13/08/2021
நல்லதே நடக்கும்!
சித்தர் பட்டினத்தார் சொன்னது*
*உணவை தான் உண்டேன்* *எப்படி மலம் ஆனது?*
*உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?*
*மலம்தான் உணவாக இருந்ததா?*
*மரணம் தான் வாழ்வாய் இருந்ததா?*
*இந்த சுருங்கி போன* *உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?*
*இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது?*
*பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார்* *பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?*
*இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலைய வில்லையே*
*என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு* *வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.*
*இதுவரை எனது கோடாரியால்* *நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !*
*நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது*
*இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி இருக்கவேண்டும்*
*பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்.*
*இறந்தாலும் எனக்காக யார் அழப் போகிறார்கள்?*
*பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?*
*சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?*
*கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,*
*காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்,*
*பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் !*
*பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு , மண் என்னைப் பார்த்து , "மகனே ! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது.*
*அருந்தின மலமாம்*
*பொருந்தின அழுக்காம் வெறுப்பன* *உவப்பாம்*
*உவப்பன* *வெறுப்பாம்*
*உலக பொய்* *வாழ்க்கை* *நீ_நீயாக_இரு...*
*உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப் பட்டிருக்கிறது.*
*அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்*
*உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.*
*எந்தப்பறவை களும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.*
*எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.*
*எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை*.
*மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன*.
*மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.*
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*
*முதுமை என்று எதுவும் இல்லை.*
*நோய் என்று எதுவும் இல்லை.*
*இயலாமை என்று எதுவுமில்லை.*
*எல்லாம் உங்கள் மனதிலும், அதூன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.*
*சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.*
*நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.*
*நான்... நான்..* *நான்...*
*நான்* *சம்பாதித்தேன்,*
*நான் காப்பாற்றினேன்,*
*நான் தான் வீடு கட்டினேன்,*
*நான் தான் உதவிசெய்தேன்,*
*நான் பெரியவன்,*
*நான் தான் வேலைவாங்கி கொடுத்தேன்,*
*நான் நான்* *நான் நான் என்று மார்தட்டி* *கொள்ளும் மனிதர்களே!!!*
*நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?*
*நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல* *முடியுமா?*
*நான் தான் என் இரண்டு* *கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால்* *சொல்ல முடியுமா?*
*நான் தான் என்* *வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன்* *என்று உங்களால் சொல்ல முடியுமா??*
*நான் தான்* *பூக்களை மலர* *வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?*
*இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ* *இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே* *"நான்" என்று* *சொல்வதற்கு* *அதிகாரமும் உரிமையும்* *உண்டு..*
*ஆகையால்* *நான் என்ற* *அகந்தையை விட்டு* *அனைவரிடமும்* *அன்பாக இருங்கள்.*
*உனக்கு மேலே* *உள்ளவனைப் பார்த்து ஏங்காதே* *தாழ்வு மனப்பான்மை வரும்..!*
*உனக்கு கீழே* *உள்ளவனை* *ஏளனமாய்* *பார்க்காதே தலைக்கனம் வரும்...!*
*உன்னை யாரோடும் ஒப்பிடாமல்*
*நீ நீயாக இரு*
*தன்னம்பிகை வரும்.*
வாழ்வு சிறக்கும்!
மகிழ்வித்து மகிழ்வோம்!!