Sakthi acupuncture

Sakthi acupuncture Cure All Diseases without Medicine..

உடல் நலம் உங்கள் கையில்! - சிகிச்சையின் எளிமைபகுதி - 03 துணைகளின் சேர்க்கை             நம் உடலின் இயக்கத்தைத் தீர்மானிக்...
22/02/2016

உடல் நலம் உங்கள் கையில்! - சிகிச்சையின் எளிமை

பகுதி - 03 துணைகளின் சேர்க்கை


நம் உடலின் இயக்கத்தைத் தீர்மானிக்கிற உள்ளுறுப்புக்கள் ஐந்தோடும் அறிமுகம் ஆகிவிட்டோம். இந்த ஐந்து உறுப்புக்களே பிற உடல் உள்ளுறுப்பு, வெளியுறுப்புக்களின் இயல்பையும் கட்டுப்படுத்துகின்றன.

அக்குபங்சர் அடிப்படையாகக் கூறும் இதே ஐந்து உறுப்புக்களை சித்த மருத்துவம் ராஜ உறுப்புக்கள் என்று அழைக்கிறது. ராஜ உறுப்புக்கள் ஐந்தின் பலமே உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. உடலில் அமைந்துள்ள சிறு உறுப்புக்கள் அனைத்தின் இயக்கத்தையும் இந்த ராஜ உறுப்புக்களே சீர்படுத்துக்கின்றன.

நாம் இங்கே கற்றுக் கொண்டிருக்கின்ற அனைத்தும் தொன்மையான புரிதல்கள். இவற்றை நவீன விஞ்ஞான அறிவைக் கொண்டு எடை போட முயல வேண்டாம். ஏனெனில், விஞ்ஞானம் என்பது இன்னும் வளர வேண்டிய வளர்ந்து கொண்டிருக்கிற குழந்தை. விஞ்ஞானம் இப்போது தான் சில அக்குபங்சர் புள்ளிகளையும், அதன் சக்தி நாளங்களையும் அறிந்து கொண்டிருக்கிறது. அக்குபங்சர் அறிவியலை நவீன கருவிகள் அறிய வேண்டுமானால் இன்னும் அவை வளர வேண்டியிருக்கிறது.

5000 வருட பாரம்பரியத்தை 200 வருட குழந்தை அறிய முயல்வது கடினமானது தானே?

காலமும் பொறுமையும் கொண்டு நவீனம் வளர நாமும் உதவுவோம்.

எனவே, இங்கே நாம் அறிந்து வருகிறவற்றை ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் அடிப்படையான உடலின் இயல்பை அறிய முடியாது. நம்முடைய பாடங்களின் வாயிலாக சிந்தனையின் மூலமாக இந்தப் பாரம்பரிய அறிவு உங்களுக்கு விளங்கத் துவங்கி விட்டால் நவீன மருத்துவத்தின் அத்தனை கூறுகளையும் உங்களால் பிரித்தறிய முடியும்.

ஒப்பீடு இன்றி நமக்குக் கற்பிக்கப்பட்டவற்றை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு நம் அறிதலை தொடரலாம்.

இதயம், மண்ணிரல், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய முக்கிய உள்ளுறுப்புக்களையும் அவற்றின் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் புற உறுப்புக்களையும் பார்த்தோம்.

முகத்தில் துவங்கி இப்போது அகத்திற்கு வந்து விட்டோம். நாம் அறிந்த முக்கிய உறுப்புக்கள் ஐந்தும் குளிர்ச்சியானவைகளாகும் இவற்றின் துணை உறுப்புக்களாக மேலும் ஐந்து உறுப்புக்கள் அமைந்துள்ளன. இந்த துணை உறுப்புக்கள் வெப்பமானவைகள் ஆகும்.

குளிர்ச்சியான முக்கிய உறுப்புக்களோடு, வெப்பமான துணை உறுப்புக்களும் இணைந்து ஒரு ஆரோக்கியச் சுற்றை உருவாக்குகிறது. துணை உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கிய உறுப்பின் பணிகளில் உதவும் தன்மையோடு ஜோடி, ஜோடியாக அமைந்துள்ளன. உள்ளுறுப்புக்களையும் அவற்றின் துணை உறுப்புக்களையும் காண்போம்.

உள்ளுறுப்பு - துணை உறுப்பு
இதயம் - சிறுகுடல்
மண்ணிரல் - இரைப்பை
நுரையீரல் - பெருங்குடல்
சிறுநீரகம் - சிறுநீர்ப்பை
கல்லீரல் - பித்தப்பை .
.. இந்த ஐந்து ஜோடி உறுப்புக்களும் எந்த அடிப்படையில் இணைந்துள்ளன? என்பதை நாம் பார்க்கும் முன்னர் இவற்றின் பொதுவான வேலை என்ன என்பதை அறியலாம். ஒவ்வொரு உள்ளுறுப்பின் அடிப்படை வேலையாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். தனக்குள் வருபவற்றிலிருந்து சக்தியை கிரகித்துக் கொண்டு, எஞ்சியதை வெளியேற்றுவதே எல்லா உறுப்புக்களின் பிரதான பணியாகும்.

நாம் மேற்கண்ட ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடும் இந்த அடிப்படையில் அமைந்துள்ளதா என்பதை உதாரணத்திற்காகப் பார்ப்போம்.

# தனக்குள் வரும் இரத்தத்தை மடை மாற்றி அழுத்தம் கொடுத்து வெளியேற்றுகிறது இதயம்.

# தனக்குள் வரும் உணவை அரைத்து சக்தியை பெற்றுக் கொண்டு, உணவுக் கூழை வெளியேற்றுகிறது இரைப்பை.

# இரைப்பையிலிருந்து பெற்ற உணவுக்கூழை செரித்து சத்துக்களைப் பெற்றுக் கொண்டு எஞ்சியதை வெளியேற்றுகிறது சிறுகுடல்.

# சிறுகுடலிலிருந்து வந்த உணவு மிச்சத்தில் எஞ்சிய சக்தியை உறிஞ்சி விட்டு, மலமாக வெளியே தள்ளுகிறது. பெருங்குடல்.

# தனக்கு இரைப்பையிலிருந்து கிடைத்த உணவின் சக்தியை, தேவைக்கு தகுந்து பிரித்தனுப்புகிறது மண்ணிரல்.

# சுவாசம் மூலமாக உள்ளே வந்த காற்றிலுள்ள ஆற்றலை பிரித்தெடுத்துக் கொண்டு, மிஞ்சிய அசுத்தக் காற்றை வெளியே அனுப்புகிறது நுரையீரல்.

# தனக்குள் வந்த இரத்தத்திலுள்ள ரசாயனங்களை, நச்சுத்தன்மையை அகற்றி விட்டு, சுத்தமான இரத்தத்தை வெளியேற்றுகிறது கல்லீரல்.

# கல்லீரலில் இருந்து வந்த பித்த நீரைச் சேமித்து, தேவைக்கேற்ப செரிமானத்திற்கு உதவுகிறது பித்தப்பை.

# இரத்தத்தில் கலந்துள்ள கழிவுப்பொருட்களை பிரித்தெடுத்து வெளியேற்றுகிறது சிறுநீரகம்.

# சிறுநீரகத்திலிருந்து வரும் கழிவுகளிலிருந்து எஞ்சியுள்ள சக்தியை எடுத்துக் கொண்டு, சிறுநீரை வெளியேற்றுகிறது சிறுநீர்ப்பை.
.. நாம் பார்த்த பத்து உள்ளுறுப்புக்கள் மட்டுமல்ல உடலில் அமைந்துள்ள எல்லா உறுப்புக்களின் வேலையுமே இது ஒன்று தான்.

சக்தியை கிரகிப்பதும் எஞ்சியதை வெளியேற்றுவதும் ஆன வேலையை மட்டுமே உடல் பிரதானமாகச் செய்கிறது.

ஐந்து ராஜ உறுப்புக்களுக்கு உடலின் அனைத்து வகை இயக்கங்களிலும் பங்குண்டு. அவற்றின் முக்கியமான பணிகளை நாம் பின்னர் அறியலாம்.

துணை உறுப்புக்களான சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல், சிறுநீர்ப்பை, பித்தப்பை ...ஆகியவை 'பை' வடிவ உறுப்புக்களாகும்.

இவற்றில் இரைப்பை, சிறுகுடல் நேரடியாக உணவோடும், பெருங்குடல், சிறுநீர்ப்பை நேரடியாக கழிவுகளோடும், பித்தப்பை சேமிப்பு பையாகவும் தொடர்போடு அமைந்துள்ளன. துணை உறுப்புக்களின் ஒரே ஒரு வேலை சக்தி உட்கிரகிப்பும், கழிவு வெளியேற்றமும் ஆகும்.

ராஜ உறுப்புக்களின் பணிகளில் இத்துணை உறுப்புக்கள் பங்கேற்பனவாக உள்ளன.

உடலில் இன்னும் சில உறுப்புக்கள் இருக்கின்றன என்றாலும் இந்த 10 உறுப்புக்களை மட்டுமே கூறுகிறீர்களே? என்று நீங்கள் நினைக்கலாம்.

நாம் உடலின் அரசனாக கற்பனை செய்து கொண்டிருக்கும் மூளை (Brain) கூட முக்கியமான உறுப்பில்லை எனலாம். ஏனெனில், ஐந்து ராஜ உறுப்புக்களின் பிரதிபலிப்பு பகுதியாகவும், ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவுமே மூளை அமைந்துள்ளது.

ராஜ உறுப்புக்களின் பணிகளில் உதவுவதற்கான தொடர்பாகவே மூளை செயல்படுகிறது.

உதாரணமாக, "மது அருந்தியவருடைய சிறுமூளை பாதிக்கப்படுவதால் அவர் நினைவு தடுமாறுகிறது" என்று கூறப்படுகிறது. ஒருவர் மது அருந்தினால் கல்லீரல் தான் பாதிப்படைகிறது. கல்லீரலின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மூளையின் ஒரு பகுதியில் கல்லீரலின் பாதிப்பு பிரதிபலிக்கிறது. நினைவு தடுமாற்றம் கல்லீரலில் இருந்துதான் சிறுமூளைக்குச் செல்கிறது.

இவ்வாறு, ஐந்து உறுப்புக்களின் ஒருங்கிணைந்த பிரதிபலிப்பு பகுதியாகத்தான் மூளை இருக்கிறது. மூளையின் கட்டுப்பாட்டில் இவ்வுறுப்புக்கள் இல்லை என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டும்.

உடலின் இயக்கத்திற்குக் காரணமான ஐந்து உறுப்புக்களையும், அவற்றில் துணை வெளிப்புற உறுப்புக்கள் எவை எவை என்பதையும் நாம் அறிந்துள்ளோம்.

உள்ளுறுப்பு - துணை உறுப்பு - புற உறுப்பு

இதயம் - சிறுகுடல் - நாக்கு
மண்ணிரல் - இரைப்பை - உதடுகள்
நுரையீரல் - பெருங்குடல் - மூக்கு
சிறுநீரகம் - சிறுநீர்ப்பை - காதுகள்
கல்லீரல் - பித்தப்பை - கண்கள்

உள்ளுறுப்பு மற்றும் துணை உறுப்பிற்கு இடையிலான தொடர்பு என்ன என்பதையும், இவ்வுறுப்புக்களுக் கிடையில் சக்தி பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் இனி அறியலாம்.

தொடரும்...

உடலின்மொழி - பகுதி 17தாகமும்பசியும்தேவையைப்பொருத்துஉணவுமுறைஒழுங்குபடுத்தப்பட்டால், உடல்கழிவுகள்தேங்குவதிலிருந்துவிடுபடமு...
11/02/2016

உடலின்மொழி - பகுதி 17

தாகமும்பசியும்தேவையைப்பொருத்து

உணவுமுறைஒழுங்குபடுத்தப்பட்டால், உடல்கழிவுகள்தேங்குவதிலிருந்துவிடுபடமுடியும்.கழிவுகள்தேங்குவதுநின்றுவிட்டால்ஏற்கனவேதேக்கமுற்றகழிவுகள்வெளியேறத்துவங்கும்.கழிவுகளற்றஉடல்பூரணஆரோக்கியமாகும்.
உடல்தன்பசியையும், தாகத்தையும்அழகானமுறையில்அறிவிக்கிறது.அதன்தேவைக்கேற்பநாம்துணைநிற்போமானால்நம்ஆற்றல்தேவைக்குஉடல்துணைநிற்கும்!
பசித்தபின்பு, அளவானஉணவைமென்றுஅரைத்துஉண்ணவேண்டும்என்பதைஅறிந்தோம்.சாப்பிடும்போதுதண்ணிர்அருந்துவதுசரியானதா?
நீங்கள்உண்ணும்உணவிற்கேற்ப, இரைப்பையின்செரிக்கும்அமிலம்செறிவானதாகஇருக்கும்.
ஒருஅமிலத்தைஅதன்செறிவைக்குறைக்கவேதியியல்கூடங்களில்என்னசெய்வார்கள்?அமிலத்தோடுதண்ணிர்கலப்பார்கள்.தண்ணிரோடுசேர்ந்தஅமிலம் (Diluted Acid) நீர்த்துசெறிவுகுறைந்துபோகும்.
அப்படியானால், நாம்உண்ணும்உணவின்தன்மைக்கேற்பஇரைப்பையில்தயாராகும்அமிலத்தின்செறிவும்இருக்குமல்லவா?அப்படித்தயாரானசெறிவானஅமிலத்தின்மீதுநாம்தண்ணிரைஊற்றுகிறோம்.நீர்த்துப்போனஅமிலத்தால்நாம்உண்ணும்உணவைமுழுமையாகசீரணிக்கமுடியாது.
சாப்பிடும்போதுதண்ணிர்குடிப்பதுதவறானது.அதுவும்பசிமட்டும்இருக்கிறது; தாகம்எடுப்பதில்லை.ஏனென்றால், பசிஇருக்கும்போதுதாகமும், தாகம்இருக்கும்போதுபசியும்இருக்காது.
ஆனால்சிலநேரம்பசியோடு, தாகம்இருப்பதாகதோன்றுகிறதா?
அதுவெறும்தாகமாகத்தான்இருக்கும்.அப்போதுபோதுமானஅளவுதண்ணிரைக்குடித்தோமானால்தாகமும், பசியும்காணாமல்போகும்.
உணவைநன்றாகமென்றுசாப்பிடும்போதுபோதுமானஉமிழ்நீர்வாயிலேயேசுரக்கிறது.எனவேதண்ணிர்தேவைஇருக்காது.
அதேநேரம்நாம்அதிகமானமசாலாப்பொருள்கலந்தஉணவைச்சாப்பிடும்போதுதண்ணிர்தாகம்ஏற்படலாம்.அந்தநேரத்தில்குறைவானஅளவுதண்ணிரைசாப்பிடும்இடைவேளையில்குடிக்கலாம்.
ஆனால்சாதாரணமாகநாம்சாப்பிடும்போதுதண்ணிர்அருந்துவதுஉடலின்செரிமானத்தைப்பாதிக்கும்.சாப்பிட்டுமுடித்து, சிறிதுநேரம்கழித்துஇரைப்பைஜீரணம்முடியும்நிலையில்தாகம்ஏற்படும்.இப்போதுதண்ணிர்குடிப்பதுதான்செரிமானத்திற்குஉதவியாகஇருக்கும்.
நாம்இயல்பாகவேபசியைஉணர்ந்துசாப்பிடுவதில்லை.அப்படிபசியில்லாதபோதுஉணவைநன்றாகமெல்லாமல்அப்படிவிழுங்கிக்கொண்டுதண்ணிரையும்குடிக்கிறோம்.
இதில்எத்தனைதவறுகள்ஏற்படுகின்றன?
1. பசியற்றநிலையில்உண்ணுவது
2. அளவில்லாமல்உண்ணுவது
3.அரைக்காமல்விழுங்குவது
4.தாகமற்றுஉணவோடுதண்ணிர்குடிப்பது
5.சாப்பிட்டபின்புவயிறுமுட்டமீண்டும்தண்ணிர்குடிப்பது.
இப்படிதொடர்ந்துஉடலைநாம்துன்புறுத்திக்கொண்டிருந்தால்உடல்நம்மைதுன்புறுத்தத்துவங்கும்.நாம்உணரும்வரை!
உணவுசாப்பிடும்முதல்நிலையில்துவங்கும்செரிமானம்நாம்சாப்பிட்டுமுடித்தபின்பும்தொடர்கிறது.
நாம்உணவுண்டபிறகுநன்றாகவாயைக்கொப்பளித்துதுப்புகிறோம்.இதுவும்தேவையற்றஒன்று.உடலின்உள்ளேநடக்கும்ஜீரணம்நிறைவடையும்முன்பு, வாயில்தேவையானஉமிழ்நீர்மீண்டும்சுரக்கிறது.இந்தஉமிழ்நீர்காரத்தன்மை (Alkaline) வாய்ந்ததாகஇருக்கும்.ஏனெனில், நாம்சாப்பிட்டஉணவின்துகள்கள்மீண்டும்சுரக்கும்உமிழ்நீர்அடித்துக்கொண்டுபோய்இரைப்பையில்சேர்க்கிறது.நம்வாயில்உணவுஉண்ணும்போதுவிடப்பட்டதுகள்கள்காரத்தன்மைமிகுந்தஉமிழ்நீரால்செரிக்கப்படுகின்றன.
இந்தநேரத்தில்வாய்கொப்பளிப்பதுதேவையற்றதுதானே?எப்போதுகொப்பளிக்கலாம்?
சாப்பிட்டுமுடிந்துசிலமணிநேரம்கழித்துவாயில்சுவையுணர்வுமறைந்து, பிசுபிசுப்புதோன்றும்போதுகொப்பளிக்கலாம்.இதேபோலநாம்சாப்பிடாமல்இருக்கும்போது, வாயில்எப்போதெல்லாம்பிசுபிசுப்புதோன்றுகிறதோஅப்போதெல்லாம்கொப்பளிக்கலாம்இதுசெரிமானத்திற்குமேலும்துணைபுரியும்.
தாகத்தில்நாம்தெரிந்துகொள்ளவேண்டியதுஇன்னொன்றுஉண்டு.
தாகம்என்பதுஉடலின்தண்ணிர்த்தேவை.இதற்குதண்ணிரைத்தவிரஎதுவும்இணையாகாது.குளிர்பானங்கள், காபி, டீ ...போன்றவைஉணவுவகையைச்சேர்ந்தவை.அவைதிரவவடிவில்இருப்பதால்அவற்றைநாம்தாகம்தணிக்கப்பயன்படுத்துகிறோம்.
தண்ணிர்எந்தசுவையுமற்றது.மற்றகுளிர்பானங்கள்போன்றவைசுவைஏற்றப்பட்டது.இவைகள்உணவாகமட்டுமேஉடலிற்குபயன்படுமேயன்றி, எந்நிலையிலும்தாகத்திற்குபயனளிக்காது.
தாகத்தைதண்ணிர்மட்டும்தான்நிறைவுசெய்யும்.மற்றவைதணிக்கத்தான்செய்யும்நிறைவுசெய்யாது.
அதேபோல, தண்ணிரில்இப்போதுபலவகைஉண்டு.சாதாரணத்தண்ணிர், காய்ச்சப்பட்டதண்ணிர், சுத்திகரிக்கப்பட்டதண்ணிர், மினரல்ஸ்சேர்க்கப்பட்டதண்ணிர்சுவைகூட்டப்பட்டுநிறம்நீக்கப்பட்ட (Bleaching) தண்ணிர்!
இவற்றில்எதுஉடலிற்குஏற்றது?
நாம்தூய்மையானதுஎன்றுநம்பிக்கொண்டிருக்கும்ஒருசத்துட்டப்பட்டதண்ணிரை (Packaged Bleached, Ozonised, Mineral water) ஒருசெடிக்குஊற்றிவாருங்கள்.சாதாரணகுடிநீரைஇன்னொருசெடிக்குஊற்றுங்கள்.
சிலநாட்களிலேயேதெரிந்துவிடும்.நாம்பாதுகாப்பானதுஎன்றுகருதும்எந்தஒருதண்ணிரும்செடியைவளர்க்காது; மாறாககுறுகவும், கருகவும்செய்யும்!
ஏனெனில்செடிக்குத்தெரியும் ‘எதுஉயிருள்ளதண்ணிர்என்று!’
நாம்சாதாரணத்தண்ணிரைஒருபாத்திரத்தில்ஊற்றிவைத்திருந்தால்சிலநாட்களில்அதில்புழு, பூச்சிகள்உண்டாகும்.
அதேநேரம்ஒருபாத்திரத்தில்சுத்திகரிக்கப்பட்டதண்ணிரைஊற்றிவைத்தால்எத்தனைமாதமானாலும்அப்படியேஇருக்கும்.
இதில்இருந்துஎன்னதெரிகிறது?
புழு, பூச்சிகூடவாழத்தகுதியற்றதுநாம்பயன்படுத்தும்சுத்திகரிக்கப்பட்டதண்ணிர்!
சுவைகூட்டப்பட்டதூய்மையாக்கப்பட்டதண்ணிரில்உயிர்ச்சத்துஅழிக்கப்படுகிறது.உயிர்ச்சத்துஇல்லாததண்ணிரைபூச்சி, புழு, செடிபோன்றஉயிர்கள்மறுக்கின்றன.
நாம்மட்டும்பயன்படுத்துகிறோம்.
விஞ்ஞானரீதியாகவேதண்ணிரின்வேதிவாய்ப்பாடுஎன்ன?
H2O.
அப்படியென்றால், ஹைட்ரஜன்இரண்டுபங்கும், ஆக்ஸிஜன்ஒருபங்கும்இணைந்ததுதண்ணிர்.ஆக்ஸிஜனைதமிழில்பிராணசக்தி (உயிர்வளி) என்றுஅழைப்பார்கள்.
பிராணசக்திநிறைந்ததண்ணிரைநாம்காய்ச்சும்போது, ஆக்ஸிஜன்பங்குகுறைகிறது.அதாவது, உயிர்ச்சக்திகுறைகிறது.
வெறுமனேகாய்ச்சும்போதேதண்ணிரின்உயிர்ச்சக்திகுறைகிறது.இன்னும்தண்ணிரைத்துய்மைப்படுத்தவெண்மையாக்கும்வேதிப்பொருள் (Beaching Chemical) அதாவதுசோப்பில்உள்ளரசாயனம்பயன்படுத்தப்படுகிறது.பின்பு, (மினரல்ஸ்) சத்துாட்டப்பட்டு(?) நமக்குஅளிக்கப்படுகிறது. இதில்உயிர்ச்சக்திஎந்தஅளவிற்குஇருக்கும்?
உயிர்ச்சக்தியற்றசெத்ததண்ணிரைத்தான்நாமும்குடித்துநம்குழந்தைகளுக்கும்கொடுக்கிறோம்.
நாம்ஏன்தண்ணிரைக்கொதிக்கவைக்கிறோம்?
1. கிருமிபயம்
2. அசுத்தம்
கிருமிகளால்நோய்பரவுவதில்லைஎன்பதையும், வெளியிலிருந்துதனக்குதீங்குவிளைவிக்கின்றஎதையும்உடல்தனக்குள்அனுமதிக்காதுஎன்பதையும்நாம்முன்பேஅறிந்துள்ளோம்.
கிருமியைக்காரணமாகச்சொல்லிவணிகநிறுவனங்கள்தங்கள்விற்பனையைபெருக்கிக்கொள்கிறார்கள்.
அப்படியயன்றால்அசுத்தமாகஇருக்கும்தண்ணிரைஎன்னசெய்வது?
அரசாங்கம்தன்பங்கிற்குதண்ணிர்தொட்டிகளில்குளோரின் (கிருமிநாசினிபிளீச்சிங்பவுடர்) கொட்டுகிறார்களே?
குளோரின்திறந்தவெளிக்காற்றுப்படும்போதுஆவியாய்ப்போகும்.அல்லதுமண்பாத்திரங்களில்தண்ணிரைஊற்றிவைத்தால்தூசுகளோடு, தேவையற்றகுளோரினையும்ஈர்த்துசுத்தமாக்கும்.
அதோடு, உயிர்ச்சத்தின்அளவையும்கூடுதலாக்கும்தன்மையும்மண்பானைகளுக்குஉண்டு.
அல்லதுதண்ணிரிலுள்ளதூசுகளைஈர்க்கதற்போதுள்ளசாதாரணவடிகட்டி (Filter) களைபயன்படுத்தலாம்.
அனைத்தையும்விட, மண்பானைத்தண்ணிர்ஆரோக்கியத்திற்குஉகந்தது.உடலின்தாகத்தேவையைபூர்த்தியாக்கும்.
தொடரும்...

01/02/2016

Be a good parents....

01/02/2016
உடல் நலம் உங்கள் கையில்! - சிகிச்சையின் எளிமைபகுதி - 02 முகத்தில் தெளியும் அகத்தின் அழகு! உலகில் நாம் அறிந்திருக்க வேண்ட...
04/01/2016

உடல் நலம் உங்கள் கையில்! - சிகிச்சையின் எளிமை

பகுதி - 02 முகத்தில் தெளியும் அகத்தின் அழகு!

உலகில் நாம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படையான விஷயமே உடலைப் பற்றிய அறிவு தான். இதைத் தவிர, நாம் பெற்றுவரும் பொருள் அடிப்படையிலான அனைத்து விஷயங்களும் உடல் அறிவின் முன் வீணானவையே!

மிகப்பெரிய செல்வந்தர்கள், தன் அறிவின் உழைப்பின் உயர்வால் வசதியடைந்த நடுத்தர குடும்பத்தினர், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் இவர்கள் அனைவருடைய பொருளாதாரத்தையும் சீர்குலைப்பதாக இருப்பது நோய் பற்றிய அச்சம் தான்.

உடல் பற்றிய தெளிவு உலகிலுள்ள அனைத்து வகை பொருட்களின் மீதான தெளிவாக மாறுகிறது.

நம் முன்னோர்களின் சிந்தனைத்திறனால், அறியும் ஆற்றலால் கண்டுணரப்பட்ட அறிவியல் ரீதியான உடலியலை நாம் இப்போது படிக்க இருக்கிறோம். நவீன விஞ்ஞான அடிப்படையில் கருவிகளைக் கொண்டு, பிணங்களை அறுத்துப் பார்த்து பெற்ற பட்டறிவல்ல இது உணரும் தன்மையைக் கொண்டு அறியப்பட்ட உடலியல்.

சுமார் 5000 வருடங்களுக்கு முன்பாகவே உடல் பற்றிய சிந்தனைகளில் அக்காலத்திய மக்களில் சிலர் மேலோங்கியிருந்தனர். அப்படியான உடலறிவு கொண்டோர் மக்கள் கூட்டத்திற்கான ஆரோக்கிய வழிகாட்டிகளாக மாறினார்கள்.

நாம் கற்கப் போகிற உடலின் இயக்கங்கள் அனைத்தும் ரகசியங்களாக பாதுகாக்கப்பட்டவை. அவற்றின் மதிப்பு கருதி அதனை மலிவுபடுத்தி விடக்கூடாது என்ற எண்ண மிகுதியால் காப்பாற்றுவதாக நினைத்து படிப்படியாக மறைத்து விட்டார்கள். மக்களிடம் சென்று சேராத எதுவும் நிலைப்பதில்லை என்ற வரலாற்று உண்மையின்படி, மறைத்து வைக்கப்பட்ட அனைத்தும் அழிந்து போயின.

பயன்பாட்டு முறைகள் அழிந்து போனாலும் கூட அடிப்படையான தத்துவங்கள் இன்றும் இருக்கின்றன. தத்துவத்தின் வழியான சிந்தனைகள் மூலம் பயன்பாட்டு வழிமுறைகளை திரும்பப் பெற முடியும்.

அவ்வாறு, மீட்டெடுக்கப்பட்ட மறுஉருவாக்கம் செய்யப்பட்ட அக்குபங்சர் உடலியலையும் அதன் எளிமையான சிகிச்சை முறைகளையும் நாம் அறிந்து கொள்வோம்.

உடல் பற்றிய நம் பாடத்திற்கு வருவோம்.

நாம் ஒருவரைப் பார்த்த உடனே நம் கவனத்தில் விழுவது அவருடைய புறத்தோற்றம் குறிப்பாக முகம் முகத்தின் மூலம் அகத்தை அறியும் வழியை நாம் தொடர்வோம்.

மனித உடல் இயற்கையின் ஒழுங்கமைவோடும், சிந்தனையில் தெளிவு பெறுமாறும் அமைந்துள்ளது.

முகத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் உடலின் உள்ளுறுப்புக்களில் ஒன்றை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

நம்முடைய மூக்கு அமைந்திருக்கும் விதம் உள்ளுறுப்புக்களில் நுரையீரலை ஒத்திருக்கிறது. ஒரு மையத் தடத்தில் இணைந்துள்ள இரட்டை அறைகள் மூக்கிலும், நுரையீரலிலும் ஒரே மாதிரியாக உள்ளன. இன்னும், நுரையீரலும் மூக்கும் சுவாசம் தொடர்பான நேரடியாக இணைக்கப்பட்ட உறுப்புக்களாகவும் இருக்கின்றன.

நுரையீரலின் வெளிப்புற உறுப்பு மூக்கு.

நமது உடலின் மார்புக் கூட்டிற்குள் சுருங்கி விரியும் அமைப்போடு உள்ள நுரையீரலின் சக்தி ஓட்டத்தின் மாறுபாடுகளை மூக்கின் மூலம் உணரலாம்.

மூக்கில் ஏற்படும் எல்லாவிதமான மாறுதல்களும் நுரையீரல் சக்தி மாறுபாட்டை பிரதிபலிப்பதாகும்.

இங்கே 'சக்தி மாறுபாடு' என்றால் என்னவென்பதை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.

நம் உடலில் இரத்த ஓட்டம் நடைபெறுவதை நாம் அறிவோம். இரத்தம் ஒட்டத்தின் மூலமாக உடலின் ஒவ்வொரு அணுவும் தனக்குத் தேவையான உணவைப் பெறுகின்றது. நாம் உண்ணும் உணவிலிருந்து செரிமானத்தின் மூலமாக சத்துக்கள் உருவாகின்றன. இவைகள் தான் உடலின் ஒவ்வொரு பகுதியிலுள்ள அணுவிற்கும் இரத்த ஓட்டத்தின் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இரத்த ஓட்டம் என்பது இரத்த நாளங்களின் வழியே தன் ஒட்டத்தைத் துவக்கி, சிறிய நுண்ணிய இரத்தக் குழாய்களின் மூலம் உடலின் அனைத்துப்பகுதிகளுக்கும் செல்கிறது. இரத்த நாளங்கள் நுண்குழல்கள் ...போன்றவற்றை நாம் காண முடியும். இவற்றை நடைமுறையில் நாம் நரம்புகள் என்றும், இரத்தக் குழாய்கள் என்றும் கூறிவருகிறோம்.

நரம்புகள் என்பது உண்மையில் இரத்தக் குழாய்களைக் குறிக்கும் சொல் அல்ல.

இதைப் போன்ற, ஒரு மறைவான அமைப்பே சக்தி ஓட்டம் என்பதாகும். இந்த சக்தி ஓட்டத்திற்கான ஓடுபாதைகள் நம் தோலின் மேற்புறத்தில் அமைந்துள்ளன. நம் உடலின் உள்ளுறுப்புக்களுக்குத் தேவையான சக்தியை தோலின் மூலம் கிரகித்து, ஒடுபாதைகளின் மூலம் பெறுகிறது உடல்.

மூக்கின் மூலம் நடைபெறும் காற்று சுவாசத்தைப் போலவே, தோலின் மூலமும் சக்தி சுவாசம் நடைபெறுகிறது. தோலின் மேல் அமைந்துள்ள சக்தி நாளங்கள் (Meridians) ஒவ்வொரு உள்ளுறுப்போடும் தொடர்பு கொண்டிருக்கின்றன.

பொருள் அடிப்படையிலான தேவைகளை இரத்த ஓட்டமும், சக்தி அடிப்படையிலான தேவைகளை சக்தி ஒட்டமும் நிறைவு செய்கின்றன. இந்த சக்தி ஓட்டத்தில் அதன் கிரகிப்பில் ஏற்படும் கோளாறுகள் அக்குறிப்பிட்ட உள்ளுறுப்பின் இயக்கத்தில் மாறுபாட்டை ஏற்படுத்துக்கின்றன. இந்த சக்தி மாறுபாடே படிப்படியாக உள்ளுறுப்பின் நேரடி பாதிப்பாக மாறுகிறது.

ஒரு உள்ளுறுப்பின் இயக்கக்குறைவு என்பது அதன் சக்தி ஒட்டத்தைப் பொறுத்து ஏற்படுகிறது. இங்கே, நாம் 'சக்தி மாறுபாடு', 'சக்தி குறைவு' என்று குறிப்பிடுவது நேரடியான உள்ளுறுப்பின் பாதிப்பு இல்லை. நேரடி பாதிப்பின் முதல் நிலையையே நாம் இங்கே பேசி வருகிறோம்.

உள்ளுறுப்பின் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட, அதன் அடிப்படைச் சக்தி ஓட்டத்தை சீர்படுத்துவதன் மூலம் படிப்படியாக அவ்வுறுப்பு இயல்புக்குத் திரும்புகிறது.

சக்தி நாளங்கள், அதைச் சீர்படுத்துவது ...போன்ற விஷயங்களை பிறகு பார்க்கலாம். இப்போது முகத்திற்குத் திரும்புவோம்.

நுரையீரலின் வெளியுறுப்பு மூக்கு!

நுரையீரலில் ஏற்படும் சக்தி மாறுபாட்டை பிரதிபலிக்கும் பகுதியாக மூக்கு அமைந்துள்ளது.

அடுத்து ... காது.

நம்முடைய காதுகள் உள்ளுறுப்புக்களில் எதை நினைவுப்படுத்துகிறது? தனித்தனியான இரட்டை உறுப்புக்களின் வாயிலாக ஒரே செயலைச் செய்யும் சிறுநீரகங்களை (Kidneys) நம் காதுகள் பிரதிபலிக்கின்றன. சிறுநீரகங்களின் வடிவமும், காதுகளின் வடிவமும் ஒரே மாதிரியானவை.

சிறுநீரகத்தின் சக்தி மாறுதல்களை அதன் வெளியுறுப்பான காதுகள் மூலமாக அறியலாம்.

சிறுநீரகம் என்பது ஒரே உறுப்பு தான். அது இரண்டு பகுதியாக அமைந்திருக்கிறதே தவிர, இரண்டு உறுப்புக்கள் இல்லை.

அக்குபங்சர் மருத்துவம் சிறுநீரகத்தில் தான் மனித உயிர்ச்சக்தி அமைந்திருப்பதாகக் கூறுகிறது. தன் ஆயுளில் பெரும்பகுதியைக் கடந்த மனிதருக்கு சிறுநீரகத்தில் இருக்கும் உயிரின் தன்மையைக் குறிக்கும் விதமாக காதுகளின் கேட்கும் திறன் குறைகிறது. இவ்வாறு, சிறுநீரகத்தின் புற உறுப்பாக காதுகள் கருதப்படுகின்றன.

நம்முடைய கண்களின் வடிவம் உள்ளுறுப்புக்களில் கல்லீரலை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

மஞ்சட்காமாலை பாதிப்பினால் கல்லீரல் சீர்கெடும் போது அது கண்களிலும் பிரதிபலிக்கிறது. அதே போல, மது அருந்தும் மனிதனுடைய கல்லீரல் நிலையை கண்கள் அறிவிக்கின்றன.

கல்லீரலின் வெளிப்புற உறுப்பு கண்கள்.

அடுத்தது ...நாக்கு!

நாக்கினுடைய கூம்பு வடிவம் உள்ளுறுப்புக்களில் இதயத்தை ஒத்திருக்கிறது.

இதயத்தின் சக்தி மாறுபாட்டை பிரதிபலிக்கிற வெளிப்புற உறுப்பாக நாக்கு அமைந்துள்ளது.

அக்குபங்சர் தத்துவத்தின் படி, மனதை இயக்கக்கூடிய இடமாக இதயம் கருதப்படுகிறது. மனநிலைக் குழப்பம் ஏற்பட்டுள்ளவரின் நாக்குகள் வார்த்தை உச்சரிப்பில் குழறும்; நடுங்கும்.

அதே போல, நாம் மகிழ்ச்சியானாலும், துக்கம் ஆனாலும் இதயம் அமைந்துள்ள மார்புப் பகுதியைத் தான் பிடித்துக் கொள்கிறோம். மனசு இலேசாவதை இதயம் இலேசாவதாகத் தான் உணர்கிறோம்.

மனது என்பது இதயத்தோடு தொடர்புடையதாகும். இதயத்தின் வெளிப்புற உறுப்பாக நாக்கு அமைந்துள்ளது.

இறுதியாக ...உதடுகள்.

நம் உதடுகளின் வடிவத்தை உள்ளுறுப்பில் மண்ணிரலோடு ஒப்பிடலாம். மண்ணிரலின் சக்தி மாறுபாட்டை அதன் இயக்கக்குறைவை உதடுகள் மூலமாக நாம் அறியலாம்.

உதடுகள் வறண்டிருக்கின்றன என்றால் மண்ணிரலின் குளிர்ச்சி குறைந்துள்ளது என்பதை அறியலாம். இன்னும், செரிமான இயக்கத்தின் முழுமுதல் உறுப்பாக மண்ணிரல் அறியப்படுவதால் உதடுகளின் வறட்சி செரிமானக் குறைவை தெரிவிப்பதாகவும் உள்ளது.

இங்கு நாம் உள்ளுறுப்புக்கள் ஐந்தையும், அதன் வெளிப்புற உறுப்புக்களையும் மட்டுமே அறியத் துவங்கியுள்ளோம். ஒவ்வொரு உள்ளுறுப்பும் என்னவிதமான வேலையைச் செய்கின்றன என்பதையெல்லாம் அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.

நாம் அறிந்துள்ள உள்ளுறுப்புக்களையும், அவற்றை பிரதிபலிப்பதாக அமைந்துள்ள வெளிப்புற உறுப்புக்களையும் ஒன்றாய் பார்க்கலாம்.

உள்ளுறுப்பு - புற உறுப்பு
நுரையீரல் - மூக்கு
சிறுநீரகம் - காதுகள்
கல்லீரல் - கண்கள்
இதயம் - நாக்கு
மண்ணிரல் - உதடுகள்

நாம் படிக்கிற ஒவ்வொரு உள்ளுறுப்பையும் அதன் வெளிப்புற உறுப்போடு இணைத்து காட்சிப்படுத்தி நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

உடலின் நிலையை அதன் நோயை அறியும் முறைகளில் புற உறுப்புக்களின் பங்கு முக்கியமானது.

நோயறிதலின் ஒரு நிலையை நாம் கடந்திருக்கிறோம்.

அடுத்து ... துணை உறுப்புக்களை அறியலாம்!

தொடரும்...

அன்புடன்,
அக்கு ஹீலர் அ. உமர் பாருக்

SPEECH OF  ACU HEALER BOSE MOHAMMED MEERA'S UDALEMARUTHUVAR, PART - 1 https://youtu.be/TKC1E2uw76k
02/01/2016

SPEECH OF ACU HEALER BOSE MOHAMMED MEERA'S UDALEMARUTHUVAR, PART - 1
https://youtu.be/TKC1E2uw76k

ACU HEALER BOSE MOHAMMED MEERA'S UDALEMARUTHUVAR, PART 1, CHIDAMBARAM

உடலின்மொழி - பகுதி 16அமிர்தமேநஞ்சு!உருளைக்கிழங்குசாப்பிட்டால்வாயுத்தொந்தரவு.தக்காளிசாப்பிட்டால்சிறுநீரகக்கல்உருவாகும்.மண...
30/12/2015

உடலின்மொழி - பகுதி 16

அமிர்தமேநஞ்சு!

உருளைக்கிழங்குசாப்பிட்டால்வாயுத்தொந்தரவு.
தக்காளிசாப்பிட்டால்சிறுநீரகக்கல்உருவாகும்.
மண்ணுக்குகீழேவிளைபவைகளைசாப்பிட்டால்சர்க்கரைகூடும்... இப்படிபட்டியல்போடுவதற்குநம்மிடம்நிறையஉணவுவகைகளும், நோய்ப்பெயர்களும்உண்டு.
இவையெல்லாம்உண்மைதானா?
‘இந்தஉணவுகளைச்சாப்பிட்டால்இந்தநோய்உருவாகும்’ என்றுகூறுவதுசரியானதாகஇருந்தால்உலகில்உருளைக்கிழங்குசாப்பிட்டவர்களுக்குஎல்லாம்வாயுத்தொந்தரவுவந்திருக்கவேண்டுமே?
அப்படிவருவதில்லை. நூற்றில்ஒன்றிரண்டுபேருக்குத்தான்இப்படிநேருகிறது.
நோய்உணவிலிருந்தால்சாப்பிட்டஅனைவருக்கும்ஏற்பட்டிருக்கும்.
விஷப்பொருளையார்சாப்பிட்டாலும்இறப்புதான். அதேபோலநோய்க்குகாரணமென்றுகூறப்படும்பொருளையார்சாப்பிட்டாலும்நோய்ஏற்படவேண்டும்அல்லவா?
எந்தஒருஉணவுப்பொருளிலும்தொந்தரவைஏற்படுத்தும்தன்மைஇல்லை. உணவுதான்உடலின்தேவை.
அப்படியானால்தொந்தரவுஏன்ஏற்படுகிறது? யாருக்குஉள்ளுறுப்புக்கள்பலவீனமடைந்துஉள்ளதோ, அவருக்குஉணவுப்பொருளைச்சாப்பிடும்போதுஅதனைச்சீரணிக்காமல்வெளியேற்றமுயல்கிறதுஉடல். ஒருவருக்குவயிற்றில் (Stomach) கழிவுகள்தேங்கி, இயக்கக்குறைபாடுஏற்பட்டுள்ளது. அவர்பசிஏற்படாதநிலையில்கிழங்குவகைஉணவைசாப்பிடுகிறார். இப்போதுஉடல்என்னசெய்யும்? அதைஉடனேவெளியேற்றிவிட்டு, இயக்கக்குறைபாட்டைசீராக்கவேமுயலும்.
கிழங்கைஅரைத்துகழிவாகவெளியேற்றிக்கொண்டிருக்கும்அதேவேளையில், காற்றுக்கழிவாகவும்மாற்றப்பட்டுவெளியேற்றமுயல்கிறதுஉடல், ஏனெனில், இவ்வுணவைவெளியேற்றியபின்புதான்சீராக்கும்வேலையைத்தொடரமுடியும். எனவேஅவ்வுணவைஎவ்வளவுசீக்கிரம்வெளியேற்றமுடியுமோஅவ்வளவுவிரைவாகஉடல்வெளியேற்றும்.
இங்கேபசியற்றுநீங்கள்சாப்பிட்டதால்வாயுஉருவானதா? அல்லதுகிழங்கைச்சாப்பிட்டதால்உருவானதா?
வாயுஉருவானதற்குகிழங்குகாரணமா? அல்லதுசெரிமானஉறுப்பின்இயக்கக்குறைவுகாரணமா?
நாம்எப்போதும்புறக்காரணங்களைநம்புபவர்களாகஇருக்கிறோம்.
ஒருவர்கல்லில்இடித்துகாயமடைகிறார். அவரைஎப்படிஏற்பட்டது? என்றுகேட்டால் "கல்இடித்துவிட்டது" என்றுகூறுவார்.
நாம்கல்லைஇடித்தோமா? கல்நம்மைஇடித்ததா?
நாம்நமக்குள்இருக்கும்காரணத்தைவிட, புறக்காரணங்களையேவெளிப்படுத்துகிறோம்.
எந்தஒருஉணவுப்பொருளும்நோய்ஏற்படக்காரணமாகஅமையாது.
அப்படியானால்நோய்ஏற்படஎன்னகாரணம்?
உணவுமுறைதான்!
உணவுமுறைஎன்பதுஉணவுகள்அல்ல. எந்தவகைஉணவானாலும்அதைஎப்போதுஉண்கிறோம்என்பதுதான்உணவுமுறை.
# எப்போதுஉண்ணலாம்?
"பசித்துப்புசி” என்கிறதுபழமொழி.
பசிக்கும்போதுஉண்ணலாம்.
# எப்படிஉண்ணவேண்டும்?
“நொறுங்கத்தின்றால்நூறுவயது" என்கிறதுபழமொழி.
நொறுங்கத்தின்பதுசெரிமானத்தைஎளிதாக்கும். சிறியசிறியகவளங்களாகஉணவைவாயிலிடும்போதேநன்றாகமென்றுஅரைத்துக்கூழாக்கிவிழுங்கவேண்டும். ஏனென்றால்இரைப்பையில்உணவைகூழாக்கவோ, நொறுக்கவோமுடியாது. இரைப்பைக்குபற்கள்கிடையாதுதானே?
உணவின்ருசிமாறும்அளவிற்குமென்றுவிழுங்கினால்அடுத்தடுத்தசெரிமானஇயக்கங்கள்மிகவேகமாக, எளிதாகநடைபெறவழிவகுக்கும். மெல்லுதல்என்பதுமிகச்சாதாரணமானவிஷயம்அல்ல;
வாயில்நீங்கள்மென்றுசுவைக்கும்அந்தஉணவின்தன்மைஇரைப்பைக்குஅறிவிக்கப்படுகிறது. மிகஎளிதானமென்மையானஉணவைநீங்கள்மென்றுகொண்டிருக்கும்போதே, இரைப்பையில்அந்தஎளிதானஉணவைச்செரிக்கத்தேவையானஅமிலம்தயாராகிறது.
நீங்கள்கடினமானஒருஉணவைமென்றுகொண்டிருக்கும்போது, கடினஉணவைச்செரிக்கும்தன்மையுடன்இரைப்பைதயாராகிறது.
நீங்கள்உண்ணும்உணவின்தன்மையைஇரைப்பைஅறிந்துகொள்ளவேண்டுமானால், வாயில்மெல்லவேண்டும். அப்போதுதான், உணவின்தன்மைக்கேற்றசெரிமானம்தயாராகிறது. ஒருதேங்காயைச்செரிக்கும்தன்மைகொண்டஅமிலம், ஒருஆரஞ்சுப்பழத்தைசெரிக்கத்தேவையில்லை. அமிலத்தின்சிதைக்கும்தன்மைஅதிகமாகஇருக்கும்போதுஇரைப்பைபாதிப்படையும்.
அதேபோல, ஒருஆரஞ்சுப்பழத்தைசீரணிக்கநீர்த்தஅமிலமே (Diluted Acid) போதுமானது. ஆக, உணவின்தன்மையைஇரைப்பைஅறிந்தால்மட்டுமேசீரானஜீரணம்சாத்தியம். அதற்குநொறுங்கத்தின்பதுமட்டும்தான்வழி.
# எதையெல்லாம்உண்ணலாம்?
உணவில்பாகுபாடுகிடையாது. எதைநீங்கள்விரும்புகிறீர்களோஅதைஉண்ணலாம்.
சைவம், அசைவம்என்றபிரிவினைகள்உடலிற்குகிடையாது. பசிக்கும்போதுநீங்கள்உண்ணும்உணவுஎதுவாகஇருந்தாலும்அதனைசெரித்துஆற்றலைபிரித்தெடுப்பதுதான்உடலின்வேலை.
உணவுப்பொருட்கள்எதையுமேஉடல்நிராகரிப்பதில்லை.
எப்போதுஉண்பது, எப்படிஉண்பது, எதைஉண்பதுஎன்பவற்றைவிடமுக்கியமானகேள்விஒன்றுஉண்டு. அதுதான்எவ்வளவுஉண்பது? என்பதாகும்.
# பசிக்கும்போது
# நன்றாகவாயிலேயேஅரைத்து
# உங்களுக்குப்பிடித்தஉணவைஉண்ணவேண்டும்.
எவ்வளவுஉண்ணவேண்டும்? உணவைநாம்எதற்காகஉண்கிறோம்?
உடலின்பசிக்காக!
அந்தப்பசியின்அளவுதான்நீங்கள்உண்ணும்உணவின்அளவையும்தீர்மானிக்கும்.
பழமொழிஇதைப்பற்றிஏதாவதுசொல்கிறதா?
"பசியோடுஅமர்ந்துபசியோடுஎழுங்கள்"
நாம்உண்ணும்உணவுபசியைமுழுதாகப்போக்ககூடாது. வயிறுமுட்ட, கனமானஉணர்வுவரும்வரைஉண்ணக்கூடாது.
வயிறுகனமாகும்முன்பே, பசிமிதமாகமாறும். ‘போதும்’ என்றஉணர்வும்மேலோங்கும். நாம்சாப்பிட்டுக்கொண்டிருக்கும்உணவின்சுவைமெதுவாககுறையத்தொடங்கும். இதுவேபசியாறுதலாகும். இதுநாம்சாப்பிடுவதைநிறுத்தவேண்டியநேரம். நாம்உண்டஉணவுஉடலின்சக்திகுறைவைநீக்கிபுத்துணர்ச்சிபெறபோதுமானதாகும். இந்தஅளவைநாம்மீறும்போதுவயிறுகனமாகி, புத்துணர்ச்சிக்குப்பதிலாகசோர்வும், தூக்கமும்ஏற்படும்.
அளவைமீறியஇவ்வுணவுஉடலிற்குதேவையற்றதும், கஷ்டம்தருவதுமாகும்.
உணவைசாப்பிடுவதுபசியிருக்கும்போது, அளவாகஇருக்கவேண்டும். இந்தஉணவுமுறைமுறைப்படுத்தப்பட்டால்கழிவுகள்புதிதாகதேங்காது; ஏற்கனவேதேக்கமடைந்தகழிவுகளைஉடல்வெளியேற்றத்துணையாகவும்இருக்கும்.
அளவுக்குமீறினால்அமிர்தமும்நஞ்சு!

உடல் நலம் உங்கள் கையில்! - சிகிச்சையின் எளிமைபகுதி – 01   நமக்கு நாமே... நன்றி - அக்கு ஹீலர் அ. உமர் பாருக்இன்றைய மருத்த...
24/12/2015

உடல் நலம் உங்கள் கையில்! - சிகிச்சையின் எளிமை
பகுதி – 01 நமக்கு நாமே...

நன்றி - அக்கு ஹீலர் அ. உமர் பாருக்

இன்றைய மருத்துவ உலகத்தின் போக்கு நம்மை அச்சுறுத்துவதாக உள்ளது.

விவசாயத்தில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், உணவில் 'ஹைபிரிட்' பழங்கள், உயிர்ச்சக்தியற்ற உணவுகள், கால்நடைகளில் கறிக்காக வளர்க்கப்படும் தன்மை மாற்றம் செய்யப்பட்ட ஆடுகள், பிற உயிரினங்களில் முட்டையிடாத கோழிகள், குஞ்சு பொறிக்காத முட்டைகள் ...எனத் தொடர்கிற வியாபாரத்திற்கான நவீன கண்டுபிடிப்புகள் மருத்துவத்தையும் விட்டுவைக்கவில்லை.

மக்கள் சேவையாக அறியப்பட்ட மருத்துவம் படிப்படியாக முழுநேர வியாபாரமாக லாப நோக்கத்திற்காக எதையும் செய்யும் தொழிலாக மாறிவருகிறது. உணவு, இருப்பிடம், காற்று, நீர் ...என்ற அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மருத்துவத்தையும் சேர்க்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவம் என்பது ஒரு தனித்துறையாக நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்தப்பட்ட ஒன்றாக நாம் பார்க்க வேண்டியதில்லை. நம் உடலைப் பற்றிய தெளிவு நமக்கு ஏற்படும் போது நம்முடைய மருத்துவத் தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

உடலைப் பற்றிய அடிப்படையான அறிவைப் பெற பட்டப்படிப்போ, மருத்துவக் கல்வியோ அவசியமில்லை. எதையும் சிந்தித்து, உணர்ந்து, விளங்கிக் கொள்ளும் தன்மை இருந்தால் மட்டும் போதுமானது.

உடலை நாம் தனித்தனியான உதிரிபாகங்களின் இணைப்பாகப் பார்க்கும் போது உடல் சிக்கலானதாக, புரிந்து கொள்ளக் கடினமானதாக மாறுகிறது. ஆனால், உண்மையில் உடலின் இயக்கம் மிகவும் எளிமையானது. ஒத்திசைவான, ஒழுங்கமைவுடன் அமைந்துள்ள உடலை அதன் அறிவிப்புக்களின் வாயிலாகவே உணரமுடியும்.

உடல் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளும் தன்மையோடு அமைந்துள்ளது. அதன் இயல்பை அறிந்து உடலோடு இயற்கையின் தொடர்பை நாம் உணர்ந்து கொள்கிற போது அதன் ரகசியங்கள் வெளிப்படுகின்றன.

அக்குபங்சர் என்ற மகத்தான ஞானத்தால் உடலைப் பற்றிய தெளிவை நாம் பெற இருக்கிறோம்.

# உங்கள் உடல்நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் பயமுறுத்துகின்றனவா? அந்த மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன, அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்ற தெளிவு உங்களுக்கு ஏற்படுமானால் பயம் என்ற உணர்ச்சி மறைந்து விடுமல்லவா?

# உடலில் வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், தலைவலி, சளி, வலி ...இவைகள் ஏன் ஏற்படுகின்றன என்பதை நாம் அறிந்திருந்தோம் என்றால் அவை ஏற்படுவதற்கு முன்பே நாம் தவிர்த்துக் கொள்ளலாம்; ஏற்பட்ட பின்பும் எளிமையான வழிமுறைகள் மூலம் விடுபடவும் செய்யலாம்.

# உலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களைக் கூட, உடலின் இயல்பை அறிவதன் மூலம் அறவே விரட்டலாம்; நம்மையும் நம் குடும்பத்தையும் உடல் நலக் கேட்டிலிருந்து விடுவிக்கலாம்.

# கடுமையான தொந்தரவுகள் உடலில் ஏற்பட்டு இருக்கும்போது, அது எந்த உறுப்பால் ஏற்பட்டது என்பதையும், உடல் அதை எதிர்த்து என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிந்து கொண்டால் நோய்க்கான சிகிச்சை எளிமையானதாக மாறுகிறது.

சிகிச்சையும் அதைப் பற்றிய தெளிவும் இருந்தால் நோய்களைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை; அதனால் ஏற்படும் பொருளாதாரச் சீரழிவும் நமக்கில்லை.

உடலைத் துன்பத்திற்குள்ளாக்கும் நோய்களுக்கு எதிராய் நாம் என்ன செய்யப் போகிறோம் தெரியுமா?

உங்களுடைய ஒரே ஒரு விரலைக் கொண்டு தோலின் மேற்புறத்தில் தொட்டால் மட்டும் போதும்!

எங்கு தொட வேண்டும்?

தொடுவதால் உடலில் என்ன விதமான மாற்றங்கள் நிகழ்கின்றன?
..போன்ற கேள்விகளுக்கான பதில்களை பின்வரும் பக்கங்களில் பெறுவீர்கள்.

உங்கள் வரவு நலம் தரும் வரவாகுக!

தொடரும்...

அன்புடன்,
அக்கு ஹீலர் அ. உமர் பாருக்

உடலின்மொழி - பகுதி 15சான்றோர்களும்சான்றுகளும்! - AIDSஉலகம்முழுவதும்கடவுள்பயத்தைவிடகிருமிபயம்தானேஅதிகமாகஇருக்கிறது?இன்றுஉ...
22/12/2015

உடலின்மொழி - பகுதி 15

சான்றோர்களும்சான்றுகளும்! - AIDS

உலகம்முழுவதும்கடவுள்பயத்தைவிடகிருமிபயம்தானேஅதிகமாகஇருக்கிறது?
இன்றுஉலகமக்களைஅச்சுறுத்திக்கொண்டிருக்கும்நோய்கள்அனைத்தும்கிருமியைக்கொண்டுகட்டமைக்கப்படுகிறது.
உதாரணமாகஎய்ட்ஸ் (AIDS).
இந்நோய்ஏற்படக்காரணம்என்றுகூறப்படும்கிருமி H.I.V. (Human Immunodeficency Virus) எய்ட்ஸைப்பற்றிஉலகத்தைபயமுறுத்தத்துவங்கியஅரசாங்கங்களைப்பார்த்து 1990 களில்கருத்துதெரிவித்தார்ஒருஅறிஞர்.
யார்அவர்?
சுவிஸ்செஞ்சிலுவைச்சங்கரத்தவங்கியின்இயக்குநரும், பெர்ன்பல்கலைக்கழகத்தின்நோய்எதிர்ப்பாற்றல்துறையின்சிறப்புபேராசிரியருமானடாக்டர்ஆல்ப்ரெட்ஹாஸ்ஸிக்.
என்னகூறுகிறார்?
"எய்ட்ஸ்உயிர்க்கொல்லிநோய்என்றுபிரச்சாரம்செய்வதைஒழிக்கவேண்டும்"
சண்டேடைம்ஸ், லண்டன் (3.4.1994).
உலகத்தின்சிறந்தமருத்துவஅறிவியலாளர்கள்சிலரின்கருத்துக்களையும்நாம்தெரிந்துகொள்வோம்.
கலிபோர்னியாபல்கலைக்கழகத்தின்மரபணுக்கள்துறைபேராசிரியர்டாக்டர். ஹாரிரூபின்கூறுகிறார்.
"எய்ட்ஸுக்குகாரணம் HIV கிருமிதான்என்பதைநிரூபிக்கமுடியவில்லை" சண்டேடைம்ஸ், லண்டன் (3.4.1994).
இன்னும், மரபணுஉயிரியல்துறையைச்சார்ந்தபேராசிரியர். ஹார்விபியாலிகூறுகிறார்.
"HIV என்பவைமிகச்சாதாரணகிருமிகள். விஞ்ஞானிகள்கூறும்அசாதாரணமானவிளைவுகள் HIV கிருமிகளால்ஏற்படுவதுசாத்தியமேஇல்லை"
ஸ்பின், ஜூன் 1992.
1980 ஆம்வருடமருத்துவரசாயனத்துறைஆராய்ச்சிக்காகநோபல்பரிசுபெற்றவரும், மரபணுத்துறைபேராசிரியருமானடாக்டர். வால்டர்கில்பர்ட்கூறுவதையும்கேட்போம்.
"எய்ட்ஸ்நோய்க்கு HIV வைரஸ்காரணமல்ல; மற்றஏதேனும்காரணங்களால்எய்ட்ஸ்வந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை”
ஆம்னி, ஜூன் 1993.
பல்வேறுமருத்துவஅறிஞர்களின்கருத்துக்கள்எய்ட்ஸைப்பற்றியஉண்மைகளைப்புரியவைக்கிறது. இவற்றைவிட, HIV என்றகிருமியைமுதன்முதலில்கண்டுபிடித்தபாரிஸ்பாஸ்டர்கல்லூரியின்கிருமியியல்துறைபேராசிரியர்டாக்டர். லுக்மோன்டேக்னியர் (Dr. Luc Montagnier) கூறுவதைக்கேட்டால்இந்தவிஷயம்நிறைவடையும்.
"HIV எய்ட்ஸுக்குகாரணமல்ல; இதைப்பற்றியஆராய்ச்சியாளர்களின்கட்டுரைகளில்எக்கச்சக்கமனகுளறுபடிகளும், பித்தலாட்டங்களும்உள்ளன”
மியாமியஹரால்டு, (28.12.1990).
எந்தவிஷயம்வணிகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும்லாபத்தைத்தருமோ, அந்தக்கருத்துக்கள்மட்டுமேமக்களுக்குப்பரப்பப்படுகிறது. ஆனால், உண்மைஎன்பதுஎப்போதும்இருந்துகொண்டிருக்கும்.
தேடலும், சிந்தனையும்உடையவர்கள்உண்மையைக்கண்டுணர்வார்கள்.
உடலில்தோன்றும்எந்தவிதநோயாகஇருந்தாலும்கழிவுகளின்தேக்கமேகாரணமாகஉள்ளது.
உடலில்கழிவுகள்உருவாகஅடிப்படைக்காரணம்நம்முடையஇயற்கைவிதிமீறல்மட்டும்தான்! கிருமிகளைப்போலவேகூறப்படும்புறக்காரணங்கள்அனைத்தும்பொய்யானவை.
நாம்இப்படிபுறக்காரணங்களின்பின்னால்ஆராய்ச்சிசெய்துகொண்டுசென்றால்எக்காலத்திலும்நோய்கள்தீராது.
ஒருபொருளைவீட்டிற்குள்மறந்துவைத்துவிடுகிறோம். வெளியேதேடத்துவங்குகிறோம்.
இத்தேடல்எப்போதுமுடியும்?
வெளியெல்லாம்தேடிவிட்டுவீடுதிரும்பும்போது!
அப்படித்தான்நம்புறக்காரணங்களும். உடலிற்குவெளியேநாம்தேடும்காரணங்களில்உண்மைஇல்லை. எனவே, வீடுதிரும்புகிறோம்.
நம்உடல்விதிமீறலைநாம்உணர்ந்துகொண்டாலே, கழிவுகள்தேக்கத்திலிருந்துஉடலைக்காக்கமுடியும்!
தொடரும்...

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன ? ஓர் உருக்கமான பதிவு !!இரத்தக் கறையோடு எழுதுகிறேன்...- அக்கு ஹீலர் அ.உமர் பாரூக...
17/12/2015

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன ?
ஓர் உருக்கமான பதிவு !!

இரத்தக் கறையோடு எழுதுகிறேன்...

- அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்

நீண்ட காலமாக குழந்தையில்லாத ஒரு தம்பதி, என் நண்பர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வந்தார்கள்.அவர்களுக்கு பலவிதமான பரிசோதனைகள் செய்யபட்டு, பரிசோதனை முடிவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. (இப்போது நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில்லை; பரிசோதனை முடிவுகளுக்குத்தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்). சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்ணிற்கு உடலில் சில மாறுதல்கள் தெரிந்தன. கர்ப்பபை தொடர்பான சில தொந்தரவுகள் ஏற்பட்டன. ஸ்கேன் எடுக்குமாறு பரிந்துரைத்தார் மருத்துவர்.

கர்ப்பப்பையில் ஒரு கட்டி வேகமாக வளருவதாகவும், அதன் வேகம் புற்றுநோய் செல்களுக்கு இணையாக இருப்பதாகவும் ஸ்கேன் அறிக்கையின் வழியாக மருத்துவர் முடிவு செய்தார். அந்த கட்டியின் வேகமான வளர்ச்சி, அடுத்த கட்ட பரிசோதனைகளுக்கு செல்வதற்குக் கூட நேரம் தரவில்லை என்றும், பெண்ணை காப்பாற்றுவதற்காக கர்பப்பையை நீக்கி விடலாம் என்று பரிந்துரைத்தார் மருத்துவர். கர்ப்பை நீக்கப்பட்ட பிறகு தனக்கு குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற அதிர்ச்சியை தன் மனைவிக்காக ஏற்றுக் கொண்ட கணவர் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். அறுவை சிகிச்சை உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என் நண்பரும்,நானும் ஸ்கேன் அறிக்கைகளையும், விசித்திரமான நோயாளிகள் பற்றியும் விவாத்திக் கொள்வோம்.

கர்ப்பபை அகற்றும் அறுவை சிகிச்சை அந்த பெண்ணிற்கு முடிந்தது. அவர் உயிர் பிழைத்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் அறுத்தெறியப்பட்ட உள்ளுறுப்புகளைப் பார்ப்பதற்காக வழக்கம் போல நாங்கள் அறைக்குள் செல்கிறோம். அறுத்து குப்பையில் வீசப்பட்ட கர்ப்பையின் ஒரு பகுதியில் ஒட்டி கொண்டிருந்தது கட்டி அல்ல; அறுபது நாட்கள் வளர்ந்த கரு. அந்த சிசுவின் விரல்கள் அரிசி ஓவியம் போல நேர்த்தியாக இருந்தது. அறுவை சிகிச்சை உதவியாளர்கள் மருத்துவரிடம் தகவல் சொன்னார்கள். ஒரு நிமிடம். ஒரே ஒரு நிமிடம் அதிர்ந்தார். அவருக்குள் இருந்த மனித தன்மை வெளிப்பட்டது. அடுத்த நிமிடம் தொழில் முறை மருத்துவரானார். அதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மருத்துவமனை பணியாளர்கள் அவர்கள் தொழில் தர்மத்தைக் கட்டி காத்தார்கள்... சம்பளத்தோடு.

கருவிலே வேரறுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு வாழும் வாய்ப்பை மறுத்தது யார்? ஸ்கேன் அறிக்கையா? அதை உறுதி செய்து கொள்ளாத மருத்துவரா? வணிகமயமான மருத்துவமா?

அந்த சிசு என்னோடு இரண்டு வருடங்கள் இருந்தது. அதை ஒரு கண்ணாடி குடுவையில் என்னோடு வைத்திருந்தேன். முழு வளர்ச்சி அடையாத அந்தச் சிசுவின் கைகள் ஆங்கில மருத்துவத்தை விட்டு என் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியது.

கருவிகளின் கற்பனையில், காகிதங்களின் முடிவுகளில் இப்படி வாழ்கையை இழந்தவர் பலர். கருவிகள் நமக்கு முதலாளிகள் அல்ல. கருவிகள் நமக்கு உதவி செய்வதற்குத்தான். முடிவுகளை எப்போதும் அவை அறிவிப்பதில்லை. அறிவின் வழியாக முடிவுகளை அடைவதுதான் அறிவியல்....

(மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?- அக்கு ஹீலர் அ.உமர் பாரூக் - நூலில் இருந்து)

Address

No-19, Venkateswara Nagar, Teachers Colony, Kadappa Road, Kolathur
Chennai
600099

Telephone

9786569972

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi acupuncture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category