Eternal Life Church

Eternal Life Church Eternal Life Church is located in Thirumangalam

இழந்து போன ஆரோக்கியத்தையும் , இளமையும் கர்த்தரிடமிருந்து  மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள்.....
26/03/2025

இழந்து போன ஆரோக்கியத்தையும் , இளமையும் கர்த்தரிடமிருந்து மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள்.....

எதற்க்காக சரீர மீட்பு பயிற்சி பள்ளி ? ஏன் தொடங்கப்பட்டுள்ளது? இதன் நோக்கம் என்ன?

உங்கள் ஆற்றலை அதிகப்படுத்துங்கள்...
03/03/2025

உங்கள் ஆற்றலை அதிகப்படுத்துங்கள்...

உங்கள் ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி? by உங்கள் அன்பு நண்பர் ராஜேஷ் ஜோஷ்வா FOR PRAYER & SUPPORT 8248817935,8807661230.

ஒருவனும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது
18/07/2024

ஒருவனும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது

30/11/2023

நீங்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்

28/06/2023

🤐🤫 *தினதியானம்* 🤫🤐
*****************
(* *28.06.2023** )

*தலைப்பு* :
----------------------
👉 *எதிர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுதல்* 👈

🔥 📖 *இன்றைக்கான வசனம்* 📖 🔥

*எரேமியா 29:11*
🌹🌹🌹🌹🌹🌹🌹
📯📯
*நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே* .
📯📯
*கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !*
சில எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களுக்கும், தங்களுடைய சூழ்நிலையைப் பெரிதுபடுத்தி பேசுபவர்களுக்கும் இந்த தின தியானத்தில் நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால்,
*தேவனுடைய வாக்குத்தத்தங்களில் ஒன்றை ஒரு முறை மட்டும் திரும்பத் திரும்ப கூறுவதால் எந்தவிதமான பெரிய பலனும் தென்படாது. பலன் ஏற்படும் வரை திரும்பத் திரும்ப நாம் அதனை இருதயத்தில் நிறுத்தி, நாவினால் அறிக்கையிட வேண்டும். நம்முடைய எண்ணத்தில் அவைகள் நிலை கொள்ளும் வரை தொடர்ந்து அறிக்கையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.*
பொதுவாக ஒரு காரியத்தில் எதிர்மறையான பகுதிகளையே மக்கள் அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட எதிர்மறையான சிந்தனை கொண்டவர்கள், அதனை தங்களுடைய இருதயத்தில் பலத்த அரணாக மாறச் செய்கிறார்கள்.
எப்பொழுதெல்லாம் நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எதிர்மறையான காரியங்களையே அதிகமாக சிந்திக்கிறோம்.
ஆனால், நாம் தேவனுடைய வார்த்தையாகிய ஆயுதத்தை பல வித்தியாசமான முறைகளில் நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ப உபயோகித்து, அந்த எதிர்மறையான எண்ணத்தின் மேல் ஜெயம் எடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
*எரேமியா 29:11* இல்,தேவன் இவ்வாறாக கூறுகிறார்.
*_நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே_* .

வேறு ஒரு மொழிபெயர்ப்பு *உங்களை துன்பப்படுத்துவதற்காக அல்ல; அவைகள் உங்களை செழிப்பாக்குவதற்கான திட்டங்கள்* . என்று கூறுகிறது.
*ஒவ்வொரு முறையும் எதிர்மறையான எண்ணம் நமக்கு ஏற்படும் போது, நாம் "தேவனே! நீர் எங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம்; அதற்காக நன்றி! எதிர்காலத்தில் எங்களுக்கு நன்மையை அளிப்பதற்காகவே அவைகள் இருக்கின்றன; தீமைக்கல்ல. நன்மையை உண்டாக்கி, எங்களை செழிப்பாக்குவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள்" என்று நாம் அறிக்கையிட வேண்டும்* .
இப்படி நாம் பலமுறை அறிக்கையிடும் போது, எதிர்மறையான எண்ணங்கள் நமக்குள் மறைய ஆரம்பிக்கிறது. நமக்குள்ளாக நம்பிக்கையான தேவனுடைய எண்ணம் உருவாகிறது.
இதனை " *நாம் ஒரு நாளின் துவக்கத்தில் சொல்வோம் என்றால், அந்த நாள் நமக்கு மிகுந்த ஆசீர்வாதமான நாளாக இருக்கும்; நாம் செய்ய நினைத்த காரியம் நிறைவேறும்".*
மற்ற மக்கள் நம்மை எப்படி நடத்துகிறார்களோ, அதற்கு ஏற்பவே நம்முடைய நடவடிக்கைகள் இருக்கும்.
உதாரணமாக ஒரு கடைக்கு நேர்மறையான எண்ணத்தோடு நாம் செல்வோம் என்றால்,கடைக்காரர்கள் நமக்கு உதவிடுவார்கள்.
சரியான முறையில் அவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தோடு நாம் செல்வோம் என்றால், மரியாதைக் குறைவும் பிரச்சினைமே நாம் சந்திக்க நேரிடும்.
*நாம் அறிக்கையடும் வசனங்களை நமக்குள்ளாக சொந்த அனுபவமாக்கிக் கொள்வது மிகவும் நல்லது.*
எனவே, எங்கெல்லாம் வேதத்தில் *"நீ"* என்று கூறப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் நாம் " *நம்முடைய பெயரைக் " கூறி அல்லது "நான்" என்று கூறி படிக்க வேண்டும்* . இப்படி செய்வதால் இது எனக்குரியது என்று நாம் அறிக்கையிடுகிறோம்.

கர்த்தராகிய இயேசு தாமே இந்த செய்தி மூலமாக உங்களை ஆசீர்வதித்து உங்களோடு கூட பேசுவாராக! ஆமென்!

*கிறிஸ்துவுக்குள்* ,
*Pr.K.ராஜேஷ் ஜோஷ்வா,*
*நித்திய வாழ்வு திருச்சபை*

*ஜெபம்*
*********

அன்பும் இரக்கமும் உள்ள நல்ல தகப்பனே! *பிதாவே! நீர் எங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம்; அதற்காக நன்றி! எதிர்காலத்தில் எங்களுக்கு நன்மையை அளிப்பதற்காகவே அவைகள் இருக்கின்றன; தீமைக்கல்ல. நன்மையை உண்டாக்கி, எங்களை செழிப்பாக்குவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட திட்டங்களாக இருக்கிறது* என்று வேதத்தின் மூலம் கற்றுக்கொடுத்தீரே, உமக்கு நன்றி!இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்!

🤲 *ஜெப உதவிக்கு* : 🤲
*பாஸ்டர். K.ராஜேஷ் ஜோஸ்வா* ,
*கிறிஸ்துவுக்குள் சரீர மீட்பு ஊழியங்கள்*
*திருமங்கலம்* ,
*மதுரை மாவட்டம்* .
📱: ~*8248817935*
whatsapp: *8807661230*~
phone pay: *8248817935*

28/06/2023

ஒவ்வொரு மனிதனும் செழிப்பாகவும், சந்தோஷமாகவும் ,சமாதானமாகவும் , ஆரோக்கியமாகவும், நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது இறைவனாகிய நம் அப்பாவின் விருப்பம் ....

15/06/2023

💥 *Meditate Devotional* 💥
********************
( *15.06.2023* )
*************
🔥 *TITLE* 🔥
*"*"*"*"*"*"*"*"*
🎷 *His Perfect Love Drives Out Every Fear* 🎷
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🔥 *Today Verse* 🔥
*"*"*"*"*"*"*"*"*
🎷 *1 John 4:18* 🎷
🌹🌹🌹🌹🌹🌹🌹

🥁 *There is no fear in love; but perfect love casts out fear, because fear involves torment. But he who fears has not been made perfect in love.*
🥁
*Beloved in Christ!*

If you think that God is mad at you or that He is out to punish you, how can you have faith that He hears your prayer for healing? How can you believe Him for your miracle?
Yet, the truth is that *God loves you so much that He gave you Jesus, heaven’s best, so that you will NEVER be cut-off from Him no matter what you’ve done or not done. Jesus went to the cross for you so that God will always be with you and for you, to heal you and do good to you.*
When you have a deep revelation of how much God loves you, *you can’t remain sick for long. You won’t be afraid that He may be keeping His healing power from you. Keep feeding on His perfect love for you.* Keep meditating on it. It’s the sure antidote to fear! Hallelujah!

In Christ,
Pr. *Rajesh Joshua* ,
*Eternal life church* .

*FOR PRAYER*
*************
*Pr.K.Rajesh Joshua,*
*Body Redemption ministry in Christ* ,
*Tirumangalam* ,
*Madurai-625706* ,
📞: *8248817935*
*Phonepay:8248817935*

09/06/2023

🥁🎷 *தினதியானம்* 🎷🥁
*** *****************
(* 09.06.2023* )

*தலைப்பு* :
----------------------
👉 *உயிர்த்தெழுதலும், சரீர மீட்பும்* 👈

🔥 📖 *இன்றைக்கான வசனம்* 📖 🔥

*ரோமர் 8:23*
🌹🌹🌹🌹🌹🌹🌹
📯📯
*அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்* .
📯📯

*கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !*

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து சிலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். மனிதனுடைய ஆவி மரணத்தின் போது, "தேவனை சென்றடைகிறதே உயிர்த்தெழுதல்" என்று நம்புகின்றனர்.
உயிர்த்தெழுதலின் போது, " *இயேசு ஆவியில் மட்டும் உயிர்த்தெழவில்லை; அவருடைய சரீரத்தையும் நம்முடைய கர்த்தராகிய தேவன் மீட்டெடுத்தார்" .*
சிலர் நினைக்கிறார்கள், இயேசு மரித்தோரிலிருந்து ஆவியாக மாத்திரம் திரும்பி வந்தார் என்று. *ஆனால், வேதம் "அவர் மாம்சமும், எலும்புகளும் கொண்ட மகிமையின் சரீரத்தோடு உயிர்த்தெழுந்தார்" என்று .* உயிர்த்தெழுதலைப் பற்றி
*லூக்கா 24: 39* இல்
( ........ *எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,* )
என்று லூக்கா சொல்கிறார்.
அவர் உண்மையாகவே மாம்ச சரீரத்தோடு உயிரோடு இருக்கிறார் என்பதை நிரூபிக்கும்படி, இயேசு சீஷர்களோடு புசிக்கவும் செய்தார் என்று *லூக்கா 24:40,43ல்* வாசிக்கிறோம்.
உயிர்த்தெழுதலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரிவதில்லை. ஆனால், வேதத்தில் இதனுடைய அர்த்தத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இயேசு மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தில் இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார். அவர் ஆவியில் அல்ல, சரீரத்தில் இருக்கிறார். இயேசுவின் உயிர்த்தெழுதலை கடைசி காலத்தில் வைக்காமல் தேவன் சரித்திரத்தின் மையத்தில் வைத்திருக்கிறார்.
*இது ஏன்?*
சிலர் இயேசு நம்மை ஆவிக்குரிய மரணத்திலிருந்து மட்டுமே மீட்டெடுக்க வந்தார் என்று விசுவாசிக்கிறார்கள்.
அது உண்மையாக இருக்குமானால், இயேசு ஏன் சரீரத்தில் மரித்து சரீரத்தில் உயிர்த்தெழ வேண்டும்?
*இயேசு சரீரத்தில் உயிர்த்தெழுந்ததினிமித்தம், மரணத்தை முற்றிலுமாக ஜெயித்தார். இயேசு ஒருவேளை மரணத்தை ஆவிக்குரிய அளவில் தான் ஜெயித்தார் என்றால் சரீர மீட்பு தேவனுடைய சித்தத்தின் ஒரு அங்கமாக இருக்க முடியாதே.*
மேலும் நமது சரீர சுகம் ஒரு அர்த்தமில்லாமல் இருக்கும். அதேபோல மரணத்திற்குப் பிறகு, பரலோகம் செல்லும் ஒரு வாசலாக மட்டுமே, உயிர்த்தெழுதலை நாம் பார்த்தோமானால் நாம் சில முக்கிய விஷயங்களை இங்கு தவற விடுகிறோம்.
*சரீரமும் இவ்வுலகமும் ஒட்டுமொத்த சிருஷ்டியும் மகிமை அடைவதற்கு "உயிர்த்தெழுதல்" ஒரு மதகை திறந்து விடுகிறது போல இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நித்திய ஜீவனை அடைந்து சரீர மீட்பு அடைய வேண்டும் என்பதே தேவனுடைய அநாதி சித்தமாக இருக்கிறது* .
*நித்திய வார்த்தையாகிய தேவன், மாம்சத்தில் வந்து இம்மாம்சத்தை ஏன் மகிமைப்படுத்த வேண்டும்?*
அவர் ஏற்கனவே நித்திய காலமாக பரலோகத்தில் ஆவியாகத்தான் வாழ்கிறார். அதேபோல இயேசு சரீரத்தை கல்லறையிலே விட்டு விட்டு ஆவியாக பரலோகம் சென்றிருக்கலாமே! அல்லது அவருடைய ஆவிக்குரிய சரீரத்தைப் பரலோகத்தில் பெற்றுக் கொண்டிருக்கலாமே!
ஆனால் இயேசுவே சரீர மீட்பை முதலில் துவக்கினார். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த போது என்று அவரே முதற்பலனானார் என்று நாம் *1 கொரிந்தியர் 15:23ல்*
( *அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான். முதற்பலனானவர் கிறிஸ்து..* .... )
வாசிக்கிறோம்.
ஆகவே, *சரீர மீட்பும் நித்தியஜீவனும் நம் ஒவ்வொருவருக்கும் உரியது. அதுவும் முதற்பலனான இயேசு கிறிஸ்துவினால் இது அவருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமே!*

கர்த்தராகிய இயேசு தாமே இந்த செய்தி மூலமாக உங்களை ஆசீர்வதித்து உங்களோடு கூட பேசுவாராக! ஆமென்!

*ஜெபம்*
***********

அன்பும் இரக்கமும் உள்ள நல்ல தகப்பனே! *பிதாவே,இயேசு நம்மை ஆவிக்குரிய மரணத்திலிருந்து மட்டுமல்ல, நாம் சரீர மீட்பையும், நித்தி ஜீவனையும் சுதந்தரிக்க வேண்டும்* என்பதற்காகவே வந்தார் என்று வேதத்தின் மூலம் கற்றுக்கொடுத்தீரே, உமக்கு நன்றி!இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்!

🤲 *ஜெப உதவிக்கு* : 🤲
*பாஸ்டர். K.ராஜேஷ் ஜோஸ்வா* ,
*கிறிஸ்துவுக்குள் சரீர மீட்பு ஊழியங்கள்*
*திருமங்கலம்* ,
*மதுரை மாவட்டம்* .
📱: ~*8248817935*
*whatsapp:8807661230*~
*phone pay: 8248817935*

18/04/2023

😊🔥 *தினதியானம்* 😊🔥
*****************
( *18.04.2023* )

*தலைப்பு* :
+-+-+-+-+-+-+-+-++-
👉 *கிருபைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு தான் "நம்முடைய இரட்சிப் பு"* 👈

🔥 *இன்றைக்கான வசனம்* 🔥

*எபேசியர்2:8.*
🌹🌹🌹🌹🌹🌹
📯📯 *கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;*
📯📯

*கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!*
*மீட்பின் மூலமாய் நமக்கு உண்டாயிருக்கிற அனைத்தையும் தேவனுடைய கிருபை அளித்திருக்கிறது.* " *கிருபை"* என்ற வார்த்தை, கிறிஸ்தவர்கள் மத்தியிலே அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது.
" *கிருபை* " கொடுத்திருக்கிற எல்லாவற்றையும், விசுவாசத்தைக் கொண்டு நாம் பெற்றுக் கொள்கிறோம் என்று வேதத்தில் வாசிக்கிறோம். "கிருபை" கொடுக்கிறது; விசுவாசம் எடுத்துக் கொள்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற அனைத்தையும் நாம் பெற்று அனுபவிக்க வேண்டும் என்றால், முதலாவது நாம் "தேவனுடைய கிருபையைப்" புரிந்து கொள்ள வேண்டும்.
" *கிருபை"* என்பது " *தகுதியற்றவர்களுக்கு தேவன் காட்டும் தயவு* ". அந்த தயவை தேவன் அளவற்ற விதத்திலே, எல்லையற்ற விதத்திலே நம்மிடத்தில் காண்பிக்கிறார். அதாவது அவர் தமது அன்பின் நிமித்தமும், நமக்கு எல்லாவற்றையும் அபரிவிதமாக கொடுத்திருக்கிறார். அவர் அப்படி கொடுப்பதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது; அதிலும் முக்கியமாக நம்முடைய தகுதியோ, நம்முடைய ஆற்றலோ, நம்முடைய திறமையோ நாம் செய்யும் புண்ணியக் காரியங்கள் போன்றவைகளோ எதுவுமே கிடையாது.
தேவனுடைய தயவைப் பெறுவதற்கு நாம் எந்த விதத்திலும் காரணமாக இருக்கவே முடியாது.இது முழுக்க முழுக்க தகுதியற்றவர்களுக்கு " *தேவன் கொடுக்கும் ஆசீர்வாதம், தயவு, தயை,கிருபை".*
" *கிருபை"க்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டே "நம்முடைய இரட்சிப்பு தான்". இரட்சிப்பிலே தேவனுடைய கிருபையை நாம் காணவும், அவருடைய அன்பை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியும்* .
*எபேசியர் 2:8-10*
( _கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;_
_ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;_
_ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்._ )
*இரட்சிப்பில் நம்முடைய முயற்சியோ, பலனோ, தாலந்தோ, ஆற்றலோ எதுவுமே கிடையாது. தேவன் நம்மை கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக சிருஷ்டித்திருக்கிறார. நாம் அவருடைய செய்கையாக இருக்கிறோம். நற்கிரியைகளை செய்கிறதற்கு அவர் முன்னதாகவே நம்மை ஆயத்தம் பண்ணி இருக்கிறார்* .
" *முன்னதாக* " என்ற வார்த்தை *உலகத் தோற்றத்துக்கு முன்னதாகவே* குறிக்கிறது. *ஆதியாகமம்* தான் *ஆரம்பம் என்று நாம் நினைக்கிறோம்.* ஆதியாகமத்தில் உலகத்தின் சிருஷ்டிப்பைக் குறித்து வாசிக்கிறோம். ஆனால் ஆரம்பம் அதுவல்ல;
*சிருஷ்டிக்கும் முன்னரே தேவன் சில நோக்கங்களை மனதில் வைத்து அதன்படி தான் பிறகு நம்மை சிருஷ்டித்தார்* என்று வேதம் குறிப்பிடுகிறது. அதிலே வாழும்படியாக இரட்சிப்பிற்குள் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
அவருடைய "கிருபை" எல்லாவற்றையும் நமக்காக ஆயத்தப்படுத்திவிட்டு, நம்மை இரட்சிப்பிற்குள் வழி நடத்தியும் வந்திருக்கிறது. நம்முடைய எதிர்காலம் தேவனுடைய கிருபையினால் நமக்கு உண்டாக்கப்பட்ட மிக மேன்மையான நல்ல காரியங்களால் நிறைந்து இருக்கிறது. ஆகவே தான் பலர் எப்பொழுதும் "கிருபை" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
🔊 *_அவருடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.*_
🔊 *அவருடைய கிருபையினால் நாம் சுகமாய் இருக்கிறோம்.*
🔊 *_அவருடைய கிருபையினால் செழிப்பாய் இருக்கிறோம்._*
🔊 *அவருடைய கிருபையினால் நாம் நித்திய வாழ்வுக்குள் பிரவேசித்திருக்கிறோம்.*
🔊 *_அவருடைய கிருபையினால் நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து செழித்து இருக்கிறோம்._*
🔊 *அவருடைய கிருபையினால் நம்முடைய வாழ்க்கை வெற்றிகரமாக ஜெயம் கொண்டதாக போய்க்கொண்டிருக்கிறது.*
இவை எல்லாவற்றுக்கும் *தேவனுடைய கிருபை தான் காரணமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. அவருடைய கிருபையை நாம் எண்ணிப் பார்த்து, மகிழ்ந்து, தேவாதி தேவனை ஸ்தோத்தரித்து துதிக்க வேண்டும்* .


கர்த்தராகிய இயேசு தாமே இந்த செய்தி மூலமாக உங்களை ஆசீர்வதித்து உங்களோடு கூட பேசுவாராக! ஆமென்!
கிறிஸ்துவுக்குள் நேசமிகு,
*Pr.K.ராஜேஷ் ஜோஷ்வா,*
*கிறிஸ்துவுக்குள் சரீர மீட்பு*
*ஊழியங்கள்* .

*ஜெபம்*
***********

அன்பும் இரக்கமும் உள்ள நல்ல தகப்பனே! உமக்கு நன்றி செலுத்துகிறோம்! *தேவனுடைய "கிருபை" எல்லாவற்றையும் நமக்காக ஆயத்தப்படுத்திவிட்டு, நம்மை இரட்சிப்பிற்குள் வழி நடத்தியும் வந்திருக்கிறது. நம்முடைய எதிர்காலம் தேவனுடைய கிருபையினால் நமக்கு உண்டாக்கப்பட்ட மிக மேன்மையான நல்ல காரியங்களால் நிறைந்து இருக்கிறது என்று வேதத்தின் மூலம் கற்றுக் கொடுத்தீரே* , உமக்கு நன்றி!இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்!

🤲 *ஜெப உதவிக்கு* : 🤲
*பாஸ்டர். K.ராஜேஷ் ஜோஸ்வா* ,
*கிறிஸ்துவுக்குள் சரீர மீட்பு ஊழியங்கள்.*
**திருமங்கலம்* ,
* *மதுரை மாவட்டம்* . - 625706
📱: ~*8248817935*
whatsapp: *8807661230*~
PhonePay: *8248817935*

17/04/2023

💥🔥 *தினதியானம்* 🔥💥
*****************
( *17.04.2023* )

*தலைப்பு* :
------------------------
👉 *நம் தேவன் சொல் தவறாத பூரண புருஷர்* 👈

🔥 *இன்றைக்கான வசனம்* 🔥

யாக்கோபு 3:2.
🌹🌹🌹🌹🌹🌹
📯📯 *நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.* 📯📯

*கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!*
*தேவனும் தேவனுடைய வார்த்தையும் ஒன்று; தேவன் எப்படிப்பட்டவர்? என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், தேவனுடைய வார்த்தை எப்படிப்பட்டது? என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் நல்லவரா? அவர் அற்புதங்களைச் செய்யக்கூடியவரா? அவர் மாறாதவரா? அவர் வாக்கு தவறாதவரா? தேவனுடைய வார்த்தையைக் கவனித்தால் போதும், அவர் எப்படிப்பட்டவர் என்று புரிந்து கொள்ளலாம்.*
இது எப்படி இருக்கிறது என்றால்?' நாமும் நம்முடைய வார்த்தையும் பிரிக்க முடியாத அளவிற்கு நாம் ஒன்றாய் இருக்கிறோம். நம்முடைய வார்த்தை என்னவோ அப்படித்தான் நாம் இருக்கிறோம். இந்த உலகத்தில் மனுஷர்கள், ஒரு மனிதனைப் பார்த்து நல்லவரா? கெட்டவரா? என்று எப்படி சொல்கிறார்கள்?
அந்த மனுஷன் தான் சொன்னதைச் செய்கிறானா? அதை வைத்து தான் அவர் நல்லவரா? கெட்டவரா? என்று மக்கள் கண்டறிகிறார்கள். அதைத்தான் வேதம், *யாக்கோபு 3:2ல்*
( ....... *ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்* .)
யார் பூரண புருஷர்? யார் சொல் தவறாதவர்?அவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார்?
*அவன் தன் வார்த்தையையினாலே குற்றம் செய்யாதவன்; வார்த்தையை சரியாக பயன்படுத்துகிறான்; வார்த்தை சொல்கிறதை செய்கிறவனாய் அவன் இருக்கிறான். அவனைத் தான் "பூரண புருஷர் "* என்று யாக்கோபு வேதத்தில் சொல்கிறார்.
அதேபோல் தான், " *தேவனுடைய வார்த்தையை வைத்துத் தான் தேவன் எப்படிப்பட்டவர்?* என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
*தேவன் மாறாதவராய் இருக்கிறார்; அவருடைய சுபாவம் மாறாததாய் இருக்கிறது; அவருடைய வார்த்தையும், வார்த்தையில் இருக்கிற வல்லமையும் என்றும் மாறாததாக இருக்கிறது. ஆகவேதான் நாம் அவருடைய வார்த்தையைக் கவனிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.*
*தேவன் என்ன சொல்லி இருக்கிறாரோ அதைத்தான் நிச்சயம் செய்வார். ஏனென்றால், அவரும் அவருடைய வார்த்தையும் ஒன்று. அவருடைய வார்த்தையில் அதாவது வேதத்தில் சொல்லி இருப்பதற்கு மாறாக அவர் செய்வதே கிடையாது* .
அவருடைய வார்த்தையின் படி நம் வாழ்க்கையில் நமக்கு நடக்கவில்லை என்று சொன்னால், "நாம் தான் நம்முடைய வார்த்தைகளை செக் (Check) பண்ணனும்". நாம் சரியாக பின்பற்றினோமா என்றும் எதில் நாம் தவறு செய்திருக்கிறோம் என்று நம்மைத்தான் சரி பார்க்க வேண்டும்.
*அவரும் அவருடைய வார்த்தையும் ஒன்றாக இருப்பதனால் வேத வசனம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.* ஆகவே அதை நாம் ஆழமாய் கவனிக்க வேண்டும். ஏனென்றால், *அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் அவர் நிறைவேற்றுகிறவராக இருக்கிறார்* .
*தேவனுடைய வார்த்தைகள் வல்லமை உடையதாக இருக்கிறது; அவருடைய வார்த்தைகள் ஜீவனை உடையதாக இருக்கிறது; அவை வீணான வார்த்தைகள் அல்ல; அவர் சொன்னதை எல்லாம் அப்படியே நிறைவேற்றக் கூடியவராக இருக்கிறார்; நம் தேவன் சொல் தவறாதவராய் இருக்கிறார்; ஒரு மனுஷன் சொல் தவறாதவனானால் பூரண புருஷன் என்று சொன்ன நம் தேவன், அவரே சொல் தவறாதவராய் இருப்பாரா? இல்லவே இல்லை.*
*அதை எப்படி நாம் தேவனிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும்?*
*தேவன் சொன்ன ஒரு வார்த்தை கூட வீண் போனதே கிடையாது; அவர் வாக்கு மாறாதவர் என்பதே அதனால் தான். அவர் ஒரு பூரண புருஷர்; அவர் ஒரு பூரணமானவர்; அவரிடத்தில் குறையே கிடையாது;* ஆகவே தான் அவர் சொல்கிறது என்ன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
*அதாவது கர்த்தர்,*
👉 *என்னைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்?*
👉 *என் குடும்பத்தைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்?*
👉 *என் வாழ்க்கையைக் குறித்து என்ன சொல்கிறார்?*
👉 *என் வீட்டைப் பற்றி, என் பிள்ளைகளைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்?*
👉 *என் சுகத்தைக் குறித்தும் ஆவி, ஆத்மா, சரீரத்தைக் குறித்து என்ன சொல்லி இருக்கிறார்?*
👉 *என் பொருளாதாரத்தைக் குறித்து என்ன சொல்கிறார்?*
என்று வேத வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாக இருக்கிறது.
*நம் வாழ்க்கையில் தேவன் சொல்லியது நிறைவேற வேண்டும் என்றால், நாமும் சில காரியங்களைச் செய்ய வேண்டும்.*
*அதில் சில முக்கியமான காரியம் என்னவென்றால்,*
💙 *கர்த்தர் என்ன சொல்லியிருக்கிறாரோ, அதை அப்படியே ஆகும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.*
💚 *அவருடைய வார்த்தையின் மீது நமக்கு கவனம் இருக்க வேண்டும்* .
💜 *அவருடைய வார்த்தையின் மீது நம்முடைய கண்கள் இருக்க வேண்டும்* .
🖤 *அது நம்முடைய வாயை விட்டு பிரியாதிருக்க வேண்டும்.*
*இதுவே நாம் அவருடைய வார்த்தை நம்முடைய வாழ்வில் நிறைவேறுவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்று வேதம் சொல்கிறது* .

*கர்த்தராகிய இயேசு தாமே இந்த செய்தி மூலமாக உங்களை ஆசீர்வதித்து உங்களோடு கூட பேசுவாராக! ஆமென்* !
கிறிஸ்துவுக்குள் நேசமிகு,
*Pr.K.ராஜேஷ் ஜோஷ்வா,*
*கிறிஸ்துவுக்குள் சரீர மீட்பு*
*ஊழியங்கள்* .

*ஜெபம்*
***********

அன்பும் இரக்கமும் உள்ள நல்ல தகப்பனே! உமக்கு நன்றி செலுத்துகிறோம்! *தேவனும், அவருடைய வார்த்தையும் ஒன்று. தேவன் மாறாதவராய் இருக்கிறார்; அவருடைய சுபாவம் மாறாததாய் இருக்கிறது; அவருடைய வார்த்தையும், வார்த்தையில் இருக்கிற வல்லமையும் என்றும் மாறாததாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தைகள் வல்லமை உடையதாக இருக்கிறது; அவருடைய வார்த்தைகள் ஜீவனை உடையதாக இருக்கிறது; அவை வீணான வார்த்தைகள் அல்ல; அவர் சொன்னதை எல்லாம் அப்படியே நிறைவேற்றக் கூடியவராக இருக்கிறார்; நம் தேவன் சொல் தவறாதவராய் இருக்கிறார் என்று வேதத்தின் மூலம் கற்றுக் கொடுத்தீரே,* உமக்கு நன்றி!இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்!

🤲 *ஜெப உதவிக்கு* : 🤲
*பாஸ்டர். K.ராஜேஷ் ஜோஸ்வா* ,
*கிறிஸ்துவுக்குள் சரீர மீட்பு ஊழியங்கள்.*
**திருமங்கலம்* ,
* *மதுரை மாவட்டம்* . - 625706
📱: ~*8248817935*
whatsapp: *8807661230*~
PhonePay: *8248817935*

15/04/2023

👨‍👦🌲 *தினதியானம்* 🌲👨‍👦
*******************
(15.04.2023 )

*தலைப்பு* :
--------------
👉 *தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, நம் இருதயத்தில்❤️ வரையப்படும் படத்தின்📝 விளைவு- இயேசுவைப் போல் நாம் மாறுதல்👈*
(Sons & Daughters of God)

🔥 *இன்றைக்கான வசனம்* 🔥

*ஆதியாகமம் 1:26.*
🌹🌹🌹🌹🌹🌹

📯📯 *பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக* ; ......
📯📯

*கிறிஸ்துவுக்குள் பிரியமான நீதிமான்களே!*
தேவன் மனிதனை சிருஷ்டிக்கும் போது, " *நமது சாயலாகவும், நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை🧍 உண்டாக்குவோமாக* " என்று சொல்லி உண்டாக்கினார். *தேவன் தம் மனதில் கொண்டிருந்த மனிதனைப்🧍 பற்றிய சிருஷ்டிப்பின் நோக்கத்தை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது* . " *சாயல்* " என்றால் " *பிரதிபிம்பம்* ". "ரூபம்" என்றால் " *ஒரே மாதிரியான🧑‍🤝‍🧑 தோற்றம்"* . இந்த வசனத்தில் வரும் முதல் வார்த்தை " *சாயல்* " என்பதே. ஆகவே, தேவன் *மனிதனுக்கு முதலில் ஒரு பிரதிபிம்பத்தைத் தருகிறார். அதைத் தொடர்ந்து தோற்றம் வருகிறது.*
*கடவுளுடைய வார்த்தை நமக்கு எதற்காக கொடுக்கப்பட்டது?*
*அவருடைய வார்த்தையைக் கேட்டு கேட்டு👂, அதை நம்பி, நம்பி நம்மைக் குறித்த ஒரு படம்🖌️, நம்மை குறித்த ஒரு காட்சி, நம் இருதயத்தில்🧡 வைக்கப்படுவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது* . இந்தப்படம் நம் இருதயத்திற்குள்ளே 💛உருவான பின்பே, அதைப் போலவே, ஒரே மாதிரியான தோற்றம் வந்துவிடுகிறது. அநேகருக்குப் பிரச்சினை என்னவென்றால், தாங்கள் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்; அதற்காக தங்களுடைய புறத்தோற்றத்தை🙄 மாற்றிக் கொள்கிறார்கள்; ஆனால், இயேசு எப்படிப்பட்டவர் என்பதைக் குறித்த ஒரு படத்தை✍️ தங்களுக்குள் உருவாக்க தவறிவிடுகிறார்கள்.
*எப்பொழுது நாம் இயேசுவை போல் இருக்க முடியும்?*
*தேவனுடைய வார்த்தைகளை எடுத்து, அதைப் பேசி பேசி🗣️ இருதயத்தில்💚 ஒரு படத்தை உண்டாக்கும் போது ,அந்தப் படம் பூரணமடையும் போது ,அவரைப் போலவே நாம் இருக்க முடிகிறது* .
ஒரு ஓவியன்🧑‍🎨 ஒரு படத்தை வரையும்போது பார்த்திருப்பீர்கள்! முதலில் அங்குமிங்குமாக ஓரத்தில் சில கோடுகளை (outline) போடுவான்; அப்போது அவன் வரைய இருப்பது இயற்கை காட்சியா?🌌 மிருகமா?🐎 மனிதனா?🧍 என்று ஒன்றுமே நமக்குத் தெரியாது; பின்பு, அந்தக் கோடுகளுக் குள்ளே இன்னும் சிறிது வரையும் போது, இவன் ஏதோ ஒரு மனிதரை🧍 வரையப் போகிறான் என்று ஓரளவிற்கு புரியும். அந்தப் படத்தை அவன் வரைந்து வரைந்து பூரணப்படுத்தும் போது, படம் மிகத் தெளிவாக நமக்குத் தெரியும்; அடடே! இந்த ஓவியத்தில் இருப்பது அவரா இது?... என்று ஆச்சரியப்பட்டு பார்ப்போம்.
*இதேபோலத்தான் கடவுளுடைய வார்த்தையை, சத்தியங்களை நாம் முதலில் கேட்கும் போது👂, அந்த ஓவியன் ஆரம்பத்தில் வரை கோடு போன்றே தெளிவில்லாமல் தோன்றும்* ; ஆனால், *இப்படிப்பட்ட சத்தியங்களை நாம் தொடர்ந்து கேட்டு கேட்டு விசுவாச வார்த்தைகளைப் பேசி🗣️ பேசி நம் இருதயத்திற்குள்💙 நாம் யார் என்ற ஒரு படம் பூரணமாக வந்துவிடும்.* போகப்போக கிறிஸ்துவின் சாயலில் படைக்கப்பட்ட நாம், யார்? என்பதை நாம் காண ஆரம்பிப்போம்; *இப்படி ஒரு படம் நம் உள்ளத்திற்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாக வரையப்பட்டு, அந்தப்படம் பூரணம் அடையும் போது "இயேசுவைப் போலவே இருப்பதில் நமக்கு எந்த கஷ்டமும் இல்லை."* ஏனென்றால், அவருடைய சாயல் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; அநேகருக்கு அவர்களைப் பற்றி அவர்களது இருதயத்தில்💜 உள்ள படம் தெளிவில்லாமல் சரியாக வரையப்படாமல் இருக்கிறது.
*மோசே, " நான் பார்வோனுக்குத் தேவன்" என்ற ஒரு படத்தை கர்த்தர் சொல்லிய வார்த்தையின் மூலமாக தனக்குள் வரைந்தான்.* *அதனால், அவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முடிந்தது. தாவீது "யுத்தம் கர்த்தருடையது" என்ற படத்தை இருதயத்தில் வைத்ததால், கோலியாத்தை எளிதில் வீழ்த்த முடிந்தது.* *கிதியோன் "பராக்கிரமசாலியே" என்று கர்த்தர் அவனைக் குறித்துச் சொன்ன வார்த்தையில் இருந்து, தனக்குள் ஒரு படத்தை வரைந்ததால், ஒரு பலத்த சேனையின் மீது ஜெயம் எடுத்தான்.*
*கர்த்தருடைய வார்த்தையிலிருந்து பிரசங்கிக்கப்படும் சத்தியங்களைக் கேட்டு கேட்டு, நம் இருதயத்திலே🤎 நம்மைக் குறித்த ஒரு படத்தை தெளிவாக வரைய வேண்டும்.* அந்தப் படத்தில் இருந்து, " *நாம் தேவனுடைய சாயலின் படியும், ரூபத்தின் படியும் உண்டாக்கப்பட்டவர்கள்* என்பதைப் பார்க்க வேண்டும். அந்தப் படத்திலிருந்து, நாம் *கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரர் என்பதையும், நாம் ராஜரீக ஆசிரியர் கூட்டம் என்பதையும், நாம் ஆளப்பிறந்த ராஜா என்பதையும், பாவத்திற்கு மரித்தவர்கள் என்பதையும், அவருடைய தழும்புகளால் சுகமானோம் என்பதையும், கிறிஸ்துவுக்குள் நாம் ஐசுவரியவான்கள் என்பதையும்* பார்க்க வேண்டும். நமக்குள் நாம் வரையும் அந்தப்படம் தான், " *நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம், குடும்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் நம்மை வெற்றிகரமாக நடத்தி செல்ல வல்லதாக இருக்கிறது".*
கர்த்தராகிய இயேசு தாமே இந்த செய்தி மூலமாக உங்களை ஆசீர்வதித்து உங்களோடு கூட பேசுவாராக! ஆமென்!

*ஜெபம்*
*******

அன்பும் இரக்கமும் உள்ள நல்ல தகப்பனே! *நாம் தேவனுடைய சாயலின் படியும், ரூபத்தின் படியும் உண்டாக்கப்பட்டவர்கள் என்பதை நம் இருதயத்தில் வரைந்து அதை அனுதினமும் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தீரே,* உமக்கு நன்றி செலுத்துகிறோம்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்!

இந்த செய்தி மூலமாக நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பீர்கள் என்றால், உங்கள் அன்பின் காணிக்கை விதைகள🌾 தாராளமாக இந்த ஊழியத்திலே விதைக்கலாம்.🌴*
*விதைக்க வேண்டிய வங்கி கணக்கு எண்:*
*K. ராஜேஷ் ஜோஷ்வா,*
*State bank of India* ,
*Account Number:* *30166815977* ,
*IFS code:* *SBIN0000931*
* *Phonepe: 8248817935*

🤲 *ஜெப உதவிக்கு* : 🤲
*பாஸ்டர். K.ராஜேஷ் ஜோஸ்வா* ,
*கிறிஸ்துவுக்குள் சரீர மீட்பு ஊழியங்கள்.*
**திருமங்கலம்* ,
* *மதுரை மாவட்டம்* . - 625706
📱: ~*8248817935*
whatsapp: *8807661230*~

Address

Madura

Alerts

Be the first to know and let us send you an email when Eternal Life Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Eternal Life Church:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram