Morning9

Morning9 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Morning9, Medical and health, Madurai.

தினம் ஒரு மூலிகை – ஆர்கனோஆர்கனோவின் மருத்துவ நன்மைகள் (Oregano benefits)1. இருதய ஆரோக்கியத்திற்கு ஆர்கனோவின் நன்மைகள்இரு...
13/07/2022

தினம் ஒரு மூலிகை – ஆர்கனோ
ஆர்கனோவின் மருத்துவ நன்மைகள் (Oregano benefits)

1. இருதய ஆரோக்கியத்திற்கு ஆர்கனோவின் நன்மைகள்

இருதய பிரச்சினைகள் பெரும்பாலும் புகைபிடித்தல், நீரிழிவு நோய், வீக்கம் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். ஆர்கனோ அல்லது கற்பூரவள்ளி இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வீக்கம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. கூடுதலாக, இது இருதய எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது, இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்

2. புற்றுநோய் அபாயத்தை குறைக்க

ஆர்கனோ இலைகளின் நன்மைகளில் ஒன்று புற்றுநோயைத் தடுக்க உதவும். இவை புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கவும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்க ஆர்கனோவின் நன்மைகள் பயனுள்ளதாக இருக்கும். இது புரோபொப்டோடிக் விளைவுகளைக் கொண்டுள்ளது. அதாவது புற்றுநோய் செல்களைக் கொல்லும் தன்மை. மேலும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

ஆர்கனோ இலைகளின் நன்மைகளுள் ஒன்று நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிப்பதிலும் காணலாம். வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-இ போன்ற பல ஊட்டச்சத்துக்கள் ஆர்கனோவில் காணப்படுகின்றன. இந்த மூன்று வைட்டமின்களும் பயனுள்ள ஆக்ஸிஜனேற்றியாகக் கருதப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இவை உடலில் ஃப்ரீ-ரேடிக்கல்களின் விளைவைக் குறைக்கும் மற்றும் அவற்றின் விளைவுகளிலிருந்து செல்களைப் பாதுகாக்கும். இந்த எல்லா ஊட்டச்சத்துக்களையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஆர்கனோ இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைத்து, அந்த தண்ணீரை உட்கொள்ளுங்கள்.

4. மனச்சோர்வுக்கு ஆர்கனோவின் நன்மைகள்

மனச்சோர்வை எதிர்த்துப் போராடுவதிலும் ஆர்கனோவின் நன்மைகள் காணப்படுகின்றன. உண்மையில், என்.சி.பி.ஐ (பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையம்) வெளியிட்டுள்ள ஆய்வில், ஆர்கனோவின் அத்தியாவசிய எண்ணெய்களில் உள்ள கார்வாக்ரால் என்ற உறுப்பு ஒரு ஆண்டிடிரஸன் முகவரைப் போல செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளது. இதனால் மனசோர்வு பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆய்வகத்தில் எலிகள் பற்றிய ஒரு ஆய்வில், இது டோபமினெர்ஜிக் அமைப்பை பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது (டோபமைன் – ஒரு வகை ஹார்மோன் மற்றும் நரம்பியக்கடத்தி) இதனால் என்ன`பயன் என்றால், டோபமினெர்ஜிக் அமைப்பில் ஒரு விளைவைக் கொண்டிருப்பது மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
மேலும் அறிய ............ http://morning9.com/?p=1465

தினம் ஒரு மூலிகை – கொழுக்கட்டை மந்தாரைகொழுக்கட்டை மந்தாரை :-மெல்ல அழிந்து வரும் அரிய மருத்துவ குணங்களை கொண்டது இந்த கொழு...
06/07/2022

தினம் ஒரு மூலிகை – கொழுக்கட்டை மந்தாரை
கொழுக்கட்டை மந்தாரை :-

மெல்ல அழிந்து வரும் அரிய மருத்துவ குணங்களை கொண்டது இந்த கொழுக்கட்டை மந்தாரை அல்லது திருவாச்சி மரம் ஆகும்.

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்டது. இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.

