Tamizh Marabuvazhi Nalavazhvu Miyam

Tamizh Marabuvazhi Nalavazhvu Miyam மனம் - எண்ணங்களின் தூய்மையிண்மையே நோ?

’நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்’

நோய் என்பது எனது புரிதலின் படி, ---
இறை தான் படைத்தவற்றை காக்க, தனது ஆற்றலை தொடர்ந்து தனது படைப்புகளுக்கு வழங்கி வருகிறது. அவ்வாறே மனிதனுக்கும் இறையாற்றலின் தொடர்பு - வழிகாட்டுதல் மனிதனுடைய நன்மைக்காக உள்ளது.

தனது மேம்பட்ட படைப்பான மனிதனுக்கான தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய வல்லதாக இறைவன்
இயற்கையை - பஞ்ச பூதங்களை படைத்துள்ளான்.

முறைப்படி இயற்கையோடு இயைந்து

வாழ்வதற்கு மனிதன் அறிவுறுத்தப்பட்டுள்ளான். பிற மனிதர்களுடனும் அன்புடன் வாழ இறைவன் மனிதனை அறிவுறுத்தியுள்ளான்.

ஆணவத்தால் வந்த தற்பெருமை, காரணமாக மனிதன் இறையின் அறிவுறுத்தல்களை மீறி, பயம், கவலை, வெறுப்பு, கோபம், கண்டுகொள்ளாமை, அறியாமை, சுயநலம் போன்ற மனதின் கேடுகளால் இயற்கையையும், பிற மனிதரையும், தன்னையும் அழித்துக் கொள்கிறான் அதனால் இந்த மனித பிறவியை வீணாக்குகிறான்.

இந்த ஒழுக்க கேட்டிலிருந்து மனிதனைக் காக்கவும், சரியான பாதையில் வாழ வைக்கவும் உதவிடவே, இறை மனிதனுக்கு நோய்களை - துன்பங்களை உருவாக்குகிறது.

அவன் தனது தற்பெருமையிலிருந்து விடுபட்டு நலவாழ்வு வாழ விழிப்பை தரவே இறையாற்றல் விளைகிறது.

தொடர்ந்து தவறுகள் செய்பவர்களுக்கு கடுமையாகிறது. வழிகாட்டுதலையும், புரிதலையும் இல்லாததாக்குகிறது.

இயற்கையுடனான உறவில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி, மனதின் கேடுகளை விளக்கி, பிற மனிதர்களையும், உயிர்களையும் மதித்து நடப்பதன் தேவையை உணர்த்தி, இறையாற்றலுடன் உள்ள தொடர்பை மீட்டமைத்துக்கொள்ள உதவுவதே மருத்துவம்.

எனது புரிதலின் உதவியால் நான்பெற்ற - இறை வழிகாட்டுதல்கள் இறைஞானங்களின் அடிப்படையில் எனது மருத்துவ முறைகள் உருவாகியுள்ளது.

எந்த நோய்களாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட இறையாற்றலும், இறைவழிகாட்டலும் தேவை. அதை மீட்டுக் கொள்ள உதவுவதே எனது மருத்துவமாக இருக்கும்.

என்னிடம் மருத்துவம் பெற நேரில் வருக அல்லது தொலைபேசியில், அல்லது மின்னஞ்சல் என ஏதேனும் ஓர் வழியை பயன்படுத்திக் கொள்க.

எனது அன்பின் ஆற்றலால் உங்கள் மனதின் துன்பங்களில் இருந்து உங்கள் ஆன்மாவை விடுவித்து இறையின் கருணையை திரும்ப பெற உதவுகிறேன்.

உங்கள் நோய்களும் ,துன்பங்களும் நீங்கி இறைவன் அருளால் விரைவில் சுகமடைவீர்கள்.

கைபேசி எண்- 9345812080,9444776208
7010560588
மின்னஞ்சல்- siddhahealer@gmail.com, thamizhavel.n@gmail.com

15/11/2024

மனசோர்வு, மன இறுக்கம், உடல் வலி,வேதனைகள் அனைத்தையும் விநாடிகளில் எந்த நிபந்தணையும் இல்லாது தீர்க்க இங்கு இறையாற்றலால் இயலும்... சுகமடைந்தவர் செய்யவேண்டியது நன்றியுடன் பணிவாக நலம் நாடுவதே...

இறைவழியில் வாழ...
நான் மருத்துவனல்ல; சுகம் அளிப்பவன்...
இறைவன் தான் சுகம் அளிப்பவன். ஆம், நான் இறையருளால் சுகம் தருபவன். எனது எனும் ஆணவத்தில் இருந்து விலகி நான் எனும் இறை ஞானத்திலிருந்து சுகத்தை தருகிறேன்.
மனிதனுக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் இறை எனும் மூலத்திலிருந்து மனிதன் விலகியதால் ஏற்பட்டது.
நோய்கள்; நாம் வேரறுந்து போயிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துவதற்காக வந்ததே.
துன்பங்கள் வழியாக நம்மை தூண்டி, நண்மையின் பாதையில் நம்மை வழி நடத்துவது தான் நோய்களின் பணி.
சான்றோர்கள், சித்தர்கள் நோயிலிருந்து சுகம் பெறும் வழிகளை அறிந்தவர்கள். நோய் வரக் காரணமாக இருந்த அல்லது மூலத்திலிருந்து நாம் விலகக் காரணமாக இருந்த ஆணவத்தையும், அதன் விளைவுகளையும், நமது மயக்கத்தையும் நீக்கி; பணிவுடனும், நன்றி உணர்வுடனும், தெளிவாகவும் நாம் இறைவனிடம் கேட்கும்போது, நன்மையை நாடும் போது மீண்டும் இறையுடன் ஆன நமது தொடர்பு புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நம் சுயத்தை, சுகத்தை உறுதிப் படுத்திக் கொள்கிறோம்.
இதை உணர்ந்து அறிந்த சித்தர்கள் - அறிவர்கள் தன்னையும் தம்மை நாடி வந்த பிறரையும் நோயினால் வந்த உடல், மனத் துன்பங்களிலிருந்து வினாடிகளில் சுகமாக்கி கொள்ள முடியும். ஏனென்றால், இறைவன் கருணை உள்ளவன்.
நான் இந்த புரிதலை பெற்றபின், கடந்த 20 ஆண்டுகளாக இறைவழியில் சுகம் நாடி வருபவர்களுக்கு அவர்கள் உடல், மனம் துன்பங்களிலிருந்து மீள, நான் இறைவழியில் சுகம் கொடுத்து வருகிறேன்.
இறைவனின் அருளால் கிடைத்த ஞானத்தை பயன்படுத்தி, நான் பெற்ற இறைவழியில் சுகமளிக்கும் ஆற்றலைத் தகுதியுள்ள பலருக்கு "தீட்சை" யாக கைமாற்றித் தந்துள்ளேன். பல தகுதியுள்ளவர்களை
இறைவழி அறிவர்களாக உருவாக்கியுள்ளேன்.
இவர்கள், இறையை உணர்த்த பெற்றதால் கிடைத்த புரிதலால் - இறைஞானங்களால் தம்மை அகிலத்தின் ஆண்மீக பயணிகளாக மேம்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
உடல், மன நலம் மட்டுமல்லாமல், எல்லாத் துறைகளிலும் இறைவழி அறிவர்கள் தாம் பெற்ற புரிதலால் சிறப்பான நன்மைகளை பெறுகிறார்கள்.
இறைவழி அறிவர்கள் உதவியால், நன்மைக்கான வழியைத் தேர்ந்தெடுக்க அறியாது "மதில்மேல் பூனையாக" இருக்கும் எத்தனையோ மனிதர்கள் வாழ்வில் நலம் பெற்றிருக்கிறார்கள்.
நான் தனித்தனியாகவோ, கூட்டமாக பலருக்கும் சுகமளிப்பதையும், தீட்சை கொடுப்பதையும் செய்து வருகிறேன்.
எந்த அளவுக்கு ஆழமான நம்பிக்கையும், புரிதலும் பெறுகிறார்களோ அதற்கு தகுந்தார் போல், இறைவழி அறிவர்களின்
இறைஞானங்கள் அவர்கள் உள்ளத்தில் மேம்படுவதை பார்த்து மகிழ்கிறேன்.
இறைவழி அறிவர்கள் தீக்சை வழிபெற்ற இறையாற்றலை,
அவர்கள் வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த கற்கிறார்கள்.
இதற்காக, 12 ஆண்டுகள் வரை நான் இறைவழி அறிவர்களுடனான பகிர்தல் மூலம் அவர்களுக்கு உதவ வாக்களித்துள்ளேன்.
இந்த பதிவை இங்கு எழுதும் நோக்கம்; உண்மையான ஆண்மீகத் தேடல், மரபுவழி நலவாழ்வுக்கான தேடல், தனிமனித விடுதலைக்கான தேடல் உள்ளவர்களுக்கு, தகுதி உள்ளவர்க்கு நான் உதவ முடியும் - காத்திருக்கிறேன் என தெரிவிக்கத் தான்.
மேலும் விபரம் அறியப் பேசுக...
அன்பில்,
தமிழவேள் நளபதி
கைபேசி; 93458 12080, 94447 76208.
மரபுவழி நலவாழ்வு மையம்
ஆவடி,
சென்னை 600 054.

26/10/2024

தமிழவேள் வணக்கம் நண்பர்களே,ஐந்து மூலகங்களை கட்டுப்படுத்ததும் ஆற்றல் மனிதனுக்கு உள்ளது. ஐந்து மூலகங்களின் செயல்பாட்டை கட்டுப்பட்டுத்துவதும், பயன்படுத்திக்கொள்வதும் தன்னை உணர்ந்த மனிதர்கள் அனைவராலும் செய்யக்கூடியதே.... இந்த புரிதலை பலரும் பல வகைகளில் பயன்படுத்துகிறார்கள். உண்மையை அறிய தேடுபவர்கள் இருந்தால் வருக... விநாடிகளுக்குள் உங்களுக்கு நலம் தரும் வகையில் உணர்த்த முடியும். பேசிவிட்டு வருக 9444776208

தமிழக மலர்கள் - இறைவழி மருத்துவம்
01/06/2024

தமிழக மலர்கள் - இறைவழி மருத்துவம்

தமிழவேள் வணக்கங்கள், நம் நாட்டு மலர்கள் மற்றும் பாரம்பரிய சித்த மருந்துகள் மற்றும் மூலிகை மலர்களில் செய்த மலர....

06/03/2024

தமிழவேள் மகிழ்ச்சி...

அன்பர்களே, "இறையுடன் ஓர்நிமிடம் ஒன்றுகூடல்" வாயிலாக நான் அன்பையும், புரிதலையும், இறைஞானத்தையும், இறையாற்றலையும் இறைவழி அறிவர்களுடன் இணைந்து பகிர்கிறேன்.

நீங்கள் இந்த நிகழ்வுகளில் பெறும் பயனையும், கருத்துகளையும், உணர்தல் அனுபவத்தையும் சொல்லுங்க...
உங்கள் புரிதல் இந்த பகிர்தலை மேலும் நன்மை உள்ளதாகச் செய்யும்.

நன்று... மகிழ்ச்சி...
தமிழவேள்

01/09/2023

இளையவர்கள் தவறுகள் செய்யட்டும்.

மனிதன் ஓர் கூட்டுவாழ்க்கை உயிரி. கூட்டுக்குடும்பமாக நமது மரபில் வாழ்ந்தனர்.
கூட்டுக் குடும்பங்களில் தனிமனிதனின் சுதந்திரம், ஓய்வு, தனித்தன்மை, மற்றும் அனைத்து தேவைகளும் பூர்த்தியானது. மகிழ்வுடன் பிற உயிர்களுடனும், இயற்கையுடனும் இயைந்து இனிதே வாழ்ந்து வந்தான்.

இன்றைய குடும்பத்தில் அனைத்து மகிழ்ச்சியையும் இழந்து, பேருக்கு சிறப்பாக, எந்த சுதந்திரமும், ஓய்வும், பாதுகாப்பும், நிம்மதியும், தனித்தன்மையும் மதிக்கப் படாமல் எல்லாவற்றுக்கும் அடிமையாகி, ஆரோக்கியம் இல்லாது, யாருடனும் நட்பின்றி, உறவின்றி தனக்குத் தானே சுமையாக விலங்குகளை விட மோசமாக பிழைத்திருக்கிறான்.

சமுதாயத்தை ஆள்வோருக்கு தீணியாக - இரையாக இருக்கிறான்.

இதற்கெல்லாம் மூலகாரணம் கூட்டுக் குடும்பங்களின் சிதைவு தான்.

கொராணா காலம் தனி குடும்பத்தின் கேடுகளின் உச்சம் .
வெளிப்பட்டது.

இன்று ஆண், பெண் தங்கள் வீரியத்தை இழந்து காதல் வாழ்வென்பதே கசப்பாய் போன குடும்பத்தினரையே பார்க்க முடிகிறது. "தனிக் குடும்பத்தின் நன்மையாக' சொல்லப்பட்ட எல்லாம் பதரென இக்கால இளைய தலைமுறை நம்மைவிடத் தெளிவாக உணர்ந்துள்ளது. அது எல்லாவகையிலும் தனக்கான மகிழ்ச்சியான, சுதந்திரமான, ஆரோக்கியமான கூட்டு வாழ்விற்கான விடுதலை பெற்ற நலவாழ்வை அடைந்தே தீரும்

ஏனென்றால், இன்றைய இளைஞர்களுக்கு முந்தைய மனிதர்க்கு இருந்ததை விட தெளிவான சான்றுகள் உள்ளன.

நாம் கொஞ்சம் பொறுமையா இருந்து கவணிப்போம்.
சென்ற சில தலைமுறைகள் அறியாமையால் செய்த கேடுகள் இளையவர்களால் விரைவில் சரிசெய்யப்படும்.

உற்பத்தி ஆகும் இடத்தில் கட்டிய அணைகளை தகர்த்து நீக்கி, ஓடும் வெள்ளம் விரைவில் தமக்கான பாதையை உறுதி செய்து, பூமியை - மனிதத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும்

05/05/2023

மரபுவழி மருத்துவங்களை அழிக்க நினைப்போர் உலக உயிர்சூழலுக்கே துரோகம் செய்தவராவார். இந்த துரோகத்தில் நம் அனைவர்க்கும் பங்கு...

மரபுவழி மருத்துவர்களை க்வாக்ஸ் என அழைக்கும் அலோபதியை விட்டுத்தள்ளுங்க...

சாண்றிதழ் வாங்கியவுடன் தமக்கு எல்லாம் அறிந்ததாக கருதி, படித்த மாற்றுமருத்துவர் தங்கள் மூலத்தை (வேரை) அறுக்க நினைக்கிறது ஏன்? உனக்கு வேரான சித்தர் மரபை க்வாக்ஸ் என்றால் நீங்க யார்?

நடப்பில், சிந்தித்து பார்த்தால் அவர்கள் படித்தது அதிக நேரம் அலோபதி (அனாடமி), வாழவிரும்புவது அலோபதி மருத்துவர் பாணியில், பயன்படுத்துவது அலோபதி சோதனை முறைகளை மற்றும் மருந்துகளை மேலும் மக்களிடமும் மரியாதை இல்லை.

மரபுவழி மருத்துவ குடும்பத்தில் வந்த மிக சிலரைத் தவிர பெரும்பாலோர்க்கு அடிப்படை எதுவுமே இல்லை. போட்ட பணத்தை எடுக்க முடியலை. பலர் அலோபதி மருத்துவமணைகளில் பகுதி நேரவேலை.

புரிகிறது உங்க கையறு நிலை.
ஆனால் உங்க மூலத்தை அடையாளத்தை இழந்துவிட்டால் உங்களுக்கு மட்டுமல்ல உலகத்தின் உயிர் சூழலுக்கே பெரும் துரோகம் இழைத்தவர் ஆகிவிடுவோம்.

29/11/2022
21/09/2022

எனது உதவி தேவைப்படுபவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தயங்காமல் பேசுக... நீங்கள் உதவ நிணைப்பவர்க்கு பகிர்க... தம...

30/06/2022

உங்கள் வாழ்வின் ஒளி பெருக.., மகிழ்ச்சியாக வாழ வழிகள் - இறைவன் தந்த மலர்கள் காட்டுகின்றன.தன்னை உணர்ந்தவரே பிறருக்...

23/05/2022

எனது இனிய நண்பரும் இறைவழியில் சிறந்த வழித்துணையாகவும் இருக்கும் இறைவழி அறிவர் பஸ்ஸலூர் ரஹ்மான் தனது ஐந்து மூலக உடலை நீத்து விட்டார்.

அவருடன் மேலான இறை வழி வாழ்வியலை பயின்றவர் அனைவருக்கும் அவரது இறைவழியிலான வழித்துணை, இறைவழி அறிவர் பஸ்ஸலூர் ரஹ்மான் அவர்களின் தற்போதய மறைவான வாழ்விலிருந்தும், நன்மையை நாடுவோர்க்கு தொடர்ந்து கிடைக்கும்.

இறைவழியில் தொடர்ந்து மேலான புரிதல்களையும், மேலும் இனிய இறைவழி அறிவர்களின் வழித்துணைகளையும் இறைவன் நமக்கு அருளுவான்.

நமது இறைவழி வாழ்வும் இறைவழி குறித்த சத்சங்கங்களும் தொடர்ந்து மேன்மை பெற இறைவனின் அருளை நாடுவோம்.
தமிழவேள் நளபதி

Address

Chennai
600054

Alerts

Be the first to know and let us send you an email when Tamizh Marabuvazhi Nalavazhvu Miyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tamizh Marabuvazhi Nalavazhvu Miyam:

Share

Category