Devasahayam Siddha Ayurveda Hospital

Devasahayam Siddha Ayurveda Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Devasahayam Siddha Ayurveda Hospital, Hospital, Eraniel.

இந்தியாவிலிருந்து வந்த ஒரு பண்டைய நடைமுறையான யோகா, இப்போது சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக உலகம் முழுவதும் பின்...
20/06/2025

இந்தியாவிலிருந்து வந்த ஒரு பண்டைய நடைமுறையான யோகா, இப்போது சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. இது உடல் மற்றும் மனம் இரண்டிற்கும் உதவுகிறது, இது ஒரு முழுமையான உடற்பயிற்சி வடிவமாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று, உலகெங்கிலும் உள்ள மக்கள் அன்றாட வாழ்க்கையில் அதன் நன்மைகளை அங்கீகரிக்க சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த உலகில் உள்ள ஒரு செல் உயிரினம் முதல், ஆறறிவு படைத்த மனித இனம் வரை, அனைவரின் வாழ்க்கைக்கும், தேவையானது காற்று! உயிரினங்கள் உயிர் வாழத்தேவையான ஆக்சிஜன் காற்று நிரம்பிய ஒரே கோளாக பூமி உள்ளது. அதன் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் போனதால்தான் பலரும் இயற்கையாக கிடைக்கும் ஆக்சிஜனை உதாசீனம் செய்கிறோம்.

யோகா என்பது உங்கள் உடல் மற்றும் உங்கள் சுவாசம் இரண்டிலும் கவனம் செலுத்தும் ஒரு வகையான உடற்பயிற்சி. யோகா அமர்வு முடிந்ததும் பயன்படுத்த ஒரு கருவியாக இதை மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றுவது சுவாசக் கூறுதான்.

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!" என்று மனித உடலைப்பற்றி பாடினார், பட்டினத்தார். அது தத்துவம்! ஆயினும், உண்மையும் அதுதானே! "உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" என்றார், திருமூலர். உள்ளத்தில் உள்ள உற்சாகம், முகத்தில் உள்ள பொலிவு, உடலில் உள்ள வலிமை, இவை அனைத்துக்கும் காரணம், நாம் சுவாசிக்கும் காற்றுதான்.

தினமும் நாம் சாப்பிட்டாலும், இல்லையென்றாலும், தண்ணீர்தாகம் எடுத்து நீர் பருக முடியாமல் இருந்தாலும், நாம் மூச்சுவிடுவதையும், சுவாசிப்பதையும், செய்துகொண்டுதான் இருக்கிறோம், ஆனால் அந்த சுவாசத்தை நாம் சரியாக விடுகிறோமோ என்று நிறைய பேருக்கு தெரியாது. நம்முடைய சுவாசம் சரியாக இருந்தால் வாழ்க்கையில் சகலமும் சரியாக இருக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.

நம் சுவாசத்தில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டுதான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கும். சுவாசத்திற்கு அடிப்படையான காற்று, மூக்கின்வழியே உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டைவழியே, நுரையீரலை சென்றடைகிறது. நுரையீரலே, உள்ளேவரும் காற்றை, அதன் நுண்ணிய காற்றுப்பைகளுக்கு அனுப்பி, ஏற்கெனவே உள்ள சுத்திகரித்தபின் எஞ்சிய காற்றை, திருப்பி மூச்சின் வழியே, வெளியேற்றும்!. நுரையீரலின் பைகளில் உள்ள காற்று, இரத்தக்குழாய்களின் வழியே, உடலில் பரவும், இதன்மூலம் காற்றிலுள்ள பிராணவாயு எனும் ஆக்சிஜன், செல்களில் சேமிக்கப்பட்டு, உடலின் இயக்கத்தில் வெளியாகும் கார்பன், மூச்சுக்காற்றின் வழியே, வெளியேற்றப்படுகிறது. நாம் மூச்சு விடுவதன் அர்த்தம் செயல்பாடு இதுதான்.

மூச்சு எண்ணிக்கை குறையக்குறைய, ஆரோக்கியம் கூடும் என்பது சித்தர்கள் வாக்கும். நாம் எதையும் நிதானமாக யோசித்து செய்தால் செயல்கள் வெற்றியடையும். அதை போலத்தான் நம்முடைய சுவாசமும் இருக்க வேண்டும். மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் எண்ணிக்கை, ஒரு நிமிடத்துக்கு சராசரியாக பதினைந்து என்ற அளவில் இருந்தால், நூறு ஆண்டுகள் வரை வாழலாம், என்று சித்தர்கள் உரைத்துள்ளனர். நிமிடத்திற்கு பதினெட்டு முதல் இருபது என்ற அளவில் சுவாசித்தால், எழுபது ஆண்டுகள் முதல் எண்பது ஆண்டுகள் வரை உயிர்வாழலாம். இதுவே இன்றைய மனிதர்களின் சராசரி மூச்சின் அளவாகும்.


மனிதர்கள் சராசரியாக ஒருநாளைக்கு 21600 முறை சுவாசிக்கின்றனர் என்பது கணக்கு, அந்த சுவாசத்தில் அதில் கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் சுவாசங்கள் மட்டுமே, உடலில் பரவி, வெளியேறும், மீதம் உள்ள சுவாசங்களால் பலன்கள் ஏதுமில்லை!. நாம் சுவாசிக்கும் போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து, அதில் மூன்று மடங்கு நேரம் உள்ளே அடக்கி, பின்னர், ஒரு மடங்கு நேரத்தில் மூச்சை மெதுவாக வெளியேவிட வேண்டும்!, இதுதான் மூச்சுக்கணக்கு! மூச்சை, கணக்குபோட்டு சுவாசிக்கும் முறையே, பிரணாயாமம் என்று பண்டை மருத்துவம் அழைக்கிறது. பிரணாயாமம் என சித்தர்கள் கூறிய, இந்த அரியகலையை, முறையாகச்செய்து, மூச்சையடக்கி வாழப்பழகுவது, இன்று அனைவருக்கும் அத்தியாவசியமானது.

முறையான சுவாசத்தினால், மூச்சு உள்ளே நிற்கும் அளவுக்கு, உடலின் நன்மைகளை அதிகரிக்கும். மூச்சை உடனே வெளியிடாமல், சற்றுநேரம் அடக்கி வைக்கும்போது, காற்றில் உள்ள சக்தி அதிக அளவில் உடலில் சேகரிக்கப்படுகிறது, உடலில் தேங்கும் பிராண சக்தியே, மனதின் ஆற்றலை அதிகரிக்கிறது
இதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முகத்தின் பொலிவும் அதிகரிக்கும்.
சித்தர்கள் இந்த மூச்சின் அளவுகளை பற்றி குறிப்பிடுவது மிகப் பிரம்மிப்பாக உள்ளது
உடலிலே பிராண சக்தியை அதிகரித்து உடலின் உள் உறுப்புகளை சரியான முறையில் இயக்கி, உயிரை நீண்ட ஆயுளாக மாற்றி, வாழும் காலம் முழுவதும் இன்பமாக வாழ்வதற்கு இந்த நாடி சுத்தி பிராணாயாமம் மிகவும் அவசியம்.

இந்த கலையைதான் சித்தர்கள் சரகலை என்று அழைத்தார்கள். சரம் என்றால், நீண்ட அல்லது தொடர்ச்சி என்று பொருள். அதாவது நமது ஆயுளை நீண்ட காலம் மாற்றுவதற்கு சரகலை என்று பெயர். இதை திருமூலர் தனது பாடலிலே

ஏற்றி இறக்கி இருகாலும் பூறிக்கும்

காற்றை அளக்கும் கணக்கறிவாரில்லை

காற்றை அளக்கும் கணக்கறி வார்க்கு

கூற்றை உதைக்கும் குறியதுவாமே

என்று கூறுகிறார். இந்த பாடலின் பொருள் என்னவென்றால் நம் மூச்சை உள்முச்சு, வெளிமூச்சாக விடும்போது, இடகலை மற்றும் பிங்கலை நாடிகளின் ஓட்டத்தை சமன் செய்யும்போது, உயிரின் நேரடி தொடர்பான சுமுமுனை நாடி இயங்க ஆரம்பித்துவிடும். அந்த சுமுமுனை நாடி இயங்க ஆரம்பித்து விட்டால் அல்லது நாம் இயக்கி விட்டால் நம் மூச்சுனுடைய எண்ணிக்கை, ஒரு நிமிடத்திற்கு 15க்கும் கீழ் இறங்கி விடும். இதை தான் கணக்கை அறிவிப்பவர்கள் இல்லை என்றும், எல்லோரும் எப்போழுதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் அந்த பிராணாயாமம் பயிற்சியை அந்த சுமுமுனை நாடியை இயக்கும் கணக்குடன் செய்தால் எமனையும் நாம் வெல்லாம் என்று இந்த சரகலையின் ரகசியத்தை குறிப்பிடுகிறார்.
இந்த நாடி சுத்தி பிராணாயாமம் பயிற்சியை முறைப்படுத்தி இந்த உலகில் வாழும் மக்களுக்கு ஒரு அற்புதமான பொக்கிஷத்தை கொடுத்தவர் யோகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பதஞ்சலி முனிவர் ஆவார். அவர் தான் இந்த யோகத்தை முறைப்படுத்தி அதை எட்டு அங்கங்களாக பிரித்து அதற்கு அஷ்டாங்க யோகம் என்று பெயர் சூட்டினார். அந்த அஷ்டாங்க யோகம் என்றால் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

1. இயமம், 2. நியமம் 3. ஆசனம் 4.பிராணாயாமம் 5. பிராத்தியாகாரா 6. தாரணா 7. நியானம் 8. சமாதி என்ற எட்டு நிலைகள் ஆகும்.

நமது மூச்சினை, வலது நாசியின் வழியாக உள்ளே வெளியே செல்லும் மூச்சுக்கு பிங்கலை அல்லது சூரியநாடி அல்லது தந்தை நாடி அல்லது பித்ரு நாடி என்று கூறுவர்.

இடது நாசியின் வழியாக உள்ளே வெளியே செல்லும் மூச்சினை இடகலை அல்லது சந்திர நாடி அல்லது தாய் நாடி அல்லது மாத்ரு நாடி என்று கூறுவர்.

இந்த இடகலையும், பிங்கலையும் சமன்பட்டு சுழுமுனை நாடி வழியாக செல்லும் மூச்சுக்கு அருள் நாடி அல்லது குரு நாடி என்று கூறுவர்.

இந்த பிராணாயாமம் பயிற்சியில் நாம் குரு நாடியை இயக்கும்போது நமக்கு மூச்சின் எண்ணிக்கை குறைந்து நமது ஆயுள் கூடுகிறது.

சித்தர்கள் இந்த மூச்சின் அளவுகளை பற்றி குறிப்பிடுவது மிகப் பிரம்மிப்பாக உள்ளது.

எனவே ஆறு அறிவு படைத்த மனிதர்கள் தனது ஆயுள் காலத்தை நீட்டிக்க செய்வதற்கு அவர்களுடைய உடலில் உள்ள தத்துவங்களை ஆராய்ந்து அதில் அளவு முறை மீறாமலும், சிலவற்றை தவிர்த்தும், வந்தால் நமது ஆயுள் வரிவடையும் என்பதை சித்தர்கள் கண்டு பிடித்தார்கள்.
இதனை நீங்கள் முயன்றுதான் பாருங்களேன்.. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்க நாம் சரியாக நிதானமாக சுவாசிப்போம்.

நலம் நாடுவோம் -கோடைக்காலத்தை எதிர்கொள்வது எப்படி?                    கோடைகாலம் தொடங்கும் போதே வெப்பத்தையும் உணர தொடங்கிவ...
05/04/2024

நலம் நாடுவோம் -
கோடைக்காலத்தை எதிர்கொள்வது எப்படி?

கோடைகாலம் தொடங்கும் போதே வெப்பத்தையும் உணர தொடங்கிவிடுவோம். கடுமையான கோடையை தவிர்க்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் முக்கிய தீர்வுகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்

கோடைக்காலம் என்றில்லை, அதிக வெப்பம் நிலவும் காலங்களில் உண்டாகும் முதன்மையான பிரச்சினை உடலின் நீர்சத்து குறைதல்,(Dehydration) .இதன் முக்கிய அறிகுறிகள்

அதிக தண்ணீர் தாகம்,
வறண்ட தோல்,
உதடுகளில் பிளவு,
நாக்கு வறட்சி,
பேசும்போது உளறல்,
வலிப்பு,
வயிறு வலி,
தலை வலி,
தலை சுற்றல்,
நெஞ்சு எரிச்சல்,
படபடப்பு ,சிறுநீர்த் தொற்று, அம்மை நோய், மஞ்சள்காமாலை, செரிமானப்
பிரச்னை போன்ற வயிற்றுக் கோளாறுகள், தொண்டை அழற்சி (Pharyngitis), எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

உடலில் வெப்பம் அதிகரிப்பதால் பொதுவாகத் தலையில் கட்டி அல்லது பொடுகு ஏற்படும். ஆயுர்வேதக் கூந்தல் தைலங்கள், மருத்துவக் குணம் கொண்ட சூரணங்கள் (பொடி) ஆகியவை இதற்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

வயதானவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heat Stroke) என்னும் வெப்பத்தாக்கு நோய் வரலாம். கோடைக் காலத்தில் வியர்வைச் சுரக்காமலோ, சுரந்தும் ஆவியாகாமல் இருந்தாலோ, ஹைபோதலமஸ் (Hypothalamus) சரியாக வேலை செய்யாமல் இருந்தாலோ ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம்.

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகமாக வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக நேரம் வெயிலில் இருக்கும் போது மிக எளிதாக ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

அதே போல 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் நீர்சத்து வற்றி, ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு வரும்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட இணைநோய் இருக்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

இதுமட்டுமின்றி, வெயிலில் அதிக நேரம் வெளியே வேலை செய்யும் நபர்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக்கூடும். குறிப்பாக வெயிலின் தாக்கம் உச்சபட்சமாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை இருக்கும்.

இந்த நேரத்தில் கடினமான வேலையை வெயிலில் நின்று பார்க்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, சிலருக்கு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

சம்மர் அசிடிட்டி (Summer Acidity) என்று தனியாக எந்த பிரச்னையும் ஏற்படாது. இது வெயிலின் தாக்கத்தால் ஏற்படுகிறது. வெயில் காலத்தில் வரும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று செரிமான கோளாறு என்று அழைக்கப்படும் சம்மர் அசிடிட்டி.

வெயில் காலத்தில் அதிக சூட்டின் காரணமாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளின் மூலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை அதிகமாகி, உடலில் பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது.

வயிற்றில் சுரக்கும் இந்த அமிலம் அதிகமாவதால், செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்த பாதிப்பு வெயில் காலத்தில் சிலருக்கு அதிகமாக ஏற்படுகிறது.

கோடை காலம் வந்து விட்டால் வெப்பம் காரணமாக நோய்கள் பலவும் வந்து விடுகின்றன.

கோடை காலத்தில், வெயிலின் பாதிப்பில் இருந்து விடுபட குளிர்பானங்களை மக்கள் அதிகம் நாடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து கவர்ச்சியான விளம்பரங்களுடன் வினியோகிக்கும் குளிர் பானங்கள் பலரையும் சுண்டி இழுக்கின்றன. அவைகள் சூட்டைத் தணிப்பதற்குப் பதில், மோசமான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்

தட்பவெப்ப நிலை மாறியவுடனேயே உடலின் செயல்பாடுகளுக்கு ஏற்ப உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நாள் முழுவதும் அதிகத் தண்ணீர் அருந்துங்கள். அது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும். ரத்தத்தில் சிவப்பணுகள் சத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைவிட, பானையில் கிடைக்கும் குளிர்ந்த நீரைக் குடிப்பது நல்லது.

காய்கறிகளில் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, முட்டைகோஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடலாம். இதேபோல நெய், பால், தயிர், மோர், புழுங்கல் அரிசி சாதம், சோள மாவு போன்றவையும் கோடைக்கேற்ற உணவு வகைகள்தான்.

இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம்.

தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலா பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள்.

இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகளை சேர்த்து கொள்ளலாம்.

மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி, தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர்விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும்.

சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

மிகக் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது.

கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே, முடிந்தவரை அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

* டீ, காபி அடிக்கடி குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். அவற்றிலுள்ள கஃபைன் நீர் வறட்சியை ஏற்படுத்தும். மேலும் அதிக கஃபைன் சேரும்போது, அல்சர், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்றவை ஏற்படலாம். கோடைக்காலத்தில் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

* சாலையோரங்களில் சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படும் உணவுகள், புரூட்ஸ் சாலட்டுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடனே சிறுநீர் கழித்துவிட வேண்டும். சிறுநீரை அடக்குவது சிறுநீரகக் கற்கள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.

* அடர் நிறத்திலான ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.

* ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்குக் கேடு விளைவிக்கும். குறிப்பாக, ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் காற்று வழியாகப் பாக்டீரியாக்கள் பரவி தொண்டையில் தொற்று (Pahargnagitis) ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் தொற்று இதய வால்வு நோய்களை உண்டாக்கலாம். எனவே தொண்டையில் தொற்று ஏற்பட்டவருக்குக் காய்ச்சல், சருமத்தின் வழியாக ரத்தப்போக்கு,சிலருக்கு உடலில் உஷ்ணத் தன்மை அதிகரிப்பதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலம்,ஆசன வாயில் எரிச்சல் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. இத்தகைய சூழலில் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
இது ரத்தச் சிவப்பணுக்களைக் குறைப்பதுடன் இதயச் செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இவற்றை முறையாகப் பின்பற்றினாலே கோடைக்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

Dr.D.S. ஆன்றனி மில்லஸ், BAMS,
தேவசகாயம் வைத்தியசாலை,
(சித்தா - ஆயுர்வேதா ஆய்வகம்)
நடுத்தேரி,திங்கள்நகர்,Mob: 9894395022

01/04/2024
01/04/2024
11/01/2023

நலம் நாடுவோம் - மலசிக்கல் (Constipation)

மலசிக்கல் நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி அவதிப்படும் விசயமாகும். மலம் கழிக்கும் உணர்வு ஒருவரை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தால், அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் என்று தாராளமாகக் கூறலாம். மலச்சிக்கல் தொந்தரவால் அவதிப்படுபவர்களைக் கேட்டால், ’மலத்தை இயல்பாக வெளியேற்றுபவர்கள் கொடுத்துவைத்தவர்கள்’ என்று சொல்லுவார்கள்.
மலம் வெளியேற்றுவதில் உடலில் உள்ள வாத தோசமே முக்கிய பங்காற்றுகிறது. மனிதனின் உணவு பழக்கம் மற்றும் பழக்க வழக்கங்களால் உடலில் உள்ள வாத தோசம் அதிகரித்து அபான வாய்வை கேடடைய செய்து மலசிக்கலை உருவாக்குகிறது. கல்போல கடினமான மலம், முழுமையாக மலம் வெளியேறாமல் துன்பப்படுவது, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வாயு பிரிதல்... என மலச்சிக்கல் உண்டாக்கும் அறிகுறிகளே கடுமையான உணர்வுகளைக் கொடுப்பவை.

ஆரோக்கியத்தை சுட்டிக்காட்டும் காரணி:

சிலருக்கு டீ, மற்றும் சிகரெட் பிடித்தால்தான் மலம் வெளியேறும் என்பவர்கள் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்வது நல்லது. எந்த பொருள்களின் உதவியும் இல்லாமல், இளகிய மலமாக வெளியேறுவதுதான் உடலுக்கு நல்லது. சாப்பிட்ட உணவு முறையாகச் செரிமானம் அடைந்து, உடல் இயக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் காரணியே மலம். ’சில நாள்கள் வரும், சில நாள்கள் வராது’ என்று அலட்சியமாகவிடக்கூடிய விஷயம் அல்ல மலம். மலச்சிக்கல் உண்டாவதற்கான காரணிகளை ஆராய்ந்து, மலத்தை இளகியதாக வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


மலசிக்கலுக்கான காரணங்கள்:

துரித உணவுகள்,வறட்சி மற்றும் குளிர்ச்சியான உணவுகள் தொடர்ந்து சாப்பிடும்போது மலச்சிக்கல் உண்டாவது உறுதி. பெருநகரங்களின் துரித வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு, வேறுவழியின்றி தினமும் அதிக உப்பு,எரிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை உட்கொள்வது மலசிக்கலை ஏற்படுத்தும்.
இரவில் விழித்திருத்தல்
தேவையான தண்ணீர் குடிக்காமலிருப்பது போன்றவை
வெயில் அதிக நேரம் வேலை செய்வது, நெடுந்தூர நடை பயிற்சி, அதிகளவு வாகனங்களில் பயணித்தல்,ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு மலசிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

நார்சத்து மிகுந்த உணவுகள் உண்ணாமலிருப்பது,அதிகளவு மருந்துகள் சாப்பிடுவது மற்றும் மனஅழுத்தம் போன்றவைகள் மலசிக்கலை ஏற்படுத்தும் காரணிகளாகும்.
துரித உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் குடல் இயக்கங்களைத் தடுத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். மைதா சேர்த்த உணவுகள், நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும். மசாலா நிறைந்த அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்பது, செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் பருகாதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கியக் காரணிகள்.

சில வகை மருந்துகளை உட்கொள்வதாலும், முதிர்ந்த வயதின் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம். மனஅழுத்தத்துக்கும் மலச்சிக்கலுக்கும் நெருங்கிய உறவு உண்டு. உடல் உழைப்பு இல்லாதவர்கள், அதிகமாக தேநீர், காபி அருந்துபவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும். இயல்பாக வெளியேறும் மலத்தை அடக்கும்போது, மலத்தில் இருக்கவேண்டிய நீர்த்துவம் மீண்டும் மீண்டும் உறிஞ்சப்பட்டு, வறண்ட மலமாக வெளியேறும். வறண்டு கடினப்பட்ட மலம், மலப்பாதையில் சிக்கல்களை உண்டாக்கி, பௌத்திரம்,மூலம் போன்றநோய்களை உண்டாக்கும்.

மலசிக்கலை சரி செய்ய மலம் கழிக்கும் முறை மிக முக்கியமானது
மூட்டுகளில் எந்த பிரச்னையும் இல்லையெனில், மேலைநாட்டு கழிப்பறை தவிர்த்து நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள குத்தவைத்து மலம் கழிக்கும் முறையைப் பின்பற்றினாலே மலம் இயல்பாக வெளியேறும். மேலைநாட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு அதிகளவில் இருக்கும். குத்தவைத்து மலம் கழிக்கச் சிரமப்பட்டு, மேலைநாட்டு பாணியில் அமர்ந்துகொண்டு மலம் கழிக்கும்போது, முழுமையாக கழிவுகளை வெளியேற்ற முடியாது. மேலும், மலப்பை தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் வெளியாவதில் சிரமத்தை உண்டாக்கும். அதே வேளையில் தொடைப் பகுதிகள் வயிற்றுத் தசைகளை அழுத்தும் அளவுக்கு குத்தவைத்து மலம் கழிக்க முயலும் முறை, மலத்தை முழுமையாக வெளியேற்றும்; இடுப்புப் பகுதிகளுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும்.


மலச்சிக்கல் ஏற்பட்டவுடன், உடனடியாக மலமிளக்கி மருந்துகளின் ஆதரவைத் தேடக் கூடாது. தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். திடீரென மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், முந்தைய நாள் சாப்பிட்ட உணவின் தன்மையை ஆராய்ந்தால் போதும். காரணம் பெரும்பாலும் கிடைத்துவிடும். முதிர்ந்த வயதில் குடலின் செயல்பாடுகள் பெருமளவில் குறைந்திருக்கும்போது மலமிளக்கி மருந்துகளை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். ஆனால், பதினைந்து வயதிலிருந்தே மலத்தை வெளியேற்ற, மருந்துகளை நாடுவது மிகப் பெரிய தவறு.

