Agathiyar Varmāni Medical, Martial & Yogic Varmalogy

Agathiyar Varmāni Medical, Martial & Yogic Varmalogy To Promote & Develop the Ancient Science of Varma Medicine, Martial Art & Varma Yoga

சித்தர் மருந்து-இதுசிவனார் அருளிய அருமருந்துஅண்ட சராசரமாய் அனுக்க ஆற்றலாம்அறிய இயலா அகத்திய ஞானத்துஅம்ச அணுவியல் ஆன்ம அற...
14/05/2022

சித்தர் மருந்து-இது
சிவனார் அருளிய அருமருந்து
அண்ட சராசரமாய் அனுக்க ஆற்றலாம்
அறிய இயலா அகத்திய ஞானத்து

அம்ச அணுவியல் ஆன்ம அறிவியல்
வம்சம் தழைக்க தரணியிலே தங்கியதே
தேரையன் தெளிவாய் தேர்ந்தெடுத்த
தீக்கணக்கு திருப்பானை தனைதீண்ட

முந்தை முனிவராம் எந்தை முன்னோர்
முடிவுறுத்த மூலியெல்லாம் முறையிட்டு
முக்காலம் மூப்பறுக்க அப்பன் அருளால்
நூற்றெட்டு பட்டைகளை நூதனமாய் இட்டேனே

இனிய காலை தொட்டு நல்மதியம் நாசூக்காய்
நாடினேன் நரன் காணா கானக மூலிநூறை
முத்தாப்பாய் முணுமுணுத்தேன் மூலந்திரம் தனை

தயவாய் வந்தார் தன்வந்தரி நம்வசமாய்
நங்வங் யங்சிங் மங்கெனவே மந்தரித்தேன்
மகிமையுடனே மகிழ்ந்திட்டார் பிறைமதி மகாதேவன்

இரசவாதி ரசனை போகன் போதித்தான் பொறுமையுடை
இசைபாடி விசைநடந்தேன் விந்தைவேர் கொணர
பாழ் உடலை பாதுகாக்க பைந்தமிழ் மருந்துண்டு
பதறாதீர் மானுடரே பக்குவமாய் செய்திட்டேன்

பாங்கான வனப்பூக்கள் வகையாக சேகரிக்க
சேனம் அமர் புரவியுடன் புலிப்பாணி
அருள்கூர்ந்தார்
அன்றைதினம் ஆகாயம் அதிரடியாய் இடிஇடிக்க இன்பமென்னவே இலைகட்கெலாம்.....

மாறி மாறி மாரி பெய்ய மனம்நிறைந்தேன் மாலை நேரத்தே....
மாசறு சித்தன் சிவவாக்கியன் ஆக்கிட்டான்
அறிவுப் பொழுதாய் அந்திப் பொழுதை

இதோ இங்கே இல்லத்து முன்பே
இனியசீடன் இணையுடனே இருட்டிரவில்
இயல்பாய்செய்தேன் வர்மத் தைலம் வாழ்வாங்கு
வாழி வாழி வர்மக்கலை வையத்துள் தனிச்சிறப்பாய்......

தமிழ் எனும்  கரை காணமுடியாத பெரு நீர்பரப்பை உள்ளடக்கிய அறிவு தேசத்தினுள் இன்றைய கல்விக்கு எட்டாத பல சூட்சுமங்களை நம் முன...
21/08/2021

தமிழ் எனும் கரை காணமுடியாத பெரு நீர்பரப்பை உள்ளடக்கிய அறிவு தேசத்தினுள் இன்றைய கல்விக்கு எட்டாத பல சூட்சுமங்களை நம் முன்னோர் தம் குரு சீடன் வழியாக பயிற்றுவித்தனர்...

இன்றைக்கு நாம் ராமாயணம் ,மஹாபாரதத்தில் பல செவியுறுகிறோம். பல உள்ளன.அதுவும் மஹாபாரதமெனில்...அப்பப்பா எத்தனை எத்தனை....

சரி விசயத்திற்கு வருவோம்....இராமாயணத்தை பற்றி சொல்லவேண்டுமானால் இராமாயணத்தை சுருங்க சொல்லின் இராமன் பிறந்தான் இராவணன் அழிந்தான் என்று கதையை சொல்லிடலாம்...
இடத்தில் இராமன் என்பதன் பொருள் இரா மண் என்றே பொருளாம்...அதாவது ஆள்வதற்கு மண் இல்லமால் காட்டுக்கு அனுப்ப பட்டவன் என்றும்...இராவணன் என்றால் வண்ணம் இல்லாதாவன் என்று சொல்லலாம்...அதாவது நிறம் இல்லாதவன் என்று கூறிடலாம்...நிறம் இல்லை என்றால்..வெள்ளை நிறமில்லாது கருப்பு நிறமுடையவன் என்று பொருள்...

மஹாபாரதத்தை சுருங்க சொல்லவேண்டுமெனில் ஒரு வாக்கியத்தில் சொல்லிடலாம்...பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்று..இதன் உள்ளர்த்தம் என்னவெனில் வியாசமுனிவர் மஹாபாரதத்தை இயற்ற நினைத்த போது அவரது கதை சொல்லும் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத விநாயகரால் தான் முடியும் என்று தீர்மானித்து..அவர் விநாயகரை வேண்ட அவ்வாறே விநாயகரும் ஒப்பு கொண்டு வியாசர் சொல்ல விநாயகர் எழுத முயற்சிக்க எழுதுகோல் அவரது எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாது முனை உடைந்துவிட தன தந்தத்தையே எழுதுகோலாக்கி நிறைவு செய்தார் என்று கூறப்படுகிறது. அவ்வாறே குரங்காய் முடிந்தது எனில் அனுமன் அர்ஜுனன் தேரில் கோடியாய் வீற்றிருந்து பாண்டவர்கள் வெற்றி பெற்றவுடன் தேர்க்கொடியிலிருந்து மறந்தேகியவுடன் மஹாபாரதம் முடிந்தது எனவாம்...

இதில் உள்ள ஒரு மிகப்பெரும் தமிழ் மருத்துவ சூட்சுமம் என்னவெனில்..பிள்ளையார் என்பது யானை..குரங்கு என்பது குரங்கே..அதாவது யானை காட்டில் என்னவெல்லாம் உண்ணும்? இலை தழைகள் தானே...அதுவும் ஒரு நாளைக்கு பல கிலோமீட்டர் தூரம் நடக்கும் யானைக்கு நிறைய பழங்கள் இலைகள் என உண்டு அவற்றை அரைகுறையாக சாணமாய் தள்ளிவிடும்.
இங்கே தான் நம் தமிழ் மருத்துவ பொக்கிஷம் கிடைக்கிறது...அந்த சாணத்தை வைத்து உயிர் காக்கும் மருத்துவ செய்முறைகள் செய்தனர் நம் முன்னோர்...அதற்கு யானை ரசம் என்றும் யானை கிழி என்றும் பலவாறு வர்ம மருத்துவத்தில் உபயோகப்படுகிறது...

உங்களுக்கு சிறுவயதில் யானை சாணத்தை மிதித்த அனுபவம் உண்டா? அவ்வாறு குழந்தை பருவத்தே யானை சாணத்தை மிதித்தவர்களின் கால்களுக்கு பித்த வெடிப்பு வராது...உண்மை..
எவ்வாறெனில்..யானை உண்ணும் தாவரங்களின் சாரும்,யானையின் வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலமும் சேர்ந்து யானை சாணத்தை ஒரு உயர் மருந்து பொருளாக்கி விடுகின்றன...அதுவே நம் உயிர் காக்கும் மிக அருமையான சொத்தாக நம் தமிழ் முன்னோர் கையாண்டனர்...இன்றைக்கு எந்த நவீன மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலும் செயற்கையாக உற்பத்தி செய்ய இயலவே இயலாது...
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்....இறந்தாலும் ஆயிரம் பொன் என பழமொழியில் தான் எவ்வளவு அர்த்தங்கள்.....யானையின் முழு உடலும் அவ்வளவு இயற்க்கையின் ஒட்டு மொத்த நிறைவு...

அடுத்த பதிவில் தொடரும்......நன்றி வணக்கம்.

Date & Time Schedule shall be announced shortly.
21/07/2020

Date & Time Schedule shall be announced shortly.

துளசி உஷ்ண பிரதேசத்திலும்,மலைப்பாங்கான இடங்களிலும் துளசிச்செடி  மானாவாரியாக வளர்ந்திருக்கும்.துளசி செடிவகையை சேர்ந்தது.ச...
22/06/2020

துளசி

உஷ்ண பிரதேசத்திலும்,மலைப்பாங்கான இடங்களிலும் துளசிச்செடி மானாவாரியாக வளர்ந்திருக்கும்.துளசி செடிவகையை சேர்ந்தது.சுமார் 30 செ.மீட்டர் முதல் 35 செ.மீட்டர் வரை உயர்ந்து வளரும்.பல சிறு கிளைகளுடன் அடர்த்தியாக வளரும்.துளசி செடி இருக்கும் இடத்தில் எந்த வகையான விஷ பூசிகளும் வராது,விலகி சென்று விடும்.இந்து கோவில்களில் உள்ள நந்தவனங்களில் இதை வளர்க்கின்றனர்.துளசி செடியை பூஜை பொருளாக கருதுகின்றனர்.துளசியை பூஜைக்கும் பயன்படுத்துகின்றனர்.

துளசி செடியை அனேக வீடுகளில் வளர்ப்பதை இன்றளவும் காணலாம்.வீடுகளின் நடு வாசலிலோ,முற்றத்திலோ,பின்பக்கமுள்ள தோட்டத்திலோ, ஒரு உயரமான மேடை அமைத்து,அதன் மேல் நடுவில் ஒரு மண் தொட்டி அமைத்து,அதில் மண் கொட்டி அதில் துளசிசெடியை வளர்ப்பார்கள்.தினசரி அதை சுற்றி வந்து வணங்குவார்கள்.சில சமயம் பூஜையும் செய்வார்கள்.துளசி செடி தெய்வத்திற்கு சமமானதென்பது அவர்கள் கருத்து.
துளசி செடியின் இலை தலைவலி முதல் பயங்கரமான குஷ்ட நோய் வரை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால்,அதை ஒவ்வொருவரும் வீட்டில் வளர்த்து வந்தால் எந்த நோய்க்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதை நம் முன்னோர்கள்,நாம் வசிக்கும் ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடியை வளர்க்கவேண்டுமென விரும்பினர்.ஆனால்,சாதாரணமான ஒரு செடியை வீட்டில் வளர்க்க சொன்னால் துளசியின் அரிய தன்மையை அறியாத மக்கள் அதை வளர்க்க மாட்டார்கள் என கருதித்தான்,துளசி செடிக்கு தெய்வத்தன்மை உண்டு எனக்கூறி அதை புனிதமாக கருதி வளர்க்க வேண்டுமென மக்களிடை கூறிவந்தனர்.ஒரு சிலர் தான் இதை வீடுகளில் வளர்க்க முன் வந்தனர்.

பொதுவாக நாம் துளசி செடியின் குணங்களையும்,அதன் சக்தியையும் அறிந்தோமானால்,ஒவ்வொருவரும் துளசி செடியை ஒரு தெய்வாம்சமாக கருதி தன் வீட்டிலும் வளர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.சாதாரண வியாதியிலிருந்து பயங்கரமான வியாதி வரை குணப்படுத்தும் சக்தி துளசிக்கும்,அடுத்து வம்புக்கும் தான் உண்டு.வேறு எந்த வகையான மூலிகைக்கும் இந்த வித சக்தி கிடையாது.ஒரு வீட்டில் துளசி செடி இருந்தால் எந்த நேரத்திலும் எந்த வியாதி ஏற்பட்டாலும் விசப்பூசிகள் தீண்டினாலும் எதற்கும் பயப்படாமல் துளசி இலைகளை கொண்டே குணப்படுத்தி நோயைப்போக்கி,உயிரைக்காத்துக்கொள்ளலாம்.
துளசியினால் குணமாகும் வியாதிகள்

1,உண்ட விஷத்தை முறிக்கும்

2,விஷ ஜுரம் குணமாகும்

3,ஜன்னிவாத சுரம் குணமாகும்

4,வயிற்றுபோக்குடன் ரத்தம் போவது நிற்கும்

5,காது குத்து வலி குணமாகும்

6,காது வலி குணமாகும்

7,தலைச்சுற்று குணமாக

8,பிரசவ வலி குணமாக

9,அம்மை அதிகரிக்காதிருக்க

10,மூத்திர துவார வலி குணமாக

11,வண்டு கடி குணமாக

12,வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி வயிற்று உப்புசம் குணமாக

