நம்மாழ்வாரின் வழியில்

  • Home
  • India
  • Chennai
  • நம்மாழ்வாரின் வழியில்

நம்மாழ்வாரின் வழியில் நம்மாழ்வார் ஐயா கண்ட கனவின் ஒரு விதை
(441)

🇯🇵 ஜப்பானில் நிலநடுக்கம் – மானுட அச்சம்இன்று மாலை — Japan Meteorological Agency (JMA) அறிவிப்பின்படி, வட-ஜப்பானில் ஏற்பட...
08/12/2025

🇯🇵 ஜப்பானில் நிலநடுக்கம் – மானுட அச்சம்
இன்று மாலை — Japan Meteorological Agency (JMA) அறிவிப்பின்படி, வட-ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் இருந்தது.
இதையடுத்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது; நாட்டின் பலர் — பொதுமக்கள், கடற்கரை வாசிகள் — அச்சத்துடன் வெளியேர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

சென்னை தாம்பரத்தில்
07/12/2025

சென்னை தாம்பரத்தில்

டிசம்பர் 07 ல் , ஞாயிற்றுக்கிழமை, 2025 #தேன்கனி              தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை:(விருதுநகர் மாவட்ட இயற்கை உ...
06/12/2025

டிசம்பர் 07 ல் , ஞாயிற்றுக்கிழமை, 2025
#தேன்கனி



தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை:
(விருதுநகர் மாவட்ட இயற்கை உழவர்களின் ஒன்று
கூடல்)

நாள்: 07.12..2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30 மணி முதல் 1.00 வரை*
இடம்: காரநேசன் பேருந்து நிறுத்தம்
இரட்டை சிலை அருகில்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்

தொடர்புக்கு:
94435 75431, 96554 37242, 94892 70102, 97876 48002,90955
63792, 88703 42863, 97902 79975.,

12வது ஆண்டாக சிவகாசியில்..
========================
விருதுநகர் மாவட்ட இயற்கை உழவர்கள் சந்திப்பு
மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும் விற்பனை.....
( சந்தையில்)

கருந்தானியங்களான :
=========================
வரகு புழுங்கல் & பச்சை அரிசிகள்,
குதிரைவாலி புழுங்கல் & பச்சை அரிசிகள்,
சாமை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
திணை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
நாட்டுக்கம்பு,
கேழ்வரகு,
இருங்கு சோளம்,
வெள்ளை சோளம்,
சிகப்பு சோளம்

மரபு அரிசி ரகங்கள் :
=============================
மாப்பிள்ளை சம்பா அரிசி & அவல்கள்,
கருப்புக் கவுணி & சிகப்புக் கவுணி அரிசிகள்,
கருங்குறுவை அரிசி,
காட்டுயாணம் அரிசி,
பூங்கார் அரிசி,
குள்ளகார் அரிசி,
சீரக சம்பா அரிசி,
மற்றும் இன்னும் பல மண்ணின் மரபு அரிசி ரகங்கள்...
நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனைகற்கண்டு,
மலைத் தேன்,
செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்,
பாரம்பரிய விளக்கு எண்ணெய்...*

பயறு & பருப்பு வகைகள்
===================
உளுந்தம் பருப்பு & பயறு
பாசி பருப்பு & பயறு
சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு
செம்மண் கட்டிய துவரம் பருப்பு
கொண்டக்கடலை, கடலை பருப்பு,
நரிப்பயறு

மரபு வீட்டு திண்பண்டங்கள் :
=======================
எள்ளு உருண்டை,
கடலை உருண்டை,
கருப்பட்டி நவதானிய அல்வா,
நவதானிய உருண்டை,
கருந்தானிய கார சேவு, சீவல், முறுக்கு வகைகள்...
திரிகடுகம் கடலை மிட்டாய், மாப்பிள்ளை சம்பா பொரி
மிட்டாய் வகைகள்..
கருந்தானிய தோசை வகைகள், நுண்ணூட்ட சத்துமாவு,

பொடி வகைகள்
=============
சோள ரவை,
சிகப்பரிசி வடகம்,
இட்லி பொடி வகைகள்,
எள்ளு இட்லி பொடி வகைகள்,
முருங்கை சாதப் பொடி,
கருவேப்பிலை சாதப் பொடி,
ஊறுகாய் வகைகள் ...

காய்கறிகள்
==========
கீரைகள், காய்கறிகள், குதிரைவாலி சாம்பார் சாதம்,
ஆவாரம் பூ தேநீர் வகைகள்,
மாடித் தோட்ட பைகள், விதைகள்..

