Baskar Pharmacy

Baskar Pharmacy We have English and vet. medicines

      இன்றைய வரலாறு :ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம்.பிரெஞ்சு ஆளுநரின் மொழிப் பெயர்ப்பாளராக இருந்தவரும், பன்மொழி புலமை ப...
30/03/2024


இன்றைய வரலாறு :
ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம்.

பிரெஞ்சு ஆளுநரின் மொழிப் பெயர்ப்பாளராக இருந்தவரும், பன்மொழி புலமை பெற்றவருமான ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் 1709-ஆம் ஆண்டு மார்ச் 30-ல் பெரம்பூரில் பிறந்தவர். இவர் தனது பணிக்காலத்தில் 1736 முதல் 1761 வரை 25 ஆண்டுகள் எழுதிய நாட்குறிப்புகள், பிற்காலத்தில் வரலாற்று ஆவணமாகவும், இலக்கியமாகவும் போற்றப்பட்டது. இவருடைய நாட்குறிப்பில் அன்றைய அரசியல், கலாச்சாரம், நிர்வாகம், பிரெஞ்சுப் படையெடுப்பு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை, கப்பல் போக்குவரத்து, வாணிபம், பிரெஞ்சு அரசின் போர்த்தந்திரங்கள் மற்றும் அக்காலத்தின் நீதிவழங்கல் என பலவற்றை விவரித்து கூறியுள்ளார்.

      இன்றைய வரலாறு :எக்ஸ் கதிர் கண்டுபிடிப்புஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வில்ஹெல்ம் ராண்ட்ஜன் என்பவரே முதன் முதலாக எக்ஸ் க...
27/03/2024


இன்றைய வரலாறு :
எக்ஸ் கதிர் கண்டுபிடிப்பு

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வில்ஹெல்ம் ராண்ட்ஜன் என்பவரே முதன் முதலாக எக்ஸ் கதிரை கண்டுபிடித்தவர், இதற்காக அவருக்கு இயற்பியல் துறைக்கான முதல் நோபல் விருது 1901-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1845-ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று ஜெர்மனியின் ரைன் மாகாணத்தில் பிறந்தவர். இவர் 1895-ஆம் ஆண்டு, ஆய்வகத்தில் ஒரு வெற்றிடக்குழாய் வழியாக கேத்தோடு கதிர்களை அனுப்பும் போது அக்கதிர்கள், பிளாட்டினோ சயனைடு பூசப்பட்ட கார்ட்போர்டு அட்டையின் வழியாக ஊடுருவியபோது, அந்த அட்டை ஒளிர்ந்தது. கண்ணிற்கு புலனாகாத இந்த ஊடுருவும் கதிருக்கு ராண்ட்ஜன், எக்ஸ் கதிர் என்ற பெயரினை வைத்தார்.

     இன்றைய வரலாறு: உலக கணித தினம்உலக கணித தினம் என்பது, சர்வதேச அளவில் சிறந்த கணிதவியலாளர்களை உருவாக்கவும், ஊக்குவிக்கவ...
14/03/2024


இன்றைய வரலாறு: உலக கணித தினம்

உலக கணித தினம் என்பது, சர்வதேச அளவில் சிறந்த கணிதவியலாளர்களை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் Educational Resource Provider என்ற நிறுவனத்தால் நடத்தப்படும் கணிதத் தேர்வு ஆகும். முதன் முதலாக உலக கணித தினம் மார்ச் 14, 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கணித தினத்தில் அதிகமானோர் ஆன்லைன் போட்டியில் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்தனர். இப்போட்டியானது குறைந்த நேரத்தில் துல்லியமாக கணக்கிடும் மாணவர்களை உருவாக்குகிறது.

சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார்.சபையே சிரிப்பாய் அதிர்ந்தது கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோ...
10/03/2024

சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார்.

சபையே சிரிப்பாய் அதிர்ந்தது கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார் பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் அதே பாேல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற அங்கொன்றும் இங்காென்றும் மட்டுமே சிரித்தனர் நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது!!

அப்பாேது சார்லி சாப்ளின் கேட்டாராம் ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத
" நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறாேம் "என்று!

So Be Happy Always 😀😀😀😀😀😝😝😝

உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!தேவையானவை: வெள்ளரிக்காய் - 1, இஞ்சி - சிறிதளவு, கற்றாழை - 3-4 துண்டுகள், இந்துப்பு -...
29/02/2024

உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!

தேவையானவை: வெள்ளரிக்காய் - 1, இஞ்சி - சிறிதளவு, கற்றாழை - 3-4 துண்டுகள், இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகியவற்றைத் தோல் நீக்கிக்கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: வெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக்குழாய் புண், அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் மறைந்துவிடும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். செரிமான சக்தி மேம்படும். சாதாரண உப்பு, புண்களை மேலும் தீவிரப்படுத்தலாம். ஆகையால், இந்துப்பு எனும் ‘ஹிமாலயன் சால்ட்’ சேர்ப்பது, புண்கள் குணமாக உதவும். இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என, செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் பகுதி வரை உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும் திறன் இதற்கு உள்ளது.

# BASKAR PHARMACY MAMANDUR...

சீரகம் சிறப்புகள் !சீரகத்தை, சீர்+அகம் எனப் பிரிப்பார்கள். அதாவது, உடலைச் சீர்செய்யக்கூடிய வல்லமை சீரகத்துக்கு உண்டு.உணவ...
27/02/2024

சீரகம் சிறப்புகள் !

சீரகத்தை, சீர்+அகம் எனப் பிரிப்பார்கள். அதாவது, உடலைச் சீர்செய்யக்கூடிய வல்லமை சீரகத்துக்கு உண்டு.

உணவுகள் செரிமானம் ஆவதற்கு பல என்சைம்கள் உடலில் வேலை செய்கின்றன. சீரகம் இந்த என்சைம்களைத் தூண்டிவிடும். இதனால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

பித்தத்தைச் சரிசெய்வதால், ‘பித்த நாசினி’ என சித்த மருத்துவத்தில் சீரகத்தைப் புகழ்கிறார்கள்.

200 கிராம் சீரகத்தில், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றை விட்டு, நன்றாகக் கலந்து காயவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இதை அரைத்துப் பொடித்துவைத்து, தினமும் அரை தேக்கரண்டி சாப்பிட்டுவந்தால் ஒற்றைத் தலைவலி, வாந்தி போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.

சீரகம், சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தும். சீரகத்தை வறுத்து, தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்க, உயர் ரத்த அழுத்தம் குறையும். இருமல், சளி நீங்கும்.

பளபள சருமத்துக்கு பப்பாளி!சருமத்தைக் குணப்படுத்தும் ஆற்றல்கொண்ட பழம் பப்பாளி. சருமம் பொலிவாக, இளமையாக இருக்க வேண்டும் என...
27/02/2024

பளபள சருமத்துக்கு பப்பாளி!

சருமத்தைக் குணப்படுத்தும் ஆற்றல்கொண்ட பழம் பப்பாளி. சருமம் பொலிவாக, இளமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு, பப்பாளி அருமருந்து.

* சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கை அழகை அளிக்கிறது பப்பாளி.

* பப்பாளியுடன் சிறிது தேன் கலந்து தடவினால், சருமம் ஈரப்பதத்துடன் பொலிவாக இருக்கும்.

* பப்பாளியைக் கைகளால் நசுக்கி, முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும்; முகப்பருக்கள் மறையும்.

* சருமத்தில் தொடர்ந்து தடவியும் உட்கொண்டும் வந்தால், சருமம் மென்மையாகும்.

* சருமம் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது.
கரும்புள்ளிகளை நீக்குகிறது.

* பப்பாளியை மசித்து, தலையில் பூசி், குளித்துவந்தால் முடி உறுதியடையும்; நன்கு வளரும்.

* பாத வெடிப்புகளைப் போக்கவும் பப்பாளியை மசித்துப் பூசலாம்.

குறிப்பு: பப்பாளியில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி அமிலம்தான் (Alpha hydroxy acid) ஆன்டிஏஜிங் பொருளாகச் செயல்படுகிறது. ஆனால், இந்த அமிலம்தான் பப்பாளியின் அமிலத்தன்மைக்கும் காரணமாக இருக்கிறது. எனவே, நீண்ட நேரம் இதை முகத்தில் பூசக் கூடாது. 5 முதல் 10 நிமிடங்களுக்குள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட வேண்டும்.

‘கறுப்புத் தங்கம்’ மிளகு சிறப்புகள் !மிளகுக்கு, ‘கறுப்புத் தங்கம்’ என்றோர் பெயர் உண்டு. எண்ணற்ற  சத்துக்களைக் கொண்டது. ‘...
26/02/2024

‘கறுப்புத் தங்கம்’ மிளகு சிறப்புகள் !

மிளகுக்கு, ‘கறுப்புத் தங்கம்’ என்றோர் பெயர் உண்டு. எண்ணற்ற சத்துக்களைக் கொண்டது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற பழமொழி இதன் நச்சு நீக்கும் தன்மையைச் சொல்லும்.

மிளகில், பைப்பரின் (Pipirine) எனும் சத்து உள்ளது. மிளகின் வாசனைக்கு இதுதான் காரணம்.

மிளகைக் காயகற்ப மூலிகையாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். திரிகடுகத்தில் மிளகுக்கும் இடம் உண்டு.

தும்மல், மூச்சடைப்பு, உடல் பருமன் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். மிளகுப்பொடியை அப்படியே சமையலில் பயன்படுத்துவதே சிறந்தது. தினமும் மிளகைச் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு சாதம் சாப்பிடலாம். மிளகு சூப், மிளகு ரசம் மழை மற்றும் குளிர் காலங்களில் பருகலாம்.

மிளகு காரமானது. எனவே, அல்சர் இருப்பவர்கள் மிளகைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். தொண்டைக்கட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும்.

கிளையை உடைத்து வைத்தாலே வளர்ந்துவிடும். தொட்டி, நிலம் என எங்கும் வளரும். தினமும் தண்ணீர் விட வேண்டும். அதிகம் பூச்சி வரு...
25/02/2024

கிளையை உடைத்து வைத்தாலே வளர்ந்துவிடும். தொட்டி, நிலம் என எங்கும் வளரும். தினமும் தண்ணீர் விட வேண்டும். அதிகம் பூச்சி வரும் என்பதால் இயற்கையான பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கலாம்.

பலன்கள்:
செம்பருத்திப் பூவில் இரும்புச்சத்துக்கள் மிக அதிகம். ஃப்ரெஷ்ஷான பூவாக அப்படியே எடுத்துக் கழுவிச் சாப்பிடலாம். மாதவிலக்குப் பிரச்னைகள் குணமாகும். ரத்தப்போக்கு சீராகும். இதயத்துக்கு மிகவும் நல்லது. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பவர்கள், செம்பருத்திப் பூவைச் சாப்பிட்டுவர, நல்ல பலன்களைத் தரும். குழந்தைகளுக்கு, செம்பருத்தி பூவின் சாற்றை வெல்லத்தோடு கலந்து தந்தால் ஆரோக்கியம் மேம்படும்.

TO REMOVE SKIN TAG...."மரு" (Skin Tag) உதிர... இன்றையசூழ்நிலையில் ஏராளமானவர்களிடம்பரவலாக காணப்படுவது "மரு" [SkinTag] ஆகு...
17/12/2023

TO REMOVE SKIN TAG....

"மரு" (Skin Tag) உதிர... இன்றையசூழ்நிலையில் ஏராளமானவர்களிடம்பரவலாக காணப்படுவது "மரு" [SkinTag] ஆகும்.
இதனை சுலபமாகஉடலில் இருந்து அகற்றலாம். அதற்குஅம்மான் பச்சரிசி செடி தேவை...அம்மான் பச்சரிசியின் இலையினைஒடித்தால், பால் தோன்றும். இதனைமரு மீது பூசவும். மேலும், சிலஇலைகளை ஒடித்து மரு முழுதும்பூசவும். இது போல் தினமும் பூசி வர,நான்கு ஐந்து தினங்களில் மருஉதிர்ந்து விடும்.

 #டாஸ்ட்டு_சாலட்    #தேவையானவை :🍬 வெள்ளரிக்காய் & குடமிளகாய்                                 - தலா அரைத் துண்டு, 🍬 கேரட்...
13/12/2023

#டாஸ்ட்டு_சாலட்

#தேவையானவை :
🍬 வெள்ளரிக்காய் & குடமிளகாய்
- தலா அரைத் துண்டு,
🍬 கேரட் - 75 கிராம்,
🍬தக்காளி - 1,
🍬 எலுமிச்சம்பழம் - அரை மூடி,
🍬 மிளகுத் தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
🍬 கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

#செய்முறை :
வெள்ளரிக்காய், கேரட், குடமிளகாய், தக்காளி இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். உப்பு, மிளகுத் தூள் கலந்து சிறிது நேரம் ஊறவிடவும். கடைசியில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

#பலன்கள் :
👉 கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. அசைவ உணவுகள் தரக்கூடிய அனைத்துச் சத்துகளும் இதில் அடக்கம். உடலுக்குப் போதிய நீர்ச்சத்து கிடைத்துவிடும்.
👉 குடமிளகாயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பைக் குறைக்கும். ஆனால், குடமிளகாயைக் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும்.
👉 தக்காளி மற்றும் எலுமிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின்களும் கூடுதல் சத்துக்களைத் தரும்.

இடுப்பு எலும்பு உறுதியாக்கும் பாதாம் எள்ளு சிக்கிதேவையானவை: பாதாம், கறுப்பு எள் - தலா 1 கப், சுத்தமான வெல்லம் - 1/2 கப்,...
10/12/2023

இடுப்பு எலும்பு உறுதியாக்கும் பாதாம் எள்ளு சிக்கி

தேவையானவை:
பாதாம், கறுப்பு எள் - தலா 1 கப்,
சுத்தமான வெல்லம் - 1/2 கப்,
நெய் - 2 டீஸ்பூன்,

செய்முறை:
கடாயில் எள்ளைப் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். பாதாமை மெலிதாக நறுக்கி, லேசாக வறுக்க வேண்டும். கடாயில் நெய் விட்டு, வெல்லம் போட்டு, அப்படியே கரையவிட வேண்டும். இதனை, மரக் கரண்டியால் கிளற வேண்டும். தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும் எள், பாதாமைப் போட வேண்டும். இரண்டு நிமிடங்களில் சரியான பதத்தில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு ட்ரேவில் நெய் தடவி, அதில் கொட்டி சப்பாத்திக்கட்டையால் தேய்க்க வேண்டும். தட்டையானதும், நமக்குத் விருப்பமான வடிவில் வெட்டிச் சாப்பிடலாம்.

பலன்கள்:
எள் மற்றும் பாதாமில் கால்சியம் இருப்பதால், எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியமாகும்.
பெண்களுக்கு இடுப்பு எலும்பு உறுதியாகும்.
இரும்புச்சத்து கிடைக்கும்.
உடல் எடை அதிகரிக்க விரும்புவர்கள், வளரும் குழந்தைகளுக்கு நல்லது.

Address

Kanchipuram

Opening Hours

Monday 8am - 1pm
3pm - 9pm
Tuesday 8am - 1pm
3pm - 9pm
Wednesday 8am - 1pm
3pm - 9pm
Thursday 8am - 1pm
3pm - 9pm
Friday 8am - 1pm
3pm - 9pm
Saturday 8am - 1pm
3pm - 9pm
Sunday 8am - 1pm
3pm - 9pm

Telephone

044-27242190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baskar Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Baskar Pharmacy:

Share