
01/03/2025
சில ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாடுதுறை கலவையான அனுபவங்களைக் கொடுத்துள்ளது. இம்முறை மேலும் சிறப்பான அனுபவங்கள்.
கடந்த முறை புதுச்சேரியில் எடுத்த காந்தம் வகுப்பில் கலந்துகொண்ட ஒருவர் இந்த நல்ல வகுப்பை தன் சுற்றமும் நட்பும் பெறவேண்டும் என்று நினைத்து கடந்த 23 ஆம் தேதி காந்தம் வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார். கலந்துகொண்டிருந்தோர் அனைவரும் கிராமத்து உள்ளங்கள். கடினமான சங்கதிகளை அந்த எளிய மனங்களுக்குள் செலுத்த வேண்டும் என்கிற சவால் இருந்தது. என்றும் உடன்நிற்கும் இறையருள் அதனை செய்வித்தது. நிறைய சிரிப்புகள், நிறைய உணர்தல்கள் என வகுப்பு நிறைவுற்றது. இதற்கு காரணமானவர்களுக்கு இப்புண்ணியங்கள் சேரட்டும்.