15/11/2024
மனசோர்வு, மன இறுக்கம், உடல் வலி,வேதனைகள் அனைத்தையும் விநாடிகளில் எந்த நிபந்தணையும் இல்லாது தீர்க்க இங்கு இறையாற்றலால் இயலும்... சுகமடைந்தவர் செய்யவேண்டியது நன்றியுடன் பணிவாக நலம் நாடுவதே...
இறைவழியில் வாழ...
நான் மருத்துவனல்ல; சுகம் அளிப்பவன்...
இறைவன் தான் சுகம் அளிப்பவன். ஆம், நான் இறையருளால் சுகம் தருபவன். எனது எனும் ஆணவத்தில் இருந்து விலகி நான் எனும் இறை ஞானத்திலிருந்து சுகத்தை தருகிறேன்.
மனிதனுக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் இறை எனும் மூலத்திலிருந்து மனிதன் விலகியதால் ஏற்பட்டது.
நோய்கள்; நாம் வேரறுந்து போயிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துவதற்காக வந்ததே.
துன்பங்கள் வழியாக நம்மை தூண்டி, நண்மையின் பாதையில் நம்மை வழி நடத்துவது தான் நோய்களின் பணி.
சான்றோர்கள், சித்தர்கள் நோயிலிருந்து சுகம் பெறும் வழிகளை அறிந்தவர்கள். நோய் வரக் காரணமாக இருந்த அல்லது மூலத்திலிருந்து நாம் விலகக் காரணமாக இருந்த ஆணவத்தையும், அதன் விளைவுகளையும், நமது மயக்கத்தையும் நீக்கி; பணிவுடனும், நன்றி உணர்வுடனும், தெளிவாகவும் நாம் இறைவனிடம் கேட்கும்போது, நன்மையை நாடும் போது மீண்டும் இறையுடன் ஆன நமது தொடர்பு புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நம் சுயத்தை, சுகத்தை உறுதிப் படுத்திக் கொள்கிறோம்.
இதை உணர்ந்து அறிந்த சித்தர்கள் - அறிவர்கள் தன்னையும் தம்மை நாடி வந்த பிறரையும் நோயினால் வந்த உடல், மனத் துன்பங்களிலிருந்து வினாடிகளில் சுகமாக்கி கொள்ள முடியும். ஏனென்றால், இறைவன் கருணை உள்ளவன்.
நான் இந்த புரிதலை பெற்றபின், கடந்த 20 ஆண்டுகளாக இறைவழியில் சுகம் நாடி வருபவர்களுக்கு அவர்கள் உடல், மனம் துன்பங்களிலிருந்து மீள, நான் இறைவழியில் சுகம் கொடுத்து வருகிறேன்.
இறைவனின் அருளால் கிடைத்த ஞானத்தை பயன்படுத்தி, நான் பெற்ற இறைவழியில் சுகமளிக்கும் ஆற்றலைத் தகுதியுள்ள பலருக்கு "தீட்சை" யாக கைமாற்றித் தந்துள்ளேன். பல தகுதியுள்ளவர்களை
இறைவழி அறிவர்களாக உருவாக்கியுள்ளேன்.
இவர்கள், இறையை உணர்த்த பெற்றதால் கிடைத்த புரிதலால் - இறைஞானங்களால் தம்மை அகிலத்தின் ஆண்மீக பயணிகளாக மேம்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
உடல், மன நலம் மட்டுமல்லாமல், எல்லாத் துறைகளிலும் இறைவழி அறிவர்கள் தாம் பெற்ற புரிதலால் சிறப்பான நன்மைகளை பெறுகிறார்கள்.
இறைவழி அறிவர்கள் உதவியால், நன்மைக்கான வழியைத் தேர்ந்தெடுக்க அறியாது "மதில்மேல் பூனையாக" இருக்கும் எத்தனையோ மனிதர்கள் வாழ்வில் நலம் பெற்றிருக்கிறார்கள்.
நான் தனித்தனியாகவோ, கூட்டமாக பலருக்கும் சுகமளிப்பதையும், தீட்சை கொடுப்பதையும் செய்து வருகிறேன்.
எந்த அளவுக்கு ஆழமான நம்பிக்கையும், புரிதலும் பெறுகிறார்களோ அதற்கு தகுந்தார் போல், இறைவழி அறிவர்களின்
இறைஞானங்கள் அவர்கள் உள்ளத்தில் மேம்படுவதை பார்த்து மகிழ்கிறேன்.
இறைவழி அறிவர்கள் தீக்சை வழிபெற்ற இறையாற்றலை,
அவர்கள் வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த கற்கிறார்கள்.
இதற்காக, 12 ஆண்டுகள் வரை நான் இறைவழி அறிவர்களுடனான பகிர்தல் மூலம் அவர்களுக்கு உதவ வாக்களித்துள்ளேன்.
இந்த பதிவை இங்கு எழுதும் நோக்கம்; உண்மையான ஆண்மீகத் தேடல், மரபுவழி நலவாழ்வுக்கான தேடல், தனிமனித விடுதலைக்கான தேடல் உள்ளவர்களுக்கு, தகுதி உள்ளவர்க்கு நான் உதவ முடியும் - காத்திருக்கிறேன் என தெரிவிக்கத் தான்.
மேலும் விபரம் அறியப் பேசுக...
அன்பில்,
தமிழவேள் நளபதி
கைபேசி; 93458 12080, 94447 76208.
மரபுவழி நலவாழ்வு மையம்
ஆவடி,
சென்னை 600 054.