இன்னும் பல...

ஒத்த சிந்தனையுள்ள இயற்கை உழவர்கள், இயற்கை
செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம்..
வாருங்கள்...

அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்...

குறிப்பு : துணிப்பை கொண்டு வர வேண்டுகிறோம்..
மற்ற நாட்களில் வெளியூர் நண்பர்களுக்கும்
வீ்ட்டுத் தேவை மற்றும் மொத்த விற்பனைக்கு
தேவையெனில் தொடர்பு கொள்ளவும்* .

வார வேலை நாட்களில் கொரியர் மற்றும் லாரி
சர்வீஸில் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு: 94435 75431, 96554 37242, 94892 70102, 97876 48002,90955 63792, 88703 42863, 97902 79975.,

#தேன்கனி இயற்கை உழவர்சந்தை/தேன்கனி
வாழ்வியல்மையம்/
தேன்கனி பாரம்பரியருசியகம்

நெல் ஜெயராமன் –7 ஆம் ஆண்டு நினைவு நாளில் நமது வணக்கங்கள்🌾 பாரம்பரிய நெல் வகைகளின் காவலர்தன் வாழ்நாள் முழுவதும் ஏராளமான ப...
05/12/2025

நெல் ஜெயராமன் –7 ஆம் ஆண்டு நினைவு நாளில் நமது வணக்கங்கள்

🌾 பாரம்பரிய நெல் வகைகளின் காவலர்
தன் வாழ்நாள் முழுவதும் ஏராளமான பழமையான நெல் விதைகளைத் தேடி, பாதுகாத்து, மறுபிறப்பு கொடுத்தவர். காலத்திற்கு முந்தியே அழிந்து போகும் பல வகைகளுக்கு புதிய உயிர் ஊட்டியவர்.

🌱 விவசாயிகளின் வீட்டுக்கு நெல் விதை கொண்டு சென்ற மனிதர்
நெல் திருவிழாக்கள், விதை பரிமாற்ற முகாம்கள் வழியாக 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் வகைகளை நேரடியாக பகிர்ந்து, அந்த விதைகள் மீண்டும் நிலத்துக்கு திரும்ப காரணமானவர்.

🌿 “நம்ம நெல்லைக் காப்போம்” என எழுப்பிய குரல்
இந்த இயக்கத்தின் முதன்மை இயக்குனராக, தமிழரசின் பாரம்பரிய நெல் செல்வத்தை மீட்டெடுக்க எண்ணற்ற முயற்சிகளை உருவாக்கிய தலைவர்.

🍃 இயற்கைப் புரட்சியாளர் நம்மாழ்வாரின் நேரடி சீடர்
நம்மாழ்வாரின் சிந்தனைகளையும், இயற்கை விவசாயப் பாதையையும் தன் வாழ்க்கையின் நெறியாகக் கொண்டவர். “நம்மாழ்வார் விளக்கிய பாதையை மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும்” என்ற எண்ணத்தில் செயல்பட்ட உண்மையான சீடர்.

🌾 “ஜெயராமன்” என்பதைக் “நெல் ஜெயராமன்” ஆக்கிய அர்ப்பணிப்பு
தன்னுடைய வாழ்க்கையே நெலுக்கும் நாட்டு விதைக்கவும் பல மைல் தூரம் பயணம் செய்தவர். தனது பெயருக்கு ‘நெல்’ என்ற சொற்களைச் சேர்த்து விதை பணிக்கான தனது அன்பையும் கடமையையும் உலகிற்கு அறிவித்தவர்.

---

இன்று அவரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்…

பாரம்பரிய நெல் வகைகளை காப்பதற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த இந்த மண்ணின் மகன் நெல் ஜெயராமனை நினைவு கூப்பது, அவரின் கனவுகளை தொடர்வதற்கான நமது பொறுப்பு.

ஒவ்வொரு விவசாயியும் விதைக்கும் ஒரு பாரம்பரிய விதை, அவருக்கான மிகப்பெரிய நினைவு நாழிகையாகும்.

பாரம்பரிய விதைகளில் தன் உயிரை விதைத்த மனிதருக்கு எங்கள் வீரவணக்கங்கள். 🌾💐

05/12/2025

இந்த ஒரு தவறே வெள்ளத்தை உருவாக்கியது!

2050-ல் இந்தியாவில் குழந்தை பெறுவது ‘ஒரு சவாலாக’ மாறிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்…💭
02/12/2025

2050-ல் இந்தியாவில் குழந்தை பெறுவது ‘ஒரு சவாலாக’ மாறிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்…💭

30/11/2025

“வேப்பமரம் தட்டின் ரகசியம் | உணவு சுவையே மாறிடும்!”

 #வானகத்தில்"மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி" #நாள் : 12-12-2025 முதல் 14-12-2025 வரை #நம்மாழ்வாரின் நோக்கங்கிறத...
30/11/2025

#வானகத்தில்
"மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி"

#நாள் : 12-12-2025 முதல் 14-12-2025 வரை

#நம்மாழ்வாரின் நோக்கங்கிறது...
என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம். #வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக் கொள்ளும்.

#வானகம் நடத்தும்
இப் பயிற்சியில் :
↣ வானகம் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள்
↣ ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை
↣ மேட்டுப்பாத்தி & இருமடிபாத்தி அமைத்தல்
↣ மழை நீர் அறுவடை
↣ உயிர்வேலி
↣ ஒருங்கிணைந்த பண்ணை
↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
↣ களப்பயிற்சி
↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
↣ கால் நடை பராமரிப்பு
↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
↣ மரபு விளையாட்டு* ஆகியவை இடம்பெறும்.

பயிற்சியை #வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

⇒ பயிற்சி வருகிற
12.12.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கி
14.12.2025 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு* பயிற்சி நிறைவடைகிறது.*

⇒ பயிற்சி நிகழ்விடம் :
“ #வானகம்” – #நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19

பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,500/- (non-refundable)

தாங்கள் வங்கியில் பணம் செலுத்திய பின்பு அதன் விவரங்களை +91 94458 79292 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிக்கவும்.

*தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்
Nammalvar Ecological Foundation :
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
முன்பதிவு அவசியம்.
தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

முன்பதிவுக்கு அழைக்கவும் :
+91 86680 98495
+91 93855 92292
+91 86680 98492
+91 94458 79292

குறிப்பு :
⇛ வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .

களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
https://vanagam.org
https://vanagam.page.link/app

நன்றி.

சமீபத்திய செய்திகளில் மீண்டும் மீண்டும் ஒரு அதிர்ச்சி உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது…பிரபலமான சில மசாலா பொடிகளில் ‘பூச்...
25/11/2025

சமீபத்திய செய்திகளில் மீண்டும் மீண்டும் ஒரு அதிர்ச்சி உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது…

பிரபலமான சில மசாலா பொடிகளில் ‘பூச்சிக்கொல்லி ரசாயனங்கள்’ அதிகமாக இருப்பது.

மசாலா பொடியை நாம்தான் வாங்கினோம்…

விளம்பரம் வழியாக வம்படியாக நம்முடைய வாய் வழியாகவே விஷத்தை விழுங்கி கொண்டிருக்கிறோம்...

👉 நீண்ட காலமாக இம்மாதிரி ரசாயனங்கள் உள்ள உணவுகளை உபயோகித்தால்
• நோய் எதிர்ப்பு திறன் குறையும்
• கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அதிக ஆபத்துக்கு ஆளாவார்கள்
• புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்
• கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும்

தமிழக வானம் மீண்டும் ஈரமாகிக் கொண்டிருக்கிறது. தெற்கிலிருந்து வடக்கை நோக்கி நகரும் ஈரப்பதத்தால், அடுத்த 48 மணி நேரத்தில்...
25/11/2025

தமிழக வானம் மீண்டும் ஈரமாகிக் கொண்டிருக்கிறது. தெற்கிலிருந்து வடக்கை நோக்கி நகரும் ஈரப்பதத்தால், அடுத்த 48 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் மழை செயல்பாடு அதிகரிக்கிறது. பொதுவாக செய்திகள் சொல்லாத சில நிலைமைகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.

🌧️ அதிக மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இரண்டு நாட்களில் கீழ்க்கண்ட பகுதிகளில் மேகக் கட்டுகள் பெருமளவில் உருவாகி திடீர் கனமழை வாய்ப்பு இருக்கிறது:

தூத்துக்குடி

விருதுநகர்

புதுக்கோட்டை

தஞ்சாவூர்

ராமநாதபுரம்

🌦️ மிதமான – இடையே மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்

காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால், கீழ்க்காணும் மாவட்டங்களில் சிறு இடைவெளியில் மழை தொடரலாம்:

திருநெல்வேலி

தென்காசி

நீலகிரி

கோயம்புத்தூர்

தேனி

கன்னியாகுமரி

இந்தியாவெங்கும் ‘மரங்களின் தாயாக’ மதிப்பளிக்கப்பட்ட சாலுமரத திம்மக்கா அவர்கள், தனது 114 ஆண்டுகள் நிறைந்த வாழ்வைப் பூர்த்...
15/11/2025

இந்தியாவெங்கும் ‘மரங்களின் தாயாக’ மதிப்பளிக்கப்பட்ட சாலுமரத திம்மக்கா அவர்கள், தனது 114 ஆண்டுகள் நிறைந்த வாழ்வைப் பூர்த்தி செய்து இம்மண்ணை இறைஞ்சிச் சென்ற செய்தி மனதை நொறுக்கும் ஒன்றாக உள்ளது.

பசுமை என்பது ஒரு சொல்லல்ல, அது ஒரு பொறுப்பு என்பதை வாழ்க்கையே செய்து காட்டியவர் திம்மக்கா.
கணவருடன் கை கோர்த்து, பாதையோரம் நீண்டுநின்ற பச்சை நிழல்களுக்கு உயிர் ஊட்டியவர்.
நட்ட ஒவ்வொரு செடியையும் தன் குழந்தையைப் போலப் பராமரித்த அவர், ஆயிரக்கணக்கான மரங்களை இந்த பூமிக்கு பரிசாக வழங்கி சென்றார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது மனிதனின் கடமை என்பதை செயலால் உலகிற்கு கற்றுக் கொடுத்த தன்னலமற்ற ஆன்மா.
அவரது பசுமை பணி உலகம் நாடி வந்த மரியாதையை ஈட்டியது; அவரது இயற்கைப் பாசம் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக நீடிக்கும்.

இன்று ‘மரங்களின் தாய்’ திம்மக்கா அவர்கள் இயற்கையோடு ஒன்றருகே இணைந்துள்ளார்.
ஆனால் அவர் நட்ட பச்சை நிழல்கள் என்றென்றும் நம் நினைவில் வாழும்.

🌴 பனை கைவினை மற்றும் கலைப் பொருட்கள் பயிற்சி 🌴தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII...
13/11/2025

🌴 பனை கைவினை மற்றும் கலைப் பொருட்கள் பயிற்சி 🌴

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) ஆதரவுடன்,
எல்லோருக்கும் எல்லாம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெறும்
பனை கைவினை மற்றும் கலைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கு

உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🌿

இந்த நடைமுறை பயிற்சியில்,
பனை மரத்தின் பல்வேறு பாகங்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் நட்பு உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் முறைகளை கற்றுக்கொள்வீர்கள்.

இந்தப் பயிற்சி பெண்கள், இளைஞர்கள், கைவினையாளர் மற்றும் புதிய தொழில்முனைவோர் அனைவருக்கும் சிறந்த வாய்ப்பாகும்.

📅 நாள்: நவம்பர் 14, 15, 16, 2025
🕙 நேரம்: காலை 10:00 மணி – மாலை 4:30 மணி
📍 இடம்: இதய நிறைவு தியான மையம், கஞ்சனூர்
💰 பயிற்சி கட்டணம்: ₹500 மட்டும்

🌟 முக்கிய அம்சங்கள்:
✅ பனைப் பழ அடிப்படையிலான உணவுகள் மற்றும் கைவினை தயாரித்தல்
✅ பொதியிடல் மற்றும் விற்பனை வழிகாட்டல்
✅ சான்றிதழ், மதிய உணவு, சிற்றுண்டி வழங்கப்படும்

🎯 இப்பேதே பதிவு செய்யுங்கள்:
🔗 https://forms.gle/VstESc3vxwHhHF3U7

📱 புதுப்பிப்புகளுக்காக WhatsApp குழுவில் சேரவும்:
🔗 https://chat.whatsapp.com/BSQ9lFCFu4Y9rXZuGvKXwE?mode=wwt

🌿 பனை கைவினையின் இயற்கை அழகை இணைந்து கற்றுக் கொள்ள வாருங்கள்! 🌿

Address

சத்யா ஹாம்ஸ் எண் 32, G2 சிவாகாமி நகர் 2வது தெரு, சிவகாமி காலனி, அஸ்தினாபுரம், சிட்லபாக்கம்
Chennai
600064

Telephone

+918531848575

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்மாழ்வாரின் வழியில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to நம்மாழ்வாரின் வழியில்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram