14/07/2021
ஆடி 1 சரவித்தை ரகசியம்
--------------------------------------
வருகின்ற(16. 7 .2021)வெள்ளிக்கிமை இந்த மாபபெரும் ரகசியத்தை இந்த யோக நாசி மருத்துவ. கலைக்குழு வாட்சப. Zoom செயலி வாயிலாக வாரா வாரமம் ஒரு வருட பயிற்சி வகுப்பு நடைபெரும் முதல் முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
சரவித்தை என்ற சுவாசக்கலையில் இந்நாள் மிகவும் முக்கியமான நாள்.
நாள் உதயம் என்பது இந்திய மரபில் சூரியஉதயத்தைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது, இரவு 12 மணி என்பதை அல்ல.
இந்நாளில் உங்கள் சுவாசத்தை சூரியகலையான வலது கலையில் தொடங்கினால் வருடத்தில் எல்லா நாட்களும் சரமாகிய சுவாசம் சரியாக ஓடி வாழ்க்கையில் எல்லா நலங்களையும் தரும்.
இந்நாளில் சூரிய உதயத்திற்குமுன் எழுந்து, உங்கள் சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றது. என்பதை கவனியுங்கள். ஒரு வேலை வலது பக்கம் ஓடவில்லை என்றால், இடது பக்கமாக திரும்பி படுத்து, இடது கையை மடித்து தலைக்கு கீழே வைத்து, கால்களை நீட்டி வலது கையை வலது தொடை மீது வைத்துக்கொண்டு உங்கள் சுவாசத்தை
கவனித்தால், தானாகவே சுவாசம் வலது
கலைக்கு மாறிகொள்ளும் அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து இடது தொடை மீது வலது காலைப் போட்டு உட்கார்ந்தால் போதுமானது.
இந்நாளில் உங்கள் சுவாசத்தை காலை 6 முதல் மாலை 6 வரை வலதுகலையில்
ஓடசெய்தால் மிக்க பலன் தரும். (இடது
மூக்கில் சுத்தமான பஞ்சை வைத்து
அடைத்துக் கொள்ள வேண்டும்).
அப்படி முடியாத பட்சத்தில் சுவாசக்கலையை சூரிய கலையான வலதில் தொடங்கினால் நல்லது.
இந்த ஒரு நாள் இதை கடைபிடித்தால்
வருடத்தில் எல்லா நாட்களும் பல நன்மை உண்டு என்பது நிச்சயம். இதை படிப்பதோடு விட்டுவிடாமல் செயலிலும், செயலோடு விட்டுவிடாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து அனைவரும் நன்மை அடைய உதவுங்கள்.
இந்த சரவித்தை ரகசியம் தெரிந்தவர்கள் யாரும் இதை வெளியே சொல்வது இல்லை.
சரகலை பயிற்சி- பூதசரம்
----------------------------------------------
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் ஐந்தின்
பெருமையே ஆலயம் ஆவதும் ஐந்தின்
பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின்
வகைசெயப் பாலனும் ஆமே.
இந்த அண்ட பிண்டமென அனைத்தும் உருவாக "நமசிவய" என்ற ஐந்தெழுத்தாகிய பஞ்சபூதங்களே காரணமாகும். இந்த ஐந்தின் பெருமையை பற்றி திருமூலர், சிவவாக்கியர், காகபுஜண்டர், வள்ளலார்... என அனைவருமே எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்த வண்ணம் என்பது அவரவர்கள் சுவாசத்தை கொண்டுதானாகும். அண்டத்தில்
உள்ளதெள்ளாம் பிண்டத்தில் என்றும்,
அண்டமாகிய இப்பிரபஞ்சத்தை விட
பிண்டமாகிய இவ்வுடலே விசாலமானது
என்றனர் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட உடலை ஆராய்ச்சி கூடமாகவும் சுவாசத்தை கருவியாக கொண்டே அனைத்தையும் அறிந்தனர்.
"ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும்
அயன்மாலும் அரனோடுத் தேவரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்ற யறியச் சொன்னார்
முனியோர்கள் இருடியரிப்படியே சொன்னார்கள்
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்து பேரான
பூரணத்தைத் நினைவாய்க் காரு வாச்சப்பா
பூரணத்தைக் காக்கும் பேர்கள் வாசிநடு
மையத்துள் வாழ்வார் தானே"
அதாவது சுவாசத்தை பற்றிய சித்தர்கள்
பாடல்கள் கணக்கில்லாமல் இருந்தாலும், சித்தர்களுக்கு முதன்மையானவரான அகத்தியர்
சுவாசத்தை தெய்வம் என்று கொண்டே
பதிஎண் சித்தர்கள் முதல் அயன், மால், ஈசன், தேவர்கள் என அனைவரும் பயன்பெற்றனர் என தனது ஞானத்தில் கூறியுள்ளார்.
நூலாகிய சுவாசத்தை பிடித்தால் சேலையாகிய இறைவனை பிடிக்கலாம்.
தன்னையறிய தலைவனையறியும் முறையாகும்.
மேலும் இந்த உடலை யந்திரம் எனவும்,
சுவாசத்தை மந்திரம் எனவும், இவற்றை
இயக்கும் விதம் தந்திரம் எனவும் கூறலாம். காரணம் மகா மேரு பீடம் என்று கூறப்படும் ஸ்ரீ சக்கரத்தின் அடுக்கு யந்திரம் என்பது நம் முதுகுதண்டையே குறிக்கும்.
அதேபோல் எண்ணற்ற யந்திரங்கள் நம் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகங்களையோ அல்லது முக்கிய
இடங்களையோ அல்லது தலை மற்றும்
மூளையின் சிறு பகுதியோ அல்லது
முழுவதுமான வடிவத்தை கொண்டே
வடிவமைக்கப்பட்டது. இதில் மந்திரங்களான பீஜங்களை சில குறிப்பிட்ட தந்திரமுறைகளை
கொண்டு உட்சரிக்கும் போது சுவாமாகிய காற்று வெட்டப்பட்டு துள்ளியமான ஒலிஒளி அதிர்வுகள் உள்ளும் வெளியிலும் பரவி யந்திரம் சக்தி பெருகின்றது. எப்பொழுது எல்லாம் ஒருவன் அந்த யந்திரத்திற்கு
பக்கத்தில் செல்கிறானோ, அப்போதெல்லாம் அவன் உடலில் உள்ள அந்த யந்திர வடிவ பகுதி சக்தி பெரும். சரி இதில் சுவாசத்திற்கும் பஞ்சபூதத்திற்கும் என்ன சம்பந்தம்??
நாம் சுவாசிக்கும் காற்று பஞ்சபூத
தன்மையை கொண்டே செயல்படுகின்றது.
அதாவது நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றத்திற்கு இப்பஞ்சபூத சரமே காரணம்.
பூதசரத்தில் எந்த பூதத்தின் சரம் ஓடுகின்றது என கண்டுபிடிப்பதில் பல வழிகள் உண்டு. அவைகளில் சுவையை கொண்டு அறிவது, கண்ணாடியில் சுவாசத்தை ஊதி, அதில் தெரியும் வடிவத்தை கொண்டு அறிவது, நிறத்தை கொண்டு அறிவது என பலவழிகள்
உண்டு.
" பாராப்பா பிருதிவியிற் கவிழ்ந்தேயோடும்
பரிவான அப்புதனில் வலத்தே யோடும்
சேரப்பா தேய்வுதனில் இடத்தே யோடும்
திறமான வாயுதனில் நேரா யோடும் ஒரப்பா
அந்தரத்தில் மேலே யோடும் ஒன்றேனும்
குறைவுப்படாது உற்றுநோக்கி ஆரப்பா
இந்நூலைப் பார்பார் கேட்பார் அறிவான
மூமின்கட்கருள் செய்தோமே".
இதில் மிக சுலபமாக சரத்தை கண்டுபிடிக்க மேற்கண்ட பாடலே சிறந்தது. அதாவது மூச்சானது கீழ்நோக்கி(பூமியை நோக்கி) கவிழ்ந்து ஓடினால் அச்சரமானது பிருதிவி
(நிலம்) சரமாகும். அதுபோல் மூச்சானது
இடகலையில் அல்லது பிங்கலையில் என எப்படி நடந்தாலும், மூச்சானது சாய்ந்து இடது பக்கமாக ஓடினால் அப்பு(நீர்) சரமாகும்.
அதே போல் வலது பக்கமாக சாய்ந்து
ஓடினால் தேயு(தீ) சரமாகும். மூச்சானது
ஒடிந்து நமக்கு முன்னால் நேராக ஓடினால் வாயு(காற்று) சரமாகும். வெளிவரும் மூச்சானது நாசி வழி வடிந்து நமக்கு முன்பாக மேல்நோக்கி சென்றாலும், உள்ளுக்குள்ளேயே ஓடினாலும் ஆகாய சரமாகும். இப்படி நம் மூச்சானது எந்த பூதத்தை சார்ந்து ஓடுகின்றது என்பதை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
நாம் அசையா வேளையில் பிருதிவியும்,
அசையும் வேளையில் அப்புவும், கஷ்ட
வேளையில் தீயும், நம்மில் ஏதேனும் சலிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் துறவு
வேளையில் காற்று சரமோடும். அதிக நேர தியானம், வாசி மற்றும் பூசை வேளையில் ஆகாய சரமோடும்.
மேலும் பூர்வபட்ச வியாழனில் பூமி சரமும்,
அமரபட்ச வியாழனில் நெருப்பும், வெள்ளி நீரும்,
புதன் காற்றும்,
சனிக்கிழமை ஆகாய சரமும்....
மேற்கண்ட நாட்களில் முதலில் ஓட
அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும்,
ஞாயிறுநீர் சரமும்,
திங்கள், செவ்வாய், வியாழன்
போன்ற நாட்களில் தீ சரமும்,
புதன் பூமியும், வெள்ளி காற்றும்,
சனி ஆகாய சார்ந்த சரமும்...
நடப்பது மிக்க நல்லது.
பொதுவாக ஒருவருக்கு மண் மற்றும்
நீருக்குண்டான சரம் நடந்தால், அவர் சத்துவ குணமுடையவராவார். மேலும் ஒருவருக்கு கோபம், அகங்காரம், ஆணவம், காமம் போன்ற எண்ணங்கள் தீ சரம் நடக்கும்போது உண்டாகும்.
எனவே அதை கவனித்து பக்தியில்
மனதை செலுத்தினால் நல்லது.
காற்று சரம் நடந்தால் அவன் ஞானியை நெருங்கியவன்.
ஆகாய சரம் நடந்தால் அவன் கடவுளை
நெருங்கியவன்.
தீ சரம் பக்தியில் தீவிரமாயிருப்பவனுக்கும்,
நீர் சரம் தானதர்ம செய்பவனுக்கும், மண் சரம் ஓடினால் அவன்
உபதேசம் செய்பவனாகவும் இருப்பான்.
மேலும் காலையில் படுக்கையிலிருந்து
எழும்போது கொட்டாவி விடாமல் மூச்சை
உள்ளிழுத்து கொண்டு எழுந்திருந்தல் மிக்க நலமாய் அமையும்.
சூரியகலையில் மண்சரமோ, நீர்சரமோ ஓடும்போது அந்நிலையில் எக்காரியம் ஆக வேண்டியிருப்பினும் அக்காரியத்தினை செயலில் நோக்க
விரைவில் அது எளிதாக முடியும். மண்ணும் நீரும் கலந்தேயிருப்பது போல உடலில் மாமிசமும் உதிரமும் கலந்தேயுள்ளன.
ஆகாயமும் காற்றும் கலந்தேயிருப்பது போல சரமாகிய மூச்சு காற்று ஆகாய பந்தத்தில் கலந்தேயுள்ளது. அக்கினி மட்டும் பூமியிலும், பிரபஞ்சத்திலும், உடலிலும் அனைத்திலும் பொது நிலையாய் மத்தியில் உள்ளது.
இதுவரை சரசாஸ்திரம் ஓரளவு
நிறைவடைகின்றது. இதில் இன்னும் பழகப் பழகப் இப்பூத சரமானது எப்பூத சரத்தில் போய் முடிகின்றது என்பதை கண்டு இந்த பஞ்சபூத சரத்தையும் இடகலையில் 25 ஆகவும், பிங்கலையில் 25 ஆகவும் பிரிக்கலாம். அதாவது நமது மூச்சு பிருதவியினை பூமிசரமூச்சில் தொடங்கி எப்பூத சரத்தில் முடிகின்றது என காண வேண்டும். காண முடியும். இந்த அளவு துள்ளியமாக பார்க்கும் முறையில் நம்மற்றில் உலகின் ஆதிஅந்த செயலின் முக்காலங்களையும் நன்கு அறிந்துணர
முடியும். மேலும் இடது 25யும், வலது
25யும் மற்றும் சுழுமுனையாகிய 1யும்
சேர்ந்த கூட்டுதொகையே 51 அட்சரமாகிய சிதம்பர சக்கரமாகும். இதை விளக்க விளங்கி கொள்ள தெரிந்தவன் பரத்தை தெரிந்தவன் ஆவான்.
சிதம்பர சக்கரத்தை தெரிந்து
கொள்வதற்குமுன், நமசிவய மந்திரத்தில்,
ந- நிலமாகவும்,
ம- நீராகவும்,
சி- நெருப்பாகவும்,
வ- காற்றாகவும்,
ய- ஆகாயமாகவும் உள்ளன.
இவற்றின் நிறம், சுவை, வடிவம், தூரம் ஆகியன...
ந- நிலம்-பொன்-சதுரம்-தித்திப்பு-12
அங்குலம்,
ம- நீர்-வெண்மை-பிறை வடிவம்-துவர்ப்பு-16 அங்குலம்,
சி- தீ-சிகப்பு-முக்கோணம்-உவர்ப்பு-8
அங்குலம்,
வ- காற்று-கருப்பு-அறுகோணம்- புளிப்பு-4 அங்குலம்,
ஆகாயம்- பச்சை-வட்டம்-கார்ப்பு-1
அங்குலமாகும்.
இவற்றில் நிலத் தத்துவத்தில் நிலத்தில் நிலம், நிலத்தில் நீர், நிலத்தில் தீ, நிலத்தில் காற்று, நிலத்தில் ஆகாயம் என ஐந்து பிரிவுகளாக உள்ளும் வெளியும் இயங்கும்.
இதேபோல் நீர்,தீ, காற்று மற்றும் ஆகாயம் என மொத்தம் 25 பிரிவுகளாக இயங்கும் விதத்தை 25 கட்டத்திற்குள் வைத்து ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தை குறிப்பிடுவதே சிதம்பர
சக்கரமாகும்.
பரிபாசை
-----------------
"கிழவி காய் காமம் கொடுக்கும்;
குமரி சதை காமம் கெடுக்கும்"
என்று தொடங்கும் சித்த மருத்துவ
குறிப்புள்ள ஓர் பாடல் உள்ளது.
இதில் கிழவி காய் என்பது முருங்கைக் காயையும், குமரி சதை என்பது காற்றாழை சதையும் குறிப்பிடுகின்றது. மேலும் கற்றாழை சதையானது சாப்பிட்டால் சூட்டை குறைப்பது
மட்டுமல்லாமல் பெண்களின் மேகப்படுதலை தடுக்கவும் இது ஓர் சிறந்த மருந்தாகும்.
இவ்வாறு மறைமுகமாக அர்த்தம் தரும்
சொற்கள் பரிபாசையில் உள்ளது.
மேலும் இப்பரிபாசையகராதி கொண்டு ஓர் உருவக் கடவுளை வணங்கும் பக்தன்
அக்கடவுளே அனைத்தும் என்றெண்ணி அவன் உடலிலேயே அனைத்தும் மறை பொருளாய் நேராய் உள்ளதாக பாவித்து வணங்கிய அடியார்களும் உள்ளனர். அதாவது காமதேனு என்ற பசுவில் எவ்வாறு ஒவ்வொரு அங்கமும்
ஒவ்வொரு தனித்தனி தெய்வமாக எண்ணி இப்படியே அனைத்து தெய்வங்களும் மற்றனைத்தும் அப்பசுவிலேயே இருப்பதாக கொண்டு வணங்குவது போல் ஆகும்.
மேலும் பெரும்பாலும் சித்தர்கள் அனைவரும் புருவமத்தி திறந்ததும் "ட"கரம் என்னும் எழுத்து வரும் வார்த்தைகளை எல்லாம் "ட"விற்கு பதிலாக "த"கரத்தை சேர்த்து அர்த்தமும்
பொருளும் கண்டுணர்ந்துள்ளனர்.
உதாரணத்திற்கு:-
படம்-பதம், பாடம்-பாதம்,
படி-பதி, சட்டசபை-சத்தசபை...
போன்றவகைளாகும்.
சமீபத்தில் வந்த வள்ளலாரும், பாம்பன்
சுவாாமிகளும் கூட "த"கர வித்தையை பற்றி அதிகமாக விளக்கியுள்ளனர். வள்ளலார் தகரத்தால் ஆன கண்ணாடி பெட்டியில்தான் விளக்கு ஆராதனை செய்ய வேண்டும் என வழியுறுத்தியதன் காரணம் "த"கரவித்தையை மறைமுகமாக விளக்கவே ஆகும்.
"தகரமெய்ஞ்ஞானத் தனிப்பொருள் வெளிஎனும்
அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி"
என்று "த"கர வித்தைப் பற்றி வள்ளலார் அகவலில் மறைமுகமாக உள்ளது. இந்த "ட"கர அல்லது
"த"கர வித்தையை ஒரு தெளிந்த குருவிடம் மட்டுமே பெறமுடியும்.
மேலும் பரிபாசை என்பதை வேறுவிதத்திலும் சொல்வதுண்டு. பரி என்றால் குதிரை அல்லது சுவாசத்தை குறிக்கும் ஒரு வார்த்தையாகும்.
பாசை என்பது புரிந்து கொள்ள உதவும்
மொழியை குறிக்கும். அதாவது சுவாசத்தினுடைய மொழி என்பது வேறு
பொருளாகும். எந்த ஒரு செயலிலும் சுவாசம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடன்வரும் என்பதை தெளிவாக விலகியுள்ளேன்....
சகலகலையிலும் முதன்மையானதும் இந்த சரசுவாசக்கலையே ஆகும்.
மேலும் காகபுஜண்டர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட அபூர்வ சரயோக முறையை முழுமையாக தனிப்பட்டமுறையில் நேரடியாக கற்பிக்கிறேன். Zoom ஆன்லைன் வகுப்பும் உள்ளது சேர்ந்து பயன் பெறுங்கள்.தொடர்புக்கு யோக மருத்துவர் திருவேங்கடம்(தீவிரம்).
9626308606
நன்றி நன்றி வணக்கம்.