Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship

Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship THE OFFICIAL FACEBOOK PAGE OF SHARON GLOBAL REVIVAL MINISTRIES & NAVI MUMBAI PRAYER FELLOWSHIP

Brief Information about Dr. R S A Williams – Founder & President of SGRM/ NMPF
(An anointed servant of God carrying Lord’s word in Tamil & English across the Globe)

- Motivational Speaker to Global Audience on Management Subjects (with Biblical base)
- Anointed Speaker on Evangelism and Spiritual Topics
- Faculty in Seminars/ Retreats and Conventions with the guidance of Holy Sp

irit
- Management Expert specialised in Global Logistics

Spiritual Background and Services to the Lord with Global Span Coverage
• Commenced Lord’s ministry during the year 1988
• Celebrating completion of the 25th year of ministry in this blessed year 2013
• Balanced the ministry with Corporate Career judiciously for 20 years and entered into full time ministry during the year 2007 spanning 6 years now (25 years of glorious ministry in His Vineyard). We are into –
• Ministry among corporate personnel/ politicians & bureaucrats
• Ministry among churches across nations without denominational barrier
• Miracle all night prayer ministry
• Bible study and seminar ministry
• Ministry of personal evangelism
• Ministry among families/ women/ youth & children
• E-mail ministry
• E-magazine ministry
• Television ministry
• Crusade ministry
• Hospital ministry
• Cottage prayer ministry
• Travelled and ministered in more than 17 countries
• Carrying Lord’s word across India and around the Globe with Love and Compassion

Educational Background
• Bachelors Degree in Law/ Bachelors Degree in Arts
• Masters Degree in Business Management
• Masters Degree in Theology
• PG Diploma in Transport Management/ PG Diploma in Personal Management & Industrial Relations
• Honorary Doctorate Degree

Service Background with Industries in India & abroad
• Commenced corporate career with Tata Group immediately after completion of Education and had an opportunity serving with prominent Blue Chip companies by availing more exposure in Logistics field holding designations right from OFFICER to EXECUTIVE DIRECTOR.
• The Industries served are -
Tea Industry
Paper Industry
Steel Industry
Shipping Industry
Logistics Industry
Media Industry
• Served in Belgium (Europe) as a Vice President/ Director Europe Operations for an Indian MNC and travelled extensively around the world spanning more than 16 countries.
• Left worldly job during the year 2007 and serving the Lord within India and across the globe thereafter on a full time basis. Address & Contact Coordinates
..... Presently settled in Mumbai by having base in Kharghar, Navi Mumbai - Maharastra

Dr. R S A Williams - Founder & President
Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship
C-1002, Tharwani Heritage, Sector 7, Kharghar, Navi Mumbai – 410 210 Tel. +91 22 2774 9200
Mob. +91 99672 28488
E-mail: rsawilliams@gmail.com nmpf94@gmail.com
FB: www.facebook.com/sgrm.nmpf

⚫⚪⚫1929-வது நாளின் காலைத்தியானம் .... 28/03/2026 !!!இந்தக் காலைவேளையில், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்பட...
27/03/2026

⚫⚪⚫1929-வது நாளின் காலைத்தியானம் .... 28/03/2026 !!!

இந்தக் காலைவேளையில், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" ...... "I CONSIDER THAT OUR PRESENT SUFFERINGS ARE NOT WORTH
COMPARING WITH THE GLORY THAT WILL BE REVEALED IN US” என்று (ROMANS) ரோமர் 8:18-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

தங்கள் வாழ்க்கைப் பாதையில், பாடுகளை ஒருவரும் விரும்புவதில்லை. ஆனால், பாடுகள் இல்லாத மனிதர் யாருமில்லை. பாடுகளின் பின்னால் ஏதோ நன்மையான ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

வேதத்திலே தங்கள் வாழ்க்கையில் சாதனைகளைப் படைத்த தேவமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இந்த உயர்வை எட்ட அவர்கள் பட்ட பாடுகள் விரிவாக கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆம், 2 கொரிந்தியர் 4:17-ல் “மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” என்று வாசிக்கிறோம்.

இந்த பூமிக்குரிய துன்பங்கள் தற்காலிகமானவை. தேவன் வெளிப்படுத்தப்போகும் பரலோக மகிமை நித்தியமானது. உலக பாடுகளுக்கும், பரலோக மகிமைக்கும் எந்தவித ஒப்பீடும் இல்லை.

ஆகவே, 1 பேதுரு 4:13-ல் கூறப்பட்டபடி “கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்”

எனவே பிரியமானவர்களே, நம் வாழ்க்கையில் கடந்து வருகிற பாடுகளையும் உபத்திரவங்களையும் கண்டு சோர்ந்து போகாதிருப்போம். நிச்சயமாகவே நித்திய மகிமையைப் பெற்று அனுபவிப்போம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, இக்காலத்துப் பாடுகள் இனி எங்களில் வெளிப்படும் மகிமையான வாழ்வுக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488.
7400472200 WhatsApp

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🟣⚪🟣 1928-வது நாளின் காலைத்தியானம் (27/03/2026) !!!இந்தக் காலைவேளையில், "நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெ...
27/03/2026

🟣⚪🟣 1928-வது நாளின் காலைத்தியானம் (27/03/2026) !!!

இந்தக் காலைவேளையில், "நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்" ...... "FOR YOU WILL SPREAD OUT TO THE RIGHT AND TO THE LEFT” என்று (ISAIAH) ஏசாயா 54:3-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இன்று மனிதர்கள், தங்கள் வாழ்விலே வேலை, தொழில், செல்வம், படிப்பு, குடும்பம் என அனைத்து எல்லைகளிலும் பெருக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆம், சர்வவல்லமையுள்ள தேவன் அவருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லா விதத்திலும் பெருகி சந்தோஷமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்று நம்மை ஆசீர்வதிக்கிறார்.

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினதினால், ஜலப்பிரளயத்தின் மூலமாக தேவன் ஜனங்களை அழித்துப் போட்டார். நீதிமானும், உத்தமனுமாய் வாழ்ந்த நோவாவும், அவன் குடும்பத்தினர் மட்டுமே காக்கப்பட்டார்கள்.

பின்பு, தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” என்றதாக ஆதியாகமம் 9:1-ல் பார்க்கிறோம்.

“நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்” என்று எபிரேயர் 6:14-ன் மூலமாக கர்த்தர், நம்மையும் உற்சாகப்படுத்துகிறார்.

உலகப்பிரகாரமாக மட்டுமல்ல, ஆவிக்குரிய வாழ்வில் நம் தாலந்துகள், வரங்கள், கிருபைகள் மற்றும் ஊழியங்களிலும் நாம் பெருக வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

எனவே பிரியமானவர்களே, இதுவரை நாம் எடுத்த முயற்சிகளில் எந்தவொரு பெருக்கத்தையும் காணாதபடி சோர்ந்து போயிருப்போமானால், கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தில் பெருகுவோம். நிச்சயமாகவே கர்த்தர், நம்மை ஆசீர்வதித்து, பெருகச்செய்வார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருக நீர் எங்களுக்கு உதவிசெய்யும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488.
7400472200 WhatsApp

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🟡⚪🟡1927-வது நாளின் காலைத்தியானம் ... 26/03/2026) !!!இந்த காலைவேளையில், “கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கு...
25/03/2026

🟡⚪🟡1927-வது நாளின் காலைத்தியானம் ... 26/03/2026) !!!

இந்த காலைவேளையில், “கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்" .... “THE WILL OF THE LORD WILL PROSPER IN HIS HAND" என்று (ISAIAH) யோசுவா 53:10-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நமது தேவனாகிய கர்த்தர், நமக்கென்று என்ன சித்தம் வைத்திருக்கிறாரோ அவைகள் யாவும் நம் வாழ்க்கையில் அவருடைய கையினாலே வாய்க்கும்.

நம் வாழ்வின் அனைத்து காரியங்களையும், நமது சுயவிருப்பத்தின்படி திட்டமிட்டு தீர்மானிப்பதல்ல, தேவ சமூகத்தில் ஒப்புக்கொடுத்து காத்திருக்கும்போது, அவருக்குச் சித்தமாயிருக்குமானால் அவர், அதை வாய்க்கப் பண்ணுவார்.

“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்” என்று I யோவான் 5:14-ல் பார்க்கிறோம்.

தேவனுடைய சித்தத்தை அறியாமல், இன்று அநேகருடைய வாழ்க்கை கவலையும், கஷ்டமும் நிறைந்ததாய் காணப்படுகிறது. தேவனுடைய பூரண சித்தத்தை அறிந்தே நாம் செயல்பட வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார்.

இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவின் சித்தத்தை நிறைவேற்றியது போல, நாமும் தேவ சித்தத்தை அறிந்து அதை நிறைவேற்றுவது தேவனுக்கு உகந்ததாகும். “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது” என்று இயேசுகிறிஸ்து ஜெபித்து நமக்கு ஒரு மாதிரியை வைத்துப்போனார்.

எனவே பிரியமானவர்களே, நமது குடும்ப வாழ்க்கை, எதிர்காலம், வேலை, தொழில் எல்லாவற்றிலும் கர்த்தரே ஆளுகை செய்து தமது தயவுள்ள சித்தத்தை நிறைவேற்ற, நம்மை அர்ப்பணித்து ஜெபித்து ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்வோம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய உமக்குச் சித்தமானது உமது கையினால் வாய்க்கும் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488.
7400472200 WhatsApp

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai Indiaஅ

🔴⚪🔴1926-வது நாளின் காலைத்தியானம் ... 25/03/2026) !!!இந்த காலைவேளையில், “கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்" ...
24/03/2026

🔴⚪🔴1926-வது நாளின் காலைத்தியானம் ... 25/03/2026) !!!

இந்த காலைவேளையில், “கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்" .... “THE LORD WILL DO AMAZING THINGS AMONG YOU" என்று (JOSHUA) யோசுவா 3:5-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நம் நடுவில் இருக்கும்போது, இயற்கை, உபத்திரவம், போராட்டங்கள்
எல்லாவற்றிலுருந்தும் நம்மை பாதுகாத்து, மிகுந்த அற்புதங்களை நம் வாழ்விலே செய்வார்.

“நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” என்று லேவியராகமம் 26:12-ல் கூறியுள்ளார்.

இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைத்தனத்திலிருந்து, வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அருகில் வந்தபோது, யோர்தான் நதி அவர்களுக்கு முன்பாக காணப்பட்டது. இலட்சக்கணக்காக ஜனங்கள் அந்த ஆழமான நதியை கடக்க வேண்டியதாயிருந்தது.

யோசுவா ஜனங்களை நோக்கி: “உங்களைப் பரிசுத்தம்பண்ணிக் கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்”என்றான். இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டதினாலே கர்த்தர் அவர்கள் நடுவில் அற்புதங்களைச் செய்ய ஆயத்தமாயிருந்தார்.

யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, அந்த தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாகக் குவிந்தது. ஜனங்கள் வெட்டாந்தரையிலே நடப்பதைப்போல நடந்து, அந்த நதியைக் கடந்து போனார்கள். எத்தனை பெரிய அற்புதம்.

எனவே பிரியமானவர்களே, நாமும், நம்மை ஆராய்ந்து பார்த்து பாவங்களை அறிக்கையிட்டு, பரிசுத்தமாக்கபட தேவனுக்கு முன்பாக நம்மை அர்ப்பணிப்போம். அவர் நம் நடுவில் இருந்து, அற்புதங்களைச் செய்து நம்மை வழிநடத்துவார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர் எங்கள் நடுவில் அற்புதங்களைச் செய்வீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488.
7400472200 WhatsApp

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟠⚪🟠1925-வது நாளின் காலைத்தியானம் ... 24/03/2026) !!!இந்த காலைவேளையில், “கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி த...
24/03/2026

🟠⚪🟠1925-வது நாளின் காலைத்தியானம் ... 24/03/2026) !!!

இந்த காலைவேளையில், “கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்" .... “GOD HAS CHOSEN THEE TO BE A SPECIAL PEOPLE UNTO HIMSELF" என்று (DEUTERONOMY) உபாகமம் 7:6-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

தேவனாகிய கர்த்தர் நம்மீது கொண்டுள்ள அன்பினால் பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும், நம்மை முன்குறித்து, தமக்குச் சொந்தமாக்கி, பரிசுத்தமான ஜனமாகத் தனிமைப்படுத்தி அவருக்காகப் பிரகாசிக்க தெரிந்துகொண்டார்

நாம் உண்மையுள்ளவர்கள் அல்லது திறமையானவர்கள் என்றோ நம்மை தெரிந்தெடுக்காமல், அவர் பரிசுத்தராயிருக்கிறபடியால் நாமும் உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, பரிசுத்தமாய் வாழவே நம்மை அழைத்திருக்கிறார்.

இஸ்ரவேல் ஜனங்கள் அநேக முறை கர்த்தரை விட்டு தூரம் சென்றபோதிலும், அவர் தமது அளவற்ற கிருபையினால், அவர்கள் மனம் திரும்ப சந்தர்ப்பங்களைக் கொடுத்துக்கொண்டே வந்தார். ஏனெனில் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி அவர்களை தெரிந்துகொண்டார்.

“நீங்கள் என்னை தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;......” என்று யோவான் 15:16-ல் இயேசு கூறியுள்ளார்.

தாவீது, ஆடு மேய்க்கவே தகுதிபெற்றவனாக குடும்பத்தாரின் கண்களுக்குத் தெரிந்தான். ஆனால் கர்த்தரோ, அவனை சமஸ்த இஸ்ரவேலின் ராஜாவாக தெரிந்து கொண்டார் என்று 1சாமுவேல்16-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.

ஆம், ஆகாய் 2: 23-ல் “நான்…உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன்… நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்” என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

எனவே பிரியமானவர்களே, கர்த்தர் நம்மைத் தெரிந்தெடுத்ததின் நோக்கத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுவோம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களை நீர் உமக்கு சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488.
7400472200 WhatsApp

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🟢⚪🟢1924-வது நாளின் காலைத்தியானம்  23/03/2026) !!! இந்த காலைவேளையில், “நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர் பாய்ச்சுகிறவனாலும்...
22/03/2026

🟢⚪🟢1924-வது நாளின் காலைத்தியானம் 23/03/2026) !!!

இந்த காலைவேளையில், “நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை,
விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்" .... “SO NEITHER THE ONE WHO PLANTS NOR THE ONE WHO WATERS IS ANYTHING, BUT ONLY GOD, WHO MAKES THINGS GROW" என்று (1 CORINTHIANS) 1 கொரிந்தியர் 3:7-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

ஒரு விவசாயி, விதை விதைக்கலாம், கன்றுகளை நடலாம், நன்கு நீர்ப்பாய்ச்சலாம், ஆனால், அது செடியாக வளர்ந்து, விளைச்சலைக் கொடுப்பது தேவனின் செயல் என்பதை நாம் அறிவோம். மனிதன் வெறும் கருவியே என்று நாம் உணர்த்தப்படுகிறோம்.

“விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்” என்று 2 கொரிந்தியர் 9:10-ல் கூறப்பட்டுள்ளது.

நமது தொழில், வேலை மற்றும் ஊழியத்தின் காரியங்கள் எதுவாக இருந்தாலும், கர்த்தர் காண்பிக்கிற இடத்தில் விதைப்போமானால் அதாவது உழைப்போமானால், கர்த்தர் அதை முப்பதும், அறுபதும், நூறுமாகவும் பெருகப்பண்ணுவார்.

ஆம், தேசமே பஞ்சத்தில் உழன்ற காலத்தில் “ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்” என்று ஆதியாகமம் 26:12-ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, நமது சுயபெலத்தை நம்பாமல், தேவனே நமது பிரயாசங்கள் யாவையும் வாய்க்கப்பண்ணுவார் என விசுவாசிப்போம். நல்ல விளைச்சலை நாம் அறுவடை செய்ய தேவன் உதவி செய்வார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நடுகிற அல்லது நீர்ப்பாச்சுகிற எங்களால் ஒன்றுமில்லை என்றும், விளையச்செய்கிற தேவனாகிய உம்மாலே மாத்திரமே எல்லாம் ஆகும் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488.
7400472200 (Whats App)

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India

🔵⚪🔵1923-வது நாளின் காலைத்தியானம் ... 22/03/2026 !!!இந்த ஓய்வு நாளின் காலைவேளையில், "அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது" …...
22/03/2026

🔵⚪🔵1923-வது நாளின் காலைத்தியானம் ... 22/03/2026 !!!

இந்த ஓய்வு நாளின் காலைவேளையில், "அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது" …... "HIS NAME ALONE IS EXALTED" என்று (PSALM) சங்கீதம்148:13-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

வேதாகமத்தில் கர்த்தராகிய தேவனுக்குப் பல நாமங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவருடைய நாமமே வானத்திற்கும் பூமிக்கும் மேலானது, மிக உயர்ந்தது என்று இந்தநாளின் தியானபகுதி கூறுகிறது.

கோலியாத் பட்டயம், ஈட்டி, கேடகம் ஆகியவற்றை கொண்டு இஸ்ரவேலரோடு போரிட வந்தான். ஆனால் ஆயுதங்கள் எதுவுமின்றி வெறும் கவண் மற்றும் ஐந்து கூழாங்கற்களைக் கொண்டு அவனோடு போரிடவந்த தாவீதைப் பார்த்து கோலியாத் சபித்தான்.

அதற்குத் தாவீது: “நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” என்று சொன்னான். அப்படியே தாவீது, பெலிஸ்தனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான் என்று 1 சாமுவேல் 17:4-50-ல் பார்க்கிறோம்.

நமது வாழ்க்கையில் வரும் கோலியாத் போன்ற பெரிய பிரச்சினைகளைக் கண்டு அஞ்சாமல், தாவீதைப் போல கர்த்தரின் நாமத்தை உச்சரித்து, முன்செல்வோம். நிச்சயமாகவே ஜெயம் பெறுவோம்.

“நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை”என்று அப்போஸ்தலர் 4:12-ல் வாசிக்கிறோம். ஆம், பாவத்திலிருந்து விடுதலை பெறவும், நித்திய ஜீவனைப் பெறவும் ஒரே வழி இயேசுவின் நாமம் மட்டுமே.

எனவே பிரியமானவர்களே, எல்லாவற்றுக்கும் மேலான உன்னத நாமத்தை உறுதியாய் நம்புவோம். விடுதலை நிச்சயம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய உம்முடைய நாமம் மாத்திரமே எங்கள் வாழ்வில் உயர்ந்து காணப்படும் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488 ... 7400472200 (WhatsApp).

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🟠⚪🟠1922-வது நாளின் காலைத்தியானம் ... 21/03/2026 !!!இந்த காலைவேளையில், "நான் அதற்குச் (உன்னைச்) சுற்றிலும் அக்கினி மதிலாய...
21/03/2026

🟠⚪🟠1922-வது நாளின் காலைத்தியானம் ... 21/03/2026 !!!

இந்த காலைவேளையில், "நான் அதற்குச் (உன்னைச்) சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் (உன்) நடுவில் மகிமையாக இருப்பேன்" …... "AND I MYSELF WILL BE A WALL OF FIRE AROUND IT (YOU), AND I WILL BE ITS (YOUR) GLORY WITHIN" என்று (ZECHARIAH) சகரியா 2:5-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, எந்தவொரு நாச மோசமோ நெருங்க முடியாதபடி பாதுகாக்கிறார். அக்கினி என்பது சத்துருக்களுக்கு பயங்கரமாகவும், தேவபிள்ளைகளுக்குப் பாதுகாப்பாகவும் இருக்கும்.

சீரிய இராஜா, எலிசா தீர்க்கதரிசியை பிடிக்கும்படி, குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான். அதை கண்ட எலிசாவின் வேலைக்காரன்: “ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம்”என்றான். அதற்கு எலிசா: “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்றான்.

எலிசா விண்ணப்பம் பண்ணினபோது, கர்த்தர் அந்த வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான் என்று 2 இராஜாக்கள் 6:15-17-ல் பார்க்கிறோம். ஒருவரும் எலிசாவை தொட முடியவில்லை.

அன்று இஸ்ரவேலரை வனாந்திரத்திலே, பகலில் மேக ஸ்தம்பமாயும், இரவில் அக்கினி ஸ்தம்பமாயுமிருந்து பாதுகாத்த கர்த்தர், இன்று நமது குடும்பங்களிலும், சபைகளிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் தன் மகிமையை வெளிப்படுத்துவார்.

எனவே பிரியமானவர்களே, நம்முடைய இடுக்கண்களில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோம். அவர் நம்மை
பாதுகாத்துக்கொள்வது நிச்சயம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர் எங்களைச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, எங்கள் நடுவில் மகிமையாக இருப்பீர் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488 ... 7400472200 (WhatsApp).

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🟤⚪🟤1921-வது நாளின் காலைத்தியானம் ... 20/03/2026 !!!இந்த காலைவேளையில், "கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார்" …... "THE LO...
20/03/2026

🟤⚪🟤1921-வது நாளின் காலைத்தியானம் ... 20/03/2026 !!!

இந்த காலைவேளையில், "கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார்" …... "THE LORD WILL GUIDE YOU ALWAYS" என்று (ISAIAH) ஏசாயா 58:11-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இவ்வுலக மனிதர்கள், நமது மகிழ்ச்சியின் நாட்களில் நம்மோடு பலவிதங்களில் இணைந்திருப்பார்கள், ஆனால் நம் துன்பத்தின் காலங்களிலோ நம்மைவிட்டுத் தூரமாய் ஒதுங்கி போவதுண்டு. ஆனால் நம் தேவனாகிய கர்த்தரோ, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நம்மோடிருந்து நடத்துகிறவராயிருக்கிறார்.

இந்த நாளிலும் பலவிதமான குடும்ப பிரச்சனை மற்றும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருப்போமானால், கவலைப்பட வேண்டாம். இம்மட்டும் நம்மை நடத்தின தேவன், இனிமேலும் நம்மை சிறப்பாய் நடத்துவார்.

“பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” என்று ஏசாயா 48:17-ல் கர்த்தர் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.

தேவன் தமது வழியை நமக்குப் போதித்து நடத்துவது மாத்திரமல்ல, நாம் சோர்ந்து, தளர்ந்து போகும்போது, தமது கரத்தினால் நம்மைத் தாங்கி, பெலப்படுத்தி நீதியின் பாதையில் நடத்திச் செல்கிறார்.

சங்கீதக்காரனாகிய தாவீது, சங்கீதம் 139:24-ல் “வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” என்று கர்த்தரை நோக்கி முறையிட்டதுபோல, நாமும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோம். நாம் பரிசுத்தத்துடன் தேவனுக்குப் பிரியமாய் வாழும்போது, தேவன் நம்மை பரலோகத்திற்கு நேராக நித்திய வழியில் நடத்திச் செல்வார்.

எனவே பிரியமானவர்களே, நாம் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, நம்மை அதிசயமாய் நடத்திவந்த நம் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிக்கும்படி, கர்த்தர் வெகுசீக்கிரத்தில் நமக்கு உதவி செய்வார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர் நித்தமும் எங்களை இந்த உலகில் சிறப்பாய் நடத்திச் செல்லும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெபதேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488 ... 7400472200 (WhatsApp).

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🔵⚪🔵1920-வது நாளின் காலைத்தியானம் ...19/03/2026 !!!இந்த காலைவேளையில், "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவத...
18/03/2026

🔵⚪🔵1920-வது நாளின் காலைத்தியானம் ...
19/03/2026 !!!

இந்த காலைவேளையில், "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" ..... ”I WILL NOT LEAVE YOU, NOR FORSAKE YOU" என்று (JOSHUA) யோசுவா 1:5-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

நீண்ட காலம் தலைவராயிருந்து, வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திவந்த மோசேயின் மரணத்திற்குப்பின், ஜனங்கள் திகைத்து நின்றனர். அதை நிறைவேற்ற தேவனால் யோசுவா நியமிக்கப்பட்டார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த கடினமான பணி அவரை அச்சுறுத்தியபோது, தேவனாகிய கர்த்தரால், யோசுவாவிற்கு இந்தநாளின் தியானபகுதி உறுதிமொழியாக கொடுக்கப்பட்டது. அப்படியே இஸ்ரவேல் ஜனங்களை முடிவுபரியந்தயம் வழிநடத்திச் செல்வதில் கர்த்தர் அவரை விட்டு விலகவும் இல்லை, கைவிடவும் இல்லை.

நமக்கன்பானவர்கள் நம்மைவிட்டு விலகிச்சென்று நம்மை கைவிடுவது என்பது ஓர் கொடிய அனுபவமாகும். எந்தவொரு தகப்பனும், தாயும் தங்கள் பிள்ளைகளைவிட்டு தூரமாய் போகவேண்டும் என்று எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள். ஒருபோதும் கைவிடவே மாட்டார்கள்.

ஏதோவொரு சூழ்நிலையில் அவர்கள் கைவிட நேர்ந்தாலும், கர்த்தர் ஒருபோதும் நம்மைவிட்டு விலகவோ, கைவிடவோ மாட்டார். சங்கீதம் 27:10-ல் “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என்று தாவீது கூறியுள்ளார்.

எனவே பிரியமானவர்களே, எல்லா இக்கட்டான சூழ்நிலைகளிலும், கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்வோம்.
அவர் நம்மை விட்டு விலகாமலும் கைவிடாமலும் இருந்து, நம்மை அற்புதமாய் வழிநடத்தி, கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நீர் எங்களைவிட்டு விலகுவதுமில்லை, எங்களை கைவிடுவதுமில்லை என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488/ 7400472200 WhatsApp.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🟠⚪🟠1919-வது நாளின் காலைத்தியானம் ...18/03/2026 !!!இந்த காலைவேளையில், "என் ஆத்துமாவே தேவனை நோக்கி அமர்ந்திரு; நான் நம்புக...
17/03/2026

🟠⚪🟠1919-வது நாளின் காலைத்தியானம் ...
18/03/2026 !!!

இந்த காலைவேளையில், "என் ஆத்துமாவே தேவனை நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்" ..... ”YES, MY SOUL, FIND REST IN GOD; MY HOPE COMES FROM HIM" என்று (PSALM) சங்கீதம் 62:5-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

சூழ்நிலைகள் புயல் போல நம்மைச் சுழற்றி அடிக்கும்போதும், எதிர்பாராத எதிர்ப்புகள் எழும்பும்போதும், நேசித்தவர்களே வெறுக்கும் போதும் அமர்ந்திருக்க முடியுமா என்பது உலக மக்களிடையே ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

தேவனுடைய பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அவரது கிருபை இவற்றின்மீது நாம் நம்பிக்கை வைக்கும்போது, எந்தச் சூழ்நிலையிலும் தடுமாறாமல், அமர்ந்திருக்க முடியும் என்பதையே இந்தநாளின் தியானபகுதி நமக்கு உணர்த்துகிறது.

சங்கீதம் 46:10-ல் “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

கர்த்தரை நோக்கி நாம் அமர்ந்திருப்போமானால், அவருடைய சத்தத்தை நம்மால் கேட்கமுடியும். ஆம், அவருடைய அதிசயமான வழிநடத்துதலை நம்மால் உணர்ந்து கொள்ளவும், அற்புதமான செயல்களை அறிந்து கொள்ளவும் முடியும்.

வேதத்திலே, லூக்கா 5-ம் அதிகாரத்தில், இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் மீன்கள் அகப்படவில்லை என்ற வருத்தத்துடன் இருந்த பேதுரு, இயேசுவின் வார்த்தையின்மேல் உள்ள நம்பிக்கையால் வலையை மீண்டும் போட்டபோது, ஆச்சரியப்படத்தக்க விதத்தில் மிகுதியான மீன்களைப் பிடித்தான் என்று அறிகிறோம்.

ஆம், “நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது” என்று நீதிமொழிகள் 23:18-ல் பார்க்கிறோம்.

எனவே பிரியமானவர்களே, எந்த சூழ்நிலைகளிலும், நம்பிக்கையோடு அவர் சமூகத்தில் அமைதியாய்த் தரித்திருந்து நன்மையானவைகளப் பெற்று அனுபவிப்போம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்கள் ஆத்துமாவில் நாங்கள் திடனுடன் தேவனாகிய உம்மையே நோக்கி அமர்ந்திருந்து, நாங்கள் நம்புகிற யாவும் உம்மால் மாத்திரமே வரும் என்பதை விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488/ 7400472200 WhatsApp.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

🟢⚪🟢1918-வது நாளின் காலைத்தியானம் ...17/03/2026 !!!இந்த காலைவேளையில், "நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்...
16/03/2026

🟢⚪🟢1918-வது நாளின் காலைத்தியானம் ...
17/03/2026 !!!

இந்த காலைவேளையில், "நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்" ..... ”THE FRUIT OF THE RIGHTEOUS IS A TREE OF LIFE, AND THE ONE WHO IS WISE SAVES LIVES" என்று (PROVERBS) நீதிமொழிகள் 11:30-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.

இந்தநாளின் தியானபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு காரியங்களில் ஒன்று, தேவனிடமிருந்து நமக்கு கிடைக்கும் பலன். அதாவது, மற்றவர்கள் நித்திய ஜீவனையடைய வழிவகுக்கும் 'ஜீவவிருட்சமாக' நாம் மாறுகிறோம்.

மற்றொன்று அந்த பலனை நாம் அடைய நமது செயல். கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்வதே அந்த செயல் ஆகும். அப்பொழுது, நாம் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளமுடியும். அப்படி செய்கிறவர்கள்
ஞானமுள்ளவர்கள் என்று சாலொமோன் ஞானி கூறுகிறார்.

தானியேல் 12:3-ல்�“ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” என்று காண்கிறோம்.

அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்திருக்கும் ஆத்துமாக்களைக் குறித்த பாரம் நம் உள்ளத்தில் உருவாகி, அவர்களுக்காக மனதுருகி ஜெபிக்க வேண்டும்.

யாக்கோபு 5:20-ல் "தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்" என்று வேதம் கூறுகிறது.

எனவே பிரியமானவர்களே, நித்தியத்திற்கென்று ஆத்துமாக்களை சேர்க்க பிரயாசப்படுவோம். ஏற்ற காலத்தில் பலனை அறுவடை செய்வோம்.

ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, நீதிமான்களாகிய எங்களது பலன் ஜீவவிருட்சம் என்றும்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிற நாங்கள் ஞானமுள்ளவர்கள் என்பதையும் விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.

ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் 24/7 - 9967228488/ 7400472200 WhatsApp.

Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.

Address

Navi Mumbai

Telephone

00919967228488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sharon Global Revival Ministries & Navi Mumbai Prayer Fellowship:

Share