Devasahayam Siddha Ayurveda Hospital

Devasahayam Siddha Ayurveda Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Devasahayam Siddha Ayurveda Hospital, Hospital, Mankuzhy, Nadutheri, Thingalnagar, Eraniel.

02/05/2026

Oleation Theraphy in our Devasahayam Siddha Ayurveda Hospital

02/05/2026

இறைவன் கொடுக்காவிட்டாலும் இயற்கை அனைத்து உயிர்களுக்கும் யார் தடுத்தாலும் ஏதோ ஒன்றை கொடுக்கத்தான் செய்கிறது 😍😍😍😍

01/05/2026

Medicinal plant collecting for Kayathirumeni thailam

30/04/2026
28/04/2026

Juice Extraction from herbals

28/04/2026

Oil preparation process in our hospital

கடி வஸ்தி என்பது கீழ் முதுகில் ஏற்படும் வலி, விறைப்பு மற்றும் தசைப் பிடிப்புகளைக் குறைக்க உதவும் ஒரு பாரம்பரிய ஆயுர்வேத ...
22/01/2026

கடி வஸ்தி என்பது கீழ் முதுகில் ஏற்படும் வலி, விறைப்பு மற்றும் தசைப் பிடிப்புகளைக் குறைக்க உதவும் ஒரு பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சையாகும், இதில் மாவு கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தடுப்புக்குள் வெதுவெதுப்பான மூலிகை எண்ணெயை நிரப்பி, குறிப்பிட்ட நேரம் வரை வைத்திருக்கப்படுகிறது, இது தசைகளைத் தளர்த்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முதுகெலும்பை வலுப்படுத்துகிறது. சியாட்டிகா, வட்டு விலகல் (disc problems) மற்றும் முதுகெலும்பு பிரச்சனைகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கடி வஸ்தி செய்யும் முறை

மாவு தடுப்பு உருவாக்கம்: கருப்பு உளுந்து மாவைப் பயன்படுத்தி, கீழ் முதுகில் வலி உள்ள இடத்தில் ஒரு சிறிய கிணறு போன்ற வட்ட வடிவ தடுப்பு உருவாக்கப்படுகிறது.
மூலிகை எண்ணெய் ஊற்றுதல்: அந்த தடுப்புக்குள், மூலிகைகள் கலந்த வெதுவெதுப்பான எண்ணெய் ஊற்றப்படுகிறது.

எண்ணெய் தேக்குதல்: எண்ணெய் சுமார் 30-45 நிமிடங்கள் வரை அந்த இடத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. எண்ணெய் சூடாக இருப்பதால், அது தசைகள் மற்றும் மூட்டுகளுக்குள் ஆழமாக ஊடுருவி, நிவாரணம் அளிக்கிறது.
பயன்கள்
நாள்பட்ட கீழ் முதுகு வலி நிவாரணம்.
சியாட்டிகா (Sciatica) பிரச்சனைகளுக்கு தீர்வு.
முதுகுத்தண்டில் விறைப்பு மற்றும் தசை இறுக்கத்தைக் குறைத்தல்.
இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்.
மூட்டுகளுக்கு .வளவளப்பு தன்மை (lubrication) அளித்தல்.
மன அழுத்தத்தால் ஏற்படும் முதுகு வலிக்கு புத்துணர்ச்சி அளித்தல்.
இது முதுகுவலி மற்றும் முதுகெலும்பு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு பாதுகாப்பான, இயற்கையான மற்றும் பயனுள்ள ஆயுர்வேத சிகிச்சையாகும்.

9 Followers, 7 Following, 4 Posts

15/01/2026

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

இந்தியாவிலிருந்து வந்த ஒரு பண்டைய நடைமுறையான யோகா, இப்போது சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக உலகம் முழுவதும் பின்...
20/06/2025

இந்தியாவிலிருந்து வந்த ஒரு பண்டைய நடைமுறையான யோகா, இப்போது சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. இது உடல் மற்றும் மனம் இரண்டிற்கும் உதவுகிறது, இது ஒரு முழுமையான உடற்பயிற்சி வடிவமாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று, உலகெங்கிலும் உள்ள மக்கள் அன்றாட வாழ்க்கையில் அதன் நன்மைகளை அங்கீகரிக்க சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த உலகில் உள்ள ஒரு செல் உயிரினம் முதல், ஆறறிவு படைத்த மனித இனம் வரை, அனைவரின் வாழ்க்கைக்கும், தேவையானது காற்று! உயிரினங்கள் உயிர் வாழத்தேவையான ஆக்சிஜன் காற்று நிரம்பிய ஒரே கோளாக பூமி உள்ளது. அதன் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் போனதால்தான் பலரும் இயற்கையாக கிடைக்கும் ஆக்சிஜனை உதாசீனம் செய்கிறோம்.

யோகா என்பது உங்கள் உடல் மற்றும் உங்கள் சுவாசம் இரண்டிலும் கவனம் செலுத்தும் ஒரு வகையான உடற்பயிற்சி. யோகா அமர்வு முடிந்ததும் பயன்படுத்த ஒரு கருவியாக இதை மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றுவது சுவாசக் கூறுதான்.

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!" என்று மனித உடலைப்பற்றி பாடினார், பட்டினத்தார். அது தத்துவம்! ஆயினும், உண்மையும் அதுதானே! "உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" என்றார், திருமூலர். உள்ளத்தில் உள்ள உற்சாகம், முகத்தில் உள்ள பொலிவு, உடலில் உள்ள வலிமை, இவை அனைத்துக்கும் காரணம், நாம் சுவாசிக்கும் காற்றுதான்.

தினமும் நாம் சாப்பிட்டாலும், இல்லையென்றாலும், தண்ணீர்தாகம் எடுத்து நீர் பருக முடியாமல் இருந்தாலும், நாம் மூச்சுவிடுவதையும், சுவாசிப்பதையும், செய்துகொண்டுதான் இருக்கிறோம், ஆனால் அந்த சுவாசத்தை நாம் சரியாக விடுகிறோமோ என்று நிறைய பேருக்கு தெரியாது. நம்முடைய சுவாசம் சரியாக இருந்தால் வாழ்க்கையில் சகலமும் சரியாக இருக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.

நம் சுவாசத்தில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டுதான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கும். சுவாசத்திற்கு அடிப்படையான காற்று, மூக்கின்வழியே உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டைவழியே, நுரையீரலை சென்றடைகிறது. நுரையீரலே, உள்ளேவரும் காற்றை, அதன் நுண்ணிய காற்றுப்பைகளுக்கு அனுப்பி, ஏற்கெனவே உள்ள சுத்திகரித்தபின் எஞ்சிய காற்றை, திருப்பி மூச்சின் வழியே, வெளியேற்றும்!. நுரையீரலின் பைகளில் உள்ள காற்று, இரத்தக்குழாய்களின் வழியே, உடலில் பரவும், இதன்மூலம் காற்றிலுள்ள பிராணவாயு எனும் ஆக்சிஜன், செல்களில் சேமிக்கப்பட்டு, உடலின் இயக்கத்தில் வெளியாகும் கார்பன், மூச்சுக்காற்றின் வழியே, வெளியேற்றப்படுகிறது. நாம் மூச்சு விடுவதன் அர்த்தம் செயல்பாடு இதுதான்.

மூச்சு எண்ணிக்கை குறையக்குறைய, ஆரோக்கியம் கூடும் என்பது சித்தர்கள் வாக்கும். நாம் எதையும் நிதானமாக யோசித்து செய்தால் செயல்கள் வெற்றியடையும். அதை போலத்தான் நம்முடைய சுவாசமும் இருக்க வேண்டும். மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் எண்ணிக்கை, ஒரு நிமிடத்துக்கு சராசரியாக பதினைந்து என்ற அளவில் இருந்தால், நூறு ஆண்டுகள் வரை வாழலாம், என்று சித்தர்கள் உரைத்துள்ளனர். நிமிடத்திற்கு பதினெட்டு முதல் இருபது என்ற அளவில் சுவாசித்தால், எழுபது ஆண்டுகள் முதல் எண்பது ஆண்டுகள் வரை உயிர்வாழலாம். இதுவே இன்றைய மனிதர்களின் சராசரி மூச்சின் அளவாகும்.


மனிதர்கள் சராசரியாக ஒருநாளைக்கு 21600 முறை சுவாசிக்கின்றனர் என்பது கணக்கு, அந்த சுவாசத்தில் அதில் கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் சுவாசங்கள் மட்டுமே, உடலில் பரவி, வெளியேறும், மீதம் உள்ள சுவாசங்களால் பலன்கள் ஏதுமில்லை!. நாம் சுவாசிக்கும் போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து, அதில் மூன்று மடங்கு நேரம் உள்ளே அடக்கி, பின்னர், ஒரு மடங்கு நேரத்தில் மூச்சை மெதுவாக வெளியேவிட வேண்டும்!, இதுதான் மூச்சுக்கணக்கு! மூச்சை, கணக்குபோட்டு சுவாசிக்கும் முறையே, பிரணாயாமம் என்று பண்டை மருத்துவம் அழைக்கிறது. பிரணாயாமம் என சித்தர்கள் கூறிய, இந்த அரியகலையை, முறையாகச்செய்து, மூச்சையடக்கி வாழப்பழகுவது, இன்று அனைவருக்கும் அத்தியாவசியமானது.

முறையான சுவாசத்தினால், மூச்சு உள்ளே நிற்கும் அளவுக்கு, உடலின் நன்மைகளை அதிகரிக்கும். மூச்சை உடனே வெளியிடாமல், சற்றுநேரம் அடக்கி வைக்கும்போது, காற்றில் உள்ள சக்தி அதிக அளவில் உடலில் சேகரிக்கப்படுகிறது, உடலில் தேங்கும் பிராண சக்தியே, மனதின் ஆற்றலை அதிகரிக்கிறது
இதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முகத்தின் பொலிவும் அதிகரிக்கும்.
சித்தர்கள் இந்த மூச்சின் அளவுகளை பற்றி குறிப்பிடுவது மிகப் பிரம்மிப்பாக உள்ளது
உடலிலே பிராண சக்தியை அதிகரித்து உடலின் உள் உறுப்புகளை சரியான முறையில் இயக்கி, உயிரை நீண்ட ஆயுளாக மாற்றி, வாழும் காலம் முழுவதும் இன்பமாக வாழ்வதற்கு இந்த நாடி சுத்தி பிராணாயாமம் மிகவும் அவசியம்.

இந்த கலையைதான் சித்தர்கள் சரகலை என்று அழைத்தார்கள். சரம் என்றால், நீண்ட அல்லது தொடர்ச்சி என்று பொருள். அதாவது நமது ஆயுளை நீண்ட காலம் மாற்றுவதற்கு சரகலை என்று பெயர். இதை திருமூலர் தனது பாடலிலே

ஏற்றி இறக்கி இருகாலும் பூறிக்கும்

காற்றை அளக்கும் கணக்கறிவாரில்லை

காற்றை அளக்கும் கணக்கறி வார்க்கு

கூற்றை உதைக்கும் குறியதுவாமே

என்று கூறுகிறார். இந்த பாடலின் பொருள் என்னவென்றால் நம் மூச்சை உள்முச்சு, வெளிமூச்சாக விடும்போது, இடகலை மற்றும் பிங்கலை நாடிகளின் ஓட்டத்தை சமன் செய்யும்போது, உயிரின் நேரடி தொடர்பான சுமுமுனை நாடி இயங்க ஆரம்பித்துவிடும். அந்த சுமுமுனை நாடி இயங்க ஆரம்பித்து விட்டால் அல்லது நாம் இயக்கி விட்டால் நம் மூச்சுனுடைய எண்ணிக்கை, ஒரு நிமிடத்திற்கு 15க்கும் கீழ் இறங்கி விடும். இதை தான் கணக்கை அறிவிப்பவர்கள் இல்லை என்றும், எல்லோரும் எப்போழுதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் அந்த பிராணாயாமம் பயிற்சியை அந்த சுமுமுனை நாடியை இயக்கும் கணக்குடன் செய்தால் எமனையும் நாம் வெல்லாம் என்று இந்த சரகலையின் ரகசியத்தை குறிப்பிடுகிறார்.
இந்த நாடி சுத்தி பிராணாயாமம் பயிற்சியை முறைப்படுத்தி இந்த உலகில் வாழும் மக்களுக்கு ஒரு அற்புதமான பொக்கிஷத்தை கொடுத்தவர் யோகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பதஞ்சலி முனிவர் ஆவார். அவர் தான் இந்த யோகத்தை முறைப்படுத்தி அதை எட்டு அங்கங்களாக பிரித்து அதற்கு அஷ்டாங்க யோகம் என்று பெயர் சூட்டினார். அந்த அஷ்டாங்க யோகம் என்றால் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

1. இயமம், 2. நியமம் 3. ஆசனம் 4.பிராணாயாமம் 5. பிராத்தியாகாரா 6. தாரணா 7. நியானம் 8. சமாதி என்ற எட்டு நிலைகள் ஆகும்.

நமது மூச்சினை, வலது நாசியின் வழியாக உள்ளே வெளியே செல்லும் மூச்சுக்கு பிங்கலை அல்லது சூரியநாடி அல்லது தந்தை நாடி அல்லது பித்ரு நாடி என்று கூறுவர்.

இடது நாசியின் வழியாக உள்ளே வெளியே செல்லும் மூச்சினை இடகலை அல்லது சந்திர நாடி அல்லது தாய் நாடி அல்லது மாத்ரு நாடி என்று கூறுவர்.

இந்த இடகலையும், பிங்கலையும் சமன்பட்டு சுழுமுனை நாடி வழியாக செல்லும் மூச்சுக்கு அருள் நாடி அல்லது குரு நாடி என்று கூறுவர்.

இந்த பிராணாயாமம் பயிற்சியில் நாம் குரு நாடியை இயக்கும்போது நமக்கு மூச்சின் எண்ணிக்கை குறைந்து நமது ஆயுள் கூடுகிறது.

சித்தர்கள் இந்த மூச்சின் அளவுகளை பற்றி குறிப்பிடுவது மிகப் பிரம்மிப்பாக உள்ளது.

எனவே ஆறு அறிவு படைத்த மனிதர்கள் தனது ஆயுள் காலத்தை நீட்டிக்க செய்வதற்கு அவர்களுடைய உடலில் உள்ள தத்துவங்களை ஆராய்ந்து அதில் அளவு முறை மீறாமலும், சிலவற்றை தவிர்த்தும், வந்தால் நமது ஆயுள் வரிவடையும் என்பதை சித்தர்கள் கண்டு பிடித்தார்கள்.
இதனை நீங்கள் முயன்றுதான் பாருங்களேன்.. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்க நாம் சரியாக நிதானமாக சுவாசிப்போம்.

நலம் நாடுவோம் -கோடைக்காலத்தை எதிர்கொள்வது எப்படி?                    கோடைகாலம் தொடங்கும் போதே வெப்பத்தையும் உணர தொடங்கிவ...
05/04/2024

நலம் நாடுவோம் -
கோடைக்காலத்தை எதிர்கொள்வது எப்படி?

கோடைகாலம் தொடங்கும் போதே வெப்பத்தையும் உணர தொடங்கிவிடுவோம். கடுமையான கோடையை தவிர்க்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் முக்கிய தீர்வுகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்

கோடைக்காலம் என்றில்லை, அதிக வெப்பம் நிலவும் காலங்களில் உண்டாகும் முதன்மையான பிரச்சினை உடலின் நீர்சத்து குறைதல்,(Dehydration) .இதன் முக்கிய அறிகுறிகள்

அதிக தண்ணீர் தாகம்,
வறண்ட தோல்,
உதடுகளில் பிளவு,
நாக்கு வறட்சி,
பேசும்போது உளறல்,
வலிப்பு,
வயிறு வலி,
தலை வலி,
தலை சுற்றல்,
நெஞ்சு எரிச்சல்,
படபடப்பு ,சிறுநீர்த் தொற்று, அம்மை நோய், மஞ்சள்காமாலை, செரிமானப்
பிரச்னை போன்ற வயிற்றுக் கோளாறுகள், தொண்டை அழற்சி (Pharyngitis), எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

உடலில் வெப்பம் அதிகரிப்பதால் பொதுவாகத் தலையில் கட்டி அல்லது பொடுகு ஏற்படும். ஆயுர்வேதக் கூந்தல் தைலங்கள், மருத்துவக் குணம் கொண்ட சூரணங்கள் (பொடி) ஆகியவை இதற்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

வயதானவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heat Stroke) என்னும் வெப்பத்தாக்கு நோய் வரலாம். கோடைக் காலத்தில் வியர்வைச் சுரக்காமலோ, சுரந்தும் ஆவியாகாமல் இருந்தாலோ, ஹைபோதலமஸ் (Hypothalamus) சரியாக வேலை செய்யாமல் இருந்தாலோ ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம்.

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகமாக வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக நேரம் வெயிலில் இருக்கும் போது மிக எளிதாக ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

அதே போல 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் நீர்சத்து வற்றி, ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு வரும்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட இணைநோய் இருக்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

இதுமட்டுமின்றி, வெயிலில் அதிக நேரம் வெளியே வேலை செய்யும் நபர்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக்கூடும். குறிப்பாக வெயிலின் தாக்கம் உச்சபட்சமாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை இருக்கும்.

இந்த நேரத்தில் கடினமான வேலையை வெயிலில் நின்று பார்க்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, சிலருக்கு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

சம்மர் அசிடிட்டி (Summer Acidity) என்று தனியாக எந்த பிரச்னையும் ஏற்படாது. இது வெயிலின் தாக்கத்தால் ஏற்படுகிறது. வெயில் காலத்தில் வரும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று செரிமான கோளாறு என்று அழைக்கப்படும் சம்மர் அசிடிட்டி.

வெயில் காலத்தில் அதிக சூட்டின் காரணமாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளின் மூலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை அதிகமாகி, உடலில் பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது.

வயிற்றில் சுரக்கும் இந்த அமிலம் அதிகமாவதால், செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்த பாதிப்பு வெயில் காலத்தில் சிலருக்கு அதிகமாக ஏற்படுகிறது.

கோடை காலம் வந்து விட்டால் வெப்பம் காரணமாக நோய்கள் பலவும் வந்து விடுகின்றன.

கோடை காலத்தில், வெயிலின் பாதிப்பில் இருந்து விடுபட குளிர்பானங்களை மக்கள் அதிகம் நாடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து கவர்ச்சியான விளம்பரங்களுடன் வினியோகிக்கும் குளிர் பானங்கள் பலரையும் சுண்டி இழுக்கின்றன. அவைகள் சூட்டைத் தணிப்பதற்குப் பதில், மோசமான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்

தட்பவெப்ப நிலை மாறியவுடனேயே உடலின் செயல்பாடுகளுக்கு ஏற்ப உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நாள் முழுவதும் அதிகத் தண்ணீர் அருந்துங்கள். அது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும். ரத்தத்தில் சிவப்பணுகள் சத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைவிட, பானையில் கிடைக்கும் குளிர்ந்த நீரைக் குடிப்பது நல்லது.

காய்கறிகளில் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, முட்டைகோஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடலாம். இதேபோல நெய், பால், தயிர், மோர், புழுங்கல் அரிசி சாதம், சோள மாவு போன்றவையும் கோடைக்கேற்ற உணவு வகைகள்தான்.

இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம்.

தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலா பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள்.

இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகளை சேர்த்து கொள்ளலாம்.

மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி, தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர்விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும்.

சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

மிகக் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது.

கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே, முடிந்தவரை அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

* டீ, காபி அடிக்கடி குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். அவற்றிலுள்ள கஃபைன் நீர் வறட்சியை ஏற்படுத்தும். மேலும் அதிக கஃபைன் சேரும்போது, அல்சர், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்றவை ஏற்படலாம். கோடைக்காலத்தில் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

* சாலையோரங்களில் சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படும் உணவுகள், புரூட்ஸ் சாலட்டுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடனே சிறுநீர் கழித்துவிட வேண்டும். சிறுநீரை அடக்குவது சிறுநீரகக் கற்கள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.

* அடர் நிறத்திலான ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.

* ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்குக் கேடு விளைவிக்கும். குறிப்பாக, ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் காற்று வழியாகப் பாக்டீரியாக்கள் பரவி தொண்டையில் தொற்று (Pahargnagitis) ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் தொற்று இதய வால்வு நோய்களை உண்டாக்கலாம். எனவே தொண்டையில் தொற்று ஏற்பட்டவருக்குக் காய்ச்சல், சருமத்தின் வழியாக ரத்தப்போக்கு,சிலருக்கு உடலில் உஷ்ணத் தன்மை அதிகரிப்பதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலம்,ஆசன வாயில் எரிச்சல் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. இத்தகைய சூழலில் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
இது ரத்தச் சிவப்பணுக்களைக் குறைப்பதுடன் இதயச் செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இவற்றை முறையாகப் பின்பற்றினாலே கோடைக்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

Dr.D.S. ஆன்றனி மில்லஸ், BAMS,
தேவசகாயம் வைத்தியசாலை,
(சித்தா - ஆயுர்வேதா ஆய்வகம்)
நடுத்தேரி,திங்கள்நகர்,Mob: 9894395022

Address

Mankuzhy, Nadutheri, Thingalnagar
Eraniel
629802

Telephone

9894395022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devasahayam Siddha Ayurveda Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category