஷம் மற்றும் சீதளம் பேன்ற மழைக்காலங்களில் வரும் நோய்களிலிருந்து உடலை காக்கும்.
🟪மேல் நாட்டில் துளசி
தொன்மைக்காலம் தொட்டு நமது கோயில்களிலும், சமய வைபவங்களிலும், நம் நாட்டு மருத்துவத்திலும் பெரும் பங்கு கொண்டு வருவது துளசி. ஆனால் இது மேல் நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் பிரபலமடைந்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் இதனை அரேபிய மருத்துவர்கள் அங்கீகரிக்கவில்லை. அப்போதைய மேலைய மருத்துவ நூல்களும் இதன் உபயோகத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் ரோம அறிஞர் பிளினி மட்டும் தனித்து நின்று இதன் சிறப்பை ஆதரித்தார். ரோமானியர்கள் காலப்போக்கில் துளசியின் மருத்துவ சிறப்பை உணர்ந்தனர். அடிக்கடி துளசியை உட்கொண்டு வருவோரை தேள்கடி பாதிக்காது என்று ஆப்பிரிக்கர்கள் நம்பினர்.
🟪"நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் நம்மாழ்வார்(ஆழ்வார்)
"-------------தெய்வத்
தண்ணந்துழாய்த்தாராயினும் தழை யாயினும்
தன் கொம்ப தாயினும் கீழ் வேரா யினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே"
என்று கூறியுள்ளார்.

துளசிச் செடியின் எல்லாப் பகுதிகளுமே பூஜைக்கு உரியவை என்பதை வலியுறுத்துகிறார். துளசியின் வேர்ப்பட்ட மண்ணும் பூஜைக்கு பயன்படும் என்று நம்மாழ்வார் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
🟪ஐரோப்பாவின் சில பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக ஒரு பழக்கம் இருந்து வருகிறது. அதாவது ஓர் இளம்பெண் தனது வீட்டு வேலைக்காரி மூலம் அனுப்பும் துளசியை ஒரு வாலிபன் பெற்றுக் கொண்டால், அந்தப் பெண்ணை அவன் காதலிக்க சம்மதித்ததாகக் கருதப்படும். மத்தியத் தரைக் கடல் நாடுகளில் அன்புக்குரியவர்களை அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளின் மீது துளசியைச் சாத்துவது சிறந்த மரியாதையாகக் கருதப்படுகிறது. ஐரோப்பியர்களையும் துளசியின் வாசனை முதலில் கவர்ந்தது. துளசியின் தாவரப் பெயர் கிரேக்க மொழியில் வாசனை உள்ளது என்ற பொருள்படும் ஓசா (ozo) என்று முன் பகுதியையும். கர்ப்பக்கிரஹம் என்ற அர்த்தமுள்ள ஸ்யாங்க்டம் (Sanctum) என்ற பின் பகுதியையும் கொண்டு உருவாகியிருக்கிறது.
🟪17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மருத்துவத்தில் துளசி இடம்பெறவும் ஆரம்பித்தது. கஞ்சாங்கோரை எனப்படும் துளசியை முதலில் உணவில் சேர்த்து பலனை பெற ஆரம்பித்தார்கள் .இது முதலில் லண்டனில் நடந்தேறியது. அங்கு "சாஸ்" தயாரிப்பாளர் ஒருவர் துளசிப் பிரிவைச் சேர்ந்த கஞ்சாங்கோரை (Ocimum basilicum) பயன்படுத்தி இனிய மணமும் சுவையும் கொண்ட சூப், குழம்பு முதலியவற்றை விற்று பெருஞ்செல்வம் திரட்டினார். இதை வாங்க லண்டன் பிளிட்ஸ் தெருவிலுள்ள பீட்டர்ஸ் சந்துக்கு லண்டன் வாசிகள் பெருந்திரளாக வருவதுண்டு: பின்னர் ஐரோப்பாவில் சமையல் கூடங்களில் பச்சடி, சூப் போன்ற உணவுப் பொருட்களிலும், விசேடமான மீன் வகைகளிலும் இதனை சேர்த்து உட்கொண்டு பயன் அடைய ஆரம்பித்தார்கள்.
குளிர் தேசமான ஐரோப்பாவில் துளசியை சிரத்தை எடுத்து வளர்க்க வேண்டும். வெப்பப் பகுதியில் விளையும் போது இருக்கும் சத்து குளிர்ப் பகுதியில் விளையும்போது இருப்பது இல்லை. நம் நாட்டில் கூட நீர் நிறைந்த இடத்தில் கிடைக்கும் துளசியைவிட வறட்சியான இடத்தில் விளையும் துளசிகளில் மருந்துப் பொருள் அதிகம்
🟪பம்பாய்(இன்று மும்பை)இரசாயனக் கண்காட்சியில்
பம்பாயிலுள்ள விக்டோரியா தோட்டத்தில் ஒரு சமயம் இரசாயனக் கண்காட்சி நடத்தப்பட்டது. அதை நடத்திய முக்கிய நிர்வாகிகளும் ஊழியர்களும் கொசுக்கடிக்கு ஆளாயினர். அதனால் அவர்கள் மலேரியா சுரத்தால் பீடிக்கப்பட்டுத் துன்பப்பட்டார்கள். இதனை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த தோட்டத்தில் பல பகுதிகளில் துளசியைப் பயிர் செய்யும்படி யோசனை கூறினார். அவ்வாறே செய்ததால் விக்டோரியா தோட்டத்தில் கொசு உபத்திரவம் ஒழிந்தது என்ற வரலாறும் உள்ளது.
🟪அறுவை மருத்துவர் சந்தேகம்
சிறிது காலத்திற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஒரு சுவையான வழக்கு நடைபெற்றது. துளசிக் காட்டில் ஒரு பிணத்தை
போலீசார் கண்டனர். வழக்கப்படி அது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சிவில் சர்ஜன் அதனை சோதித்து மரணம் நேர்ந்து சில நாட்களே ஆகியிருக்கும் என்று அறிக்கை
எழுதிக் கொடுத்தார். ஆனால் வழக்கு விசாரணையில் சாட்சிகள் அந்தக் கொலை பல வாரங்களுக்கு முன் நடந்ததாகக்கூறினார்கள். சிவில் சர்ஜனுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. பிணம் நாறாமல் இருந்ததற்கும் துளசிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கக் கூடும் என்று சந்தேகித்தார். எனவே அவர் ஒரு கோழியை அடித்து, அதனை பிணம் கண்டெடுக்கப்பட்ட துளசிக் காட்டில் கொண்டு போய் போட்டார்; சில தினங்கள் கழித்து அதை எடுத்துச் சோதித்தார்; கோழி நாறாமலும், அழுகாமலும் இருந்தது. கொலையுண்டவர் உடல் துளசியின் அபூர்வ குணத்தால் அழுகாமல் இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் மருத்துவர் தெரிந்து கொண்டார்.
🟪ஜிப்மர் ஆராய்ச்சிக் கூடத்தில்
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. அங்கு துளசியை ஆண் வெள்ளெலிகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தார்கள். பின்னர் அவற்றை பெண் வெள்ளெலிகளுடன் உடல் உறவு கொள்ள அனுமதித்தார்கள். ஆனால் பெண் எலிகள் கர்ப்பம் தரிக்கவில்லை. ஆண் வெள்ளெலிகளின் விந்துவை எடுத்து சோதித்தபோது, அதில் கருத்தரிக்கச் செய்யும் விந்து அணுக்கள் இல்லாதிருப்பதைக் கண்டனர். அத்துடன், ஆண் எலிகளின் பீஜங்களில் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும் பகுதி அதன் திறமையை இழந்திருப்பதையும் கண்டார்கள். அதே சமயம் எலிகளின் சுறுசுறுப்பும், ஆரோக்கியமும். சேர்க்கை விருப்பமும் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இரண்டு விதமான எலி வகைகளை சோதனை செய்து பார்த்த போது இதே முடிவு கிடைத்தது. இதிலிருந்து துளசி ஒரு சிறந்த கருத்தடை மருந்து என்பது தெரிய வந்தது. மனிதர்களிடம் இந்த சோதனையை நடத்திப் பார்க்க முயற்சி செய்யப்பட்டு வந்ததாக வரலாறு உள்ளது. அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் துளசி உட்கொள்வதை தவிர்த்து வரலாம். இருப்பினும் மனிதனிடம் பயன்படுத்திய இதன் ஆராய்ச்சி முடிவுகள் இன்று வரை இல்லை.
🟪துளசி வகைகள்
துளசியில் வெண்துளசி, கருந்துளசி என்று இரு பிரிவுகள் உள்ளன. காட்டுத் துளசி இனத்தைச் சார்ந்த ராம துளசி என்ற ஒரு வகையும் உண்டு. இது ருத்திரச்சடை என்றும். திருநீற்றுபச்சை, எலுமிச்சை துளசி என்றும் அழைக்கப்படுகிறது. வெண் துளசியில் எண்ணெய்ச் சத்து அதிகம். மக்களிடம் அதிகமாக வழக்கத்திலிருந்து வருவது வெண் துளசி.
கருந்துளசியில் மருத்துவ குணம் மிகுதி. கருந்துளசியில் கருஞ்சிவப்பு ஏறி பச்சை நிறத்துடன் இருக்கும். விதையும் கறுப்பாக இருக்கும். ஹிந்தியில் இதற்கு காளி துளசி என்று பெயர். இதன் விதை , சிறு நீரை பிரிக்கக் கூடியது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் விளையும் துளசி கற்பூரச் சத்து கொண்டது குளிர்ப் பகுதியில் 1,000 மீட்டர் உயரமான இடங்களில் தற்போது இதனைக் கொண்டு வந்து பயிரிடுகிறார்கள். உத்திரபிரதேசத்தில் சில பகுதிகளில் இதனைப் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்ற இடமாக இருந்தது.
🟪துளசி பயிரான இடத்தில் காற்றும். நீரும், மண்ணும் சுத்தமாகி விடுகிறது. காற்றால் பரவும் இன்புளூயன்சா (விஷ சுரம்) முதலிய தொற்று நோய்களால் பீடிக்கப்படும் போது நோயாளிகள் துளசியின் மணத்தை அடிக்கடி நுகர்ந்து வந்தால். பிறருக்கு அந்த நோய் பரவாது: அந்த நோயின் கடுமையும் குறையும். ப்ளூ (விஷ சுரம்) நோயாளிகளைப் பார்க்கச் செல்வோர் துளசியை முகந்து செல்ல. நோய் தொத்துவதிலிருந்து தப்பலாம்.
🟪மருத்துவ குணங்கள்
துளசி உடம்பின் கதகதப்பை பாதுகாக்கும். கதகதப்பு குறைந்தால் அதனை அதிகப்படுத்தும்; சுவாச காசத்தில் சளியை கரைக்கும்; நாக்கின் குளகுளப்பை இளக்கி வெளிப்படுத்தும்; ஜீரணம் நீக்கி பசியை மிகுவிக்கும் : குழந்தைகளின் அஜீரணத்திற்கு இது சிறந்த மருந்து, குழந்தைகளின் மார்பு சளிக்கும், நீர்க் கோவைக்கும் இது ஏற்றது. இனந்தெரியாத வேதனையால் அழுது ஆர்பாட்டம் செய்பவர்களுக்கும். நரம்பு பலகீனம் அடைந்தவர்களுக்கும் இது சிறந்த துணை மருந்து (அனுபானம்), துளசியை உட்கொள்வதன் மூலம் உடல் புண்ணைக் குணப்படுத்திக் கொள்ளலாம். கீரைப் பூச்சியை இது வெளிப்படுத்தும்; தேமல், படை, எச்சில் தழும்பு. காணாக்கடி முதலியவற்றிற்கு மேலே பூசி குணம் பெறலாம். மூட்டு வாத வலியில் (ருமாட்டிசம்) ஆறுதல் தரும். இருதயம், கல்லீரல் மற்றும் இதர உள்ளுறுப்புகளில் உள்ள குறைகள் நீங்கி பலப்படும்.
🟪 துளசி மாலை
உடலில் குளிர்ச்சி மற்றும் உஷ்ணத்தை சம நிலையில் வைத்திருக்கும் தன்மை கொண்டதாகும். துளசி மாலையை அணிந்து கொண்டால் அனைத்து விஷயங்களிலும் வெற்றிகள் தேடி வரும். துளசி மாலை அணிவதால் பாவங்கள் அழிவதுடன், பெருமாள் எப்போதும் நம்முடனேயே இருப்பார். கெட்ட கனவுகள், விபத்துக்களில் இருந்து காக்கக் கூடியது துளசி.
✒️☑️நீரிழிவு, ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இரத்த உறைதல் மருந்துகளை உட்கொள்பவர்கள் துளசியைத் தவிர்க்க வேண்டும்.இது பாதுகாப்பானது என்றாலும், கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
🟪வைட்டமின்கள் ஏ,சி,கே மற்றும் கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இதில் கணிசமான அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது
✒️உபயோக முறைகள்
🟪சாறு
துளசி இலையை கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து,இதனை குழந்தைகளுக்கு அரைத் தேநீர் கரண்டி முதல் இரண்டு தேநீர் கரண்டி வரையும், பெரியவர்களுக்கு 7 மில்லி லிட்டர் முதல் 15 மில்லி லிட்டர் வரையும் இரண்டு வேளை ஒரு நாளைக்கு தரலாம்.
🟪சூரணம்
துளசியைக் காய வைத்து இடித்து சல்லடையில் சலித்து வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு 2 முதல் 4 சிட்டிகை தேனுடன் கலந்து தரலாம். வயது வந்தவர்கள் அரை முதல் 1 தேநீர் கரண்டி வரை இரண்டு வேளை உட்கொள்ளலாம்.
🟪துளசி கசாயம்
1 பிடி துளசியை கால் லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி 30 மில்லி லிட்டராக வற்றவைத்து கசாயம் தயாரிக்கவும். குழந்தைகள் 1 முதல் 2 தேநீர் கரண்டியும், வயது வந்தவர்கள் 15 மில்லி லிட்டர் முதல் 30 மில்லி லிட்டர் வரையும் ஒன்று முதல் இரண்டு வேளைகள் அருந்தலாம். கசாயம் தயாரிக்கும்போது. அஜீரணத்திற்கு ஓமம், இஞ்சி, சுக்கு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும், சளி, இருமல், சுரம், சுவாசகாசத்திற்கு அரிசித் திப்பிலி அதிமதுரம், சிற்றரத்தை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் 5 கிராம் சேர்த்து கசாயமாக்கி உட்கொள்ள, நல்ல குணம் காணலாம். ஒன்றிரண்டு வெற்றிலையைத் தனியாக கசக்கிப் பிழிந்து அந்த சாற்றை துளசிக் கசாயத்தில் கலந்து குழந்தைகளுக்குத் தந்தால் சளிக் கட்டும். அதனால் ஏற்படும் தொல்லைகளும் தணியும்.
🟪பல் வலிக்கு
துளசிச் சாற்றில் சிறிது கிராம்புத் தூளும் கற்பூரமும் கலந்து சொத்தையுள்ள பல்லிலும் ஈறு வீக்கமுள்ள இடத்திலும் வைக்க வலி குறையும்.
🟪சொறி, படை, தேமலுக்கு
துளசிச் சாறு, எலுமிச்சைச் சாறு, கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்துத் தடவி குளிக்கலாம்.
🟪தலைப் பேனுக்கு
துளசி இலையை இரவில் கட்டிக் கொண்டு படுத்துறங்கினால் பேனுடன், ஈறும் தானாகவே வெளியேறி விடும்.
🟪துளசிப் பொடி (நாசிகாபரணம்)
துளசியை காய வைத்து இடித்து சன்னச் சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்; இந்த தூளை மூக்கில் உறிஞ்ச மூக்கடைப்பு, தலைசுற்று, தலைவலி, தலைகுடைச்சல் நீங்கும். இங்கு குறிப்பிடப்பட்ட சிறுவைத்தியமுறைகளை டாக்டரின் ஆலோசனை பெற்று பயன்படுத்த சிறந்தது. இக்கட்டுரை எழுத எனது தந்தை டாக்டர் சுப.சதாசிவம் அவர்களின் விஞ்ஞான நோக்கில் நோய்நீக்கும் மூலிகைகள் நூல் பயனாக அமைந்தது.நன்றி
🟦🟦🟩🟩🟩🟩🟦🟦
✅Dr.சுப.ச.இளமாறன்
BSMS
✅Dr.E.Elakiyen BAMS ✅Dr.Arthika BAMS புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்- சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற, மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
YouTube, Instagram Facebook பார்க்க
Dr இளமாறன் 9443475684
👁️📞தொடர்புக்கு ph:9443475684

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் Dr.இளமாறன்
24/12/2023

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் Dr.இளமாறன்

நான் எழுதிய 2001 மருத்துவ கட்டுரைகளை நானே இன்று திரும்பி பார்க்கிறேன். Looking backமகிழ்ச்சி ஏற்படுகிறது.நன்றி ஆரோக்யா
07/12/2023

நான் எழுதிய 2001 மருத்துவ கட்டுரைகளை நானே இன்று திரும்பி பார்க்கிறேன்.
Looking back
மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நன்றி ஆரோக்யா

தீபாவளி நல்வாழ்த்துக்கள்எண்ணெய் குளியல், புத்தாடை,பட்டாசு, இனிப்பு,காரம்,தடபுடலான உணவு விருந்துகளுடன், சுற்றம்-நட்பும் ச...
12/11/2023

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எண்ணெய் குளியல், புத்தாடை,பட்டாசு, இனிப்பு,காரம்,தடபுடலான உணவு விருந்துகளுடன், சுற்றம்-நட்பும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடும் நம் பாரம்பரிய தீபஓளி விழா.
கொண்டாடி மகிழ்வோம்.
🟪இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும்,நண்பர்களிடமும் , நீரிழிவு -எனப்படும் சர்க்கரை நோயுடன் இன்று வாழ்ந்து வருகிறோம்.
இனிப்பு யாருக்குதான் பிடிக்காது. அதனால் சர்க்கரைநோயினர் இன்றைய நாளில் இனிப்புக்கு ஆசைபட்டாலும் எச்சரிக்கையுடன் உட்கொள்ளுங்கள்.
முருக்கும் இரத்த சர்க்கரையை உயர்த்தகூடும்.

✅கோழிமுட்டையைப் பற்றி தெரிந்து கொள்வோம் 🟪முட்டை உலகின் மிகச் சிறந்த உணவு 🟪 சித்தர்களும் முட்டையை பல்வேறு வகைகளில் பயன்பட...
06/11/2023

✅கோழிமுட்டையைப் பற்றி தெரிந்து கொள்வோம்
🟪முட்டை உலகின் மிகச் சிறந்த உணவு
🟪 சித்தர்களும் முட்டையை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வந்துள்ளனர்
🟪 சித்தர்கள் கண்டறிந்த அண்டத்தைலம்
🟪ஜப்பானின் கறுப்பு நிற முட்டை
✅Dr.சுப.ச.இளமாறன்BSMS
✅Dr.E.Elakiyen BAMS
✅Dr.Arthika BAMS
புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்-சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற,
மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு
ph:9443475684
🟨🟨🟨07-11-23🟨🟨🟨

உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற உணவுகளில் கோழிமுட்டையும் ஒன்று என்று சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அப்படி என்னதான் முட்டையில் இருக்கு.
🟥 முட்டையில் புரோட்டீன் கொழுப்பு, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மேலும் விட்டமின்கள் ஏ. டி, ஈ இவைகளோடு முட்டையின் மஞ்சள் கருவில் பி காம்ப்ளக்சும் B vitamin உள்ளது.
நாம் சாப்பிடும் சாதாரண கோழி முட்டையில் நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் 'உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் முட்டைக்கு முதலிடம் கிடைத்துள்ளது . 40 முதல் 50 கிராம் முட்டையில், 187 மில்லிகிராம் கொழுப்புச்சத்தும் .
(சராசரி மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவே 300 மில்லிகிராம்)ஒரு முட்டையில் 75 கலோரியும் உள்ளன.
பொதுவாக 100 கிராம் கோழி முட்டையில் தன்ணீர் 75 கிராம். கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச்சத்துகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் எனப் பல சத்துகள் உள்ளடங்கியுள்ளன.
நாட்டுக்கோழி முட்டையில் B2,B6,B12, A, D, ரிபோஃப்ளேவின்,
பயோடின் வைட்டமின்களும் . இரும்பு, காப்பர், அயோடின்,செலினியம், துத்தநாகம், போன்ற கனிமச்சத்துகளும் அடங்கியுள்ளன.
முட்டையில் சியாக்ஸாந்தின் (Zeaxanthin), கோலின் (Choline) லூட்டீன் (Lutein) சத்துகளும் உள்ளதால்.
கண்களில் ஏற்படும் கண்புரை, விழித்திரை பாதிப்பையும் தடுக்கும். கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற சத்துகள் இருப்பதால். உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதுடன்.எலும்பு களுக்கு வலுவூட்டும்.
முட்டையில் உள்ள லியூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், தசைகளில் புரதத்தை (Muscle Protein Synthesis) மேம்படுத்த உதவும்.
🟥45 கிராம் எடையுள்ள முட்டையில் 6 கிராம் அளவில் உயர்தர புரோட்டின் கிடைத்துவிடுகிறது.
🟥உடல் எடை குறைவானவர்கள், கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள் ,மெலிதானவர்கள் தினமும் ஒரு முட்டையை உட்கொள்ளலாம். தினமும் உட்கொள்ளும் போது உடல்சூடு அதிகரித்தால், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகள் போதுமானது.
காய்கறி, இறைச்சிகளில் இருக்கும் புரோட்டினைவிட முட்டையில் புரோட்டின் அதிகம் கிடைக்கிறது.
🟥 பண்ணைகளில் தயாராகும் முட்டைகளை காட்டிலும் . கிராமங்களில், வீட்டில் வளர்க்கும் நாட்டுக்கோழியின் முட்டை சத்துமிகுந்தது. நாட்டுக்கோழி முட்டை நிறம் சற்று மாறி இருக்கும்.
🟥சிலர் முட்டையை சமைத்து உண்பதைக் காட்டிலும் சமைக்காமல் பச்சையாக உண்பதை பார்த்திருக்கலாம். இதனால் முட்டையின் அனைத்து பயனும் உடம்பிற்கு சேரும் என்று நினைக்கிறார்கள்.இது உண்மையில்லை.
முட்டையை எப்போதும் ஏழு முதல் பத்து நிமிடம்(அதிக நேரமும் கொதிக்க வைக்க கூடாது)வரையில் மஞ்சள் வெண்கருக்கள் திட நிலையை அடையும் வரை வேகவைக்க வேண்டும்.
இதனால் கண்ணுக்கு தெரியாத தீயகிருமிகள் வேகவைப்பதால் நீங்குவதோடு, அவித்த முட்டையை சில மணிநேரங்களில் உட்கொண்டால் நமக்கு கெடுதல் தராது. அதேவேளை காலையில் வேகவைத்த முட்டையை இரவு உட்கொள்வதும் கெடுதல் ஏற்படும்.
🟥முட்டையின் வெண் கருவை 7மாதங்களுக்கு பிறகு கொடுத்து வரலாம்.ஒருவருடத்திற்கு பிறகு மஞ்சள் கருவையும் சேர்த்து வரலாம். சிலருக்கு முட்டை உட்கொண்டால் அலர்ஜி ஏற்படவாய்ப்புண்டு அவர்கள் தவிர்க்க வேண்டும்.
🟥கர்ப்பிணிகள் கண்டிப்பாக முட்டையை பச்சையாக உண்ணவே கூடாது. ஏனென்றால் சால்மெனெல்லா என்ற பாக்டீரியா இருப்பதால் முட்டையின் மஞ்சள் கருவை பச்சையாக திரவ நிலையில் சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கையும் உண்டு.
முட்டையில் கோலின் (Choline) என்ற சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய தாகும். அதனால் கருவுற்ற தாய்மார்கள் முட்டை சாப்பிடுவதால், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை சீராகவைத்திருக்கும். மூளை தொடர்பான எந்தக் குறைபாடும் இல்லாமல் குழந்தையும் பிறக்கும். முட்டையிலிருக்கும் ஃபோலிக் அமிலம், கருவில் வளரும் குழந்தையின் நரம்புகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் உதவும் .
🟥முட்டையை பச்சையாக உண்ணக் கூடாது என்று சொல்லப்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. முட்டையின் வெண் கருவில் ஆவிடின்(avidin) என்கின்ற ஒரு புரோட்டின் உள்ளது. இது பயோட்டின் என்கின்ற விட்டமின் பி-யுடன் சேர்ந்து கொண்டு மனித குடலில் உட்கிரகிக்க இயலாத நிலையை உருவாக்குகின்றது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் நீங்கிவிடும். அதன் பலனாக, முட்டையில் உள்ள ப்யாட்டின் முழுமையாக உடலில் கிரகிக்கப்படும்.
🟥ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை மிதக்க போட்டால் பழைய முட்டையாக இருந்தால் பந்து போல மிதக்கும். புதியதாக இருந்தால், தண்ணீர்க்கடியில் போய் நிற்கும். இதன் மூலம் நல்ல புதிய முட்டையை கண்டறிவது நமக்கு எளி தாகும்.
பாலும் முட்டையையும் ஒன்றாக சாப்பிடலாமா?
ஒரே நேரத்தில் பாலும் முட்டையையும் உட்கொள்வதால் செரிமானத்தை பாதிக்கலாம் மற்றும் வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை உருவாக்கலாம்.
பாடி பில்டர்கள், தசையை வளர்ப்பதற்கும், அவர்களின் உடலில் புரத அளவை மேம்படுத்துவதற்கும் பாலில் நான்கு முதல் ஐந்து பச்சை முட்டைகளை தினமும் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், இதயப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால், இந்த உணவு அபாயகரமானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
🟥அதேநேரத்தில் நன்கு உடற்பயிற்சி செய்பவர்கள். 200 மில்லி சூடான பாலில் ஒரு முட்டையை, மில்க்சேக் முறையில் உட்கொண்டு வரலாம் என்ற அறிவுரையும் சில உணவுநிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
🟥தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலில் அதிகளவில் கொழுப்புச்சத்து சேர்ந்துவிடும் என்கிற பயம் பலருக்கும் இருக்கிறது. அப்படிச் சாப்பிட விரும்புகிறவர்கள், முதலில்
உடலில் இருக்கும் கொழுப்புச்சத்து அளவைப்
பரிசோதித்துக்கொள்ள
வேண்டும். சாதாரணமாக ஒருவருக்குக் கொழுப்புச்சத்து,
200 mg/dl வரை இருக்கலாம்.
200-230 இருப்பதும் ஆபத்து. 250க்குமேல் இருக்கிறது
என்றால், அதிகளவில் முட்டை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
🟥சித்தமருத்துவத்தில் முட்டையை அண்டம் என்று குறிப்பிட்டு பல பலன்களை சித்தர் குறிப்பிட்டுள்ளனர்.
🟥முட்டையின் அண்டத்தைலம்
நாட்டுக்கோழி முட்டையை அவித்து, மஞ்சள் கருவை மட்டும் சேகரித்து அனலில் வாட்டும்போது ஒரு வகை எண்ணெய் வரும். இதை, அண்டத்தைலம் என்போம். இந்தத் தைலம் திக்குவாய் பிரச்னையைச் சரிசெய்யவும். பக்கவாதத்தினால் பேசமுடியாதவர்களுக்கும் நாக்கில் தடவி விட்டால் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலும், பெரியவர்களுக்கு சர்க்கரையிலும் சில துளிகள் விட்டு உட்கொள்ளலாம்.
இரண்டு வேளைகள் உணவிற்கு பின்பு கொடுக்கலாம் . இதனால் தீரும் நோய்கள் : மாந்தம், சன்னி, பாரிசவாயு, குழந்தைகளின் வலி, நாவுபிடிப்பு, பக்கவாதம் முதலியன தீரும் என அறியலாம். இதனை தகுந்த சித்தமருத்துவரின் மேற்பார்வையில் தயாரித்து பயனடையலாம். இதன் ஆயுட்காலம் ஒருவருடம் ஆகும்.
🟥சித்தர்கள் தாது ஜீவ வர்கத்தில் உபரசம் 120 வகையாக பிரித்து , அதில் பஞ்சபூத அடிப்படையில் நீர்பூத வகைபாட்டில் முட்டையை சேர்த்துள்ளனர். மேலும் இதனை சிற்றண்டம் என பெயரிட்டும் கோழிமுட்டையின் பயன்களை விபரமாக விளக்கியுள்ளனர். இதற்கு உள்ளழலாற்றி, மலமிளக்கி,உடல்தேற்றி போன்ற செய்கை கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
🟥முட்டை ஓட்டில்‌ சுண்ணாம்பு சத்து இருக்கிறது. இதனை பயன்படுத்த சித்தர்கள் , முள்ளங்கி சாறு விட்டு அரைத்து ,புடமிட்டு,
மூட்டை ஓட்டுப்‌ பற்பம்‌ தயாரித்து வழங்கி வந்துள்ளனர். இப்பற்பம் அத்திசுரம் எனப்படும் எலும்புருக்கிச் சுர நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. சித்தமருத்துவத்தில் சில மருந்துகள் தயாரிப்பிலும் முட்டை சேருகிறது.
🟥மயில்துத்தம்‌, பால்‌துத்தம்‌ இவைகளை எதாவது ஒன்றை விடமிக்கும்படி தின்றவர்களுக்கு,
மூட்டையின்‌ வெள்ளை கொடுத்தால்‌ முரிந்துவிடும்‌. விசத்தை முரிக்கும் மருந்தாக முட்டையின் வெள்ளைக் கரு பயன்படுகிறது.
🟥அதேபோல இன்று தலைக்கு தேய்த்து குளிக்க பயன்படுத்தும் சாம்புகளுடன் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க நமக்கு சிறந்த கன்டிசனர் கிடைத்தது விடுகிறது.
🟥மூட்டைஒட்டில்‌ சிறு
துவாரங்களிருப்பதால்‌, அவைகளின்‌ வழியே காற்றுப்‌ போய்க்‌ கொண்டும்‌ வந்து கொண்டுமிருக்கும்‌. அதனால், முட்டைகள்‌ சிலநாட்களில் கெட்டுப்‌ போகின்றன. ஆகையால்‌ முட்டைகளின்‌ கொழுப்பு படலம் அல்லது வாசிலின்‌ பூசி, ஒரு முட்டையின் மேல்‌
மற்றொரு முட்டைபடாதவாறு வைத்திருந்தால்‌, முட்டை பல
நாட்கள்‌ வரையிலும் கெடாது பக்குவமாக இருக்கும்‌. அந்த காலத்தில் முட்டைகளை சுண்ணாம்பு நீரில், கல்லுப்பில் அமிழ்த்தி நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாத்தும் வந்தனர்.
🟥முட்டையின் வெள்ளைக் கருவுடன், களர்சிக்காயின் உள்பருப்பும் சேர்த்து உட்கொள்ள, உடலில் ஏற்படும் பல வீக்கங்களுக்கு நிவாரணம் தருகிறது. குறிப்பாக விரைவீக்கத்திற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. முட்டையில் வெள்ளைக் கருவை விரையில் ஏற்படும் வலி வீக்கத்திற்கும் வெளிஉபயோகமாக பற்றிடலாம்.
🟥முட்டையின் வெள்ளைக்கருவிற்கு எண்ணெய் பிசுபிசுப்பை நீங்கும் தன்மை உண்டு. முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்பு மென்மையான துண்டு கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்துவந்தால் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு ,முககருப்பு நீங்கும்.இதனுடன் எலுமிச்சைச்சாறு, தயிர்,தேன், அரிசிமாவு,கடலைமாவு ஏதாவது ஒன்றை கலந்து, ஸ்பேஸ்பேக் முறையில் பயன் படுத்தி பயன்பெறலாம்.
🟥ஐப்பானில் எரிமலை அருகில் உள்ள வெந்நீர் ஊற்றில் முட்டையை வேகவைக்கும் போது கருப்பு நிறத்தில் மாறுவதால், இவ்வாறு வேகவைத்த முட்டையை உட்கொண்டால் வாழ்நாள் அதிகரிப்பதாகவும் அறியமுடிகிறது. முட்டையை இந்த வெந்நீர் ஊற்றில் 15நிமிடஙகள் வேகும் போது இத்தண்ணீரில் உள்ள சில வேதிப்பொருள்(sulphur ) முட்டையின் நிறத்தை மாற்றுகிறது .
Block egg in Japan
Owakudani is an active volcanic valley in the famed Hakone region west of Tokyo. It’s known to locals as "Jigokudani" (the Valley of Hell) and is famous for its black eggs, which are boiled in the sulfurous waters to give the egg shells a distinctive color.
🟩🟩🟩🟩 நன்றி 🟩🟩🟩🟩
✅Dr.சுப.ச.இளமாறன்BSMS
✅Dr.E.Elakiyen BAMS
✅Dr.Arthika BAMS
புதுக்கோட்டை- அறந்தாங்கி தஞ்சாவூர்-சென்னையில் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற,
மேலும் விபரம் தெரிந்து கொள்ள கீழேயுள்ள போன் எண்ணில் பேசுங்கள்.
👁️📞தொடர்புக்கு
ph:9443475684
🟪🟪🟪🟪🟪🟪

Address

Sivam Siddha Ayurveda Clinic/Drive Elamaran, , Https://maps. App. Goo. Gl, ,/SDAG2XVHPUphLSK69, , Aranthangi, India
Aranthangi
614616

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm
Sunday 11am - 2pm

Telephone

09443475684

Alerts

Be the first to know and let us send you an email when Dr.elamaran Sivam Siddha Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category