Mahayogam - மஹாயோகம்

Mahayogam - மஹாயோகம் Magizhvudan vazhga !!

Jai maharishi !!
******மகிழ்வுடன் வாழ்க!!******

Follow us on Twitter https://twitter.com/MahayogamF

Mahayogam YouTube channel
https://www.youtube.com/channel/UCQ9gHibLarhAwdacZE3GDMg மரணமில்லா பெருவாழ்வை அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒளிதேகம் அடைந்த மகான்களின் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பயிற்சி முறைகள்....

இந்த மகா சித்த புருஷர்கள் வாழ்ந்ததர்கான ஆதாரங்கள் இலங்கை கதிர்காமதிலும்

, திருகேஷ்வரத்திலும்., இன்றும் உள்ளன.

அனைவரும் இந்த மரணத்தை வெல்லும் கலையை பயின்று "மகிழ்வுடன் வாழ்வோமாக"...

ஒளிதேகம்:

ஒளிதேகம் என்னும் மரணமில்லா பெருவாழ்வை அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்துவம் பொருந்திய மண்ணுயிர் தொழும் மகான் மகாமகரிஷிக்கு இந்த பதிவு சமர்ப்பனம்..

இன்று உலகிலுள்ள அனைத்து நாகரீகங்களுக்கும் முன்னோடி இந்தியா என்பது அனைவரும் அறிந்த உண்மையே.அதன் ரகசியம் என்னவென்றால் அது ஆன்மீகம் என்றே சொல்லமுடியும்.இதை ஆணித்தரமாக இந்த உலகிற்கு முதன்முறையாக இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறியவர்,வீரத்துறவி, விவேகானந்தர் தான்.

மிகப்பெரிய ஆன்மீக மாற்றங்களை ஏற்படுத்திய சித்தர் பாரம்பரியம் குறிப்பாக ஒருங்கினைந்த தமிழ்நாட்டிலேயே (தற்பொழுது ஆந்திரா, கேரளா கர்நாடகா) தழைத்தோங்கியிருந்தது. அதன் தலைப்பெரும் தலைமகன்தான் முதல் மரனமில்லா பெருவாழ்வு என்ற இறவா பெருநிலையை எய்திய கந்தன் ஆவார்.

இன்று உலகில் 80 சதவீதமான மொழிகள் தமிழிலிருந்தே தோன்றியது என மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.அத்தகைய சிறப்புமிக்க தமிழின் கடவுள்தான் கந்தன்.அவரின் மிகப்பிரதானமான சீடர் நமது ஆதி குரு அகத்தியர் ஆவார்.தமிழின் இலக்கணத்தையும் புனிதத்தையும் உலகுக்கு உணர்த்தியவர்.

அகத்தியரின் ஆன்மீகம், மற்றும் உலக பணிகளில் அவருடன் நெருங்கியிருந்த பல சீடர்களில் மிக முக்கியமாக கருதப்படுபவர் மூலகுரு போகர் ஆவார். இந்தியா, சீனா, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆன்மீகம் , மருத்துவம் போன்றவற்றை சிறப்புர செய்தவர்.இவர் தொட்டு சித்தர் பாரம்பரியம் என்பது முழுமையாக இம்மண்ணில் தழைத்தோங்கியது.

போகரின் குரு பாரம்பரியத்தில் அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் பிராதானமான நான்கு சீடர்கள் அவர் நிலைக்கு உயர்ந்திருந்தார்கள்.அதாவது ”மரணமில்லாப் பெருவாழ்வை” அடைந்தார்கள்.

அவர்கள் புலிப்பாணி சித்தர், இராமத்தேவர், மஹா அவதாரம் பாபாஜி மற்றும் நமது பரம குரு மஹாமகரிஷி ஆவார்.

இதில் புலிப்பாணி சித்தர் போகருடன் சீனப்பயணம் மேற்கொண்டு அங்கே லாவோட்-சூ, லீ-சுவாக மாபெரும் யோகத் தத்துவத்தை நிறுவினார்கள்.அடுத்து இராமத்தேவர்,யாகோபு முனிவர் என்ற பெயரில் அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நமது பாரம்பரியத்தை நிலைநாட்டியவர்.அவரைத் தொடர்ந்து மஹா அவதாரம் பாபாஜி,அகத்தியரால் கிரியா யோகத்தின் உயர்நிலை தீட்சயை பெற்று வடஇந்தியாவிற்கு சென்று அங்கிருந்து தன் குரு பாரம்பரியத்தையும்,கிரியா யோகத்தின் மகிமையையும் அதன் மேன்மையையும் இந்த உலகிற்கு தன் சீடர்கள் மூலம் வழங்கி கொண்டிருப்பவர்.

இதில் போகருடனேயே வெகுகாலம் வாழ்ந்தவர் தான் நமது பரமகுரு முதலாம் மஹாமகரிஷி.அவரின் சீடர் இரண்டாம் மஹாமகரிஷி.அவரது இயற்பெயர் ராக அரவிந்த ரிஷி.இவர் ஆச்சாரமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்து ஆன்மீக ரகசியத்தை பாமரனுக்கும் உணர்த்திய மகான் ஸ்ரீ ராகவேந்திரர். மரணமில்லா பெருவாழ்வை அடைவதற்காக எடுத்த பிறப்பு. முதலாம் மஹாமகரிஷிக்கும் இரண்டாம் மஹாமகரிஷிக்கும் நூற்றாண்டுகால இடைவெளி உண்டு.நேரடி குரு சீடர் என்றில்லாமல் சூட்சுமத்தில் அமைந்திருந்தது.

அவரின் நேரடி சீடர்தான் சுமார் 320 ஆண்டுகளாக இறவா நிலையை அடைந்து இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்றாம் மஹாமகரிஷி. இவரின் இயர்பெயர் கூணாந்த வர்மா. இலங்கை,கதிர்காமம், யாழ்ப்பாணம், திரிகோணமலை,மன்னார், திருக்கேதீஸ்வரம் , பேசாலை போன்ற இடங்களில் ஆன்மீக அதிசயங்களை நிகழ்த்திய மஹாமகரிஷி இறுதியாக திருக்கேதீஸ்வரத்தில் சீர்மிகு சிவாலத்தின் அருகில் உள்ள ஆலமரத்தடியில்
கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள், மாலை 5.40 மணியளவில் சில சீடர்கள் முன்னிலையில் தன்னுடைய ஊன் உடலை ஒளி உடலாக மாற்றி சொரூப சமாதி நிலையை அடந்தார்.
டிசம்பர் 12ஆம் நாள் கார்த்திகை, பெளர்ணமி அன்று அரூப நிலையை அடைந்தார். நாம் அனைவரும் அறிந்த வகையில் வள்ளலார் அந்த நிலையை அதாவது மரணமில்லா பெருவாழ்வு அடந்தவர்களில் குறிப்பட்த்தக்கவராவார்.

Jai Maharishi!🙏 Live Happily !! Dear All, We are pleased to inform you that this year's *Arutperum Jyothi Yagam*🔥 is sch...
24/12/2024

Jai Maharishi!🙏
Live Happily !!

Dear All,

We are pleased to inform you that this year's *Arutperum Jyothi Yagam*🔥 is scheduled on *25th December 2024 (Wednesday)* evening *5:00 PM* at *Sree Narayana Samithi, Halasuru*. Kindly participate with your family, friends and relatives.
*Volunteers* are welcome for Yagam arrangements, please contact me.

Map location: https://maps.app.goo.gl/vtJzDURKawfz3niR6

02/10/2024

ஜெய்மகரிஷி !! மகிழ்வுடன் வாழ்க !!

குருவின் பொற்பாதங்களுக்கு இந்த பதிவு சமர்ப்பனம்.

அக்டோபர் 2:பேசாலையில் பேரதிசயம் நிகழ்ந்தப் புனித தினம்

(அக்டோபர்- 2 )அன்று மஹாமகரிஷி இலங்கையிலுள்ள பேசாலை என்னும் கிராமத்தில் பேரதிசயம் நிகழ்த்தியப் புனித தினம்.

இலங்கை,கதிர்காமம், யாழ்ப்பாணம், திரிகோணமலை,மன்னார், திருக்கேதீஸ்வரம் , பேசாலை போன்ற இடங்களில் ஆன்மீக அதிசயங்களை நிகழ்த்திய மாஹாகுரு மஹாமகரிஷி 320 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்தூல தேகத்துடன் வயோதிக தோற்றத்தில் ஒரே உருவமாய் எளிமையாக வாழ்ந்து மக்களின் நோய் தீர்த்து பல அதிசயங்களை நிகழ்த்தியவர் என்பதால் அங்குள்ள அனைவரும் இந்த மஹாகுருவை நேரடியாக தரிசிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார்கள்.

ஒரு சமயம் இந்த மஹாகுரு பெசாலையில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த சமயம், தன்னைப் பிடிக்கவருமாரு குழந்தைகளிடம் கூறிக்கொண்டே அங்கிருந்த சுப்ரமண்யர் முருகர் கோவிலின் கருவறை நோக்கி ஓடிச் சென்று அங்கிருந்த மயில் சிலையின் மீதேறி முருகப் பெருமானின் சிலையுடன் ஒன்றி மறைந்தார்.

இந்த மஹாகுருவுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அனைவரும் மஹாமகரிஷி மறைந்ததைத் தொடர்ந்து கூச்சலிட்டனர். இந்த சப்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் அனைவரும் ஓடி வந்து நடந்த சம்பவத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போற்றி வணங்கினர்.

இதில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அக்கோயிலின் தரைப் பகுதியில் இந்த மஹாகுரு நடந்துச் சென்றதுக்கான பாதச் சுவடுகள்,மிகத் தெளிவாக தெரியும் அளவிற்கு கோவில் கருவறை வரை அவர் நடந்துச் சென்ற பாதச் சுவடுகள் பதிந்திருந்தன.இதனைக் கேள்வியுற்ற பிற பகுதி மக்களும் இந்த சுவடுகளை நேரில் கண்டு மலர்களால் பூஜித்துவந்தனர்.

தற்போது இக்கோவிலில் இன்றும் இப்பொற்பாதம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மகாகுருவின் இப்பொற்பாதத்தின் நிழற்படத்தை நீங்கள் உயர்நிலைப் பயிற்சியின் போது பார்க்கலாம்.

இப்புனித ஆற்றல் பொருந்திய இந்நாளில் இம்மஹாகுருவை வணங்கி,குருவின் அருளைப் பெற்று அனைவரும் மகிழ்வுடன் வாழ்வோமாக..

ஜெய்மகரிஷி !!!.

*ஓசூரில்* *புதிய SUCCESS ஆதி சித்தி🙏🏾ஜெய் மஹரிஷி🙏🏾மகிழ்வுடன் வாழ்க.  *ஓசூரில்* *புதிய SUCCESS ஆதி சித்தி யோக வகுப்பு.* *...
18/11/2023

*ஓசூரில்*
*புதிய SUCCESS ஆதி சித்தி

🙏🏾ஜெய் மஹரிஷி🙏🏾மகிழ்வுடன் வாழ்க.

*ஓசூரில்*
*புதிய SUCCESS ஆதி சித்தி யோக வகுப்பு.*

*19.11.2023, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் 7:00 மணி வரை* வகுப்பு நடைபெறும்.

19.11.2023 முதல் 21.11.2023 வரை மூன்று நாட்கள் தொடர் வகுப்புகள். தினமும் 2 மணி நேரம்.

அதனை தொடர்ந்து *ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி முதல் 9 மணி வரை* நடைபெறும்.

இடம் :
Zenskar Training yoga hall,
Near Advaith school,
Behind Ganesh temple,
Avallappali Hudco,
Hosur.

Location link: https://maps.app.goo.gl/4ssDG5BcYpvj7Xmv6

🧎‍♀️ Success ஆதி சித்தி யோக பயிற்சி,
➡️ ஹடயோகம்,
➡️ கிரியாயோகம்.
➡️ தியானம் .
🤦‍♀️மன அழுத்தத்தில் இருந்து விடுதலை.
💪உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.
🦵மூட்டு வலி மற்றும் அனைத்து நாள் பட்ட நோய்களில் இருந்து விடுதலை.
👍🏻பொருளாதார முன்னேற்றம்.
👃சுவாச பிரச்சினை, ஆஸ்துமா, தைராய்டு, ரத்த அழுத்தம் விடுதலை .
🙇‍♂️பயிற்சி-க்கு வரும்போது ஒரு பெட்ஷீட், கை குட்டை மற்றும் கொண்டு வரவும்.

தொடர்புக்கு

Ph: 9448478209.
9566841840.
9976720105.
🌹ஜெய் மகரிஷி🌹 மகிழ்வுடன் வாழ்க.🧎🏻‍♂️🧎🏿‍♀️

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

ஜெய்மகரிஷி!!
11/10/2023

ஜெய்மகரிஷி!!

🙏🏻ஜெய் மகரிஷி🙏🏻மகிழ்வுடன் வாழ்க #பேசாலை_பேரதிசயம்நிகழ்வு :  1986 புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் Oct- 2அன்றைய நாளில் இலங்கைய...
02/10/2023

🙏🏻ஜெய் மகரிஷி🙏🏻
மகிழ்வுடன் வாழ்க

#பேசாலை_பேரதிசயம்

நிகழ்வு :
1986 புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் Oct- 2

அன்றைய நாளில் இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலை என்னும் அழகிய கடல் கிராமம் குறைந்த மக்கள் தொகை யைக் கொண்ட அவ்வூரில் பிரதான தொழில் மீன் பிடித்தல் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அந்த ஊர் மக்கள். தாங்கள் வழிபட பல ஆண்டுகளுக்கு முன் ஓரு முருகன் கோயிலைக் கட்டினார்கள். இக்கோயிலைச் சுற்றி மணல் பரப்பு இருக்கும். சுற்றுப் பகுதிகளில் ஆலமரம் இருக்கும். தமிழ்நாட்டு கோயில்கள் போல் பிரம்மாண்டமான து அல்ல என்றாலும் அக்கோயில் அம்மக்கள் மனம் போல் எளிமையாக இருக்கும்.


பொதுவாக மாலை வேலை களில் வழிபாடு நடத்திவிட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுடனும், உறவுகளுடன் ஓய்வாக இருந்து விட்டுச் செல்வது வழக்கம். குழந்தைகள் எல்லாம் மணல் வெளியில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அந்தக் கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவார் பண்டாரம் தாத்தா ( மஹா மகரிஷி) தாத்தாவுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். தெய்வத்திற்குத் தெய்வங்களை பிடித்து விடும். குழந்தைகளுக்கு ம் பண்டாரம் தாத்தாவுடன் இருப்பது மிகுந்த விருப்பம்.

ஒருநாள், அந்த மணல் வெளியில் குழந்தைகளுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தைகள் ஒளிந்து கொள்ள தாத்தா பிடித்து விடுவார். பெற்றோர்களும் பண்டாரம் தாத்தாவுடன் குழந்தைகள் விளையாடுவதை ரசித்தபடியே தங்களது பிரச்சினைகளை பேசிக் கொண்டிருப்பார்கள். விளையாட்டு ஓரு கட்டத்தை நெருங்க நெருங்க நேரம் பார்த்து பண்டாரம் தாத்தா குழந்தைகளிடம் நான் ஒளிந்து கொள்கிறேன் என்னை பிடியுங்கள் என்றார். குழந்தைகள் அனைவருக்கும் சந்தோசம். தாத்தாவை பிடித்து விடப் போகிறோம் என்று.

மஹாமகரிக்ஷி தாத்தாவோ வேகமாக நடந்து செல்கிறார் குழந்தைகளால் அவர் வேகத்திற்கு நடக்க இயலவில்லை. ஓடி வருகிறார்கள். தாத்தாவோ கோயிலுக்குள் நடந்து சென்று கருவறையில் உள்ள முருகன் சிலைக்கருகில் உள்ள மயில் மீது ஏறி ஒரு காலைத் தூக்கி போட்டார். அவ்வளவுதான் தீடிரென மறைந்து விட்டார். குழந்தைகள் அனைவரும் தாத்தாவைக் காணோம் என்று கத்த ஆரம்பித்து விட்டனர்.

மரத்தடியில் அமர்ந்திருந்த பெற்றோர்கள் ஓடிவந்து அங்கும் இங்கும் தேடினார்கள் பண்டாரம் தாத்தாவைக் காணவில்லை. குழந்தைகள் அவர் மறைந்ததை பார்த்தாக கூறுகிறார் கள். அப்போது அந்த மக்களுக்கு ஓர் பெரிய ஆச்சரியமிக்க அதிசயம் காத்திருந்தது. அது என்னவென்றால் கோயிலுக்குள் நுழைந்து நடந்து வந்த மஹா மகரிஷி கோயிலின் காய்ந்த சிமெண்ட் பூசும் போது பாதம் பதித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.அதுவும் அப் பாதச்சுவடுகள் வேல் போல் நீண்ட அழகாய் இருந்தது அனைவருக்கும் ஆச்சரியம். இது எப்படிச் சாத்தியம். என்று.

முருகப்பெருமான் பண்டாரம் வடிவில் வந்து பாதம் பதித்துவிட்டு சென்றிருக்கிறார் என்று அம்மக்கள் நம்பினார்கள்.அப் பாதச்சுவடுகள் நேரில் கண்ட நம் உள்ளத்திலும் ஆழப் பதிந்து விட்டது.

இந்த நிகழ்வை கண்ட சீடர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வே "பேசாலை பேரதிசயம் " ஆகும்.

22/12/2022

Have great faith in your life 🙏

- Maha Maharishi

Address

Kanchipuram

Alerts

Be the first to know and let us send you an email when Mahayogam - மஹாயோகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share