Siva Yantra

Siva Yantra "கையால் மட்டும் எழுதப்பட்டு பரிபூரண ?

� ஏன் வழிபடவேண்டும்… யந்திரங்களை?

� இந்த உலகத்தின் தன்மை, இந்தப் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், எல்லா கோள்களும் சரியாக நகர்வதையும், சூரியன் சரியாக தினமும் உதிப்பதையும், அஸ்தமிப்பதையும், வெயில் சுட்டெரிப்பதையும், மழை வருவதையும், காற்று வீசுவதையும்; எல்லாம் பார்க்கும்போது நமக்குள் ஏதோ ஒன்று இயக்குகிறது என்று தோன்றும்? எல்லாவற்றையும் கடந்த ஒரு சக்தி என்பதை புரிந்துகொண்ட நமது முன்னோர்கள் அதற்கு "கடவுள்" என்று பெயர் வைத்தார்கள்.

� கடவுள் வழிபாட்டில் பல பரிணாமங்கள் காணப்படுகிறது, அதில் ஒன்றுதான் “யந்திர வழிபாடாகும்.”

� பெரும்பாலானோர் இல்லங்களிலும் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும் யந்திரங்கள் வைத்து வழிபடும் முறை இன்றளவும் உள்ளது.

� மதம், இனம், மொழி கடந்து உலகெங்கிலும் இவ்வாறான வழிபாட்டு முறைகள் உள்ளது என்பது உலகறிந்த உண்மை.

�வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் தடைகள் ஊழ்வினைப்பயனால் நடப்பவையே. அத்தடைகளை நீக்கி நமக்கு நல்வாழ்வை அருளும் ஒரு சாதனமே சக்கர வழிபாடு ஆகும்.

� பல ஆயிரமாண்டுகளாகவே நடைமுறையில் இருக்கும் இவ்வழிபாட்டு முறையில் பலன்பெற்றோர் ஏராளம் என்பது நிதர்சனமான உண்மை.

� “எந்திர யுகம்” எனும் இக்காலத்திலும் இது தொடர்ந்து கொண்டுள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் தருகிறது. இதன் மூலம் நமக்கு உணர்த்துவது யாதெனில் யந்திர வழிபாடு பல யுகங்களைக் கடந்தது என்பதே.

� ஒளியும் - ஒலியும் சேர்ந்த வழிபாடாகப் போற்றப்படுவது யந்திர வழிபாடாகும். ஏனெனில், ஒளி - யந்திரங்களாகவும், ஒலி - மந்திரங்களாகவும் செயல்படுகின்றது.

� பாலினுள் இருக்கும் நெய்யினை எவ்வாறு நாம் காண முடியாதோ, பலாவின் சுவையினை எப்படி உண்ணாமல் உணர இயலாதோ, அதுபோலத்தான் இறைவழிபாடும் என்பதை உணர்ந்தோர் ஏராளம்.
இவ்வகை மந்திர - யந்திர வித்தைகளை, மஹான் திருமூலரும் நமக்கு அருளியுள்ளார். திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் மறைபொருளாம் யந்திர வித்தையினைத் தெளிபொருளாய் உணர்த்தியுள்ளார்.

�" திருவம்பலச் சக்கரம்" என்பது மனித வாழ்வை வளப்படுத்த, திருமூலர் பெருமான் நமக்கருளிய மிக உன்னதமான பொக்கிஷமாகும். இறைவனின் திருவருளைப் பெற்றிட, வாழ்வில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ "திருவம்பலச் சக்கரம்" நிச்சயமான பலன்களை அருளும் என்று சத்தியம் செய்து உரைக்கின்றார் திருமூலர்.

� இலட்சக் கணக்கான யந்திரங்கள் உண்டு எனப் பலர் அறிந்திருக்கக் கூடும். ஆனால் நமது நோக்கம், வெற்றி பெற உகந்த சக்கரங்களைத் தேர்ந்தெடுப்பதே.

� ஆனாலும் சிவயந்திரங்கள் என்பது, நாம் முறையாக அமைத்து வழிபட்டால், நிச்சயமான பலன்களைப் பெற்றிட வழிவகுக்கும் என்பது அனுபவ உண்மை.

�"சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் யாவரு மில்லை"
எனும் வரிகளுக்கேற்ப, சிவயந்திரங்கள் என்பது சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றது.

� பிழை ஏதுமின்றி யந்திரங்கள் வரைந்து, அதற்கு உயிர் கொடுக்கும் கலையான "பிராண பிரதிஷ்டை" செய்து வழிபடுவோர், பலன்கள் பலபெற்று மகிழ்வுடன் வாழலாம் என்பது, நமது முன்னோர்கள் காலம் தொட்டு இன்று வரை, வழிபடுவோர்கள் யாவரும் உணர்ந்த உண்மையாகும்.

� இறைவனின் தரிசனத்தை, இருந்த இடத்திலிருந்தே பெற்றிட உதவும் ஒரு கருவியே "சிவச்சக்கரங்கள்."

