Be Positive.

Be Positive. Get rid of your financial crisis,Mental depression,children studies,incurable diseases(Diabetic,Aids

எனது இனிய நண்பர்களே நாம் தீர்க்கவே முடியாது என்று நினைத்து கொண்டிருக்கும் வியாதிகளான ஏய்ட்ஸ்,கேன்சர்,பைல்ஸ்,பித்தக்கல்,கிட்னி செயல்இழந்தல் போன்ற வியாதிகளுக்கு நிச்சயம் தீர்வு உண்டு.மேலும் பல வியாதிகளுக்கு நீங்கள் வருடகணக்கில் உங்கள் டாக்டர்களிடம் சென்று பல இலட்சங்களை செலவு செய்தும் தீர்வு காண முடியாமல் தவித்து கொண்டிரிப்பீர்கள்.அப்படிப்பட்ட நண்பர்கள் மற்றும் உங்கள் உறவினர்கள் யாரேனும் இருந்தால் தய

வு செய்து டாக்டர் சுந்தர்ராஜன் அவர்களை அணுகவும்,நிச்சயம் நீங்கள் செலவு செய்த பணத்தில் பத்தில் ஒரு மடங்கு செலவு செய்தால் போதும் உங்கள் நோய் முற்றிலும் குணம் அடைந்துவிடும்,யாரேனும் தோல் வியாதிகள் மற்றும் முழுமையான தோல் வெள்ளை நிறத்தில் மாறி இருந்தால் அதற்கும் அவரிடம் தீர்வு உண்டு.மேலும் நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகள் சக்கரை,ரத்தஅழுத்தம் ,கொலஸ்ட்ரால் போன்று 275 டெஸ்ட் பத்து நிமிடத்திற்குள் எடுக்கப்படும்.மேலும் நாம் என்ன மாதிரியான உணவு கட்டுப்பாடு,உடல் கட்டுபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படும்.இந்த எளிமையான சிகிச்சையை யாரேனும் உங்கள் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் பல காலமாக நோய்களில் அவதிபட்டு கொண்டு இருந்தால் அவர்களுக்கு தெரிவிக்கவும்.டாக்டர் சுந்தர்ராஜன் அவர்களை அணுக வேண்டிய தொலைபேசி எண்:9840985951,இப்படிக்கு -ஏ.எல்.சூர்யா(விழிப்புணர்வு பேச்சாளர்)

Get rid of diseases for long years
A.L. SURIYA·THURSDAY, MAY 12, 20165 Reads
Hi friends,Do any of you or your family,friends,relatives suffer from long term diseases like cancer,diabetic,infertility,heart problem,piles,kidney problem,Liver& Gastronomy,skin compliant,sexual disorder,orthotics,gallbladder stone which is not been cured by doctors for years & years.Kindly contact Dr.sundarrajan who is a good friend of mine and specialist in curing these diseases in very short span of time at a very low cost.Skin diseases like human body becoming completely white and people think there is no remedy for these kind of diseases and living with those for years and years,he has cured such kind of critical cases by his new inventory methodology,piles will be cured with in three days of time and heart blocks would be cured in maximum of three months.A complete body check up of 275 test including BP,SUGAR,CHOLESTROL & everything would be taken in 10 minutes of time,the test would cost rs.3500 and the reports & further ailments will be given immediately.Kindly utilise this opportunity and spread this message to your friends & to get rid of incurable diseases and live your life in a most healthiest way & don't worry he is a Govt Regd doctor.Interested people can get the details from me to contact him.Regards: A.L.SURIYA(SOCIAL AWARENESS SPEAKER)9840985951

“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)                                       எழுதியவர் ஏ.எல்.சூர்யா                               ...
17/05/2025

“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)
எழுதியவர் ஏ.எல்.சூர்யா
பகுதி-11

Disclaimer : இக்கதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே..யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.இது புனைந்து எழுதப்படும் கதை.அதே வேளையில் தனியார் கோயில் நடத்தி நன்றாக கல்லாக் கட்டும் போலி ஆசாமிகளை இக்கதை விவரிக்கும்.

விஜய் பணக்கார கடவுள் கோயிலில் பணி புரிந்த போது தீபாவளி வந்தது.சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் தொடங்கிய புதிதில் அப்போது தீபாவளி பண்டிகை அன்று பணக்கார கடவுளை தரிசிக்க கூட்டமே இருக்காது மற்றும் யாருக்கும் சென்னைக்கு வெகு தொலைவில் கோயில் இருப்பதால் அவ்வளவாக மக்கள் மத்தியில் பெரியதாக பிரசித்தம் பெறவில்லை.அதற்குப் பின் கோயிலை பற்றி பல பத்திரிகைகளில் எழுதி மற்றும் பல சினிமா பிரபலங்கள் வந்து சென்ற பின்பு பண்டிகை நாட்களில் கோயிலில் ஏகமாக கூட்டம் எக்கித் தள்ளியது.

குறிப்பாக புதிய வருடம் தொடங்கும் நாள்,தீபாவளி,அட்சய திருதியை போன்ற விசேஷ நாட்களில் குபேரன் குஞ்சுமணியின் கோயிலுக்கு வந்து பணக்கார கடவுளை தரிசித்தால் செல்வம் பெருகும் என மக்கள் நம்பத் தொடங்கினர்.மக்கள் கூட்டம் வந்து அலை மோதினாலும் கோயில் சிறியதாக இருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் மக்கள் கூட்டத்தை சமாளிக்கத் திணறினர்.அதனால் அது போன்ற விசேஷ நாட்களில் போலீஸ் பந்தோபஸ்த் போடப்பட்டது.விஜய் பணி புரிந்த வருடம் தீபாவளி அன்று விடியற் காலை முதலே சமாளிக்க முடியாத கூட்டம் குவியத் தொடங்கியது.

சன் டிவியில் இருந்து ஒரு குழுவினரும் வந்து பணக்கார கடவுளுக்கு செய்யப்பட்டிருந்த பண அலங்காரத்தை படம் பிடித்து சென்றனர்.தீபாவளி அன்று பணக்கார கடவுள் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார்.நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு இடம் கிடைக்காமல் பலர் திணறினர்.இந்து மத மரபுப்படி மார்வாடிகள் போன்றவர்கள் தீபாவளி அன்று புதிய கணக்கு தொடங்குவர்.அதே போல பலரும் தீபாவளி அன்று மகாலட்சுமிக்கு உகந்த பூஜைகள் செய்வார்கள்.இங்கே பணக்கார கடவுளுக்கு அதிதேவதை மகாலட்சுமி என்பதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டியும் வருவார்கள்.

பணக்கார கடவுள் கோயில் தொடங்கி மக்கள் மத்தியில் பிரசித்தம் அடைந்த பின்பு அதன் அருகில் உள்ள நிலத்தின் விலையும் பன்மடங்கு உயர்ந்தது.பலர் அங்கு நிலத்தை வாங்குவதற்கு முண்டியடித்தனர்.கோயில் தொடங்கிய போது அந்த இடம் ஒரு கிராமத்தைப் போலவே காட்சியளிக்கும்.ஆனால் அதன் அருகில் இப்போது பல வீடுகள் கட்டி குடி பெயர்ந்து உள்ளனர்.அதே போல விசேஷ நாட்களில் கோயில் அருகில் பலர் ரோட்டு கடை போடுவார்கள்.

