General Health and prevention

General Health and prevention Providing public health services, govt organisation.

25/07/2021
28/02/2021
20/12/2020

Providing public health services, govt organisation.

05/10/2020
28/09/2020

DHARMAPURI QUARANTINE CENTRE- they are maintaining like a ROLE MODEL type. Really excellent administration and patients care ALSO. My sincere complements to them, Doctors, nurses, CLEANING staff and all other supporting staff. 🙏

👆Sir/ Madam, above video and message is from GURUSWAMY V, CHIEF MANAGER, SBI, DHARMAPURI- feedback about our COVID CARE CENTRE

23/02/2020
07/11/2018

*டெங்குவிற்கு காரணம் சுகாதாரத்துறை அல்ல!*

டெங்குவிற்குக் காரணம் கொசுக்கடி.
கொசுக்கடிக்கு காரணம் கொசு உற்பத்தி . தண்ணீர், நன்னீர் தேங்கி நிற்பது கொசு உற்பத்திக்குக் காரணமாகும்.

தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவது, மீண்டும் தேங்காமல் இருக்கச் செய்வது யார் பொறுப்பு?

சுகாதாரத்துறையின் பொறுப்பா?
இல்லை!
இல்லை!!

சர்கார் படத்தில் டெங்குவைத் தடுக்க வேண்டிய பொறுப்பு பொதுப்பணித் துறையின் வேலை என்கிறார் நாயகன்.
அதை மறுத்து நெட்டிசன்கள் டெங்குவைத் தடுப்பது சுகாதாரத்துறையின் வேலை என்று சமூக வலைத் தளத்தில் எழுதுகிறார்கள்.

ஏற்கனவே சமூகத்தில் பொதுப்புத்தியில் அப்படித்தான் பதிந்துள்ளது.

கொசு உற்பத்தியைத் தடுப்பது உண்மையிலேயே உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டிய வேலை.

தண்ணீர் தேங்கி நிற்பது, டயர்கள் பானைகள் தொட்டிகள் நெகிழிப்பைகள், கப்புகள் இவற்றில் தேங்கும் நன்னீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதும், உற்பத்தியாகாமல் தடுப்பதும் உள்ளாட்சி அமைப்புகளின் வேலை.

அது போலவே சாக்கடை போன்ற தூய்மையற்ற நீரில் உருவாகும் பிற கொசுக்களை( இவை மலேரியா, யானைக்கால் நோயை பரப்புபவை) உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டியதும் உள்ளாட்சி அமைப்புகள் வேலை தான்.
அதுபோல சுத்தமான குடிநீர் வழங்கி தண்ணீர் மூலமாக பரவுகின்ற நோய்களை பரவாமல் தடுக்கும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் வேலைதான்.

எல்லா நாடுகளிலும், நம் தமிழ்நாடு உட்பட இது தான் செயல்முறை.

ஆனால், கொசு ஒழிப்புப் பணியில் 100 விழுக்காடு சுகாதாரத்துறை இழுத்து விடப்பட்டுள்ளது.

கெடுவாய்ப்பாக டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு காரணமான பழி சுகாதாரத் துறையின் மீது ஒட்டுமொத்தமாக விழுகின்றது.

டாக்டர்கள் சமூகப் பொது புத்தியில் வில்லன்கள் ஆக்கப்படுகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகள் தான் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்று செயல்பட வேண்டும்.
கொசுக்களை ஒழிக்கும் பணிக்கு தடுப்பு மருத்துவத் துறை டெக்னிக்கல் வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கும்.
ஆனால் களத்தில் பணிகளைச் செய்ய வேண்டிய ஆள்பலம் , நிதி ஆதாரம் எல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கே உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளை முடுக்கி விடாமல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் ஊருக்கு நான்கு மஸ்தூர்களை ( தினக்கூலிப் பணியாளர்) அனுப்பி வேலை செய்ய வைத்தால் கொசு இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் ஒழியாது.
டெங்குவும் ஒழியாது.

பல துறைகள் இணைந்து செயல்பட வேண்டிய கொசு ஒழிப்பு பணியை டெங்கு ஒழிப்புப் பணியினை, (பழியினையும்) ஒட்டுமொத்த மாக சுகாதாரத்துறையின் மீது திணிப்பது உண்மையிலேயே டெங்குவை ஒழிக்க உதவாது.

28/07/2018
26/07/2018

நேற்று திருப்பூரில் நடந்த யூட்யூப் பிரசவத்தின் விளைவாக ஒரு பெண் மரமணமடைந்த செய்தி அதுவும் தமிழ்நாட்டில் நடந்தது என்று நினைக்கையில் நாம் அனைவரும் நிச்சயம் அவமானப்பட வேண்டும்.
ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை

நிச்சயம் பொது சுகாதாரத் துறை மருத்துவனான எனக்கு மிகப்பெரும் ஆற்றாமையும் கோபமும் கவலையும் வந்திருக்கிறது.

ஒரு நாடு அல்லது மாநிலம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் மனித வள மேம்பாட்டு குறியீடுகளை நிருவியுள்ளது.
அவற்றில் முக்கிய இடத்தை பெறுவது

பிரசவத்தில் தாய் மரணமடைவதை தடுக்கும் மருத்துவ வசதிகள்.

கர்ப்பம் ஆன தேதியில் இருந்து பிரசவத்திற்கு பின் 42 நாட்கள் வரை உள்ள இந்த காலத்தில் தாய் மரணமடைந்தால் அது கர்ப்ப கால தாய் மரணமாக கொள்ளப்படுகிறது.

இதை Maternal Mortality Ratio (MMR) என்கிறோம்

ஒரு லட்சம் பிறப்பிற்கு எத்தனை தாய்மார்கள் இப்படி இறக்கிறார்கள் என்பதை வைத்தே ஒரு நாடு எத்தனை முன்னேறி இருக்கிறது என்று கூறிவிடலாம்..

தமிழ்நாட்டின் தற்போதைய MMR - 67 க்கு குறைந்துள்ளது

இது 1990 களில் 450 ஆக இருந்தது.

அதாவது வருடத்திற்கு ஒரு லட்சம் பிறப்புகள் நடக்கும் ஒரு ஊரில் உதாரணம் மதுரை என்று வைத்துக்கொள்வோம்

1980களின் இறுதியில் 450 தாய்மார்கள் கர்ப்ப காலத்தின் போதோ பிரசவத்தின் போதோ
பிரசவத்திற்கு பின்னோ
இறந்து வந்தார்கள்

கிட்டத்தட்ட வருடா வருடம் ஐநூறு தாய்களின் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் அனாதை ஆயின

இன்று நாட்டில் சிறப்பாக MMR ஐ குறைத்த மாநிலமாக தமிழ்நாடு மத்திய அரசிடம் விருது வாங்கியிருக்கிறது.

இந்த மாற்றம் எப்படி நடந்தது?

தானாக இந்த இருபது வருடத்தில் எல்லாம் மாறி விட்டதா??

இது அனைத்தும் அரசின் கொள்கை, அரசு MMRஐ குறைக்க செலவிட்ட செலவினம், அரசு மருத்துவர்களின் அற்பணிப்பு , கிராம சுகாதார செவிலியர்களின் உழைப்பு , செவிலியர்களின் கண் அயறா பணி , தனியாரில் மேம்பட்ட சேவை கிடைக்கச்செய்தது போன்ற பல விசயங்கள் தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களில் நடந்தது.

ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்குள் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்

தாலுகாவுக்கு ஒரு அரசு மருத்துவமனை

மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி.

ஒரு மாவட்டத்தை பத்து பனிரெண்டு வட்டாரங்களாக ( Blocks) பிரித்து அதில் ஒரு சுகாதார நிலையத்தை வட்டார சுகாதார நிலையமாக நிறுவி அதற்கு கீழ் பல ஆரம்ப சுகாதார (primary health centres) நிலையங்கள் இயங்கும்.

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கீழும் ஐந்து முதல் பத்து துணை சுகாதார நிலையங்கள்( health sub centre) வரும்

வட்டாரம் முழுவதுக்குமான மருத்துவ கண்காணிப்பை வட்டார மருத்துவ அலுவலர் கவனிக்கிறார்.

அவருக்கு கீழே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களை பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் கவனிக்கிறார்கள்.

அவர்களுக்கு கீழே இயங்கும்
துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்( village health nurse) பணி புரிகின்றனர்.

ஒவ்வொரு 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்

ஒவ்வொரு 5000 மக்கள் தொகைக்கும் ஒரு துணை சுகாதார நிலையம் என
தமிழக சுகாதார துறை தனது விருட்ச வேர்களை சமூகத்தின் அடித்தளம் வரை பரவவிட்டிருக்கிறது.

கார்ப்ப காலத்தில் ஒரு தாய் மரணமடைய காரணமான அனைத்து காரணங்களும் தோண்டி துருவி ஆராயப்பட்டு அதற்கான விடை அறியப்பட்டு உடனே அரசின் கொள்கை முடிவாக ஏற்கப்படுகின்றன.

பிரசவத்தின் போது ஏற்படும் உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகளில் ஒரு தாய் ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துமனைக்கு அழைத்து செல்கையில் அல்லது
வீட்டில் இருந்து மருத்துவமனையை அடைய பணம் இல்லாமல் கால தாமதம் ஆகிறது என்ற காரணம் கண்டறியப்பட்டவுடன் வந்த திட்டமே

108 ஆம்புலன்ஸ்.. உண்மையில் அது தாய்களை காக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான்.

இதனால் பல Transit மரணங்கள் குறைந்தன.

கர்ப்ப காலத்தில் ஆனீமியா எனும் ரத்த சோகை வருவதால் தாய் மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன என்று கண்டறியப்பட்டது..

உடனே பிரதி வாரம் அனைத்து சுகாதார நிலையங்களிலும் சிகிச்சைக்கு வரும் தாய்மார்களுக்கு இலவச உணவு அதில் கீரை முட்டை போன்ற சத்துள்ள உணவுகள் சேர்க்கப்பட்டன. மூன்று மாதம் முதல் இலவசமாக இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படுகின்றன.

பிரசவ காலத்தில் பெண்களை ஏழை மக்களால் சரிவர கவனிக்க முடிவதில்லை. இதனால் அவர்களது உடல் நலிந்து அதனால் மரணம் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டு கொண்டு வரப்பட்டது தான்

டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம்.. இப்போது ரூபாய் 18000 வழங்கப்படுகிறது. தாய்மார்கள் நல்ல உணவு உண்டு திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

1980 களில் தமிழகத்தில் சிசேரியன் சிகிச்சை அறிமுகத்துக்கு வந்தது. நானும் சிசேரியன் சிகிச்சையால் உயிர் பிழைத்தவன் என்பதில் என்றும் எனக்கு சிசேரியன் மீது ஒரு நன்றி உண்டு. அதை கண்டறிந்தவர்களுக்கு என்றும் நான் நன்றி கடன் பட்டவன்.
இந்த சிசேரியன் சிகிச்சை 2000 ஆண்டு வரை கூட பரவலாக்கப்பட வில்லை. சிசேரியன் சிகிச்சை சரியான நேரத்தில் கிடைக்காததால் தாய் மரணங்கள் நடக்கின்றன என்று அறியப்பட்டது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் சிகிச்சை செய்யும் அளவு தரம் உயர்த்தப்பட்டன. வட்டார சுகாதார நிலையங்கள் பல சிசேரியன் சிகிச்சை கிடைக்கும் நிலையங்களாக உருமாறின.
சிசேரியன் சிகிச்சையினை உடனே பெற்று பல மரணங்கள் தவிர்க்கப்பட்டன.

மருத்துவர்கள் பல்வேறு துறைகளை பார்த்துக்கொண்டு தாய் சேய் நலனிலும் கவனம் செலுத்துவதால் , தாய் சேய் நலத்தின் தரம் குறைவதால் இதற்கென பிரத்யேகமான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அரசு நினைத்து
உருவாக்கியதே CEMONC எனும் அமைப்பு. (comprehensive and emergency obstetric and neonatal care unit)

இங்கே 24 மணிநேரமும் மகப்பேறு மருத்துவர்களும் குழந்தைகள் நல மருத்துவர்களும் பணியில் இருப்பார்கள். எப்போதும் தேவையான ரத்தம் தயாராக இருக்கும். அறுவை அரங்குகள் தயாராக இருக்கும். இவர்கள் வேலையே உயிருக்கு போராடிக்கொண்டு வரும் தாயையும் சேயையும் காப்பது தான். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு குறைந்துபட்சம் ஒன்று அல்லது இரண்டு சீமாங்க் இருக்கிறது.

தாயின் மரணங்கள் தாயின் பிரசவ எண்ணிக்கை கூட கூட( High order birth) அதிகரித்துக்கொண்டே செல்வதால் அதை தடுக்க குடும்ப நல அறுவை சிகிச்சைகள் அவரவர் கிராமங்களிலேயே இலவசமாக செய்யப்படுகின்றன. தங்கும் போது இலவச உணவு வழங்கப்படுகிறது. சிகிச்சை முடிந்ததும் இலவசமாக வீட்டிற்கு அழைத்துச்சென்று விடப்படுகிறது.

இதுபோக கர்ப்ப காலத்தில் இறக்கும் ஒவ்வொரு தாயின் மரணமும் அவமானமாக கருதப்பட்டு ஆடிட் எனும் தணிக்கை செய்யப்படும். நான் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக இருக்கும் போது சில தணிக்கைகளை சந்தித்துள்ளேன். உண்மையில் அந்த தணிக்கைக்கு முதல் வாரம் முழுவதும் உறக்கமே வராது. அந்த தாயின் மரணம் எப்படி நடந்தது? எங்கு நடந்தது? ஏன் நடந்தது? எங்கு குறை ? யார் மீது தவறு ? என்று தணிக்கை செல்லும். முதலில் தணிக்கை அதிகாரி ஆய்வு செய்வார்... பிறகு துணை இயக்குநர் தணிக்கை.. அடுத்து ஆட்சியர் தணிக்கை.. பிறகு தேசிய சுகாதார குழும இயக்குநர் தணிக்கை என்று அந்த மரணத்தின் காரணத்தை கண்டறியாமல் ஆய்வு முடியாது. மீண்டும் அந்த மரணம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற அரசு கொள்கை உடனே வகுக்கப்படும்.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2000 களுக்கு முன்பு வரை மருத்துவர் இன்றியோ அல்லது வாரம் இரண்டு நாள் மட்டும் தான் மருத்துவரோடு இயங்கியிருக்கும். காரணம் மருத்துவர் பற்றாக்குறை.

உடனே மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி எனும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு இன்று அத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் இருக்கிறார்கள்

இன்னும் நிறைய இருக்கிறது. நீளமாக செல்வதால் இத்தோடு முடிக்கிறேன்.

இவையனைத்துக்கும் பின்னால் இருக்கும் ஒரே குறிக்கோள்..

கர்ப்ப காலத்தில் தாய் இறப்பை தடுக்க வேண்டும்..

சிங்கப்பூர், ஸ்வீடன் போன்ற வளர்ந்த நாடுகளின் ஒற்றை இலக்க MMR ஐ அடைய வேண்டும் என்பதே ..

அதை எப்படியாவது தடுத்து நாட்டின் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் யூட்யூப் போலிகள் திரிகிறார்கள்.

ஒன்று கூறி இந்த கட்டுரையை முடிக்கிறேன் .

"கர்ப்பம் ஒரு நோயல்ல..
அதற்கு மருத்துவம் தேவையில்லை" என்ற கருத்து பரப்பும் விசமிகளின் கருத்துக்கு எனது கருத்து

" கர்ப்பம் நோயல்ல.அது ஒரு இயற்கை நிகழ்வு. ஆணும் பெண்ணும் கூடினால் இயற்கையாக கர்ப்பம் நிகழும். ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல மாற்றங்களை அறியவும் / பிரசவம் மற்றும் அதற்கு பின்பு ஏற்படும் பிரச்சனைகளை உடனே அறிந்து உயிரை காக்கவும் கட்டாயம் சரியான மருத்துவ கண்காணிப்பு தேவை.."

என்று கூறி முடிக்கிறேன்....

நிச்சயம் சிந்திப்பவர்களுக்கு இதில் செய்திகள் உண்டு.

Dr.ஃபரூக் அப்துல்லா,MBBS.,( MD.,)
சிவகங்கை

***8 அடி கட்டுவிரியன் சிறுவனை கடித்தது* ----பிழைக்க வைத்த அரசு டாக்டர்கள்!🖊🖊🖊கொடிய விஷமுடைய 8 அடி நீளமுள்ள கட்டு விரியன்...
28/06/2018

***8 அடி கட்டுவிரியன்
சிறுவனை கடித்தது
* ----
பிழைக்க வைத்த அரசு டாக்டர்கள்!
🖊🖊🖊

கொடிய விஷமுடைய 8 அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்த சிறுவனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டாக் டர்கள் போராடி உயிர் பிழைக்க வைத்தனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த மகன் காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர் களது மகன் சுனில் (வயது 11). அங்குள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறான்.
கடந்த 25ந் தேதி இரவு காற்றோட்டத்திற்காக வீட்டு வாசலில் விஜயகுமார் தனது மனைவி, மகனுடன் படுத்து தூங்கினார். முட்புதர் அடர் ந்த பகுதி என்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் சுற்றிதிரியும்.

நள்ளிரவு 1 மணி அளவில் 8 அடியை விட பெரியதாக கொடிய விஷம் கொண்ட ஒரு கட்டுவிரியன் பாம்பு தூங்கி கொண்டிருந்த சிறுவன் சுனிலை கடித்தது. அலறியடித்து எழுந்த சிறு வன் சத்தம் போட்டு கதறி அழுதான்.
பெற்றோர் திடுக்கிட்டு பதறி எழுந்து பார்த்தபோது, பாம்பை கண்டு நடுங்கினர்.

பிறகு பெரிய கட்டையை எடுத்து பாம்பை அடித்து கொன்றனர். பாம்பை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு மகனை பைக்கில் ஏற்றி சோளிங்கர் அரசு ஆஸ் பத்திரிக்கு வந்தனர்.

அதற்குள் ரத்தம் உறைந்து, நரம்பு செயலிழந்து போனது. இதனால் சிறுவன் சுனில் சுய நினைவை இழந்தான். சோளிங்கர் அரசு ஆஸ்பத்தி ரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமானதால், 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அடுத்த 1 மணி நேரத்தில் (26ந் தேதி அதிகாலை 3.30 மணி) கொண்டு வந்து அனுமதித் தனர். அதே ஆம்புலன்சில் பாம்பையும் கையோடு கொண்டு வந்தனர்.

உடனடியாக, குழந்தை நல டாக்டர் பேராசிரியர் தேரணி ராஜன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், சுய நினைவை இழந்த சிறுவன் சுனிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கொடிய விஷ த்தை முறிக்கும் மருந்தையும் கொடுத்தனர்.

இதையடுத்து, ஒருவழியாக போராடி சிறுவனின் உயிரை காப்பாற்றினர். இதுகுறித்து டாக்டர் தேரணிராஜன் கூறு கையில், சரியான நேரத்தில் சிறுவன் கொண்டு வரப்பட் டான். உயிர் பிழைப்பான் என சிறுவனின் குடும்பத்தினரே நினைத்து பார்க்கவில்லை.

உயிர் போகும் கடைசி நேரத்தில் சிறுவன் காப்பற்ற ப்பட்டுள்ளான். இப்போது நலமான இருக்கிறார். இயல்பு நிலைக்கு திரும்பி நன்றாக பேசுகிறார். அரசு ஆஸ்பத்திரியை மக்கள் முதலில் நம்ப வேண்டும்.
பாம்பு கடிக்கு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பான சிகிச்சை அளிக்க ப்படுகிறது என்றார். சிறுவன் மற்றும் அவரது பெற்றோர், டாக்டர் தேரணி ராஜனிடம் கைகூப்பி தெரிவித்தனர்.

🖊🖊🖊

21/06/2018

யானைக்கால் நோயால் 31 மில்லியன் பேர் பாதிப்பு!

இந்தியாவில் 31 மில்லியன் மக்கள் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டுக்குள் யானைக் கால் நோயை ஒழிக்க வேண்டும் என இந்தியா உறுதிமொழி எடுத்துள்ளது.

யானைக்கால் நோயை குணப்படுத்துவதற்கு ஐவர்மெக்டின் என்ற மருந்து மிக உதவியாக இருந்து வருகிறது. பார்மா நிறுவனம் மெர்க் டொனேஷன் என்ற திட்டத்தின் மூலம், இந்தாண்டு இந்தியாவுக்கு 9 மில்லியன் ஐவர்மெக்டின் மருந்துகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

ஆனால், அதற்கு விண்ணப்பிப்பதற்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மெர்க் டொனேஷன் திட்டத்தின் கீழ் இந்தாண்டு 100 மில்லியன் ஐவர்மெக்டின் மருந்து வழங்கப்படும். அதில், இந்தியாவுக்கு 9 மில்லியன் மருந்தும், மீதமுள்ளவைகள் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும்.

குறிப்பிடப்பட்ட காலத்திற்குள், இந்தியா அந்த மருந்து வேண்டி விண்ணப்பித்தால், அந்த மருந்து டிசம்பர் மாதத்துக்குள் வந்துவிடும். குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், மெர்க்கின் அடுத்த ஆண்டு நன்கொடைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளில் சிறிது பின்னடைவு ஏற்படும். இந்த மருந்து வருவதற்கு நேரம் எடுக்கும் என சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொசு கடித்தல் மூலம் ஏற்படும் யானைக் கால் நோயினால் கை,கால்கள் வீங்கி காணப்படும். எந்தவொரு வேலையும் செய்ய முடியாது. நம்முடைய செயல்களை முடக்கிவிடும். தற்போது, இந்த நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, அல்பென்டசோல் (albendazole) டைதில்கார்பாமேசைன் சிட்ரேட்( diethylcarbamazine citrate ) மற்றும் ஐவர்மெக்டின் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையில் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது யானைக் கால் நோய் பரவுவதை கட்டுப்படுத்துகிறது. இந்த மருந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மூன்று மருந்துகளும் நன்கொடை மூலம் இந்தியாவுக்கு இலவசமாக கிடைக்கிறது. இந்தியா செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், உரிய நேரத்தில் அந்த மருந்து வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். இந்த மருந்துகளை நன்கொடையாக வழங்க அதிக நிறுவனங்கள் உள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில், மூன்று மருந்துகளும் சேர்ந்த கூட்டுக் கலவை மருந்து யானைக்கால் நோயை கட்டுப்படுத்த உதவும் என உலக சுகாதார அமைப்பு கூறியது.

இந்த மருந்து நன்றாக வேலை செய்வதற்கு 2015 ஆம் ஆண்டு சாத்தொஷி ஒமுரா மற்றும் வில்லியம் கேம்பல் ஆகியோர் நோபல் பரிசு பெற்றனர். ஏழை நாடுகளில் இந்த மருந்தின் முக்கியத்துவத்தை அளவிட முடியாது என நோபல் குழு தெரிவித்தது. மேலே கூறப்பட்ட விஞ்ஞானிகள் இந்த மருந்தை 1970 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். இதையடுத்து, 1987 ஆம் ஆண்டு மெர்க் நிறுவனம் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்த மருந்தை இலவசமாக உலக நாடுகளுக்கு அளிக்க முடிவு செய்தது. கடந்த மூன்று பத்தாண்டுகளாக, மெர்க் நிறுவனம் 2 மில்லியன் சிகிச்சைகளுக்கு இந்த மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

யானைக்கால் நோயை ஒழிக்க இந்தியா நிர்ணயிக்கும் இலக்கு மாறிக் கொண்டே வருகிறது. 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் யானைக் கால் நோயை ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கடுத்து, 2017 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது . தற்போது,யானைக் கால் நோயை 2020 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வளர் இளம் பருவத்தினர்களுக்கான வழி காட்டு நெறிமுறைகள்
13/06/2018

வளர் இளம் பருவத்தினர்களுக்கான வழி காட்டு நெறிமுறைகள்

கர்ப்பிணி தாய்மார்களுக்கான புதிய உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம்
13/06/2018

கர்ப்பிணி தாய்மார்களுக்கான புதிய உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம்

Address

Kaniyambadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when General Health and prevention posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram