Sri sivaguru astro world

Sri sivaguru astro world துல்லியமான ஜோதிடப் பலன்கள் மற்றும் ஆன்மீக தகவல்கள். ஆன்மீக ஜோதிட ஆலோசனைகள் மற்றும் ஜோதிட பரிகாரங்கள்!

அகத்தியர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்(எல்லோரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)சந்திரனே நட்சத்திரங்களின் தலைவன் என்கிறது ...
04/04/2025

அகத்தியர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்
(எல்லோரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)
சந்திரனே நட்சத்திரங்களின் தலைவன் என்கிறது கீதை
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை வைத்தே பூமியில் பிறக்கும் எல்லோருடைய பிறப்பு நட்சத்திரம் / விம்சோத்ரி தசா புத்தி அந்தரம் /ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது.

27 நட்சத்திரங்களின் தேவி மந்திரங்களை தினமும் சொல்லிவருவதன் மூலம் உலகில் எல்லா மனிதர்களும் நலம் பலம் மேன்மை அடையலாம் என்ற நல்ல நோக்கத்தில் அகத்தியர் விஜயம் வெளியிட்ட நட்சத்திர சஹாயத் திருவாக்கியத் திரட்டு உங்களுக்கும் நன்மையளிக்க பகிர்கிறேன்…………………….
அகத்தியர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்
(எல்லோரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)
சந்திரனே நட்சத்திரங்களின் தலைவன் என்கிறது கீதை
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை வைத்தே பூமியில் பிறக்கும் எல்லோருடைய பிறப்பு நட்சத்திரம் / விம்சோத்ரி தசா புத்தி அந்தரம் /ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது*

27 நட்சத்திரங்களின் தேவி மந்திரங்களை தினமும் சொல்லிவருவதன் மூலம் உலகில் எல்லா மனிதர்களும் நலம் பலம் மேன்மை அடையலாம் என்ற நல்ல நோக்கத்தில் அகத்தியர் விஜயம் வெளியிட்ட நட்சத்திர சஹாயத் திருவாக்கியத் திரட்டு உங்களுக்கும் நன்மையளிக்க பகிர்கிறேன்… 🙏

நட்சத்திர சஹாயத் திருவாக்யத் திரட்டு

1. சுமநாய வந்தித தேவ மநோஹரி அஸ்வினி தேவி சஹாய க்ருபே

2. க்ஷீரசமுத்பவ திவ்ய ரூபிணி பரணி தேவி சஹாய க்ருபே

3. பங்கஜ வாஸிநி பாப விமோசனி க்ருத்திகா தேவி சஹாய க்ருபே

4. மோக்ஷ ப்ரதாயிநி மங்கள பாஷிணி ரோகிணி தேவி சஹாய க்ருபே

5. மந்திர நிவாசினி சந்திர பத்தினி ம்ருகசீரிஷ தேவி சஹாய க்ருபே

6. தேவஸுபூஜித ஸத்குணவர்ஷிணி திருஆதிரை தேவி சஹாய க்ருபே

7. அம்புஜ வாஸிநி தேவகணசேவித புனர்பூச தேவி சஹாய க்ருபே

8. ஜெயவர வர்ணிநி ஜெயப் பிரதாயினி சிவ பூச தேவி சஹாய க்ருபே

9. சீக்ர பலப்ரத பவபய ஹாரிணி சுப ஆயில்ய தேவி சஹாய க்ருபே

10. சாது ஜடராச்ரித தேவமுனி பூஜித யோக மகம் தேவி சஹாய க்ருபே

11. துர்கதி நாசினி தூபப் ப்ரகாசினி ஜெய பூரம் தேவி சஹாய க்ருபே

12. ஞானமய மோஹினி சாஸ்திர ஸ்வரூபிணி உத்திர தேவி சஹாய க்ருபே

13. ஹரிஹர சகாய ஆனந்த பூஜித லாப ஹஸ்த தேவி சஹாய க்ருபே

14. ரத கஜ துரக பதாதி சேவக சாஸ்திர மய சித்ரா தேவி சஹாய க்ருபே

15. சக்ரிணி ராக விவர்திநி ஞானமய சுவாதி தேவி சஹாய க்ருபே

16. குங்கும அர்ச்சித அனுதின சேவித விசாக தேவி சஹாய க்ருபே

17. சந்திர ப்ரகாசினி கந்தர்வ கானமய அனுஷ தேவி சஹாய க்ருபே

18. பாரதி பார்கவி மந்திரமய கோபுர கேட்டை பிரதாயினி சஹாய க்ருபே.

19. சங்கர தேசிக சாந்த பூரண அன்ன மூல தேவி சஹாய க்ருபே.

20. அனுதின சேவித அச்சுத வரப்பிரசாத பூராட தேவி சஹாய க்ருபே.

21. சோகவிநாசினி ரத்னாலங்கார உத்திராட தேவி சஹாய க்ருபே.

22. மணிமய பூஜித சாந்த சொரூபிணி திருவோண தேவி சஹாய க்ருபே.

23. காவிரி கங்கா கதிரல சேவித காந்த அவிட்ட தேவி சஹாய க்ருபே.

24. மூலிக சேவித முனிப்ரசாத சதய தேவி சஹாய க்ருபே.

25. நவநிதி தாயினி நமசிவாயினி பூரட்டாதி தேவி சஹாய க்ருபே.

26. சங்க பதுமநிதி சகாய ரட்சக உத்திரட்டாதி தேவி சஹாய க்ருபே.

27. ஸ்வர்ணப் ப்ரதாயினி சூட்சும சகாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே.

நட்சத்திர சஹாயத் திருவாக்யத் திரட்டு

1. சுமநாய வந்தித தேவ மநோஹரி அஸ்வினி தேவி சஹாய க்ருபே

2. க்ஷீரசமுத்பவ திவ்ய ரூபிணி பரணி தேவி சஹாய க்ருபே

3. பங்கஜ வாஸிநி பாப விமோசனி க்ருத்திகா தேவி சஹாய க்ருபே

4. மோக்ஷ ப்ரதாயிநி மங்கள பாஷிணி ரோகிணி தேவி சஹாய க்ருபே

5. மந்திர நிவாசினி சந்திர பத்தினி ம்ருகசீரிஷ தேவி சஹாய க்ருபே

6. தேவஸுபூஜித ஸத்குணவர்ஷிணி திருஆதிரை தேவி சஹாய க்ருபே

7. அம்புஜ வாஸிநி தேவகணசேவித புனர்பூச தேவி சஹாய க்ருபே

8. ஜெயவர வர்ணிநி ஜெயப் பிரதாயினி சிவ பூச தேவி சஹாய க்ருபே

9. சீக்ர பலப்ரத பவபய ஹாரிணி சுப ஆயில்ய தேவி சஹாய க்ருபே

10. சாது ஜடராச்ரித தேவமுனி பூஜித யோக மகம் தேவி சஹாய க்ருபே

11. துர்கதி நாசினி தூபப் ப்ரகாசினி ஜெய பூரம் தேவி சஹாய க்ருபே

12. ஞானமய மோஹினி சாஸ்திர ஸ்வரூபிணி உத்திர தேவி சஹாய க்ருபே

13. ஹரிஹர சகாய ஆனந்த பூஜித லாப ஹஸ்த தேவி சஹாய க்ருபே

14. ரத கஜ துரக பதாதி சேவக சாஸ்திர மய சித்ரா தேவி சஹாய க்ருபே

15. சக்ரிணி ராக விவர்திநி ஞானமய சுவாதி தேவி சஹாய க்ருபே

16. குங்கும அர்ச்சித அனுதின சேவித விசாக தேவி சஹாய க்ருபே

17. சந்திர ப்ரகாசினி கந்தர்வ கானமய அனுஷ தேவி சஹாய க்ருபே

18. பாரதி பார்கவி மந்திரமய கோபுர கேட்டை பிரதாயினி சஹாய க்ருபே.

19. சங்கர தேசிக சாந்த பூரண அன்ன மூல தேவி சஹாய க்ருபே.

20. அனுதின சேவித அச்சுத வரப்பிரசாத பூராட தேவி சஹாய க்ருபே.

21. சோகவிநாசினி ரத்னாலங்கார உத்திராட தேவி சஹாய க்ருபே.

22. மணிமய பூஜித சாந்த சொரூபிணி திருவோண தேவி சஹாய க்ருபே.

23. காவிரி கங்கா கதிரல சேவித காந்த அவிட்ட தேவி சஹாய க்ருபே.

24. மூலிக சேவித முனிப்ரசாத சதய தேவி சஹாய க்ருபே.

25. நவநிதி தாயினி நமசிவாயினி பூரட்டாதி தேவி சஹாய க்ருபே.

26. சங்க பதுமநிதி சகாய ரட்சக உத்திரட்டாதி தேவி சஹாய க்ருபே.

27. ஸ்வர்ணப் ப்ரதாயினி சூட்சும சகாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே.🌹🙏🌹🙏
Kaalagnanam Ravishashthry

ஏழரைச்சனி , அஷ்டம சனி, கண்டகச்சனி, அர்த்தாஷ்டம சனி என்று நடப்பில் இருப்பவர்கள், சந்திரனுடன் சனி, ராகு, கேது , செவ்வாய், ...
25/03/2025

ஏழரைச்சனி , அஷ்டம சனி, கண்டகச்சனி, அர்த்தாஷ்டம சனி என்று நடப்பில் இருப்பவர்கள், சந்திரனுடன் சனி, ராகு, கேது , செவ்வாய், சூரியன் சேர்ந்திருக்கப் பிறந்த ஜாதகர்கள், சனி தசையில் ராகு புத்தி அல்லது ராகு தசையில் புதன் புத்தி அல்லது செவ்வாய் தசையில் கேது புத்தி என்று நடப்பு தசாபுத்திகள் நடப்பில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பான மணிமந்த்ரமாக நற்பலன்களை அனுபவிக்க குபேர தனாகர்ஷண யந்த்ரம் வழிபாடு ஓர் வரப்பிரசாதம்.. அனுபவித்தவர்கள் சிலாகிக்கின்றார்கள். அறியாதவர்கள் அவதிப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. Kaalagnanam Ravishashthry // 8124624165 //

11/03/2025
அன்பு உள்ளங்களுக்கு இனிய சுபோதயம்  !        மனிதனின் வாழ்க்கையில் எப்பொழுதும் துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட...
10/03/2025

அன்பு உள்ளங்களுக்கு இனிய சுபோதயம் !
மனிதனின் வாழ்க்கையில் எப்பொழுதும் துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட குறைவில்லாத பொருளாதாரமே துணையாக இருக்கின்றது என்பது எந்த அளவுக்கு உண்மையோ
அதுபோல் வாழ்க்கையில் மனிதர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற ஊதியமும், அதன்மூலம் கிடைக்கின்ற வருமானமும் வீண் விரையச் செலவுகள் ஆகாமலும், எப்பொழுதும் ஏதேனும் ஒரு வகையில் தேவைக்கேற்ற பணமும் நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்கு அருள்மிகு ஐஸ்வர்யேஸ்வரரும், மாஹாலசஷ்மியும் அருள் நிறைந்திருக்க வேண்டும்.
ஆகையால் வருகின்ற
14 - 3 - 2025 வெள்ளிக்கிழமை உத்திரம் நட்சத்திரத்தில் ஏற்பட இருக்கின்ற " பௌர்ணமி சந்திர கிரகணம் " அன்று தனாக்ருஷ்ண யந்திரங்கள் எழுதப்பட்டு பூஜைக்கு தயாராகிக் கொண்டிருப்பதால் பொருளாதார ரீதியாக அடிக்கடி பாதிப்புக்களை சந்தித்துக் கொண்டிருக்கும் அன்பர்கள் நம்பிக்கையிருந்தால் அலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய தட்சணையைக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம் ! Kaalagnanam Ravishashthry // 8124524165 //

அன்பு உள்ளங்களுக்கு !                  உலக மக்கள் எத்தனையோ விதங்களில் எத்தனையோ தெய்வங்களை வணங்கி வழிபட்டு வருகிறோம். ஆனா...
01/02/2025

அன்பு உள்ளங்களுக்கு !
உலக மக்கள் எத்தனையோ விதங்களில் எத்தனையோ தெய்வங்களை வணங்கி வழிபட்டு வருகிறோம். ஆனால் கிரகங்கள் சரியில்லாதபோதும், தெய்வ வழிபாடுகள் பலனளிக்காதபோதும் அவரவர்களின் கன்னி தெய்வங்களை வணங்கி வழிபடுவார்களானால் உண்மையிலேயே அவர்களின் துன்பங்கள் நீங்கி நிம்மதி அடைவார்கள் .
அதாவது, ஒரு மனிதன் உதவிடுவோர் யாருமில்லாது நிற்கதியாக நிற்கும் ஆபத்துக் காலங்களில் அவர்களுடைய கன்னி தெய்வங்கள் வந்து பேசும் என்பதை மனதார புரிந்து கொள்ளுங்கள்.
இதில் ஒரு விசயம் என்னவென்றால்., எந்த ஒரு வீட்டில் அபார்ஷன் நடந்திருந்தாலும் சரி. குழந்தைகள் பிறந்து இறந்திருந்தாலும் சரி. அம்மை போட்டு இறந்திருந்தாலும் சரி. சர்ப்பம் தீண்டி இறந்திருந்தாலும் சரி. அகோர மரணமடைந்திருந்தாலும் சரி அல்லது சீலைக்காரி அம்மன், அக்னியில் மாண்ட பெண்களை வைத்து கன்னிதெய்வமாக வழிபாடு செய்தாலும் சரி, வீட்டில் தலைச்சன் பிள்ளை பிறந்து இறந்துவிட்டால் வீட்டிற்குள்ளேயே நடுவாசலில் புதைப்பது அல்லது வீட்டிற்குள் அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்ற பகுதிகளில் புதைத்து வைத்து வழிபடுவது, வீட்டிற்குள் அந்தக் குழந்தையே தெய்வமாக இருப்பது, இப்படி பல விசயங்கள் இதில் எடுத்துக் கொள்ளலாம்.
இதற்குள்ளே உள்ள விசயம் என்னவென்றால், இதுபோன்ற குழந்தைகள் கன்னி தெய்வ வழிபாடுகளை செய்வதை நிறுத்திவிடுவோமானால் கண்டிப்பாக அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு, குழந்தை பிறப்பு இல்லாது போவது, திருமண பாக்கியம் கிடைக்காமல் போவது, திருமணமுறிவு, கடன்சுமை அதிகமாகிப்போவது, காரணமே இல்லாமல் திடீர் உடல்நலக்குறைவுகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது என்று பல கஷ்டங்களுக்கு ஆளாகி நிலைகுலைந்து வாழவேண்டியிருக்கும்.
ஜோதிடர்களைக் கேட்டால், ஜாதகத்தில் எந்தக்குறையும் இல்லை என்றே சொல்வார்கள். ஆனால் இதிலொரு விசயத்தை கண்டிப்பாக உணர வேண்டும்.
விசாகம் நட்சத்திரத்தின் 4 பாதங்கள், புனர்பூசத்தின் 4 பாதங்கள், ஆயில்யம், சுவாதி, மூலம் நட்சத்திரங்களின் 4 பாதங்கள், ஹஸ்தம், ரோகிணியில் 4 பாதங்களில் மாந்தி அடைபட்டிருந்தால் கண்டிப்பாக உங்கள் வீட்டில் ஒரு கன்னி தெய்வ வழிபாடு காத்திருக்கிறது . அதை நீங்கள் சரியாகச் செய்வதில்லை என்று அரிதியிட்டுச் சொல்லலாம்.
இப்படியான சம்பங்கள் நடந்து அதற்கு ஒன்றுமே செய்யாமல் விட்டுவிடுவதால் அந்தக் குடும்பம் எவ்வளவு பெரிய நல்லதாக இருந்தாலும் பெருத்த அவமானங்களையும், நஷ்டங்களையும், தீராத வியாதிகளையும் சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை அறிவுப் பூர்வமாக உணர்ந்து கொள்ளுங்கள்.
இதற்கு என்னதான் பரிகாரம் என்று கேட்டால், ஒரு புதிய சமையல் பாத்திரம் வாங்கி அதில் உணவு சமைத்து அந்த சாப்பாட்டை அப்படியே எடுத்துச் சென்று உங்கள் பூஜையறையில் வைத்து சாப்பாடு பாத்திரத்தைத் திறக்க வேண்டும். அப்படித்திறக்கின்றபோது அந்த சாப்பாடு பாத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆவியை உங்கள் வீட்டில் உள்ள கன்னி தெய்வங்கள் வாங்கி சாப்பிடும். அதற்கு சிறிது நீர் விட்டு ஊதுபத்தி, கற்பூர ஹாரத்தி காண்பித்து வணங்கிவிட்டு அதன்பிறகு அந்த சாப்பாட்டை குடும்பத்திலுள்ள அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும். இப்படிச் செய்து கொண்டு வருவதால் கடன், நோய், பகை, பாதிப்புகள் விலகி சுபிட்சம் ஏற்படும்.
இப்படிச் செய்துவரும் சமயத்தில் ஏகாதசி திதியை மிகவும் கவனத்தில் வைத்து ஆயில்யம், சுவாதி, மூலம் நட்சத்திர தினங்களையும் மனதில் கொண்டு காக்கைக்கு சிறிதளவு சாப்பாடு எடுத்து வைக்க வேண்டும். மற்ற நாட்களில் கண்டிப்பாக காக்கைக்கு சாதம் வைக்கக்கூடாது. இப்படியாக காகத்திற்கு வைத்த சாதத்தை இரண்டு காகங்கள் வந்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால், உங்கள் தாய், தகப்பன், முன்னோர்களின் ஆசீர்வாதத்தோடு அந்த கன்னி தெய்வத்தின் உதவியும் கிடைப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாறாக ஒற்றைக்காகம் வந்து சாப்பிட்டால் உங்கள் பிதுர் கோபித்திருப்பதாக அறிந்து அதற்குரிய முறையில் சாந்தப்படுத்தி, மேற்படியான பரிகாரத்தை தொடர்ச்சியாக கடைபித்து வரவேண்டும்.
இப்படியான வழிபாடு செய்யும் குடும்பம் கண்டிப்பாக ஆயில்யம், சுவாதி, மூலம், ஏகாதசி முதலான திதிகளில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளக்கூடாது.
அதேபோல் அசைவ உணவும் உண்ணக்கூடாது. இந்த நான்கு நாட்கள் மட்டும் கட்டுப்பாடு செய்துவிட்டீர்களானால் மீதி நாட்களில் அசைவ, சைவ எந்த உணவு உண்டாலும் இறைவனுக்கு வெறும் சாதத்தை மட்டும் நைவேத்தியம் செய்தால் அதை அந்தக் கன்னி தெய்வம் ஏற்றுக்கொள்ளும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதில் இன்னொரு விசயம் என்னவென்றால், நைவேத்தியமாக செய்யும் அந்த சாப்பாடு பாத்திரத்தை முழுமையாகத் திறந்து வைக்கும்போது அந்த கன்னி தெய்வமே உங்களுடன் பேசுவதையும், குலதெய்வத்தை அறியாதவர்களுக்கு குலதேவதையைக் காட்டிக் கொடுக்கும் என்பதையும் கண்டிப்பாக உணர்ந்து கொள்ளலாம்! Kaalagnanam Ravishashthry // 8124524165 //

அன்பு உள்ளங்களுக்கு ,        எந்த விதத்திலும் ஒன்றினுள் ஒன்று உயர்ந்தது இல்லை. உயர்வும், தாழ்வும் அவரவர்களின் சூழ்நிலையை...
01/02/2025

அன்பு உள்ளங்களுக்கு ,
எந்த விதத்திலும் ஒன்றினுள் ஒன்று உயர்ந்தது இல்லை. உயர்வும், தாழ்வும் அவரவர்களின் சூழ்நிலையையும் மனநிலையையும் சார்ந்தே அமைந்து விடுகின்றது.
இறைவனின் படைப்பில் இரண்டு விசயங்கள் மட்டுமே மூலாதாரமாக கையாளப்பட்டிருக்கின்றது. ஒன்று ஜடப்பொருள் மற்றொன்று உயிர்ப்பொருள். இதில் முதல் படைப்பு ஜடம். உயிர்பொருள் இரண்டாமிடமே. அதாவது , ஜடப்பொருள்கள் ஒன்றிணைந்து உயிர்பொருளாக உருமாற்றம் கொண்டிருக்கின்றது என்பதை எப்போது உணர்ந்து செயல்படும்போது உயர்வும் தாழ்வும் நிரூபிக்கப்பட வேண்டுவதில்லை!

அன்பு உள்ளங்களுக்கு இனிய சுபோதயம் !         பொதுவாக ஜோதிடத்தில் சுக்கிரனை களத்திரகாரகன் என்றும், லக்னத்திற்கு 7 மிடத்ததி...
23/01/2025

அன்பு உள்ளங்களுக்கு இனிய சுபோதயம் !
பொதுவாக ஜோதிடத்தில் சுக்கிரனை களத்திரகாரகன் என்றும், லக்னத்திற்கு 7 மிடத்ததிபதியை களத்திர ஸ்தானாதிபதி என்றும் அந்த இடத்தை களத்திர ஸ்தானம் என்றும் சொல்கின்றோம்.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டுப்போய் இருந்தாலும், 7 மிடத்தில் பலமாக பாவ கிரகங்கள் இருந்தாலும் களத்திர தோஷத்தை ஏற்படுத்திவிடும். இந்தக் களத்திர தோஷம் என்பது செவ்வாய் தோஷத்தைவிட பலம் கொண்டது எனலாம்.
இதுபோல் களத்திர தோஷமுடைய ஜாதகர்களின் பெற்றோர்கள் என்னதான் பெருமுயற்சி செய்தாலும் தகுந்த வயதில் திருமண பாக்கியம் கிடைப்பதில்லை. ஒருசிலருக்கு திருமண மேடைவரை சென்றும்கூட தடைபட்டு நின்று போகும்.
இப்படி திருமணம் தடைபட்டு பிறகு அதே வரனுக்கு அல்லது வேறு வரனுக்கு திருமணம் அமையும்போது அதற்கான காரணங்கள் பலவிதமாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஜோதிட ரீதியாக களத்திர தோஷமே பிரதானமாக சொல்லப்படும்.
அன்னிய ஜாதி, அன்னிய மதம் என்று களத்திரம் அமைந்துவிடுவதற்கும் இந்த களத்திர தோஷமே காரணமாகும்.
களத்திர காரகனாகிய சுக்கிரனும் பாக்கியாதிபதி என்னும் 9 மிடத்தோனும் சேர்ந்து 10 மிடத்தில் அமர்ந்திருக்க, 10க்குடையவன் 10ல் ஆட்சியாகி என்னதான் தர்மகர்மாதிபதி யோகத்தைக் கொடுத்தாலும் களத்திர தோஷத்தின் காரணமாக சாதி விட்டு சாதியோ அல்லது மதம் விட்டு மதமோ காதல் திருமணத்தை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. அப்படி சாதி மாறியோ அல்லது மதம்மாறியோ திருமணமாகவிட்டாலும் நிச்சயமாக அங்கே காதல் திருமணத்தை நிகழ்த்தாமல் விடுவதில்லை என்றே சொல்ல வேண்டும்.
அதிலும் நிச்சயமாக 1- 5- 7- 9 -11க்குடையவர்களின் தொடர்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் காதல் திருமணம் என்பதை தவிர்க்க இயலாமல் போய்விடும்.
இப்படியெல்லாம் இல்லாமல் சுக்கிரனும் கெட்டு, 7 மிடத்தோனுடன் பாவகிரகங்கள் சம்பந்தம் ஏற்பட்டால் திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கை இனிப்பதில்லை.
களத்திரகாரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி பலமிழந்தோ அல்லது நீசம் பெற்றோ இருப்பார்களானால் அதேபோலப் பொருத்தம் ஆண் - பெண் இருவருக்குமே இருக்க வேண்டும். அவ்வாறு அமையாது போனால் குடும்ப வாழ்க்கை பெரும் பிரச்சனையாகி எதிர்காலம் கேள்விக் குறியாக அமைந்துவிடும்.
திருமணம் முடிவு செய்யும் காலத்தில் ஆண், பெண் இரு வீட்டுப் பெரியோர்களும் இருவருடைய ஜாதகத்திலுள்ள தோஷங்களை உணர்ந்து சம தோஷமுள்ள ஜாதகங்களை இணை சேர்க்க முயற்சிக்க வேண்டும். அப்படியில்லாது போனால் திருமணத்திற்குப் பிறகு அவர்களின் மணவாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வழியமைத்துக் கொடுத்த பாவத்தை சுமப்பவர்களாக இருக்கவேண்டியிருக்கும்.
பெரும்பாலானவர்கள் ஜாதகத்திலுள்ள கிரகநிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை மட்டுமே மனதில் கொண்டு திருமணம் பேசி முடிப்பதென்பது கண்களைத் திறந்து கொண்டே பாழும்கிணற்றில் தள்ளிவிடுவதற்கு ஒப்பானது . Kaalagnanam Ravishashthry// 081245 24165 //

அன்பு உள்ளங்களுக்கு இனிய சுபோதயம் !    ஒருவரின் ஜனன லக்னத்தில் செவ், சூரி, சனி முதலான கிரகங்கள் இணைந்திருந்தாலும் அல்லது...
17/01/2025

அன்பு உள்ளங்களுக்கு இனிய சுபோதயம் !
ஒருவரின் ஜனன லக்னத்தில் செவ், சூரி, சனி முதலான கிரகங்கள் இணைந்திருந்தாலும் அல்லது செவ்வாய் சனி இணைந்து இருவரில் யாரேனும் ஒருவர் சூரியனைப் பார்த்திருந்தாலும் அன்னாருடைய உடலில் கட்டிகள் , மருவு, விப்புருதி ( குஷ்டம்) போன்ற ஏதேனும் ஒரு உபாதை உண்டு.
இப்படியான அமைப்புள்ள ஜாதகர்கள் பிரதி வாரம் 6 ஞாயிறுகளில் வரும் சூரிய ஹோரையில் சிவபெருமானுக்கு இளநீர் மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து வில்வதளத்தினைக் கொண்டு அர்ச்சனை செய்து வருவதோடு, வில்வப்பழம் அல்லது மஞ்சள் + உப்பு சேர்த்து அரைத்த வில்வ இலை விழுதை நந்தியெம்பெருமான் முன் வைத்து கைப்பிடி அளவு உப்பு + மஞ்சள்தூள் + கருப்பு எள் வைத்து அருகம்புல் சாற்றி நந்திதேவரை வழிபட்டுக்கொண்ட பிறகு அரைத்த வில்வயிலை விழுது அல்லது வில்வம்பழத்தை கொட்டைப் பாக்கு அளவு பசு வெண்ணெய்யில் குழப்பி சாப்பிட்டு வருவார்களானால் உடலில் தோன்றும் மருவு, கட்டி, விப்புருதி போன்ற உபாதைகளிலிருந்து விரைவாக விடுதலை பெற்று சுகப்படுவதை அனுபவத்தில் காணலாம்.! Kaalagnanam Ravishashthry // 8124524165 //

Address

No. 1/82 , Jawaharlal Nagar Main Road, Jawaharlal Nagar, Redhills
Chennai
CHENNAI-600052

Telephone

+918124524165

Website

https://shashthry.wixste.com/

Alerts

Be the first to know and let us send you an email when Sri sivaguru astro world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri sivaguru astro world:

Share