02/02/2017
நெருக்கடியான இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் எண்ணங்கள் நின்று நிதானிக்கப் பெரும்பாலும் தவறி விடுகின்றன. தளர்வான சமுதாயமாக இல்லாமல் எண்ணங்கள் சிதறியடிக்கப்படும் ஒரு இறுக்கமான நெருக்கடியான சமுதாயமே நிலவுகின்றது. எது நல்லது? எது கெட்டது என்று பிரித்தறியும் முன்னரே அவசரமாகச் சிந்தித்துச் சுயகட்டுப்பாட்டை இழந்து விடுகின்றனர். உளவியல் மற்றும் பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்துப் பிரித்தறியும் சமயோசிதத்;தைத் தவறவிடுகிறான். சரி என நினைத்துப் பிழையாகச் செய்வதும் பிழையாக இருக்குமோ என்று நினைத்துச் சரியானதைச் செய்யாமல் விடுவது எல்லாமே உத்தரவிடும் எண்ணங்களின் தாக்கங்களாகும்.
எத்தனை இறுக்கமான சூழலாகவிருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சினைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்குக் கொண்டு செல்லும். நுரையீரலுக்குச் சுத்தமான காற்றைக் கொண்டு செல்லும். எனவே, மன அழுத்தத்தைக் குறைக்கச் சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க்.