Medsugar Diabetic Specialities Care Centre

Medsugar Diabetic Specialities Care Centre India's the most affordable Diabetes Clinic

https://youtu.be/74_LaOrcO0UReversing Diabetes and Managing Weight Loss
19/08/2020

https://youtu.be/74_LaOrcO0U

Reversing Diabetes and Managing Weight Loss

Managing Diabetes and Weight - Healthy Plate, Yoga and Medical Care

Addressing Insulin Resistance ....
28/06/2020

Addressing Insulin Resistance ....

28/06/2020

Diabetes Reversal - Launching 2nd Batch on 6th July 2020. Interested Whatsapp 7448311113

28/06/2020

Medsugar Introduces Diabetes Reversal Program. We are launching 2nd Batch on 6th July 2020. Interested pls Whatsapp 7448311113

Medsugar & S.M.I.L.E Microfinance - Joint initiative to screen World's most Challenging Health Problem -  Diabetes and H...
28/12/2019

Medsugar & S.M.I.L.E Microfinance - Joint initiative to screen World's most Challenging Health Problem - Diabetes and Hypertension.

RUHE - Rural and Urban Health Entrepreneurs second batch launch @ Madurai District.  Let us build diabetes free country ...
21/12/2019

RUHE - Rural and Urban Health Entrepreneurs second batch launch @ Madurai District. Let us build diabetes free country in the years to come.

# Medsugar # Diabetes

Managing Diabetes Easy When You have Medsugar as your Health Partner.
18/12/2019

Managing Diabetes Easy When You have Medsugar as your Health Partner.

சர்க்கரையும் நானும் நீங்களும் -4அன்பு நெஞ்சங்களே, நேற்று சர்க்கரை நோய் பாதிக்கும் அபாயத்தை எப்படி கணிப்பது என்று ஒரு சிற...
15/12/2019

சர்க்கரையும் நானும் நீங்களும் -4

அன்பு நெஞ்சங்களே, நேற்று சர்க்கரை நோய் பாதிக்கும் அபாயத்தை எப்படி கணிப்பது என்று ஒரு சிறிய முறையின் மூலம் பாத்தோம். இந்த முறையில் தங்களின் மதிப்பெண் 4 அல்லது 5 ஆக இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் தங்களின் இரத்தத்தை ஒரு பரிசோதனை கூடத்தில் கொடுத்து நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்க பட்டு இருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளவேண்டியது மிக அவசியம்.

பிற நோய்களை போல் சர்க்கரை நோயோ அல்லது இரத்த கொதிப்போ உடனடியாக எவ்வித பெரிய சிக்கலையோ அல்லது அறிகுறிகளையோ வெளிப்படுத்துவதில்லை என்பதால் நம்மில் பெரும்பாலானோர் சர்க்கரைநோய்க்கு பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதன் விளைவு நாளுக்கு நாள் ஒவ்வொரு முக்கிய உறுப்பும் பாதிப்புக்கு உள்ளாகி அதன் செயல்பாடுகள் குறைந்து இறுதியில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

ஒருவர் கேட்கிறார், இன்று எனக்கு சர்க்கரைநோய் இல்லை, எனக்கு வயது 40, இனிவரும் காலங்களில் சர்க்கரை வருமா வராத ?
இது ஒரு மிகசிறந்த கேள்வி, நாம் சென்ற பதிவில் விவாதித்தது போல், வரும் காலங்களில் சர்க்கரை நோயால் அவர் பாதிக்கபடுவார இல்லையா என்பது அவரின் வாழ்க்கை முறை, அவரின் உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் மற்றும் அவருக்கு இருக்கும் அல்லது பிற நோய்களின் தாக்கத்தை பொறுத்தது. சர்க்கரை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரே ஒரு வழி , அவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்து சர்க்கரை நோய் இல்லை என்று உறுதி செய்து கொள்வதே ஒரே வழி. எனவே 40 வயதை கடந்த ஒவ்வொருவரும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சரி எனக்கு சர்க்கரை அளவு பரிந்துரைக்கபட்ட அதிக பட்ச அளவில் அதாவது சாப்பிடும் முன் 100 mg /dl மற்றும் சாப்பிட்டு இரண்டு மணிநேரம் சென்ற பிறகு இரத்த சர்க்கரை அளவு 140 mg /dl உள்ளது. நான் சர்க்கரை நோயால் பாதிக்கப்படவில்லை என்று தானே பொருள்?
இது ஒரு அருமையான கேள்வி. ஏனினில் என்னை பொறுத்தவரை சர்க்கரை நோய்க்கும், இரத்த சர்க்கரை அதிகபட்ச நார்மலில் இருப்பதிற்கும் ஒரு பெரும் வித்தியாசம் எல்லாம் இல்லை. அதிகபட்ச நார்மல் இரத்த சர்க்கரை அளவே சர்க்கரை நோயின் தாக்கமாகவே கருதவேண்டும். மருத்துவர்கள் வெயிட் அண்ட் வாட்ச் முறையை கடை பிடிப்பார்கள். ஆனால் அதிகபட்ச நார்மலில் இருக்கும் போதே சிறு அளவில் மருந்து உட்க்கொன்டு சர்க்கரை நோயின் ஆரம்பகால தாக்கத்தை போக்கினால் சர்க்கரையை விரட்டி அடிக்க முடியும். ஆனால் நாம் அதில் கவனம் செலுத்துவதே இல்லை.
மாறாக நாம் எப்பொழுதெல்லாம் நம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் கூறும் பரிசோதனை செய்து அந்த பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றோமே அப்போதெல்லாம் அப்படி ஒரு நரக வேதனையாய் இருக்கும், மனதோ மிக பெரிய நோய்களை எண்ணி அதுவாக இருக்குமோ என்று கற்பனை குதிரையில் வேகமாக பயணிக்கும். அந்த சூழ்நிலையில் நான் இனி கட்டுப்பாடோடு இருப்பேன், மது அருந்த மாட்டேன், நடை பயிற்சி மேற்கொள்வேன் என்று பல்வேறு உறுதி மொழிகளை எடுக்கும்.
ஆனால் இவை அனைத்தும் பரிசோதனை முடிவு நார்மலாய் வரும் வரை மட்டுமே. பரிசோதனை முடிவு நார்மலாகவந்தவுடன் மனதில் எண்ணிய அத்தனை கட்டுப்பாடுகளும் அந்த நொடியே காணாமல் போகும். உதாரணமாக அவர் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவரெனில் பரிசோதனை முடிவு வந்த அடுத்த நொடியே அவர் சோதனை முடிவுக்காக காத்திருந்த நேரத்தில் அவருக்குள் இருந்த பிரஷர் குறைக்க உடனே புகைபிடிப்பார்கள்.
அதுபோல்தான் நமது இரத்த சர்க்கரை அளவு நார்மல் என்று வந்துவிட்டால் அவ்வளவுதான் மீண்டும் நாம் அதே பழைய வாழ்க்கை முறையில் விழுந்து சர்க்கரைநோய் வரும் அபாயங்களை கவனிக்கதவறி அதன் பாதிப்பிற்கு ஆளாகிறோம். எனவே இரத்த சர்க்கரை அளவு அதிக பட்ச நார்மல் அளவுகளில் இருந்தால் நார்மல்தானே என்று அர்த்தம் இல்லை.
அதிக பட்ச நார்மல் என்றாலே (காலை உணவிற்கு முன் இரத்த சர்க்கரை அளவு – 100 mg/dl and காலை உணவு உண்ட இரண்டு மணிநேரத்திற்கு பின் இரத்த சர்க்கரை அளவு 140 mg/dl) சர்க்கரை நோய் உங்கள் வீட்டு வாசல் கதவிற்கு அருகில் உள்ளது என்று அர்த்தம். சர்க்கரைநோய் வந்தால் எப்படி உணவு மற்றும் உடல் பயிற்சிகளை செய்வோமோ அப்படி செய்வதன் மூலம் அந்த நோயின் தாக்கத்தை சில ஆண்டுகளுக்கு தள்ளி போடலாம்.

இரத்த சர்க்கரை அதிக பட்ச நார்மலில் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:

1. உடனடி உணவு கட்டுப்பாடு
2. சீராக உடல் எடையை குறைதல் ( மாதம் ஒரு கிலோ வீதம் )
3. சீரான உடற்பயிற்சி - குறைந்தது ஒரு மணி நேரம் நடை பயிற்சி)
4. மாவுசத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை தவிர்த்தல்

ஆனால் பாருங்கள், நாம் சர்க்கரை நோயின் விளிம்பில் இருக்கிறோம் என்று தெரிந்த பின்பு நாம் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க ஆரம்பித்தாலும் , நம்மில் பெரும்பாலோனோர் சர்க்கரைநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடிவதில்லை. அது ஏன் என்று வரும் பதிவில் பார்க்கலாம்.

தொடரும் .....

சர்க்கரையும் நானும் நீங்களும் -3அன்புள்ளம் கொண்ட நண்பர்களே கடந்த இரண்டு பதிவில் சர்க்கரை நோயை பற்றிய புள்ளி விவரங்களும் ...
14/12/2019

சர்க்கரையும் நானும் நீங்களும் -3

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே கடந்த இரண்டு பதிவில் சர்க்கரை நோயை பற்றிய புள்ளி விவரங்களும் அதன் தாக்கத்தையும் பற்றி முதல் பதிவிலும், யாரெல்லாம் சர்க்கரை நோயாளிகள், யாரெல்லாம் சர்க்கரை நோய் நெருங்கும் அபாயத்தில் இருப்பவர்கள் என்றும் மதில் மேல் இருக்கும் பூனைபோல் இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ சர்க்கரை நோய் தாக்கும் அபாயத்தில் இருப்பவர்கள் யார் யார் என்று விரிவாவாக பார்த்தோம்.

அன்பு நெஞ்சங்களே, இந்த ஆண்டின் விளிம்பில் நின்று புதியதொரு ஆண்டை வரவேற்க நாம் பேராவலுடனும் மகிழ்ச்சியுடனும் காத்துகொண்டு இருக்கிறோம். நம்மில் பலர் ஏன் அனேகமாக அனைவரும் வரும் புத்தாண்டில் எவ்வாறு நமது வெற்றிகள் அமையவேண்டும் என்று இப்போதே திட்டமிட்டு கொண்டு இருப்போம். இன்னும் சிலர் வரும் ஆண்டில் எண்ணிய இலக்கை அடைய ஒரு சில உறுதி மொழிகளையும் எடுக்க தயாராகி கொண்டு இருப்போம். ஆனால் நம்மில் பெருபாலோனோர் நமது உடல் நலத்தையும் அது சார்ந்த ஆரோக்கியத்தையும் பற்றி எந்த உறுதி மொழியையும் எடுப்பதாக தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரையில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் எடுக்கும் உறுதி மொழி இனி புகை பிடிக்கமாட்டேன் அல்லது மது அருந்த மாட்டேன் என்பதுதான். இவை இரண்டும் மிக நல்லவைதான் என்றாலும் மாறிவரும் பரபரப்பான சூழ்நிலையில் இன்னும் சற்று ஆரோக்கியம் சம்பந்த பட்ட உறுதிமொழிகளையும் சிந்தனைகளையும் அதிகப்படுத்துவே ஆரோக்கிய வாழ்விற்கும், வரும்முன்னே காப்பது சாலச்சிறந்தது என்ற பொன்மொழிக்கும் வித்திடும். எனவே இந்த பதிவை படிப்பவர்கள் இந்த ஆண்டு முதல் நாம் நினைத்தால் வராமல் தடுக்க கூடிய நோய்களை (உதாரணமாக சர்க்கரை, இரத்த கொதிப்பு, கொழுப்பு மற்றும் புற்றுநோய் போன்றவை) பற்றிய புரிதலை ஏற்படுத்தி கொண்டு புதிய ஆண்டை வரவேற்க தயாராவோம். இந்த புரிதல் நிச்சயமாக நோயற்ற மகிச்சியானதொரு வாழ்கையை நாம் அமைத்து நமது குடும்பமும் இந்த நாடும் மிக சிறந்ததொரு மனித வளத்தை பெற்று இந்தியாவை முன்னேற்ற பாதையில் இட்டு செல்ல வழிவகுக்கும்.

சரி விசயத்திற்கு வருவோம், கடந்த தொடரில் கூறியது போல் யார்யாரெல்லாம் சர்க்கரைநோய் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய ஆபத்தான சூழலில் உள்ளனர் என்று ஒரு சிறிய முறையின் மூலம் மதிப்பீடு செய்வோம். கீழ்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும். அதில் நீங்கள் ஐந்து அல்லது ஐந்துக்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றால் நீங்கள் சர்க்கரை தாக்கும் அபாயத்தில் உள்ளீர்கள் என்று பொருள். அந்த மதிப்பீட்டு முறையை முயற்சி செய்து பார்ப்போமா?

காரணிகள் மதிப்பெண்கள்

1. தங்களது வயது

< 40 வருடங்கள் 0
41- 49 வருடங்கள் 1
50-59 வருடங்கள் 2
>60 வருடங்கள் 3

2. பாலினம்
ஆண் 1
பெண் 0

3. சர்க்கரை நோய் தங்கள் குடும்பத்திலுள்ள யாரையாவது பாதித்துள்ளதா?

ஆம் 1
இல்லை 0

4 இரத்த அழுத்தம் தங்கள் குடும்பத்திலுள்ள யாரையாவது பாதித்துள்ளதா?

ஆம் 1
இல்லை 0

5. தங்களின் உடல் நிறை
குறியீட்டு மதிப்பு (BMI)

அதீத உடல் எடை (25-29.9) 1
மிக பருமனான உடல் >30 2
மிக பருமனான உடல் >40 3

6. உடற்பயிற்சி செய்யும்
முறை - வாரத்திற்கு 150
நிமிடங்கள் மிதமான
உடற்பயிற்சி

ஆம் -1
இல்லை 0

1. மேலே கண்ட கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில் குறைந்தது நான்கு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் நீங்கள் சர்க்கரை நோய் தாக்கத்திற்கு ஆளாக மிக அதிக வாய்ப்புகள் உள்ளது அல்லது நீங்கள் சர்க்கரை நோய்க்கான ஆரம்பக்கட்டத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது.

2. உங்களது பதிலால் நீங்கள் பெரும் மதிப்பெண் 5 க்கு மேல் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் தாக்க மிக மிக அதிக வாய்ப்பு உள்ளது அல்லது ஏற்கனவே நீங்கள் சர்க்கரையால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

அடுத்த பதிவில், சரி நாம் என்ன செய்ய வேண்டும்?,என் இரத்த சர்க்கரை அளவு இந்திய மருத்துவ அமைப்பு சர்க்கரை நோய்க்கான பரிந்துரை செய்த வரம்பிற்குள் இருக்கிறது, எனவே எனக்கு சர்க்கரை வராது என்றுதானே அர்த்தம் ? யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல் சர்க்கரை வருவதற்கு முன் ஏதாவது அறிகுறிகள் தெரியுமா ? நீரிழிவு நோயின் விளிம்பில் உள்ளவர்கள் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து மீள முடியுமா போன்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் விரிவான மற்றும் தெளிவான ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ள முயற்சிப்போம்.

தொடரும்…………………

சர்க்கரையும் நானும் நீங்களும் - 2அன்பு நெஞ்சங்களே நேற்று ஆரவாரம் இல்லாமல்  அமைதியான முறையில் இந்த மனித இனத்தை பாதித்து வ...
10/12/2019

சர்க்கரையும் நானும் நீங்களும் - 2

அன்பு நெஞ்சங்களே நேற்று ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் இந்த மனித இனத்தை பாதித்து வரும் நீரிழிவு என்றழைக்கப்படும் சர்க்கரை நோய் இந்திய மற்றும் உலகளவில் எவ்வாறு பாதித்து வருகிறது என்ற புள்ளிவிவரங்களை பார்த்தோம். இன்று சர்க்கரை நோய் என்றால் என்ன என்பதை பாப்போம்.

நான் புதிதாக ஒன்றும் சொல்ல போவது இல்லை ஏனெனில் நீங்கள் அனைவரும் வலைத்தளத்தில் தேடி நன்கு அறிந்து வைத்திடுப்பீர்கள். இருந்தபோதிலும் மீண்டும் ஒருமுறை நாம் படித்ததை தொடர்பு படுத்தி நமது புரிதலை விசாலமாக்கி கொள்வதில் எந்த தவறும் இல்லைதானே நண்பர்களே.
நாம் சிலசமயங்களில் கேள்விப்பட்டிருப்போம் அதாவது ஒருசிலர் சொல்ல கேட்டிருப்போம் இந்த உடல் பல்வேறு உயிர் -வேதி வினைகளுக்கு உட்பட்டது எனவே எல்லோர்க்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூற நீங்கள் கேள்வி பட்டு இருக்கலாம். ஒரு சிலருக்கு சில பரிசோதனை முடிவுகள் (உதாரணம் இரத்த அழுத்தம்) அப்நார்மலே நார்மலாக இருக்கும்( for some people abnormal is normal but those are exceptional cases), அவர்கள் விதிவிலக்கு அவர்களை நாம் கணக்கில் எடுத்து கொள்ள கூடாது. எனவே இந்த உடலில் ஒருசில உயிர் வேதி பொருற்களின் அளவு அதிகமாக இருந்தால் தப்பு ஒன்றும் இல்லை என்பது சரியான சிந்தனை இல்லை. அது என்னை பொறுத்தவரை ஒரு முட்டாள் தனமான சிந்தனையே ஆகும். எனவே சர்க்கரை நோயையும் அவ்வாறு கருதி அதை குறைக்க முறையான சிகிச்சை எடுக்க விட்டால் காலன் வந்து நமது கதையை முடிப்பான் என்பதை என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும்.

சரி, இரத்தத்தில் எந்த அளவு சர்க்கரை இருந்தால் நாம் அதை சர்க்கரை நோய் என்று கூறலாம் ?

1. இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட வழிகாட்டலின் படி ஒருவருக்கு காலை உணவு அருந்துவதற்கு முன் அவர் இரத்த சர்க்கரை அளவு 110 mg /dl க்கு குறைவாய் இருந்தால் அவர் சர்க்கரை நோய் இல்லாதவர் எனவும், காலை ஆகாரத்திற்கு பிறகு இரண்டு மணி நேரம் சென்று பரிசோதனை செய்தால், அந்த நபரின் இரத்த அளவு 140 mg /dl க்கு குறைவாய் இருந்தால் அவர் சர்க்கரை நோய் இல்லாதவர் என்று கூறுகிறது.

2. ஒருவரின் காலை உணவு அருந்துவதற்கு முன் அவர் இரத்த சர்க்கரை அளவு 126 mg /dl க்கு அதிகமாக இருந்தாலும் , காலை ஆகாரத்திற்கு பிறகு இரண்டு மணி நேரம் சென்று பரிசோதனை செய்தால், அந்த நபரின் இரத்த அளவு 200 mg /dl க்கு அதிகமாக இருந்தாலும் அவர் சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு உள்ளானவர் என்று கொள்ளலாம்.

சரி, இப்போது இந்த இரண்டு அளவீட்டிற்கும் மத்தியில் இருப்பவர்கள் உதாரணமாக காலை உணவு அருந்துவதற்கு முன் அவர் இரத்த சர்க்கரை அளவு 110 mg /dl அதிகமாகவும் 126 mg /dl க்கு குறைவாகவும் காலை ஆகாரத்திற்கு பிறகு இரண்டு மணி நேரம் சென்று பரிசோதனை செய்தால், அந்த நபரின் இரத்த அளவு 140 mg /dl க்கு அதிகமாகவும் 200 mg /dl குறைவாகவும் இருந்தால் அவர்களை சர்க்கரை நோயின் விளிம்பில் உள்ளவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

அமெரிக்கன் டயாபடீஸ் அஸோஸியேஷன் என்ற அமைப்பும் இதே அளவீடுகளைதான் சர்க்கரை நோயாளிகளை கண்டறிய இரத்த சர்க்கரை அளவை நிர்ணயித்துள்ளது. பொதுவாக நாம் மேற்கத்திய நாடுகளின் வழிகாட்டலையே பின் பற்றி வருகிறோம்.

நாம் சர்க்கரை நோயாளிகள் என்று கண்டறிவதற்கான அளவீடுகளை பார்த்தோம். ஒருவர் பரிசோதனை செய்யும் பொது மேற்கண்ட அளவீடுகளை ஒப்பிட்டு அவர் சர்க்கரை நோயின் ஏணியில் எங்கு இருக்கிறார் அதாவது ஆரம்பக்கட்டமா இல்லை சர்க்கரை நோயாளியா என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த இரண்டு நிலைகள் அதாவது சர்க்கரையின் நோயின் விளிம்பு நிலை மற்றும் சர்க்கரை நோயின் நிலை ஆகிய இரண்டையும் பற்றி விரிவாக பார்க்கும் முன், எந்த காரணங்களால் சர்க்கரைநோய் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வோம்.
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வியாதியை பெரும்பாலோனர் மரபு ரீதியாக பெற்று வந்தனர் அதாவது பெற்றோர்களுக்கு இருந்தால் தங்கள் குழந்தைகளுக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கும். ஆனால் இன்று சர்க்கரை நோய்க்கான மிகப்பெரும் காரணமாக நமது பழக்கவழக்கங்களே என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பரபரப்பான வாழ்க்கை முறை, உடல் பருமன் மற்றும் மரபு ரீதியாக பெற்றோர்களிடம் இருந்து தங்கள் புள்ளைகளுக்கு வருவது ஆகிய மூன்று காரணங்களே 90 சதவீத சர்க்கரை நோயிற்கான காரணம். இது தவிர மன அழுத்தம், சுற்றுப்புற சீர்கேடு, நவீன தொல்லை மன்னிக்கவும் தொலை தொடர்பு சாதனங்களின் ஆதிக்கமும் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்ற தொற்று அல்ல நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.
நீங்கள் கேற்பது எனக்கு புரிகிறது, நகரத்தில் இருப்பவர்கள்தான் உடல் உழைப்பு அற்றவர்கள், சோம்பேறிகள், செல்போன் காதலர்கள் ஆனால் இந்த கிராம வாசிகளுக்கு ஏன் இந்நோய் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது என்பது.

ஒரு பெரிய காரணம் முதுமையை தொடும் வயது, இரண்டாவது காரணம் உணவு பழக்க வழக்கம் மற்றும் முந்தைய காலம் போன்ற உடல் உழைப்பு இல்லாமை,. மேலும் கிராமப்புற இளைஞர்கள் அல்லது நடுத்தர வயதுடையவர்கள் விவசாயம் சாரா உடல் உழைப்பு குறைவான தொழில்களில் ஈடுபடுவதும் முக்கிய காரணம் ஆகும். இவை தவிர மது, புகை பழக்கம் மற்றும் உணவு முறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உப்பு மற்றும் கார்போஹைட்ரெட் அதிகமுள்ள உணவுகளும் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொழுப்பு போன்ற நோய்களுக்கு காரணமாக விளங்குகின்றது.

உண்மையில் நன்கு ஆராய்ந்து பார்த்தல் உடல் பருமன், பரபரப்பான வாழ்கை முறை, மாறுபட்ட உணவு பழக்க முறை , மன அழுத்தம், இதர பிற நோய்களின் தூண்டல் மற்றும் மரபு போன்ற ஏதாவுது ஒரு காரணத்தால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இருந்தபோதிலும் உணவு பழக்க மாறுதல், சீரற்ற தூக்கம் , உணவு மற்றும் சூழல் மாசுபாடே அதிகரித்து வரும் சர்க்கரை நோய்க்கான காரணம் என நான் கருதுகிறேன். தெரிந்தோ தெரியாமலோ பல்வேறு காரணங்களால் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சரி நாம் என்ன செய்ய வேண்டும்?, யார் யார் எல்லாம் இந்த நோய்க்கு இரையாக வாய்ப்பு உள்ளது? என் இரத்த சர்க்கரை அளவு இந்திய மருத்துவ அமைப்பு சர்க்கரை நோய்க்கான பரிந்துரை செய்த வரம்பிற்குள் இருக்கிறது, எனவே எனக்கு சர்க்கரை வராது என்றுதானே அர்த்தம் ? யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல் சர்க்கரை வருவதற்கு முன் ஏதாவது அறிகுறிகள் தெரியுமா ? நீரிழிவு நோயின் விளிம்பில் உள்ளவர்கள் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து மீள முடியுமா போன்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் விரிவான மற்றும் தெளிவான ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ள முயற்சிப்போம்.

யாருக்காவது ஏதாவது சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால் எந்தவித தயக்கமும் இல்லாமல் தெரிவிக்கலாம்.

தொடரும்…………………

சர்க்கரையும் நானும்   நீங்களும் !சர்க்கரை எனும் நீரிழிவு நோயானது மிக அமைதியாக ஆசியா கண்டத்தில் உள்ளவர்களை பாதித்து கொண்ட...
09/12/2019

சர்க்கரையும் நானும் நீங்களும் !

சர்க்கரை எனும் நீரிழிவு நோயானது மிக அமைதியாக ஆசியா கண்டத்தில் உள்ளவர்களை பாதித்து கொண்டுவருகிறது. இதில் இந்தியாவும் தப்பவில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உலகியிலேயே இந்தியா சர்க்கரை நோயாளிகளை எண்ணிக்கையில் கொண்ட இரண்டாவது மிக பெரிய நாடாகும். சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நீரிழிவு நோய்க்கான கூட்டமைப்பின் உலகளவிலான நீரிழிவு பற்றிய புள்ளி விவரத்தில் இந்தியாவின் நீரிழிவு நோயுடைவர்கள் 77 மில்லியன் என்றும் இது மேலும் 101 மில்லியனாக வரும் 2030 ஆம் ஆண்டு உயரும் என்று தெரிவித்துள்ளது.

இந்த 77 மில்லியன் நீரிழிவு நோயளர்களின் எண்னிக்கையில், 13 மில்லியன் மட்டுமே 65 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மீதம் உள்ள 64 மில்லியன் நோயாளிகள் 20 வயது முதல் 65 வயதுவரை உள்ளர்வர்கள் என்பதுதான் மிகவும் கவலை அளிக்க இருப்பதாக உள்ளது. ஏனெனில் நீரிழிவின் தாக்கம் மிகவும் இளம் வயதையையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான். இந்த இளம் வயது நீரிழிவு தாக்கம் ஒருபுறம் இருக்க, நீரிழிவு நோயுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாக அதிகரித்து வந்துகொண்டு இருக்கிறது. இந்தியாவில் 95600 குழந்தைகள் பிறவியிலேயே நீரிழிவு நோயை (Type 1 diabetes ) கொண்டு உலக அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.

நீரிழிவு நோயின் தாக்கத்தை பார்த்தோம் என்று சொன்னால் தெற்காசிய பிராந்தியத்தில் ( இந்தியா, வங்காளதேசம், நேபால், ஸ்ரீலங்கா , மொரிசியசிஸ், மாலத்தீவு) கர்ப்பகால நீரிழிவு நோய்யினால் மட்டும் 24 % சதவீத குழந்தைகள் பாதிக்க படுகின்றனர். மேலும் 2019 ஆண்டு புள்ளி விவரப்படி ஒரு மில்லியன் நீரிழிவு நோயாளிகள் சராசரி ஆயுற்காலத்திற்கு முன்னரே இறந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் உள்ளுறுப்புகள் பாதிப்பு இந்த நோயின் தீவிரத்தையும் வீரியத்தையும் காட்டுவதாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதய சம்பந்தப்பட்ட வியாதிகள் வர வாய்ப்புகள் இரண்டு மடங்கு சர்க்கரை நோய் இல்லாதவர்களைவிட அதிகம். இது மட்டும் இல்லை, சிறுநீரக பாதிப்பு, கண்களின் விழித்திரை பாதிப்பு, கால் பாதம் மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு, மூளையில் அடைப்பு ஏற்படுவதற்க்கான வாய்ப்பு, புற்றுநோய் பாதிப்பிற்க்கான சாத்திய கூறுகள் போன்றவை இந்நோயின் மிக பெரிய தாக்கங்களாகும்.

கடந்த காலங்களில் 60 வயதிற்கு மேலாக இருந்தவர்கள், செல்வந்தர்கள் மட்டும் நகர்ப்புற வாசிகள் போன்றோரை மட்டுமே பாதித்து வந்த இந்த நீரிழிவு என்று அழைக்கப்படும் சர்க்கரை நோயானது தற்போது வயது வித்தியாசம் இன்றி குறிப்பாக நடுத்தர வயது கொண்டவர்களையும், குழந்தைகளையும் கிராமப்புற மக்களையும் மிக அதிகமாக பாதித்து வருகிறது.

சரி இதை ஏன் இங்கு பதிவிடுகிறேன் என்று பார்க்கிறீர்களா ? காரணம் இருக்கிறது அன்பு சகோதர சகோதரிகளே.
இன்று சமூக வலைத்தளமாக இருக்கட்டும் அல்லது தொலைக்காட்சி போன்ற ஊடகமாக இருக்கட்டும் இல்லை பத்திரிகைகள் போன்ற ஊடகமாக இருக்கட்டும் இவை அனைத்திலும் சர்க்கரை நோய் பற்றிய விளம்பரங்கள் மிக அதிக அளவில் வந்து கொண்டு இருப்பதை உங்களால் பார்த்திருக்க முடியும். ஏன், இந்தியாவின் மிக பெரிய சாமியாராக இருக்கும் சத்குரு திரு ஜாக்கி வாசுதேவ் அவர்களே தன்னுடைய நிறுவனத்தில் சர்க்கரை நோய்யிற்க்கான சிகிச்சையை ஆரம்பித்து இருக்கிறார் என்றால் இதன் தாக்கம் மட்டும் அல்ல இந்த நோயை சுற்றி பின்னப்பட்டு இருக்கும் வியாபாரத்தை நாம் அனைவரும் உணரவேண்டும்.

சரி இதை சொல்ல எனக்கு என்ன தகுதி என்று கேட்பது எனக்கு கேட்கிறது. அன்பு நண்பர்களே கடந்த 11 ஆண்டுகால இந்த நீரிழிவு நோய் எப்படி பாதிக்கிறது மற்றும் நோயாளிகள் எந்த மாதிரியான சிகிச்சையை விரும்புகிறர்கள் என்று சுமார் 1500 நோயாளிகளிடம் நேரிடையாக உரையாடி அவர்களுக்கு தரமான சிகிச்சையை பெறுவதில் என்ன பிரச்னை என்று ஆராய்ந்து அப்பிரச்னைகளை வகைப்படுத்தியது, ஒரு சிறிய கிராமப்புறத்தில் டெலி மெடிசின் மூலம் தரமான சிகிச்சையை கொடுத்தது, கடந்த நான்கு ஆண்டுகால மெட் சுகர் என்ற நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மையத்தை நிறுவி நடத்தி வருவது மற்றும் இவை அனைத்துக்கும் மேலாக ஏழு ஆண்டுகால இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு நீரிழிவு நோயாளியாக இருப்பது, அது மட்டும் அல்ல சர்வதேச நீரிழிவு நோய்க்கான கூட்டமைப்பு (International Diabetes Federation) அளித்த சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பயிற்சியாளர் சான்றை பெற்றவன் போன்ற காரணங்களால் உங்களுக்கு அதை பற்றி எடுத்து சொல்ல தகுதிஉடையவனாக பார்க்கிறேன்.

சிலர் சொல்லுகிறார்கள் நீரிழிவு நோயை உடலே சரி செய்து கொள்ளும் என்கிறார்கள், இன்னும் சிலரோ தங்களது மருந்து குணப்படுத்தும் என்கிறார்கள், பலரோ கற்கால மனிதர்கள் போல் மாமிச முறை உணவு முறை கட்டுப்படுத்தும் என்கிறார்கள். இன்னும் சிலரோ தங்களின் பயிற்சியின் மூலம் நீரிழிவு நோயை இல்லாமல் செய்து விடமுடியும் என்று கூவி கூவி விளம்பரம் செய்கிறார்கள்.

சரி இதில் எது உண்மை அல்லது எந்த முறை சிறந்தது, நீரிழவு நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியுமா போன்ற கேள்விகளை ஆராயும் முன் நீரிழிவு நோயை பற்றி ஒரு சரியான புரிதலுக்கு பின்னர் அதை கட்டு படுத்துவது அல்லது குணப்படுத்துவது பற்றி விவாதிக்கலாம்.

தொடரும் ..................

Address

Head Office : No 251/1 1stfloor, Sabari Salai, Madipakkam
Chennai
600091

Alerts

Be the first to know and let us send you an email when Medsugar Diabetic Specialities Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medsugar Diabetic Specialities Care Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Medsugar Family

We love caring people.....