AYYA Green Energy

AYYA Green Energy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AYYA Green Energy, Avanashi.

புதிய பரிணாமம்Body Mind SoulMultiple Intelligence classesFor students from 1st  to 12th
07/05/2022

புதிய பரிணாமம்

Body Mind Soul

Multiple Intelligence classes

For students from 1st to 12th

TRADITIONAL FARMING & FARM HOUSE PROJECT.ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் தேவை.முதலீடு 25 ல...
21/07/2021

TRADITIONAL FARMING & FARM HOUSE PROJECT.

ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் தேவை.
முதலீடு 25 லட்சம். (குறைந்த பட்ச லாபம் 5 லட்சம்)
முதலீட்டிற்கான உத்தரவாதமாக, முதலீட்டிற்கு இணையான நில உரிமை ஒப்பந்தம் வழங்கப்படும்.
முதலீட்டு காலம் இரண்டு ஆண்டுகள்.
ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் கீழ்கண்ட படிவத்தின் மூலம் பதிவு செய்யவும்.

https://forms.gle/iyZAj18ZenaZPuna8

உயிரினங்களுக்குள் உழைத்து வாழ்பவன் மனிதன். உழைப்பு இல்லையெனில் உயர்வு இல்லை. ஊக்கமும், இடைவிடா முயற்சியுடன் உழைப்பவன் எத...
15/07/2021

உயிரினங்களுக்குள் உழைத்து வாழ்பவன் மனிதன். உழைப்பு இல்லையெனில் உயர்வு இல்லை. ஊக்கமும், இடைவிடா முயற்சியுடன் உழைப்பவன் எதிலும் வெற்றி பெறுவான். உழைப்பு உயர்வு தரும். ஒருவன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்புடன் செய்ய பாடுபடுவதே உழைப்பு. எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.அத்தகைய உழைப்பை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் வெற்றி நமக்கு தான். சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும் எனக் கூறிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், அவர்களிடம் செயல்பாடு எதுவும் இருக்காது. அதற்கு காரணம் உழைக்கும் நோக்கமே அவர்களிடம் இல்லாமல் இருப்பது தான்.

செயல்படுத்தும் உழைப்பு

நாம் ஒரு செயலை எண்ணுவதை விட, அதை செயல்படுத்துவதற்காக அதிகளவில் உழைக்க வேண்டும். அந்த உழைப்பிற்கு பலன் நிச்சயம். எந்த ஒரு செயலும் உழைப்பினால் தான் சிறப்பு அடைகிறது. வெற்றியை உருவாக்குவதில் உழைப்பு மிகப் பெரிய மூலதனம் ஆகும். அறிவு சார்ந்த உழைப்பு என்பது முடியாததை கூட நம் கையில் கொண்டு வந்து சேர்க்கும். கடின உழைப்பு ஒன்றுதான் ஒருவனை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். வெற்றி பெறுவதற்கு ஒரே வழி உழைப்பு தான். ஒருவன் தான் விரும்பும் எதையும், உழைப்பின் மூலம் சுலபமாக பெற முடியும். உழைக்க முற்படும் போதே வெற்றி மற்றும் அதன் பலனை நினைக்கவே கூடாது. அயராது, கடினமாக உழைப்பது தான் ஒருவருடைய உயிர் மூச்சாக இருக்க வேண்டும். அதுதான் லட்சியமாக திகழ வேண்டும்.

பெர்னாட்ஷாவின் உழைப்பு

இருபது வயது கூட நிரம்பாத இளைஞன் ஒருவன் ஒன்பது ஆண்டு கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதி குவித்தான். அவன் எழுதிய அத்தனை படைப்புகளும் பத்திரிகையில் வெளிவராமல் வீட்டிற்கே திரும்பின. ஆனாலும் மனம் தளராமல் எழுதி மீண்டும் அனுப்பினான். அவனது விடா முயற்சியால், படைப்புகள் இதழ்களில் வெளியாகின. கோடிக்கணக்கில் பொருள் ஈட்டி உலகப்புகழ்பெற்றான். அவன்தான் உலகம் புகழும் ஆங்கில இலக்கிய மேதை பெர்னாட்ஷா.ஏழை வீட்டு மகனாக பிறந்து, வறுமையில் வாடிய தாமஸ் ஆல்வா எடிசன், படிப்பிற்கு வழியின்றி ரயிலில் செய்தித்தாள் விற்று வாழ்ந்து வந்தான். தன் கூரிய அறிவு, விடா முயற்சி, உழைப்பால் தானே செய்தித்தாளை அச்சிட்டு வளர்ச்சி பெற்றான். உணவு, துாக்கத்தை மறந்து 21 நாட்கள் இரவு, பகலாக கடுமையாக உழைத்து தான் மின் விளக்கு' கண்டுபிடித்து நமக்கு தந்தார்.உருளைக்கிழங்கை வெயிலில் உலர்த்தும் கூலியாக வாழ்ந்த ராக்பெல்லர் தம் தளராத உழைப்பால் உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கினார். அவரிடம் தங்கள் முன்னேற்றத்திற்கான ரகசியம் என்னவென்று கேட்டபோது அவர் சொன்ன பதில் கடுமையான உழைப்பு, என்பது தான்.

ஒரு கதை

அரசன் ஒரு நாள் வேட்டையாட சென்றிருந்தான். பயண வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் ஓரிரவு தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என எண்ணிக்கொண்டு, வீட்டில் தங்க அனுமதி அளித்தனர். அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நுால் நுாற்க தொடங்கினான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியிடம், 'இது என்ன உனது இடது கையில் கயிறு' என்று கேட்டான். 'தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது; குழந்தை அழுதால் இதை இழுப்பேன்' என்றான் நெசவாளி நுால் நூற்றுக்கொண்டே. அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. “இந்த குச்சி எதற்கு” எனக் கேட்டான் அரசன். 'வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்புக் கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது' என்றான்.
இடுப்பில் மணி
அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். “இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்” எனக் கேட்டான் அரசன். 'வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க. இந்த மணியை ஒலித்தால் போதும் ஓடிவிடும்' என்று பதில் சொன்னான். அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து, “அவர்கள் என்ன செய்கிறார்கள்” என்று கேட்டான் அரசன். 'நுாற்பு வேலை செய்யும் போது வாய் சும்மா தானே இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எனக்கு தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்' என்றான். “அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம் தானே” எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான், “அவர்கள் காது தான், நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது”, ஆகவே அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணைக் குழைத்து தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றைக் குழைத்துக் கொண்டு இருப்பார்கள் என்றான். ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்ய முடியுமா? என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.நெசவாளி சொன்னான், “இது மட்டுமல்ல என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்க சொற்களை சிலேட்டில் எழுதி வைப்பாள். வேலை செய்து கொண்டே அதையும் கற்று வருகிறேன்.
”நிம்மதியான வாழ்வு
ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ளவும், கற்றுத்தரவும், வேலை செய்யவும், வீட்டைக் கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி. நமது சோம்பேறி தனத்திற்கு எப்போதும் காரணம் கற்பித்துக் கொண்டிருக்காமல், தொடர்ச்சியான உழைப்பை தந்து, தோல்விகளை துரத்துவோம்.உழைப்பே உயர்வினைத் தரும். அதுவே நிம்மதியான, நிலையான, சந்தோஷமான வாழ்க்கையை தரும்.

30/06/2021

ஆரோக்கியமான, உடல்நலம் சார்ந்த, சுற்றுச்சூழல் மாசுபாடற்ற, இயற்கையுடன் இசைந்த வாழ்வியல் முறைகளை வழங்கும் பொருட்களை மக்களிடம் அறிமுகப்படுத்த ஆர்வமுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் வாய்ப்புள்ளது.

கீழ்க்கண்ட Google form மூலம் விண்ணப்பிக்கலாம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScHTTq38xse1RpcjPOhy5IZpqdw-8FVcCvuxOvRa5IV37JbRQ/viewform?usp=sf_link

சைக்கிள் ஓட்டுங்க! சந்தோஷமா இருங்க! உச்சி முதல் உள்ளங்கால் வரை வேலை கொடுக்க ஒரு பயிற்சி போதும். இது உடலையும் அழகாக்கும்....
29/06/2021

சைக்கிள் ஓட்டுங்க! சந்தோஷமா இருங்க!

உச்சி முதல் உள்ளங்கால் வரை வேலை கொடுக்க ஒரு பயிற்சி போதும். இது உடலையும் அழகாக்கும். உள்ளத்தையும் தூய் மையாக்கும். செலவும் இல்லை. அப்படி உத்வேகத்துடன் செயல்பட வைக்க சைக்கிள் ஓட்டுங்களேன்...

வெகுதூரத்துக்கு செல்ல மேடு பள்ளங்களைக் கடக்க ஒத்தையடிப்பாதையில் தடுமாறாமல் செல்ல என்று இலாவகமாக நமக்கு தோள் கொடுத்த சைக்கிள் தான் இன்று நம் உடல் ஆரோக்கியத்தையும் காக்கும் உற்ற நண்பனாக கைகொடுக்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்துவருகின்றன.

பழையன கழிதலும் என்று கழித்துவிட்ட சைக்கிளின் அருமையை உணர்ந்து பலரது கவனமும் திரும்பியி ருக்கிறது. செலவில்லாத பாதுகாப்பான பயணத்தையும் சுற்றுப்புற சூழல் மாசடைவதையும் கட்டுப்படுத்து கிறது என்பதோடு அழகான கட்டுடலை ஆரோக்கியம் குலையாமல் தருகிறது என்பதும் சைக்கிள் மீதான மோகத்துக்கான காரணமாக சொல்லலாம்.

இளவட்டங்களும் ஆணழகனாக வலம் வர விரும்புபவர்களும் இன்று சைக்கிள் பயணத்தை பதமாக தொடர் கிறார்கள்.சீனா, ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் சைக்கிளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்களது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணமாக இதை குறிப்பிடுகிறது ஆய்வு ஒன்று.

ஓட்டினால் நடப்பது என்ன என்று பார்க்கலாமா?

சிக்கென்ற உடல்வாகு
உடற்பயிற்சியைத் தொடர்ந்துசெய்தால் தான் உடலை சிக்கென்று ஃபிட்டாக வைத்திருக்க முடியும். ஆனால் தினமும் சைக்கிள் ஓட்டினால் போதும் உடல் சிக்கென்று இருக்கும். ஜிம்மிற்கு சென்று மணிக்கணக்கில் பயிற்சி செய்வதை விட சில மணிநேரங்கள் சைக்கிள் ஓட்டினால் ஃபிட்னஸ் உடலை விரும்பியபடி பெறலாம்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை!

சைக்கிள் ஓட்டினால் கால் பாதம் மட்டும் அல்ல. உடலின் அத்தனை உறுப்புகளையும் இயங்க வைக்கும். அரை மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகிறது.

சைக்கிள் ஓட்ட தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறுகிறது. அடுத்த 20 நிமிடங்கள் தொடரும் போது குளுக்கோஸ் எரிக்கப்படுகிறது. 30 நிமிடங்களில் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறையத்தொடங்குகிறது.

உடற்பயிற்சியை எத்தனை மணி நேரம் தொடர்ந்து செய்தாலும் அவை மொத்த உறுப்பையும் இயங்க வைக் காது. குறிப்பிட்ட பயிற்சிகள் குறிப்பிட்ட தசைகளை மட்டுமே அசைய வைக்கும். உதாரணத்துக்கு நடை பயிற்சி கால் தசைகள் மட்டுமே வலுப்படும்.

நீட்டி மடக்கும் உடலுக்கான பயிற்சிகள் மூட்டுகள் அதை சுற்றியுள்ள தசைநார்களை வலுவாக்கும். ஆனால் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அனைத்து பயிற்சிகளையும் செய்த பலனை பெற்றுவிடலாம் என்பது ஓட் டத்தை அதிகரிக்கும்.

எடை அதிகமா... எடு சைக்கிளை!

என்ன செய்தும் உடல் பருமன் மட்டும் குறையமாட்டேங்குது என்று அலுத்துகொள்பவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் சைக்கிள். கொழுப்பு நிறைந்த உடலிலிருந்து கொழுப்பைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் சமயங்களில் நீர்த்து போவதுண்டு.

கடுமையான உணவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாமல் போவது இதற்கு காரணம் என்றாலும் குறையாத கொழுப்பையும் குறைக்கும் ஆற்றல் மிதிவண்டியை மிதிக்கும் போது பெற்றுவிடலாம். சைக்கிள் பயணத்தைத் தொடர்ந்தால் உடல் எடை உங்கள் கட்டுக்குள் வரும் என்பதும் மகிழ்ச்சிக்குரியதே.

ஆயுள் அதிகரிக்கும்!

மனம் மகிழ்ச்சியாக இருந்தால் ஆரோக்கியம் அதிகமாகும். ஆரோக்கியம் அதிகமானால் ஆயுள் அதிகரிக்கும் என்பதற்கேற்ப தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் நமது ஆயுளில் ஒரு மணிநேரம் அதிக ரிக்கக கூடும் என்று நெதர்லாந்து நாட்டில் உள்ள உட்ரெச் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

எதையும் தாங்கும் உறுதியான இதயம்!

சைக்கிள் ஓட்டும்போது பயணத்தின் பாதுகாப்போடு இதயத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. வயது அதிகரிக்கும் போது வலுவிழக்கும் இதயத்துக்கு வலு கொடுக்கிறது. இதயத்துடிப்பு சீராகிறது. இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளும் எட்டி பார்க்காது. மேலும் இதய தசை நார்களில் அதிகமான இரத் தத்தைக் கொண்டு செல்வதால் ஹார்ட் அட்டாக் வராமல் காக்கிறது.

மூட்டுவலியை விரட்டியடிக்க மிதிவண்டி!

வயது பேதமில்லாமல் வரத்தொடங்கியிருக்கும் மூட்டுவலியை தொடர்ச்சியான சைக்கிள் பயிற்சியின் வழி யாக குறைக்கலாம். உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளும் இறுகும் தன்மை மாறி வலுவான மூட்டாக மாறு கிறது. கை தொடை, முதுகு தண்டுவடம், இடுப்புப் பகுதி, கால் தசைகள் வலுவாகிறது. பாதங்களில் வலுவா கிறது. உடலில் இருக்கும் எலும்புகளை உறுதியாக வைக்கிறது.

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி!

உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க தவறியவர்கள் உடல் பயிற்சியின்றி உழைப்பின்றி உடல் பருமனைக் கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் சைக்கிள் பயன்படுத்து பவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறையும் மன அழுத்தம்!

பொதுவாகவே உடற்பயிற்சி செய்து முடித்த உடன் உடலில் மகிழ்ச்சிக்குரிய ஹார்மோன் சுரக்கும். இதனால் எப்போதும் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். இத்தகையவர்களை எப்போதும் சோர்வு, அழுத்தம் என்பது தாக்காது. நேர்மறை எண்ணங்களுடன் வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் கடந்துவிடும் அளவுக்கு உற்சாகத்தை சைக்கிள் பயணம் தருகிறது.

உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதிலும், மலச்சிக்கல் வராமலும், குடல்களின் இயக்கம் சீராக இருக்க வும் முக்கியமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் அழகையும் கம்பீரத்தையும் அதிகரிக்கவும் சைக்கிள் பயணம் உதவியாக இருக்கும் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.

எவ்வளவு நேரம்?

சைக்கிள் ஓட்டதொடங்கும் முதல் நாளிலேயே 20 கி.மீ வேகத்தைக் கடக்க முயற்சிக்காமல் சிறிது சிறிதாக தூரத்தை அதிகரிக்கலாம். முதலில் 5 கி.மீ தூரம் வரை பழகலாம். அதன் பிறகு படிப்படியாக தூரத்தை அதிக ரிக்கலாம்.

குழந்தைகளுக்கு பள்ளி செல்ல வாகனங்களைத் தவிர்த்து சைக்கிள் பழகலாம். வாரத்தில் ஒரு நாள் அலுவல கத்துக்கு சைக்கிளில் சென்று பழகலாம். பெட்ரோல் செலவுடன் காற்று மாசு அடைவதும் தடுக்கப்படும் என் கிறார்கள் சுற்று சூழல் ஆர்வலர்கள்.

சிறு குழந்தைகள் உடல் பருமன் என்னும் வலைக்குள் சிக்கி தவிக்காமல் இருக்கவும், ஒரே இடத்தில் அமர்ந்து செல்ஃபோனில் நேரம் தொலைப்பதையும் தவிர்க்க சைக்கிளைப் பழக்குங்கள் என்கிறார்கள் குழந்தை மருத் துவ நிபுணர்கள்.

அழகாவும் இருக்கணும் ஆரோக்கியமாவும் இருக்கணும் கவர்ச்சியாவும் இருக்கணும் கண்ணுக்கு குளிர்ச் சியா கட்டுடலும் இருக்கணும் அப்படி நினைக்கும் டீன் ஏஜ் அல்ல 40 வயதைக் கடந்தவர்கள் கூட சைக்கிள் ஓட்டலாம்.

எங்களிடம் பல்வேறு வகைகளில் மிதிவண்டிகள் கிடைக்கும். எளிய தவணை முறையிலும் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான மாடலை தேர்வு செய்யுங்கள். எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய சைக்கிள் உங்கள் வீடு தேடி வரும். மீத தொகையை செலுத்தி உங்கள் மிதிவண்டி பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள்!

Rs.18000 for slim Tyre Alloy wheels foldable models.
Rs. 20000 for fat Tyre foldable models.

(Front and rear mudgaurds and a bottle holder combo worth Rs 1300 will be free.)

Drop shipping available. Up-front booking is Rs.5000 (delivery within 7 to 9 days)

Shipping charges depends upon your location.

Required details For booking
1) Aadhar card or any other id card
2) full name
3) contact number
4) full address

சைக்கிள் ஓட்டுங்க!!! சந்தோஷமா இருங்க!!!உச்சி முதல் உள்ளங்கால் வரை வேலை கொடுக்க ஒரு பயிற்சி போதும். இது உடலையும் அழகாக்கு...
29/06/2021

சைக்கிள் ஓட்டுங்க!!! சந்தோஷமா இருங்க!!!

உச்சி முதல் உள்ளங்கால் வரை வேலை கொடுக்க ஒரு பயிற்சி போதும். இது உடலையும் அழகாக்கும். உள்ளத்தையும் தூய் மையாக்கும். செலவும் இல்லை. அப்படி உத்வேகத்துடன் செயல்பட வைக்க சைக்கிள் ஓட்டுங்களேன்...

வெகுதூரத்துக்கு செல்ல மேடு பள்ளங்களைக் கடக்க ஒத்தையடிப்பாதையில் தடுமாறாமல் செல்ல என்று இலாவகமாக நமக்கு தோள் கொடுத்த சைக்கிள் தான் இன்று நம் உடல் ஆரோக்கியத்தையும் காக்கும் உற்ற நண்பனாக கைகொடுக்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்துவருகின்றன.

பழையன கழிதலும் என்று கழித்துவிட்ட சைக்கிளின் அருமையை உணர்ந்து பலரது கவனமும் திரும்பியி ருக்கிறது. செலவில்லாத பாதுகாப்பான பயணத்தையும் சுற்றுப்புற சூழல் மாசடைவதையும் கட்டுப்படுத்து கிறது என்பதோடு அழகான கட்டுடலை ஆரோக்கியம் குலையாமல் தருகிறது என்பதும் சைக்கிள் மீதான மோகத்துக்கான காரணமாக சொல்லலாம்.

இளவட்டங்களும் ஆணழகனாக வலம் வர விரும்புபவர்களும் இன்று சைக்கிள் பயணத்தை பதமாக தொடர் கிறார்கள்.சீனா, ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் சைக்கிளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்களது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணமாக இதை குறிப்பிடுகிறது ஆய்வு ஒன்று.

ஓட்டினால் நடப்பது என்ன என்று பார்க்கலாமா?

சிக்கென்ற உடல்வாகு
உடற்பயிற்சியைத் தொடர்ந்துசெய்தால் தான் உடலை சிக்கென்று ஃபிட்டாக வைத்திருக்க முடியும். ஆனால் தினமும் சைக்கிள் ஓட்டினால் போதும் உடல் சிக்கென்று இருக்கும். ஜிம்மிற்கு சென்று மணிக்கணக்கில் பயிற்சி செய்வதை விட சில மணிநேரங்கள் சைக்கிள் ஓட்டினால் ஃபிட்னஸ் உடலை விரும்பியபடி பெறலாம்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை
சைக்கிள் ஓட்டினால் கால் பாதம் மட்டும் அல்ல. உடலின் அத்தனை உறுப்புகளையும் இயங்க வைக்கும். அரை மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகிறது.

சைக்கிள் ஓட்ட தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறுகிறது. அடுத்த 20 நிமிடங்கள் தொடரும் போது குளுக்கோஸ் எரிக்கப்படுகிறது. 30 நிமிடங்களில் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறையத்தொடங்குகிறது.

உடற்பயிற்சியை எத்தனை மணி நேரம் தொடர்ந்து செய்தாலும் அவை மொத்த உறுப்பையும் இயங்க வைக் காது. குறிப்பிட்ட பயிற்சிகள் குறிப்பிட்ட தசைகளை மட்டுமே அசைய வைக்கும். உதாரணத்துக்கு நடை பயிற்சி கால் தசைகள் மட்டுமே வலுப்படும்.

நீட்டி மடக்கும் உடலுக்கான பயிற்சிகள் மூட்டுகள் அதை சுற்றியுள்ள தசைநார்களை வலுவாக்கும். ஆனால் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அனைத்து பயிற்சிகளையும் செய்த பலனை பெற்றுவிடலாம் என்பது ஓட் டத்தை அதிகரிக்கும்.

எடை அதிகமா... எடு சைக்கிளை!

என்ன செய்தும் உடல் பருமன் மட்டும் குறையமாட்டேங்குது என்று அலுத்துகொள்பவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் சைக்கிள். கொழுப்பு நிறைந்த உடலிலிருந்து கொழுப்பைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் சமயங்களில் நீர்த்து போவதுண்டு.

கடுமையான உணவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாமல் போவது இதற்கு காரணம் என்றாலும் குறையாத கொழுப்பையும் குறைக்கும் ஆற்றல் மிதிவண்டியை மிதிக்கும் போது பெற்றுவிடலாம். சைக்கிள் பயணத்தைத் தொடர்ந்தால் உடல் எடை உங்கள் கட்டுக்குள் வரும் என்பதும் மகிழ்ச்சிக்குரியதே.

ஆயுள் அதிகரிக்கும்!

மனம் மகிழ்ச்சியாக இருந்தால் ஆரோக்கியம் அதிகமாகும் ஆரோக்கியம் அதிகமானால் ஆயுள் அதிகரிக்கும் என்பதற்கேற்ப தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் நமது ஆயுளில் ஒரு மணிநேரம் அதிக ரிக்கக கூடும் என்று நெதர்லாந்து நாட்டில் உள்ள உட்ரெச் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

எதையும் தாங்கும் உறுதியான இதயம்!

சைக்கிள் ஓட்டும்போது பயணத்தின் பாதுகாப்போடு இதயத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. வயது அதிகரிக்கும் போது வலுவிழக்கும் இதயத்துக்கு வலு கொடுக்கிறது. இதயத்துடிப்பு சீராகிறது. இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளும் எட்டி பார்க்காது. மேலும் இதய தசை நார்களில் அதிகமான இரத் தத்தைக் கொண்டு செல்வதால் ஹார்ட் அட்டாக் வராமல் காக்கிறது.

மூட்டுவலியை விரட்டியடிக்க மிதிவண்டி!

வயது பேதமில்லாமல் வரத்தொடங்கியிருக்கும் மூட்டுவலியை தொடர்ச்சியான சைக்கிள் பயிற்சியின் வழி யாக குறைக்கலாம். உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளும் இறுகும் தன்மை மாறி வலுவான மூட்டாக மாறு கிறது. கை தொடை, முதுகு தண்டுவடம், இடுப்புப் பகுதி, கால் தசைகள் வலுவாகிறது. பாதங்களில் வலுவா கிறது. உடலில் இருக்கும் எலும்புகளை உறுதியாக வைக்கிறது.

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி!

உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க தவறியவர்கள் உடல் பயிற்சியின்றி உழைப்பின்றி உடல் பருமனைக் கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் சைக்கிள் பயன்படுத்து பவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறையும் மன அழுத்தம்!

பொதுவாகவே உடற்பயிற்சி செய்து முடித்த உடன் உடலில் மகிழ்ச்சிக்குரிய ஹார்மோன் சுரக்கும். இதனால் எப்போதும் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். இத்தகையவர்களை எப்போதும் சோர்வு, அழுத்தம் என்பது தாக்காது. நேர்மறை எண்ணங்களுடன் வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் கடந்துவிடும் அளவுக்கு உற்சாகத்தை சைக்கிள் பயணம் தருகிறது.

உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதிலும், மலச்சிக்கல் வராமலும், குடல்களின் இயக்கம் சீராக இருக்க வும் முக்கியமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் அழகையும் கம்பீரத்தையும் அதிகரிக்கவும் சைக்கிள் பயணம் உதவியாக இருக்கும் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.

எவ்வளவு நேரம்?

சைக்கிள் ஓட்டதொடங்கும் முதல் நாளிலேயே 20 கி.மீ வேகத்தைக் கடக்க முயற்சிக்காமல் சிறிது சிறிதாக தூரத்தை அதிகரிக்கலாம். முதலில் 5 கி.மீ தூரம் வரை பழகலாம். அதன் பிறகு படிப்படியாக தூரத்தை அதிக ரிக்கலாம்.

குழந்தைகளுக்கு பள்ளி செல்ல வாகனங்களைத் தவிர்த்து சைக்கிள் பழகலாம். வாரத்தில் ஒரு நாள் அலுவல கத்துக்கு சைக்கிளில் சென்று பழகலாம். பெட்ரோல் செலவுடன் காற்று மாசு அடைவதும் தடுக்கப்படும் என் கிறார்கள் சுற்று சூழல் ஆர்வலர்கள்.

சிறு குழந்தைகள் உடல் பருமன் என்னும் வலைக்குள் சிக்கி தவிக்காமல் இருக்கவும், ஒரே இடத்தில் அமர்ந்து செல்ஃபோனில் நேரம் தொலைப்பதையும் தவிர்க்க சைக்கிளைப் பழக்குங்கள் என்கிறார்கள் குழந்தை மருத் துவ நிபுணர்கள்.

அழகாவும் இருக்கணும் ஆரோக்கியமாவும் இருக்கணும் கவர்ச்சியாவும் இருக்கணும் கண்ணுக்கு குளிர்ச் சியா கட்டுடலும் இருக்கணும் அப்படி நினைக்கும் டீன் ஏஜ் அல்ல 40 வயதைக் கடந்தவர்கள் கூட சைக்கிள் ஓட்டலாம்.

எங்களிடம் பல்வேறு வகைகளில் மிதிவண்டிகள் கிடைக்கும். எளிய தவணை முறையிலும் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான மாடலை தேர்வு செய்யுங்கள். எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய சைக்கிள் உங்கள் வீடு தேடி வந்த பின்பு மீத தொகையை செலுத்தி, உங்கள் மிதிவண்டி பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள்.

Rs.18000 for slim Tyre Alloy wheels foldable models.

Rs. 20000 for fat Tyre foldable models.

(Front and rear mudgaurds and a bottle holder combo worth Rs 1300 will be free.)

Drop shipping available. Up-front booking is Rs.5000 (delivery within 7 to 9 days)

Shipping charges depends upon your location.

Required details For booking
1) Aadhar card or any other id card
2) full name
3) contact number
4) full address

Address

Avanashi
641654

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when AYYA Green Energy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram