14/04/2023
#அயோடின்_என்ற_அரக்கன்..!!
அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்கவேண்டும் என்று....
மத்திய அரசு சட்டம் போட்ட பிறகுதான் இந்திய மக்களுக்கு... தைராய்டு பற்றியும், டயாலிசீஸ் பற்றியும் தெரிய வந்தது.
அதாவது... அயோடின் சத்து குறைந்தாலும், அதிகமானாலும் தைராய்டு நோய்கள் வரக்கூடும்.
ஆனால்... அயோடின் குறைவால் தைராய்டு வந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம், இந்த அயோடின் உப்பு வருகைக்கு பிறகே அனைவருக்கும் தைராய்டு என்ற நிலைமை வந்துள்ளது.
அதற்கு முன் இந்த இரண்டு நோய்களுக்கும் தனியாக என எங்கேயும் சிறப்பு மருத்துவமனைகள் இருந்தது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அவ்வளவு ஏன்...!? இந்த நோய்கள் பற்றிய பெயரைக் கூட இந்தியர்கள் யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.
லட்சத்தில் ஒருவர் அயோடின் சத்து குறைவால்... உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அயோடின் மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்துவது என்பது வழக்கத்தில் இருந்தது..!
அதே அயோடினை இன்று அனைவருமே கட்டாயாமாக உணவு போல சாப்பிட்டே தீரவேண்டும் என்று சட்டம் போடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்????
கடலை படைத்து அதில் உப்பையும் படைத்த கடவுளுக்குத் தெரியாதா? எந்த அளவுக்கு உப்பில் சத்துக்களை வைக்க வேண்டும் என்று!
ஆனால்... இவர்கள் அந்த கடவுளுக்கே வகுப்பு எடுக்கிறார்கள், கடலின் உப்பில் குற்றம் உள்ளதென்று!
கார் வாங்குவது, பைக் வாங்குவது போல... அயோடின் உப்பு மூலம், அனைவரும் நோயை விலை கொடுத்து வாங்கி வருகிறோம்.
இந்த கட்டாய அயோடின் சாப்பிடுவதால்.. நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்னவென்று மருத்துவர்களால் கூற முடியுமா?
அயோடின் சட்டம் வருவதற்கு முன்பு மருத்துவமனையில் கூட்டம் இருந்ததா? அல்லது இப்போது கூட்டம் அதிகரித்துள்ளதா?
எனக்கெல்லாம் ஒன்றுமே ஆகவில்லையே என்று சிலர் நினைக்கலாம்..!
இந்த அயோக்கிய அயோடின் விஷத்தை எதிர்த்து ஒவ்வொரு வினாடியும் உங்கள் ரத்தம் போராடி வருகிறது..!
உங்கள் ரத்தம் எப்போது வலுவிழக்கிறதோ, அப்போது மேற்கண்ட நோய்கள் எல்லாம் உங்களை பீடித்துக் கொள்ளும்... Sorry உங்களை பிடித்து கொல்லும்.!!!
காரணம் நமது ரத்தம் எப்போதுமே வலுவானதாக இருக்காது, அதற்கும் சுகவீனம், மூப்பு , போன்றவை வரும். அந்த நேரத்தில் உங்கள் ரத்தத்தை விஷமாக்கி உடலை பாழ் படுத்தும் வேலையை இந்த அயோடின் நிச்சயம் செய்யும்.
அதை நம்பித்தான்... இன்று அதற்கான மருத்துவமனைகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
சுகர், பிரஷ்ஷர் போல.... வீட்டுக்கு வீடு டயாலிசீஸ் மிஷின் வாங்கும் நிலைமை வருங்காலத்தில் ஏற்பட உள்ளது.
அதற்கு ஒரே தீர்வு... இயற்கையான உப்பை சாப்பிடுவது மட்டும்தான்.
இயற்கை உப்பை விற்பனை செய்தால் கைது என்ற மிரட்டலும் நாட்டில் உள்ளது, (அப்புறம் எப்படி நம்ம அரசியல் வியாதிகள் காசு பார்ப்பது?)
எந்த ஒரு உணவையும் மனிதர்களுக்கு கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பது மனித உரிமை மீறல் ஆகும்.
குறிப்பாக... எந்த ஒரு சிறப்பு சட்டம் போட்டாலும் அந்த சட்டம் அடுத்த 5வருடத்தில் தானாக காலாவதி ஆகிவிடும் என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்ட விதியாகும்
அந்த சட்டத்தை மீண்டும் தொடரவேண்டும் என்றால்... 5ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் அதை சட்டமாக தீர்மானம் நிறைவேற்றிதான் அமல்படுத்த வேண்டும்.
ஆனால்... அப்படி ஏதுமே நடக்காமல், சுமார் 25வருடமாக மக்களை முட்டாளாக்கி தொடர்ந்து கட்டாய அயோடின் சட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர்.
இது இந்தியாவில் மட்டுமல்ல...
உலகில் தைராய்டு மற்றும் இரத்த சுத்திகரிப்பு டயாலிசீஸ் மருத்துவ மனைகள் பெருகியுள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள சட்டமாகும்.
இப்படி ஒரு அயோக்கியத்தனமான சட்டங்களை இயற்ற வைத்து உலக மக்களை நோயாளிகளாக மாற்றி மருந்து வியாபாரிகளுக்கு மாமா வேலை பார்ப்பது WHO என்ற உலக சுகாதார அமைப்புதான்.
பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கட்டாய அயோடின் சட்டம் இருந்து வந்தது..! ஆனால் அந்நாட்டு மருத்துவர்கள்.. அதிகப்படியான அயோடின் சத்துக்கள்தான் பல நோய்களுக்கு காரணமாக உள்ளது என்று எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால்... தற்போது அந்த நாட்டில் இரண்டு வகையான உப்புகளை விற்கலாம் என்று அந்த அரசு கூறிவிட்டதால் அங்கு நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் பழையபடி குறையத் தொடங்கி விட்டன.
அதேபோல...
அமேசானில் கூட Indian Sea Salt, Arabian Sea Salt என்று... அயோடின் கலக்காத கடல் உப்பு கூடுதல் விலைக்கு விற்பனைக்கு வந்துவிட்டது. அதை பல நாட்டவரும் வாங்கி சாப்பிட்டு நோய்களில் இருந்து தப்பிக்க முயன்று வருகின்றனர்.
ஆனால்... நமது உள்ளூர் கடைகாரர் அந்த உப்பை விற்றால் சிறை தண்டனையாம்.
யாருக்கும் தெரியாமல்...
உப்பளம் பக்கம் போய், ஒரு மூட்டை உப்பு 100ரூபாய்க்கு வாங்கிவந்தால் ஒரு குடும்பத்திற்கு 2வருடத்திற்கு போதுமானது
இங்கே அயோடின் நோய்களுக்கு மருத்துவம் பார்க்க வசதியற்ற பல நோயாளிகள் தினமும் மரணமடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது.
இதனால்... மருந்து கம்பெனிகளுக்கு மட்டும் இலாபம் இல்லை, அந்த கம்பெனிகள் மூலமாக அனைத்து நாட்டு அரசியல்வாதிகளுக்கும் பெரிய அளவில் பங்கு கொடுக்கப்படுகிறது.
கட்டாய அயோடினுக்கு தடை விதித்தாலே போதும்... டயாலிசீஸ் நோயும், தைராய்டு நோயும் காணமலே போய்விடும்.
நமது கிட்டினி கெட்டுப்போன பிறகு... நாம் அயோடின் உப்பை நிறுத்தினாலும் கிட்டினியை திரும்ப மீட்டெடுக்க முடியாது.
எனவே வெள்ளம் வரும் முன் அனை கட்டுங்கள், நோயாளிக்கு கொடுக்கிற அயோடினை, ஆரோக்கியமானவர்களையும் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தி அதில் வெற்றி கண்டதன் விளைவுதான் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்கிற கட்டாயப்படுத்துதலும் தவிர வேறில்லை..!
பூனைக்கு யார் மணி கட்டுவது...?
எந்த அரசியல்வாதி இந்த அயோடின் ஊழலுக்கு எதிராக மணி கட்டுவாரோ தெரியவில்லை..!!!!