Bharatha Thai Yoga Saba

Bharatha Thai Yoga Saba Yoga

It’s never too early or too late to work towards being the healthiest you...so what are you waiting for? Also get a tria...
06/08/2021

It’s never too early or too late to work towards being the healthiest you...so what are you waiting for?

Also get a trial session ...pre registration is must.

For more details contact on the given numbers.

Join us and gift yourself “HEALTHY YOU”

There are many more variations :
• YOGA
• POWER YOGA
• ASTHANGA HATHA YOGA
• THERAPY YOGA (CUSTOMISED)
• PARTNER YOGA
• KIDS YOGA
• PRANAYAMA
• MEDITATION
• PREGNANCY YOGA
And many more...

ஆடி 1 சரவித்தை ரகசியம்--------------------------------------வருகின்ற(16. 7 .2021)வெள்ளிக்கிமை இந்த மாபபெரும் ரகசியத்தை இ...
14/07/2021

ஆடி 1 சரவித்தை ரகசியம்
--------------------------------------
வருகின்ற(16. 7 .2021)வெள்ளிக்கிமை இந்த மாபபெரும் ரகசியத்தை இந்த யோக நாசி மருத்துவ. கலைக்குழு வாட்சப. Zoom செயலி வாயிலாக வாரா வாரமம் ஒரு வருட பயிற்சி வகுப்பு நடைபெரும் முதல் முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

சரவித்தை என்ற சுவாசக்கலையில் இந்நாள் மிகவும் முக்கியமான நாள்.

நாள் உதயம் என்பது இந்திய மரபில் சூரியஉதயத்தைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது, இரவு 12 மணி என்பதை அல்ல.

இந்நாளில் உங்கள் சுவாசத்தை சூரியகலையான வலது கலையில் தொடங்கினால் வருடத்தில் எல்லா நாட்களும் சரமாகிய சுவாசம் சரியாக ஓடி வாழ்க்கையில் எல்லா நலங்களையும் தரும்.

இந்நாளில் சூரிய உதயத்திற்குமுன் எழுந்து, உங்கள் சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றது. என்பதை கவனியுங்கள். ஒரு வேலை வலது பக்கம் ஓடவில்லை என்றால், இடது பக்கமாக திரும்பி படுத்து, இடது கையை மடித்து தலைக்கு கீழே வைத்து, கால்களை நீட்டி வலது கையை வலது தொடை மீது வைத்துக்கொண்டு உங்கள் சுவாசத்தை
கவனித்தால், தானாகவே சுவாசம் வலது
கலைக்கு மாறிகொள்ளும் அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து இடது தொடை மீது வலது காலைப் போட்டு உட்கார்ந்தால் போதுமானது.

இந்நாளில் உங்கள் சுவாசத்தை காலை 6 முதல் மாலை 6 வரை வலதுகலையில்
ஓடசெய்தால் மிக்க பலன் தரும். (இடது
மூக்கில் சுத்தமான பஞ்சை வைத்து
அடைத்துக் கொள்ள வேண்டும்).

அப்படி முடியாத பட்சத்தில் சுவாசக்கலையை சூரிய கலையான வலதில் தொடங்கினால் நல்லது.

இந்த ஒரு நாள் இதை கடைபிடித்தால்
வருடத்தில் எல்லா நாட்களும் பல நன்மை உண்டு என்பது நிச்சயம். இதை படிப்பதோடு விட்டுவிடாமல் செயலிலும், செயலோடு விட்டுவிடாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து அனைவரும் நன்மை அடைய உதவுங்கள்.

இந்த சரவித்தை ரகசியம் தெரிந்தவர்கள் யாரும் இதை வெளியே சொல்வது இல்லை.

சரகலை பயிற்சி- பூதசரம்
----------------------------------------------

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.

ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் ஐந்தின்
பெருமையே ஆலயம் ஆவதும் ஐந்தின்
பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின்
வகைசெயப் பாலனும் ஆமே.

இந்த அண்ட பிண்டமென அனைத்தும் உருவாக "நமசிவய" என்ற ஐந்தெழுத்தாகிய பஞ்சபூதங்களே காரணமாகும். இந்த ஐந்தின் பெருமையை பற்றி திருமூலர், சிவவாக்கியர், காகபுஜண்டர், வள்ளலார்... என அனைவருமே எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்த வண்ணம் என்பது அவரவர்கள் சுவாசத்தை கொண்டுதானாகும். அண்டத்தில்
உள்ளதெள்ளாம் பிண்டத்தில் என்றும்,
அண்டமாகிய இப்பிரபஞ்சத்தை விட
பிண்டமாகிய இவ்வுடலே விசாலமானது
என்றனர் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட உடலை ஆராய்ச்சி கூடமாகவும் சுவாசத்தை கருவியாக கொண்டே அனைத்தையும் அறிந்தனர்.

"ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும்
அயன்மாலும் அரனோடுத் தேவரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்ற யறியச் சொன்னார்
முனியோர்கள் இருடியரிப்படியே சொன்னார்கள்
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்து பேரான
பூரணத்தைத் நினைவாய்க் காரு வாச்சப்பா
பூரணத்தைக் காக்கும் பேர்கள் வாசிநடு
மையத்துள் வாழ்வார் தானே"

அதாவது சுவாசத்தை பற்றிய சித்தர்கள்
பாடல்கள் கணக்கில்லாமல் இருந்தாலும், சித்தர்களுக்கு முதன்மையானவரான அகத்தியர்
சுவாசத்தை தெய்வம் என்று கொண்டே
பதிஎண் சித்தர்கள் முதல் அயன், மால், ஈசன், தேவர்கள் என அனைவரும் பயன்பெற்றனர் என தனது ஞானத்தில் கூறியுள்ளார்.

நூலாகிய சுவாசத்தை பிடித்தால் சேலையாகிய இறைவனை பிடிக்கலாம்.
தன்னையறிய தலைவனையறியும் முறையாகும்.

மேலும் இந்த உடலை யந்திரம் எனவும்,
சுவாசத்தை மந்திரம் எனவும், இவற்றை
இயக்கும் விதம் தந்திரம் எனவும் கூறலாம். காரணம் மகா மேரு பீடம் என்று கூறப்படும் ஸ்ரீ சக்கரத்தின் அடுக்கு யந்திரம் என்பது நம் முதுகுதண்டையே குறிக்கும்.
அதேபோல் எண்ணற்ற யந்திரங்கள் நம் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகங்களையோ அல்லது முக்கிய
இடங்களையோ அல்லது தலை மற்றும்
மூளையின் சிறு பகுதியோ அல்லது
முழுவதுமான வடிவத்தை கொண்டே
வடிவமைக்கப்பட்டது. இதில் மந்திரங்களான பீஜங்களை சில குறிப்பிட்ட தந்திரமுறைகளை
கொண்டு உட்சரிக்கும் போது சுவாமாகிய காற்று வெட்டப்பட்டு துள்ளியமான ஒலிஒளி அதிர்வுகள் உள்ளும் வெளியிலும் பரவி யந்திரம் சக்தி பெருகின்றது. எப்பொழுது எல்லாம் ஒருவன் அந்த யந்திரத்திற்கு
பக்கத்தில் செல்கிறானோ, அப்போதெல்லாம் அவன் உடலில் உள்ள அந்த யந்திர வடிவ பகுதி சக்தி பெரும். சரி இதில் சுவாசத்திற்கும் பஞ்சபூதத்திற்கும் என்ன சம்பந்தம்??

நாம் சுவாசிக்கும் காற்று பஞ்சபூத
தன்மையை கொண்டே செயல்படுகின்றது.

அதாவது நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றத்திற்கு இப்பஞ்சபூத சரமே காரணம்.

பூதசரத்தில் எந்த பூதத்தின் சரம் ஓடுகின்றது என கண்டுபிடிப்பதில் பல வழிகள் உண்டு. அவைகளில் சுவையை கொண்டு அறிவது, கண்ணாடியில் சுவாசத்தை ஊதி, அதில் தெரியும் வடிவத்தை கொண்டு அறிவது, நிறத்தை கொண்டு அறிவது என பலவழிகள்
உண்டு.

" பாராப்பா பிருதிவியிற் கவிழ்ந்தேயோடும்
பரிவான அப்புதனில் வலத்தே யோடும்
சேரப்பா தேய்வுதனில் இடத்தே யோடும்
திறமான வாயுதனில் நேரா யோடும் ஒரப்பா
அந்தரத்தில் மேலே யோடும் ஒன்றேனும்
குறைவுப்படாது உற்றுநோக்கி ஆரப்பா
இந்நூலைப் பார்பார் கேட்பார் அறிவான
மூமின்கட்கருள் செய்தோமே".

இதில் மிக சுலபமாக சரத்தை கண்டுபிடிக்க மேற்கண்ட பாடலே சிறந்தது. அதாவது மூச்சானது கீழ்நோக்கி(பூமியை நோக்கி) கவிழ்ந்து ஓடினால் அச்சரமானது பிருதிவி
(நிலம்) சரமாகும். அதுபோல் மூச்சானது
இடகலையில் அல்லது பிங்கலையில் என எப்படி நடந்தாலும், மூச்சானது சாய்ந்து இடது பக்கமாக ஓடினால் அப்பு(நீர்) சரமாகும்.

அதே போல் வலது பக்கமாக சாய்ந்து
ஓடினால் தேயு(தீ) சரமாகும். மூச்சானது
ஒடிந்து நமக்கு முன்னால் நேராக ஓடினால் வாயு(காற்று) சரமாகும். வெளிவரும் மூச்சானது நாசி வழி வடிந்து நமக்கு முன்பாக மேல்நோக்கி சென்றாலும், உள்ளுக்குள்ளேயே ஓடினாலும் ஆகாய சரமாகும். இப்படி நம் மூச்சானது எந்த பூதத்தை சார்ந்து ஓடுகின்றது என்பதை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.

நாம் அசையா வேளையில் பிருதிவியும்,
அசையும் வேளையில் அப்புவும், கஷ்ட
வேளையில் தீயும், நம்மில் ஏதேனும் சலிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் துறவு
வேளையில் காற்று சரமோடும். அதிக நேர தியானம், வாசி மற்றும் பூசை வேளையில் ஆகாய சரமோடும்.

மேலும் பூர்வபட்ச வியாழனில் பூமி சரமும்,
அமரபட்ச வியாழனில் நெருப்பும், வெள்ளி நீரும்,
புதன் காற்றும்,
சனிக்கிழமை ஆகாய சரமும்....
மேற்கண்ட நாட்களில் முதலில் ஓட
அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும்,
ஞாயிறுநீர் சரமும்,
திங்கள், செவ்வாய், வியாழன்
போன்ற நாட்களில் தீ சரமும்,
புதன் பூமியும், வெள்ளி காற்றும்,
சனி ஆகாய சார்ந்த சரமும்...
நடப்பது மிக்க நல்லது.

பொதுவாக ஒருவருக்கு மண் மற்றும்
நீருக்குண்டான சரம் நடந்தால், அவர் சத்துவ குணமுடையவராவார். மேலும் ஒருவருக்கு கோபம், அகங்காரம், ஆணவம், காமம் போன்ற எண்ணங்கள் தீ சரம் நடக்கும்போது உண்டாகும்.

எனவே அதை கவனித்து பக்தியில்
மனதை செலுத்தினால் நல்லது.
காற்று சரம் நடந்தால் அவன் ஞானியை நெருங்கியவன்.
ஆகாய சரம் நடந்தால் அவன் கடவுளை
நெருங்கியவன்.
தீ சரம் பக்தியில் தீவிரமாயிருப்பவனுக்கும்,
நீர் சரம் தானதர்ம செய்பவனுக்கும், மண் சரம் ஓடினால் அவன்
உபதேசம் செய்பவனாகவும் இருப்பான்.

மேலும் காலையில் படுக்கையிலிருந்து
எழும்போது கொட்டாவி விடாமல் மூச்சை
உள்ளிழுத்து கொண்டு எழுந்திருந்தல் மிக்க நலமாய் அமையும்.

சூரியகலையில் மண்சரமோ, நீர்சரமோ ஓடும்போது அந்நிலையில் எக்காரியம் ஆக வேண்டியிருப்பினும் அக்காரியத்தினை செயலில் நோக்க
விரைவில் அது எளிதாக முடியும். மண்ணும் நீரும் கலந்தேயிருப்பது போல உடலில் மாமிசமும் உதிரமும் கலந்தேயுள்ளன.

ஆகாயமும் காற்றும் கலந்தேயிருப்பது போல சரமாகிய மூச்சு காற்று ஆகாய பந்தத்தில் கலந்தேயுள்ளது. அக்கினி மட்டும் பூமியிலும், பிரபஞ்சத்திலும், உடலிலும் அனைத்திலும் பொது நிலையாய் மத்தியில் உள்ளது.

இதுவரை சரசாஸ்திரம் ஓரளவு
நிறைவடைகின்றது. இதில் இன்னும் பழகப் பழகப் இப்பூத சரமானது எப்பூத சரத்தில் போய் முடிகின்றது என்பதை கண்டு இந்த பஞ்சபூத சரத்தையும் இடகலையில் 25 ஆகவும், பிங்கலையில் 25 ஆகவும் பிரிக்கலாம். அதாவது நமது மூச்சு பிருதவியினை பூமிசரமூச்சில் தொடங்கி எப்பூத சரத்தில் முடிகின்றது என காண வேண்டும். காண முடியும். இந்த அளவு துள்ளியமாக பார்க்கும் முறையில் நம்மற்றில் உலகின் ஆதிஅந்த செயலின் முக்காலங்களையும் நன்கு அறிந்துணர
முடியும். மேலும் இடது 25யும், வலது
25யும் மற்றும் சுழுமுனையாகிய 1யும்
சேர்ந்த கூட்டுதொகையே 51 அட்சரமாகிய சிதம்பர சக்கரமாகும். இதை விளக்க விளங்கி கொள்ள தெரிந்தவன் பரத்தை தெரிந்தவன் ஆவான்.

சிதம்பர சக்கரத்தை தெரிந்து
கொள்வதற்குமுன், நமசிவய மந்திரத்தில்,
ந- நிலமாகவும்,
ம- நீராகவும்,
சி- நெருப்பாகவும்,
வ- காற்றாகவும்,
ய- ஆகாயமாகவும் உள்ளன.

இவற்றின் நிறம், சுவை, வடிவம், தூரம் ஆகியன...
ந- நிலம்-பொன்-சதுரம்-தித்திப்பு-12
அங்குலம்,

ம- நீர்-வெண்மை-பிறை வடிவம்-துவர்ப்பு-16 அங்குலம்,

சி- தீ-சிகப்பு-முக்கோணம்-உவர்ப்பு-8
அங்குலம்,

வ- காற்று-கருப்பு-அறுகோணம்- புளிப்பு-4 அங்குலம்,

ஆகாயம்- பச்சை-வட்டம்-கார்ப்பு-1
அங்குலமாகும்.

இவற்றில் நிலத் தத்துவத்தில் நிலத்தில் நிலம், நிலத்தில் நீர், நிலத்தில் தீ, நிலத்தில் காற்று, நிலத்தில் ஆகாயம் என ஐந்து பிரிவுகளாக உள்ளும் வெளியும் இயங்கும்.
இதேபோல் நீர்,தீ, காற்று மற்றும் ஆகாயம் என மொத்தம் 25 பிரிவுகளாக இயங்கும் விதத்தை 25 கட்டத்திற்குள் வைத்து ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தை குறிப்பிடுவதே சிதம்பர
சக்கரமாகும்.

பரிபாசை
-----------------

"கிழவி காய் காமம் கொடுக்கும்;
குமரி சதை காமம் கெடுக்கும்"
என்று தொடங்கும் சித்த மருத்துவ
குறிப்புள்ள ஓர் பாடல் உள்ளது.

இதில் கிழவி காய் என்பது முருங்கைக் காயையும், குமரி சதை என்பது காற்றாழை சதையும் குறிப்பிடுகின்றது. மேலும் கற்றாழை சதையானது சாப்பிட்டால் சூட்டை குறைப்பது
மட்டுமல்லாமல் பெண்களின் மேகப்படுதலை தடுக்கவும் இது ஓர் சிறந்த மருந்தாகும்.

இவ்வாறு மறைமுகமாக அர்த்தம் தரும்
சொற்கள் பரிபாசையில் உள்ளது.
மேலும் இப்பரிபாசையகராதி கொண்டு ஓர் உருவக் கடவுளை வணங்கும் பக்தன்
அக்கடவுளே அனைத்தும் என்றெண்ணி அவன் உடலிலேயே அனைத்தும் மறை பொருளாய் நேராய் உள்ளதாக பாவித்து வணங்கிய அடியார்களும் உள்ளனர். அதாவது காமதேனு என்ற பசுவில் எவ்வாறு ஒவ்வொரு அங்கமும்
ஒவ்வொரு தனித்தனி தெய்வமாக எண்ணி இப்படியே அனைத்து தெய்வங்களும் மற்றனைத்தும் அப்பசுவிலேயே இருப்பதாக கொண்டு வணங்குவது போல் ஆகும்.

மேலும் பெரும்பாலும் சித்தர்கள் அனைவரும் புருவமத்தி திறந்ததும் "ட"கரம் என்னும் எழுத்து வரும் வார்த்தைகளை எல்லாம் "ட"விற்கு பதிலாக "த"கரத்தை சேர்த்து அர்த்தமும்
பொருளும் கண்டுணர்ந்துள்ளனர்.

உதாரணத்திற்கு:-
படம்-பதம், பாடம்-பாதம்,
படி-பதி, சட்டசபை-சத்தசபை...
போன்றவகைளாகும்.

சமீபத்தில் வந்த வள்ளலாரும், பாம்பன்
சுவாாமிகளும் கூட "த"கர வித்தையை பற்றி அதிகமாக விளக்கியுள்ளனர். வள்ளலார் தகரத்தால் ஆன கண்ணாடி பெட்டியில்தான் விளக்கு ஆராதனை செய்ய வேண்டும் என வழியுறுத்தியதன் காரணம் "த"கரவித்தையை மறைமுகமாக விளக்கவே ஆகும்.

"தகரமெய்ஞ்ஞானத் தனிப்பொருள் வெளிஎனும்
அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி"
என்று "த"கர வித்தைப் பற்றி வள்ளலார் அகவலில் மறைமுகமாக உள்ளது. இந்த "ட"கர அல்லது
"த"கர வித்தையை ஒரு தெளிந்த குருவிடம் மட்டுமே பெறமுடியும்.

மேலும் பரிபாசை என்பதை வேறுவிதத்திலும் சொல்வதுண்டு. பரி என்றால் குதிரை அல்லது சுவாசத்தை குறிக்கும் ஒரு வார்த்தையாகும்.

பாசை என்பது புரிந்து கொள்ள உதவும்
மொழியை குறிக்கும். அதாவது சுவாசத்தினுடைய மொழி என்பது வேறு
பொருளாகும். எந்த ஒரு செயலிலும் சுவாசம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடன்வரும் என்பதை தெளிவாக விலகியுள்ளேன்....

சகலகலையிலும் முதன்மையானதும் இந்த சரசுவாசக்கலையே ஆகும்.
மேலும் காகபுஜண்டர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட அபூர்வ சரயோக முறையை முழுமையாக தனிப்பட்டமுறையில் நேரடியாக கற்பிக்கிறேன். Zoom ஆன்லைன் வகுப்பும் உள்ளது சேர்ந்து பயன் பெறுங்கள்.தொடர்புக்கு யோக மருத்துவர் திருவேங்கடம்(தீவிரம்).

9626308606
நன்றி நன்றி வணக்கம்.

நீரிழிவு நோய்க்கான யோகாசனம்.சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல ஒரு நிலைதான். அதாவது இயற்கைக்கும் நோயாளிக்கும் உள்ள தொடர்பு அ...
01/07/2021

நீரிழிவு நோய்க்கான யோகாசனம்.

சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல ஒரு நிலைதான். அதாவது இயற்கைக்கும் நோயாளிக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிட்டது என்று பொருள்.

யோகாசனங்கள் என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றிற்கு நலம் தரும் பயிற்சிகள், ஒவ்வொரு ஆசனமும் நோயை தீர்க்கும் குணம் உடையது. ஆழ்ந்த மூச்சுப் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அதனால் உடல் உள் உறுப்புகள், கணையம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் (ஆதார சக்கரங்கள்) ஏற்ற இறக்கங்களை சீர் செய்கிறது.

யோகாசனம் எப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது?

நீரிழிவு நோய்க்குத் தரப்படுகின்ற நவீன மருந்துகள் சிறுநீரிலும், ரத்தத்திலும் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. குறைக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், இந்த மருந்துகள் இன்சுலினை சுரக்கச் செய்யும் கணையத்தில் பீட்டா செல்களில் செயல்புரிவது இல்லை. அவற்றைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்வதும் இல்லை. இதன் காரணமாக, கணையமும், இன்சுலினைச் சுரக்கும் லாங்கர் ஹான்ஸ் திட்டுக்களும் நாளடைவில் சுருங்கி சூம்பிப்போய் விடுகின்றன.

ஓசையின்றி உயிரைப் பறிக்கும் நோய் நீரிழிவு நோய். இந்நோயால் கால் பாதங்கள், இருதயம், கண்கள், கிட்னி ஆகிய ராஜ உறுப்புகள் நேரடியாக பாதிக்கப்படும். இன்சுலினைச் சுரக்கச் செய்யும் சுரப்பி சூம்பி விடாமல் அதைத் தூண்டி அதன் செயலை ஒழுங்குபடுத்துவது யோகாசனங்கள் மட்டுமே ஆகும். நீரிழிவுக்கு ஆட்பட்ட ஒருவர் தவறாது யோகாசனங்களை தொடர்ந்து செய்யும் போது சிறுநீரிலுள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகிறது. அத்துடன் நீரிழிவு நோயின் காரணமாக, தோன்றுகின்ற கண்பார்வைக் குறைவும், வாதத் தொந்தரவும், தலைச்சுற்றல், அசதி போன்றவையும் நீங்குகின்றன.

உடல் உறுப்பில் கண், காது, மூக்கு, வாய் போன்ற பல உறுப்புகள் வெளிப்பரப்பில் உள்ள சக்தியை வாங்கி உள் பரப்பில் கொடுக்கும், ஆனால், கணையம் மட்டும் உள்பரப்பும், வெளிப்பரப்பும் உறிஞ்சும். இதன் வேலை சக்தியை எடுப்பதுதானே ஒழிய கொடுப்பது இல்லை. கணையத்தின் மேல்பரப்பில் இருக்கும் பாசகா என்ற பித்தம் உறிஞ்சுவது நின்றால் ரத்தத்தில் சர்க்கரை நோயும், கணையத்தின் உட்பரப்பில் இருக்கும் சமாணன் என்ற வாயு உறிஞ்சுது நின்றால் சிறுநீரில் சர்க்கரை நோயும் உண்டாகும் என்கிறது யோக மருத்துவம்.

இப்பயிற்சிகளுடன் உணவுத் திட்டங்களை கடைபிடித்து, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டால், நோயுடன் போராட வேண்டிய நிலை இருக்காது.

 Pre Booking : 9626308606,7010087554.   ஒரு காலத்தில் ஒருவருக்கு லேசாகத் தொப்பை விழுந்தால், `என்னப்பா... நாப்பது வயசுக்க...
01/07/2021


Pre Booking : 9626308606,7010087554.

ஒரு காலத்தில் ஒருவருக்கு லேசாகத் தொப்பை விழுந்தால், `என்னப்பா... நாப்பது வயசுக்குள்ளயா?’ என்று ஆச்சர்யமாகக் கேட்பார்கள். இன்றைக்கு இளம் வயதினரைக்கூட விட்டுவைக்காமல், பரவிக்கொண்டேயிருக்கிறது தொப்பை. அதோடு உடல் பருமன் பிரச்னையும் அதிகமாகியிருக்கிறது. பல உடல்நலக் கோளாறுகளுக்கு அடித்தளமாக இருப்பவை இந்த இரு பிரச்னைகளும். உடல் பருமனைக் குறைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் இருக்கின்றன.

உடல் பருமன் மட்டுமல்ல, ஒருவருக்குத் தொப்பை போடுவதற்கும் உடல் உழைப்பு இல்லாமல் பல மணி நேரம், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வதுதான் முக்கியக் காரணம். அதோடு, சரியான நேரத்துக்கு உணவு உண்ணாமலிருப்பது, அளவுக்கு அதிகமாக உண்பது, நேரம் தவறித் தூங்குவது, உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகளைத் தேடித் தேடி உண்பது, அதிக கெட்டக் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது போன்றவையும் உடல் பருமன், தொப்பைக்கு முக்கியக் காரணங்கள். இன்னும் மனஅழுத்தம், ஹார்மோன் குறைபாடுகள், பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரித்தல்... என வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

உடல் எடையைக் குறைக்க தினமும் சில பயிற்சிகளைச் செய்யவேண்டியது முக்கியம். யோகா, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை முறையாகக் கடைப்பிடித்தால் ஒரே மாதத்தில் இரண்டு கிலோ வரை எடை குறைக்கலாம்.

மற்ற பயிற்சிகளைப்போல் இல்லாமல் யோகா பயிற்சிகளில் மிக மெதுவாகத்தான் எடை குறையும். ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பயிற்சிகளே உடல் எடையைக் குறைக்கப் போதுமானவை. ஒரே ஒருநாள் பயிற்சி செய்துவிட்டு, எடை மெஷினில் ஏறி நின்று எடை பார்ப்பது உதவாது. தினமும் தவறாமல் யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

உடல் பருமனை குறைப்பதற்கான பயிற்சி வகுப்புகள் 05/07/2021 முதல்
நமது சபா மூலம் தொடங்கபடவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
முன் பதிவு அவசியம்.

முன் பதிவுக்கு : 9626308606,7010087554.அழைக்கவும்.

INTERNATIONAL YOGA DAY 2021.
21/06/2021

INTERNATIONAL YOGA DAY 2021.

08/06/2021

யோக முத்திரைகள்(பகுதி-2)

ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை.
இந்த“பஞ்ச மஹாபூதங்கள்” ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது.
உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன

1. கட்டைவிரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – பூமி
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை

1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

08/06/2021

யோக முத்திரைகள்(பகுதி-1)

பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது.இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும், சுட்டுவிரல் - காற்றையும்,
நடுவிரல் - ஆகாயத்தையும்,
மோதிர விரல் - நிலத்தையும்,
சுண்டு விரல் - நீரையும், குறிக்கின்றன.

பழைய காலங்களில் முனிவர் நாட்கணக்கில் கடும் தவம் புரிந்தனர் என்றெல்லாம் கேள்விப்படுகின்றோம் அவர்களுக்கு எந்தவிதமான நோயும் அணுகாமல் இருப்பதற்குரிய காரணிகளுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். முத்திரை இந்து சமயத்திலும் பௌத்தமதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

முத்திரைகளைப் பற்றிய படிப்பு தத்வ யோகம் ( Tatva Yoga ) என அழைக்கப்படும்.

இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.

1. ஞான முத்திரை : அறிவு முத்திரை

ஞானம் என்றாலே அறிவுதானே, இந்த முத்திரை அறிவைப் பெருக்கும். அறிவு முத்திரை என்றும் இதனை அழைக்கலாம்.

முறை: கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம்.

இடம்: எந்தவொரு அமைதியான இடமும் இதற்கு உகந்தது.

பலன்கள்: அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.
ஆகவே இந்த முத்திரை,
• ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.
• கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.
• ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.

2. பிருத்வி முத்திரை : பூமி முத்திரை

பிருத்வி என்றால் சமஸ்கிருதத்தில் பூமி மாதா என்பதாகும்.

முறை: மோதிர விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனியுடன் தொட ஏனைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல்.
பலன்கள்: எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும்.
• உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும்.
• தோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
• உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

3. வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை

முறை: சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும் மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.

பலன்கள்:
• மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் ( rheumatism, arthritis, gout) மற்றும் பார்க்கின்சன் வியாதி
• கழுத்து முதுகென்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு (facial paralysis)
• வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு

4. சூரிய முத்திரை

முறை: மோதிரவிரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் அழுத்துதல்.

பலன் :
• தைரோய்ட் சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
• உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும்
• பதட்டத்தைப் போக்கும்
• சமிபாட்டுக் கோளாறுகளைத் தீர்க்கும்

முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.

01/06/2021

யோகா(Yoga)

யோகா என்பது ஒருவரது உள்மன பலத்தினை அதிகப்படுத்தவும் மற்றும் மேம்படுத்தும் முறையாகும். இம்முறையில் ஒருவர் தான் யார் என உணர வைத்துவிடும். யோகாவின் சமஸ்கிரத அர்த்தமாக இருப்பது “நுகம்”ஆகும். ஆகவே யோகா என்பது ஒருவரது தனி ஆன்மாவை கடவுளின் ஆன்மாவோடு இணைப்பதாகும். மகரிஷி பதஞ்சலி கூற்றின் படி யோகா என்பது ஒருவரது மனதினை கட்டுப்படுத்தி முறைப்படுத்துவதாகும்.

யோகா உலகலாவிய நடைமுறை

அனைவரும் பயன்படுத்ததும் சிறப்பு இயல்பு கொண்டது யோகா மதம், பழக்கவழக்கம், சாதி, இனம், தேசம், பாலினம், வயது மற்றும் உடல்நிலைக்கு அப்பாற்பட்டது.

ஒருவர் புத்தகங்களை படித்தோ அல்லது குறிப்பிட்ட ஆடையை அணிவதினாலோ யோகி போல் தோற்றமலிக்கலாம் ஆனால் யோகி ஆகிவிட முடியாது. ஒருவர் முழுமையாக பயிற்சியெடுக்காமல் யோகியின் திறமைகளை பெற்று விடமுடியாது. எனவே தொடர் பயிற்சியில் (சாதனா) உடம்பிலும் மற்றும் மனதிலும் ஒரு முறையை ஏற்படுத்தி வாழ்க்கையை உயர்த்தும். இந்நிலையை அடைய பயிற்ச்சி எடுப்பவருக்கு கூர்ந்த விருப்பம் அவசியம் இப்பயிற்ச்சியை உயர்நிலை பயிற்ச்சியாளர் மூலம் மனநிலையை ஒருமுகப்படுத்தி எடுக்க வேண்டும்.

பரிணாம வளர்ச்சியில் யோகா

மனிதனில் விழிப்புணர்வு நிலையினை உண்டாக்க யோகா பயன்படுத்தப்படுகிறது. முழு விழிப்புணர்வு நிலையை அவன் விருப்பப்படாமல் அடைய முடியாது.

சிற்றின்பங்களான குடிபோதை, பொருள் ஈட்ட அதிகமாக வேலைசெய்வது, உடலுறவில் அதிகமாக ஈடுபடுவது மற்றும் பிற பழக்கங்களால் உலக பிரச்சனைகளை மறக்க முயற்சிக்கின்றனர். இதனால் சுயநினைவற்ற நிலைக்கு தள்ளப்படுகினறனர். இந்த நிலைக்கு உட்பட்டவர்கள் யோகாவின் பயன்களை அடைய முடியாது. மேற்கத்திய மனோத்தத்துவ முறையில் நோய்களுக்கான காரணத்திற்கு மருத்துவம் செய்யாமல் நோயின் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்வர்.ஆனால் இந்திய யோகிகள் நோயின் அடிமுதல் காரணங்களை அறிந்து நோயை முழுமையாக குணமாக்குவர்.. ஏமாற்றுக்காரர்களின் மருத்துவ முறையானது நோயை வைத்து முடிவுசெய்தது.மாஸ்லோவின் உளவியலானது மனித நலனை மையப்படுத்தியதாக இருந்தது.ஆனால் இந்திய உளவியலானது மனோத்தத்துவத்தினை மேம்படுத்தியது. யோகா மனிதனின் உளவியல் சார்ந்ததாக மட்டும் இல்லாமல் உயரிய விழிப்புநிலையினை தரக்கூடியதாகும்.மேலும் இது உடல்நலத்துடன் ஆன்மீக வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.

ஆன்மாவின் சிகிச்சையில் யோகாவின் பங்கு

யோகாவின் முறையானது (ஜபம், கர்மா, பக்தி முதலியன) ஒருவரது வலியினை போக்ககூடியது. இதனை அறிந்து கொள்ள ஒருவர் யோகாவினை பற்றி நன்கு தெரிந்த அறிஞரிடம் கற்று கொள்ளவேண்டும். அவரும் அம்மாதிரியான முறைகளை கற்று தேர்ந்தவராக இருக்க வேண்டும். இம்மாதிரியான முயற்சிகளை மிக கவனமாக எடுக்கவேண்டும். இதற்கு தகுதியான ஆலோசகர் அல்லது முற்றும் அறிந்த யோகியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

31/05/2021

யோகாவின் ஆச்சரியமான நன்மைகள்:

யோகா பயிற்சி அதனுடன் தொடர்புடைய பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது,
மனம், உடல், உடல் தோற்றங்கள், கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம் மற்றும் தியானம் மூலம் இணைக்கும் ஒரு பழங்கால நடைமுறையாகும்.

நன்மைகள்:

இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் இருந்து வலி, சகிப்புத்தன்மையை அதிகரிப்பது வரை, பின்வரும் நன்மைகள் அனைத்தும் உடலுக்குள் கண்டறியப்படலாம்.

1.இரத்த அழுத்தம்:

ஒரு நிலையான யோகா பயிற்சி உடலின் சிறந்த இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

2.இதய துடிப்பு சதவீதம் :

குறைவான துடிப்புகளுடன் அதிக இரத்தத்தை செலுத்தும் அளவுக்கு உங்கள் இதயம் வலுவாக இருப்பதைக் குறிக்கிறது. யோகா பயிற்சி செய்வது குறைந்த துடிப்பு வீதத்தை வழங்குகிறது.

3.இரத்தஓட்டம் :

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உடல் முழுவதும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதன் மூலம், ஆரோக்கியமான உறுப்புகள், தோல் மற்றும் மூளை வலுபடுத்துகறது.

4.சுவாசம்:

கட்டுப்படுத்தப்பட்ட சுவாச பயிற்சிகள் மற்றும் சிறந்த உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சுவாச விகிதத்தை குறைக்கிறது. அதனால் நுரையீரல் ஆரோக்கியம் அதிக மாகிறது.

5.இருதய சகிப்புத்தன்மை: குறைந்த இதய துடிப்பு மற்றும் உடலுக்கு மேம்பட்ட ஆக்ஸிஜனேற்றம் (யோகாவின் இரண்டு நன்மைகள்) ஆகியவற்றின் கலவையானது அதிக இருதய சகிப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.

6.உறுப்புகள்:

யோகா பயிற்சி உள் உறுப்புகளை மசாஜ் செய்கிறது, இதனால் நோயைத் தடுக்கும் உடலின் திறனை மேம்படுத்துகிறது.

7.இரைப்பை குடல்:

யோகா பயிற்சி செய்யும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இரைப்பை குடல் செயல்பாடுகள் மேம்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

8.நோய் எதிர்ப்பு சக்தி:

யோகா பயிற்சி அடிக்கடி ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடையது..

9.வலி:

தவறாமல் யோகா பயிற்சி செய்பவர்களிடையே வலி சகிப்புத்தன்மை மிக அதிகம். வலி சகிப்புத்தன்மைக்கு மேலதிகமாக, முதுகுவலி போன்ற நாள்பட்ட வலியின் சில நிகழ்வுகள் யோகா மூலம் குறைக்கப்படுகின்றன அல்லது அகற்றப்படுகின்றன

10.வளர்சிதை மாற்றம்:

சீரான வளர்சிதை மாற்றத்தைக் கொண்டிருப்பது ஆரோக்கியமான எடையை பராமரிப்பதற்கும் பசியைக் கட்டுப்படுத்துவதற்கும் காரணமாகிறது. நிலையான யோகா பயிற்சி சமநிலையைக் கண்டறிய உதவுகிறது மற்றும் மிகவும் திறமையான வளர்சிதை மாற்றத்தை உருவாக்குகிறது.

உடலுக்குள் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுவதைப் போலவே, உடல் இல்லாமல் உண்மையில் அனுபவிக்கக்கூடிய பல நன்மைகள் உள்ளன. சிறந்த தூக்கத்திலிருந்து அதிக ஆற்றல் மற்றும் வலிமை வரை, இந்த பட்டியல் உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் பல நன்மைகளை வழங்குகிறது.

14/05/2021



புதிதாக யோகா செய்பவர்களுக்கு எளிமையான ஆரம்ப யோகப் பயிற்சிகள்.

உடல் ரீதியான பலன்கள் (Physical Benefits):

மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு பயிற்சி ஓய்வு நிலையில் இருந்து திரும்பும் உடலுக்கு புத்துணர்வு அளிக்கிறது.

நாட்பட்ட நோய்களில் இருந்து விடுவித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முதுகுத்தண்டை (Spine) வலுவூட்டி உறுதியாக்குகிறது. முதுகுவலி (Back pain), உடல் சோர்விலிருந்து விடுவிக்கிறது.

மன ரீதியான பலன்கள் (Mental Benefits):

ஞாபக சக்தி (Memory), மனக்குவிப்புத் திறன் (Focus / Concentration) மற்றும் செயற்திறனை அதிகரிக்கிறது.

உடல், மனம் மற்றும் உணர்வுகளை நிலைப்படுத்துகிறது.
மன அழுத்தம் (Depression) , படபடப்பு, மனத்தவிப்பு (Anxiety) ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது.

பலருடன் சேர்ந்து ( அனைவருடனும் இணைந்து ) செயல்படும் திறனையும், பழகும் முறையையும் மேம்படுத்துகிறது.

ஆழ்ந்து உணரும் ஆனந்தம், அமைதி, நிறைவை வழங்கிடும்.

14/05/2021

யோகாவின் பலன்கள்:

யோகா செய்வதினால் எண்ணிலடங்கா நன்மைகள் உண்டாகும். 5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை நம் முன்னோர்கள் பயிற்சி செய்து பல அற்புத பலன்களை பெற்றுள்ளனர். யோகா என்பது ஒரு குறிப்பிட்ட மதம் சார்த்த கோட்பாடு அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முழுவதும் உடற்பயிற்சி, மனபயிற்சி, மூச்சுபயிற்சி போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது.

யோகா பயிற்சி செய்வதற்கு என்று பிரத்தியேகமாக ஏதும் தேவையில்லை. எந்த வயதிலும் பயிற்சியினை தொடங்கலாம். செய்வதற்கு ஆர்வம் மட்டுமே போதுமானது. அவரவர்களின் உடல் மற்றும் மன வலிமையினை பொறுத்து எளிய பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை செய்யலாம். யோகா பயிற்சி செய்யவில்லை என்றாலும் அது எந்த பக்க விளைவினையும் தராது.

முறையாக யோகா செய்வதினால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப் போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது , மேலும் தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மனஒருமைப்பாட்டை போன்றவை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

Book your Free Online Live Yoga Classes Whatsapp No : 9626308606https://meet.google.com/opr-vhcq-jyuயோகாவின் பலன்கள்:யோக...
30/04/2021

Book your Free Online Live Yoga Classes
Whatsapp No : 9626308606
https://meet.google.com/opr-vhcq-jyu

யோகாவின் பலன்கள்:

யோகா செய்வதினால் எண்ணிலடங்கா நன்மைகள் உண்டாகும். 5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை நம் முன்னோர்கள் பயிற்சி செய்து பல அற்புத பலன்களை பெற்றுள்ளனர். யோகா என்பது ஒரு குறிப்பிட்ட மதம் சார்த்த கோட்பாடு அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முழுவதும் உடற்பயிற்சி, மனபயிற்சி, மூச்சுபயிற்சி போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது.

யோகா பயிற்சி செய்வதற்கு என்று பிரத்தியேகமாக ஏதும் தேவையில்லை. எந்த வயதிலும் பயிற்சியினை தொடங்கலாம். செய்வதற்கு ஆர்வம் மட்டுமே போதுமானது. அவரவர்களின் உடல் மற்றும் மன வலிமையினை பொறுத்து எளிய பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை செய்யலாம். யோகா பயிற்சி செய்யவில்லை என்றாலும் அது எந்த பக்க விளைவினையும் தராது.

முறையாக யோகா செய்வதினால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப் போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது , மேலும் தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மனஒருமைப்பாட்டை போன்றவை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharatha Thai Yoga Saba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category