தீபாவளியன்று குபேரன் குஞ்சுமணியின் முகம் மிகுந்த மகிழ்ச்சி அலையில் வீசியது.கோயிலுக்கு வெளியே ஒரு தெரு நெடுக பெருங்கூட்டம் பணக்கார கடவுளை தரிசிக்க காத்துக் கொண்டிருந்தது.பலர் கைக் குழந்தையுடன் வந்து உள்ளே அனுமதிக்குமாறு அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.விஐபிக்களும் சினிமா பிரபலங்களும் அங்கு அமைக்கப்பட்டிருந்த தனி வழியில் அனுமதிக்கப்பட்டனர்.கோயில் உள்ளே உள்ள கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து கொண்டே இருந்தது.குபேரன் குஞ்சுமணிக்கு நெருக்கமான நடன மாஸ்டரே ஒரு முறை கோயிலுக்கு வரும் கூட்டத்தை பார்த்து வாயைப் பிளந்தார்.

அவர் குபேரன் குஞ்சுமணியிடம் கோயில் இப்போது மிகுந்த வளர்ச்சி அடைந்து விட்டது என பாராட்டினார்.பணக்கார கடவுளை தீபாவளி அன்று பார்க்க வரும் கூட்டம் அடுத்து இரண்டு மூன்று நாட்கள் கழித்துத் தான் ஓயும். பணக்கார கடவுளுக்கு அர்ச்சனை டிக்கெட்டுகள் கொடுக்க முடியாத அளவிற்கு விற்றுத் தீர்ந்தன.அன்று விஜய் கண்களுக்கு பணம் எல்லாம் வெறும் காகிதத்தை போல காட்சியளித்தன.இப்போது எப்படி சினிமாவில் நகைச்சுவை நடிகராக நுழைந்த பரோட்டா சூரிக்கும் யோகி பாபுவுக்கும் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவிற்கு ஜாக்பாட் அடித்ததோ அதைப் போல குபேரன் குஞ்சுமணிக்கு அவர் கனவிலும் எண்ணிப் பார்க்காத ஜாக்பாட் அடித்தது.

மூளைக்காரன் விஜய் அவனுடைய மாமா குஞ்சுமணியுடன் இருந்திருந்தால் கிட்டத்தட்ட குஞ்சுமணி சுமார் 2000 அல்லது 3000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகி இருப்பார்.ஆனால் விதி யாரை விட்டது.நடிகர் யோகி பாபு அடிக்கொரு முறை பணக்கார கடவுளை தரிசனம் செய்ய வருவார்.2012ஆம் ஆண்டு விஜய் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தபோது நடிகர் யோகி பாபு கோயிலுக்கு வந்திருந்தார்.அப்போது யோகிபாபு சில படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்தார்.யாருக்குமே அவரை அவ்வளவாக தெரியவில்லை.

யோகி பாபுவும் குஞ்சுமணியை போலவே சினிமாவில் பெரிய இடத்திற்கு நாம் வருவோம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.நீ எல்லாம் ஒரு ஆளு என்று பலர் அவர் மூஞ்சியில் அடித்தாற் போல கூட பேசி இருப்பார்கள்.அது தான் யாருக்கு தெரியும் ஒரு நாள் குப்பையும் கோபுரமாகும் என்பது.தீபாவளி அன்று விஜய் கோயிலில் சேரும் பணத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மூட்டை போல கட்டி அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் பத்திரப்படுத்தினான்.இரண்டு நாட்களுக்குப் பின் குபேரன் குஞ்சுமணியை அந்த அறைக்கு அழைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பண மூட்டையை காண்பித்தான்.

இயல்பாகவே குஞ்சுமணி நக்கல் செய்வதில் வல்லவர்.அந்த மூட்டைகளை பார்த்து இதெல்லாம் அழுக்கு மூட்டை அழுக்கு மூட்டை என சிரித்தார்.அந்த அழுக்கு மூட்டைகளில் கிட்டதட்ட 10 லட்சம் ரூபாய் பணம் இருக்கும்.அந்த மூட்டைகளில் உள்ள பணத்தை விஜய் மேற்பார்வையில் கோயில் ஆட்களை வைத்து எண்ணிக் கொடுத்தான்.உண்டியல் பணத்தை எண்ணும் போது அவர்களை எவரேனும் ஒருவர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.அப்படி இல்லாதபட்சத்தில் சந்தடி சாக்கில் சிலர் ஆயிரம் 2000 ரூபாயை லவட்டி விடுவார்கள்.

அப்படி லவட்டி விடுபவர்களை வேலையை விட்டு குபேரன் குஞ்சுமணி தூக்கி விடுவார்.பத்து ரூபாய் நோட்டுக் கட்டுகள் தான் அதிகமாக சேரும்.அந்த ரூபாய் நோட்டுக்களை பணம் எண்ணும் எந்திரத்தில் எண்ணி கட்டு கட்டாக வைத்து விடுவார்கள்.உண்டியலில் போட்ட பணம் முழுவதையும் எண்ணி முடித்தவுடன் வங்கியில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை குபேரன் குஞ்சுமணி தொடங்கிய டிரஸ்ட்டில் சேர்த்து விடுவார்கள்.விஜய் குபேரன் குஞ்சுமணியின் கோயிலில் பணி புரிந்த போது ஆன்மீக ரீதியாக ஒன்றை உணர்ந்தான்.

கோயிலில் கிடைக்கக் கூடிய பணத்தால் அவன் மகிழ்ச்சியாக இல்லை.இலட்ச இலட்சமாக கோயிலில் கொட்டப்படும் பணம் ஒரு விதமான கெட்ட அதிர்வலையை அவனுக்கு ஏற்படுத்தியது.இதனால் சில சமயங்களில் கோயிலில் வேலை பார்ப்பதை வெறுப்பான்.விஜய் ஓரளவிற்கு நன்றாக படித்தவன்.அதே வேளையில் நல்ல கலைநயமும் கற்பனை வளமும் மிக்கவன்.அவனுடைய உலகம் பறந்து விரிந்தது.அவனுக்கு வாழ்க்கையில் புதுமையாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்.பலர் போற்றும் அளவிற்கு வாழ்க்கையில் உயர்ந்து காட்ட வேண்டும் என்கிற முனைப்புடன் இருந்தான்.

இப்போது கிளி எப்படி கூண்டுக்குள் அடைக்கப்பட்டு பறக்க முடியாமல் தவிக்குமோ அதை போலவே அவன் உணர்ந்தான்.அவனுக்கு கோயிலில் இருந்து கொடுக்கப்படும் பணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது வீட்டினில் அவனுக்கும் அவன் மனைவிக்கும் மிகப் பெரிய சண்டைகள் வெடிக்கத் தொடங்கியது.இதனால் முற்றிலுமாக அவன் மன நிம்மதியை இழந்தான்.இது ஏன் என சிந்தித்த போது கோவிலில் காணிக்கையாக சில செல்வந்தர்கள் போடலாம்.ஆனால் பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பலர் தான் காணிக்கை போடுவார்கள்.

அதாவது அந்த பணத்தை காணிக்கையாக அவர்கள் போடும் போது என்ன நினைத்துக் கொண்டு போடுவார்கள்.?இறைவா நான் கஷ்டத்தில் இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் இந்த பணத்தை நான் என்னுடைய கஷ்டத்திலும் உனக்கு காணிக்கையாக போடுகிறேன்.இந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட நீ என் வாழ்விற்கு ஒரு நல்வழியை காட்டு என வேண்டுவார்கள்.(தொடரும்)

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பலருக்கும் பகிரவும்..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

விரைவில் எங்களுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி அமையும்பட்சத்தில் இவர்களைப் போன்ற போலி ஆசாமிகளின் முகத்திரைகள் கிழித்து எறியப்படும்.பாரத் மாதா கி ஜெய்.மோடி கி ஜெய்..ஜெய்ஹிந்த்..

“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)                                       எழுதியவர் ஏ.எல்.சூர்யா                               ...
14/05/2025

“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)
எழுதியவர் ஏ.எல்.சூர்யா
பகுதி-8

Disclaimer : இக்கதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே..யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.இது புனைந்து எழுதப்படும் கதை.அதே வேளையில் தனியார் கோயில் நடத்தி நன்றாக கல்லாக் கட்டும் போலி ஆசாமிகளை இக்கதை விவரிக்கும்.

அதனால் அவருடைய வீட்டில் விஜய் அமைதியாக இருந்தான்.ஒரு வேளை குபேரன் குஞ்சுமணி அந்த தயாரிப்பாளரிடம் விஜய்யை அறிமுகப்படுத்தி இருந்தால் கண்டிப்பாக அவருடைய தயாரிப்பில் ஒரு வாய்ப்பை அளித்திருப்பார்.குஞ்சுமணியின் கணக்கு எங்கே அறிமுகப்படுத்தி விஜய் வளர்ந்து விட்டால்.?அவர் போட்ட கணக்கு விஜய்யை வளர விடாமல் அவனை அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.குபேரன் குஞ்சுமணி மட்டுமே வளர்ந்து தான் மட்டுமே பெரிய மனிதனாக திகழ வேண்டும் என நினைத்தார்.

யாரை யார் வெல்வார் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.அந்த தயாரிப்பாளர் வீட்டிற்கு சென்ற போது கூட அந்த நடிகை குபேரன் குஞ்சுமணியை கண்டு கொள்ளவே இல்லை.அந்த தயாரிப்பாளர் மட்டுமே குஞ்சுமணியை வரவேற்றார்.கோயில் கட்டிக் கொடுத்த தயாரிப்பாளரின் மனைவிக்கு குஞ்சுமணி இப்படி கேவலமாக பேசியது தெரிந்தால் உண்டு இல்லை என இவரை ஆக்கி விடுவார்கள்.ஏன் அவர்கள் நினைத்தால் கோயிலையே இழுத்து மூடி விடவும் முடியும்.
பெண் சாபம் பொல்லாதது எனக் கூறுவார்கள்.இன்று கோடிகளில் குபேரன் குஞ்சுமணி சம்பாதிக்கிறார் என்றால் அதற்கு யார் காரணம்.நம்மை வாழ வைத்தவர்களை பற்றி தவறாக பேசினால் அந்த கடவுளுக்கே அடுக்காது.

இன்று பலர் கைகளில் பச்சைக் கயிறை கட்டிக் கொள்கிறார்கள்.அது குபேரன் குஞ்சுமணியின் கண்டுபிடிப்பு.பச்சை கயிறு போல பச்சை லட்டுவையும் அறிமுகப்படுத்தினார்.ஆனால் மக்கள் மத்தியில் அது அவ்வளவாக எடுபடவில்லை.அதாவது பச்சைக் கயிறு கைகளில் கட்டிக் கொண்டால் செல்வம் பெருகும் என்கிற புரளியை கிளப்பி விட்டார்.யாருக்கு செல்வம் பெருகும்.குபேரன் குஞ்சுமணிக்கா.?அல்லது கையில் பச்சை கயிறு கட்டிக் கொள்பவருக்கா?என்னை பொறுத்தவரை குபேரன் குஞ்சுமணிக்கு தான் செல்வம் பெருகும்.பச்சைக் கயிறு மூலமாக அவருடைய கோயிலை அடையாளப்படுத்த நினைத்தார்.

அதாவது யார் கையில் பச்சை கயிறு கட்டி உள்ளார்களோ அவர்கள் பணக்கார கடவுள் கோயிலுக்கு சென்று வந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.ஒருவர் கையில் பச்சை கயிறு கட்டியிருப்பதை பார்த்தவுடன் வேறொருவர் இது என்ன கயிறு என்று கேட்பார்கள்.உடனே அவர் நான் பணக்கார கடவுள் கோயிலுக்கு சென்றேன்.அங்கே தான் இந்த கயிறு கிடைக்கும் என தெரிவிப்பார்.உடனே அதை கேட்பவரும் பணக்கார கடவுள் கோயிலுக்கு செல்வார்.இது கோயிலுக்கு மிகப் பெரிய விளம்பரம் என குபேரன் குஞ்சுமணி நினைத்திருப்பார்.

அவருக்கு யோக திசை நடந்ததோ என்னவோ.?அவர் நினைத்தது பலித்தது.இன்றைய சினிமாவில் உள்ள பல ஹீரோக்கள்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் கைகளில் பச்சை கயிறு கட்டி இருப்பதை பார்க்க முடிகின்றது.எல்லாம் பணம் படுத்தும் பாடு.பணம் என்றால் பிணமும் கூட வாயை பிளக்கும் என சும்மாவா சொன்னார்கள்.பிச்சைக்காரனுக்கும் பணம் தேவை.கோடீஸ்வரனுக்கும் பணம் தேவை.

இந்த உளவியலை குபேரன் குஞ்சுமணி நன்றாக புரிந்து கொண்டார்.அவருக்கு அடித்தது ஜாக்பாட்.கோயிலில் பச்சைக் கயிறு வாங்கினால் பத்து ரூபாய்.அதே வேளையில் பணக்கார கடவுளை தூக்கிக் கொண்டு பூஜைக்கு செல்லும் இடங்களில் மற்றும் பெரிய மனிதர்களின் வீடுகளில் இவர்களாகவே அவர்களுக்கு பச்சைக் கயிறை வலுக்கட்டாயமாக அவர்கள் கைகளில் கட்டி விடுவார்கள்.திரைத்துறையில் உள்ள பிரபலங்கள் சிலர் இவர்கள் கைகளில் பச்சை கயிற்றை கட்டி விடும் போது அமைதியாக இருப்பார்கள்.

அப்போது அவர்களுக்கு நன்றாக புரிந்தது.இதை இவர்கள் பிற மக்களை கவர்வதற்காகவும் பணத்தை குஞ்சுமணி பெருக்குவதற்காகவும் கட்டி விடுகிறார்.குஞ்சுமணியின் நோக்கம் அவருக்கு பணம் பெருக வேண்டும் என்பதை பலர் புரிந்து கொண்டனர்.அதாவது மனிதனுடைய உளவியல் எப்படி என்றால்..இவ்வளவு பெரிய நடிகரே கையில் கயிறை கட்டிக் கொள்கிறார் என்றால் நாமும் கட்டிக் கொள்வோம் என அவன் நினைப்பான்.நமக்கும் அவரைப் போலவே பண வரவும் அதிர்ஷ்டமும் வரட்டுமே என நினைத்து அவன் கைகளில் கட்டிக் கொள்வான்.

ஒருவன் மட்டும் நன்றாக வாழ்வதற்கு பல மக்கள் இங்கே கூறு போடப்படுகிறார்கள்.சுவாமி விவேகானந்தர் எல்லா ஆற்றலும் உனக்குள்ளே இருக்கிறது.உன்னால் எதையும் சாதிக்க முடியும் என இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.ஆனால் இப்போதுள்ள குபேரன் குஞ்சுமணிகள் உன்கிட்ட ஒரு ஆற்றலும் இல்லை.எல்லாம் இந்த பச்சை கயிற்றில் தான் உள்ளது என்கின்றனர்.பச்சைக் கயிறை கட்டிக் கொண்டால் நீ பணக்காரன்.அப்படி இல்லையேல் நீ பிச்சைக்காரன் என மக்களை மிரட்டுகின்றனர்.பாவம் இந்த மக்கள்..

குஞ்சுமணி போன்ற போலி ஆசாமிகள் பணக்கார கடவுள் பெயரில் கோயிலை கட்டி வைத்துக் கொண்டு பச்சைக் கயிறு கைகளில் கட்டி விட்டு மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு வலம் வருகிறார்கள்.குஞ்சுமணி போன்றவர்களுக்கு தேவை பணம்.அவர்களுடைய சொந்தம் உடன்பிறப்புகள் நன்றாக வாழ்வதற்கு செல்வம் வேண்டும்.அதற்கு மக்களை முட்டாளாக்க வேண்டும்.அதே போல பெரிய பெரிய பணக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய இல்லங்களுக்கு பணக்கார கடவுளை எடுத்துச் செல்வதால் குபேரன் குஞ்சுமணிக்கு செல்வம் பெருகும்.

எவன் ஒருவன் கோயில் காசை எடுத்து உண்கிறானோ அவனால் ஏழேழு ஜென்மத்திற்கும் அந்த பாவத்தை கழிக்க முடியாது என்பது ஐதீகம்.இப்படி உண்பதற்கு பதில் பிச்சை எடுத்து சாகலாம் என ஞானிகள் கூறுவார்கள். இந்த பூமிக்கு நாம் வந்ததன் நோக்கம் பிறவிப் பயனான பாவத்தை கழித்து விட்டு செல்வதற்கே.சினிமாவில் அனைவரின் கைகளிலும் இப்படி பச்சைக் கயிறு கட்டிக் கொண்டிருப்பதை பார்த்த இளையராஜா என்ன இப்படி எல்லோரையும் மடையனாக யார் மாற்றி இருப்பார் என எண்ணி இருப்பாரா தெரியவில்லை.

2014 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் இது போன்ற பணம் பறிக்கும் குபேரன் குஞ்சுமணி ஆசாமிகளை நம்பாதீர்கள் என்று எழுதி இருந்தார்.அவர் எழுதியதன் சாராம்சம்..எப்படி “KFC McDONALD” போன்ற தின்பண்டக் கடைகள் பெருகி உள்ளதோ அதை போல இன்று கடவுளும் வணிகமயமாக்கப்பட்டுள்ளார்.கடவுளின் பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என எழுதி இருந்தார்.ஆனால் மக்கள் திருந்தினால் தானே.

இது போன்ற கோயில் கட்டி பிழைப்பு நடத்தும் குஞ்சுமணிகளால் சமுதாயத்தில் சீர்கேடுகள் தான் அதிகரிக்கும்.அதனால் மக்கள் தான் சற்று சுதாரிப்பாக இருக்க வேண்டும்.குபேரன் குஞ்சுமணியின் கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் “Laughing Buddha” என்று அழைக்கப்படும் குண்டு குபேரரின் வயிற்றை தடவி அவருக்கு காணிக்கை செலுத்தி அவருடைய வயிற்றில் கிச்சிலிக்கா மூட்டினால் அவருக்கு சந்தோஷம் ஏற்பட்டு அதனால் அவர் நமக்கு பண வரவை ஏற்படுத்துவாராம்.இதை விட அற்பத்தனமான விஷயம் உலகில் வேறொன்றும் இல்லை.(தொடரும்)

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பலருக்கும் பகிரவும்..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

விரைவில் எங்களுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி அமையும்பட்சத்தில் இவர்களைப் போன்ற போலி ஆசாமிகளின் முகத்திரைகள் கிழித்து எறியப்படும்.பாரத் மாதா கி ஜெய்.மோடி கி ஜெய்..ஜெய்ஹிந்த்..

“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)                                       எழுதியவர் ஏ.எல்.சூர்யா                               ...
13/05/2025

“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)
எழுதியவர் ஏ.எல்.சூர்யா
பகுதி-7

Disclaimer : இக்கதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே..யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.இது புனைந்து எழுதப்படும் கதை.அதே வேளையில் தனியார் கோயில் நடத்தி நன்றாக கல்லாக் கட்டும் போலி ஆசாமிகளை இக்கதை விவரிக்கும்.

குபேரன் குஞ்சுமணியிடம் சாமான்யமாக பணம் வாங்கி விட முடியாது.விஜய் கோயிலில் பணி புரிந்த போது ஒரு முறை அவர்களுடைய ஊரில் இருந்த போது குஞ்சுமணியின் சமூகத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய சமூகத்தின் காரியத்திற்காக குஞ்சுமணியிடம் பணம் கேட்க வந்திருந்தார்கள்.ஆனால் குஞ்சுமணி விஜய்யை அனுப்பி அவர்களிடம் வந்த விவரத்தை கேட்கச் சொன்னார்.வந்திருந்தவர்கள் விஜய்யிடம் மாமாவை பார்த்து நன்கொடை பெறுவதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார்கள்.

விஜய் வந்து குஞ்சுமணியிடம் விவரத்தை சொன்னதும் அவர்களிடம் பிறகு பார்க்கலாம் என்று சொல்லச் சொன்னார்.அதை போய் விஜய் தெரிவித்ததும் வந்திருந்தவர்கள் மிகுந்த கோபமாகி நன்கொடை தரவில்லை என்றாலும் பரவாயில்லை.ஆனால் ஒரு மரியாதைக்கு வந்து கூட பார்க்க மாட்டாரா என கொதித்தெழுந்தனர்.அவர்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது இவனை எல்லாம் ஒரு பெரிய மனுஷன் என்று பார்க்க வந்தோம் பாரு.நம்ம புத்தியை செருப்பால அடிக்கணும் என்று திட்டிக் கொண்டு சென்றனர்.விஜய்க்கு நன்றாக தெரியும் குஞ்சுமனிடம் யாராவது நன்கொடை கேட்டால் அப்படியே சத்தமே இல்லாமல் நழுவி விடுவார்.

அதே வேளையில் கோயிலுக்கு வருபவர்கள் குஞ்சுமணிக்கு நன்கொடை அளித்தால் அவர் முகத்தில் ஆயிரம் மெகாவாட்ஸ் விளக்குகள் போல பிரகாசிக்கும்.மற்றவர்களுக்கு கொடுப்பது என்றால் வலிக்கும்.முகம் சுழிப்பார்.வெறுப்புடன் பார்ப்பார்.பணம் சேர்ந்தால் இது ஒரு மிகப் பெரிய தொந்தரவு என்று சொல்வார்.அவர்களை கேவலமாக திட்டுவார்.

பட்டு சேலை உலகின் ராஜா என்றழைக்கப்படும் செட்டியார் ஒருவரை இங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அவர் ஒரு மிகப் பெரும் செல்வந்தர்.கலை உலகில் உள்ள பல சபாக்களுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த கொடைவள்ளல்.அவரிடம் நன்கொடைகள் பெற பலர் வரிசையில் காத்து நிற்பார்கள்.அவருக்கு நன்றாக தெரியும்..யார் நல்லவர்கள்..கெட்டவர்கள்..யாருக்கு கொடுக்க வேண்டும்..கொடுக்கக் கூடாது என்பதை அவருடைய உள்ளுணர்வு உணர்த்தும் என்று ஒரு புத்தகத்தில் எழுதி இருப்பார்.

குஞ்சுமணியும் கோயில் கட்டிய புதிதில் அந்த செட்டியாரிடம் நன்கொடை வாங்க முயற்சி செய்தார்.பெரும் முயற்சிக்குப் பிறகு நன்கொடையாக 5000 ரூபாய் நன்கொடை கொடுத்தார்.கோயில் கட்டிய புதிதில் உபயம் என்று அந்த செட்டியாரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.ஆனால் நாளடைவில் பல லட்சங்களை பலர் கோயிலுக்கு கொடுக்கத் தொடங்கியதால் அவருடைய பெயர் அழிக்கப்பட்டது.அவர் வெறும் 5000 ரூபாய் நன்கொடை கொடுத்ததால் குபேரன் குஞ்சுமணிக்கு அவர் மீது எந்த மரியாதையும் இருக்கவில்லை.

அந்த செல்வந்தரை ஒரு முறை கோயிலுக்கு வருமாறு அழைத்தனர்.ஆனால் அந்த செல்வந்தர் இது நாள் வரை கோயிலுக்கு வரவில்லை.அந்த செல்வந்தரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க மற்றும் அவருக்கு பொன்னாடை போர்த்துவதற்கு பல பெரிய மனிதர்களும் கூட்டங்களும் குவியும்.செல்வந்தரின் மனதில் இடம் பிடித்து விட்டால் அவர் கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் குணத்தை கொண்டவர்.செல்வந்தரின் உதவியாளர் குபேரன் குஞ்சுமணியிடம் பணத்தை கறப்பதற்கு பல முறை அவரை அழைப்பார்.

ஆனால் குஞ்சுமணியிடமா பணத்தை கறக்க முடியும்.அதனால் அவர் அழைத்தால் குஞ்சுமணி எடுக்கவே மாட்டார்.அந்த உதவியாளர் விஜய்யிடம் என்னப்பா உங்க மாமா குஞ்சுமணி எப்போது ஃபோன் பண்ணாலும் எடுக்கவே மாட்டேன் என்கிறார் என கேட்பார்.அதற்கு விஜய் அதைப் பற்றி எனக்கு தெரியாது என்பான்.செல்வந்தரிடம் எதுவும் தனக்கு பணம் பெயராது என்பதை அறிந்து கொண்ட குஞ்சுமணி அவருடைய பிறந்த நாளுக்கு அழைத்தாலும் செல்ல மாட்டார்.அவருடைய நோக்கம் எல்லாம் பெரிய பெரிய பணக்காரர்களிடமிருந்து பணம் கறப்பதே நோக்கமாகக் கொண்டிருப்பார்.

கோயில் கட்டிய புதிது.சென்னையிலிருந்து கோயில் வெகு தொலைவில் இருந்ததால் மக்கள் அப்போது அவ்வளவாக வர மாட்டார்கள்.கோயிலின் மேல்தளம் எல்லாம் கட்டுவதற்கு அப்போது குஞ்சுமணியிடம் பணம் இல்லை.அப்போது என்ன செய்யலாம் என யோசித்த குபேரன் குஞ்சுமணி சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஒருவர் இது போன்ற கோயில் திருப்பணிக்கு உதவுவதை அறிந்தார்.அவருடைய தொடர்பை யார் மூலமாகவோ பிடித்து அந்த தயாரிப்பாளரை கோயிலுக்கு வரவழைத்தார்.

கோயிலுக்கு வந்தவரை எப்படியோ தன் வாய் ஜாலத்தால் பேசி குஞ்சுமணி மடக்கி விட்டார்.அதற்குப் பின் அவருடைய தயவால் கோயில் கட்டிக் கொடுக்கப்பட்டது.அந்த தயாரிப்பாளரின் சகோதரி பிரபல முன்னாள் கதாநாயகி ஆவார்.தமிழ் சினிமாவில் மிகப் பெரிய கதாநாயகனாக கோலோச்சி தமிழ்நாட்டை ஆட்சி செய்தவருக்கு அக்கதாநாயகி மிக நெருக்கமானவர்.அதனால் கோயில் கட்டிக் கொடுத்த தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய பின்புலம் உண்டு.அதனால் அவர் பெரும் செல்வந்தராகவும் திகழ்ந்தார்.

இன்று குபேரன் குஞ்சுமணியின் கோயில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்ததற்கு அத்தயாரிப்பாளர் மிகப் பெரிய காரணம் என்றே சொல்லலாம்.அந்த தயாரிப்பாளர் சினிமாவில் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த கதாநாயகியை திருமணம் செய்து கொண்டார்.அந்த கதாநாயகி பிரபல ஹீரோ ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.ஆனால் அந்த ஹீரோ ஏதோ சில காரணங்களால் கதாநாயகியுடன் காதலை முறித்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அந்த கதாநாயகி இப்போது தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட பின் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

குபேரன் குஞ்சுமணி கோயில் கட்டிக் கொடுத்த தயாரிப்பாளரின் மனைவியை பற்றி மிகவும் அசிங்கமாக பேசுவார்.எப்படித் தான் இந்த ஆள்(தயாரிப்பாளர்) அந்த கதாநாயகியோட அந்தரங்க வாழ்க்கை தெரிஞ்சும் திருமணம் செய்து கொண்டான்.அவ எத்தனை பேர் கூட படுத்திருப்பா.?எப்படி இந்த ஆள் கட்டிக்கிட்டான்.எப்படித் தான் இந்த ஆளுக்கு மனசு வந்ததோ.ஒரு வேளை அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்காதோ..கருமம் என கிண்டல் செய்வார்.விஜய் இப்படி குபேரன் குஞ்சுமணி பல முறை பேசுவதை கேட்டுள்ளான்.

இப்படி குஞ்சுமணி அந்த நடிகையைப் பற்றி பேசும் போது விஜய்யின் மனதிற்குள் எப்படித் தான் இந்த ஆள் நாக்கில் நரம்பே இல்லாமல் பேசுகிறானோ என நினைப்பான்.அந்த தயாரிப்பாளர் மட்டும் கோயிலை கட்டிக் கொடுக்கவில்லை என்றால் இன்று கோயில் இந்த அளவிற்கு வளர்ந்திருக்குமா என நினைப்பான்.உண்மையாகவே அந்த கதாநாயகி வெளியில் பார்ப்பதற்கு பலாப்பழத்தில் உள்ள முற்க்களை போலவே இருப்பார்.ஆனால் பழகியவர்களுக்கு தான் தெரியும் அது பலாப்பழம் என்று.நல்ல நோக்கத்துடன் பழகினால் நன்றாக பழகுவார் என கேள்விப்பட்டதுண்டு.

கோயில் கட்டிய புதிதில் தயாரிப்பாளர் கதாநாயகியை ஒரு முறை கோயிலுக்கு அழைத்து வந்திருக்கிறார்.ஆனால் அதே தயாரிப்பாளர் பல வருடங்களாக குபேரன் குஞ்சுமணியுடன் பழகி இருந்தும் ஒரு முறை கூட அந்த பிரபல நடிகை குபேரன் குஞ்சுமணியுடன் பேசியது கிடையாது.தயாரிப்பாளர் சென்னையில் கட்டிய அவருடைய புதிய வீட்டிற்கு குபேரன் குஞ்சுமணியை அழைத்தார்.அப்போது விஜய்யும் அவனுடைய மாமா குஞ்சுமணியுடன் சென்றான்.அந்த தயாரிப்பாளர் பெரிய பெரிய திரைப்படங்களை இன்றளவும் தயாரித்து வருகிறார்.

அதனால் மாமாவிடம் முன்னர் ஒரு முறை அறிமுகம் செய்து வைக்க முடியுமா எனக் கேட்டான்.அதற்கு குபேரன் குஞ்சுமணி முடியாது என கூறி விட்டார்.அதனால் இந்த முறை அவருடைய கிரகப்பிரவேசத்திற்கு சென்ற போது மாமா குஞ்சுமணியிடம் எதுவும் கேட்கவில்லை.அப்படியே கேட்டாலும் குபேரன் குஞ்சுமணி அவரிடம் அறிமுகம் செய்து வைக்கப் போவதுமில்லை.(தொடரும்)

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பலருக்கும் பகிரவும்..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

விரைவில் எங்களுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி அமையும்பட்சத்தில் இவர்களைப் போன்ற போலி ஆசாமிகளின் முகத்திரைகள் கிழித்து எறியப்படும்.பாரத் மாதா கி ஜெய்.மோடி கி ஜெய்..ஜெய்ஹிந்த்..

“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)                                       எழுதியவர் ஏ.எல்.சூர்யா                               ...
11/05/2025

“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)
எழுதியவர் ஏ.எல்.சூர்யா
பகுதி-5

Disclaimer : இக்கதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே..யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.இது புனைந்து எழுதப்படும் கதை.அதே வேளையில் தனியார் கோயில் நடத்தி நன்றாக கல்லாக் கட்டும் போலி ஆசாமிகளை இக்கதை விவரிக்கும்.

நம்முடைய ஆழ்மனதிற்கு மிகப் பெரிய சக்தி உண்டு என்பது இங்கு வாழும் பல மனிதர்களுக்கு தெரியாது.அதைத் தான் சுவாமி விவேகானந்தர் நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே மாறுவாய் என்றார்.நமது அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களை பார்த்து கனவு காணுங்கள் அது ஒரு நாள் நிஜமாகும் என்றார்.உங்களுடைய கனவும் லட்சியமும் பெரியதாக இருப்பின் உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளும் பெரியதாக இருக்கும்.அதாவது பிரபஞ்சம் உங்களை அந்த பெரிய நிலைக்கு தயார் செய்கின்றது.அவை எல்லாம் இவர்களைப் போன்ற மூடர்களுக்கு சுத்தமாக தெரியாது.அதே வேளையில் மனித வெறி மிக மிக மோசமானது.

விஜய்யின் உறவுகள் அனைத்தும் குபேரன் குஞ்சுமணியால் சிதைந்தன.அதுவும் இல்லாமல் குபேரன் குஞ்சுமணி உறவினர்களிடம் விஜய்யுடன் யாரும் பேசக் கூடாது என உத்தரவு போட்டார்.அதனால் அவர்களும் விஜய்யுடன் பேசுவதை தவிர்த்தனர்.சித்தி ஒருவருக்கு விஜய் மீது அதீத பாசம்.விஜய் மிகுந்த சிரமப்படுவதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் உறவினர் ஒருவரிடம் 3000ரூபாய் பணம் கொடுத்து விடுகிறேன் என்றாள்.அதன் பின் யார் என்ன சொன்னார்களோ பணமும் கொடுக்கவில்லை.அதே போல இவனிடம் பேசுவதையும் தவிர்த்தாள்.

கோயிலில் வேலை பார்த்த ஒருவன் ஏதோ தவறு செய்து விட்டான் என திடீரென்று வேலையை விட்டு குபேரன் குஞ்சுமணியால் நிறுத்தப்பட்டான்.மிகவும் ஏழ்மையான குடும்பம்.அவன் செய்த தவறை கூறி மறுபடியும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளுமாறு குஞ்சுமணியிடம் கெஞ்சினான்.ஆனால் இவர் தான் கல் நெஞ்சன் ஆயிற்றே.அதனால் அவன் எவ்வளவு கெஞ்சியும் எந்த பயனும் இல்லை.விரக்தியுடன் ஊருக்கு சென்றவன் அங்கே தற்கொலை செய்து கொண்டான்.

இதை அறிந்த விஜய் குஞ்சுமணியிடம் ஏதோ பாவம் சின்ன பையன் வறுமையில் தவறு செய்திருப்பான்.அவனை மறுபடியும் சேர்த்திருக்கலாம் என்றான்.அதற்கு குபேரன் குஞ்சுமணி..என்ன பாவம்..செத்தால் செத்துப் போகட்டும் என்றார்.அதைக் கேட்ட விஜய்க்கு தூக்கி வாரி போட்டது.அவன் மனதிற்குள் என்ன மனுஷன் இவன்..செத்துப் போகட்டும்னு காத்திருப்பான் போல.அடுத்தவன் வறுமையில் வாடி செத்துப் போவது குஞ்சுமணிக்கு தாங்க முடியாத ஆனந்தம் போல.இவரை போன்றவர்கள் தான் கோயில் கட்டி அடுத்தவர்கள் கஷ்டத்தை தீர்க்கப் போகிறார்கள் போல என மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

ஆனால் விஜய்க்கும் அதே கதி தான் நடைபெறப் போகிறது என்பது அப்போது அவனுக்கு தெரியவில்லை.அது வெகு சீக்கிரமாகவே அவனுக்கு நடந்தது.விஜய் கோயிலில் இருந்த போது ஒரு முறை பூஜைக்கு சினிமாவில் பிரபல பெண் நடன மாஸ்டர் வீட்டிற்கு சென்றிருக்கிறான்.கோயிலில் இருந்து வெளியே வந்த பிறகு அந்த நடன மாஸ்டருக்கு எல்லோருக்கும் அனுப்புவதைப் போல அவன் பேசியிருந்த வீடியோவை அனுப்பினான்.

என்னுடைய மாமா குபேரன் குஞ்சுமணியுடன் நான் ஒரு முறை பூஜைக்காக உங்களுடைய வீட்டிற்கு வந்திருக்கிறேன் என தகவல் அனுப்பினான்.அந்த தகவலை பார்த்து விட்டு குபேரன் குஞ்சுமணியிடம் நடன மாஸ்டர்..அவர் உங்களுடைய உறவினரா..வீட்டிற்கும் ஒரு முறை வந்ததாக தகவல் அனுப்பி இருக்கிறார் என கேட்டுள்ளார்.அதற்கு குஞ்சுமணி யாரோ ஒருவர் உங்களிடம் பொய் கூறுகிறார்.அவர் எனது சொந்தக்காரர் எல்லாம் கிடையாது எனக் கூறிவிட்டார்.அதனால் அந்த நடன மாஸ்டர் விஜய்யின் மூக்கை உடைப்பதை போல “Who is This”? “யார் நீ” என தகவல் அனுப்பினார்.அதற்கு விஜய் நடன மாஸ்டர் மூக்கை தெறிக்க தெறிக்க உடைப்பது போல அது உங்களுக்கு எதிர்காலத்தில் தெரிய வரும் என பதில் அனுப்பினான்.

அவன் அப்படி சொன்னது போலவே அவன் வாக்கும் பலித்தது.எதிர்காலத்தில் சர்வ வல்லமை பொருந்திய அரசியல் ஆளுமையாக விஜய் வலம் வந்தான். சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற முனைப்புடன் விஜய் மிகுந்த போராடிக் கொண்டிருந்தான்.ஆனால் சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.குபேரன் குஞ்சுமணி நினைத்திருந்தால் உதவி இருக்கலாம்.சுயநலத்தின் உச்சம் என்றால் குஞ்சுமணி தான் சிறந்த உதாரணமாக திகழ்வார்.ஒரு கட்டத்தில் எப்படியோ சினிமாவில் முன்னொரு காலத்தில் திரைக்கதை ஜாம்பவான் என்று அழைக்கப்படும் இயக்குனரிடம் போய் சேர்ந்து விட்டான்.

அவரும் அவருடைய திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தருவதாக கூறினார்.ஆனால் பாடல் செலவு செய்வதற்கு 5லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றார்.விஜய்யும் தருவதற்கு சம்மதித்து அவர் கேட்ட பணத்தையும் கொடுத்தான்.ஒரு சில மாதங்களுக்குப் பின் அந்த இயக்குனர் இவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தான்.குபேரன் குஞ்சுமணியின் கோயிலுக்கு இயக்குனரின் மனைவியும் மகனும் வருவார்கள்.அதனால் அம்மா மூலமாக குபேரன் குஞ்சுமணியிடம் கூறினால் கொடுத்த பணம் கிடைத்து விடும் என நினைத்தான்.

அவனது அம்மா குபேரன் குஞ்சுமணியிடம் இத்தகவலை தெரிவித்த போது சரி சரி என கேட்டுக் கொண்டார்.இவர் தான் மிகுந்த காரியவாதி ஆயிற்றே. அதனால் எந்த உதவியும் செய்யவில்லை.குஞ்சுமணி உதவவில்லை என்றாலும் இறை சக்தியின் உதவியால் அவன் கொடுத்த மொத்த பணத்தையும் அவரிடம் இருந்து திரும்ப பெற்றான்.அப்போது அந்த இயக்குனர் அலுவலகத்தில் வேலை பார்த்த மேலாளர்..விஜய்யிடம் நீங்கள் தான் கொடுத்த பணத்தை பெற்ற ஒரே முதல் நபர்.இது போன்று பணம் கொடுத்து பலர் ஏமாற்றப்பட்டார்கள் என்றார்.(தொடரும்)

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பலருக்கும் பகிரவும்..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

விரைவில் எங்களுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி அமையும்பட்சத்தில் இவர்களைப் போன்ற போலி ஆசாமிகளின் முகத்திரைகள் கிழித்து எறியப்படும்.பாரத் மாதா கி ஜெய்.மோடி கி ஜெய்..ஜெய்ஹிந்த்..

“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)                                       எழுதியவர் ஏ.எல்.சூர்யா                               ...
10/05/2025

“குபேரன் குஞ்சுமணி”(சிறுகதை)
எழுதியவர் ஏ.எல்.சூர்யா
பகுதி-4

Disclaimer : இக்கதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே..யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.இது புனைந்து எழுதப்படும் கதை.அதே வேளையில் தனியார் கோயில் நடத்தி நன்றாக கல்லாக் கட்டும் போலி ஆசாமிகளை இக்கதை விவரிக்கும்.

என்னை பொறுத்தவரை கோயில் கட்டி வாழ்ந்ததாக நான் இது வரை எவரையும் பார்த்ததில்லை.யோகிராம் சுரத்குமார்,ரமணர்,சேஷாத்ரி சுவாமிகள் போன்ற ஞானிகள் திருவண்ணாமலைக்கு அந்த அருணாச்சலேஸ்வரரின் அழைப்பால் பரதேசம் வந்தனர்.மக்கள் மத்தியில் பல இன்னல்களுக்கு ஆளாகினர்.ஆனால் நாளடைவில் மக்கள் அவர்களை ஞானிகள் என உணர்ந்து கொண்டனர்.அதற்குப் பின் இந்த ஞானிகளின் காலடியில் மக்கள் வந்து பணம் கொட்டத் தொடங்கினர்.இந்த ஞானிகள் அவர்களுடைய ஊரில் இருந்து வரும் போது ஒன்றையும் கொண்டு வரவில்லை.

அவர்கள் யாரிடமும் பிச்சையும் கேட்கவில்லை.இவர்கள் தங்களைப் பற்றி எந்த விளம்பரமும் செய்து கொள்ளவில்லை.ஆனால் மக்கள் சாரை சாரையாக இந்த ஞானிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.சுவாமி விவேகானந்தர் அவருடைய கடுமையான தவ வலிமையின் காரணமாக இந்த உலகையே திசை திருப்பினார்.அது அவருடைய தவ வலிமைக்கு கிடைத்த பரிசு.இன்று உலகம் முழுவதும் சுவாமி விவேகானந்தருக்கு மணி மண்டபங்கள் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லலாம்.சுவாமி விவேகானந்தர் மனிதர்கள் இழி நிலையில் உள்ளார்கள் எனக் கூறுவார்.

அது இது போன்ற குபேரன் குஞ்சுமணிகளுக்கு பொருந்தும்.ஆனால் இவர்களைப் போன்றோர்களுக்கு இறைவன் சரியான பாடத்தை தக்க சமயத்தில் கற்பிப்பான்.மனிதன் ஞானிகளை முதலில் பைத்தியம் என்று கருதுவான்.பிழைப்பதற்கு வழி இல்லாமல் கிளம்பி வந்து விட்டான் என நினைப்பான்.ஆனால் நாளடைவில் மனிதன் அவர்களுடைய ஞானத்தை உணரத் தொடங்குவான்.குஞ்சுமணியின் அக்கா மகன் விஜய் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டதும் இறைவனின் செயலாகவே கருதுகிறேன்.

விஜய் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டதும் கோயிலுக்காக அவன் இசையமைத்து தயார் செய்திருந்த ஒலித் தகடுகள் அனைத்தும் விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டன.அவன் அதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து தயார் செய்திருந்த ஒலித் தகடுகள் அனைத்தும் வீணானது.விஜய் அவனுடைய அம்மாவிடம் மாமா குபேரன் குஞ்சுமணியை ஏதோ தெரியாமல் கோபத்தில் பேசி விட்டேன்.இந்த ஒரு முறை மன்னிக்கச் சொல்லு என்று கெஞ்சினான்.அவனுடைய அம்மாவும் குபேரன் குஞ்சுமணிக்கு அக்கா என்கிற முறையில் ஏதோ சின்ன பையன் தாய் மாமா என்கிற உரிமையில் பேசிட்டான் என்று எவ்வளவோ தம்பியிடம் கெஞ்சினாள்.

விஜய்யின் மனைவி ஓரளவிற்கு மனநலம் பாதிக்கப்பட்ட பைத்தியம் என்று சொல்லலாம்.அப்போது அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்பெண்ணிற்கு சுத்தமாக படிப்பறிவும் கிடையாது.அதனால் திடீரென வேலையில் இருந்து நிறுத்தியதால் வருமானத்திற்கு விஜய் மிகுந்த அல்லோள்ப்பட்டான்.குபேரன் குஞ்சுமணி சகோதரி எவ்வளவோ எடுத்துக் கூறியும் எந்த ஈவு இரக்கமும் பார்க்காமல் விஜய்யை மறுபடியும் சேர்த்துக் கொள்ளவே முடியாது என குஞ்சுமணி கூறிவிட்டார்.ஆனால் பிரபஞ்சம் இதற்கு பின்னால் குபேரன் குஞ்சமணிக்கு எவ்வளவு பெரிய படுகுழியை வெட்டி வைத்து சரியான நாள் வரும் வரை காத்துக் கொண்டிருந்தது என்பது அப்போது குபேரன் குஞ்சுமணிக்கு புரியவில்லை.

குஞ்சுமணிக்கு பணம் சேர்ந்ததால் ஆணவமும் செருக்கும் அவர் கண்ணை மறைத்தது.ஆனால் பின் நாட்களில் விஜய் எப்படி குபேரன் குஞ்சு மணிக்கு மூடு விழா நடத்தினான் என்பது சினிமாவில் எடுக்கப்படும் திரைக்கதையே தோற்று விடும் அளவிற்கு இருந்தது.விஜய்யின் சித்திக்கு அவன் மேல் மிகுந்த பாசம்.சித்தி அவனிடம் இப்படி தேவையில்லாமல் சண்டை போட்டு இப்படி நல்ல வாய்ப்பை கெடுத்துக் கொண்டாய் என வருத்தப்பட்டாள்.அதற்கு விஜய் நான் கோயிலில் இருக்கக் கூடாது என்பது என்னோட விதி.என்னுடைய விதி இதை விட மிகப் பெரிய விதி என கூறிவிட்டு..சரி நான் எதுக்கும் மாமா குஞ்சுமணி கிட்ட நேரில் போய் மன்னிப்பு கேட்டு பார்க்கிறேன் என்று நேரில் சென்று மன்னிப்பு கேட்க ஆயத்தமானான்.

கோயிலை விட்டு வெளியேறி சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த போராட்டங்களை மேற்கொண்டான்.அப்போது அவனுக்கு ஆன்மீக ரீதியாக அவனுடைய எதிர்கால வாழ்க்கை புலப்பட்டது.தனது இறப்பின் முடிவு எப்படி இருக்கும் என்பன போன்றவைகள் அவனுக்கு படக் காட்சிகளாக புலப்பட்டது.முதலில் அவனால் தனக்கு வரவிருக்கும் மிகப் பெரிய வாழ்க்கையை நம்ப முடியவில்லை.எதிர்காலத்தில் தனக்கு வரவிருக்கும் மிகப் பெரிய வாழ்க்கையை அடைவதற்கு எத்தருணத்திலும் செத்து விடக் கூடாது என முடிவு செய்தான்.

அவனுக்கு இடப்பட்டிருக்கும் வாழ்க்கை எதிர்காலத்தில் விஜய் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக வரப் போகிறான் என்றது.அவன் கண்ட காட்சியைப் போல எதிர்காலத்தில் ஊரே அவனை கண்டு அலறியது.பல கெட்ட மனிதர்கள் இவனை ஏளனம் செய்தவர்கள்..விஜய் ஒரு பைத்தியக்காரன் சும்மா ஏதோ தன்னை ஞானி என்று சொல்லிட்டு திரிகிறான் என கிண்டல் பேசியவர்கள்..பெருசா ஆசைப்படுறான் பாவம்..இது போன்று இழி நிலையில் உள்ள மனிதர்கள் இவனைப் பற்றி பேசியவர்கள் எல்லாம் உண்மையான ஆளுமையாக விஜய் வலம் வந்த போது பலர் அலறி அடித்துக் கொண்டும் இன்னும் பலர் செத்து மடிந்தார்கள்.

சாதாரண மனிதர்களால் அன்று இவனுடைய ஞானத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.விஜய் ஒரு கூட்டுப் புழுவாக அப்பேர்ப்பட்ட வலியையும் வேதனையையும் சொல்லோணா இன்னல்களையும் அவன் பட்டாம்பூச்சியாக மாறும் வரை பல்லைக் கடித்து தாங்கிக் கொண்டான்.அவனுடைய தவ வலிமைக்கு பரிசாக பட்டாம்பூச்சியாகவும் ஒரு நாள் மலர்ந்தான்.குபேரன் குஞ்சுமணியிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்பதற்கு முன்னால் அந்த ஆள் எப்படியும் மன்னிக்க மாட்டான் என அவனுடைய உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்தியது.

அப்போது விஜய் கண்ட காட்சி குபேரன் குஞ்சுமணியின் மூக்கை யாரோ பலம் கொண்டு குத்துவது போலவும் அவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டுவது போல பார்த்தான்.இப்போது குபேரன் குஞ்சுமணியின் அலுவலகத்திற்கு சென்றான்.குபேரன் குஞ்சுமணி அமர்ந்திருந்தார்.அப்போது விஜய் தனது தன்மானத்தையும் விட்டு நான் ஏதோ கோபத்தில் தவறாக பேசி விட்டேன்.என்னை செருப்பால் வேண்டுமென்றாலும் அடித்துக் கொள் என மன்னிப்பு கேட்டான்.அதற்கு குபேரன் குஞ்சுமணி போ போ நானே சொல்லி அனுப்புறேன் என இவனை விரட்டி விட்டார்.

குஞ்சுமணியை சென்று பார்த்து மன்னிப்பு கேட்பதற்கு முன்னால் பல முறை போக வேண்டாம் என்று தான் அவனுக்கு தோன்றியது.ஆனால் சிலர் பிள்ளைகள் எல்லாம் இருக்காங்க.அதனால போ என்றார்கள்.குஞ்சுமணி அப்படி கூறியதும் எல்லாம் நன்மைக்கே என அங்கிருந்து வெளியேறினான்.மனிதர்கள் என்றால் ஈரம் இருக்கும்.விஜய் அன்றே தன்னுடைய மனதிற்குள் கங்கணம் கட்டிக் கொண்டான்.இவனுடைய அழிவு நம் கையால் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.

குபேரன் குஞ்சு மணியின் தந்தை மரணத்திற்கு சென்ற போது விஜய் சோர்வாக பரிதாபமான நிலையில் காணப்பட்டான்.அப்போது கன்னங் கரெல் என யாரோ ஒரு கறி சட்டி வாயன் விஜய்யை பார்ப்பதைப் போல உணர்ந்தான்.அப்போது அந்த கறி சட்டி ஆசாமி நக்கலாக இவனை மேலும் கீழுமாக பார்த்தான்.அதை பார்த்த விஜய் அவனுடைய மனதிற்குள் நல்லா கோயில் காசை தின்னுட்டு கொழுத்துப் போய் நக்கலா பார்க்கிறான் போல. அவன் கதி அரோகதியா இருக்கணும்.இந்த மொத்த கூட்டமும் கோயிலை வைத்தும் குபேரன் குஞ்சுமணியை வைத்து தானே ஆடுது.இந்த மொத்த கூட்டமும் குபேரன் குஞ்சுமணியை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடணும் என நினைத்தான்.அவன் நினைத்தது போலவே எதிர்காலத்தில் நடந்தது.(தொடரும்)

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பலருக்கும் பகிரவும்..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

விரைவில் எங்களுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி அமையும்பட்சத்தில் இவர்களைப் போன்ற போலி ஆசாமிகளின் முகத்திரைகள் கிழித்து எறியப்படும்.பாரத் மாதா கி ஜெய்.மோடி கி ஜெய்..ஜெய்ஹிந்த்..

Address

Chennai
600017

Opening Hours

Monday 10am - 5:40pm
Tuesday 10am - 5:40pm
Wednesday 10am - 5:40pm
Thursday 10am - 5:40pm
Friday 10am - 5:40pm
Saturday 10am - 5:40pm

Telephone

+919840985951

Alerts

Be the first to know and let us send you an email when Be Positive. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Be Positive.:

Share