09/05/2021
கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தும் சித்த மருந்துகள்.
தாளிசாதி சூரணம்
காலை மாலை ஒரு தேக்கரண்டி கருப்பு வெற்றிலையில் வைத்து மென்று விழுங்கவும் இத்துடன் இரண்டு வசந்த குசுமாகரம் மாத்திரை சேர்த்து மென்று உணவுக்குப் பின்பு அருந்த வேண்டும்.
ஆடாதோடை மணப்பாகு
மூன்று வேளையும் 10 மில்லி வெந்நீரில் கலந்து உணவுக்கு முன்பு அருந்தவும்.
தாளிசாதி வடகம்
நான்கு வேளை ஒரு மாத்திரை உணவிற்குப் பின்பு அல்லது முன்பு சப்பி சாப்பிட வேண்டும்.
ஹாலின் (Halin)கேப்சூல் ஒன்று அல்லது யூகலிப்டஸ் தைலம் 5 சொட்டு எடுத்து நன்றாக கொதிக்க வைத்த வெந்நீரில் அதனையிட்டு ஆவி பிடிக்க வேண்டும்.
திப்பிலி ரசாயனம்
காலை மதியம் இரவு நெல்லிக்காயளவு மென்று சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும் உணவுக்கு பின்பு.
நான்கு வேளை வெந்நீரில் உப்பு மஞ்சள் அல்லது திரிபலா சூரணம் கலந்து வாய் கொப்பளிக்கவும்.
காலையில் வெறும் வயிற்றில் இரண்டு வெற்றிலை இஞ்சி, மிளகு, மஞ்சள், பூண்டு, உப்பு, சீரகம் எல்லாவற்றையும் பொடி செய்து போட்டு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து ஒரு டம்ளர் ஆகும்வரை கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தவும்.
ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் நான்கு வேலை வாயில் அடக்கிக் கொள்ளவும், கிராம்பு மொட்டு நீக்கி உபயோகித்துக் கொள்ளவும்.
சுரம் இருந்தால் நிலவேம்பு குடிநீர் இருவேளையும் இத்துடன் பிரமானந்த பைரவம் இரண்டு மாத்திரையும் உணவிற்கு முன்பு சேர்த்து கொள்ளவும்.
சுரம் இல்லாதிருப்பின் கபசுரக் குடிநீர் இருவேளை உணவிற்கு முன்பு சேர்த்துக் கொள்ளலாம்.
மரு. சா. சீனிவாசன் M.D (s)
மரு. ப. ராஜலட்சுமி M.D (s)
சித்த மருத்துவர்கள்.