HealthTips

HealthTips health

கீழ்காய்நெல்லி, மஞ்சள் கரிசாலை கல்பம் செய்வது எப்படி ......உடலில் முக்கியமான உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும். இதன் அனைத்து பண...
05/12/2025

கீழ்காய்நெல்லி, மஞ்சள் கரிசாலை கல்பம் செய்வது எப்படி ......

உடலில் முக்கியமான உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும். இதன் அனைத்து பணிகளையும் மருத்துவ அறிவியல் உலகம் இன்னும் கண்டறியவில்லை. அத்துடன் கல்லீரலைச் சுத்தப்படுத்தும் வழிகளையும் இன்னும் ஆங்கில மருத்துவம் கண்டறியவில்லை இந்த கீழ்காய்நெல்லி கல்பமானது ஈரலைப் பலப்படுத்துவதாகும். கொழுப்பு செரிக்கவில்லை என்பவர்கள் இதனை உண்ண அச்சிக்கல் சரியாகும். குடிப்பழக்கத்தால் கெட்டுப்போன ஈரலையும் கூட இக்கல்பம் உண்பதன் மூலம் சரிப்படுத்தலாம்.

தேவையானவை.

கீழ்காய்நெல்லி ஒரு கைப்பிடி அளவு

மஞ்சள் கரிசலாங்கண்ணி ஒரு கைப்பிடி அளவு

மோர் 100 மி.லி.

செய்முறை

கீழ்காய்நெல்லியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணியையும் நீரில் நன்கு அலசவேண்டும். பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நசுக்கிக் கொள்ளவும். அதனை மோர் விட்டு அம்மியிலோ மிக்சியிலோ அரைக்கவும். ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

உண்ணும் முறை:

காலை வெறும் வயிற்றில் இந்த கல்பத்தை பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு குவளை மோரில் கலந்து பருகவும். இது பருகும் நாளில் உணவில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

செயல்பாடு மேலும் மோர் ஒரு அனுபானமாகும். மோருடன் கலந்து குடிப்பதால் கல்பத்தின் கூடுகிறது கீழ்காய்நெல்லியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணியையும் பச்சையாகவும் உண்ணலாம். சாதாரணமாக குறைந்தபட்சம் ஒருவாரம் உண்டால் போதும் கல்லீரலில் தங்கியுள்ள ஹெப்படடைஸ் பி. போன்ற வைரஸ்களை நீக்கிட மற்றும் மஞ்சள்காமாலை நோயைப் வேண்டுமானால் 40 நாட்கள் உண்ணவேண்டும். ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள பிலுரூபின் (BLIRUBIN)ஐ குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்......

மந்தாரை மரப்பட்டை கஷாயம் – உடலை உள்ளிருந்து பலப்படுத்தும் சித்த மருத்துவ ரகசியம்! பாரம்பரிய சித்த மருத்துவத்தில், மந்தார...
05/12/2025

மந்தாரை மரப்பட்டை கஷாயம் – உடலை உள்ளிருந்து பலப்படுத்தும் சித்த மருத்துவ ரகசியம்! பாரம்பரிய சித்த மருத்துவத்தில், மந்தாரை மரப்பட்டை கஷாயம் உடலின் உள்ளார்ந்த சக்தியை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்💪

எந்த உணவுகளை சாப்பிட கூடாது? தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் ஹார்மோன் சுரப்பின் காரண...
02/12/2025

எந்த உணவுகளை சாப்பிட கூடாது? தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்

தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் ஹார்மோன் சுரப்பின் காரணமாக ஏற்படுவதை தான் தைராய்டு பிரச்சினை என்கிறோம்.

தைராய்டு நோய்கள் சுரப்பி செயலிழப்பு, ஹார்மோன் சமநிலையின்மை அல்லது பிற பிரச்சனைகளால் ஏற்படலாம். இந்த தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் எவ்வாறான உணவுகளை சாப்பிட கூடாது என நாம் இங்கு பார்ப்போம்.

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் ஸ்ட்ராபெர்ரி மற்றும் பீச் போன்ற சில பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்களில் கோயிட்ரோஜன்கள் உள்ளன. இவற்றை தவிர்க்கவும்.

எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்
கொழுப்புகள் நிறைந்த உணவுகள் - ஏனெனில், கொழுப்புகள் தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகளை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கலாம் மற்றும் ஹார்மோன் உற்பத்தியில் தலையிடலாம் இது ஹார்மோன் உற்பத்தி செய்யும் தைராய்டின் திறனைப் பாதிக்கலாம்.

அயோடின் நிறைந்த உணவுகள் - அயோடின் தைராய்டு செயல்பாடுக்கு அவசியம் என்றாலும், சில தைராய்டு நிலைகள் உள்ளவர்களுக்கு அதிகப்படியான அயோடின் உட்கொள்வது சிக்கலாக இருக்கலாம்.

சிப்ஸ் - சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கும் பல செயற்கை சுவையூட்டிகள் மற்றும் சேர்க்கைகள் உள்ளன. இதனால் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ப்ரோக்கோலி - ப்ரோக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற சிலுவை வடிவ காய்கறிகளில் கோயிட்ரோஜென்கள் உள்ளன. இவை தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டில் தலையிடக்கூடும். இந்த காய்கறிகளை முழுமையாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக, மருத்துவரின் ஆலோசனைப்படி, எப்போதாவது சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளை - பாண் வெள்ளை ரொட்டி பதப்படுத்தப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது தைராய்டு ஹார்மோன் அளவை பாதிக்கக்கூடிய அதிக கலோரி மற்றும் சர்க்கரையை கொண்டுள்ளது இது தைராய்டு நோயாளிகளுக்கு அவசியமான செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

தேன் பழம்  இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் , எலும்புகள்...
01/12/2025

தேன் பழம் இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் , எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் இது நன்மை பயக்கும்.

மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியைக் கட்டுப்படுத்த சில  டிப்ஸ் மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியானது வெடீர் வெடீர் என்று சுத்திய...
27/11/2025

மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்

மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியானது வெடீர் வெடீர் என்று சுத்தியலைக்கொண்டு தலையில் அடித்தாற் போன்ற வலியை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுவதைக் கேட்கும் போது உண்மையில் அது எத்தனை பிணி தரும் அனுபவமாக இருக்கும் என்பதை யூகிக்க முடியும்

ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

குடும்பத்தில் தாய் அவரது மகள்கள் முதல் பேத்திகள் வரை அனைவருக்கும் மைக்ரேன் இருக்கும் குடும்பங்களை பார்த்து வருகிறோம்

வாழ்க்கைத்தரத்தை வெகுவாக பாதிக்கும் இந்த தலைவலியானது
பாதிப்புக்குள்ளாகும் நபரின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது

நன்றாக படிக்கும் ஒரு மாணவிக்கு அவர் பரீட்சை எழுதும் நாட்களுக்கு முன்பு மைக்ரேன் வந்தால் அத்தோடு படிப்பின் மீது கவனம் குவிக்க இயலாமல் முழு மூச்சுடன் படிக்க இயலாது. மதிப்பெண்ணும் சரியும்.

இல்லற வாழ்வில் உள்ள பெண்களுக்கு இந்த தலைவலி வரும் போது குடும்ப உறுப்பினர்கள் மீது சினத்தை கக்கும் போது தேவையற்ற பல மனக்கசப்புகளும் சண்டை சச்சரவுகளும் நேருகின்றன

அலுவலகங்களில் மைக்ரேன் வலி ஏற்பட்டால் அன்றைய நாள் அத்தோடு முடிந்தது என்ற நிலை தான்

எந்த செயலிலும் முழுமையாக ஈடுபாடு இல்லாமல் ஆக்கி விடும் இந்த ஒற்றைத்தலைவலிக்கு தற்போது அறியப்பட்டுள்ள காரணங்கள்

- மூளைக்கு க்ளூகோஸை எரிபொருளாக உபயோகிப்பதில் ஏற்படும் குளறுபடி / கோளாறு ( reduced glucose metabolism by brain)

- மூளை தேவைக்கும் அதிகமாக உணர்ச்சி மேலோங்கிய நிலையில் இருப்பது ( hyper excitability )

- உள்காயங்களால் ஏற்படும் மூளைத்தேய்மானம் ( inflammation)

- மூளை நரம்பு செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா எனும் எனர்ஜி ஃபேக்டரி முறையாக செயலாற்றாமை
(Mitochondrial dysfunction)

மேலும் மைக்ரேன் நோயாளிகளுக்கு
மூளையில் க்ளூடமேட் எனும் உயிர் வேதியியல் ரசாயனம் அதிகமாக சுரக்கின்றது என்றும்

காபா (GABA - gamma amino butyric acid) எனும் ரசாயனம் அளவில் குறைவாக சுரப்பதாகவும் அறியப்பட்டுள்ளது

க்ளூடமேட் எனும் ரசாயனம் என்பது எப்போதும் நம்மை ரோலர் கோஸ்டர் ரைடில் இருப்பது போலவும் ஒரு த்ரில்லர் பேய் படம் பார்ப்பது போன்ற உணர்விலுமே வைத்திருக்கும்

இதுவே காபா ரசாயனம், அமைதியான மலைப்பகுதியில் ஆற அமர மெதுவாக நடந்து சென்று குளிர்ந்த காற்றை மெல்லிய சாரல்களுடன் அனுபவிப்பது போன்ற அமைதியான உணர்வைத் தரக்கூடியது

இத்தகைய பிரச்சனைகளை கண்டறிந்த பின் இதற்கு தீர்வு என்ன?
இப்படி காரணம் ஏதுமின்றி வரும் மைக்ரேன் தலைவலியை கட்டுப்படுத்திட முடியுமா?
என்று ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. நிகழ்ந்து வருகின்றன

மைக்ரேனால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மை பெண்களாகவும் அதிலும் பெரும்பான்மை உடல் பருமன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

எனவே உடல் எடையை குறைப்பது என்பது மைக்ரேன் தலைவலியின் வீரியத்தை குறைப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன

உடல் எடையை குறைப்பதற்கு பல வழிகள் உண்டு.
கலோரி குறைவாக உண்பது
அல்லது
கலோரி குறைவாக உண்பதுடன் சேர்த்து
உடல் பயிற்சி செய்வது

இவற்றால் உடல் எடையை குறைக்க முடியும்.

ஆனால் தற்போதைய ஆய்வுகள்
"கீடோன்கள்" மூலம் மைக்ரேனைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது நோக்கி நகர்ந்து வருகின்றன

நம் உடலில் கீடோன்களை உற்பத்தி செய்து
கீடோன்கள் உதவியுடன் மூளையை இயக்கும் போது மூளை எந்த சச்சரவுமின்றி செயல்படுகின்றது என்று ஆய்வுகள் சான்று பகர்கின்றன.

கிட்டத்தட்ட இதே பிரச்சனையுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வரும் மருந்துகளால் தீராத வலிப்பு நோய்க்கு (Refractile seizures) கீடோன்கள் உதவி புரிந்து வருகின்றன

நம் மூளையானது இரண்டு வகையான எரிபொருள்கள் மூலம் இயங்கும்

ஒன்று க்ளூகோஸ் ( நாம் அனைவரும் அறிந்த எரிபொருள்)

இரண்டாவது எரிபொருள் - கீடோன்கள்
( பலரும் பெரிதாய் அறிந்திராத எரிபொருள்)

இதில் கீடோன்கள் மூளைக்கு மிகச்சிறந்த எரிபொருளாக இருக்கும் தகுதி வாய்ந்தவை

காரணம்
1. கீடோன்கள் உற்பத்தியின் போது க்ளூகோஸ் உற்பத்தியில் வெளியிடப்படுவதைப்போன்ற தேவையற்ற ஊறுசெய்யும் கழிவுகள் வெளியிடப்படுவதில்லை ( Ketones are clean fuel)

2. கீடோன்களை நம்பி மூளை இருக்கும் போது , க்ளூகோசை நம்பி இருக்கும் போது ஏற்பட்ட கொள்முதல் உபயோகப்படுத்தும் கோளாறுகள் நேர்வதில்லை.
(Ketones are energy efficient)

3. கீடோன்கள் மூளை செல்களின் தேவையற்ற உணர்ச்சி ஊக்கநிலையை மட்டுப்படுத்துகின்றன ( ketones control hyperexcitability)

4. கீடோன்களை பிரதான எரிபொருளாக தேர்ந்தெடுக்கும் போது க்ளூடமேட் அளவுகள் குறைந்த GABA அளவுகள் கூடுகின்றன. இதனால் அமைதியான நிலை ஏற்படுகின்றது.

5. கீடோன்களை எரிபொருளாக மாற்றியமைத்த பின்... ரத்தத்தில் ஏறும்/இறங்கும் க்ளூகோஸ் அளவுகள் பொறுத்து மூளையின் செயல்பாடுகள் மாறுவதில்லை.

மேற்சொன்ன பல விசயங்கள் மூலம் கீடோன்கள் மைக்ரேன் தலைவலி வராமலும் , வலிப்பு நோயை கட்டுப்படுத்தக்கூடும்.

இத்தகைய கீடோன்களை எவ்வாறு உற்பத்தி செய்வது ?

கீடோன்களை உணவில் இருந்து உற்பத்தி செய்ய மாவுச்சத்தை தினசரி 40 கிராமுக்கு மிகாமல் எடுக்க வேண்டும்.
தேவையான அளவு புரத சத்தும் கொழுப்புச்சத்தும் எடுக்கும் போது
நமது உடல் கீடோன்களை உற்பத்தி செய்து
நமது மூளை பெரும்பான்மை கீடோன்கள் மூலம் செயல்படும். இதை உணவு மூலம் அடையும் கீடோசிஸ் நிலை என்கிறோம் (Nutritional Ketosis)

இத்தகைய கீடோஸிஸ் நிலையில் பலருக்கும் மைக்ரேன் தலைவலி முன்பு இருந்ததை விடவும் வீரியத்தில் குறைதல், இரண்டு தலைவலிகளுக்கு இடையேயான கால அளவு நீட்டித்தல் , அடிக்கடி வரும் தலைவலி அரிதாகிப்போவது போன்ற பல நன்மைகளை அடைந்து வந்துள்ளதாக பல ஆய்வு முடிவுகள் உள்ளன

மைக்ரேன் இருப்பவர்கள் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை குறித்து காண்போம்

முதலில் செய்யக்கூடாதவை . இவையெல்லாம் மைக்ரேன் தலைவலியை தூண்டு வலிமை பெற்றவை
❌ அதிக மன அழுத்தம்/ அதீத உடல் சோர்வு

❌ உணவுகளை அதன் முறையான இடைவெளியில் உண்ணாமல் காலம் தாழ்த்தி உண்பது அல்லது பட்டினி கிடப்பது மைக்ரேனை கிளப்பி விடும்

❌ தூக்கமின்மை அல்லது பொழுதன்னைக்கும் தூங்குவது. இரண்டுமே தவறு.

❌ பெண்களுக்கு மாதவிடாய் கால ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் மைக்ரேனை தூண்டுபவை

❌ மலைவாசஸ்தலங்களுக்கு செல்வது அல்லது உயரமான இடங்களில் இருந்து கீழே வருவது..அதிக காற்று அடிப்பது

❌ அதீத உடற்பயிற்சி

❌ காபி அதிகம் அருந்துதல்

❌ இனிப்பு சுவை கொண்ட பொருள்களை உண்பது ( சீனி / நாட்டு சர்க்கரை/ தேன் முதற்கொண்டு இனிப்பு என்று நாக்கில் பட்டால் தலைவலி தூண்டப்படலாம்)

❌ பீட்ரூட், முள்ளங்கி, ஸ்பினாச் கீரை , செலரி போன்ற நைட்ரேட் அடங்கி உணவுகள்
சிலருக்கு சிவப்பு மாமிசமும் கடல் உணவுகளும் தலைவலியை கிளப்பலாம்.

❌ அனைத்து வகை குளிர்பானங்கள் / பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்

❌ உணவாக உட்கொண்டால் உடலில் க்ளூகோசை ஏற்றும் மாவுச்சத்து மிகுதி உணவுகள் (High glycemic foods)

❌ மது

❌ வாசனை திரவியங்கள்/ சிகரெட் புகையின் வாசனை

❌ மிக அதிக ஒலி

மேற்சொன்னவை அனைத்தும் மைக்ரேனை தூண்டக்கூடியவை

மைக்ரேன் உங்களுக்கு இருக்கிறதா?

மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுங்கள் கூடவே உணவு முறையை "குறை மாவு" (Low carbohydrate) உணவு முறையாக மாற்றுங்கள்

இனிப்பின் மீது நா கொண்ட ஆசையை விட்டொழியுங்கள்

மிதமான நடைபயிற்சி செய்யுங்கள்

மன அமைதி தரும் விசயங்களை செய்யுங்கள்

மன அழுத்தத்தை குறையுங்கள்
இயலாவிட்டால் மனநல மருத்துவரை சந்தித்து கவுன்சிலிங் சிகிச்சை பெறுங்கள்

குறை மாவு உணவு முறை
+
மிதமான உடல் பயிற்சி
+
மருத்துவ சிகிச்சை
+
மன அமைதியான வாழ்க்கை

பயனுள்ள வைத்திய குறிப்புகள்...1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம...
26/11/2025

பயனுள்ள வைத்திய குறிப்புகள்...
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...

பெண்களை விட ஆண்களே அதிகம் இதை செய்ய வேண்டும்
26/11/2025

பெண்களை விட ஆண்களே அதிகம் இதை செய்ய வேண்டும்

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில்உயிர் இருக்குமா?அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா? சித்த வைத்தியத்தால் முடி...
25/11/2025

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில்
உயிர் இருக்குமா?

அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா? சித்த வைத்தியத்தால் முடியும்.! பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று
காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை. பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும். கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்துகொள்ள அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்.. எண்ணெய் மறு காதில் எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்ககாதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்" அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும். மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி விடும்...

இஞ்சிப்புல்லின் மருத்துவ குணங்கள்.....உலகின் வாசனைப் பொருட்களில் ஒன்று இந்தப் புல். இந்தப் புல்லை ஒடித்து முகர்ந்து பார்...
25/11/2025

இஞ்சிப்புல்லின் மருத்துவ குணங்கள்.....

உலகின் வாசனைப் பொருட்களில் ஒன்று இந்தப் புல். இந்தப் புல்லை ஒடித்து முகர்ந்து பார்த்தால் எலுமிச்சை சாறு வாசம் வரும். எல்லா வகையான மண் வகைகளிலும் நன்கு செழித்து வளரக் கூடியது. இதனை தமிழில், ‘வாசனைப் புல்’ என்று அழைக்கிறார்கள்.

இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் உள்ளன. இது கொஞ்சம் எலுமிச்சை, கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கொண்டது. அதனால், ‘எலுமிச்சைப் புல்’ அல்லது ‘இஞ்சிப் புல்’ என அழைக்கப்படும் இந்த, ‘லெமன் கிராஸ்’ பற்றி சற்று அறிந்து கொள்வோமா?

* உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? மிக குறைந்த கலோரிகளை கொண்ட லெமன் கிராஸ் டீயை தொடர்ந்து குடித்து வருவது நல்ல பலன் தரும்.

* லெமன் கிராஸ் புல்லை அரைத்து உடலின் வயிறு, புட்டம், இடுப்பு போன்ற பகுதிகளில் பற்று போல் பூசி, ஒரு மணி நேரம் கழித்து காய்ந்த பிறகு வெந்நீரில் கழுவி வர, ஆறு மாதங்களில் உடல் பருமன் குறையும். உடலிலுள்ள கெட்ட கொழுப்பு கரைத்து விடும்.

* ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும்போது லெமன் கிராஸ் எண்ணெய்யை இரண்டு சொட்டு சுடுநீரில் அல்லது பாலில் கலந்து மூக்கில் விட, மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும்.

* உலர்ந்த சருமத்தில் சிலருக்கு அரிப்பு ஏற்படும். இதற்கு லெமன் கிராஸ் ஆயில் 20 மி.கி. எடுத்து அதனுடன் 50 மி.கி. தேங்காய் எண்ணெய் கலந்து அரிப்பு உள்ள இடங்களில் பூசி, ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வர, சில நாட்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* இந்த லெமன் க்ராஸ் புல் பல்வேறு பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன் படுகிறது. அவற்றில் லெமன் க்ராஸ் டீ, லெமன் க்ராஸ் பவுடர், லெமன் க்ராஸ் ஆயில், லெமன் க்ராஸ் சோப்பு, லெமன் க்ராஸ் ரூம் பிரெஷ்னர் போன்றவை சில.

* லெமன் க்ராஸ் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கும். இதிலுள்ள சிட்ரஸ் அமிலம் உடலில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

* லெமன் க்ராஸ் டீ குடித்து வந்தாலே அதிலுள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி உங்களின் முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

* இது வெளிப்புறப் பயன்பாட்டுக்கு மிகவும் உகந்தது. சருமப் பிரச்னைகளையும், வலிகளையும் நீக்க உதவுகிறது.

* லெமன் க்ராஸ் மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும், மணமுட்டியாகவும் பயன்படுகிறது.

* தீபங்களில் இந்த எண்ணெய்யை பயன்படுத்தும் போது நறுமணமும், புத்துணர்வும் உண்டாகும்.

* இதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிகம் உள்ளன. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்க இந்த லெமன் க்ராஸ் டீ பேருதவியாக உள்ளது.

* ரத்த சர்க்கரையின் அளவையும் லெமன் க்ராஸ் சீர் செய்து, இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது.

* உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதுடன், பெண்களுக்கு மாதவிடாய் வலியையும் இது குறைகிறது.

திணை அரிசியை சாதம், உப்புமா, தோசை, கஞ்சி, அடை போன்ற பல வகையிலும் எளிதாக பயன்படுத்தலாம்!!
25/11/2025

திணை அரிசியை சாதம், உப்புமா, தோசை, கஞ்சி, அடை போன்ற பல வகையிலும் எளிதாக பயன்படுத்தலாம்!!

❤️ இயற்கையாகக் குருதிக் குழாய்களில் தேங்கும் கொழுப்பை கரைத்து, இதயத்தை வலுப்படுத்தும் 10 அற்புத உணவுகள்!உங்களுக்கு உயர்ந...
24/11/2025

❤️ இயற்கையாகக் குருதிக் குழாய்களில் தேங்கும் கொழுப்பை கரைத்து, இதயத்தை வலுப்படுத்தும் 10 அற்புத உணவுகள்!

உங்களுக்கு உயர்ந்த ரத்த அழுத்தம், எப்போதும் சோர்வு, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் இருந்தால் — உங்களின் arteries (குருதிக் குழாய்கள்) அடைந்து கொண்டிருக்கலாம். பலருக்கு இது தெரியாமலே நடக்கிறது என்பது தான் மிகப் பெரிய ஆபத்து.

நம் உடலின் குருதிக் குழாய்கள், ரத்தத்தை இதயத்திலிருந்து உடலின் ஒவ்வொரு செலுக்கும் கொண்டு செல்லும் நெடுஞ்சாலைகளைப் போன்றவை. இவை சுத்தமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தால் ரத்தம் எளிதாக ஓடும். ஆனால் காலப்போக்கில் கொழுப்பு, கால்சியம், கழிவுப்பொருள், அழற்சி ஆகியவை சேர்ந்து "பிளாக்" (plaque) உருவாகும் போது அந்த பாதை நெருக்கடியாகி விடுகிறது. இதன் விளைவுகள்:

உயர்ந்த ரத்த அழுத்தம்

மார்புவலி

ரத்த ஓட்டம் குறைதல்

இதய நின்று போதல்

ஸ்ட்ரோக்

கடும் சோர்வு

அதற்கான சிறந்த தீர்வு என்ன?
அது உங்களின் உணவு.

அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட சில இயற்கையான உணவுகள், குருதிக் குழாய்களில் தேங்கியிருக்கும் பிளாக்கை கரைத்து, அழற்சியை குறைத்து, இதயத்தை வலுப்படுத்த உதவுகிறது. நீண்ட வருடங்கள் தவறான உணவு உண்டிருந்தாலும் கூட, இந்த உணவுகள் உங்கள் உடலில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி கொண்டவை.

இப்போது அந்த 10 அற்புத இயற்கை மருந்து உணவுகளை விரிவாகப் பார்ப்போம்.

---

⭐ 1. மஞ்சள் – உடலின் அழற்சியை கரைக்கும் தங்கச் சமயம்

பரிந்துரைக்கப்படும் அளவு:

3–4 இஞ்ச் பசுமஞ்சள்

அல்லது 1–2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற சக்திவாய்ந்த மூலப்பொருள் உடலின் அழற்சியை குறைத்து, ரத்தக் குழாய்களின் சுவரில் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது. இது ரத்தம் கெட்டியாகாமல், சீராக ஓட உதவும் இயற்கை anti-coagulant.

உங்கள் உடல் குர்குமினை நன்றாக உட்கொள்ள → மிளகு + நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தவும்.

உணவில் சேர்ப்பது:

கோல்டன் மில்க்

ஸ்மூத்தி

சாம்பார், கறி, கூட்டு

மூலிகை தேநீர்

---

⭐ 2. அவகாடோ – ஆரோக்கியமான கொழுப்பின் அரசன்

பரிந்துரைக்கப்படும் அளவு: நாள் ஒன்றுக்கு 1 அவகாடோ

அவகாடோவில் உள்ள மோனோ அனசெச்சுரேட்டட் கொழுப்பு (நல்ல கொழுப்பு) உடலின் கெட்ட LDL கொழுப்பை குறைத்து நல்ல HDL கொழுப்பை அதிகரிக்கிறது.

மேலும் இதில் உள்ளவை:

பீட்டா-சைடோஸ்டெரால்: குடலில் கொழுப்பை உடல் உறிஞ்சுவதை தடுக்கும்

பொட்டாசியம்: ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

B வைட்டமின்கள்: குருதிக் குழாய்களுக்கு சேதம் செய்யக்கூடிய ஹோமோசிஸ்டின் என்ற சேர்மத்தை குறைக்கும்

உணவில் சேர்ப்பது:
டோஸ்ட் மீது பரிமாறலாம், ஸ்மூத்தியில் சேர்க்கலாம், சாலட் அல்லது டெசெர்ட்டாக கூட செய்யலாம்.

---

⭐ 3. அஸ்பாரகஸ் – உடலை சுத்தப்படுத்தும் இயற்கைக் காவலர்

பரிந்துரைக்கப்படும் அளவு: 2 கப் (raw/steamed)

அஸ்பாரகஸில் உள்ள க்ளூடதயோன் என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட், உடல் முழுவதும் உள்ள 1,00,000 மைல் நீளமான ரத்த நாளங்களையும் சுத்தப்படுத்த உதவுகிறது.

ரத்தக் குழாய்களை தளர்த்தி அழுத்தத்தை குறைக்கும்

கால்சியம் படிவங்களைத் தடுக்கிறது

உடலின் அழற்சியை குறைக்கிறது

எப்படி சாப்பிடலாம்?
சலாட், ஸ்டிர்-ஃப்ரை அல்லது லைட்டாக வேகவைத்து.

---

⭐ 4. மாதுளை – இதயத்திற்கான இயற்கை கவசம்

பரிந்துரைக்கப்படும் அளவு: 1 கப் விதைகள் அல்லது 100% ஜூஸ்

மாதுளை விதைகளில் உள்ள புனிகலஜின்ஸ், பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட்கள்:

பிளாக்கை கரைக்கும்

ரத்தக் குழாய்களை விரிவாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

LDL கொழுப்பை குறைக்கும்

சாப்பிடும் வழிகள்:
சாலட், ஸ்மூத்தி, பேரிச்சம் பழத்துடன் கலந்த பவுல், தயிர் மீது toppings.

---

⭐ 5. ப்ரோக்கோலி – இதயத்துக்கு தேவையான பச்சைக் கவசம்

பரிந்துரைக்கப்படும் அளவு: 2 கப்

ப்ரோக்கோலியில் உள்ள சல்போரஃபேன், உடலை நச்சுக்கள், அழற்சி, ஆக்சிடேட்டிவ் ஸ்டிரஸ் ஆகியவற்றிலிருந்து காக்கும்.

குருதிக் குழாய்களை வலுவாக்கும்

அதிக நார்ச்சத்து → கொழுப்பை குறைக்கும்

C, K, B vitamins → இதயத்தைப் பாதுகாக்கும்

சமையல் குறிப்பு: அதிகமாக வேகவிடாமல் லைட்டாக steam செய்யவும்.

---

⭐ 6. சியா விதைகள் – சிறு விதை ஆனால் பெரிய பலன்

பரிந்துரைக்கப்படும் அளவு: 2 டீஸ்பூன் தினமும்

சியா விதைகள்:

இயற்கை Omega-3 களின் முதல் தர மூலமம்

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

கொழுப்பை பிணைத்து உடலிலிருந்து வெளியேற்றும்

சாப்பிடும் வழிகள்:
சியா புட்டிங், ஸ்மூத்தி, ஓட்ஸ், ஜூஸ்.

---

⭐ 7. இலவங்கப்பட்டை – ரத்தக் குழாய்களுக்கான இனிய மருந்து

பரிந்துரைக்கப்படும் அளவு: 1 டீஸ்பூன் தினமும்

இலவங்கப்பட்டை:

LDL கொழுப்பை குறைக்கும்

HDL நல்ல கொழுப்பை உயர்த்தும்

ரத்த சர்க்கரை உயர்வை கட்டுக்குள் வைக்கும்

ரத்தத்தை தண்மையாக வைத்திருக்க உதவும்

சாப்பிடும் வழிகள்:
காபி, டீ, ஓட்ஸ், ச்மூத்தி, மிட்டாய் வகைகள்.

---

⭐ 8. தர்பூசணி – சுவையும் ஆரோக்கியமும் கொடுக்கும் இதய நண்பன்

பரிந்துரைக்கப்படும் அளவு: 5–6 கப் அல்லது ½ பெரிய தர்பூசணி

தர்பூசணியில் உள்ள சிட்ருலின்:

ரத்தக் குழாய்களை தளர்த்தும்

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

இதய அழுத்தத்தை குறைக்கும்

மேலும் லைக்கோப்பீன் → குருதிக் குழாய்களின் கடினத்தன்மையை குறைக்கும்.

சாப்பிடும் சிறந்த நேரம்:
அதனை ஓராச்சையாகவே சாப்பிடுவது சிறந்தது.

---

⭐ 9. கிரான்பெர்ரி – ரத்தக் குழாய்களை சுத்தம் செய்யும் புளிப்புச் சக்தி

பரிந்துரைக்கப்படும் அளவு: 1 கப் (raw) அல்லது 100% ஜூஸ்

கிரான்பெர்ரிகள்:

நல்ல HDL கெட்ட LDL இடையிலான சமநிலையை மேம்படுத்தும்

ரத்தக் குழாய்களின் உள் சுவரை பாதுகாக்கும்

அழற்சியை குறைக்கும்

---

⭐ 10. ஸ்பைருலினா – உடலுக்குள் இயற்கை சக்தி ஊட்டி

பரிந்துரைக்கப்படும் அளவு: 1 டேபிள் ஸ்பூன் தினமும்

ஸ்பைருலினாவில் உள்ள GLA (Gamma-Linolenic Acid):

பிளாக்கை குறைக்கும்

ரத்த அழுத்தத்தை சரிசெய்யும்

அதீத ஆன்டி-ஆக்ஸிடன்ட் சக்தி

ஸ்மூத்தியில் சேர்த்து குடிக்கலாம் அல்லது காப்ஸூலாக எடுத்துக்கொள்ளலாம்.

---

💚 குருதிக் குழாய்களை சுத்தமாக வைத்திருக்க கூடுதல் வழிமுறைகள்

✔ முழு தாவர உணவுகள்

பழம், காய்கறி, பருப்பு, விதைகள் — இவை அனைத்தும் கொழுப்பை கரைக்கவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவும்.

✔ செயலாக்கப்பட்ட எண்ணெய்கள், சர்க்கரை, பொரித்த உணவுகள் தவிர்க்கவும்

இவை உடலில் அழற்சியை ஏற்படுத்தும்.

✔ தினமும் 30 நிமிடங்கள் நடை/ஒழுங்கான உடற்பயிற்சி

ரத்த ஓட்டம் மேம்படும்.

✔ மன அழுத்தத்தை குறைக்கும் பழக்கங்கள்

மெடிடேஷன், யோகா, சுவாசம், இயற்கையில் நடை.

✔ போதிய தூக்கம்

7–9 மணி நேரம்.

✔ புகைப்பிடித்தல் → உடனே நிறுத்தவும்

இதய நோயின் மிகப்பெரிய காரணம்.

---

❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. உணவால் உண்மையில் arteries unclog ஆகுமா?
ஆம், ஆரம்ப கட்ட plaque buildup குறையலாம்.

2. எதை தவிர்க்க வேண்டும்?
பொரித்தது, அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, processed foods.

3. எவ்வளவு நேரத்தில் மாற்றம் தெரியும்?
4–6 வாரங்களில் நல்ல ரத்த அழுத்தம், கொழுப்பு குறைவாகத் தெரியும்.

4. தாவர உணவு இதயத்திற்கு சிறந்ததா?
பல ஆய்வுகள் அதை உறுதிப்படுத்துகின்றன.

---

❤️ இறுதி குறிப்புகள்

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவே, உங்கள் ரத்தக் குழாய்களையும் இதயத்தையும் பாதுகாக்கும் மிகப் பெரிய மருந்து.
இவை அனைத்தையும் ஒரே நாளில் மாற்ற வேண்டிய அவசியமில்லை.

இன்றே இந்த பட்டியலில் இருந்து 2–3 உணவுகளை உங்கள் நாளாந்த வாழ்வில் சேர்த்துத் தொடங்குங்கள்.
நாளடைவில் உங்கள் உடல், உங்கள் ஆரோக்கியம், உங்கள் இதயம் — கடுமையாக நன்றி சொல்லும்.

---

❤️

24/11/2025

சுண்டைக்காய் மரு‌த்துவ பலன்

Address

Madipakkam
60091

Alerts

Be the first to know and let us send you an email when HealthTips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram