Mother Therapy Centre Karaikudi

Mother Therapy Centre Karaikudi We are provide Quality and Safe therapy

* Occupational Therapy
* Speech Therapy
* Special Education

21/05/2024
மதர் சிறப்பு பள்ளி மாணவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 63% தேர்ச்சி பெற்றுள்ளார்.நம் காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில்...
06/05/2024

மதர் சிறப்பு பள்ளி மாணவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 63% தேர்ச்சி பெற்றுள்ளார்.

நம் காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில் பயின்று வரும் மாணவர் S. பாலச்சந்திரன். இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 63 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்ச்சி பெற்ற மாணவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவரின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதுபோன்று பல்வேறு சிறப்பு குழந்தைகள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறுவதற்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து அவர்களை சிறப்பாக வழி நடத்திச் செல்லும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மதர் சிறப்பு பள்ளியில் தைப்பொங்கல் திருநாள் கொண்டாட்டம் (13.01.2023).மதர் சிறப்பு பள்ளியில் இன்று பொங்கல் திருநாள் வெகு ...
14/01/2023

மதர் சிறப்பு பள்ளியில் தைப்பொங்கல் திருநாள் கொண்டாட்டம் (13.01.2023).

மதர் சிறப்பு பள்ளியில் இன்று பொங்கல் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக நகர்மன்ற உறுப்பினர் திருமதி. N. சாந்தி நாச்சியப்பன் அவர்கள் தலைமை வகிக்க பெற்றோர்கள் முன்னிலையில் பொங்கல் வைக்கப்பட்டது. எம் பள்ளி நிர்வாக இயக்குனர் திரு. அருண்குமார் அவர்கள் வரவேற்புரை அளித்த பின் விழா இனிதே துவங்கியது. பின்பு பெற்றோர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு போட்டிகள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் துவங்கப்பட்டது, கோலப்போட்டி, பானை உடைத்தல், தண்ணீர் நிரப்புதல், Lemon in the spoon ஆகிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு சிறப்பு விருந்தினர் நகர் மன்ற உறுப்பினர் திருமதி N.சாந்தி நாச்சியப்பன் அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இறுதியாக எம் பள்ளி ஆசிரியை விசாலாட்சி அவர்கள் நன்றியுரை கூறினார். பின்னர் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது .

மதர் சிறப்பு பள்ளி மாணவர்கள் வெற்றி                                                                                     ...
11/12/2022

மதர் சிறப்பு பள்ளி மாணவர்கள் வெற்றி

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . இவ்விழாவிற்கு திரு .மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மான்புமிகு திரு. பெரிய கருப்பன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறையாற்றி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.கதிர்வேல் அவர்களும் உடன் இருந்தனர். மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்ற மதர் சிறப்பு பள்ளி மாணவன் S.ஆசிஷ் க்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் திரு. பெரிய கருப்பன் அவர்களால் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. மேலும் சிவகங்கை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் *உருளைக்கிழங்கு சேகரித்தல்* இரண்டாம் பரிசு K.S.அருண் கிஷோர், *பந்து எறிதல் 15 வயதிற்கு மேற்பட்டவர் பிரிவில்* இரண்டாம் பரிசு S.ஆசிஸ் *பந்து எறிதல்* ஆண்கள் பிரிவு முதல் பரிசு S. பாலச்சந்திரன், இரண்டாம் பரிசு S. கவின் பிரகாஷ் மூன்றாம் பரிசு M. மணிகண்டன் பெண்கள் பிரிவில் முதல் பரிசு M.சுபிக்ஷா லாவண்யா இரண்டாம் பரிசு S. நேஹா மூன்றாம் பரிசு S. ஹேமா ஸ்ரீ *பந்து எறிதல் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள்* முதல் பரிசு C. ரோகித் சாய், இரண்டாம் பரிசு G. சந்திப், மூன்றாம் பரிசு D.சரண்ராஜ் ஆகிய மாணவர்களுக்கு திரு. மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ் அவர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார் . விழாவை சிறப்பிக்கும் வகையில் மதர் சிறப்பு பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரதநாட்டியம் ,சிலம்பம், மௌனம் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர் . கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட M.சுபிக்ஷா லாவண்யா , S.பாலச்சந்திரன், G.சந்தீப் ,S.ஆசிஷ், k.S.அருண் கிஷோர் M.மணிகண்டன், ஆகிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.மேலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியமைக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மான்புமிகு திரு. பெரிய கருப்பன் அவர்களால் ஆசிரியர் S.இளமாறன் மற்றும் ஆசிரியை M.விசாலாட்சி மற்றும் R.சித்ரா அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .மதர் சிறப்பு பள்ளியின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை பாராட்டும் விதமாக மதர் சிறப்பு பள்ளி நிர்வாக இயக்குனர் திரு. அருண்குமார் அவர்களுக்கு விருது வழங்கி இவ்விழா இனிதே நிறைவுற்றது.

Address

No. 12, Subramaniyapuram 8th Street North
Karaikudi
630002

Alerts

Be the first to know and let us send you an email when Mother Therapy Centre Karaikudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mother Therapy Centre Karaikudi:

Share