Guru Arul Astro Reserch Center

  • Home
  • Guru Arul Astro Reserch Center

Guru Arul Astro Reserch Center Astrology Reserch center healing with Manthra

துவித நாகபந்தம்================பாம்பன் சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரம் பூராடம் ஆகும். பூராட நட்சத்திரத்தின் மித்ர தாரைகள் ...
24/05/2025

துவித நாகபந்தம்
================

பாம்பன் சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரம் பூராடம் ஆகும். பூராட நட்சத்திரத்தின் மித்ர தாரைகள் கேட்டை ஆயில்யம் மற்றும் ரேவதி ஆகும். ஆயில்யம் என்பதன் வடிவம் நாகம் ஆகும்.

பாம்பன் சுவாமிகள் ராகு கேதுவின் பிடியில் இருந்து மனிதர்களை பாதுகாக்க ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தின் பெயர் துவித நாகபந்தம் என்பதாகும்.

தனது மித்ர தாரை வடிவமான நாகத்தின் உட்பொருள் கொண்டு இயற்றிய இம்மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

இம்மந்திரத்தை மூலம் மகம் மற்றும் அஸ்வினி ஆகிய நட்சத்திர காரர்களும், ஆயில்யம் கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திர காரர்களும் தினமும் சொல்லி வழிபட்டு வர ராகு மற்றும் கேதுவினால் ஏற்படும் தீமைகள் குறையும்.

திருவோணம் ரோகிணி மற்றும் அஸ்தம் நட்சத்திர நண்பர்கள் இந்த மந்திரத்தை சொல்லி வர மகப்பேறு பிரச்சினைகள் தீர்ந்து நன்மை நடக்கும்.

மேலும் ராகுவின் தோஷம் பெற்ற சதயம் பூசம் மற்றும் விசாக நட்சத்திரக்காரர்கள் இம்மந்திரத்தை சொல்லி வருவது உடல் உபாதைகள் மற்றும் கடன் தொல்லைகள் அமானுஷ்ய சக்திகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.

24/01/2025

#பாலவம்_கரணம் பெண் தெய்வ வழிபாடு சிறப்பினை தரும். இந்த கரணம் மண் தத்துவமாக வருவதால் இவர்களுக்கு வரும் உபாதைகளு.....

24/01/2025

வணக்கம். நடக்கின்ற திசையில் கெடுதல் குறைத்து நற்பலன் பெற ஒருவருக்கு என்ன திசை நடக்கிறதோ அந்த திசைக்கு உண்டான வ...

24/01/2025

#சந்திராஷ்டமம் ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த கால.....

24/01/2025

#நீண்ட_நாள்_வியாதி_சரியாக: நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று சொல்வோர்களை தா....

14/12/2024

*பொறாமையால் ஏற்படும் தீங்கு*💐

கை, கால், காது, கண், நாக்கு, என, அனைத்து உறுப்புகளும் நன்றாக இருப்போர், அங்கஹீனம், காது கேளாமை, பேச்சு இழந்தோர், பார்வையற்றோர் ஆகியோரைப் பார்க்கும் போது, ஆண்டவா... எந்தக் குறையும் இல்லாமல் என்னைப் படைத்தாயே... என்று, இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். அதே சமயம், தெருவில், யாராவது சிரித்து பேசி செல்வதைப் பார்த்தால், சிரிப்பைப் பார்... சிரிப்பை! என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு... என்று, சிலருக்கு மனம் வெம்முகிறது.

அடுத்தவர்கள் சற்று மகிழ்ச்சியாக இருந்தால் கூட, இவர்களால் பொறுக்க முடிவதில்லை. இந்த பொறாமை குணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு, அரண்மனை வாழ்வு, ஆள், அம்பு, சேனை, ராஜபோகம், பணிப்பெண்கள் என, அனைத்து வசதிகளும் இருந்தன. திருதராஷ்டிரன் தம்பியான பாண்டுவின் மனைவி குந்தியோ, காட்டில் ஒரு வசதியும் இல்லாத சூழலில் வசித்து வந்தாள். இந்நிலையில், குந்திதேவிக்கு, காந்தாரிக்கு முன்னரே, குழந்தை பிறந்து விட்டது. இச்செய்தி, நாட்டில் வாழ்ந்த காந்தாரிக்கு தெரிந்ததும், அவளுக்கு பொறுக்க முடியவில்லை. அவள் உள்ளத்தில் பொறாமைத் தீ, எரிமலை குழம்பாய் வெடித்து, வழிந்தது. அதன் விளைவாக, காந்தாரி, ஒரு அம்மி குழவியைக் எடுத்து, தன் வயிற்றில் இடித்துக் கொண்டாள். அவள் கரு சிதைந்து, ரத்தம் கலந்த சதை கூறுகளாக சிதறின.

வியாசர் அந்தச் சதை கூறுகளை, நூற்றியொரு குடங்களில் இட, துரியோதனன் முதலான நூறு பேர்களும், துச்சலை என்ற ஒரு பெண்ணும் உருவாயினர். காந்தாரியின் இத்தகைய பொறாமை குணத்தின் காரணமாகவே, கவுரவர்களும் இயல்பிலேயே பொறாமை குணம் படைத்தோராக விளங்கி, பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமையால் அழிந்தனர். நாம் யாரைக் கண்டு பொறாமைப்படுகிறோமோ, அவர்களுக்கு ஒன்றும் நேராது; பொறாமைப்பட்ட நமக்குத்தான் கேடு விளையும். எனவே, பொறாமையை மனதிலிருந்து துரத்தி, நற்சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். நடப்பவை, நல்லனதாகவே அமையும்

*ஸர்வம் ஸ்ரீ*
*கிருஷ்ணார்ப்பணம்* 🌹

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onb...
28/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! Neelagandan Kamalanathan, Sajeesh Kumar, Jagan Rose, Viswanathan D, Raja Mo, காஞ்சி ஈஸ்வரன் யாதவ், Sivaraman Ramani Iyar, Bala Murugan, Ram, Rama, Manoharan Mari, லேகா லேகா, Thaniswaran Thanis, Jaikumar, Astro Ravi Jothitar Ravi, Thangarasu, அழகர்சாமி ஜோதிடர், Sakthivel, Kannan, Balaji Anand, Elavarasan S S Elavarasan, Kumar Evp, Amritpal Singh

13/02/2024

கடன் சுமையா?

தீராத கடனும் காணாமல் போகும்..செவ்வாய்கிழமை இதை மட்டும் செய்யுங்கள்..
ஆன்மீகம் கூறும் ரகசியம்..

கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.

கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர்

கடன் தீர்க்கும் பைரவர்

அவசிய தேவைக்காக நாம் திங்கட்கிழமை கடன் வாங்கலாம். செவ்வாய்கிழமை கடனை அடைக்கலாம். கடன் பிரச்சினையில் இருந்து அடைபட வேண்டும் என்றால் ருண விமோசனரை வழிபடலாம். பைரவர் வழிபாடு கடன் பிரச்சினையை தீர்க்கும். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். தீபம் ஏற்றும் போதே கடன் தீர மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

செவ்வாய்கிழமை பரிகாரம்
கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை செவ்வாய் ஹோரை. இதேபோல் செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணி வரை செவ்வாய் ஹோரை அதே போல இரவு 8 மணி முதல் 9 மணி வரைக்கும் செவ்வாய் ஹோரை வருகிறது. உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் நினைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பு 3 கை பிடி அளவு கல்லுப்பு தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். புதிய கல் உப்பு பாக்கெட் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வாங்கிவைத்துக்கொள்வது நல்லது

காணாமல் போகும் கடன்

பூஜை அறையில் அமர்ந்து ஒரு மஞ்சள் நிறத் துணியில் 3 முறை உங்களுடைய உள்ளங்கை நிரம்ப கல்லுப்பைக் கிண்ணத்திலிருந்து எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைக்க வேண்டும். மூன்று கைப்பிடி கல் உப்பை, உங்கள் கைகளால் எடுக்கும்போதும் 'கடன் சுமை கரைந்து போக வேண்டும் பணப்பிரச்சனை தீர வேண்டும்.' இவ்வாறாக மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த மஞ்சள் துணியில் உப்பை வைத்து, ஒரு முடிச்சுப் போட்டு கட்டி இந்த முடிச்சை மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடவேண்டும். ஒரு வாரம் வரை கல் உப்பை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருங்கள். மறு வாரம் வரக்கூடிய செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில், பூஜை அறையில் இருக்கக்கூடிய கல் உப்பை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும். குறிப்பாக மஞ்சள் துணியில் கட்டி இருக்கும் கல் உப்பை உங்களுடைய உள்ளங்கைகளால் எடுத்து மூன்று முறை தண்ணீரில் போட்டு உங்கள் கடன் கரைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கரையுங்கள். உப்பை கரைத்து இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் விட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்தால் எவ்வளவு பெரிய கடனும் தண்ணீரில் கரைத்த உப்பு போல சீக்கிரம் கரைந்து போகும்.

மிளகும் கல் உப்பும்

கறுப்பு மிளகுடன் சிறிதளவு கல்லுப்பு சேர்த்து உங்களையும், உங்கள் வீட்டையும் சுற்றி விட்டு அதனை எரியும் நெருப்பில் போட்டு விட்டால் அந்த நெருப்பில் எப்படி மிளகு வெடிக்கிறதோ அதே போல் உங்களுக்கு இருக்கும் அனைத்து கண் திருஷ்டிகளும் காணாமல் போய் விடும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் கடன் பிரச்சினை படிப்படியாக காணாமல் போகும். அதிக பண வருமானமும் வரும்.

குங்குமம் பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் குங்குமம் வாங்கி வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு குங்குமத்தை கொடுத்து விட்டு வர கடன் பிரச்சினை நீங்கும். தொடர்ந்து 11 வாரம் குங்குமம் வாங்கி வைத்து வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு கொடுத்து விட்டு வர வேண்டும்.
கடனாளியாக எழுவதை விட பட்டினியாக உறங்குவது மேல் என்று கூறுவார்கள். வேறு வழியின்றி கடன் பெற்றவர்கள் இந்த பரிகாரங்களை செய்து வாருங்கள் கடன் பிரச்சினை நீங்கி நிம்மதி பெறுவீர்கள்.

கடன் பிரச்சினை தீர்க்கும் தெய்வங்கள்
திங்கட்கிழமை அன்று ருண விமோசனரை வழிபட்டால் கடன் பிரச்சினை நீங்கும். திருவாரூர், திருச்சேரை திருத்தளத்தில் ருண விமோசனரை வணங்கலாம். திருப்பதி ஏழுமலையானையும், திருஆவினன் குடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முருகப்பெருமானையும் வணங்கினால் கடன் பிரச்சினை நீங்கும். திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும். நம்முடைய கடன் சுமையை பெருமாள் தீர்த்து வைப்பார்.

24/06/2023

சனி+கேது இணைவு உள்ளவர்களுக்கு
விரைவிலேயே முதுமை வந்துவிடும்

மூட்டு வலி

கை கால் குடைச்சல்

எலும்பு வலிமை குறைதல்

உடல் இயக்கம் தடைபடுதல்‌ உண்டு
💐💐💐💐💐

நிவர்த்தி பெற

முடக்கத்தான் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்குங்க

துவையலாகவும் சேர்க்கலாம்.. வாரம் இருமுறை

நன்றி

Address

AL

Opening Hours

Monday 10:05 - 19:51
Tuesday 10:05 - 19:55
Wednesday 10:56 - 19:55
Thursday 11:55 - 20:04
Friday 11:09 - 19:50
Saturday 10:10 - 20:07
Sunday 01:05 - 19:54

Telephone

+19382141740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guru Arul Astro Reserch Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Guru Arul Astro Reserch Center:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram