Dr.Kathiravan - Iniya Specialty Clinic

Dr.Kathiravan - Iniya Specialty Clinic Dr. Kathiravan MD(Gen Med), CCDiab, CCEBDM

30/04/2023
சர்க்கரை நோயும் ,சில கேள்விகளும்:1. ஏன் இவ்வளவு பேருக்கு சர்க்கரை நோய் வருகிறது? 1990களுக்கு பிறகே இந்தியாவில் சர்க்கரை ...
13/05/2022

சர்க்கரை நோயும் ,சில கேள்விகளும்:

1. ஏன் இவ்வளவு பேருக்கு சர்க்கரை நோய் வருகிறது?

1990களுக்கு பிறகே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக ஆனது. அன்றோடு ஒப்பிடும்போது இன்றைய இந்திய மக்கள் தொகை இருமடங்காக ஆகியிருக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையோ கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு மடங்காகி இருக்கிறது. உலகமயமாக்கல் காரணமாக நம் உள்ளூர் சந்தையில் மலிவாக கிடைக்கும் very high calorie foods, உடல் உழைப்பு குறைவாக தேவைப்படும் வேலைகள் (desk jobs), உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணராத அடுத்த தலைமுறை, 24 மணிநேரமும் நம்மை தன்வசப்படுத்தி 'potato couch' ஆக மாற்றிவிடும் கேபிள் டிவி என்று இதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். இது அனைத்தும் சேர்ந்துதான் இந்தியாவை உலகத்தின் 'டயபடிஸ் தலைநகரமாக' மாற்றியிருக்கிறது.

2.. எந்தெந்த அறிகுறிகள் எல்லாம் சர்க்கரை நோய்க்கானவை?

1. அதிகமாக சிறுநீர் கழித்தல், அதிக பசி, அதிக தாகம்.
2. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
3. சிறுநீர்ப்பாதையில் ஆறாத நாட்பட்ட புண்.
4. உடலில் எங்கு அடிபட்டாலும் புண் ஆறுவதற்கு மிகுந்த காலம் எடுப்பது.
5. சட்டென்று உடல் எடை குறைதல்.

மேற்கூறியவற்றில் எந்த பிரச்சனை இருந்தாலும், அருகிலுள்ள மருத்துவரை பாருங்கள். உடனடியாக சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்தல் வேண்டும்.

3. ஏன் இன்னும் சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை?

சர்க்கரை நோயில் முதல்வகை இரண்டாம் வகை என இரண்டு வகை உண்டு. இதில் முதல் வகை இன்சுலின் குறைபாட்டால் வருவது(insulin deficiency). இதற்கு இன்சுலின் எடுத்துக் கொள்வது ஒன்றே மருந்து. ஒரு முழு நாளைக்கான இன்சுலின் தேவையை ஊசிகள் மூலமாகவோ அல்லது பம்ப் மூலமாகவோ இவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்த சர்க்கரை நோயாளிகளில் இவர்கள் ஐந்து சதவிகிதம் ஆவர். மீதமுள்ள 95%, இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள் ஆவர். இவர்கள் உடலில் தேவையான அளவு இன்சுலின் இருந்தாலும், பல காரணங்களால் அந்த இன்சுலினால் வேலை செய்ய முடியாமல் போய் விடுகிறது(insulin resistance). நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், உடல் பருமன் ஆகாமல் எடையை கட்டுக்குள் வைத்திருத்தல், குடிப்பழக்கத்தையும் புகைப்பழக்கத்தையும் விட்டுவிடுதல், மனக்கவலைகளை குறைத்து பாஸிட்டிவ் மனநிலையில் இருத்தல் - இவை அனைத்தும் insulin resistanceஐ குறைக்க உதவும். இது ஒரு lifestyle disease என்பதால் lifestyle changes மட்டுமே இதற்கு நிரந்தர மருந்தாகும். சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

4. ஒருமுறை சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை நான் எடுக்க ஆரம்பித்து விட்டால் அதை வாழ்க்கை முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

இதற்கும் பதில் மேலே சொன்னதுதான். நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறையும் எந்த அளவுக்கு மாற்றி கொள்கிறோமோ, அந்த அளவுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். சர்க்கரை நோய் வந்தாலும் ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இந்த செயல் முறைகளை ஒரு நாள், ஒரு மண்டலம் என்றெல்லாம் இல்லாமல் வாழ்க்கைக்கும் மாற்றி அமைத்துக் கொள்வதில் தான் சர்க்கரை நோயை வெற்றி கொள்வதின் ரகசியம் இருக்கிறது.

5. சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் எனக்கு எந்த தொந்தரவும் வருவதில்லை. ஏன் நான் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?

சர்க்கரை நோய்க்கு 'சைலன்ட் கில்லர்' என்ற பெயர் உண்டு. ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு வெளியில் எவ்வித தொந்தரவும் இல்லாமலேயே சர்க்கரை அளவு மட்டும் இரத்தத்தில் அதிகமாக இருக்கும். அவ்வாறு அதிகமாக இருக்கும் சர்க்கரை, உடலின் எல்லா உறுப்பையும் சிறிதுசிறிதாக பாதித்துவிடும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ,தொந்தரவு என்று வரும்போது, மிகப்பெரிய உடல் உபாதைகளை கொண்டு வந்துவிடும். வந்தபின் வைத்தியம் செய்வதைவிட வருமுன் காப்பதே சிறந்தது என்பதால், சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போதே அதை குறைக்க வழி முறைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

மேலும் பேசுவோம்...

கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசி தொடர்பாக பலருக்கு எழும் சந்தேகங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.1. கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்து...
10/08/2021

கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசி தொடர்பாக பலருக்கு எழும் சந்தேகங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

1. கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் எனக்கு கொரோனா வருமா?

இல்லை. வைரஸ் தடுப்பூசி மூலமாக நம் உடலில் செலுத்தப்படுவது உயிருள்ள கொரோனா வைரஸ் இல்லை. நம்மிடையே covishield, sputnik மற்றும் covaxin என்று மூன்று தடுப்பூசிகள் உள்ளன. இதில் covishield என்னும் தடுப்பூசியில் இருப்பது கொரோனா வைரஸின் ஒரு பாகமான 'spike protein' ஆகும். இதனை ' simian adenovirus' என்று அழைக்கப்படும் ஒரு ஆபத்தில்லாத வைரசின் மேலேற்றி நம் உடலில் செலுத்தப்படுகிறது. Sputnikம் கிட்டத்தட்ட இதே செய்முறையில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி ஆகும். இதில் simian adenovirusக்கு பதிலாக human adenovirus பயன்படுத்தப்படுகிறது. Covaxin என்பது கொல்லப்பட்ட கொரோனா வைரஸ் கிருமிகளால் ஆனது. இந்த தடுப்பூசிகள் நம் உடலில் செலுத்தப்பட்ட உடன், நமது immune systemஐ முடுக்கிவிட்டு கொரோனா வைரஸ்க்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. இதன் தொடர்ச்சியாக நமது உடல் கொரோனா வைரஸை எதிர்கொண்டால், அதை எதிர்த்துப் போராடும் சக்தியைப் பெற்று விடுகிறது. ஆகவே தடுப்பூசி எடுத்துக் கொண்டால் கொரோனா வரும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

2. எனக்குத் தெரிந்த சிலருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு சில நாளிலேயே கொரோனா வந்திருக்கிறதே??

தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநிமிடமே நமது உடல் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்ளாது. கொரோனா antibodies உருவாவதற்கு 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகே நம் உடல் தேவையான அளவு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்ளும். தடுப்பூசி போட்டுக் கொண்டதனாலேயே, நாம் கடைபிடிக்க வேண்டிய safety practicesஐ விட்டுவிட்டு மெத்தனமாக இருந்தால், நமக்கு கொரோனா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

3. எனக்கு ஏற்கனவே கொரோனா தொற்று வந்து அதிலிருந்து குணமடைந்து விட்டேன். இப்போது நான் மறுபடியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா?

கண்டிப்பாக வேண்டும். கொரோனா தொற்றினால் ஏற்படும் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாள் நம் உடலில் தங்கி இருக்கும் என்பதை இன்னும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஏற்கனவே தொற்று வந்தவருக்கு மறுபடியும் கொரோனா தொற்று வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆகவே ஏற்கனவே தொற்று வந்திருந்தாலும், தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுதல் நலம்.

4. தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால், 100% கொரோனா வராமல் தடுக்க முடியுமா?

தடுப்பூசி என்பது நமது உடலில், கொரோனா வைரஸ்க்கான எதிர்ப்பாற்றலை உருவாக்கி வைரஸை எதிர்த்துப் போராடும் சக்தியை பெற்று தருகிறது. அதனால் கொரோனா வைரஸ் நமது உடலில் நுழையேவே விடாமல் தடுக்குமா என்றால் இல்லை. ஆனால் தொற்றினால் ஏற்படும் பெருமளவு பாதிப்பை தடுப்பூசி போட்டுக் கொண்டதால் குறைக்கமுடியும். It doesn't prevent the covid virus infection completely. But it can reduce the complications and the chances of ICU admission by keeping the damage to a minimum.

5. இந்த கொரோனா தடுப்பூசியில் பக்க விளைவுகளே இல்லையா?

பக்கவிளைவுகளே இல்லாத ஒரு மருந்தோ உணவோ கிடையாது. அப்படி பார்ப்பதற்கு பதிலாக, இதை எடுத்துக் கொள்வதால் நமக்கு வரும் நன்மைகள் என்ன மற்றும் ஆபத்துக்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். இதை ஆங்கிலத்தில் Risk-Benefit analysis என்று சொல்லுவார்கள். பக்க விளைவுகளை விட நன்மைகள் அதிகமாக இருப்பின் அதை எடுத்துக் கொள்வதே புத்திசாலித்தனமாகும். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சிலருக்கு உடல்வலி, காய்ச்சல், சோர்வு ஆகிய பக்க விளைவுகள் காணப்படுகின்றன. மிகமிக அரிதாக சிலருக்கு ரத்தம் உறைதலில் பிரச்சனைகள் வரலாம் என சொல்லப்படுகிறது. ஆகையால்தான் ரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதே போல் இதற்கு முன்னர், வேறு தடுப்பூசிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடப்படுவது இல்லை.

நாம் இப்பொழுது மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த அலையை எப்படி வெற்றி கொள்ளப் போகிறோம் என்பது நமது செயல்களில் தான் இருக்கிறது. ஆகவே, தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ளுங்கள். எங்கு சென்றாலும் mask அணிந்து செல்லுங்கள். கூட்டமான இடங்களை தவிர்த்து விடுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். சார்லஸ் டார்வின் சொன்னதை மனதில் வையுங்கள்- " தன்னுடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளும் உயிரினம் தப்பிப்பிழைக்கும்."

@மரு. கதிரவன்
09.08.21

03/08/2021

Covid 19 & Diabetes:
( கோவிட் தொற்றும், சர்க்கரை நோயும்)

1. சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக அளவில் கோவிட் தொற்று வருமா?

இல்லை. அவ்வாறு வரும் என்று எந்த ஆய்வு முடிவுகளும் இல்லை. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு கோவிட் தொற்று வந்தால், அதிக பாதிப்பு வரும் என தெரிகிறது. அதுவும் சர்க்கரை அளவு கட்டுப்பாடு அற்று இருக்கும் நோயாளிகளுக்கு பாதிப்பு அதிகம். அதிக அளவு சர்க்கரையானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, வைரஸ் உடன் போராடி வெற்றி பெறும் ஆற்றலை குறைத்துவிடுகிறது. அதோடு மட்டுமில்லாமல், கட்டுப்பாடற்ற சர்க்கரையானது Diabetic ketoacidosis மற்றும் Sepsis போன்ற சிக்கல்களையும் உருவாக்குவதால், அதிதீவிர நோய் தொற்றும் அதனால் உயிரிழப்புகளும் அதிகமாகிறது.

2. எனக்கு சக்கரை நோய் இருந்தால், கோவிட் நோய் தொற்று வராமல் எப்படி தற்காத்துக் கொள்வது?

a. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். (HbA1C அளவு 6க்கு கீழ் இருக்க வேண்டும்)

b. தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம். டைப் 1& 2 என இருவகையான டயாபட்டீஸ் உள்ளவர்களும் தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்.

c. சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது மற்றும் சுத்தமான நடைமுறைகள் ஆகியவற்றை கவனமாக பின்பற்ற வேண்டும். மற்றவர்களைவிட சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் முக்கியம்.

3. சர்க்கரை நோயாளிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? அதில் ஏதாவது சிக்கல் வருமா?

கிடைக்கும் 3 தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். அதில் எந்தவித சிக்கலும் இல்லை.

4. சர்க்கரை நோயாளியான எனக்கு கோவிட் வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

a. உடனே உங்களுடைய மருத்துவரை அணுகுதல் வேண்டும். கோவிட் மட்டுமல்ல, எந்தவொரு நோய்த்தொற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாடு இல்லாமல் ஆக்கும் தன்மை கொண்டது. ஆகவே அதற்கேற்றார்போல் சர்க்கரை மருந்தின் அளவை மாற்றுதல் வேண்டும். தேவைப்பட்டால் இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்ளும் நிலை வரலாம். சிறிது நாட்களுக்குப் பிறகு சர்க்கரை அளவைப் பொறுத்து மறுபடியும் மாத்திரைகளுக்கு மாறிவிட முடியும்.

b. தொடர் கண்காணிப்பும், சர்க்கரை அளவு கட்டுப்பாடும், கோவிட் நோய் தொற்றை வேகமாக குணப்படுத்திவிடும். எனவே முறையான கண்காணிப்பு அவசியம்.

5. கோவிட் தொற்றினால் சர்க்கரை வியாதி வருமா?
கோவிட் வைரஸானது இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை தாக்குகிறது என எந்த ஆய்வுகளும் இல்லை. நோய்த்தொற்றின் தீவிரத்தாலும்(stress of covid), அதி தீவிர நோய் தொற்றில் செலுத்தப்படும் ஸ்டீராய்டு ஊசிகளாலும் சிலர் pre-diabetes நிலையிலிருந்து diabetes நிலைக்கு செல்லலாம்(unmasking of previous diabetic phase).

ஆகவே நோய்த் தொற்றில் இருந்து வெளிவரும் நபர், முறையான உணவுக் கட்டுப்பாடுகளும், மிதமான உடற்பயிற்சியையும் எவ்வளவு விரைவில் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவில் தொடங்க வேண்டும். உடல் எடையை பராமரித்தல் அவசியம். சிலருக்கு நோய்த்தொற்று சமயத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்து, டிஸ்சார்ஜ் சமயத்தில் சர்க்கரை அளவு நார்மலாக இருக்கும். அவ்வாறு நோய்த் தொற்றில் இருந்து வெளிவந்த நபர், ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரை அளவை டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் கட்டுப்பாடுடன் இருக்கும் நபருக்கு, கோவிட் நோய் தொற்றினால் ஏற்படும் பாதிப்பானது சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை போலவே மிதமாக இருக்கும் என்று உறுதியாக கூறமுடியும். எனவே சர்க்கரை அளவை கட்டுப்பாடுடன் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள். தடுப்பூசி தவறாமல் செலுத்தி கொள்ளுங்கள்.

மரு. கதிரவன்
3.8.21

Dr. Kathiravan MD(Gen Med), CCDiab, CCEBDM

கோவிட் 19 தொற்று மூன்றாம் அலை வரலாம் என்ற நிலை இருக்கும் வேலையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?1. இந்த தொற்...
30/07/2021

கோவிட் 19 தொற்று மூன்றாம் அலை வரலாம் என்ற நிலை இருக்கும் வேலையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

1. இந்த தொற்று கண்டிப்பாக குழந்தைகளை தாக்குமா?

யாராலும் நிச்சயம் சொல்ல முடியாது. தொற்று ஒன்றன்பின் ஒன்றாக அலை அலையாக வருவதற்கு காரணம், வைரஸில் ஏற்படும் உருவ மாற்றங்கள் ஆகும். வைரஸ் இந்த மாதிரிதான் உருமாறும் என்பது கணிக்க முடியாத ஒன்று. இதுவரை பெரியவர்களை அதிகம் பாதித்து வந்த இந்த தொற்று குழந்தைகளை பெருமளவு பாதிக்கவில்லை என்ற கூற்றின் அடிப்படையில் சொல்லப்பட்ட விஷயம் இது. ஆனால் AIIMS மருத்துவமனையில் கடந்த மூன்று மாத காலமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், பெரியவர்களில் எத்தனை சதவிகித பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதோ, கிட்டத்தட்ட அதே அளவு நோய் எதிர்ப்புசக்தி குழந்தைகளுக்கும் உள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது. குழந்தைகளில் பலபேருக்கு இந்த தொற்று asymptomaticஆக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும், பெரியவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் பத்திரமாக இருத்தல் அவசியம்.

https://www.google.com/amp/s/wap.business-standard.com/article-amp/current-affairs/third-wave-of-covid-19-won-t-pose-greater-risk-to-children-study-121061800053_1.html

2. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாமா?

இந்தியாவில் அதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் மாத முடிவில், 12-18 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Zydus cadila என்ற நிறுவனத்தின், ZyCoV-D என்ற தடுப்பூசி பரிசீலனையில் உள்ளது. 2-12 வயதிலான குழந்தைகளுக்கு, Covaxin தடுப்பூசி ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. செப்டம்பர் மாத இறுதியில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.google.com/amp/s/m.timesofindia.com/india/covid-vaccination-for-children-may-begin-in-august/amp_articleshow/84818393.cms

3. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் போட வேண்டுமா?

இந்தக் கேள்விக்கு சரியான பதில் இதுவரை அறியப்படவில்லை. அமெரிக்காவில் செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு(Pfizer, astra zeneca) பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. நம் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற covaxinக்கு பூஸ்டர் டோஸ் தேவையா என்று ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நவம்பர் மாத இறுதியில் முடிவுகள் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. அதைப் பொறுத்தே அரசின் guidelines அமையும்.

https://www.google.com/amp/s/www.livemint.com/news/india/no-recommendation-on-booster-vaccine-dose-as-of-now-centre-to-parliament/amp-11627388191764.html =

4. கொரோனா மூன்றாவது அலை எவ்வாறு இருக்கும்?

கணிப்பது மிகவும் சிரமம். இரண்டாவது அலையை விட மோசமாக இருக்கும் என்று ஒரு கருத்தும், மிதமாக இருக்கும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ஆனால் ஒன்று உறுதி. Monsoon season என்ற மழைக்காலம் ஆரம்பித்து இருப்பதால், டெங்கு மலேரியா போன்ற நோய்த்தொற்றுகளுடன் சேர்ந்து கோவிட் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகவே, மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். மிதமான அறிகுறிகள் தெரிந்தாலும், மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

5. எந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்?

இந்தியாவில் தற்போது covishield, covaxin, sputnik என்று மூன்று தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இவற்றில் எது கிடைக்கிறதோ அதை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது அதிக அளவில் இருக்கும் டெல்டா வகை கொரோனாவை எதிர்க்கும் சக்தி மூன்று தடுப்பூசிகளும் நன்றாகவே உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதியுள்ள மக்கள்தொகையில், 30.6% ஒரு டோஸ் தடுப்பூசியையும், 6.65% இரண்டு டோஸ் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளனர். இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது. தடுப்பூசிகள், மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி மட்டுமே மூன்றாம் அலையில் இருந்தும் நம்மை காக்கும். கவனமுடன் இருங்கள்.

மரு. கதிரவன்
30.7.21

30/07/2021

Address

122, Mettukuppam Main Road, Near Amma Unavagam, Maduravoyal
Chennai
600095

Opening Hours

Monday 6pm - 9pm
Tuesday 6pm - 9pm
Wednesday 6pm - 9pm
Thursday 6pm - 9pm
Friday 6pm - 9pm
Saturday 6pm - 9pm

Telephone

+919840683481

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Kathiravan - Iniya Specialty Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Kathiravan - Iniya Specialty Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category