13,எந்த வியாதியும் உண்டாகாமல் இருக்க

14,தோல் சம்பந்தமான நோய் குணமாக

15,மின்சாரம் தாக்கியவரை காப்பாற்ற

16,அஜீரணம் குணமாக

17, கெட்ட ரத்தம் சுத்தமாக

18,குஷ்ட நோய் குணமாக

19,குளிர் காய்ச்சல் குணமாக

20,மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக

21,விஷப்பூச்சிகள் விஷம் நீங்க

22,பாம்பு விஷத்தை முறித்து உயிர் பிழைக்க

23,காக்காய் வலிப்பு குணமாக

24,ஜலதோஷம் குணமாக

25,ஜீரண சக்தி உண்டாகுணமாக

26,தாதுவை கட்ட

27,சொப்பன ஸ்கலிதம் குணமாக

28,இடிதாங்கியாக பயன்பட

29,தேள் கொட்டு குணமாக

30,சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக

31,கண்ணில் விழுந்த தூசி,மண்ணை வெளியேற்ற

32,வாத ரோகம் குணமாக

33,காய்ச்சலின் போது தாகம் தணிய

34,பித்தம் குணமாக

35,குழந்தைகள் வாந்தியை நிறுத்த

36,குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த

37,சகல விதமான வாய்வுகளும் குணமாக

38,மாலைக்கண் குணமாக

39,எலிக்கடி விஷம் நீங்க

40,காய்ச்சல் வரும் அறிகுறி தோன்றினால்

41,இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிற்க

42,வாந்தியை நிறுத்த

43,தனுர்வாதம் குணமாக


44,வாதவீக்கம் குணமாக

45,மலேரியக்காய்ச்சல் குணமாக

46,வாய்வுப் பிடிப்பு குணமாக

47,இருமல் குணமாக

48,இன்ப்ளூயன்சா காய்ச்சல் குணமாக

49,காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த

50,இளைப்பு குணமாக

51,பற்று, படர்தாமரை இளைப்பு குணமாக

52,நோய் அணுகாமல் சுகமாய் வாழ

53,சிரங்கு குணமாக

54,கோழை,கபக்கட்டு நீங்க

55,சகல காய்ச்சல் மாத்திரை

56,மார்பு வலி குணமாக

57,சகல வித காய்ச்சலுக்கும் துளசி மாத்திரை


துளசியில் துளசி,கருந்துளசி என இருவகை உண்டு.சாதாரண துளசி தான் எங்கும் கிடைக்கும்.கருந்துளசி ஒரு சில இடங்களில் தான் கிடைக்கும்.ஒரு சில வியாதிகளை தீர்க்க கருந்துளசி தான் தேவைப்படும்.

ஒரு சிலருக்கு அடிக்கடி தலை வலி வரும்.உடனே தலைவலி நிவாரண மாத்திரைகள் விழுங்கி,சூடான காப்பியைக் குடிப்பார்கள். இந்த தலைவலியைப் போக்கவேண்டுமேன்றால்,மூன்று துளசி இலையை எடுத்து மை போல அரைத்து,தலைவலி ஏற்பட்ட இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டுவிட்டால் உடனே தலைவலி குணமாகும்.

ஆக இந்த 57 துளசி மருத்துவங்களையும் உங்களுக்கு வரும் பதிவில் விளக்குகிறேன்

 #கீழடி_வாழ்வியல்வணக்கம் அன்பர்களே!யாம் கடைபிடிக்கும் பழந்தமிழ் மருத்துவமுறை அக்காலத் தமிழரின் அக மற்றும் புற வாழ்வியலை ...
02/10/2019

#கீழடி_வாழ்வியல்

வணக்கம் அன்பர்களே!

யாம் கடைபிடிக்கும் பழந்தமிழ் மருத்துவமுறை அக்காலத் தமிழரின் அக மற்றும் புற வாழ்வியலை ஒட்டியே அமைந்துள்ளது.

சுடுமண்ணால் செய்யப்பட்ட பானை, சுட்ட செங்கற்கள்,பாறைகள்,உள்ளீடு பொருட்களாய் மூலிகைத் தாவரங்கள்,எண்ணெய் வகைகள் என தொன்றுதொட்டு குருமுறையாய் வர்மக்கலையுள் ஊடாய் தொடர்வது உணர்ந்து இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

நூற்றெட்டு மரப்பட்டைகள் மட்டுமல்லாது,மூலிகை செடிகள்,வேர்கள்,வனப்பூக்கள் இவையொடு கடுக்காய்,சித்தரத்தை, உள்ளிட்ட மருந்து சரக்குகள் நூற்றெட்டு என மருத்துவ கணிதம் சார்ந்து பிணியுற்றோர்க்கு நோயிலிருந்து விடுபட எத்தனை அறிவை மூத்த குடிகள் அறிந்திருந்தனர் என எண்ணும்போது வியந்து வணங்குகிறேன்.🙏

இது மட்டுமல்லாது உள்ளுக்கு ஈயும் வர்மக் கற்பங்கள், வர்மக் குளிகைகள்,வர்மக் கசாயங்கள் என அக மருத்துவத்திலும் அக்காலத் தமிழரின் புழக்கத்திலிருந் பொருட்களே(கல்வம்,மண் சட்டி,சுண்ண மற்றும் உப்பு வார்ப்பு கலயங்களென...) செய்ய உதவியாய் இருக்கின்றன.

#வாழக_புனித_இராவணரின்_சிந்தாமணி_மருத்துவம்

#வாழ்க_தமிழ்_மருத்துவம்_மாந்தர்பிணி_முழுமையாய்_அகல

உறையும் உயிராய் உயர்தமிழ் இறையாய்மேவும் மெய்யாய் மறையருள் வர்மம்தூரிகை ஓவியம் ஆலயம் அனைத்திடைகாரிகை காளையர் காதலாய் காவி...
28/09/2019

உறையும் உயிராய் உயர்தமிழ் இறையாய்
மேவும் மெய்யாய் மறையருள் வர்மம்
தூரிகை ஓவியம் ஆலயம் அனைத்திடை
காரிகை காளையர் காதலாய் காவியம்

சூரிய விடியல் பாடிடும் புள்ளினம்
ஆரிய ஆடல் காடிடை களித்திட
நேரிய நர்த்தனம் மதுமலர் கதுப்பாய்
கூரிய ஆயுதம் பகையுயிர் பறிக்க

ஏர்த்தொழில் எம்மிடம் ஏற்றம் இனிதாய்
போர்த்திறம் காட்டுவம் காடையர் வீழ
வேர்விளை வம்சமாய் மொழிவழி ஆய்ந்தே
கார்குடை மன்னவர் வளமுடை நிலத்தாய்

25/03/2019

பிரம்ம தண்டு

இது செடி வகையை சேர்ந்தது.சுமார் 45 சென்டி மீட்டார் வரை வளரும்.ஆயின் 20 சென்டி மீட்டர் அகலம் வரை அடர்த்தியாக இலை விட்டிருக்கும்.அடியிலிருந்து சிறிது சென்றவுடன் இரண்டு மூன்று கிளைகள் விட்டு அந்த கிளைகளில் பல சிறு கிளைகள் தோன்றி அவற்றில் பல இலைகள் இருக்கும்.

ஒவ்வொரு கிளையின் நுனியிலும் கொத்து கொத்தாக மொக்கு விட்டு பூ பூக்கும்.பிறகு காய் காய்த்து முற்றி நான்கு பங்காகப் பிளந்து நிற்கும்.உள்ளே கடுகை விட சிறிய கருநிறமான விதைகள் சுரசுரப்பாக ஆனால் பல பளபளப்புடன் ஒன்றை ஒன்று ஒட்டாமல் பொலபொலவென்று கலகலப்பாக இருக்கும்.காற்று அடிக்கும் போது விசைகள் சலசலக்கும் .ஒவ்வொரு உலர்ந்தகாயிலும் குறைந்தது 200 விதைகளிருக்கும்.ஒவ்வொரு காயும் சுமார் 2 சென்டி மீட்டர் நீளமும்,ஒரு சென்டி மீட்டார் கனம் உள்ளதாகவும் இருக்கும்.

பிரம்ம தண்டு இலைகள்,பூக்கள்,காய்கள் கிளைகள் யாவுமே முள் நிறைந்ததாக இருக்கும்.

இலைகள் ஒழுங்காக இராது.கோணல் மாணலாக சுருக்கம் சுருக்கமாக இருக்கும்.இலை லேசாக பச்சை நிறம் போல தோன்றினாலும் ஊதா கலந்த,சாம்பல் படர்ந்த நிறமாகவே இருக்கும்.

இது முள் நிறைந்ததாக இருப்பினும்,மருத்துவ முறைக்கு நன்கு பயன் படக்கூடியது .இது காடு,மலை,வறண்ட பிரதேசங்களிலும் அங்கொன்றும்,இங்கொன்றுமாக வளரும்.சில இடங்களில் கூட்டம் கூட்டமாகவும் வளரும்.கோடை காலத்தை விட மழை பெய்தபின் இது எங்கும் செழித்து வளர்ந்திருப்பதை காணலாம்.
காச நோய்
பிரம்மதண்டு இலையை வெயிலில் காய வைத்து உரலில் இடித்து தூளாக்கி துணியில் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துகொண்டு,காலை,மாலை ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் காச நோய் குணமாகும்.

கண் சம்பந்தமான நோய்கள் குணமாக
பிரம்ம தண்டு இலைக்காம்பை உடைத்தால் அதில் பால் வரும்.அந்த பாலில் ஒரு துளி கண்ணில் விட வேண்டும்.அதுவும் காலை வேலையில் ஒரு துளி கண்ணில் விடுதல் நலம்.இவ்வாறு 5 நாட்கள் செய்தால் கண்கள் சம்பந்தமான சகல கோளாறுகளும் நீங்கும்.
நல்ல பாம்பு விஷம் முறிய...
நல்ல பாம்பு கடித்துவிட்டதாகத் தெரிந்தால் பூ,காய்,இலைகளுடன் கூடிய பிரம்ம தண்டு செடியை வேரோடு பிடுங்கி வந்து முழுவதையும் தண்ணீரில் கழுவி,உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து வடிகட்டி,ஆளின் வயதுக்கு ஏற்றபடி 4 முதல் 6 தேக்கரண்டி வரை, உடனே உள்ளுக்கு கொடுத்துவிடவேண்டும்.சாற்றை கடிவாயிலும் தடவ வேண்டும்.பேதியாகும்,வாந்தி உண்டாகும்..இதற்காக கவலைப்படவேண்டியது இல்லை .களைப்பு தோன்றினால் நெற்பொறி அல்லது அரிசியை குழைய வைத்து கொடுக்க வேண்டும்.

பேய்சொரி குணமாக

பிரம்மதண்டு இலையை அரைத்து சொரியுள்ள இடத்தில பூசி,அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவி விட்டு தேங்காய் என்னை தடவி வந்தால் பேய்சொரி மறைந்து விடும்.

தேள் விஷம் முறிய

தேள் கொட்டிவிட்டால் உடனே பிரம்ம தண்டின் இலையைக் கொண்டு வந்து,அதை நன்றாகத் நைத்து ,கொட்டிய இடத்தில நன்றாகத் தேய்க்க வேண்டும்.கொஞ்ச நேரத்தில் கடுப்பு குறைந்து வருவது தெரியும்.கடுப்பு முழுவதும் தீரும்வரை தேய்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.
இது அல்லாது பல வர்ம மருத்துவத்திற்கும் பிரம்ம தண்டு செடி பயன்படும்..அது குறித்து மாணாக்கர்களுக்கு மட்டும் விளக்கப்படும்..

19/02/2019

திரிபுர சிவத்து அருளது பெய்யும்
தரித்திட்ட அவனது மதியது முழுதாய்
விரிந்திட்ட வானில் சித்தர் வலமாய்
உரித்திடு பாடம் உத்தரவாயே

நெய்யினு நன்மை எள்ளிட்ட எண்ணெய்
கொய்திட்ட வனமலர் உள்ளிடு பொருளே
தெய்திடு வேரெலாம் புள்ளென இருத்தி
பைய்யப் பொருத்தினேன் பாரீரே

தருத்தோல் உரித்து தகைந்திட்ட புடத்தில்
பருப்பிலா கடுக்காய் குங்கிலிய மெனவே
சருகிடை நடந்து அரவம்ஆனை பலவும்தாண்டி
துருத்திய அனைத்தும் மருந்தாமே

நூற்றெட்டு கணிதம் அறிந்திட வேணும்
போற்றிடு அகத்தியன் ஆசியும் பேண
வேற்றிலா மருத்துவம் ஆரிது பகர்வார்
கூற்றுவன் நோயெலாம் ஓடிப்போமே

மருந்தென நுகர்ந்திட தைலம் இதுவாய்
அருந்திட ஆனைரசமென உண்டென கூறு
புரிந்திட இயலா உயிரியல் அணுத்திரள்
சொரிந்திடு மேனியில் சோர்விலையாமே

06/02/2019

#தமிழனானேன்_க

நட்டகல்லை சுற்றிவந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

இந்தப் பாட்டில் புட்பம்,மந்திரம்*,நாதன் எனும் சொற்கள் சமகிருதம் போல் தோன்றுகிறதா....

உண்மை என்னவெனில் தமிழ் மொழியை பண்டைப் புலவர்கள் உயர்'தனிச்'செம்'மொழி என்பர்.....
புலவர் எனக் குறிப்பிடுகையில் பண்டிதர் எனவும் மக்கள் அழைப்பர்...பண்+ட்+(இ)தர்....
இயல் இசை நாடகம் எனப்படும் இம்மூன்றையும் உள்ளடக்கிய முத்தமிழில் பாணர் என்போர் அக்காலத்தில் அவை சென்று அரசரிடம் பண் பாடி வெகுமதிகள் பெற்று மக்கள் மன்றத்தில் இசைத் தமிழை வளர்த்தனர்....

இவ்வாறு பண் பாடும் போது சொற்களை பிரித்தும் சேர்த்தும் நீட்டியும் குறுக்கியும் செவிப்பறைகளில் மோதும்போது வரியும் களிப்பை என்னென்று கூற....

சரி,ஆயின் இன்றைக்கு இறைவழிபாடு சமஸ்கிருதத்திலே இருப்பதால் அதைப் புரிந்துகொள்ள ஆழ்மனம் முயன்று நனவுநிலை கடந்து கனவுநிலைக்கு முன்னுள்ள அரைநனவு நிலையில் மாயமகிழ்வுடன் சிறிது கற்பனை உலகில் பிரயாணிக்கிறோம்....இதை பக்தியென கற்பித்துக் கொள்கிறோம்....

சரி,முன்னர் யான் இட்ட சிவவாக்கிய சித்தரின் பாடலில் புட்ப. எனும் சொல் பூ+(ட்)ப்+அம் என அமைந்ததே...
இதிலும் வடவர்கள் பூ'மி எனும்'-பு'வனம் என்பதை பூலோகம் என மருவவைத்து வடமொழிக்குள் புகுத்திவிட்டார்கள்....
குப்த,மௌரியர் காலங்களில் வடக்கே செழுமையுற்றிருந்த வடமொழி அதற்கு முன்னரும் பின்னரும் தென்னாட்டிற்குள்ளும் பரவி தமிழில் கலந்து தெலுங்கு,கன்னடம்,துளு,கொங்கணி என வட்டார மொழிகளாய் கிளைத்து,தமிழ்வட்டெழுத்துகளிலும் மாற்றத்தை உட்புகுத்தி மெல்ல மெல்ல அக்கிளைமொழிகளை பலமாக்கியது...

மறுபடியும் சிவவாக்கியரின் பாடலில் உள்ள மந்திரம் எனும் சொல்லுக்கு வருகிறேன்.மனம்+திறம் என்பதே மந்திரம் எனவாயிற்று.
அதுபோல் நாதன் நா+த்+அன்...நாவில் கிளம்பும் நாதம் இறைவனை,பிராணணை நினைவுபடுத்துவதால் நாதன் நாத் எனும் கேதார்நாத்,பத்ரிநாத்,கமல்நாத்,விஸ்வநாத்.. என்று பிற்சேர்க்கை சொல்லாக வடமொழியில் வழக்காகியதே....

தெய்வம் எனும் சொல்லும் அவ்வாறே..திருக்குறளில் தெய்வம் எனும் இறையைக் குறிக்கும் சொல்லானது தெ'ன்னாடுடை முன்னோர் வழிபடு குறியீட்டுச் சொல்லே..இதுவே தேவ் என்றாகியதுபோலும்....

ஆக குமரிக்கண்டம் கடற்கோளாலும் கண்டச்சிதைவுகளாலும் மனிதன் புலம் பெயர்ந்தொடும் வேர்மொழியாம் தமிழ் தமிழகத்திலும் ஈழத்திலும் பெரிதாக பேசப்பட்டு,ஆயின் தமிழர்களாலே சம காலத்திலே அறிவுசார் பண்டிதர்களால் மறைமொழியாக உருவாக்கப்பட்ட சம+கிருதம் சமஸ்கிருதமாய் வடபுலம்(சிந்து சமவெளி) பெயர்ந்த மூதாதையர்களால் பொலிவு ஏற்படுத்தப்பட்டு...இப்போது தமிழுக்கே ஆப்படிக்கிறதோ என ஐயுறும் நிலை...

அந்தணரும் (அந்தம்+அணர்) தமிழரே என அறுதியிடும் கட்டுரை எழுதலாம் எனஅவா....
Linguistic எனப்படும் மொழியியலும் Anthropology எனப்படும் மூதாதையரியலையும் கணக்கில் கொண்டு நோக்கில் தமிழ்ச் சித்தர்களின் மறைச்சொல்லாடல்கள் கடினம் தவிர்ந்து சரியாய் விளங்குமென்பதே அன்பன் இராசேந்திரன் பொழிப்பாம்.....

ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

#தமிழே_சிவம்_தமிழே_வர்மம்
நீட்சியுடை இக்கட்டுரையை சலிப்பின்றி படித்த யாவருக்கும் அடியேனின் நன்றி கலந்த வணக்கங்கள் 👼🙏

#தமிழே_சிவம்_தமிழே_வர்மம்

ஓம் அகத்தீசன் அருளே போற்றி 🙏🙏🙏

Coming sunday Health camp at Banglore...Wishing people may call and book their timing from below posture mentioned numbe...
22/01/2019

Coming sunday Health camp at Banglore...
Wishing people may call and book their timing from below posture mentioned numbers....

😇😇😇😇😇*3rd Regular Traditional Medicine Camp at Chennai and Bangalore*I spend more than 3 decade in learning and train in...
05/01/2019

😇😇😇😇😇

*3rd Regular Traditional Medicine Camp at Chennai and Bangalore*

I spend more than 3 decade in learning and train in Varma based martial arts and healing. But I am never satisfied like this before, until I started treating special kids. This is my purpose, my life, I will pray almighty to heal all the people and understand their purpose.

We have made few changes to the camp as we move forward.

*Change 1* - Make sure you attend awareness camp to understand the way we have to approach special kids.

Treating special kids need a unique approach for the respective kid, it is not one format for all. You need to follow the diet, practice, to give time and refine the approach with follow up camps. Since not everyone is familiar with the approach, we request them to do a one day *Awareness Camp in treating Special needs and to anyone to understand basics of Chinthamani Medical System (designed and practiced by Ravana and also one the foundation for Siddha and Ayurveda)

*Change 2* - Medicine will take min 3 weeks to prepare and deliver.

The available of herbs, permission for forest department, Postal issues, environmental changes and spiritual days influence are few factors that takes time in the preparation.

*Change 3* - Only 5 Appointment in a day!

An approach of Varma and Chintamani Medical systems needs more time to examine, followed by proper unique training for therapy. It requires time, so that you learn it properly and record the video so that you can follow up daily.

So, moving forward, if you are seriously committing to take up this advanced system for help special kids or any other health issues, Please keep the above 3 points in mind before you sign up.

Program for Jan 2019,

*Chennai*
👉🏻 19th - Awareness Camp (one day workshop including Lunch and snacks)
👉🏻 20th - Health Camp (only 5 appointment)

*Bangalore*
👉🏻 26th - Awareness Camp (one day workshop including Lunch and snacks)
👉🏻 27th - Health Camp (only 5 appointment)

*Energy Exchange*
👉🏻 Awareness Camp Workshop / Adult – Rs. 1000
👉🏻 Health Camp / Appointment – Rs. 1000

*For Appointment Call*
🌸🌸🌸 9444084245 or 9840092193 🌸🌸🌸

*Chennai Address*
Chennai Wing Chun Academy
#132, Dharga Road,
Zamin Pallavaram,
Near KE Housing,
Chennai – 600043
90031 00381
https://goo.gl/maps/epzRsnQaSTU2

*Bangalore Address*
Chitra
# 204, Maithri Residency,
11th Main, 5th Cross,
Near Medhope Hospital,
Malleshpalya, Bangalore – 560075
99006 99200
https://goo.gl/maps/GSreyZoZFS92

Yours Sincerely
Aasan Dr. Rajandran Krishnaraj

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Address

34/2, Radha Mahal, Pari Nagar
Coimbatore
641025

Telephone

+919500746379

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agathiyar Varmāni Medical, Martial & Yogic Varmalogy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Agathiyar Varmāni Medical, Martial & Yogic Varmalogy:

Share