22/06/2020
துளசி
உஷ்ண பிரதேசத்திலும்,மலைப்பாங்கான இடங்களிலும் துளசிச்செடி மானாவாரியாக வளர்ந்திருக்கும்.துளசி செடிவகையை சேர்ந்தது.சுமார் 30 செ.மீட்டர் முதல் 35 செ.மீட்டர் வரை உயர்ந்து வளரும்.பல சிறு கிளைகளுடன் அடர்த்தியாக வளரும்.துளசி செடி இருக்கும் இடத்தில் எந்த வகையான விஷ பூசிகளும் வராது,விலகி சென்று விடும்.இந்து கோவில்களில் உள்ள நந்தவனங்களில் இதை வளர்க்கின்றனர்.துளசி செடியை பூஜை பொருளாக கருதுகின்றனர்.துளசியை பூஜைக்கும் பயன்படுத்துகின்றனர்.
துளசி செடியை அனேக வீடுகளில் வளர்ப்பதை இன்றளவும் காணலாம்.வீடுகளின் நடு வாசலிலோ,முற்றத்திலோ,பின்பக்கமுள்ள தோட்டத்திலோ, ஒரு உயரமான மேடை அமைத்து,அதன் மேல் நடுவில் ஒரு மண் தொட்டி அமைத்து,அதில் மண் கொட்டி அதில் துளசிசெடியை வளர்ப்பார்கள்.தினசரி அதை சுற்றி வந்து வணங்குவார்கள்.சில சமயம் பூஜையும் செய்வார்கள்.துளசி செடி தெய்வத்திற்கு சமமானதென்பது அவர்கள் கருத்து.
துளசி செடியின் இலை தலைவலி முதல் பயங்கரமான குஷ்ட நோய் வரை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால்,அதை ஒவ்வொருவரும் வீட்டில் வளர்த்து வந்தால் எந்த நோய்க்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதை நம் முன்னோர்கள்,நாம் வசிக்கும் ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடியை வளர்க்கவேண்டுமென விரும்பினர்.ஆனால்,சாதாரணமான ஒரு செடியை வீட்டில் வளர்க்க சொன்னால் துளசியின் அரிய தன்மையை அறியாத மக்கள் அதை வளர்க்க மாட்டார்கள் என கருதித்தான்,துளசி செடிக்கு தெய்வத்தன்மை உண்டு எனக்கூறி அதை புனிதமாக கருதி வளர்க்க வேண்டுமென மக்களிடை கூறிவந்தனர்.ஒரு சிலர் தான் இதை வீடுகளில் வளர்க்க முன் வந்தனர்.
பொதுவாக நாம் துளசி செடியின் குணங்களையும்,அதன் சக்தியையும் அறிந்தோமானால்,ஒவ்வொருவரும் துளசி செடியை ஒரு தெய்வாம்சமாக கருதி தன் வீட்டிலும் வளர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.சாதாரண வியாதியிலிருந்து பயங்கரமான வியாதி வரை குணப்படுத்தும் சக்தி துளசிக்கும்,அடுத்து வம்புக்கும் தான் உண்டு.வேறு எந்த வகையான மூலிகைக்கும் இந்த வித சக்தி கிடையாது.ஒரு வீட்டில் துளசி செடி இருந்தால் எந்த நேரத்திலும் எந்த வியாதி ஏற்பட்டாலும் விசப்பூசிகள் தீண்டினாலும் எதற்கும் பயப்படாமல் துளசி இலைகளை கொண்டே குணப்படுத்தி நோயைப்போக்கி,உயிரைக்காத்துக்கொள்ளலாம்.
துளசியினால் குணமாகும் வியாதிகள்
1,உண்ட விஷத்தை முறிக்கும்
2,விஷ ஜுரம் குணமாகும்
3,ஜன்னிவாத சுரம் குணமாகும்
4,வயிற்றுபோக்குடன் ரத்தம் போவது நிற்கும்
5,காது குத்து வலி குணமாகும்
6,காது வலி குணமாகும்
7,தலைச்சுற்று குணமாக
8,பிரசவ வலி குணமாக
9,அம்மை அதிகரிக்காதிருக்க
10,மூத்திர துவார வலி குணமாக
11,வண்டு கடி குணமாக
12,வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி வயிற்று உப்புசம் குணமாக
13,எந்த வியாதியும் உண்டாகாமல் இருக்க
14,தோல் சம்பந்தமான நோய் குணமாக
15,மின்சாரம் தாக்கியவரை காப்பாற்ற
16,அஜீரணம் குணமாக
17, கெட்ட ரத்தம் சுத்தமாக
18,குஷ்ட நோய் குணமாக
19,குளிர் காய்ச்சல் குணமாக
20,மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக
21,விஷப்பூச்சிகள் விஷம் நீங்க
22,பாம்பு விஷத்தை முறித்து உயிர் பிழைக்க
23,காக்காய் வலிப்பு குணமாக
24,ஜலதோஷம் குணமாக
25,ஜீரண சக்தி உண்டாகுணமாக
26,தாதுவை கட்ட
27,சொப்பன ஸ்கலிதம் குணமாக
28,இடிதாங்கியாக பயன்பட
29,தேள் கொட்டு குணமாக
30,சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக
31,கண்ணில் விழுந்த தூசி,மண்ணை வெளியேற்ற
32,வாத ரோகம் குணமாக
33,காய்ச்சலின் போது தாகம் தணிய
34,பித்தம் குணமாக
35,குழந்தைகள் வாந்தியை நிறுத்த
36,குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த
37,சகல விதமான வாய்வுகளும் குணமாக
38,மாலைக்கண் குணமாக
39,எலிக்கடி விஷம் நீங்க
40,காய்ச்சல் வரும் அறிகுறி தோன்றினால்
41,இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிற்க
42,வாந்தியை நிறுத்த
43,தனுர்வாதம் குணமாக
44,வாதவீக்கம் குணமாக
45,மலேரியக்காய்ச்சல் குணமாக
46,வாய்வுப் பிடிப்பு குணமாக
47,இருமல் குணமாக
48,இன்ப்ளூயன்சா காய்ச்சல் குணமாக
49,காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த
50,இளைப்பு குணமாக
51,பற்று, படர்தாமரை இளைப்பு குணமாக
52,நோய் அணுகாமல் சுகமாய் வாழ
53,சிரங்கு குணமாக
54,கோழை,கபக்கட்டு நீங்க
55,சகல காய்ச்சல் மாத்திரை
56,மார்பு வலி குணமாக
57,சகல வித காய்ச்சலுக்கும் துளசி மாத்திரை
துளசியில் துளசி,கருந்துளசி என இருவகை உண்டு.சாதாரண துளசி தான் எங்கும் கிடைக்கும்.கருந்துளசி ஒரு சில இடங்களில் தான் கிடைக்கும்.ஒரு சில வியாதிகளை தீர்க்க கருந்துளசி தான் தேவைப்படும்.
ஒரு சிலருக்கு அடிக்கடி தலை வலி வரும்.உடனே தலைவலி நிவாரண மாத்திரைகள் விழுங்கி,சூடான காப்பியைக் குடிப்பார்கள். இந்த தலைவலியைப் போக்கவேண்டுமேன்றால்,மூன்று துளசி இலையை எடுத்து மை போல அரைத்து,தலைவலி ஏற்பட்ட இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டுவிட்டால் உடனே தலைவலி குணமாகும்.
ஆக இந்த 57 துளசி மருத்துவங்களையும் உங்களுக்கு வரும் பதிவில் விளக்குகிறேன்