24/01/2026
அன்புக்குரிய பத்திரிகையாளர் மணா அவர்களுடைய 'மாபெரும் பாட்டுப் புத்தகம்'. சென்னை புத்தகக் காட்சிகள் பெற்றுக் கொண்டது. பாபநாசம் சிவன் முதல் திரை இசை பாடல்களில் மனதைத் தொட்ட பல கவிஞர்களின் சுவையான நினைவுகளைத் தொகுத்து எழுதி இருக்கிறார்.
அறுபதுகளின் குழந்தைகளின் ரசனை எப்படி இருந்தது என்பதைச் சொல்லும் அழகான தொகுப்பு.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கே.டி சந்தானம், சுரதா, வாலி உள்ளிட்ட கவிஞர்கள் டி எம் சௌந்தரராஜன், சி எஸ் ஜெயராமன், பி சுசிலா, எஸ் ஜானகி, பிபி சீனிவாசலு உள்ளிட்ட பாடகர்கள்.
எம் எஸ் சுப்புலட்சுமி, சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி, கே ஆர் விஜயா போன்ற நடிகர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் என நினைவில் தங்கிய பலருடனான நேரடி அனுபவங்களையும் சொல்லி இருக்கிறார்.
ஆவணம்.
அந்திமழை பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.
விலை 300.