நார்ச்சத்துள்ள உணவுகள், குடலின் அசைவுகளை துரிதப்படுத்தி, மலத்தை வெளியேற்ற உதவும்.
பசலை, சிறுகீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள், நார்த்தன்மை நிறைந்த காய்கள், வாழை, பப்பாளி, திராட்சை போன்ற பழங்கள், பயறு வகைகள், முழுதானியங்கள், கொட்டை வகைகள்... என அனைத்தும் தேவை. மலச்சிக்கலை சரிசெய்வதில் வெந்தயம் சிறந்த பங்களிப்பைத் தரக்கூடியது.
குடலுக்கு நன்மை செய்யக்கூடிய ’புரோபையாடிக்’ கூறுகள் நிறைந்த மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும். இள வெந்நீர் குடலின் அசைவுகளை அதிகரிக்க (Increases peristalsis) உதவும். நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து. பன்னாட்டு குளிர்பானங்களை எப்போதும் அருந்தக் கூடாது. விளக்கெண்ணெய் அமைதியான மலமிளக்கி. விளக்கெண்ணெயை மலமிளக்கியாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம். முன்பெல்லாம் விளக்கெண்ணெயை அவ்வப்போது சிறிதளவு குடிக்கும் வழக்கம் நம்மிடையே இருந்தது. இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது.

செரிமானத்தை சிறப்பாக்கக்கூடிய சீரகம், சுக்கு, மிளகு, ஏலம் போன்றவற்றை உணவு வகைகளில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவரின் ஆலோசனைப்படி பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டு, செரிமானப் பகுதிகளை புத்துணர்வுடன் வைத்துக்கொள்வது அவசியம். பேதி மருந்துகள் மலச்சிக்கலை நீக்கும்; உடலில் தேங்கிய நச்சுப் பொருள்களை வெளியேற்றவும் உதவும்.

எளிய மருந்துகள்…

சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், அவிபதிகர சூரணம்,அபயா அரிஷ்டம்,திருவிருத் லேகியம்,திராக்ஷாதி லேகியம்.. என உடல் அமைப்புக்குத் தகுந்த நிறைய மருந்துகள் இருக்கின்றன. தொடர்ந்து மலச்சிக்கல் தொந்தரவு நீடித்தால், மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை. சில நோய் நிலைகளிலும் மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உணவியல் மற்றும் வாழ்வியல் மாற்றம் மூலம் சரிசெய்ய முடியாதபோது மருந்துகளுக்குச் செல்லலாம். மருந்துகளின் மூலம் இயல்பான மலம் வெளியானவுடன், மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது.

நோய்கள் உண்டாகவிருப்பதை, ’மலச்சிக்கல்’ எனும் அறிகுறியின் மூலம் உடல் வெளிப்படுத்துவதைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். மலச்சிக்கல்… அநேக நோய்களுக்கு காரணமாக அமைகிறது. தோல் நோய்களில் தொடங்கி இதய நோய்கள் வரை, மலச்சிக்கலால் உருவாகலாம்.
மலம் இளகலாக. வெளியேறாமல், கடினமாக வெளியேறினால் மூலம், ஆசனவாய் வெடிப்பு (Fissure), பெளத்திரம் (Fistula),தலைவலி,இடுப்பு வலி போன்ற நோய்கள் உறுதியாக உண்டாகும். மலச்சிக்கல் என்பது தீர்க்க முடியாத நோயல்ல. சில மாற்றங்களால் சரி செய்யக்கூடியது. நமது செரிமானப் உறுப்புகளை கவனிக்கச் சொல்லும் சிக்கல்தான் மலச்சிக்கல்...
மலசிக்கல் பெரும் சிக்கல் என்பதை உணர்ந்து நோய்களில் இருந்து காத்து கொள்வதே நம் நலம் நாடும் வழியாகும்.

Dr.D.S.ஆன்றனி மில்லஸ்,BAMS,
தேவசகாயம் வைத்தியசாலை,நடுத்தேரி,மாங்குழி 9894395022

27/12/2022

நலம் நாடுவோம் - பக்கவாதம்

உலகம் முழுவதிலும் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளில் பக்கவாத நோய் முன்னணி வகிக்கிறது. இந்த ஆண்டு 1 கோடியே 45 லட்சம் மக்கள் பக்கவாதம் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதில் 55 லட்சம் மக்கள் இந்நோயால் உயிரிழக்க நேரிடும் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் 8 கோடி மக்கள் பக்கவாதத்திலிருந்து உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் 5 கோடி மக்கள் பக்கவாதத்தால் ஏற்பட்ட குறைபாடுகளுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சகஜமான நிலையில் வாழ்வதில்லை. ஆனால் சரியான சிகிச்சைகளாலும், முறையான பயிற்சிகளாலும் வாழ்க்கையை வாழ முடியும்.
பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படைவது தான். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். பக்கவாதத்திலிருந்து மீண்டு வர வேண்டுமென்றால் முதலில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது. பக்கவாதத்தின் அறிகுறிகளை புரிந்துக் கொள்ளுவதும், அங்ஙணம் அறிகுறிகளை உணரும்போது துரிதமாக செயல்படுவது தான்.

பக்கவாத நோயின் அறிகுறிகள்:


1)நடக்கும் போது தள்ளாடுதல், உடற்சமநிலை இழத்தல்

2)கண்களில் ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழத்தல்
3)முகம் ஒரு புறமாக இழுத்து கொள்ளுதல்
ஒரு பக்க கை கால்கள் பலவீனமடைந்து செயல்பட இயலாதது
4)பேச இயலாததோ அல்லது பேச்சில் குளறுதல்

5) தசைகள் பலகீனம் மற்றும் இறுக்கமாக தோன்றுதல்,
6)அடிக்கடி காரணமின்றி தலைவலி தோன்றுதல்
இவற்றை உணருவதாலும், செயல்படுவதாலும் தாம் பக்கவாதத்தில் ஏற்படும் பாதிப்பை வெகுவாக குறைக்க இயலும்.

இத்தகைய கொடுமையான பக்கவாதத்திலிருந்து மீண்டு வருவதைக் காட்டிலும், பாதுகாத்தல் மிகவும் எளிது, அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை மிகவும் சில ஆனால் முக்கியமானவை. அவை, உங்கள் உடல் நலம் பேணுதல்
நோய் காரணிகளை உணர்ந்து தவிர்த்தல். முதன்மையான விஷயம், நோய் காரணிகளை அறிந்து கொள்ளுதல், அதற்கு ஏதேனும் மருத்துவரை அணுகி உங்களை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.


காரணங்கள்:

மூளையில் விபத்து மற்றும் விளையாட்டுகளால் ஏற்படும் இரத்தக்கசிவு

மூளையில் தோன்றும் கட்டிகள்

அதிக இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள்

உடல் பருமன் மற்றும் நீரழிவு

புகைப்பழக்கம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை
தற்காப்பு வழிகள் :


கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து நார் சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுக்கு, இஞ்சி,பூண்டு,சிறிய வெங்காயம்,முள்ளங்கி போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்

திராட்சை,மாதுளை போன்ற பழங்கள் மிகவும் நல்லது.

குளிரூட்டப்பட்ட உணவுகள், அதிக உப்பு மற்றும் கார சுவையுள்ள. உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உணவு உண்ணாமல் இருப்பது,மிதமிஞ்சிய உடற்பயிற்சி மற்றும் ,இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்தல் கூடாது.

இரவில் தூங்காமல் விழித்திருத்தல்,புகைப்பழக்கம்,மதுப் பழக்கம் முதலியவை தவிர்க்கவும்.
நீரழிவு,இரத்த அழுத்தம்,இதய நோய்கள் இருப்பின் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

தினமும் அளவான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க யோகா,தியானம் செய்வது நல்லது


சிகிட்சைகள்:
பக்கவாதம் உடலின் வாத தோசம் மிகுதியால் ஏற்படும் வியாதியாகும். ஆயுர்வேதத்தில் பக்கவாதம்( உடலின் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் பாதிப்படைவது)
ஓரங்கவாதம் (உடலின் ஏதாவது ஒரு கை,கால்,முகம, மட்டும் பாதிப்படைவது ஓரங்கவாதம் எனவும், உடலின் இரு கைகள்,கால்கள்,முகம் இவை அனைத்தும் சேர்ந்து பாதிப்படைவது சர்வாங்க வாதம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மூளையில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு ஏற்ப உடலின் பாகங்களில் ஏற்படும் மாறுதல்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உள் மருந்து,வெளி மருந்துகளோடு உடற்பயிற்சியும் அவசியம்.

பக்கவாதத்திற்கு ஆயுர்வேதத்தில் பஞ்சகர்மா சிகிட்சையானது நரம்பு மண்டல நோய்களுக்கு சிறந்ததாகும்.
சிரோ பஸ்தி, மாத்ரா வஸ்தி,எண்ணைய் பிழிச்சல் போன்றவை நரம்பு மண்டலத்திற்கு வலிமையும்,பக்கவாதத்தால் பாதிப்படைந்த இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

குறுந்தோட்டி தைலம், காயசர்வாங்கம், தன்வந்தரம் தைலம் போன்ற மருந்துகளை உடலில் தேய்த்து வர வலி, தசை மெலிவு பொன்றவை நலமாகும்
நவரைக் கிழி,இலைக்கிழி,ஆவிக்குளியல் முதலிய சிகிட்சைகள் உடலின் தசை இறுக்கத்தை குணப்படுத்தும்.
வஸ்தி,விரேச்சனம்,நசியம் போன்ற சிகிட்சை முறைகள் உடலின் அதிகப்படியான வாத தோசம் மற்றும் கழிவுகளையும் வெளியேற்றி நரம்பு மண்டலத்தை வலுவாக்க உதவும்.

கந்தர்வஹஸ்தாதி கசாயம்,சகஸ்ராதி கசாயம்,மகா ராசனாதி கசாயம்,திரயோதசாங்க குக்குலு,பலாரிஷ்டம் போன்றவை பக்கவாதத்திற்கு சிறந்த. மருந்துகளாகும். எந்த நோயாக இருப்பினும் அந்நோய்க்கான காரணங்களை தவிர்த்து நோயை குணப்படுத்துவதே நம் நலம் நாடும் வழியாகும்.

Dr.ஆன்றனி மில்லஸ், BAMS,
தேவசகாயம் வைத்தியசாலை, மாங்குழி -9894395022

நலம் நாடுவோம் - கழுத்து எலும்பு தேய்வு இன்றைய நாகரீக வாழ்க்கையில் பலருக்கும் வரக்கூடிய நோய்களில் ஒன்று கழுத்து எலும்புகள...
14/12/2022

நலம் நாடுவோம் - கழுத்து எலும்பு தேய்வு

இன்றைய நாகரீக வாழ்க்கையில் பலருக்கும் வரக்கூடிய நோய்களில் ஒன்று கழுத்து எலும்புகளில் தேய்வு. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோர் தங்களது பழக்க வழக்கத்தினாலே இந்நோயை பரிசாக பெற்று வருகின்றனர். முன்னர் தலையில் பெரும் சுமை தூக்குபவர்களுக்கு கூட இந்நோய் அரிதாகவே காணப்பட்டது. இப்போது யாரைக் கேட்டாலும் கழுத்து வலி,கழுத்து எலும்பில் தேய்வு என்றுக்கூறுவது வாடிக்கையாகி விட்டது.எண் சான் உடம்பிற்குத் தலையே பிரதானம் என்பர். அத்தகைய தலையை உடலுடன் இனைத்துத் தாங்குவது தண்டுவடக் கழுத்து எலும்புகளே... தண்டுவட எலும்புகள் மொத்தம் 33 ஆகும். இதில் கழுத்து எலும்புகள் 7, இதனையே நாம் ஆங்கிலத்தில் Cervical Bones என்று அழைக்கிறோம். இந்தத் தண்டுவட எலும்புகளினூடாகவே மூளையிலிருந்து செல்லும் முக்கிய நரம்புகள், இரத்தக் குழாய்கள் செல்கின்றது.

இத்தகைய கழுத்து எலும்புகளில் உராய்வினால் ஏற்படும் அழற்சியே கழுத்து எலும்புத்தேய்வு (Cervical Spondylosis) என குறிப்பிடப்படுகிறது. 40 வயதிற்குமேல் இருப்பவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு இப்பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வுகளின் மூலம் அறியமுடிகிறது. கழுத்து எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து எலும்புகளுக்கிடையேயான சவ்வானது நைந்தோ அல்லது கிழிந்தோ போவது, தேய்வினால் கழுத்து எலும்புகளில் வட்டுக்கள் (Discs) அழுந்துவது, எலும்பு தனது நிலையிலிருந்து நகரும் (Prolapse) நிலைக்குட்படுவது போன்றவை கழுத்து எலும்புத் தேய்வினால் ஏற்படும் கூடுதல் பாதிப்புகளாகும். சிலருக்குக் கழுத்தெலும்பின் அதீத வளர்ச்சியினால் துருத்திக் கொண்டிருக்கும் எலும்பானது தண்டுவடத்திற்குள் செல்லும் நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலியானது உண்டாகும். இந்த வலியானது கழுத்திலிருந்து கைவரை பரவும். கழுத்து வலி ஏற்பபடும்வரை நாம் கழுத்தைப்பற்றி சிந்திப்பது இல்லை. stiffneck என்று சொல்லக்கூடிய கழுத்து பிடிமானத்தை அனுபவிக்காதவர்கள் குறைவு.
நமது உடலில் 40 வயதில் அஸ்தி(எலும்பு), பலம் குறைவதாக யோகநூல்களும் ,ஆயுர்வேத நூல்களும் கூறுகின்றன . இயல்பாகவே அதிகமாக பயன்படுத்தும் கழுத்து எலும்பு தேய்வடைகிறது.

கழுத்து எலும்பு தேய்வின் காரணங்கள்:

1)உடலில் கபம் மற்றும் வாத தோசங்களை அதிகரிக்கும் உணவுகள்( எ.கா. குளிர்ச்சியான உணவுகள்,)
2)விபத்து மற்றும் விளையாட்டில் அடிபடுவதால் ஏற்படும் காயங்கள்
3) அதிக நேரம் கழுத்தை தவறான நிலையில் வைத்து வேலை செய்தல்
5)தலையணை உயரம் வைத்து தூங்குதல்
6)அதிக தூரம் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துதல்
7)உடல் பருமன் மற்றும் புகைப்பழக்கம்

கழுத்தில் இரண்டு எலும்புகளுக்கிடையே சவ்வு போன்ற பொருள் உண்டு. சில நேரங்களில் அந்த எலும்பு அதீத வளர்ச்சியால் துருத்திக்கொள்ளும். இந்தத் துருத்தி கொள்ளும் பகுதி, கழுத்திலிருந்து வெளிவருகிற நரம்பு மண்டலத்தை அழுத்தும். சில நேரங்களில் தண்டுவடமும் அழுத்தப்படலாம். இந்த நேரங்களில் கை மட்டுமல்லாமல் காலும் பாதிக்கப்படலாம். தினமுமே இவ்வாறு கழுத்தைத் தவறான நிலையில் வைப்பதால், தேய்வுநிலை ஏற்படலாம்.

அதிக வேலைப்பளு உள்ளவர்கள், விளையாட்டில் அதிகக் கவனம் செலுத்துபவர்களை இது பாதிக்கலாம். வயது ஆகஆக இது அதிகரிக்கும். 60 வயது ஆகும்போது அனைவருக்குமே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால், கழுத்தெலும்பு தேய்மானம் காணப்பட வாய்ப்பு உண்டு.

இது அல்லாமல் வேறு சில காரணங்களாலும் கழுத்தெலும்புத் தேய்மானம் ஏற்படலாம். அதிகமாக உடல் பருமனுடன் இருப்பது, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது, கனமான பொருட்களைத் தூக்குவது, கழுத்தை அடிக்கடி முன் பின் அசைப்பது, வளைப்பது, கழுத்தில் அடிபடுவது, சிறு வயதில் அடிபட்டுக் கவனிக்காமல் விட்டுவிடுவது, கழுத்து தண்டுவட அறுவை சிகிச்சை, கழுத்தில் இருக்கிற சவ்வு பிதுங்குதல், கழுத்தில் வாத நீர் வருவது, கழுத்தில் கனத்தன்மை குறைகிற osteoporosis எனும் நோய் தோன்றுவது போன்றவை

அறிகுறிகள்:

கழுத்து எலும்பு தேய்மான நோய்க்கான அறிகுறிகள் மெதுவாகத் தோன்றும். சில நேரம் திடீரென்று கடுமையான வலியை உண்டாக்கும். வலி லேசானதாகவோ, கடுமையானதாகவோ இருக்கும். கழுத்தை அசைக்க முடியாமல் போகும். சிலருக்குக் கழுத்து வலி, தோள்பட்டை வரை பரவலாம். நின்று கொண்டிருந்தாலோ, உட்கார்ந்து கொண்டிருந்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிரித்தாலோ, கழுத்தைப் பின்பக்கமாக வளைத்தாலோ, நடந்தாலோ வலி கூடும்.

கை தசைகளில் பலம் குறையும். கையைத் தூக்குவதில் சிரமம் ஏற்படும். துணியைப் பிழிவதில் சிரமம் ஏற்படும். கைகளில் தசைகள் இறுகிப் போகும். கைகளில் மரத்துப் போகும் தன்மை ஏற்படும். சிலருக்குத் தலைவலி ஏற்படலாம். நடக்கும்போது தள்ளாட்டம் வரலாம். பதற்றமான சூழ்நிலைகளில் சிறுநீர், மலம் கட்டுப்பாடின்றிப் போகும். தண்டுவடம் பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு வரும்.

சிகிட்சைகள்:
கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் மூசாம்பர பற்று,சுக்கு,வசம்பு,அமுக்கூரம்,யாளியா முதலிய மூலிகைப் பொருட்களை கொண்டு பற்றிடுவது வலியைக் குறைக்கும்.
கருஞ்சூரைப்பட்டை தைலம்,குறுந்தோட்டி தைலம்,விசமுட்டி தைலம்,மகா நாராயண தைலம் போன்ற எண்ணைகளைத் தடவி ஒற்றடமிடலாம்.
ஆடாதோடை, நொச்சி,முடக்கறுத்தான் மூலிகைகளைக் கொண்டு ஒற்றடமிடலாம்.
குறுந்தோட்டி கசாயம்,தசமூலாதி கசாயம்,ராசனா ஏரண்டாதி கசாயம் போன்ற மருந்துகளை சாப்பிட்டு வர நோயினின்று நிவாரணம் பெறலாம்.
ஆயுர்வேத சிகிட்சைகளான நசியம்,கீரீவ வஸ்தி,சிரோ வஸ்தி போன்றவை வலியைக் குறைத்து நல்ல பலன் தரும்.
.வாதமடக்கி,நொச்சி, வேம்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை கொதிக்க வைத்து குளிக்கும் நீராக பயன்படுத்தலாம்.
புளிப்பு,இனிப்பு சுவையுள்ள உணவுகள்,துரித உணவுகள்,காபி,குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
புஜங்காசனம்,தனுராசனம் போன்ற ஆசனங்களை தினமும் செய்தல் நன்று.
முக்கிய குறிப்புகள்
கழுத்துப் பயிற்சி செய்யும்போது எப்போதும் கழுத்தை மெதுவாகவே திருப்பவோ, அசைக்கவோ வேண்டும். கண்டிப்பாக வேகமாக பயிற்சி செய்யக்கூடாது . .
தலையில் அதிகபாரம் தூக்கக் கூடாது.
தலை துவட்டும் போது மெதுவாக துவட்ட வேண்டும் போன்றவை கழுத்து எலும்பு தேய்மானத்தை குறைத்து நலம் நாடும் வழியாகும்.

Dr.D.S.ஆன்றனி மில்லஸ் BAMS,
தேவசகாயம் வைத்தியசாலை, நடுத்தேரி, மாங்குழி -9894395022

நலம் நாடுவோம் - தலை வலி                   இன்றைய பரபரப்பு நிறைந்த வாழ்க்கை சூழலில் தலைவலி பலருக்கு வாடிக்கையாகி விட்டது....
28/11/2022

நலம் நாடுவோம் - தலை வலி

இன்றைய பரபரப்பு நிறைந்த வாழ்க்கை சூழலில் தலைவலி பலருக்கு வாடிக்கையாகி விட்டது. "தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்பதைப் போல் தலைவலியால் அவதிப்படுவோர் ஏராளம்.தலைவலி வந்தால் மாத்திரையை சாப்பிட்டு விட்டு வேலைகளை தொடரும் பலருக்கு அதன் தீவிரத்தன்மை புரிவதில்லை.

ஒருவருக்கு அடிக்கடி தலைவலியுடன் சோர்வு,ஞாபகசக்தி குறைவு,பார்வை குறைபாடு இருப்பின் நீங்கள் மருத்துவரை சந்திப்பது அவசியம்.

ஆயுர்வேதத்தின் படி தலைவலி என்பது ஒரு நோயல்ல மாறாக நம் உடலில் உள்ள மற்ற நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

தலைவலிக்கான காரணங்கள்:

1)மலசிக்கல் & அஜீரணம்

2)பசி மற்றும் உணவு பொருட்களின் ஒவ்வாமை

3)உணவில் அதிக காரம்,உப்பு மற்றும் எண்ணைய் பொருட்களை அதிகம் உண்பதாலும்

4)மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை

5)சளி,பல் நோய்கள் மற்றும் பார்வைக் குறைபாடு

6)தலைக்காயம்

7)மூளை சம்பந்தமான நோய்கள்

8)புகையிலை மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதாலும்

9)உடலின் இயற்கை உபாதைகளை அடக்குதல்

தலைவலியில் பல வகைகள் உண்டு. எல்லா தலைவலிக்கும் வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுவது பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும்.

ஒரு பக்க தலைவலி
உடலில் உள்ள வாதம் மற்றும் கபதோசங்களின் நிலையற்ற தன்மையால் தோன்றும்.இத் தலைவலியில் கடுமையான வலி இருக்கும். தலையின் ஏதாவது ஒருபக்கத்தில் வலிக்கும்.சிலருக்கு தலைச்சுற்றல் மற்றும் வலியானது கண் புருவ பகுதிகளில் இருந்து தோள் பட்டை வரை வலியிருக்கும்.இவ்வகை தலைவலியினால் பார்வை குறைபாடு மற்றும் கேட்கும் திறன் குறையலாம்.

இரண்டாவது வகை தலைவலியில் உடலில் உள்ள வாதம் மற்றும் பித்த தோசங்கள் சீற்றமடைவதால் தோன்றுவதாகும்.இவ்வகை தலைவலியில் வாந்தி, எரிச்சலுடன் கூடிய வலி தலையின் முன்பக்கத்தில் ஆரம்பித்து உச்சி வரை பரவும்.வெயில் மற்றும் ஒளியைப் பார்த்தால் வலி கடுமையாக இருக்கும்.இது உடலின் அஜீரணம்,நெஞ்செரிச்சல், அதிகப்படியான அமில சுரப்பு போன்ற காரணங்களால் தோன்றும்.

மூன்றாவது வகை மன அழுத்தம் மற்றும் சோர்வினால் ஏற்படுவது. இவ்வகை உடலில் உள்ள மூன்று வகை தோசங்களும் சீற்றமடைந்து தலைவலி தோன்றும்.இதில் கடுமையான வலி கழுத்தின் பின்பகுதி மற்றும் காதை ஒட்டிட்யுள்ள மேல்தாடை பகுதியில் இருக்கும்.

சிகிட்சை முறைகள்:
1)ஆயுர்வேத சிகிட்சை முறைகளான மூக்கில் மருந்திடுவது( நசியம்) மூலிகை எண்ணைய்களான சந்தணாதி தைலம்,ஷீரபலா தைலம் போன்றவற்றை தாரையாக தலையில் விடுவது(சிரோதாரா), மூலிகை மருந்துகளால் தயாரிக்கப்பட்ட களிம்புகளை தலையில் பற்று போல் இடுவது (சிரோ லேபம்) போன்ற சிகிட்சை முறைகள் நல்ல பலன் தரும்.

2)திறிபலா சூரணம்,பிரம்மி கிருதம் ,அனுதைலம் முதலிய மருந்துகளும் தலைவலிக்கு சிறந்த தீர்வைத் தரும்.

3)மது,புகையிலை போன்ற போதைப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

4)தினமும் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.

5)நேரத்திற்கு உணவை உண்ண வேண்டும்.

6)வெயிலில் அலைவதை தவிர்த்து ஓய்வெடுப்பது சிறந்தது.
7)சீரகம்,மல்லி சேர்த்து வெந்நீர் குடிப்பது நன்று.

8)வீண் கோபம், மன அழுத்தம் தவிர்த்து தலைவலியிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

Dr.ஆன்றனி மில்லஸ்,BAMS,
தேவசகாயம் வைத்தியசாலை,மாங்குழி -9894395022

Address

Eraniel

Telephone

9894395022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devasahayam Siddha Ayurveda Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category