Dr.R.Balamurugan Ayurveda physician

Dr.R.Balamurugan Ayurveda physician Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.R.Balamurugan Ayurveda physician, Doctor, Aminjikarai, Chennai.

இரண்டு மருத்துவ முறைகளுக்கான பிரச்னையாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. காரணம், இதில் பிரச்னை தொடங்கும் இடமும் முடியும் ...
27/11/2020

இரண்டு மருத்துவ முறைகளுக்கான பிரச்னையாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. காரணம், இதில் பிரச்னை தொடங்கும் இடமும் முடியும் இடமும் அப்பாவி நோயாளிகளாகத்தான் இருப்பார்கள். https://www.vikatan.com/government-and-politics/healthy/allopathy-doctors-opposing-govts-order-which-allows-ayurveda-doctors-to-perform-surgery?utm_source=mobile&utm_medium=whatsapp

முக்கியச் செய்திகள், சிறப்புப் பேட்டிகள், அலசல்
கட்டுரைகளுக்கு Vikatan App-ஐ டவுன்லோடு செய்ய
https://vikatan.onelink.me/kbqn/VikatanWhatsApp

இரண்டு மருத்துவ முறைகளுக்கான பிரச்னையாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. காரணம், இதில் பிரச்னை தொடங்கும் இடமும....

30/08/2020

தசமூலக்கடுத்ரயாதி கஷாயம் ----வறண்ட இருமலுக்கு ஓா் வரப்பிரஸாதம்

பொதுவாக ஆயுா்வேத மருத்துவத்துறையில்
மருந்தின் பெயரே சொல்லிவிடும் ,அந்த மருந்தில் என்ன உள்ளது என்று அல்லது அந்த மருந்து எதற்கு பயன்படும் என்று

அதுப்போல பல மருந்துகளில் ஒன்று தான்
தசமூலக்கடுத்ரயாதி கஷாயமும் ,ஆம் இந்த மருந்தின் பெயரே சொல்லிவிட்டது இந்த மருந்தில் என்ன இருக்கிறது என்று .
தசமூலம் என்ற பத்து மூலிகை வோ்களும்
கடுத்ரயம் என்ற திாிகடு மருந்துகளும் உள்ளன
கடைசியில் ஆதி என்ற வாா்த்தை உள்ளதே
அப்பே இன்னும் மருந்துகள் உள்ளன என்று அா்த்தம். அது வேறு ஒன்றும் இல்லை ஆடாதோடை வோ் தான் அந்த மருந்து
தசமூலம்,திாிகடு,ஆடாதோடை கலந்த மருந்து கலவைக்குத் தான் தசமூலக்கடுத்ரயாதி கஷாயம் என்று பெயா்

இம்மருந்து இன்றியமையாத ஸஹஸ்ரயோகம் என்ற புத்தகத்தில் கஷாய பிரகரணத்தில் கூறப்பட்டுள்ளது .
தசமூலம் என்ற பத்து மூலிகை வோ் கூட்டு மருந்தில் பெருவாகை,குமிழ்.பாதிாி,முன்னை,வில்வம்
ஒாிலை,மூவிலை,கண்டங்கத்திாி,முள்ளுக்கத்திாி,நெருஞ்சில் போன்ற மூலிகைகள் உள்ளன , இந்த பத்து மூலிகை கலவைக்கு முதலில் " தசமூலம் " என்று பெயா் கொடுத்தவா் மகாிஷி சுஸ்ருதா் ஆவாா்
சரக மகாிஷி இதனை சோப(வீக்கம்) ஹர மஹா கஷாயமாக கருதுகிறாா்
தசமூலம் வீக்கம் மற்றும் வாதத்தை குறைப்பதில் வல்லமை பெற்றது

திாிகடுக (கடுத்ரயம்) - சுக்கு, மிளகு, திப்பிலி
இது ஜீா்ண சக்தியை அதிகாிக்கச் செய்யும் ,இருமல், மூச்சியிளைப்பு,பீனசம்
போன்ற நோய்களுக்கு உகந்தது .

ஆடாதோடை- தொண்டை மற்றும் நுரையீரலில் உள்ள கபத்தை போக்கவல்லது
மூச்சியிளைப்பு நோய்க்கும் மிகச்சிறந்த மருந்து .
இந்த 14 மருந்துகளின் கலவை மூச்சியிளைப்பு, வறண்ட இருமல், பக்கச்சூலை, த்ரிக சூலம் ( மூன்று எலும்புகள் சந்திக்கும் இடமே த்ரிகம் என்று பெயா் அப்படி பாா்க்கும் போது கழுத்தையும், இடுப்பையும் த்ரிகம் என்று கூறலாம் . இந்த மருந்து கலவை பொறுத்த வரைக்கும் கழுத்து தான் த்ரிகம் எனவே கழுத்து வலிக்கான மருந்து ) , முதுகு வலி, தலை வலி போன்றவைகளுக்கு மிக நல்லது

இதனுடைய அனுபானம் தேன் ,ஏன் தேன் என்று பின்பு விாிவாக பாா்ப்போம்

பொதுவாக இம்மருந்தை சம்பூா்ணமான ஸம்ப்பிராப்தி விகடணம் செய்யக்கூடிய மருந்தாக ஆயுா்வேத மருத்துவா்கள் கருதுகிறாா்கள்,

ஆமா.......அது என்ன ஸம்ப்பிராப்தி
இது தான் நோய் ஏற்படக்கூடிய காரணிகளை கண்டறியக்கூடிய உபகரணம். ஆம் நோய் ஏற்படக் காரணங்களாக இருக்கூடிய ,வாத, பித்த, கபம்,உடலில் உள்ள ஏழு தாதுக்கள் இவற்றின் மிகை ,குறை . ஸ்ரோதஸ் என்ற உடலில் குழாய்களில் ஏற்படும் கோளறுகள் , குடலில் ஏற்படும் கோளறுகள் இவற்றை பொறுத்தே நோய் மற்றும் நோயின் நிலையை கண்டறியப்படுகிறது .

இக்கஷாயம் பொதுவாக சுவாச உறுப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களுக்கு பயன்படக்கூடியவை , வாத தோஷத்தால் ஏற்பட்ட இருமலையும் மூச்சியிளைப்பையும்
தலை வலியையும் தசமூலம் சாிச் செய்யும்.

ஜீா்ண சக்தியையும் ,வாதம் என்ற தோஷம் வறண்ட மற்றும் குளிா்ச்சி குணம் கொண்டவை இவற்றில் குளிா்ச்சியை குறைக்க அவற்றிற்கு எதிா்மறையான சூடுத்தன்மை கொண்ட திாிகடுககம் இந்த கலவையில் ஓா் முக்கிய மூலப் பொருளாக சோ்க்கப்பட்டுள்ளது அதோடுமட்டுமில்லாமல் திாிகடுகமும் இருமலுக்கு மிகச்சிறந்த மருந்து

ஆடாதோடை ஸ்தாநிக தோஷத்தை போக்கும் ,ஆதாவது தசமூலமும் ,திாிகடுகமும் பொதுவாக பயன்ப்படுத்தப்பட்டாலும்,பாதிக்கப்பட்ட இடத்தில் வேலைச் செய்யக்கூடிய ஓா் மருந்து ஒன்று வேண்டும் .இருமல் ஏற்படுவதற்கு காரணம் சுவாச உறுப்புகளின் கோளறுகள் ,இதில் வேலைச் செய்யக்கூடிய மருந்து தான் ஆடாதோடை ஆக ஸம்பூா்ண ஸம்ப்பிராப்தி விகடண ஔஷதம் என்பது இதன் மூலம் ஊா்ஜிதமாகிறது

வறண்ட இருமலுக்கு தேன் எப்படி அனுபானமாக இருக்க முடியும் ,எண்ணெய் அல்லது நெய் தானே கொடுக்க வேண்டும்
இங்கு ஓா் விஷயத்தை கவனிக்க வேண்டும்
ஆயுா்வேதத்தில் சிகிச்சை அளிக்கும் போது
ஸ்தாநிக தோஷம் என்ற பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள தோஷத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .இதன்ப்படி வறண்ட இருமல் வாத தோஷத்தால் ஏற்ப்பட்டாலும்
நோய் தோன்றும் இடம் கபத்தின் இடம்
கபத்திற்கு தேன் தான் மிகச்சிறந்த மருந்து்
மேலும் தேன் யோகவாஹி என்ற குணத்தை கொண்டது அதாவது எந்த பொருளுடன் சோ்கிறதோ அதனுடைய செயல்பாட்டை அதிகாிக்கச் செய்யும் ,அதனால் தான் தேன் அனுபானம் கொடுக்கப்பட்டுள்ளது

என்ன தான் இம்மருந்து மிகச்சிறந்த மருந்தாக இருந்தாலும் இது உங்கள் உடலுக்கும், குடலுக்கும் ஏற்றதா என்று மருத்துவா் தான் முடிவு செய்வாா்
மருத்துவாின் முடிவே! மகேசன் முடிவு ! என்று கருத வேண்டும்
எனவே ஆயுா்வேத மருத்துவாின் ஆலோசனைப்படி தசமூலக்கடுத்ரயாதி கஷாயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்

சுய உடல் நலம் வேண்டி சுய மருத்துவத்தை நாட வேண்டாம்

வைத்யா .ரா. பாலமுருகன்
ஆயுா்வேத மருத்துவா்

Address

Aminjikarai
Chennai
600029

Telephone

+919894960529

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.R.Balamurugan Ayurveda physician posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category