Jyothi Hi-Tech LAB

Jyothi Hi-Tech LAB Paleo Diet Blood Test, Full body health checkup , Thyroid test and all type of blood tests, Home blo

Good cholesterol vs Bad cholesterol
07/06/2022

Good cholesterol vs Bad cholesterol

Unga blood group??
22/02/2022

Unga blood group??

Take care... My dears..❤️
25/05/2021

Take care... My dears..❤️

* வீட்டிலேயே ஆக்சிஜன் வைத்தியம் செய்வது எப்படி?* கோவிட் வந்தால் மருத்துவமனை எப்போது தேவை.* ரெம்டெசிவிர், டோக்லிசுமாப் எப...
08/05/2021

* வீட்டிலேயே ஆக்சிஜன் வைத்தியம் செய்வது எப்படி?

* கோவிட் வந்தால் மருத்துவமனை எப்போது தேவை.

* ரெம்டெசிவிர், டோக்லிசுமாப் எப்போது தேவை?

தமிழில் Dr. V. Hariharan, MBBS, MD, Coimbatore

1. பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியில் உங்கள் ஆக்சிஜன் அளவு 92-94 இருந்தால்: வீட்டில் இருக்கவும்; தொடர்ந்து SpO2 பார்க்கவும். மருத்துவமனை, ஸ்டிராய்ட் மருந்துகள், ரெம்தேசிவிர், டோக்லிசுமாப், ஆக்சிஜன், சிடி ஸ்கேன் ரத்த டெஸ்டுகள், வேண்டாம். வீட்டில் 10- 14 நாட்கள் தனிமையில் இருக்கவும்.
2. ஆக்சிஜன் அளவு 91% க்கு கீழ் இருந்தால்,
ஸ்டிராய்ட் மாத்திரை/ஊசி ஆரம்பிக்கலாம். Dexamethasone/ prednisolone/methylprednisolone எடுக்கலாம். இத்துடன் ரத்தம உறையாமல் இருக்க மாத்திரை எடுப்பவரை தவிர்த்து (aspirin/clopilet), மற்றவர் Dabigatran/ apixaban, rivaroxaban எடுக்கலாம்
3. ரெம்டெசிவிர் ஒரு சுமாரான மருந்து. கோவிட் கண்டுபிடித்த ஐந்து நாட்களுக்குள் எடுத்தால் மருத்துவமனையில் அட்மிஷனில் இருக்கும் நாட்களைக் குறைக்கலாமே தவிர ஆக்சிஜன் அளவுகளை மேம்படுத்தவோ, இறப்பைத் தடுக்கவோ முடியாது
4. டாக்லிசுமாப் எப்போது வேவை? மருத்துவமனையில் உங்களுக்கு 50% க்கு மேல் ஆக்சிஜன் தேவை எனும் போது உங்களை Bipap ள்ளது வென்டிலேட்டரில் வைத்திருப்பார்கள். அப்போது மட்டுமே தேவை. சும்மா தேவையில்லாமல் எடுத்தீர்கள் என்றால் ஃபங்கல் தொற்று நிமோனியா வரும்.
5. குப்புற படுங்கள். ஆக்சிஜன் அளவை அது அதிகரிக்கும்
6. மேலே உள்ள எல்லாவறையும் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நீங்கள் பிழைப்பது ஆக்சிஜன் அளவு எப்படி உள்ளது என்பதைப் பொறுத்தே. சிடி ஸ்கேன் எடுத்தாலும் அது எப்படி இருந்தாலும் உங்களுக்கு தரப்படும் வைத்தியத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்கேன் சென்டருக்கு போய் கூட்டத்தில் தொற்றை வாங்காதீர்கள். தேவையில்லாமல் ஒரு ஸ்கேனும் வேண்டாம்.
7. வீட்டில் உங்களுக்கு ஆக்சிஜன் தந்து SpO2 நன்றாக இருந்தால் (>92), வேறு எங்கும் செல்லத்தேவையில்லை. நிமிடத்திற்கு மூன்று லிட்டர் ஆக்சிஜன் தந்தும் SpO2 முன்னேறவில்லை என்றால் மட்டுமே மருத்துவமனை ஆக்சிஜன் பெட் தேடவும்.

வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து வைத்தியம் செய்வது எப்படி?
1. SpoO2 92-94இருந்தால் ஆக்சிஜன் வேண்டாம். அதற்கு கீழ் இருந்தால், நிமிடம் ஒரு லிட்டர்/2 லிட்டர் என அளவை அட்ஜஸ்ட் செய்யவும்
2. அப்படி செய்தும் மூன்று நிமிடங்களில் SpO2 முன்னேறவில்லை எனில் மூன்று முதல் ஐந்து லிட்டர் செட்டிங் செய்யவும். SpO2 95/98/100 வரத்தேவையில்லை. ஆக்சிஜனை வீணாக்க வேண்டாம். 92-94 இருந்தாலே போதும்
3. எந்த ஆக்சிஜன் சிலிண்டர்/ கான்சென்ட்ரேட்டர் கருவியும் ஒன்று தான். தரத்தில் ஒரு வித்தியாசமும் இல்லை

Adapted from Dr. Ravi Chopra, Pulmonologist, AIIMS, Delh

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் மக்களின் கனிவான கவனத்திற்கு குப்புறப் படுத்தலின் நன்மைகள் P...
23/04/2021

கொரோனா தொற்றினால்
பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் மக்களின் கனிவான கவனத்திற்கு

குப்புறப் படுத்தலின் நன்மைகள்
PRONING FOR SELF CARE

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

கொரோனா தொற்றடைந்து வீடுகளில் மருத்துவமனைகளில் இருக்கும் சொந்தங்களே இந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் குப்புறப்படுத்தல் முறையைப் பற்றிப் படித்து பின்பற்ற முயற்சி செய்யுங்கள்

இதை PRONING என்கிறோம்

சாதாரணமாக நாம் முதுகு கீழ்ப்புறம் வயிற்றுப்பகுதி மேற்புறமாகவே படுத்துப்பழகியிருப்போம். இதை SUPINE POSITION .மல்லாக்க படுத்தல் என்கிறோம்

கொரோனா பாதித்து நுரையீரலில் தொற்று பரவிக்கொண்டிருக்கும் சூழலில் மல்லாக்கபடுப்பதை விட குப்புறப்படுப்பது நன்றாக உதவும். இது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட.

குப்புறப்படுக்கும் போது நமது வயிற்றுப்பகுதி கீழ்ப்புறமாகவும் முதுகுப்பகுதி மேல்ப்புறமாகவும் இருக்கும்.
இதனால் நுரையீரலின் சுவாசம் உட்கொள்ளும் வெளியிடும் தன்மை மேம்படும். இதன் மூலம் உடலுக்கு குறைவான சுவாசிக்கும் பளுவில் அதிகமான ஆக்சிஜன் கிடைக்கும்.

வீட்டுத்தனிமையில் இருக்கும் போது ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டரில் 94% க்கு கீழ் ஆக்சிஜன் அளவுகள் இருக்கும் நபருக்கு
இந்த முறையில் படுப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் குறைந்து ஆக்சிஜன் அளவுகள் கூடுவதை கண்கூடாக பார்க்கலாம்.

கூடவே அவரின் உடல் உஷ்ணம், ஆக்சிஜன் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

ஆக்சிஜன் அளவுகள் குறைவதை பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி கொண்டு மட்டுமே அறிய முடியும் . எனவே வீட்டுத்தனிமையில் இருக்கும் ஒவ்வொரு நபரிடமும் இருக்க வேண்டிய முக்கிய கருவி "ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்"

இந்த ப்ரோனிங்கை எப்படி செய்வது ?

இதற்கு நான்கு தலையணைகள் வேண்டும்

ஒரு தலையைணை குப்புறப்படுத்து தலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்..

இரண்டு தலையணைகளை கால்மாட்டுக்கு வைத்து மேடேற்ற வேண்டும்

இன்னும் இரண்டு தலையணைகளை ஒன்றன் மீது ஒன்றாக
நீளமாக நெஞ்சுப்பகுதி வயிற்றுப்பகுதி மற்றும் தொடைப்பகுதிக்கு கீழ் இருக்குமாறு வைத்துப்படுக்க வேண்டும். ( படத்தைக்காண்க)

இப்படி படுக்கும் போது
அரை மணிநேரம் முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த படுக்கும் முறையை லேசாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

முதல் அரை மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை
வயிற்றுப்பகுதி கீழ் இருக்குமாறு குப்புறப்படுக்க வேண்டும்.

அடுத்த அரை மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை வலப்பக்கம் திரும்பி ஒருபக்கமாக படுக்க வேண்டும்

அடுத்த அரை மணிநேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை எழுந்து கால்களை நன்றாக நீட்டி உட்கார்ந்திருக்க வேண்டும். கால்களைத் தொங்கப்போடக்கூடாது.

அடுத்த அரைமணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை இடப்பக்கம் திரும்பி ஒருபக்கமாக படுக்க வேண்டும்

அதற்கடுத்த அரைமணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மீண்டும் குப்புறப்படுத்திருக்க வேண்டும்.
( படத்தைக் காண்க)

அரைமணிநேரத்திற்கு ஒரு முறை மேற்சொன்ன பொசிசன்களை மாற்றமாற்றிக் கொண்டே இருப்பது சிறப்பு.
முதியோர்களால் அவ்வாறு செய்ய இயலாது என்றால் அதிகபட்சம் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது பொசிசனை மாற்றி அமைப்பது நல்லது.

பொசிசனை மாற்றி அமைக்காமல் ஒரே பொசிசனில் பல மணிநேரங்கள் படுத்துக்கிடப்பது அழுத்தப்புண்களை உருவாக்கிவிடும். அதிலும் குறிப்பாக இடுப்பெலும்பு, தண்டுவட முதுகெலும்பு முடியும் இடம் ( குதப்பகுதி) முழங்கால் மூட்டுப்பகுதி போன்ற எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் இடங்களில் புண்கள் தோன்றலாம். அதை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

கட்டாயம் உணவு சாப்பிட்ட அரை மணிநேரத்திற்கு குப்புறப்படுக்கக் கூடாது.

மேற்சொன்ன குப்புறப்படுத்தல் முறைகளை பொசிசன் மாற்றி பொசிசன் மாற்றி பகலில் விழித்திருக்கும் 16 மணிநேரமும் செய்யலாம்
இரவில் உறங்கும் போது குப்புறப்படுத்து உறங்கலாம் அல்லது தங்களின் வழக்கம் போல ஒருபக்கம் படுத்து உறங்கலாம்.

தலையணைகளை தங்களின் வசதிக்கு ஏற்ப சிறிது நகர்த்திக்கொள்ளலாம். பிரச்சனை இல்லை.

இந்த குப்புறப்படுத்தலை முயற்சி செய்யக்கூடாதவர்கள் யார்?

- கர்ப்பிணித் தாய்மார்கள்

- ஆழ்சிரை ரத்த நாளக்கட்டிக்காக (DEEP VEIN THROMBOSIS) இரண்டு நாட்களுக்குள் சிகிச்சை எடுத்தவர்கள்

- தீவிர இதய நோய் இருப்பவர்கள்

- தண்டுவட எலும்புகள்/ இடுப்பெலும்பு/ தொடை எலும்பு முறிவுக்குள்ளானவர்கள்

மேற்சொன்னவர்கள் ப்ரோனிங் செய்யக்கூடாது.

ஏனைய கொரோனா தொற்று பாசிடிவ் என்று வந்து வீடுகளில் தனிமையில் இருக்கும் அனைவரும் மேற்சொன்ன ப்ரோனிங் முறையை கடைபிடித்து
நுரையீரலுக்கு எளிதில் ஆக்சிஜன் கிடைத்திடச்செய்து பலனடையலாம்

இதனால் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு மரணமடையும் வாய்ப்பும் குறைகிறது
வெண்டிலேட்டர் வரை செல்லும் நிலையும் குறைகிறது.

அவசியமான எச்சரிக்கை

ப்ரோனிங் செய்தும் ஆக்சிஜன் அளவுகள் கூடாமல் குறைந்து கொண்டே சென்றால் உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

ப்ரோனிங் குறித்த இந்த செய்தியை
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள்

நன்றி

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
23.4.2021

 #அடிக்கடி_கை_கால்_மரத்துபோவது…… #ஏன்_தெரியுமா..❓❓❓👉உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய...
23/02/2021

#அடிக்கடி_கை_கால்_மரத்துபோவது……

#ஏன்_தெரியுமா..❓❓❓

👉உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.

நாம் பஸ் அல்லது காரில் அதிக நேரம் செல்லும்போது நமக்கு கை, கால் மரத்துப்போவது என்பது ஒரு சாதாரணமான விஷயம். இதற்கு என்ன காரணம் என்றால் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பது தான் காரணம்.

அதாவது நாம் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தால் இரத்த ஓட்டங்கள் தடைபடுவதன் காரணமாக இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.

குறிப்பாக மரத்து போகும் பிரச்சனை என்பது ஒரே இடத்தில அமர்ந்திருந்தால் மட்டும் ஏற்படுவது இல்லை, இன்னும் பல காரணங்களும் இருக்கிறது.

⭕ அடிக்கடி கை, கால் மரத்து போவதன் காரணங்கள்..❓

💢 குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் #மூளை, #முதுகுத்தண்டு_வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும்.

👉அதுவே நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும்.
அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும்.

👉அதுவே ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம்.

👉அதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.

👉மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.

👉உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.

👉வைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், எனவே உடலுக்கு தேவையான அளவிற்கு வைட்டமின் B12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவும்.

👉அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டரர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.

👉தொழு நோய் உள்ளவர்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது.
எனவே தொழு நோய் உள்ளவர்கள் தங்களது தோலை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை கடைபிடிக்கவும்.

👉சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை, கால்கள் மரத்து போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிகளவு பாதிக்கப்படும்.

👉குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும்.

👉சிலருக்கு தலை ஒரு பக்கம் மட்டும் மரத்து போய்விடும் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

⭕ யாருக்கெல்லாம் இந்த பிரச்சனை ஏற்படுகிறது❓

👉குறிப்பாக இந்த பிரச்சனை அதிகமாக குடி பழக்கம் உள்ளவர்களுக்கு,

👉அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலைபார்ப்பவர்களுக்கு,

👉அதிகமாக பாத்திரம்
விளக்குபவர்களுக்கு,

👉மணிக்கட்டுகளுக்கு அதிக வேலை தருபவர்களுக்கு,

👉உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு

இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.

⭕ ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யுறீங்களா ❓
அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..❗

👉இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை உள்ளவர்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும். அதேபோல் வைட்டமின் B12 குறைபாடுகள் உள்ளவர்கள் இறைச்சி உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.

👉மேலும் டிவி பார்ப்பவர்கள் சாய்வாக அமர்ந்து டிவி பார்ப்பதை தவிர்த்து கொண்டு, நேராக நிமிர்ந்து அமர்ந்து டிவி பார்க்க வேண்டும். நாம் அமர்ந்திருக்கும் நிலைகளினால் கூட இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.

👉அடிக்கடி மரத்து போகுதல் பிரச்சனை உள்ளவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்த்து கொண்டு, கொஞ்சமாவது உடலுக்கு அசைவுகள் தரவேண்டும்.

🔴 இந்த மரத்து போகும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை முறையாக அளித்தாலே இந்த மரத்து போகும் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம் என் பெயர் சக்தி நான் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி குமாரபாளையம் 7வது வார்டு ...
18/02/2021

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம் என் பெயர் சக்தி நான் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி குமாரபாளையம் 7வது வார்டு சத்தியாபுரியில் வசித்து வருகிறேன்.கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு இதயத்தில் இயற்க்கைக்கு மாறாக வாழ்வு துடிப்பதில் பிரச்சனை உள்ளதால் சிகிச்சை பெற்று வந்தேன் இருப்பினும் முழுமையாக குணமடைய இதயத்தில் அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.எனது அம்மா கூலித்தொழிலாளி தற்போது எனது உடல்நிலை காரணமாக கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன். அறுவை சிகிச்சைக்கு போதுமான பணவசதி இல்லாத காரணத்தால் உடனடியாக பணத்தை எங்களால் ஏற்பாடு செய்ய இயலவில்லை. தங்களால் இயன்ற பணஉதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கீழே எனது மருத்துவ சிகிச்சை விபரத்தை இணைத்துள்ளேன்.
மேலும் தங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்-9042155726

Our aim is prevention is better than cure. 🙏 💉🩸🧬🧪🩺
13/01/2021

Our aim is prevention is better than cure. 🙏 💉🩸🧬🧪🩺

13/01/2021
12/01/2021

Welcome to our lab. 💉 Our aim is prevention is better than cure. 🙏

Address

117/11, Surya Lilly Arcade Complex, Near Axis Bank
Komarapalayam
638183

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 6am - 10pm
Sunday 6am - 2pm

Telephone

+918608604422

Alerts

Be the first to know and let us send you an email when Jyothi Hi-Tech LAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jyothi Hi-Tech LAB:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category