Government Blood Bank, Government Hospital,Gobichettipalayam

  • Home
  • India
  • Gobi
  • Government Blood Bank, Government Hospital,Gobichettipalayam

Government  Blood Bank, Government Hospital,Gobichettipalayam Government Hospital Blood Bank

❤️💐🙏அனைவருக்கும் முதலில் புத்தாண்டு வாழ்த்துகளும் வணக்கங்களும் .கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கியின் சார்பா...
06/01/2023

❤️💐🙏அனைவருக்கும் முதலில் புத்தாண்டு வாழ்த்துகளும் வணக்கங்களும் .கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கியின் சார்பாக 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 1812 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு ஏழை ,எளிய மற்றும் மலைவாழ் மக்களின் பிரசவத்திற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் பயன்படுத்தியிருக்கிறோம்.ஏறத்தாழ 2500 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிற போற்றுதலுக்குரிய உண்மையான ஹீரோக்களாகிய எங்களின் அனைத்து இரத்தக்கொடையாளர்களுக்கும் இந்த நேரத்தில் அன்பும் நன்றியும் பாராட்டுகளும்.எங்களுக்கு தொடர்ந்து முகாம்கள் ஏற்பாடு செய்து தரும் அனைத்துக் கல்லூரிகள்,அனைத்து அமைப்புகள்,அரசியல் கட்சிகள்,இரத்தம் தேவை என தொலைபேசியில் அழைத்தாலோ, வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்த அடுத்த அரை மணி நேரத்திலோ அழைப்பில் வந்து இரத்ததானம் செய்யும் தனிப்பட்ட இரத்தக்கொடையாளர்கள் என ஒவ்வொருவரையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்வதில் பெருமை கொள்கிறோம்...இந்த 2023 ஆம் ஆண்டிலும் இதே ஒத்துழைப்பை நல்கி உயிர்காக்கும் உன்னதப்பணியில் எங்களோடு கைகோர்த்துப் பயணித்திடுவீர்....🩸🩸🩸

கோபி அரசு மருத்துவமனை இரத்தவங்கி,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புஞ்சை புளியம்பட்டி, ரோட்டரி சங்கம் புஞ்சை புளியம்பட்டி, இளந...
22/12/2020

கோபி அரசு மருத்துவமனை இரத்தவங்கி,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புஞ்சை புளியம்பட்டி, ரோட்டரி சங்கம் புஞ்சை புளியம்பட்டி, இளந்தென்றல் நற்பணி மன்றம் புஞ்சை புளியம்பட்டி ஆகியவை இணைந்து 20-12-20 அன்று புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி ஹாலில் நடத்திய இரத்ததான முகாமில் 57 கொடையாளர்கள் கலந்துகொண்டு இரத்ததானமளித்தனர்.இம்முகாமில் புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்Dr.வெங்கடாச்சலம்,ரோட்டரி சங்க நிர்வாகி Dr.சுப்பிரமணியம்,இளந்தென்றல் கதிர் ஆகியோரும் இரத்ததானம் அளித்தனர்.கொடையாளர்கள் அனைவருக்கும் அன்பும்,நன்றியும்.......

இந்திய திருநாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு டாக்டர்.அப்துல்கலாம் அய்யா அவர்களின் பிறந்தநாளான தேசிய இளைஞர் எழுச்ச...
15/10/2020

இந்திய திருநாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு டாக்டர்.அப்துல்கலாம் அய்யா அவர்களின் பிறந்தநாளான தேசிய இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு ,அரசு மருத்துவமனை இரத்தவங்கி,கோபிசெட்டிபாளையத்திற்கு இளம் சிறார் செஞ்சிலுவைச் சங்கம்,பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த கொடையாளர்கள் யூனிட்டுகள் இரத்தத்தை தானமாக வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பொலவக்காளிபாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி .தங்கம் அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்...

அரசு மருத்துவமனை,கோபிசெட்டிப்பாளையம் ரத்தவங்கிக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு ...
06/09/2020

அரசு மருத்துவமனை,கோபிசெட்டிப்பாளையம் ரத்தவங்கிக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு அந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் 23 பேர் இன்று(06-09-20) இரத்ததானம் வழங்கினர்.கொடையாளர்கள் அனைவருக்கும் அன்பும்,நன்றியும்❤️💐❤️

உலக புகைப்படதினத்தை முன்னிட்டு கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கியும்,கோபி வட்டார போட்டோ& வீடியோ ஒளிப்பதிவா...
19/08/2020

உலக புகைப்படதினத்தை முன்னிட்டு கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கியும்,கோபி வட்டார போட்டோ& வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கமும் இணைந்து இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாமில் 28 யூனிட்டுகள் இரத்தத்தை இச்சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் தானமாக வழங்கினர்...கொடையாளர்கள் அனைவருக்கும் அன்பும் ,நன்றியும்❤❤❤

கோபி அரசு மருத்துவமனை இரத்தவங்கியும் பெரியகொடிவேரி பிரண்ட்ஸ் கிளப் நண்பர்களும் இணைந்து இன்று பெரியகொடிவேரி புனித சவேரியர...
10/07/2020

கோபி அரசு மருத்துவமனை இரத்தவங்கியும் பெரியகொடிவேரி பிரண்ட்ஸ் கிளப் நண்பர்களும் இணைந்து இன்று பெரியகொடிவேரி புனித சவேரியர் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய இரத்ததானமுகாமை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் ஈரோடு மாவட்டக்காவல்கண்காணிப்பாளர் சக்திகணேசன் இ.கா.ப,கோபி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் P.T.ஆனந்தன் MS ,இரத்தவங்கி மருத்துவ அலுவலர் Dr.K.சிவசங்கர் MD மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.36 யூனிட்டுகள் இரத்தம் கொடிவேரி நண்பர்களிடமிருந்து பெறப்பட்டது...இரத்ததானம் அளித்த அனைவருக்கும் பழத்தொகுப்பு வழங்கப்பட்டது...

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 14 ஆம் தேதியை உலக இரத்தக்கொடையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.தன் உதிரத்தையே தானமாக வழங்கி இன்னொருவரி...
14/06/2020

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 14 ஆம் தேதியை உலக இரத்தக்கொடையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.தன் உதிரத்தையே தானமாக வழங்கி இன்னொருவரின் உயிர்காக்கும் உன்னத பணியில் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் இரத்தக்கொடையாளர்கள் ஒவ்வொருவரையும் இந்நாளில் வாழ்த்தி மகிழ்கிறோம்...குறிப்பாக கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கியின் இரத்தக்கொடையாளர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகளும்,நிறைய அன்பும்🌹🌹❤❤

இரத்த வங்கி,அரசு மருத்துவமனை கோபிசெட்டிப்பாளையம்,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,உக்கரம் மற்றும் சத்தியமங்கலம் இளைஞர்கள் இணை...
10/06/2020

இரத்த வங்கி,அரசு மருத்துவமனை கோபிசெட்டிப்பாளையம்,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,உக்கரம் மற்றும் சத்தியமங்கலம் இளைஞர்கள் இணைந்து இன்று சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கத்தில் நடத்திய இரத்ததான முகாமில் பெண்களும்,இளைஞர்களும் பெருமளவில் கலந்துகொண்டு 92 இரண்டு யூனிட் இரத்தத்தை கோபி அரசு மருத்துவமனை இரத்தவங்கிக்கு வழங்கினர்.இரத்தக்கொடையாளர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தனர்...முகாமை மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் மேலும் இந்த முகாமை வெற்றியடைய செய்ய இரத்தகொடையாளர்களை அழைத்து பேசி இவ்வளவு கொடையாளர்களை ஒருங்கிணைத்த ஒவ்வொருவருக்கும் அரசு மருத்துவமனை இரத்தவங்கி சார்பாக நன்றியும் ,பேரன்பும்🌹😍💐....

இணைந்து பயணிப்போம்...

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கிக்கு கோபிசெட்டிபாளையம் வாசவி கிளப்,வாசவி கிளப் வனிதா அமைப்பைச் சேர்ந்த 25 ந...
20/05/2020

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கிக்கு கோபிசெட்டிபாளையம் வாசவி கிளப்,வாசவி கிளப் வனிதா அமைப்பைச் சேர்ந்த 25 நபர்கள் இன்று இரத்ததானம் அளித்தனர்.இரத்ததானம் அளித்த அனைவருக்கும் நன்றியும் அன்பும்❤️.

தற்போது இருக்கும் சூழ்நிலை காரணமாக அரசு மருத்துவமனை,கோபிசெட்டிபாளையம்  இரத்தவங்கியின் இரத்ததேவைகள் குறித்து தெரியப்படுத்...
14/04/2020

தற்போது இருக்கும் சூழ்நிலை காரணமாக அரசு மருத்துவமனை,கோபிசெட்டிபாளையம் இரத்தவங்கியின் இரத்ததேவைகள் குறித்து தெரியப்படுத்தியவுடன் தாளவாடி மலைக்கிராமத்திலிருந்து அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணி பெண்ணிற்காக உடனடியாக A Positive இரத்தவகையை அரசு மருத்துவமனை குருதிவங்கிக்கு வந்து தானமாக அளித்த நம்பியூரை சார்ந்த திரு.சதீஸ்குமார்,கோபிசெட்டிபாளையம் சன் நியூஸ் செய்தியாளர் திரு.ரமேஷ்,சத்தியமங்கலம்-வெள்ளியம்பாளையம் TNSTC ஓட்டுனர் திரு.தமிழ் ஆகியோருக்கு 👍 நன்றியும்,🎊 வாழ்த்துகளும்.....

சிறுவலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோபி அரசு மருத்துவமனை , இரத்த வங்கி இணைந்து  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை ம...
13/03/2020

சிறுவலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோபி அரசு மருத்துவமனை , இரத்த வங்கி இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் இன்று (13.03.2020) நடத்திய சிறப்பு இரத்த தான முகாமில் 53 மாணவர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர். இம்முகாமில் கோபி அரசு மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவர் Dr. சிவசங்கர். மற்றும் சிறுவலுர் வட்டார மருத்துவ அலுவலர் Dr.V.S.செந்தில்குமார் அவர்கள் முன்னிலை வகித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளையொட்டி கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கிக்கு ரஜினி ரசிகர்கள் இன்று இர...
12/12/2019

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளையொட்டி கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை இரத்தவங்கிக்கு ரஜினி ரசிகர்கள் இன்று இரத்ததானம் செய்தனர்....

Address

New Hospital Road, , Gobichettipalayam , Erode District
Gobi
638452

Telephone

+918015488438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Blood Bank, Government Hospital,Gobichettipalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category