Viyasar Astrology Research Centre

Viyasar Astrology Research Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Viyasar Astrology Research Centre, Astrologist & Psychic, 182 Kaliyamman Koil Street Virugambakkam, Chennai.

Viyasar Astrology Research Centre founded in the year 2007 by Vedic Astrologer Sravan.He is a life Changer & spealises in prediecting and telling about your Personality, Career, Growth, Success,Luck,Present,Past & Future in your Life -8531903131

இந்து மதத்தில் வழிபாட்டிற்கு முக்கியமான நாளாக பௌர்ணமி கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் வந்தாலும் சித்திரை ம...
11/05/2025

இந்து மதத்தில் வழிபாட்டிற்கு முக்கியமான நாளாக பௌர்ணமி கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் வந்தாலும் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பௌர்ணமி தினம் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. மற்ற பௌர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்ரா பௌர்ணமியன்று, பூரண நிலவாக பூமிக்கு மிக அருகில் காட்சியளிக்கும். சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று (12.5.2025) கொண்டாடப்படுகிறது.

மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்ப, அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்- நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மரின் உதவியாளரான சித்திரகுப்தரை வழிபடுவதற்கு உகந்த நாளாக சித்ரா பௌர்ணமி கருதப்படுகிறது. சித்ரா பௌர்ணமியில் சித்ரகுப்தரை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

சித்ரா பௌர்ணமியின் சிறப்புகளாக ஆலயங்கள்தோறும் பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்றுமட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.

இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபிட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ரா தேவிக்கு (அம்பிகை) உகந்த
ஓம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் என்ற சித்ரா காயத்ரி மந்திரத்தை 11 முறை பாராயணம் செய்து பின்பு
தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம்.

-
ஜோதிட ஆராய்ச்சி மூலம் பல்வேறு தரவுகளில் இருந்து விவரங்களைப் பெற்று அன்பர்களின் பார்வைக்காக தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

பயன் பெற்று பலன் பெற வாழ்த்துக்களுடன்...
16+ வருடங்கள் வேத ஜோதிடத்தில் அனுபவமிக்க வேத ஜோதிட ஸ்ரவன் நங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம்
8531903131
www.viyasarastrology.in

#சித்ராபௌர்ணமி #கிரிவலம் #கள்ளழகர் #மதுரை #வைகை

13/04/2025

#தமிழ்புத்தாண்டு2025

&Virugambakkam

தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் இருந்து தனது பணியை செய்து விட்டு கடைசியாக மீன ராசியில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை மேஷ ராசியில் துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம்.

இந்த வருடம் அதாவது 2025 ஏப்.14-ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கனி காண்பது மிகவும் சிறப்புக்குரியது. தமிழ் புத்தாண்டை பாரம்பரிய முறையில் கொண்டாட நம் முன்னோர் சில வழி முறைகளை கடைபிடித்து வைத்துள்ளனர். அதாவது தமிழ் புத்தாண்டை கொண்டாட முதல் நாளே அனைத்தையும் தயார் செய்து விட வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் சுவாமி படங்களை துடைத்து வைத்து விட வேண்டும்.

விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், திங்கட்கிழமை 14/04/2025 அன்று அதாவது நாளை அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:30 மணி அளவில் நுழையும் பொழுது பிறக்க இருக்கிறது. இவ்வாண்டு அதிகாலையிலேயே எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி குளித்து முடித்து சுத்த பத்தமாக வீட்டின் மூத்த பெண்கள் இந்த வழிபாடு முறையை துவங்க வேண்டும் எனவே முந்தைய நாளே அதற்குரிய ஏற்பாடுகளை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விசுவாவசு தமிழ் வருடப்பிறப்பு: கனி காணுதல்

சித்திரை பூஜையில் மிகவும் முக்கியமாக இடம் பெற வேண்டிய ஒரு பொருள் கண்ணாடி! புதிய அல்லது பழைய பூஜைக்கு உரிய கண்ணாடியை பூஜையில் வையுங்கள். அதற்கு சந்தன, குங்குமம் இட்டு, கொஞ்சம் பூவை வையுங்கள். கண்ணாடியில் தெரியும் படியாக அதற்கு முன்பாக மற்ற பொருட்களை தாம்பூல தட்டில் தயார் செய்ய வேண்டும்.

ஒரு பெரிய தாம்பூலத்தில் முக்கனி பழங்களை அடுக்கி வைக்க வேண்டும். வாழை, மாம்பழம், பலாப்பழ சுளைகளை அழகாக அடுக்கி மேலே கொஞ்சம் பூவையும் வையுங்கள். அடுத்த தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, மஞ்சள் நிறத்திலான பூ, பழம், மஞ்சள் கிழங்கு, கண்ணாடி வளையல் போன்றவற்றை அடுக்கி வையுங்கள்.

மற்றொரு தாம்பூல தட்டில் சில்லறை நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும், தங்க நகை, உங்களிடம் இருக்கும் மற்ற ரத்தினங்களும் அடுக்கி வைக்க வேண்டும். அடுத்ததாக நவதானியங்களை அடுக்கி வைக்க வேண்டும். நவதானியங்களை வைக்க முடியாவிட்டால் அதில் ஏதாவது ஒரு தானியங்களை வையுங்கள். மற்றொரு தட்டில் அரிசி, பருப்பு, கல் உப்பு, வெல்லம், பேரீச்சை போன்றவற்றை வையுங்கள். ஒவ்வொரு பொருட்களையும் கோபுரம் போல் குவித்து வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பித்தளை (அ) செம்பு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை போட்டு, துளசி இலைகளை போட்டு தீர்த்தம் செய்து வையுங்கள். காலையில் எழுந்து, கண் விழிக்கும் முன் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தட்டில் வைத்துள்ள பழங்கள், பணம், நகை ஆகியவற்றை தான் முதலில் பார்க்க வேண்டும். பிறகு கண்ணாடியில் அவரவர்களின் முகத்தை பார்த்து விட்டு, மகாலட்சுமியை நினைத்து, தட்டை தொட்டு வணங்கி விட்டு, அன்றாட வேலைகளை செய்யலாம்.

இதனை கனி காணுதல் என்பார்கள். இவ்வாறு செய்வதனால் வரப்போகும் வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும் என்றும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். வாசலில் வண்ண கோலம் பெரியதாக போட்டு அதில் நடுவில் கிழக்கு முகமாக ஒரு விளக்கை ஏற்றி மகாலட்சுமியை வரவேற்க வைக்க வேண்டும்.

இந்த புத்தாண்டில் எந்த தெய்வத்தை வழிபட்டால் நமக்கு நல்லது?

இந்த விசுவாவசு ஆண்டு சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற ஆண்டாகும். சூரிய பகவானுக்குரிய தெய்வமாக இருப்பவர் சிவ பெருமான். சூரிய பகவான், உயர் பதவி, ஆரோக்கியம், செல்வ வளம், செழிப்பு ஆகியவற்றிற்கு உரிய கிரகமாவார். அதனால் விசுவாவசு ஆண்டு வெற்றிகரமாக அமைய சிவ வழிபாட்டினை, சூரிய வழிபாட்டினையும் தினமும் செய்வது சிறப்பு.

தமிழ் புத்தாண்டு வழிபாடு நேரம்:

காலை 6 மணி முதல் காலை 7.20 மணி வரை. இந்த நேரத்தை தவறவிட்டால் காலை 9.10 மணி நிமிடம் முதல் 10.20 மணி வரை வழிபடலாம். மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை. நீங்கள் கோவிலுக்கும் சென்று வழிபடலாம். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். அவ்வாறு செல்வதால் இந்த வருடம் முழுவதும் சிவனுடைய அனுக்கிரகம் நமக்கு கிடைத்து நாம் செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.

மதியம் உணவில், இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். ஒரு வருடம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது இயற்கையின் நீதி. எனவே சாதம், புளிக்குழம்பு, சாம்பார், வேப்பம் பூ ரசம், மாங்காய் பச்சடி போன்ற அறுசுவை உணவுகளை உட்கொள்ளவும். காலையில் 5.30 மணிக்கு எழுந்துவிட்டு 5.45 மணி முதல் 6 மணிக்கு உள்ளாக சூரிய வணக்கம் செலுத்தவும். தமிழ் புத்தாண்டில் சீரான உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்திட வாழ்த்துகள்.

சுயநலமாக அல்லாமல் பொது நலமாக உலக நன்மைக்காக வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உலக மக்கள் அனைவருக்கும் வறுமை இல்லாமல் இருக்கவே தாம்பூலத்தில் தானியங்களும், அரிசி, பருப்பு போன்றவையும் வைக்கிறோம். செல்வங்களும், மற்ற எல்லா வளங்களும் அனைவருக்கும் கிடைக்க மனதார பிரார்த்தித்து இந்த சித்திரை மாதத்தை வரவேற்று, தமிழ் புத்தாண்டை இனிமையாக கொண்டாடுங்கள்.
_
16 வருட பாரம்பரிய ஜோதிட அனுபவம் கொண்ட..
வேத ஜோதிடர் ஸ்ரவன்
நங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம்
www.viyasarastrology.in
8531903131

https://g.co/kgs/pgL3bPf

Address

182 Kaliyamman Koil Street Virugambakkam
Chennai

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+918531903131

Alerts

Be the first to know and let us send you an email when Viyasar Astrology Research Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Viyasar Astrology Research Centre:

Share