�அட்சரங்கள் அமைக்கும் முறையறிந்து அமைத்து, தெய்வீக மந்திரங்களை அதில் பதிந்து, மந்திரங்களினால் உயிர்கொடுத்து, ஆகம முறைப்படி தயார்செய்த யந்திரங்களை வழிபட்டோரை, இறைவன் கைவிட்டார் இல்லை என்பது சத்தியம்.

குறிப்பு: யந்திரங்கள், எந்திரங்கள், அட்சரங்கள், சக்கரங்கள் போன்ற வார்த்தைகள் நடைமுறையில் உள்ளது.. .

03/10/2022
https://www.sivayantra.com/yantra/
22/07/2022

https://www.sivayantra.com/yantra/

கடவுள் வழிபாட்டில் பல பரிணாமங்கள் காணப்படுகிறது, அதில் ஒன்றுதான் “யந்திர வழிபாடாகும்.” -நலந்தரும் நவாக்கரிச் ....

28/01/2022

🔯 நவாக்கரிச் சக்கரம் 🔯

👉 என்ன தேவை உங்களுக்கு?

https://www.sivayantra.com/

⚙️ தொழிலில் பெரும் வளர்ச்சி பெற வேண்டுமா?

👨‍👨‍👦 குடும்பத்தில் ஒற்றுமை தேவையா?

👑பொருளாதாரத்தில் உயர்வுபெற வேண்டுமா?

💉 உடல்நோய்கள் தீர வேண்டுமா?

💯 உங்களின் நியாயமான விருப்பங்கள் யாவும் நிறைவேற வேண்டுமா?

🥁 அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடு மாதி அருளுந் திருவும்
அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே. (திருமந்திரம்)

⚛️ நவாக்கரிச் சக்கர வழிபாட்டினால், திருவும், இன்பமும், செல்வமும் பெறலாம் என்பது இச்சக்கரத்தை நமக்கு அருளிய திருமூலரின் அருள்வாக்கு.

📢 இதனால் பயனுற்றோரும் இதன் மகத்துவத்தைப் பகிர்ந்துள்ளனர். மேலும், பகை விலகிட, புகழுடன் விளங்கிட, கோபம் மற்றும் துக்கம் விலகி நற்பயன்களை அடைந்திடலாம் என்பதை திருமந்திரப் பாடல்களில் அறிந்திடலாம்.

🙏 இதன் மீது நம்பிக்கை கொண்டு, "முறையாகத் தயார் செய்த சக்கர வழிபாட்டினால்" மேற்கண்ட நன்மைகளை நிச்சயம் பெற்றுவிடலாம் என்பது அனுபவப்பூர்வமான உண்மை.

🌈 நமது வாழ்வை வளம்பெறச் செய்யும் அற்புத யந்திரங்கள் பல, திருமந்திரத்தில் உண்டு.

✒️ இதற்கு விரிவுரை எழுதிய ஆசான்கள் அனைவரும் இதன் பெருமைகளைத் தெளிவாக எடுத்துரைத்து உள்ளார்கள்.

🖥️ நவீன காலத்தில் இதன் சிறப்புகளை அறிந்தோர் ஒரு சிலரே.

🛕 "திருமந்திரச் சிறப்பினை உணர்ந்திடுவோம்
சிவபக்தியே சிறப்பு எனத் தெளிவுறுவோம்"

Ph: 7200775544

https://sivayantra.com/

#பஞ்சபட்சி #சக்கரங்கள் #சக்கரம் #எந்திரம் #யந்திரம் #நவாக்கரி #புவனாபதி #திருவம்பலச்சக்கரம்

🥁 சாம்பவி மண்டலச் சக்கரம்https://www.sivayantra.com/🔯 திருமூலர் பெருமானின் இச்சக்கரம் சிவசக்தி அருள்பாலிக்கும் உன்னத யந்...
08/01/2022

🥁 சாம்பவி மண்டலச் சக்கரம்

https://www.sivayantra.com/

🔯 திருமூலர் பெருமானின் இச்சக்கரம் சிவசக்தி அருள்பாலிக்கும் உன்னத யந்திரமாகும்.

☸️ எட்டு இதழ் தாமரை அமைப்பு உடையது.

✡️ இருபது பதங்கள் அமையப்பெற்றது.

🕉️ "சிவாயநம" எனும் ஐந்தெழுத்தையும், முப்பத்தைந்து மெய்யெழுத்துக்களையும் கொண்டது.

⚛️ நாம் வாழும் வாழ்க்கை அம்மையின் திருவருளால் வாய்த்தது என உணர்த்துவது.

🔱 பிரணவத்தை உயிர்ப்பாக நமக்கு உணர்த்தி, அழிவில்லா வாழ்வைக் கொடுத்து அருள்வது.

🔆 சாம்பவியை வழிபடுவோர்க்கு, மேன்மையை மட்டுமே அருளும் ஆற்றல் உடையது.

🔔 பகை, தீவினை, தடைகள் விலகும்.

🔻 நற்சிந்தனையில் வருவதெல்லாம் செயல்வடிவம் பெறும்.

🚼 தீய எண்ணங்களுடன் எதிர்வந்து நிற்பார் எவரும் இல்லை என்பது திருமூலரின் அருள்வாக்கு.

🛕 இலிங்க வடிவத்தை எடுத்துக் காட்டும் சாம்பவி மண்டலச் சக்கரம், 12 x 12 எனும் அங்குல அளவில், தூய தாமிர உலோகத் தகட்டில் "கையால் வரையப்படும்" அற்புத யந்திரம்.

🏵️ திருமந்திரம் எனும் பொக்கிஷ நூலில் நான்காம் தந்திரத்துள் இச்சக்கரத்தின் மகத்துவம் பற்றி தெளிவாக அறியலாம்.

"காணும் பொருளுங் கருதிய தெய்வமும்;
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்;
ஊணும் உணர்வும் உறக்கமுந் தானாகக்;
காணுங் கனகமும் காரிகை யாமே." ---- திருமந்திரம்.

🌟 பல்லாயிரக் கணக்கில் எந்திரங்கள் உள்ளது.. .

🌿 வழிபட்ட அன்பர்களுக்கு வழிகாட்டிய சாம்பவி மண்டலச் சக்கரத்தின் மகத்துவம், வழிபாடு செய்து வளங்கள் பல பெற்ற அன்பர்கள் உடனே உணர்ந்து உரைத்தனர்.. .

திருச்சிற்றம்பலம்.

https://www.sivayantra.com/

#யந்திரம் #நவாக்கரி #புவனாபதி #திருவம்பலச்சக்கரம் #சாம்பவிமண்டலம் #திருமூலர் #மாந்த்ரீகம்

Contact No: 7200775544...

07/01/2022

💕 மாங்கல்யம் 💕

மணமகளின் மறு இதயமாக போற்றப்படுவது 💥 "திருமாங்கல்யம்" 💥

https://www.sivayantra.com/

மணமான பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை, மற்றுமோர் இதயமாகப் போற்றுவது உலகறிந்த உண்மை.

பெரும் பொருட்செலவில் அல்லது மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெறினும், மாங்கல்யம் கழுத்தில் ஏறியவுடன், தனது அடுத்தகட்ட வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாள் மணப்பெண்..

அச்சமயம் தேவையற்ற சொற்கள் காதில் விழாத வண்ணம் மங்கள வாத்தியம் இசைக்க, மந்திர ஒலிகள் முழங்க, இனிய நினைவுகளாக நடைபெறும்.

அவ்வாறு நடைபெறும் திருமண நிகழ்வில் மாங்கல்யம் பிரதானமாகப் போற்றப்படுகிறது.

பச்சரிசி, தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழம், மல்லிகைப்பூ வைத்திருக்கும் தாம்பாளத் தட்டில், தாலி எனும் மங்கள மாங்கல்யம் மஞ்சள் நூல் கோர்த்து வைக்கப்படும்.

மாங்கல்யத்தை முறையாகப் புனிதப்படுத்த, ஆனைந்து, அதாவது பசுவில் இருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் கலந்த புனித நீர் மிகச்சிறந்ததாகும். பஞ்சகவ்யத்திற்கான பொருட்கள் இதுவே.

முறையான மந்திரங்களுடன் நிறைவான பூஜை செய்து,

"சுபமான நேரம் பார்த்து;
திருவாளன் கரம் கொடுத்து;
பெருமானின் அருள் கொண்டு;
அருளாளர் ஆசியுடன்;
திருவளர்ச் செல்வியை;
திருமதி ஆக்கும் நிகழ்வு... நம் தமிழ் மரபு ஆகும்."

வாழ்க மணமக்கள்
வாய்மைஈ ரெட்டெய்திச்
சூழ்செல்வம் மக்கள் நாள்
சுற்றமொடும் வாழ்க
திருக்குறள் தொண்டர் சீர்
சித்தாந்தம் தொன்னூல்
உருக்கமுடன் ஓதி வாழ்க.

https://www.sivayantra.com/

#தமிழ்முறைதிருமணம் #கல்யாணம் #திருமுறைகல்யாணம்



Mahaan Thirumoolar Arutkudil, Eachanari, Coimbatore.

01/01/2022
https://sivayantra.com/ஆகம முறைப்படி கையால் சக்கரங்கள் அமைக்கப்பட்டு, சிவ யாகங்களால் பிராண பிரதிஷ்டை  செய்யப்படும் சக்கர...
05/12/2021

https://sivayantra.com/

ஆகம முறைப்படி கையால் சக்கரங்கள் அமைக்கப்பட்டு, சிவ யாகங்களால் பிராண பிரதிஷ்டை செய்யப்படும் சக்கரங்களின் ஆற்றல் அளப்பரியது...
திருச்சிற்றம்பலம்.

சிவாயநம
16/05/2021

சிவாயநம

29/04/2021

Address

16/4 Mahalakshmi Nagar, Eachanari, Coimbatore
Coimbatore
641021

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+917200775544

Alerts

Be the first to know and let us send you an email when Siva Yantra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Siva Yantra:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram