21/01/2019
*மருத்துவம் - வயிற்று நோய்கள்*
1). சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, திரிகடி அளவு பசு வெண்ணெயில் கலந்து உண்ண எரி குன்மம் தீரும்.
2). சீரகம், சுக்கு, மிளகு, கறியுப்பு இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி, திரிகடி அளவு எலுமிச்சம் பழச்சாற்றுடன் கொடுத்து வர வாயு, குன்மம் எனும் வயிற்றுவலி, பசியின்மை தீரும்.
3). வரிக்குமட்டிச் சாறு 1 லிட்டர் எடுத்து அதனுடன் சோற்றுப்பு 1/2 கிலோ கலந்து பிசறி வெயிலில் வைத்து நன்றாக உலர்த்தி எடுத்து, பின் நன்றாக வறுத்து எடுத்துப் பொடியாக்கி, மோர் அல்லது வெந்நீர் இவற்றில் ஏதாவது ஒன்றில் தினசரி இரண்டு வேளை கலந்து கொடுத்து வர வயிற்றுவலி, மலக்கட்டு, வாயு தீரும்.
4). 100 கிராம் கசகசாவைப் பாலில் அரைத்து சர்க்கரை சேர்த்து தினசரி காலை மாலை 4 நாட்கள் சாப்பிட்டு வர குன்மம், குடல்புண், வாயு, வேக்காடு, சீதபேதி, வாய் நாற்றம் ஆகியவை தீரும்.
5). வெள்ளாட்டுப் பால் 300 மில்லி, தேங்காய்ப் பால் 300 மில்லி, இந்துப்பு 8 கிராம், திப்பிலி 8 கிராம் - அனைத்தையும் கலந்து தினசரி 3 வேளை உட்கொண்டு வர, எரி குன்மம், சுவையின்மை, பசியின்மை, மாந்தம் தீரும்.
6). சுக்கு, மிளகு, பெருங்காயம், சீரகம், இந்துப்பு, உலர்ந்த ரோஜாப்பூ, இவற்றை நன்றாக சுத்தம் செய்து, சம அளவு எடுத்த தனித்தனியே பொடித்து ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு, எலுமிச்சை சாறு மூழ்கும் அளவு விட்டு ஊறவைத்து, மறுநாள் அரைத்து உலர வைத்து, அதற்கு அடுத்த நாள் இஞ்சிச்சாறு விட்டரைத்து, சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக்கி, பசியின்மை, புளியேப்பம், உணவில் வெறுப்பு, செரியாமை போன்றவற்றிற்கு, இதில் 2 மாத்திரைகளை மென்று வெந்நீர் அருந்தி வர, மேற்கண்ட வியாதிகள் விலகும்.
7). இஞ்சி, புதினா, எலுமிச்சம் பழம் ஆகியவற்றின் சாறு, தேன் - இவை வகைக்கு 1/4 லிட்டர் எடுத்து காய்ச்சி 4-ல் ஒரு பாகமாக சுண்ட வைத்து, சூடு ஆறியபின் எடுத்து, காலை, மாலை 1/2 ஸ்பூன் வீதம் உண்டு வர வாயுக்களால் ஆன வயிற்று வலி உடனே நிற்கும்.
8). குழந்தைகளுக்கு பச்சை நிறமாக மலம் போவதை நிறுத்த மஞ்சளும் வேப்பந்தழையும் சேர்த்து அரைத்து, சிறு உருண்டையாக உருட்டி ஆசன வாயில் வைக்க வேண்டும்.
9). சிறுவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கு, சோம்பு, எலிப்புழுக்கை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, இளம் சூட்டுடன் அதை தொப்புளுக்குக் கீழே பூசி, அதன் மேல் முள்ளங்கி அல்லது வெற்றிலை வைய்துக் கட்டி விட வேண்டும். 1 1/2 நாழிகையில் மலம் வெளியேறி விடும்.
10. அடிக்கடி மலம் கழிந்தால், மாமரப் பட்டையை மோர் விட்டரைத்து, தொப்புளைச் சுற்றி பற்று போடவும்.
இதேபோல் நெல்லிக்காயை நெய்யில் அரைத்து தொப்புளைச் சுற்றி பூசலாம்.
[குறிப்பு: திரிகடி - மூன்று விரலளவு
மூலிகை சுத்தி:
சுக்கு: மேல் தோல் நீக்கி சுண்ண நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து உலர்த்தவும்.
பெருங்காயம்: பொரித்தெடுத்துக் கொள்ளவும்
மிளகு: (1) தண்ணீரில் ஒரு நாள் ஊற வைக்கவும். (2) சிறுதீயில் வாசனை கிளம்ப வறுத்தெடுக்கவும்.
கிராம்பு: மொட்டுப் போல் உள்ள பூவை எடுத்தெறியவும்.
திப்பிலி: சித்திரமூலக் கியாழத்தில் ½ நாள் ஊற வைத்து உலர்த்த சுத்தியாகும்]
உங்கள் ஆரோக்கியத்தில் எப்போதும் அக்கறையுள்ள...Agathiyar Ligament care centre, Madurai