Thozhar trust

Thozhar trust Our trust is dedicated to the services like funeral to the unclaimed bodies,medical camp,blood donation and awareness about eye donation &body donation.

26/04/2025
30/10/2024
ஊர்கூடி தேர் இழுத்தோம்  என்னசாமிக்கு பதிலாய் குப்பம்மாநேற்று இரவு 5-6-23 லாலிரோடு பகுதியிலிருந்து ஒரு போன் அண்ணா இங்க ஒர...
08/06/2023

ஊர்கூடி தேர் இழுத்தோம் என்ன
சாமிக்கு பதிலாய் குப்பம்மா

நேற்று இரவு 5-6-23 லாலிரோடு பகுதியிலிருந்து ஒரு போன் அண்ணா இங்க ஒரு அம்மா இறந்துட்டாங்க. வரிங்களா

லாலிரோடு
நான் கருவாகி உருவாகி 45 ஆண்டுகளாக வாழ்ந்த பூமி அங்கு குடியிருக்கும் எல்லோருமே என் சொந்தங்களே சாதியாலும் மதமாலும் அல்லநேசிப்பால்

லாலிரோடு

ஒருபுறம் நூற்றாண்டு கண்ட வேளாண்பல்கலைகழகம்
இன்னொருபுறம் வனக்கல்லூரி மற்றொருபுறம் GCT தொழில்நுட்ப கல்லூரி நான்குபுறமும்கல்லூரிகளால் சூழப்பட்டு
நடுவிலே பத்துரோடு இதுதான் லாலிரோடு

பத்து ரோட்டில் நான்கு ரோட்டில் தமிழீழ விடுதலைபுலிகள் பிரச்சாரபிரிவு வாரமொருமுறை வழங்கிய சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டுக்கொண்டே இருக்கும்

இந்திய இராணுவம் இலங்கையில் புலிகள் மீதான தாக்குதலை இலைமறைகாயாய் தொடங்கியகாலம் இந்திய இராணுவத்தின் துரோகத்தால்
குமரப்பா
புலேந்தி
அப்துல்லா
ரகு
நலன்
மிரேஸ்
ரெஜினால்ட்
அன்பழகன்
கரன்
ஆனந்தகுமார்
இப்படி 12 புலிகள் தங்களை மாய்த்துக்கொண்டனர்
இதை கண்டித்து லாலிரோட்டில்
S15A என்னும் பேருந்து தீக்கிரையாக்கப்படுகிறது

காவல்துறைக்கு சொல்லவா வேண்டும்
சுற்றி சுழன்று இராமகிருட்டிணன் தலைமையிலான திராவிடர்கழக தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள்

சுவரொட்டி ஒட்டப்பட்ட பகுதியிலேயே மோப்ப நாய்களோடு காவல்துறை வலம் வருகிறது அதே பகுதியில் என்னை மட்டும் கைது செய்ய இயலவில்லை அந்த மக்கள் என்னை பாதுகாத்த பூமி

திக தரும் தினமொரு சிந்தனை லாலிரோடு மெயின் ரோட்டில் எழுதி வைப்போம்
அன்று
எழுதிய வாசகம்

நினைவில் கொள்வோம்
ஈழத்தமிழரை அழிக்க அமைதிப்படை
அனுப்பியவன் ராஜீவ்

அன்று ஏதேட்சையாக ராஜீவ் குண்டு வெடிப்பில் மரணமடைகிறார்

நினைவில் கொள்வோம் என எழுதியதை
கொல்வோம் என தெரிந்தே எழுதியிருக்கிறார்கள் என திமுக காங்கிரஸ் கும்பல் என் வீட்டை தாக்க அரண்போல் நின்று காத்த மக்கள்
ஒரு மணிநேரத்தில் மீண்டும் அதே பகுதியில் வலம் வரச்செய்த மக்கள்
லாலிரோடு என்றவுடனே ஏதேதோ நினைவுகளுக்குள் மூழ்கி விட்டேன்

அழைப்பை ஏற்று
சென்றேன் அங்கே காங்கிரஸ் பேரியக்கத்தின் கோவைமாவட்ட துணைதலைவர் எனது நண்பர் செல்வம் அவர்கள் அங்கு வந்திருந்தார்
சாந்து உடனே எடுக்கனும் னு சொன்னார் நாளை காலை அனைத்து வசதியும் இருக்குமே எடுக்கலாமே என்றேன்

தாயும் மனநலம் குன்றிய மகள் மட்டுமே உள்ளனர்
நீண்டநாட்களாக படுக்கையில் இருந்துள்ளார் அருகருகே வீடுகள் எனக்கூற சரி
சொக்கம்புதூர் மயானத்தில் புதைகுழி வெட்ட வாய்ப்பிருக்குமா எனில் வாய்ப்பில்லை மின்சார விளக்குகளே இல்லாதநிலை
பிறகு விறகு வேணும்னா வாங்கிட்டுவாங்க எரித்துத்தருகிறோம்
இப்பவே மணி 10.
உடனே செல்வம் அதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தி கிட்டத்தட்ட ஏழு எட்டு கிலோமீட்டர் அலைந்து விறகு ஏற்பாடு செய்துவிட்டார்
நான் உடனே ராஜா ஆம்புலன்ஸ் தோழர் ஸ்டீபனை அழைக்க
உடனே அம்புலன்ஸ் அனுப்ப உறவுகளற்றோருக்கு ஊர்கூடி நின்றது இரவு 11 மணி பார்த்தோரெல்லாம் நலம் விசாரிக்க பதில் சொல்லிக்கொண்டே அந்த வீட்டினை அடைந்தேன்

நெடுஞ்சான்கிடையாக கிடத்தப்பட்ட உடல்
அருகே மனநலம் குன்றிய அந்த பெண்

அம்மாவ கொண்டு போறீங்களா கொல்லிவைக்க இடைவிடாம கேட்டுகிட்டே இருந்தது இப்போதுவரை காதுகளில் ஒழித்துக்கொண்டே இருக்கிறது

உறவினர்கள் மரணத்திற்கு கூட இவ்வளவு கூட்டம் கூடாது
அவ்வளவு கூட்டம்

ஏராளமான இளைஞர்கள் துணையோடு மயாணம் வந்தார் குப்பம்மா

எரியூட்டுகிறபோது இரவு 11. 45
எரியூட்டிவிட்டு திரும்பினேன் தோழர்கள் சிறிதுநேரம் கழித்து வருவதாக சொன்னார்கள்
வீடு திரும்பி பாதிதூரம் வந்தபின்னால் ஆகா டாக்டர் சான்றிதழ் வாங்காம வந்துட்டோமே என திரும்பி மயானம் சென்றால்
ஒருவருமே இல்லை
நானும் எரிந்து கொண்டிருக்கும் அந்த அம்மாவை தவிர

லாலிரோடு சாந்து என்றால்தான் இயக்க தோழர்களுக்கு தெரியும்

ஆகவே தோழர்அறக்கட்டளை யின் மூலமாக உடலை எடுப்பதா
இல்லை
லாலிரோட்டின் செல்லபிள்ளை சாந்துவாக எடுப்பதா

தோழர்அறக்கட்டளை தோழர்கள்
க.ரா ஜீவா
அண்ணாதுரை
சம்பத்குமார் ஆகியோரிடம் சொல்லிவிட்டு
லாலிரோடு சாந்தாகவே எரியூட்டுகிறேன்

அடக்கம் செய்திட நான் நீ என போட்டிபோட்டு காசு கொடுத்த நல்உள்ளங்கள்

அந்தகாசில் ஒரு ரூபாயும் எடுக்காமல் மனநலம் குன்றிய அந்த பெண்ணை ஏதேனும் விடுதியில் இணைத்திட முடியுமா என பார்க்கிறோம்

நன்றிகள்
தோழர் செல்வத்திற்கு
தோழர்களுக்கு

*தமிழ் Talks* - Inspiring Talks Series *Innovative Services* has been pioneering many new concepts in field of Tamil Wor...
17/11/2021

*தமிழ் Talks* - Inspiring Talks Series

*Innovative Services* has been pioneering many new concepts in field of Tamil Workshops, Celebrity Speaker Bureau, Institutional Training Methodologies and so on. *தமிழ் Talks* an inspirational channel where in people from various walks of lives will share their idea, thoughts, knowledge, experiences to make this world a better place.

In this episode of தமிழ் Talks, *Shatha Kumar* shares the reason behind this *Thozhar Trust*. Do watch and share your comments: https://www.youtube.com/watch?v=eKEMh65OCNY

For more Inspirational Stories from the Success People, Please *Subscribe to Inspiring Talks YouTube Channel*.

*Note*: If you want to be featured in *தமிழ் Talks*, please share you content / message to be showcased. Send us a 2 minutes video to tamiltalks.innovative@gmail.com

Thanks & Regards,
*Team Innovative Services*

A person is getting all kinds of service from fellow human beings while he is alive. But a person after his death gets service from the people very rarely. ...

மண்ணிற்கு வரும்முன்னே மரணத்தை தழுவிய மழலை23 இரவு 9.30 மணியளவில் தோழர் உதிரம் கோபி அழைத்து தோழர் அரசுமருத்துவமனையிலிருந்த...
23/09/2021

மண்ணிற்கு வரும்முன்னே மரணத்தை தழுவிய மழலை
23 இரவு 9.30 மணியளவில் தோழர் உதிரம் கோபி அழைத்து தோழர் அரசுமருத்துவமனையிலிருந்து தோழர் யுவராஜ் அழைத்தார் பிரசவ வார்டு முன்பு ஒருபெண் மரணமடைந்த தன் மகளின் குழந்தையை கையிலேந்தி கையறுநிலையில் ஏதுமற்ற நிலையில் பரிதவிர்த்து நிற்கிறார் எனச்சொல்ல
உடனே நமது தோழர்அறக்கட்டளை துரிதமாக செயல்படுகிறது
புலியகுளம் மாநகராட்சி மயாணத்திற்கு சென்று குழியெடுக்க சொன்னோம் ஆண்கள் யாருமற்றநிலை மணி இரவு 10
குழியெடுக்க இயலாதநிலையை அவர்களும் சொல்ல
நமது நினைவில் வாழும் ராஜேந்திரன் அவர்களின் மருமகள் அண்ணா நீங்க கொண்டுவாங்கண்ணா நான் குழியெடுக்கிறேன் என முன்வர
மின்சாரம் இல்லாத சுடுகாட்டில் வலிமையோடு இறங்கி அந்த தோழி குழிவெட்ட
அந்த தாய்க்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே நமது தோழர் அறக்கட்டளை ஆம்புலன்ஸ் வழிநடத்தும் ராஜா ஆம்புலன்ஸ் தோழர்
ஸ்டீபன் அவர்களுக்கு நமது தோழர் ஜீவா தகவல் கொடுக்க வினாடியில் வந்துநின்றார் ஸ்டீபன்
அவர்களையும் மழலையையும் வண்டியில் ஏற்றி மயாணம் விரைந்தது ராஜாஆம்புலன்ஸ்
மலரும்முன்னே வாடிய மொட்டு மண்ணிற்கு அளித்துவிட்டு மழலையை இழந்த தாயுக்கும் உறவுகளுக்கும் ஆறுதல்சொல்லி வந்தோம்

தோழர்அறக்கட்டளை எப்போதும் எங்கும் உதவும் நிலைக்கு தயாராய் உள்ளது
பயன்படுத்திக்கொள்ளுங்கள்
98422 67700
98422 51523

இன்று 62 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனது மரணத்திற்க்கு யாரும்காரணமல்ல. எனது உடலை தோழர்அறக்கட்டளை வசம் ஒப்படைத்து விடவும் எ...
27/07/2021

இன்று 62 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனது மரணத்திற்க்கு யாரும்காரணமல்ல. எனது உடலை தோழர்அறக்கட்டளை வசம் ஒப்படைத்து விடவும் எந்தவித சடங்குகளும் செய்யவேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்
அவருடைய மகன் என்னை தொடர்பு கொண்டு இத்தகவல்களை கூறினார்
நேரில் சென்று பிரேதபரிசோதனைக்கு ஏற்பாடு செய்து GKD மின்மயானத்தில்
எரியூட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து எரியூட்டினோம்
தோழர்கள் மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்றனர்

இது போன்ற நடவடிக்கைகள் (தற்கொலை) நமக்கு ஏற்புடையதல்ல ஆயினும் அவரது இறுதி ஆசையை நிறைவேற்றினோம்

தோழர் அறக்கட்டளை சார்பில் இன்று உடல் எரியூட்டல்மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் குடியிருக்கும் மும்தாஜ் 52 என்பவர் இறந்துவிட...
11/08/2020

தோழர் அறக்கட்டளை சார்பில் இன்று
உடல் எரியூட்டல்

மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் குடியிருக்கும் மும்தாஜ் 52 என்பவர் இறந்துவிட்டதாகவும் வசதியின்மையால் தாங்கள் தோழர் அறக்கட்டளை சார்பில் எரியூட்டம் செய்து தர வேண்டுமாய் பார்த்திபன் எனும் தோழர் வேண்டுகோள் வைத்தார் உடனடியாக நாம் அதனை ஏற்றுக்கொண்டு கோவை Gkd மின்மயானத்தில் எரியூட்டினோம்

இதில் சிறிய செய்தியாக

இறந்தவர் இஸ்லாமியர்

வாகனம் அனுப்பி உடலை எடுத்து வந்தவர் ஸ்டீபன் (ராஜா ஆம்புலன்ஸ்)கிருஸ்தவர்

எரியூட்டிய GKD மின்மயான பொறுப்பாளர் உண்ணிகுட்டன் இந்து

அனைத்து சிலவினங்களையும் ஏற்றுக்கொண்டது
மதசார்பற்ற தோழர் அறக்கட்டளை

இதுதான் தமிழ்நாடு

பங்கேற்றோர்
தோழர் .சாந்தகுமார்
தோழர் . ஜீவானந்தம்
அண்ணாதுரை
சம்பத்குமார்
வளர்மதி
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்
பார்த்திபன்
ரத்தினகுமார்

இனிய தோழமைகளுக்கு வணக்கம்  கொரோனா என்னும் தொற்று நோய்  மக்களை அச்சுருத்த துவங்கி கிட்டதட்ட ஊரடங்கு என அறிவித்து 35 நாட்க...
01/05/2020

இனிய தோழமைகளுக்கு வணக்கம் கொரோனா என்னும் தொற்று நோய் மக்களை அச்சுருத்த துவங்கி கிட்டதட்ட ஊரடங்கு என அறிவித்து
35 நாட்களாக. வேலையின்றி
கையிலிருந்த காசுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கடன் கேட்டாலும்
கடன் கிடைப்பது அரிதாகி
வரும் நிலையில்
அன்றாட கூலிவேலை செய்வோர்
நடைபாதை கடை வியாபாரிகள்
படிப்படியாய் பசிக்கொடுமையில் வாடுவோர் அதிகமாகி
வலிகளை தரும் செய்திகளை நாள்தோறும் படிக்கிறோம் படித்துவிட்டு
இதுவும் கடந்து போகும் என்னும் தத்துவத்தோடே நகர்கிறோம்
இருப்பினும் நமது தோழர் அறக்கட்டளை
விளிம்பு நிலை மக்களை நோக்கியே
தனது பயணத்தை தொடர்கிறது
திரு நங்கைகள்
கண்பார்வையற்றோர்
ஊனமுற்றோர் போன்றோருக்கு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான
ஒருமாத தேவையை கருத்தில் கொண்டு
அரிசி
மளிகை பொருட்கள்
காய்கறிகள்
போர்வைகள் என சமூக சேவை செய்துவருவது தாங்கள் அறிந்ததே

இன்று மே 1 ல்
வாழ்வினை தொலைத்து மக்களோடும் சேர்ந்து வாழ இயலாத முடியாத
தொழுநோயாளிகளை நோக்கிய நமது பயணம்
எந்தவகையிலும் தங்கள் வாழ்வை இந்த ஊரடங்கில் தகவமைத்துக்கொள்ளமுடியாத நிலையில் உள்ள
தோழர்களுக்கு

தமிழக அரசு நாற்பதாண்டுகளுக்கு முன்பே தொழுநோயை முற்றிலுமாக ஒழித்து விட்டது

அப்போது நோயிலே பீடிக்கப்பட்டவர்கள்
இறந்தோர் போக இன்னுமிருப்போரை
தோழர் அறக்கட்டளை
இன்று சந்தித்து
அவர்களுக்கான ஒரு மாதத்திற்கான
அரிசி மளிகைகளை வழங்கி.
அவர்களின் துன்பத்தை 1% த மேனும் குறைத்தோம் என்பதில் மகிழ்கிறது
இந் நிகழ்வில்
நான் (தோழர் சாந்தகுமார்)
தோழர் க ரா ஜீவா
பா .அண்ணாதுரை
சுரேஸ்
ஜீ .ஸ்டாலின்
இரா.யோகேஸ்
எத்திராஜ் அவர்கள் பங்கேற்றோம் அனைவருக்கும் முக கவசமும் வழங்கப்பட்டது

01/05/2020

இனிய தோழமைகளுக்கு வணக்கம் கொரோனா என்னும் தொற்று நோய் மக்களை அச்சுருத்த துவங்கி கிட்டதட்ட ஊரடங்கு என அறிவித்து
35 நாட்களாக. வேலையின்றி
கையிலிருந்த காசுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கடன் கேட்டாலும்
கடன் கிடைப்பது அரிதாகி
வரும் நிலையில்
அன்றாட கூலிவேலை செய்வோர்
நடைபாதை கடை வியாபாரிகள்
படிப்படியாய் பசிக்கொடுமையில் வாடுவோர் அதிகமாகி
வலிகளை தரும் செய்திகளை நாள்தோறும் படிக்கிறோம் படித்துவிட்டு
இதுவும் கடந்து போகும் என்னும் தத்துவத்தோடே நகர்கிறோம்
இருப்பினும் நமது தோழர் அறக்கட்டளை
விளிம்பு நிலை மக்களை நோக்கியே
தனது பயணத்தை தொடர்கிறது
திரு நங்கைகள்
கண்பார்வையற்றோர்
ஊனமுற்றோர் போன்றோருக்கு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான
ஒருமாத தேவையை கருத்தில் கொண்டு
அரிசி
மளிகை பொருட்கள்
காய்கறிகள்
போர்வைகள் என சமூக சேவை செய்துவருவது தாங்கள் அறிந்ததே

இன்று மே 1 ல்
வாழ்வினை தொலைத்து மக்களோடும் சேர்ந்து வாழ இயலாத முடியாத
தொழுநோயாளிகளை நோக்கிய நமது பயணம்
எந்தவகையிலும் தங்கள் வாழ்வை இந்த ஊரடங்கில் தகவமைத்துக்கொள்ளமுடியாத நிலையில் உள்ள
தோழர்களுக்கு

தமிழக அரசு நாற்பதாண்டுகளுக்கு முன்பே தொழுநோயை முற்றிலுமாக ஒழித்து விட்டது

அப்போது நோயிலே பீடிக்கப்பட்டவர்கள்
இறந்தோர் போக இன்னுமிருப்போரை
தோழர் அறக்கட்டளை
இன்று சந்தித்து
அவர்களுக்கான ஒரு மாதத்திற்கான
அரிசி மளிகைகளை வழங்கி.
அவர்களின் துன்பத்தை 1% த மேனும் குறைத்தோம் என்பதில் மகிழ்கிறது
இந் நிகழ்வில்
நான் (தோழர் சாந்தகுமார்)
தோழர் க ரா ஜீவா
பா .அண்ணாதுரை
சுரேஸ்
ஜீ .ஸ்டாலின்
இரா.யோகஸ்
எத்திராஜ் அவர்கள் பங்கேற்றோம் அனைவருக்கும் முக கவசமும் வழங்கப்பட்டது

Address

170 Metrical Street Near Flower Market Rspuram
Coimbatore
641002

Alerts

Be the first to know and let us send you an email when Thozhar trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Thozhar trust:

Share