திருவாச்சி மரம், வல்லாரை இலைகளைப் போன்ற காம்புகளைச் சுற்றி படர்ந்த பசுமையான இலைகளைக் கொண்ட, குறு மரமாகும், திருவாச்சியின் மலர்களில் உள்ள, அதிக அளவு மகரந்தத்தையும், தேனையும் சுவைக்க தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் போட்டியிடுவதைக் காண்பதே, கண்களுக்கு விருந்தாக அமையும்.

விநாயகருக்கும், குரு தட்ச்னாமூர்தி மற்றும் சநீஸ்வரபகவானுக்கும் பிடித்த பூக்களில் இதுவும் ஒன்று. இது பொதுவாக மஞ்சள் நிறமுள்ள பூக்களுடன்(சில இடங்களில் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது) , பூக்களின் நடுவில் காப்பி கோட்டை நிறத்தில் கொழுக்கட்டையின் உள்ளே இனிப்பு பூரணம் இருப்பது போலவே இந்த பூ அமைந்திருப்பதினால் இந்த பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்பெல்லாம் இதன் இலையை ஈர் குச்சியால் தைத்து சாப்பிடும் இலையாக பயன்படுத்தினார்கள் காலம் செல்ல செல்ல இந்த தாவரத்தை காண்பதே அரிதாகிப்போனது. (குறிப்பு:- அந்தி மந்தாரை என்பது வேறு வகை பூந்தாவரம், கொழுக்கட்டை மந்தாரை என்பது வேறு வகை தாவரம்)

கொழுக்கட்டை மந்தாரை – இந்த மரத்திற்க்கு தனி மகத்துவம் உள்ளது. ஆண் மரம் மற்றும் பெண் மரம் என்று இருவித மரங்களாக காணப்படுகிறது. பெண் மந்தாரை மரம் அழகிய வண்ண பூக்களுடன் சிறு சிறு இலைகளைக் கொண்டதாகவும், ஆண் மந்தாரை மரம் பெரிய இலைகளைப் பெற்றிருக்கும் (இந்த ஆண் மந்தாரை இலையைத்தான் ஈர்க்குச்சியால் தைத்து சாப்பிடும் இலையாக பயன்படுத்துகிறார்கள்)

மந்தாரையின் மருத்துவ குணம்:-இதன் இலையில் விளக்கெண்ணையை தடவி அந்த இலையை சூடான தணலில் வாட்டி, கத்திக்குத்து அல்லது அடி பட்டு வீக்கம் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் சில மணி நேரங்களிலே வீக்கம் குறைந்து தசைகளுக்கு அடிபட்ட சுவடு தெரியாமல் வலி காணாமல் போகுமாம். ( சோழ மன்னர் காலத்தில் போதி சித்தர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் இந்த வைத்தியத்தை செய்ததாக குறிப்பு உள்ளது.) மந்தாரை மூல நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது, மந்தாரை இலையில் சாப்பாடு சாப்பிட்டால் குறிப்பாக தயிர் சாதம் பிசைந்து உண்டால் குடல் வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
மேலும் அறிய ........... http://morning9.com/?p=1423

தினம் ஒரு மூலிகை – சீதேவி செங்கழுநீா்மருத்துவ குணங்கள்வாத வீக்கத்தினை குணப்படுத்தும். வாதத்தினால் ஏற்படும் கட்டிகளையும் ...
31/05/2022

தினம் ஒரு மூலிகை – சீதேவி செங்கழுநீா்
மருத்துவ குணங்கள்

வாத வீக்கத்தினை குணப்படுத்தும். வாதத்தினால் ஏற்படும் கட்டிகளையும் சாிசெய்யக் கூடியது. மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தினையும் சரிசெய்யக் கூடிய நற்பலன்களைக் கொண்டது.

வாய்வு, சொறி சிரங்கு, தேம்பல், வெடிப்பு, பித்த சுரம், நரம்பு சுருண்டு, கண் சிவப்பு, குடற்புழு, சீதபேதி இவற்றை அனைத்தினையும் சரிசெய்யக் கூடிய ஆற்றல் கொண்டது.

மூட்டுவலி

இதன் இலைகளை நன்கு மையாக அரைத்து, வானொலியில் சிறிது விளக்கெண்ணை ஊற்றி அதனுடன் அரைத்த இலை விழுதினை போட்டு சூடு படுத்தி அதனை மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கு வைத்து கட்டி வர மூட்டு வலி சரியாகிவிடும்.

வாத நோய்

கால் லிட்டா் அளவு விளக்கெண்ணையில் இதன் இலைகள் மற்றும் சிறிது சுக்கு சோ்த்து காய்ச்சி பின் ஆறியவுடன் வடிகட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவைப்படும் போது இது போன்ற மூட்டு வலி, வாதம், மற்றும் வீக்கங்களுக்கு தேய்த்து வர குணமாகும்.

பித்த சுரம்

இந்த செங்கழுநீா் செடி முழுவதையும் குடிநீாில் போட்டு காய்ச்சி குடித்து வர பித்த சுரம் விரைவில் குணமடையும்.

நரம்பு சுருட்டு

நரம்பு சுருட்டு வியாதிக்கு இதன் இலையினை அரைத்து ஒரு துணியில் வைத்து கட்டி வர விரைவில் சரியாகும்.

கண் சிவப்பு மாற

கண்கள் சிவப்பாக இருப்பது மாற இதன் பூக்களை ஒரு துளி சாறினை கண்ணில் விட கண் சிவப்பு மாறும்.

குடற்புழு நீங்க

இதன் இலையுடன் இரண்டு அல்லது மூன்று கிராம் மிளகு சோ்த்து அதனுடன் சிறிது சா்க்கரை சோ்த்து தொடா்ந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர குடற்புழுகள் அனைத்தும் வெளியேறி விடும்.

இரத்தச் சோகை

இதன் பூக்களை மட்டும் எடுத்து சுத்தம் செய்து நீாில் வேகவைத்து சாப்பிட பித்தம், மயக்கம், இரத்தச் சோகை குணமடையும்.
மேலும் அறிய ............ http://morning9.com/?p=1220

தினம் ஒரு மூலிகை – வெள்வேல மரம்மருத்துவ பயன்கள்.பித்த மயக்கம், வாதசுரம், இடுப்பு வலி, குத்தல், குடைச்சல் போன்றவைகளுக்கு ...
26/05/2022

தினம் ஒரு மூலிகை – வெள்வேல மரம்
மருத்துவ பயன்கள்.

பித்த மயக்கம், வாதசுரம், இடுப்பு வலி, குத்தல், குடைச்சல் போன்றவைகளுக்கு அரு மருந்து இந்த வெள்வேல மரம்.

வெள்ளைப்படுத்தல் குணமாக

இதன் கொளுந்து இலைகளை பறித்து அதை ஒரு நெல்லிக்காய் அளவு நன்றாக அரைத்து மோருடன் கலந்து மூன்று நாட்கள் தொடா்ந்து அருந்தி வர வெள்ளைபடுத்தல் நோய் குணமாகும். அதனால் ஏற்படுகின்ற உடல் வலியும் குறையும்.

வாய் புண் சரியாக

இதன் பட்டை 50 கிராம் அளவிற்கு எடுத்து அதனுடன் சமஅளவு இஞ்சி சோ்த்து பஞ்சு போன்று நன்கு அரைத்து நீாில் கொதிக்க வைத்து கசாயம் போன்று செய்து வாய் கொப்பளித்தால் வாய் புண் மற்றும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.

இதன் பட்டையுடன் மஞ்சள் சோ்த்து அரைத்து காயங்கள், புண்கள் மீது பூச விரைவில் குணமாகும்.

அனைத்து வலிகளும் குணமாக

இதனுடைய பட்டையை 200கிராம் எடுத்து அதனை நன்றாக இடித்து வைத்து அதனுடன் அரை லிட்டா் வேம்ப எண்ணெயுடன் காய்ச்சி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொண்டு அதனை கை கால் வலி, இடுப்பு வலி போன்ற வலிகளுக்கு தடவி பின் பொறுக்கும் சூட்டில் வெந்நீா் ஒதடம் கொடுக்க வலிகள் யாவும் பறந்து போகும்.

உடல் பலம் பெற

வெள்வேல் மர பிசின், வேல மரத்து பிசின், முருங்கை மர பிசின், பாதாம் பிசின், இவை அனைத்தையும் ஒன்றாக சோ்த்து காய வைத்து அரைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு இரவு படுக்கும் முன் ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு டம்ளா் காய்ச்சிய பசுவின் பாலில் கலந்து சிறிது பனகற்கண்டு சோ்த்து குடித்து வர உடல் பலம் பெறும்.
மேலும் அறிய ............. http://morning9.com/?p=1217

தினம் ஒரு மூலிகை – ஆம்பல்ஆம்பல் மலரின் மருத்துவப் பயன்கள்1. ஆம்பல் இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எ...
21/05/2022

தினம் ஒரு மூலிகை – ஆம்பல்
ஆம்பல் மலரின் மருத்துவப் பயன்கள்

1. ஆம்பல் இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.

2. 200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம், சிறுநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.

3. ஆம்பல் கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும்.

4. ஆம்பல்பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15 மி.லி யாகச் சாப்பிட்டு வர மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும். இதயப்படபடப்பைத் தணிக்கும்.

5ஆம்பல் மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.

6. ஆம்பல் பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம்.

7. கோடை காலத்தில் வெப்பத்தில் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும்.

8. சிவப்பு ஆம்பல் இதழ்களுடன், செம்பருத்தி பூ இதழையும் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் இதயம் பலமடையும், இதய படபடப்பு வராது, உடலில் ரத்தம் பெருகும்.
மேலும் அறிய .............. http://morning9.com/?p=1214

தினம் ஒரு மூலிகை – ஓமம்ஓமம் (Ajwain)ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். ஓமம் விதைகள் மருத்துவத்திலும், ...
20/05/2022

தினம் ஒரு மூலிகை – ஓமம்
ஓமம் (Ajwain)

ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். ஓமம் விதைகள் மருத்துவத்திலும், உணவிலும் பயன்படுகிறது. சீதளத்தால் ஏற்படும் ஜுரம், சளி, இருமல், வயிறு சம்மந்தமான நோய்கள், குடல் இரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள் போன்றவற்றை ஓமம் சரி செய்யும் என சித்த மருத்துவ நூல்களில் குறிபிடப்பட்டுள்ளது.

ஓமம் செடி வளரியல்பு
இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். ஓமம் செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இதன் இலைகள் சிறகு போன்ற பிளவுபட்ட நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீளமாக வளர்ந்திருக்கும். இதன் காய்கள் மிகுந்த வாசமுள்ளவை. முற்றிப் பழமாகிய பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகிறது.

ஓமத்தை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது. ஓமத்தில் ‘தைமோல்’ என்னும் வேதிபொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. இந்த வேதிப்பொருள் தைம் என்னும் மூலிகையிலும் உள்ளது. எனவே தான் தைம் மற்றும் ஓமம் இரண்டும் ஒரே மாதிரியான மணத்தைக் கொண்டுள்ளது.

ஓமம் பயன்பாடு
ஓமம் கறிவகைகள், ஊறுகாய், பிஸ்கட்டுகள், பானங்கள், மிட்டாய்கள் போன்றவற்றில் அதன் தனித்தன்மையை வெளிப்படுத்தவும், வாசனைக்காகவும், காரச் சுவைக்காகவும் பயன்படுகிறது. வலியை அகற்றும் மருந்தாகவும், பசியை ஊக்குவிப்பானாகவும், ஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும் தூண்டுகோலாகவும் பயன்படுகிறது.

ஓமம் வகைகள்
ஓமத்தில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. சாதாரண ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும். ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.

உணவில் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படும் ஓமமானது அதிக உடல் ஆரோக்கிய பலன்களை கொண்டது, குறிப்பாக, இது உடலின் செரிமானத்திற்கும் பொதுவான வியாதிகளான சளி, இருமல் பல் வலி, காது வலி போன்றவற்றிற்கு மருத்துவ தீர்வு தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடி பராமரிப்பு மற்றும் ஆர்த்ரிட்டீஸ் நோயின் பொழுது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்துவதற்கும் ஆஸ்துமா, சிறுநீரக செயலிழப்பு, உடல் எடை குறைதல், வரைமுறையற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனைகள் ஆகியவற்றிற்கும் தீர்வாக இந்த ஓமம் பயன்படுகிறது.
மேலும் அறிய .......... http://morning9.com/?p=1211

தினம் ஒரு மூலிகை – வேட்டை பாக்குஉடல் நல நன்மைகள்மனச்சோர்வு இந்த பூவில் ஹைபரிசின் என்ற பொருள் உள்ளது. இந்த ரசாயானம் நம்மள...
19/05/2022

தினம் ஒரு மூலிகை – வேட்டை பாக்கு
உடல் நல நன்மைகள்

மனச்சோர்வு இந்த பூவில் ஹைபரிசின் என்ற பொருள் உள்ளது. இந்த ரசாயானம் நம்மளுக்கு ஏற்படும் மனச்சோர்வை போக்க உதவுகிறது. இதை நீங்கள் சாப்பிட்டு வந்தால் பதட்டம், பயம், சோர்வு, அனிஸிட்டி போன்ற தொல்லைகள் இருக்காது.

மாதவிடாய் அறிகுறிகள்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மனநிலை மாற்றம், வெள்ளைப்படுதல், பசி, இன்ஸோமினியா, தலைவலி, குழப்பம் மற்றும் பிற அறிகுறிகளைப் போக்க பெண்களுக்கு உதவுகிறது.

காயங்களை குணப்படுத்துதல்

இந்த பூவிலிருந்து தயாரிக்கப்படும் களிம்பு மற்றும் எண்ணெய் காயங்கள் மற்றும் தழும்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்க பயன்படுகிறது.

இதர நன்மைகள் கீழ்க்கண்ட பிரச்சனைகளையும் சரி செய்கிறது. கவனக் பற்றாக்குறை, மூளை கட்டிகள், ஒற்றைத் தலைவலி, ஹெர்பஸ் சரும எரிச்சல், இரத்த குழாய்களில் அடைப்பு, பல் வலி, காயங்கள், தசை வலி, வயிற்று வலி, போன்றவற்றிற்கு அரு மருந்து இந்த வேட்டை பாக்கு செடி.
மேலும் அறிய .............. http://morning9.com/?p=1208

தினம் ஒரு மூலிகை – பலாசு மரம்பயன்கள்இதன் விதைகள் பூச்சிகளை அகற்றும். வாயுக் கோளாறு மற்றும் மூலவியாதியை குணப்படுத்தும். ச...
18/05/2022

தினம் ஒரு மூலிகை – பலாசு மரம்
பயன்கள்

இதன் விதைகள் பூச்சிகளை அகற்றும். வாயுக் கோளாறு மற்றும் மூலவியாதியை குணப்படுத்தும். சீழ் வடிவதை நிறுத்தும். இணைவிழைச்சியூட்டும். துவா்ப்பு சுவையுடையது. இதன் இலைகள் ஜீரத்தைப் போக்கும். இதன் பட்டை கோந்து துவா்ப்புள்ளது. மேலும் பேதி மற்றும் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

அதிக வேலை பளுவினால் உண்டாகும் கவனச் சிதறல், முதுகுவலி, எலும்பு முறிவுகள், செரிமான தொந்தரவுகள், கல்லீரல் செயல்பாடுகள், மண்ணீரல் கோளாறுகள் நீக்கும் ஆற்றல் கொண்டவை.

இதன் இலை மற்றும் மலா்களை வெந்நீரில் போட்டு சூடாக்கி அடிவயிற்றில் கட்டினால் நாள்பட்ட வயிற்று வலி மற்றும் வீக்கம் பறந்தோடும். மேலும் அனைத்து வித சிறுநீரகப் பிரச்சினைகளும் தீரும்.

இதன் மலா்களைக் காய வைத்து தேநீா் தயாாித்து பருகினால் நீரிழிவு நோய் தீருவதுடன். சிறந்த மலமிளக்கியாகவும் விளங்கும்.

இதன் விதையிலிருந்து தயாாிக்கப்படும் எண்ணெய் தோல் நோய்களையும், கண் நோயையும் போக்கும். வாத நோய் உள்ளவா்கள் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கை, கால்கள் வலுபெறும்.
மேலும் அறிய ........... http://morning9.com/?p=1205

13/05/2022

தினம் ஒரு மூலிகை – நீா் முள்ளி
மருத்துவப் பயன்கள்-:

பொதுவான குணம். சிறு நீரைப் பெருக்கும். வியர்வையை மிகுவிக்கும். உடலை ஊட்டம் பெற வைக்கும். வெண் குட்டம், மேகநீர், சொறி சிரங்கு, சிறு நீர் தாரை எரிச்சல், தாதுக்கள் அழுகி விடுவதைத் தவிர்க்கும், தலைவலி, காய்ச்சல், மலச்சிக்கல் சரியாகும். குளிர்ச்சி தரும்.

உடல் பருமன் குறைய

நீர்முள்ளிச் சமூலம் நன்கு அலசி இடித்து 200 கிராம், 2 லிட்டர் நீரில் போட்டுச் சோம்பு, நெருஞ்சில் விதை, தனியா வகைக்கு 50 கிராம் இடித்துப் போட்டு, அரை லிட்டராகக்காய்ச்சி (நீர்முள்ளி குடிநீர்) வேளைக்கு 125 மில்லி வீதம் தினம் 4 வேளை கொடுத்துவர உடல் பருமன் குறையும்.

சிறுநீரக பிரச்சினைக்கு

வாத வீக்கம், கீல் வாதம், நரித்தலைவாதம், நீர் வழி அடைப்பு, நீர் வழி ரணம், அழற்சி 3 நாளில் தீரும். 10, 12 நாள் கொடுக்க மகோதரம் தீரும்.

இந்த நீா்முள்ளி விதை உடலுக்கு குளிா்ச்சியைத் தரக்கூடியது. உடல் சூட்டினால் ஏற்படும் நீா் சுருக்கு, நீா்க்கடுப்பு மற்றும் நீா் எாிச்சல் போன்ற சிறுநீரக தொற்று நோய்களை சரி செய்கிறது. மேலும் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, சிறுநீரகத்தை வலுப்படுத்தும் சக்தி இந்த நீா்முள்ளி விதைக்கு உண்டு. சிறுநீரகக் கொளாறை, சரி செய்து சிறுநீரகத்தை வலுப்படுத்தும். கல்லடைப்பை சரி செய்யும்.

ஒரு லிட்டர் கழுநீரில் நீர் முள்ளி உலர்த்திய இலை 100 கிராம், நாயுருவி 50 கிராம் போட்டு இரண்டு நாள் ஊறவிடவும். இக்குடிநீரை மூன்று நாள் இரு வேளை 50 மி.லி. கொடுக்கவும். இதனால் நீரடைப்பு கல்லடைப்பு, உடலில் ஏற்படும் எல்லா வீக்கமும் நீர்க் கோர்வையும் குணமாகும்.

வயிற்று பிரச்சினைக்கு

விதையைப் பொடித்து வேளைக்கு அரை முதல் 1 கிராம் வரை பாலில் கலந்து சாப்பிட்டு வர மேகம், வயிற்றுப் போக்கு, நீர் கோவை, இரைப்பிருமல், ஆகியவை தீரும். இரத்தத்தினை தூய்மைப்படுத்தும்.
வேர் மட்டும் 10 பங்கு கொதி நீரில் போட்டு 24 மணி நேரம் ஊற வைத்துத் தெளிவு நீரை 2 மணிக்கு ஒரு முறை 30 மி.லி. கொடுத்துவர நீர்க்கோவை, மகோதரம் தீரும்.

உடல் பலம் பெற

நீர் முள்ளி விதை 40 கிராம் , நெருஞ்சில் விதை 20 கிராம் , வெள்ளரிவிதை 10 கிராம் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி, பனங்கற்கண்டு கலந்து 1 வாரம் காலை மாலை கொள்ள துர் நீர் கழியும் . நீர் எரிச்சல், மேக நீர், வாத நீர், உடல் காங்கை நீங்கிச் சப்தத்தாதுக்களும் வலுவடைந்து உடல் பலம் உண்டாகும்.

இந்த நீா்முள்ளி விதைப் பொடி, நெரிஞ்சில் விதைப்பொடி, வெள்ளரி விதைப்பொடி இந்த மூன்றையும் சம அளவு எடுத்து கசாயம் போல் அருந்தி வந்தால் கல்லடைப்பு நீங்கும். உடல் வலுப்படும்.

அதுமட்டுமல்லாமல் உடலில் உள்ள கெட்ட நீா்கள் வெளியேறி உடல் வளம் பெறும். இதன் விதை ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
மேலும் அறிய ................... http://morning9.com/?p=1201

தினம் ஒரு மூலிகை – விஷ்ணுக் கிரந்திமருத்துவப் பயன்கள் -;விஷ்ணுக்கிரந்தி நோய் நீக்கி உடல் தேற்றுதல், காய்ச்சல் போக்குதல்,...
21/04/2022

தினம் ஒரு மூலிகை – விஷ்ணுக் கிரந்தி
மருத்துவப் பயன்கள் -;

விஷ்ணுக்கிரந்தி நோய் நீக்கி உடல் தேற்றுதல், காய்ச்சல் போக்குதல், வாத நோய் குணமாக்கும், கோழையகற்றுதல், வியர்வை பெருக்குதல்,

தாது பலமளித்தல் மலர்ச்சிக்கலைப் போக்கும். இதன் எண்ணெய் பெண்கள் முடி வளர உபயோகிப்பர். இதன் வேர் குழந்தைகளின் காச்சலைப் போக்கும். மன அமைதியைக் கொடுக்கும். இதன் இலையை சிகரெட்டாகச் செய்து புகையை உள இழுத்தால் தொடர் இருமல், ஆஸ்த்துமா குணமாகும். இது தொழுநோயைக் குணப்படுத்தும். ஆகிய மருத்துவ குணங்கள்யுடையது.

விஷக் காய்ச்சல் குணமாக

சித்த மருத்துவத்தில் 64 வகையான காய்ச்சல் மனிதனை தாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கடுமையான விஷக்காய்ச்சலுக்கு விஷ்ணு கிரந்தியை தான் பயன்படுத்தி வந்தாா்கள்.

விஷ்ணுகிரந்தி இலை, ஆடாதோடை இலை, துளசி, தும்பை, வெள்ளறுகு ஆகியவற்றை சமஅளவு சோ்த்து புட்டு அவிப்பது போல் அவித்து எடுத்து அதனை சாறு பிழிந்து 15மிலி அளவு காலை மாலை என இரு வேளை சாப்பிட விஷ காய்ச்சல் குணமாகும்.

வாத நோய் குணமாக

விஷ்ணுகிரந்தி செடி (செடி, வோ், பூ) அனைத்தையும் நிழலில் உலா்த்தி பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து தினமும் காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட வாதம், பித்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். இளைப்பு, எலும்புருக்கி நோய்கள் அனைத்தும் குணமாகும்.

விஷ்ணுக்கிரந்தி 5 கிராம் சமீலத்தைப் பால் விட்டு மையாய் அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டிக் காலை, மதியம், மாலை 3 வேளையும்

கொடுத்து வரச் சீதபேதி, காய்ச்சல், மேகம், என்புருக்கி, இரைப்பு, இருமல், ஈளை, வாத, பித்தத் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீரும்.

குழந்தை பேறு உண்டாக

விஷ்ணு கிரந்தி ஓரிதழ் தாமரை இரண்டையும் பால் சோ்த்து அரைத்து மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் சாப்பிட குழந்தை பேறு உண்டாகும்.
மேலும் அறிய .................. http://morning9.com/?p=1196

தினம் ஒரு மூலிகை – அரிவாள்மனைப் பூண்டுமருத்துவப் பயன்கள் -:இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபகச் சக்தி...
16/04/2022

தினம் ஒரு மூலிகை – அரிவாள்மனைப் பூண்டு
மருத்துவப் பயன்கள் -:

இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபகச் சக்தியை கூட்ட வல்லது. சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது.

ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வறட்சி, கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.

இதன் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து பொடி செய்து சர்க்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.

இதன் வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தித் தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.

இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது உப்பு, புளி நீக்க வேண்டும்.

‘வெட்டுக்காயத்தை விரவி லுர்த்திவிடுந்
துட்டக் கடுவோட்டுத் தோன்றிமிகக் கெட்ட
பிரிவாற் றலையைப் பினக்கும் வலி நீக்கு
மரிவாள் மூக்குப் பச்சிலை.’

அரிவாள் மூக்குப் பச்சிலையானது ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தைச் சீக்கிரத்தில் ஆற்றுவது மட்டுமல்லாமல் மகா விஷத்தையும் உதிரக் கெடுதியால் பிறந்த சிரஸ்தாப ரோகத்தையும் விலகும் என்க.

அரிவாள் மூக்குப் பச்சிலையைக் காரமில்லாத தட்டை அம்மிக் கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும். இந்த இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் அளவு வீதம் காலை மாலை என 3 நாள் கொடுத்து அதனுடன்பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.
மேலும் அறிய .............. http://morning9.com/?p=1193

தினம் ஒரு மூலிகை – அழிஞ்சில்மருத்துவப் பயன்கள் -:நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை ...
08/04/2022

தினம் ஒரு மூலிகை – அழிஞ்சில்
மருத்துவப் பயன்கள் -:

நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது. அழஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.

விஷ கடி மற்றும் புண் குணமாக

வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய் ) தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.

அழிஞ்சி இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.

தொழு நோய் சரியாக

சிவப்பு அழிஞ்சில் வேர் பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.

அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.

‘ அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்ந்து
மொழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் – விழுஞ்சூழாங்
குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
திட்ட மெனவறிந்து தேர். ‘

அழிஞ்சில் மரமானது வாத கோபம், கப தோஷம், சீழ்வடியும் பெருநோய் இவற்றை நீக்கும். ஆனால் பித்தத்தை உபரி செய்யும்.

‘ பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
செல்லாக் சிரந்திரணம் சேர் நோய்க-ளெல்லாமும்
அங்கோலங் காணில் அரந்தை செய் நோய்களெல்லாம்
பொங்கோல மிட்டோடிப் போம். ’

அங்கோலம் என்று சொல்லப்பட்ட அழிஞ்சி கபத்தினால் ஜீவ ஜந்துக்களின் பற்கடியால் நேர்ந்த எல்லா விஷ தோஷங்களும், பேதி, கிரந்தி, வீரணம் ஆகியவை போம்.

அழிஞ்சில்வேர் விழுதி வேர் இவற்றைச் சமனெடையாகக் கொண்டு சிறு துண்டாக நறுக்கி 5-6 நாள் நிழலில் உலர்த்தி அடியில் பெரிய மட்கலத்தில் போட்டு வாய் மூடி ஏழு சீலை செய்து முறைப்படி குழித்தைலமிறக்கவும். இத்தைலத்தை வடிகட்டி சீசாவில் வைத்துக் கொண்டு புறை கொண்ட ரணத்தில் செலுத்திக் கட்டுக் கட்டிக் கொண்டு வர விரைவில் ஆறும்.

அழிஞ்சி வேர்ப்பட்டைப் பொடியில் கசப்பும், குமட்டலும், காரமும் உண்டு. இரத்த அதிகாரம், கிருமி ரோகம், குட்டம், விரணம், தோல்ரோசம், சுரம், விடாச்சுரம், வயிற்று உப்பிசம், வயிற்று நோய், விசக்கடி முதலியன போக்கும். வேர்பட்டை சூரணம் குட்டம், வாதரோகம், மேகவாயு பிடிப்புகளுக்கு நன்று.
மேலும் அறிய .............. http://morning9.com/?p=1190

Address

Madurai
625014

Alerts

Be the first to know and let us send you an email when Morning9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram