Heart Tonics

Heart Tonics Shop Authentic Supplements & Health Care Products Online in India. Buy Nutrition Supplements like Pr

சென்னை: வெள்ள நிவாரண நிதியாக யாருக்கு ரூ.10 ஆயிரம், யாருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம...
11/12/2015

சென்னை: வெள்ள நிவாரண நிதியாக யாருக்கு ரூ.10 ஆயிரம், யாருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: மழை வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4,100ம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நிவாரண நிதி உதவிகளை உயர்த்தி, முழுமையாக மற்றும் பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரமும், துணிகள், பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் இழப்புக்கான நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, சேலையும் வழங்கப்படும். பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4,100 நிவாரண தொகை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ரூ.900 கிடைக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரண தொகை வழங்கப்படும்.

நிவாரண தொகை பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கி கணக்கில்லாதவர்களுக்கு உடனடியாக வங்கி கணக்கு துவக்கப்பட்டு, அந்த கணக்கில் நிவாரண தொகை வழங்கப்படும். அரிசி, வேட்டி, சேலை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். நிவாரண தொகை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டி மூலம் மீண்டும் உள்நாட...
10/12/2015

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டி மூலம் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் களமிறங்குகிறார்.
இந்தப் போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாட இருக்கும் தோனி, முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு செய்யது முஷ்தாக் அலி கோப்பை போட்டிக்காக இதே ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான "குருப்-பி' பிரிவில், ஜார்க்கண்ட்-ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையேயான ஆட்டம் கர்நாடக மாநிலம் ஆலுரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. எனினும், ஜார்க்கண்ட் அணியின் கேப்டனான இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோனின் தலைமையின் கீழ் தோனி விளையாட உள்ளார். மும்பையில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5ஆவது ஒரு நாள் போட்டியே தோனி விளையாடிய கடைசி ஒரு நாள் போட்டியாகும்.
ஆஸ்திரேலிய சுற்றுலா, இலங்கைக்கு எதிரான டி20 போட்டித் தொடர், ஆசியக் கோப்பை டி20, ஐசிசி உலகக் கோப்பை டி20 ஆகிய போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இந்த விஜய் ஹசாரே போட்டியில் கலந்துகொள்வது இந்திய வீரர்களுக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக இருக்கும்.
தில்லிக்காக விளையாடும் தவண், இஷாந்த் சர்மா; கோலி ஓய்வு: விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில், பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவணும், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் தில்லி அணிக்காக களமிறங்குகின்றனர்.
இதுகுறித்து தில்லி அணி பயிற்சியாளர் விஜய் தாஹியா கூறியதாவது:
இந்தப் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. எனினும், ஷிகர் தவணும், இஷாந்த் சர்மாவும் இந்தப் போட்டிகளில் விளையாடுகின்றனர். மாற்று ஆட்டக்காரராக வைபவ் ராவல் தயார் நிலையில் உள்ளார்.
தில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவணும், கெளதம் கம்பீரும் களமிறங்குவர் என்று விஜய் தாஹியா கூறினார்.
தவணின் பந்துவீச்சில் சந்தேகம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தில்லியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவணின் பந்துவீச்சு சந்தேகிக்கத்தக்க வகையில் இருந்ததாக போட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிக்கையை அவர்கள் இந்திய அணி நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "தவணின் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்துள்ளதால், அடுத்த 14 நாள்களுக்குள்ளாக அவர் பந்துவீச்சு சோதனைக்கு உள்பட வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில் சர்வதேச போட்டிகள் பந்துவீச தவண் அனுமதிக்கப்படுகிறார். அவர் பந்துவீச்சு சோதனையின் முடிவுகள் வரும் வரையில் அவர் பந்துவீசலாம்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

09/12/2015

We destroyed unique flood carriage systems: Expert

If only Chennai’s unique macro, medium and micro drainage systems had been effectively maintained, the people of this expanding metropolis would not be undergoing the misery caused by the historic floods. Professor S. Janakarajan of the Madras Institute of Development Studies, who is an expert on water management and disaster risk reduction, agrees that Chennai’s current woes are the result of a “man-made disaster.”

According to him, the construction of storm water drainage system should have taken into consideration factors such as average rainfall during the north-east monsoon, which is around 780 mm. Since this was not done, these storm water drains have poor carrying capacity, which has further been reduced due to lack of maintenance.

Chennai can’t be seen in isolation, but together with Tiruvallur, Kancheepuram and Chengalpattu as these areas constitute a single important watershed. “The geographical location, topography, rainfall pattern and drainage system in these districts are hydrologically integrated,” he said adding that it was wrong to blame Chembarambakkam lake alone for the current flooding.

Calling for a holistic approach, Mr Janakaraja pointed out that as per the tank memoir prepared by the British, there are 3,600 tanks in these districts and the surplus from around 20 tanks have also contributed to inflow in Chembarambakkam.

Prof Janakarajan, who has made extensive studies about Chennai’s water bodies, said besides natural macro drainages like Adyar, Cooum, Kosasthaliyar and the man-made Buckingham canal, there are around eight medium drainage canals here. These include the Otteri Nallah, Virugambakkam / Arumbakkam canal, Kodungaiyur canal, Captain Cotton canal, Velachery canal, Veerangal Odai and Mambalam canal. These canals provided a very effective drainage system for the city before they were encroached.

The major rivers of Chennai are unique and had the huge flood carrying capacity. Currently they are reduced to half.

Prof Janakarajan indicated that the flood plains and wetlands of the city have very crucial hydrological functions such as to hold flood water, to prevent seawater intrusion and also to serve as a huge bird sanctuary. But these are encroached and remain in a pathetic state today. “Most of the IT companies and other major constructions on the Old Mahabalipuram Road are on flood plains and wetlands,” he pointed out.

சென்னை,சென்னையில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்தது. இதனால், சென்னை முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்து தனித்தீவு போல ஆன...
09/12/2015

சென்னை,

சென்னையில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்தது. இதனால், சென்னை முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்து தனித்தீவு போல ஆனது. வெள்ள நீர் வீடுகளுக்கும் புகுந்தததால், மக்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களாக வெயில் அடிக்க தொடங்கியதால், வெள்ள நீர் வடிந்து படிபடியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 7 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை முழுவதும் நள்ளிரவு முதல் மீண்டும் மிதமான மழை பெய்ய தொடங்கி உள்ளது. சென்னையில், கிண்டி, அடையாறு, மைலாப்பூர், மந்தவெளி, அண்ணாசாலை, எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம்,சைதாப்பேட்டை, வடபழனி, திருவெற்றியூர்,தாம்பரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களுக்கு மழை மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு எதுவும் விடுக்காமல் புழல் ஏரியில் இருந்து 1800 கனஅடி நீர் திறந்துவிட...
08/12/2015

சென்னை: மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு எதுவும் விடுக்காமல் புழல் ஏரியில் இருந்து 1800 கனஅடி நீர் திறந்துவிட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உயிர் தப்ப வீடுகளில் இருந்த பொருட்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடினர். சென்னை நகரமே மழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் நிலைகுலைந்து போய் உள்ளது. இந்நிலையில், புழல் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அதாவது, புழல் ஏரியின் ெமாத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 2880 மில்லியன் கன அடி. இந்த ஏரிக்கு மழைநீர் வரத்து மற்றும் சோழவரம் ஏரியில் இருந்து 1605 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 50 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் புழல் ஏரியில் இருந்து பொதுமக்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் திடீரென 1800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் உபரிநீர் செல்லும் கால்வாய் அருகே உள்ள சாமியார் மடம், பாபா நகர், தண்டல்கழனி, புழல் காஞ்சி அருள் நகர், திருநீலகண்டர் நகர், தமிழன் நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வல் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. திடீரென கால்வாய், வீடு மற்றும் தெருக்களில் தண்ணீர் வரத் தொடங்கியதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, வீட்டில் இருந்த பொருட்களை அப்படியே போட்டுவிட்டு உயிர் தப்பும் வேகத்தில், மேடான பகுதிக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நேற்று காலை புழல் ஏரியில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து எங்களுக்கு சென்னை மாநகராட்சி, வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கவில்லை. தற்போது இப்பகுதிகளில் தண்ணீர் வடிந்ததால், நாங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்தான் எங்கள் வீடுகளுக்கு வந்தோம். நேற்று காலை புழல் ஏரியில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மீண்டும் எங்கள் வீடுகள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்’ என்று வேதனையுடன் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘புழல் ஏரியில் அதிகப்படியான தண்ணீரை சேமித்து வைத்தால், அதன் கரைகள் வலுவிழந்துவிடும். அதனால்தான் அதிகப்படியான தண்ணீரை திறந்துவிட்டோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள்தான் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும்’ என்று அலட்சியமாக கூறிவிட்டு சென்றுவிட்டனர்

24/09/2015
Dr. Patkar's Apple Cider Vinegar is made of high quality Himalayan apples. It is unfiltered, raw (unrefined) and with Mo...
23/07/2015

Dr. Patkar's Apple Cider Vinegar is made of high quality Himalayan apples. It is unfiltered, raw (unrefined) and with Mother. Mother is Cobweb like mass which is loaded with lots of health benefits. Our Apple Cider Vinegar contains 5% acetic acid which is known to increase absorption of vitamins, minerals and proteins. Our Apple Cider is packed in Glass bottle which helps to keep its potency intact. It can be used as refreshing drink, in salad dressing, vinaigrette and the list is on.

Address

Chennai
600094

Alerts

Be the first to know and let us send you an email when Heart Tonics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram