Ayurveda For PCOD / Infertility

Ayurveda For PCOD / Infertility This page educate people about Ayurveda and Alternative medicines related information related to PCO

30/12/2024

விருச்சிகம் ராசிக்காரர்கள் தனது மனத் தைரியத்திற்கும் உற்சாகத்திற்கும் பெயர் பெற்றவர்கள். 2025ம் ஆண்டில், ஆரோக்கியத்தில் சில சிறிய சவால்களை சந்தித்தாலும், இதனை சரியாக சீர்செய்து வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டால், ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும். சிறுநீரகங்கள், ஜீரண கோளாறுகள், மன அழுத்தம் மற்றும் தசை பிரச்சனைகள் போன்றவை 2025ல் கவனிக்க வேண்டிய முக்கிய பகுதிகள்.

1. சிறுநீரக ஆரோக்கியம் 2025ல், சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தண்ணீர் சீராகக் குடிக்காமல் இருந்தால், சிறுநீரக சத்தங்கள் மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகள் வரக்கூடும்.

2. ஜீரண பிரச்சனைகள் விருச்சிகம் ராசிக்காரர்கள் 2025ல் ஜீரண கோளாறுகளை சந்திக்கலாம்.

3. மன அழுத்தம் மற்றும் மனநலம் விருச்சிகம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் உற்சாகமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் 2025ல், வேலை அல்லது குடும்பப் பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

4. தசை மற்றும் மூட்டு பிரச்சனைகள் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மூட்டுக்கள் மற்றும் தசைகளில் வலி அல்லது சோர்வு ஏற்படக்கூடும். மனநலம் மற்றும் மன அமைதி மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி மாறுபாடு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு 2025ல் கவனிக்க வேண்டிய பிரச்சனைகளாக இருக்கும்.

5. தூக்கமின்மை விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய சவாலாக அமைய வாய்ப்பு உள்ளது.

#சிறுநீரக_பரிசோதனைகள் #சர்க்கரை_அளவு #மூட்டுகளின்_ஆரோக்கியம்

2025ம் ஆண்டில் விருச்சிகம் ராசிக்காரர்கள் பின்பற்ற வேண்டியவை

1. சீரான உணவுப் பழக்கங்களை பின்பற்றவும்.

2. தியானம் மற்றும் யோகா மன அமைதிக்குப் பெரிதும் உதவும்.

3. மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளவும்.

4. நீரின் அளவை அதிகரித்து சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்.

2025ம் ஆண்டில் விருச்சிகம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் காண்பர். சில சவால்களையும் சரியான திட்டமிடல் மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களால் சமாளிக்கலாம். "ஆரோக்கியம் உங்கள் வாழ்க்கையின் முதன்மை அடிப்படை!"

#விருச்சிகம்ராசி #2025ஆரோக்கியம் #மருத்துவஜோதிடம் #மனஅமைதி #உடல்நலம்

30/12/2024

*மாதவிடாய் நாள்களில் ஏற்படும் வலி, அதிக ரத்தப்போக்கைத் தடுக்கும் 8 வழிமுறைகள்*

*உடலில் சூடு அதிகரிப்பதால் தான் மாதவிடாய் நாள்களில் வலி அதிகம் ஏற்படுகிறது. நாற்காலியில் வெகுநேரம் உட்காருவது,காற்றோட்ட ட மில்லாத ஆடைகளை அணிவது போன்றவற்றால் உடல் சூடு அதிகரித்து, கர்ப்பப்பையைப் பாதிக்கும். இதனால் மாதவிடாய் நாள்களில் அடிவயிற்றில் வலி ஏற்படும். வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம். உடல் சூட்டைக் குறைக்கலாம்.*

1. *நீர்ச்சத்துள்ள உணவுகள்*
நீர்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாகவோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உடல் சூட்டைத் தடுக்கும்.
மாதுளம் பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்
கொள்ளலாம். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும்.

2. *துவர்ப்பு உணவுகள்*
மாங்கொட்டை (அவித்ததோ அல்லது பச்சையாகவோ), மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை வயிறு உப்புசம் மற்றும் உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி வலியிலிருந்து ஆறுதல் அளிக்கும்.

3. *பிஞ்சு காய்கறிகள்*
மாதவிடாய் நாள்களில் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு அடிவயிற்றில் வலி ஏற்படும். மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்துள்ள பீன்ஸ் போன்ற காய்களை உண்ண வேண்டும்.
முற்றல் காய்கறிகளைத் தவிர்த்து பிஞ்சு காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நார்ச்சத்துள்ள பயிர் வகைகள் மற்றும் பழ வகைகளையும் உண்ணலாம். இதனால் வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் கர்ப்பப்பை சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.

4. *செக்கு நல்லெண்ணெய்*
செக்கு நல்லெண்ணெய்யை மாதவிடாய் நாள்களில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி குடித்து வந்தால் உடலில் வலிமை ஏற்படும். அதில் இருக்கும் வைட்டமின் 'சி' எலும்பு
களுக்கு வலிமைச் சேர்க்கும்.

5. *கறிவேப்பிலை*
கறிவேப்பிலையைத் தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

6. *மோர்*
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து வயிற்று வலியைப் போக்கும்.

7. *புட்டரிசி*
அதிக ரத்தப்போக்கு மற்றும் வலியைத் தடுக்க, புட்டரிசி என்று கூறப்படும் சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

8. *உளுந்தங்கஞ்சி*
உளுந்தங்கஞ்சியுடன் பனை வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் இடுப்பு எலும்பு வலுவாகும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி நீக்கும்
==================
*நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

17/02/2024
05/02/2024

சர்க்கரை நோயை குறைக்க உதவும் சுலபமான பத்து வழிமுறைகள்

வெல்னஸ் குருஜி
SHREEVARMA Ayurveda
9952666359 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online

29/10/2023

பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

இன்றைய காலகட்டத்தில் உணவுகளில் மருத்துவ குணம் நிறைத்த உணவுகள் ஏராளம் உண்டு. அதன் பயன்பாட்டினை முழுமையாகத் தெரிந்து வாழ்ந்தாலே ஆரோக்கியத்தை நம் வசம் வைத்து வாழ்ந்திட முடியும். எல்லா காலங்களிலும் கிடைத்திடும் பப்பாளி ( Papaya ) என்பது வெளிநாடுகளில் உயர்வாக உண்ணக்கூடிய மருத்துவம் நிறைத்த பப்பாளி, இதற்கு பத்து விதமான பயன்கள் உண்டு.

1) அதிக உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எடையினை குறைப்பதற்குப் பப்பாளி உதவுகிறது.
2) சரும பிரச்சினைகள், முறையாகப் பப்பாளியை நாள்தோறும் எடுத்துக் கொண்டாலே தோலின் இளமை தோற்றம் மாறாமல் இருக்க உதவுகின்றது.
3) "கேன்சர்" புற்றுநோய் Free Radicals மூலக்கூறுகள் அதிகமாவதால் புற்று நோய் ஏற்படுகின்றது. தினமும் 100 கிராம் பப்பாளியைச் சாப்பிட்டு வருவதால் புற்றுநோயை உருவாக்கும் மூலக்கூறுகளைக் குறைத்து நோய் வருவதைத் தடுக்கின்றது என்பது ஆய்வின் மூலம்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
4) தலைமுடி வளர்வதற்கான எட்டு வகையான மூலக்கூறுகளை உள்ளடக்கி இருப்பதால் முடிகள் எளிதில் வளர்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
5) பெண்களுக்கு உற்பத்தியாகும் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கத் தினமும் பப்பாளி முறையாகச் சாப்பிட்டு வருவதால் அதன் பலனை அடையமுடியும்.
6) சிறுநீரக கற்கள் உற்பத்தியாவதைத் தடுக்கவும், சிறுநீரகம் செயலிழப்பு இருப்பவர்கள் பப்பாளியை உணவாக சாப்பிட்டு அதன் பயனை அடைந்து கொள்வதற்கும் பயன் படுகிறது.
7) மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பப்பாளியை உண்பதால் , இதிலிருந்து விடுபட்டு உடல் ஆரோக்கியம் அடைவதைக் காணலாம்.
8) உடல் சோர்வாகச் சுறுசுறுப்பு இன்றி இருப்பவர்கள் வாரம் மூன்று தினம் பப்பாளியைச் சாப்பிட்டு வர நிவாரணம் அடைவதைக் காணலாம்.
9) இன்று மனஅழுத்தம் தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது, பப்பாளி சாப்பிடுவதால் மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் சிரமங்களை போக்குகின்றது.
10) ஆயுளை அதிகப்படுத்திடப் பப்பாளி ஓர் சிறந்த மருந்து, life style disorder அதாவது, இதயம்,மூளை,சிறுநீரகம், நுரையீரல், மேலும் நீரிழிவு சம்மந்தப்பட்ட நோய்கள் வருவதிலிருந்து பாதுகாக்கிறது.

உணவு உண்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பப்பாளியைச் சாப்பிடலாம். பப்பாளியின் முழு பயனையும் அடைந்து மேலே கூறிய முறைகளை முழுமையாகப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழ முடியும்

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 46094900, 9500946633 / 9952666359

For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online / www.drgowthaman.com

Address

15, F1, Zen Mathuram Apartments, Srinivasan Nagar First Street
Chennai
600107

Opening Hours

Monday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm
Sunday 10am - 7pm

Telephone

9940079511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayurveda For PCOD / Infertility posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ayurveda For PCOD / Infertility:

Share